வெள்ளி, 30 மார்ச், 2012

ரூ.1.34 கோடி சம்பளத்தில் இந்திய மாணவரை பணியமர்த்திய ஃபேஸ்புக்!

ஆண்டுக்கு ரூ.1.34 கோடி சம்பளத்தில் இந்திய மாணவரை பணியமர்த்தியுள்ளது சமூக வலைதளமான ஃபேஸ்புக். அலஹாபாத்திலுள்ள மோதிலால் நேரு தொழில்நுட்ப கழகத்தில்(எம்என்என்ஐடி) அந்த மாணவர் பிடெக் பயின்று வருகிறார். இந்த தகவலை எம்என்என்ஐடியின் நிர்வாக இயக்குனர் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். இதை ஃபேஸ்புக் அதிகாரி ஒருவரும் உறுதி செய்துள்ளார். அந்த மாணவர் பற்றிய பெயர் உள்ளிட்ட இதர விபரங்களை பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியிடவில்லை என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.ஃபேஸ்புக்கில் பணியில் சேர இருக்கும் அந்த மாணவர் தற்போது இறுதியாண்டு பயின்று வருகிறார். இன்னும் 4 மாதங்களில் படிப்பை முடித்தவுடன் பணியில் சேர உள்ளார். எடுத்தவுடன் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான ஊதியத்தில் பணியில் சேரும் மாணவர் என்ற பெருமையை அவர் பெற இருக்கிறார்.

புதன், 28 மார்ச், 2012

தமிழில் இ-காமர்ஸ் தளம்.. மக்கள் ஆதரிப்பார்களா?

பர்ஸ் நிறைய பணம் எடுத்துக் கொண்டு, கடை கடையாக ஏறி இறங்கி, பார்த்துப் பார்த்து பொருள்களை வாங்கிக் கொண்டு வந்த காலம் இனி இல்லை எனும் நிலை உருவாகி வருகிறது. இப்படி ஷாப்பிங் போவதில் ரிஸ்க் அதிகம் என்பது ஒரு பக்கம், அலைச்சல், நேர விரயம் என பல அசௌகரியங்கள். நாமே நேரில் பார்த்து வாங்கினோம் என்ற திருப்தி மட்டும்தான். ஆனால், இப்போது இணையத்திலேயே பொருள்கள், சேவைகளைப் பெற முடியும் என்ற நிலை வந்துவிட்டது. பிராண்டட் பொருள்கள் என வரும்போது, அவற்றை நேரில் போய் பார்த்துதான் வாங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தரம் உறுதிப்படுத்த ஒன்று என்பதால் பிடித்த மாடல் அல்லது நிறத்தை மட்டும் பார்த்து ஆர்டர் கொடுத்துவிட்டால், வீடு தேடி வந்துவிடும். செல்போன், லேப்டாப், மியூசிக் சிஸ்டம்ஸ், நகைகள், துணிகள், டிவி, பிரிட்ஜ், ஏஸி உள்ளிட்ட மின்னணு பொருட்கள், இனிப்புகள் உள்ளிட்ட தின்பண்டங்கள்.... இப்படி எல்லாமே இ-காமர்ஸ் வர்த்தகத்துக்குள் அடங்கிவிட்டன. சர்வீஸ் இன்டஸ்ட்ரி எனப்படும் சேவைத்துறையும் இப்போது இ-காமர்ஸில் வந்துவிட்டது. முன்பெல்லாம் ரயில், விமான டிக்கெட் பதிவது, சுற்றுலா திட்டமிடுவது போன்றவற்றுக்காகத்தான் ஆன்லைனை பயன்படுத்தினர். இப்போது, வீட்டில் குழாய் ரிப்பேரா... பக்கத்தில் யாரும் ப்ளம்பர் இல்லையா.. உடனே ஒரு இ-காமர்ஸ் தளத்தில் விஷயத்தைச் சொன்னால், அடுத்த சில மணி நேரங்களில் வீட்டு வாசலில் ப்ளம்பர்! கம்ப்யூட்டர் சர்வீஸ், டிவி ரிப்பேர் அல்லது ஏஸி பராமரிப்பு... அட தோட்ட வேலைக்குக் கூட ஆள் தயார்! இ-காமர்ஸை பிரமாதமாகப் பயன்படுத்துவது ரியல் எஸ்டேட் துறைதான். கையில் டெபிட் அல்லது கிரெடிட் கார்டு இருநதால் போதும், ஆன்லைனில் ஆர்டர் கொடுத்துவிடலாம். இ செக் அல்லது பொருளை டெலிவரி செய்யும்போது பணம் தருவது என இன்னும் கூட சுலபமான பரிமாற்றங்கள் இ-காமர்ஸில் வந்துவிட்டன. இந்தியாவில் ஆரம்பத்தில் பெரிதாக கவனிக்கப்படாத இந்த இ-காமர்ஸின் இன்றைய வளர்ச்சி என்ன தெரியுமா... கிட்டத்தட்ட 200 சதவீதம்! இந்திய சந்தையின் அளவைப் பார்த்த பல வெளிநாட்டு நிறுவனங்கள், இ-காமர்ஸ் மூலம் பொருட்களை விற்க தயாராக இந்தியாவில் கிளைகள் திறந்து, நல்ல சம்பளத்தில் பணியாளர்களையும் நியமித்துள்ளன. இந்த இ-காமர்ஸ் தளங்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் இருக்கும். நம்பகமான, சரியான சேவை தரும் ஒரு இ-காமர்ஸ் தளத்தை தமிழில் கொண்டு வரவும் முயற்சிகள் நடக்கின்றன. அப்படி ஒரு இணையத்தளம் தமிழில் வந்தால் அதை நீங்கள் பயன்படுத்துவீர்களா..?. இல்லை ஆங்கிலத்தில் இருந்தால் தான் வசதி என்கிறீர்களா.. உங்க கருத்தை சொல்லுங்களேன்...

ஆரோக்கியமான பற்கள் வேண்டுமா? இதப்படிங்க !

ஆரோக்கியமான பற்களே ஆரோக்கியமான வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன என்கின்றது மருத்துவ உலகம். பண்டைய காலத்தில் பல் போனால் சொல் போச்சு என்ற பழமொழி உண்டு. இன்றைக்கு பற்கள் பாதிக்கப்பட்டால் இதயம், பக்கவாதம் போன்ற நோய்களும் எட்டிப்பார்க்கும் என்கின்றனர் மருத்துவர்கள். எனவே பற்களை ஆரோக்கியமாக பாதுகாக்க வேண்டியது அவசியம். பற்களை பாதுகாக்க வீட்டில் உள்ள பொருட்களே உதவுகின்றன என்கின்றனர் மருத்துவர்கள் அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன். சிறு வயதில் இருந்தே பல்லை ஆரோக்யமாக வைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். பிரச்னை வந்து, வலிக்க ஆரம்பித்த பின்னர் தான் மருத்துவரைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணமே பலருக்கும் உள்ளது. குழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பித்ததில் இருந்தே தினமும் இருமுறை பல்துலக்க வேண்டும். பல்லின் இடுக்குகளில் உணவுப் பொருள்கள் படியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு சிக்கிக் கொண்டால் வாய் கொப்பளித்து உடனடியாக பல்லை சுத்தம் செய்ய வேண்டும். கீரைகளை நன்றாக மென்று துப்பலாம். இதனால் பல் இடுக்குகளில் உள்ள உணவுப்பொருட்கள் வெளியேறிவிடும், பற்கள் ஆரோக்கியமடையும். பச்சை வெங்காயத்தை மூன்று நிமிடம் நன்றாக மென்று துப்ப வாய், பற்களில் உள்ள தேவையற்ற கிருமிகள் இறந்துவிடும். உணவு உண்டவுடன் வெதுவெதுப்பான நீரில் ஹைட்ரஜன் பெராக்ஸைடு சேர்த்து நன்றாக கொப்பளிக்க வேண்டும். சத்தான உணவுகள் சத்துக் குறைபாடான உணவுகள் மற்றும் உடலில் ஏற்படும் சர்க்கரை உள்ளிட்ட மற்ற நோய்களின் காரணமாகவும் பல் ஆரோக்யம் விரைவில் கெட்டுவிட வாய்ப்புள்ளது. எச்சிலில் உள்ள அமிலம் மற்றும் உணவில் உள்ள கார்போஹைட்ரேட்டும் சேர்ந்து பல்லில் சொத்தையை உருவாக்குகிறது. தினசரி உணவில் கால்சியம், வைட்டமின் சி போன்றவைகளை அதிகம் சேர்த்துக்கொள்வது பற்களின் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். தினசரி அரை எலுமிச்சையை சாறு எடுத்து வெதுவெதுப்பான நீரில் கொப்பளிக்கலாம். பல் சொத்தை பெரிதாக வளர்ந்து பல்லின் வேரை தாக்கும் போது தான் வலி ஏற்படுகிறது. இந்த வலியை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் பல்லின் வேர்ப்பகுதி முழுவதும் பாதிக்கப்பட்டு பல்லை முழுமையாக இழக்கும் நிலை ஏற்படும். பல்வலியை போக்க பல்வலி ஏற்பட்டால் அந்த இடத்தில் சிறிதளவு வெள்ளைப் பூண்டை எடுத்து பல் வலிக்கும் இடத்தில் வைக்க நிவாரணம் கிடைக்கும். அதேபோல் கிராம்பு பொடி செய்து பல்வலி உள்ள இடத்தில் வைக்கலாம். வெள்ளைப் பூண்டு, கல் உப்பு சேர்த்து நன்றாக பல் தேய்க்க பல்வலி குணமாகும். வாய் துர்நாற்றம் போக தினசரி நன்றாக பல்துலக்க வேண்டும். வாய், நாக்கு உள்ளிட்ட இடங்களில் அழுக்குகளை நீக்க வேண்டும். கொத்தமல்லி இலைகளை நன்றாக மென்று சாறுகளை விழுங்கலாம். வெதுப்பான நீரில் ஒரு டீ ஸ்பூன் இஞ்சி, ஒரு டீ ஸ்பூன் எலுமிச்சை ஜூஸ் சேர்த்து நன்றாக கொப்பளிக்க வேண்டும். தினசரி மூன்று முறை இவ்வாறு செய்யலாம். சுவாசப் புத்துணர்ச்சி கிடைக்கும். வெதுவெதுப்பான வெந்நீரில் சிறிதளவு பேகிங் சோடா, சிறிதளவு தூள் உப்பு சேர்த்து வாய் கொப்பளிக்கலாம். ஆரோக்கியம் அவசியம் இதேபோல் பல்லில் ஏற்படும் பல் கூச்சம், ஈறு வீக்கம், பல் சொத்தை, வாய் நாற்றம் உள்ளிட்ட எந்தப் பிரச்னையாக இருந்தாலும் உடனடியாக பல் மருத்துவரை அணுகி சிகிச்சை செய்து கொள்வதன் மூலம் பல்லின் ஆரோக்யத்தையும், உடல் ஆரோக்கியத்தையும், அழகையும் பாதுகாக்க முடியும்.

தாம்பத்யத்திலும் தன்னம்பிக்கை வேண்டும்!

எந்த ஒரு விசயத்திற்கும் தன்னம்பிக்கை வேண்டும். நம்பிக்கையில்லாமல் தொடங்கும் விசயம் வெற்றியடையாது என்கின்றனர் நிபுணர்கள். அதுபோலத்தான் தாம்பத்யத்தையும் தன்னம்பிக்கையோடு அணுகவேண்டும் என்கின்றனர் உளவியலாளர்கள். வெற்றிகரமான இல்லற வாழ்க்கைக்கு அவர்கள் கூறும் ஆலோசனைகளை கேளுங்களேன். பயத்தை விட்டொழியுங்கள் படுக்கையறையில் பயத்துக்கு எந்த வேலையும் இருக்கக் கூடாது. ஒரு கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ படுக்கையறை என்பது பயங்களின் கூடாரமாக இருந்தால் தாம்பத்ய சுகம் பெறுவதில் சிக்கல் ஏற்படும்.தேவையில்லாத பயத்தை விட்டொழியுங்கள். உங்கள் தன்னம்பிக்கைதான் தாம்பத்யத்தில் உங்களை வெற்றிகரமானவராக செயல்பட வைக்கும். எனவே படுக்கையறைக்கு பாம்பு, பூதம், எதுவும் இல்லை. எனவே தேவையற்ற பயத்தை விட்டுவிட்டு தன்னம்பிக்கையுடன் தொடங்குங்கள் வெற்றிகரமான வாழ்க்கை கிடைக்கும். சந்தோசமான சிரிப்பு படுக்கையறையில் நுழையும் போதே புன்னகையுடன் இருங்கள். முடிந்த அளவு மகிழ்ச்சியோடு சிரியுங்கள். தாம்பத்யம் என்பது மகிழ்ச்சிகரமானதுதானே. அங்கே எதற்கு சோகமும், கவலையும். எனவே சந்தோசமாக சிரியுங்கள். சிரிப்பே உங்கள் இருவரின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். சின்ன சின்ன விளையாட்டு படுக்கையறையில் நீங்கள் விளையாடும் சின்ன சின்ன விளையாட்டுக்கள் உங்களின் உற்சாகத்தை அதிகரிக்கும். விளையாட்டுக்களின் மூலம் உங்கள் உணர்வுகள் கிளர்ச்சியடையும் என்கின்றனர் நிபுணர்கள். இதன் மூலம் தன்னம்பிக்கையோடு தாம்பத்ய வாழ்க்கையை தொடரலாம். அமைதி அவசியம் படுக்கையறையில் எப்போதும் பூரண அமைதி நிலவ வேண்டும். படுக்கையறை தூய்மையின் இருப்பிடமாக தாம்பத்திய உறவும், ஆரோக்கியம் ததும்புவதாகவும், மிகுந்த பாதுகாப்பு கொண்டதாகவும் அமைந்திருக்க வேண்டும். புழுக்கமும் வியர்வையும் நங்கூரம் போடும் இடமாக இருக்கக் கூடாது. காற்றுக்கு எந்த பஞ்சமும் இருக்கக் கூடாது. உற்சாகமாக தொடங்குங்கள் கணவன் மனைவி இருவரும் இன்பம் பொங்க இணைவதற்கு இரண்டு பேரும் ஒருவரையருவர் தாம்பத்திய உறவில் விரும்பி ஏற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு கணவன் மனைவி இருவரும் ஒருவரையருவர் விரும்பி ஏற்றுக் கொள்வதில் எந்த சிக்கல்களும். இருக்கக் கூடாது. சுத்தமின்மை, வழியும் வியர்வை, உடல் துர்நாற்றம், எரிச்சலூட்டும் வியர்க்குரு, நெருங்கவே முடியாமல் செய்யும் வாய் துர்நாற்றம் ஆகியவை இல்லற சுகத்தை பாதிக்கும். பெண்கள் கஸ்தூரி மஞ்சள், கடலை மாவு, வால்மிளகு சேர்த்து அரைத்த குளியல் பொடியை பயன்படுத்தி தங்களை சுகாதாரமாக வைத்துக் கொள்ளலாம். கணவனோ மனைவியோ தங்களுக்கு தோல் நோய்கள் இருந்தால் அதற்கு அம்மான் பச்சரிசி, மஞ்சள், வேப்பிலை, துளசி இலை போன்றவற்றை மைய அரைத்து உடம்பு பூராவும் பூசி வைத்து அரை மணி நேரம் கழித்து குளிக்கலாம். சிகரெட் புகைப்பவர்கள். மதுப் பழக்கம் உள்ளவர்கள் மேல் எப்போதும் ஒரு வித வாசனை வீசும். இது போன்ற பழக்கம் உள்ளவர்கள் படுக்கையறைக்குள் நுழையும் போது தங்கள் மேல் நாற்றம் அடிக்காமல் இருக்க ஒரு குளியலைப் போட்டு விட்டு நுழைவது நல்லது. மணக்கும் மலர்கள் நமது படுக்கையறையை தங்கமும் வைரமும் வைத்து இழைத்து வைத்திருக்க வாய்ப்பில்லை. நம்மால் எளிதில் வாங்கி சூடிக் கொள்ள முடிகிற பூக்களைக் கொண்டே நமது படுக்கையறையை கமகமக்க வைக்கலாமே. பூக்களின் நறுமணமே உற்சாகத்தையும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் என்கின்றனர் நிபுணர்கள். பகிர்ந்து கொள்ளுங்கள் கணவனோ மனைவியோ தாம்பத்தியத்தில் தங்களுக்கு ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள். இது உங்கள் மீதான தேவையற்ற அச்சத்தை விலக்க உதவும். இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்துகொள்ளுங்கள். தாம்பத்யம் குறித்த பயம் விலகும்.

செவ்வாய், 20 மார்ச், 2012

புதுச்சேரியில் அரசு வேலை… ப்ளஸ் டூ, டிகிரி படிச்சிருந்தா போதும்!

புதுச்சேரி: புதுச்சேரி மாநில தொழிலாளர் காப்பீட்டு கழகத்தில் காலியாக உள்ள கிளார்க் – காசாளர் மற்றும் பல்நோக்கு உதவியாளர் பணியிடங்கள் நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியின் பெயர்: 1. Upper Division Clerks/Upper Division Clerk (UDC) – Cashier -8 2. Multi Task Staff – 15 காலியிடங்கள்: UDC – 8 (பொது -5, பிசி-2, எஸ்சி -1) இவற்றில் ஒரு இடம் முன்னாள் ராணுவத்தினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. MTS – 15 (பொது 8, பிசி 5, எஸ்ஸி-2) முன்னாள் ராணுவத்தினருக்கு ஒரு இடம் உள்பட. சம்பளம்: UDC: ரூ.5,200 – 20,200/- தர ஊதியம் ரூ 2400 மற்றும் இதர படிகள். MTC: ரூ 5,200 – 20,200/- தர ஊதியம் ரூ 1800 மற்றும் இதர படிகள். கல்வித்தகுதி: UDC- பணிக்கு ஏதாவது ஒரு இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணிப்பொறியில் பணிபுரிய தெரிந்திருக்க வேண்டும். MTS -பணிக்கு ஜஸ்ட் மெட்ரிகுலேஷன் அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி பெற்றிருந்தால் போதும். வயதுவரம்பு: 31.01.2012 தேதியில் 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி SC/OBC/ESM/ Women/ ESIC பணியாளர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் கணினி திறன் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம்: UDC-க்கு ரூ 225. MTS-க்கு ரூ 125. SC/OBC/ESM/ Ladies/ ESIC பணியாளர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. இதனை Regional Director, ESI Corporation பெயரில் புதுச்சேரியில் மாற்றத்தக்க வகையில் SBI-ல் டி.டி.யாக எடுக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: www.esicpondicherry.com என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மின்னஞ்சல் முகவரி கட்டயாம் இருக்க வேண்டும். விண்ணப்பித்த விண்ணப்ப பதிவிறக்கம் மற்றும் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து அனுப்ப வேண்டும். (ஆன்லைனில் 31-ம் தேதிக்குள் விண்ணப்பித்து, அந்த படிவத்தை பின் தரவிறக்கம் செய்து சான்றிதழ்களுடன் தபாலில் அனுப்ப வேண்டும். அனைத்து அரசுப் பணிகளுக்கும் இப்போது இப்படித்தான் விண்ணப்பிக்க வேண்டும். எனவே மிக எச்சரிக்கையுடன் விண்ணப்பிக்கவும்). ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.01.2012. விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 13.02.2012. விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: Regional Director, Regional Office. ESI Corporation, 178, Anasari Duraisamy Nagar, 100 feet Road, Opposite to RTO Office, Puducherry – 05004. மேலும் விவரங்களுக்கு www.esicpondicherry.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

செவ்வாய், 13 மார்ச், 2012

பெண்களின் மனதை கவர இதைப் படிங்க!

இந்த பொண்ணுங்களுக்கு எப்படி இருந்தா பிடிக்கும் என்று மண்டையை பிய்த்துக் கொள்கின்றனர் இன்றைய இளசுகள். இதையே நினைத்து கவலைப்பட்டுக்கொண்டிருக்கும் இளசுகளுக்கு பெண்களின் மனதை கவரவும், அவர்களுக்கு பிடித்தமாதிரி நடந்து கொள்ளவும் ஆலேசானை கூறியுள்ளனர் நிபுணர்கள். பெண்களோட பேசப்போறதுக்கு முன்னாடி இளைஞர்களே இதப் படிச்சிட்டு போங்க. நேர்மையா இருங்க நேர்மையான ஆண்களை மட்டுமே பெண்களுக்குப் பிடிக்கிறதாம். எதற்கெடுத்தாலும் பொய்சொன்னால் உங்களுடன் பழகுவது ரிஸ்க் என்று உங்கள் பக்கம் திரும்பி கூட பார்க்கமாட்டார்களாம். நகைச்சுவை உணர்வு ஆண்களுக்கு நகைச்சுவை உணர்வு அவசியம். சிரிக்க சிரிக்க பேசும் ஆண்களையே பெரும்பாலான பெண்கள் விரும்புகின்றனராம் உங்களின் பேச்சு ஆண்களை அப்படியே அட்ராக்ட் செய்யவேண்டும். அதேசமயம் நகைச்சுவை என்ற பெயரில் போரடித்துவிடக்கூடாது என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர். பாதுகாக்கும் தன்மை எந்த ஆணின் அருகில் இருக்கையில் பாதுகாப்பாக உணர்கின்றனரோ அந்த ஆண்தான் பெண்ணின் மனதை கவர்ந்தவன். அதனால்தான் எம்.ஜி.ஆர் காலத்திய திரைப்படங்களில் இருந்து இன்றைய தனுஷ் திரைப்படங்கள் வரை கதாநாயகன் நான்கு பேரிடம் சண்டை போட்டாவது கதாநாயகியை காப்பாற்றுவது போல காட்சி அமைக்கின்றனர் இயக்குநர்கள். எனவே பெண்களுக்கு பாதுகாப்பு அரணாக செயல்படுங்கள். அழகும், அறிவும் ஆண்களுக்கு அழகு மட்டுமல்ல அறிவும் அவசியம் அது மாதிரியான ஆண்களையே பெண்கள் விரும்புகின்றராம். எனவே பெண்களுக்கு பிடித்தமாதிரி பேசவும் கற்றுக்கொள்வது அவசியம். அன்பும், பாசமும் அதிக அன்போடும், பாச உணர்வோடும் இருக்கும் ஆண்களைத்தான் அதிகம் பிடிக்கிறதாம். வாழ்நாள் முழுதும் உன் கூட வருவேன் என்ற உறுதி மொழி தருவதோடு அதை கடைபிடிக்கும் ஆண்களை ரொம்ப ரொம்ப பிடிக்குமாம். எந்த காரணத்திற்காகவும் மனதை காயப்படுத்தாத ஆண்களைத்தான் அவர்கள் விரும்புகின்றனராம். ஆரோக்கியம் அவசியம் உணவு, உடை, ஸ்டைல் என அனைத்திலுமே ஒரு தனித்தன்மை இருக்கட்டும். ஒரு ஹைஜீனிக் பெர்சனைத்தான் பெண்கள் விரும்புகின்றனராம். ஏதாவது சிறிய தவறு நேர்ந்தாலும் உடனடியாக மன்னிப்பு கேட்கும் ஆண்களை அவர்கள் நேசிக்கின்றனராம். இடைவெளி அவசியம் எப்பவுமே கொஞ்சம் இடைவெளி விட்டுப்பேசும் ஆண்களைத்தான் பெண்கள் அதிகம் விரும்புகின்றனராம். அதேபோல் மரியாதையோடு பேசும் ஆண்களைத்தான் அவர்கள் எதிர்பார்க்கின்றனராம். நட்பான ஆண்கள் முதல்ல நட்பா பேசுங்க அதைத்தான் பெண்களும் எதிர்பார்க்கின்றனர். உங்களின் நட்பான அணுகுமுறை பெண்களின் மனதை கவரும். ஓவரா சீன் போடாதீங்க பெண்களை கவர் பண்ண ஓவரா சீன் போடும் ஆண்களைக் கண்டாலே பெண்களுக்கு அலர்ஜியாம். எனவே எதையுமே அளவோடு செய்யுங்கள். நம்பிக்கையோடு செயல்படுங்கள் வெற்றி நிச்சயம் என்கின்றனர் நிபுணர்கள்.

டீன் ஏஜ் உறவு மூளை நரம்புகளை பாதிக்கும் – எச்சரிக்கை ரிப்போர்ட்!

சமீப காலங்களில் பள்ளி மாணவர்கள் பலர் பாலியல் பிரச்சினைகளில் சிக்கி பாதிக்கப்படுகின்றனர். பத்தாம் வகுப்பு பள்ளி மாணவிக்கு குழந்தை பிறப்பது, அதேபோல் மாணவர்கள் சிலர் மாணவிகளுடன் உறவில் ஈடுபட்டு அதை வீடியோ எடுப்பது என கலாச்சார சீர்கேடுகள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற டீன் ஏஜ் வயதில் உறவில் ஈடுபடுவது எதிர்காலத்தில் அவர்களின் மூளை நரம்புகளை பாதிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இளம் வயதில் உறவில் ஈடுபடும் கலாசாரம் அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில் மட்டுமே அதிகம் இருந்தது. தற்போது இந்தியாவிலும் இது அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அமெரிக்காவின் ஒஹியோ மாநில மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். எலிகளில் பரிசோதனை பிறந்து 40 நாட்கள் ஆன பெருச்சாளிகளை வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நன்கு வளர்ந்தவை, நடுத்தர வயதில் இருப்பவை, இளம் எலிகள் என மூன்றாக பிரிக்கப்பட்டன. அவைகளுக்கு உணர்வை தூண்டும் ஊசி போட்டு சோதனை நடத்தப்பட்டது. பின்னர், எலிகளிடம் மருத்துவ ரீதியாக ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் ஆராயப்பட்டன. மூளை செயல்கள் பாதிப்பு மற்ற பிரிவுகளுடன் ஒப்பிடும்போது இளம் வயது எலிகளின் செயல்பாடுகள் உறவுக்கு பிறகு பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தன. அவற்றின் அன்றாட செயல்பாடுகளில் சுணக்கம், சோர்வு ஏற்பட்டது. அன்றாட உணவைக்கூட உண்ணாமல் ஒரே இடத்தில் முடங்கி கிடந்தது. சரியான பருவத்தில் இருந்த எலிகள் வழக்கம்போல இருந்தன.நரம்பு மற்றும் மூளை செயல்களும் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இளம் பருவத்தில் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வது மூளை, நரம்புமண்டல வளர்ச்சியை பாதிக்கும் என்பது இந்த ஆய்வின் மூலம் உறுதியாக தெரிகிறது. மனிதர்களுக்கும் இது பொருந்தும். இதன் பாதிப்பு உடனடியாக இருக்காது என்றாலும் எதிர்காலத்தில் அதிகரிக்கும். பாலியல் விழிப்புணர்வு கல்வி இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் இளம் வயதில் பாலியல் ரீதியான உறவுகளில் ஈடுபடுபவர்கள் அதிகரித்து வருகின்றனர். அவர்களின் மூளையும், செயல்பாடுகளும் பாதிக்கப்பவடுவதாலேயே கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். இவற்றை தடுக்க பாலியல் விழிப்புணர்வு குறித்த கல்வியை மாணவர்களுக்கு கற்பிக்கவேண்டும் என்பது உளவியல் நிபுணர்களின் அறிவுரையாகும்.

வெள்ளி, 9 மார்ச், 2012

முதல்நாள் இரவில் பேசி புரிஞ்சுக்கங்க !

திருமண நாளன்று புதுமணத் தம்பதிகள் இருவருக்குமே ஒருவித படபடப்பும், எதிர் பார்ப்பும் இருக்கும். அன்றைய இரவில் எப்படி நடந்து கொள்வது என்ற கேள்வி இருவருக்குமே இருக்கும். ஆணை விட பெண்ணுக்குத்தான் பயம் அதிகம் இருக்கும். உளவியல் ரீதியான சிக்கல்களும் எழும். எனவே திருமண நாளன்று இரவில் மணப்பெண் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை கூறியுள்ளனர் உளவியல் நிபுணர்கள். இடத்தை தீர்மானியுங்கள் திருமண நாளன்று முதலிரவு நடக்கப்போகும் இடம் பற்றி உங்கள் வீட்டாருடன் பேசுங்கள். திருமண சத்திரமா? ஹோட்டலா, வீட்டிலா என்று கேளுங்கள். புதிய இடம் படபடப்பை ஏற்படுத்தும் என்றால் உங்களுக்கு சவுகரியமான இடத்தை தேர்ந்தெடுங்கள். மருத்துவரிடம் ஆலோசனை அன்றைய தினத்தில் மாதவிடாய் வராமலிருக்க மருத்துவரை ஆலோசனை கேளுங்கள். நீங்களாக மருந்து மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டாம். மனித உடலைப் பற்றியும், தாம்பத்ய உறவு பற்றியும் சந்தேகங்கள் இருந்தால் அதற்கேற்ப நல்ல புத்தகங்களைப் படியுங்கள். தேவைப்பட்டால், பெண் மருத்துவரிடம் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்கலாம். அதிகம் சாப்பிடவேண்டாம் இரவு நேரத்தில் அதிகம் சாப்பிட வேண்டாம். முடிந்தவரை அதிக மணமும், மசாலாவும் சேர்க்கப்பட்ட உணவுகளை தவிர்த்து விடவும். அறைக்கு செல்லும் முன் நன்றாக குளித்து விட்டு மிதமான மேக் அப் போட்டு கொள்ளவும். மெல்லிய நகைகள் குறைவான நகைகளை அணியவும், கூரிய முனைகள் கொண்டதும், கனமான கற்கள் கொண்ட நகைகளை அணிய வேண்டாம். உடலை உறுத்தாத ஆடைகளை அணியுங்கள். கனமான, ஆடம்பரமான கூந்தல் அலங்காரத்தைத் தவிர்க்கவும். வாசனை திரவியம் உடல் முழுவதும் மாயிச்சரைசிங் லோஷன் தடவிக் கொள்ளுங்கள். காதுகளுக்குப் பின்புறம், மணிக்கட்டு போன்ற இடங்களில் மிதமான வாசனை திரவியம் தடவிக் கொள்ளுங்கள். பேசி புரிந்து கொள்ளுங்கள் முதல் ஸ்பரிசம் என்பது படபடப்பாகத்தான் இருக்கும். உங்கள் கணவரது செய்கைகள் உங்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தினால் அதை அவரிடம் தெரிவியுங்கள். முதல் முறை உறவில் ஈடுபடும் பெண்களுக்கு வலி ஏற்படலாம். அதைப்பற்றி அச்சம் கொள்ளாமல் வலியையும், வறட்சியையும் குறைக்க பெட்ரோலியம் ஜெல்லி அல்லது தேங்காய் எண்ணெய் உபயோகிக்கலாம். முதல் நாளே உறவில் ஈடுபட வேண்டும் என்று அவசியமில்லை. இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாதவர்கள் எனில், முதலில் உங்கள் விருப்பு, வெறுப்புகளைப் பற்றிப் பேச அந்த இரவை உபயோகப்படுத்திக் கொள்ளலாம் . மேற்கண்ட ஆலோசனைகளை பின்பற்றினால் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சிகரமான இரவுகளை எதிர்கொள்ளலாம் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

வெள்ளி, 2 மார்ச், 2012

சிவப்பு நிற பழங்கள் சருமத்தைக் காக்கும்!

பண்டைய காலத்தில் வண்ண உணவுகள் மூலம் எளிதில் நோய்களை குணப்படுத்திக் கொண்டார்கள். காலையில் சிவப்பு நிறமுள்ள பழங்கள், காய்கறிகளை சாப்பிட்டார்கள். காரணம் வளர்சிதை மாற்றத்தில் சிவப்பு நிற உணவுகள் அதிகம் உதவுகின்றன. வளர்சிதை மாற்றம் வேகமாக நடக்க உதவுகிறது. சருமத்தை பொலிவாக்குவதில் இந்த சிவப்பு நிற பழங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. சிவப்பு நிறமுள்ள தக்காளி, பீட்ரூட், சிவப்பு மிளகாய், சிவப்பு ஆப்பிள், சிவப்பு திராட்சை, வெங்காயம், தர்பூசனி ஆகியவை உடல் நலத்திற்கும், சரும அழகிற்கும் மிகவும் துணை செய்கின்றன. தக்காளி மற்றும் தக்காளியில் செய்யப்பட்ட சாஸ் போன்றவற்றை அதிக அளவில் சேர்த்துக் கொள்வதால் உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது. தங்கம் போல் ஜொலிக்கும் எப்படிப்பட்ட பெண்ணின் முகத்தையும் தங்கம் போல ஜொலிக்க வைக்க வேண்டும் என்றால் பல்வேறு பொருட்களுடன் தக்காளியை பயன்படுத்தினால் போதும். கோடை காலத்தில் வெளியில் சென்று வந்தாலே முகம் பொலிவிழந்து விடும். நீண்ட நாட்களாக கவனிக்காமல் விடுவதாலும் இறந்த செல்கள் அதிகம் தேங்கி முகம் கருமையாகிவிடும். இதனை போக்க ஒரு தக்காளி கூழ் போல ஆக்கி அதில் கால் டீ ஸ்பூன் ரவையை கலந்து முகத்தில் தேய்க்க வேண்டும். இதனால் இறந்த செல்கள் உதிர்ந்து விடும். 10 நிமிடம் கழித்து குளிர்ந்து நீரில் நன்றாக தேய்த்து கழுவினால் முகம் பிரகாசமடையும். மென்மையான முகம் ஒரு சிலரது முகம் மென்மையாக இல்லாது முரட்டுத்தனமாக காணப்படும். இவர்கள் ஒரு தக்காளியை அரைத்து கூழாக்கி அதனுடன் அரை டீ ஸ்பூன் தயிரை கலந்து அதனை முகத்தில் பேக் போடவேண்டும். 10 நிமிடம் கழித்து முகம் கழுவினால் முகம் பொலிவடைவதோடு மிருதுவாகும். தினசரி வெறும் தக்காளி சாறு மட்டும் தடவி வந்தால் சருமத்தை மிருதுவாக்கி ஒளிரச் செய்யும். வெள்ளரித் துண்டு, தக்காளி இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து கண்களைச் சுற்றி பூசி சிறிது நேரம் ஊறவைத்து கழுவ கருவளையம் போகும். சரும பளபளப்புக்கு கோடை காலத்தில் புற ஊதாக் கதிர்களின் தாக்கம் அதிகம் இருப்பதால் சரும புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம். சிவப்பு நிற காய்கறிகள், பழங்கள் போன்றவைகளில் உள்ள அமிலங்கள் சூரிய ஒளியின் தாக்குதலில் இருந்து சருமத்தை பாதுகாக்கின்றன. ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் ஆப்பிள், பிளம்ஸ், செவ்வாழை, மாதுளம்பழம், இலந்தை, செர்ரி, போன்ற சிவப்பு நிறப் பழங்களில் வைட்டமின் ஏ சத்து அதிகம் காணப்படுகின்றன. இவை இரத்தத்தை விருத்தி செய்யும், இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கும் தன்மை கொண்டது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ஸ் சருமத்தை பாதுகாக்கிறது சருமம் பளபளப்படைய செய்கிறது. ப்ளு பெரீஸ், ஸ்ட்ரா பெரீஸ், மாதுளை போன்ற பழங்கள் சூரிய ஒளியின் தாக்கத்தில் இருந்து சருமத்தை பாதுகாக்கின்றன.