திங்கள், 28 பிப்ரவரி, 2011

பெண்கள் செக்ஸ் வைத்துக் கொள்வது இன்பத்துக்காக மட்டுமல்ல...


பெண்கள் செக்ஸ் வைத்துக் கொள்வது ரொமான்ஸ் மற்றும் சுகத்துக்காக மட்டுமல்ல... அதையும் தாண்டிய மருத்துவ காரணங்களுக்காகவும்தான் என்கிறது சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று.

செக்ஸ் நிபுணர்கள் சின்டி மெஸ்டன் மற்றும் டேவிட் பஸ் இருவரும் இதுகுறித்து ஆய்வு செய்து, 200 காரணங்களைக் கண்டுபிடித்துள்ளனர், பெண்கள் செக்ஸ் வைத்துக் கொள்வது ஏன் என்று.

அவற்றில் சில...

ரொம்ப போர் அடிப்பதாக பெண்களுக்கு நினைப்பு வரும்போது கூடவே வருவது செக்ஸ் உணர்வுதானாம்.

ஒற்றைத் தலைவலியை போக்கிக் கொள்ள செக்ஸ் ஒரு நல்ல வழி.

84 சதவீத பெண்களுக்கு, வீட்டு பணிச் சுமை, மனதை அழுத்தும் கவலைகளிலிருந்து விடுபட செக்ஸ் தேவைப்படுகிறதாம்.

வெறும் கவர்ச்சி அல்லது உடல் அழகுக்காக செக்ஸ் வைத்துக் கொள்ளும் பெண்கள் மிக சிறுபான்மையாகவே உள்ளார்கள் என்கிறது இந்த ஆய்வு.

ஆண்கள் மீதான இரக்கம் கூட பெண்களை செக்ஸ் வைத்துக் கொள்ளத் தூண்டுவதாக இந்த ஆய்வு கூறுகிறது.

தனக்காக ஒரு ஆண் அதிக சிரத்தை எடுத்தால், தனக்காக ஒருவன் அதிக செலவு செய்தால், தனக்காக ஒரு ஆண் அதிக தியாகங்களைச் செய்தால்... அதற்கு பதிலாக ஒரு பெண் தர விரும்பும் முதல் பரிசு... செக்ஸ்தான் என்கிறது இந்த ஆய்வு.

அதே நேரம் ஒரு ஆண் இதையெல்லாம் செய்ய பிரதான காரணமும் செக்ஸ்தான் என்கிறது இதே ஆய்வு!

கர்ப்ப கால குமட்டலை சமாளிப்பது எப்படி?


அறிகுறிகளின் தீவிரம், மசக்கைத் தோன்றும் விதம் போன்றவை ஒவ்வொரு நபருக்கும் வேறுபடும். சிலருக்குக் குமட்டல் ஏற்பட்டு சமாளித்துக் கொள்வார்கள். மற்றவர்கள் எந்த ஒன்றையும் ஜீரணிக்க முடியாமல் அவற்றைத் தூக்கி எறிவார்கள்.

அறிகுறிகள் காலையிலும், வேறு சிலருக்கு பிற வேளைகளிலும், சிலருக்கு நாள் முழுதும் நீடிக்கும். இந்த அறிகுறிக்கு கர்ப்பக் காலத்தின் தொடக்கத்தில் ஏற்படும் ஹார்மோன் மாறுபாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதிலிருந்து நிவரணம் பெற, பின்வரும் குறிப்புகளைப் பின்பற்ற முயற்சிக்கலாம்.

தினமும் மூன்று வேளை சாப்பிடுவதற்குப் பதில், குறுகிய இடைவெளிகளில் கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடுங்கள். இத்தகைய சின்னச் சின்ன மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் மசக்கையை சமாளிக்கலாம்.

காலையில் எழுந்ததும் குமட்டல் மிகவும் அதிகமாக இருந்தால், வறுத்த, உலர்ந்த உணவு அல்லது பிஸ்கட் போன்றவற்றை எழுந்திருக்கும் போதே சாப்பிடுங்கள்.

குமட்டலைத் தூண்டும் உணவுகளையும், வாசனைகளையும் தவிருங்கள். உங்களுக்கும், பிறருக்கும் ஏற்ற உணவாகத் தேர்ந்தெடுத்து தயாரித்துக் கொடுங்கள். பிரச்சனை தராத, அதேசமயம் உடல் நலனுக்கு ஏற்ற உணவுப் பொருட்களைச் சாப்பிடுங்கள்.

கர்ப்பக் காலத்தில் வாசனைக்கான உணர்ச்சி மிக அதிகமாக இருக்கும். சூடான உணவுகளைவிட குளிர்ச்சியான உணவுகள் குறைந்த வாசனை கொண்டவையாக இருப்பதால் அவற்றை நாடுங்கள்.

தளர்த்தியான உடைகளை அணியுங்கள். இடுப்பைச் சுற்றி இறுக்குவது போன்ற உடை அணிவது அசெளகரியத்தை உண்டாக்கும்.

குமட்டலைப் பற்றி நினைத்துக்கொண்டே இருந்தால்தான் அது அதிகமாகும். எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு கவனத்தை வேறு பக்கம் திருப்புங்கள், குமட்டல் குறையும்.

அதிகமாக வாந்தி வருவது அரிதுதான். அது நீடிக்குமானால் நீரிழப்பு மற்றும் எலக்ட்ரோலைட் சமச்சீரின்மை உண்டாகலாம். உடனே மருத்துவரைத் தொடர்புகொள்ளுங்கள்.

கர்ப்பக் காலத்தின் முடிவு வரை குமட்டல் தொடர்ந்தால் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீர்ப் பரிசோதனை செய்துகொள்ள மருத்துவரிடம் செல்லுங்கள்.

- டா‌க்ட‌ர் ஜெயரா‌ணி காமரா‌ஜ்

வியாழன், 24 பிப்ரவரி, 2011

முதல் நாளிலேயே...அவசியமா?


முதல் இரவு என்றாலே அன்று நிச்சயம் உடல் உறவு வைத்தாக வேண்டும் என்ற 'ஐதீகம்' நம்மிடம் உண்டு. முதலிரவு என்றாலே அது முதல் உறவுக்கான நாள் என்று பொதுவான எண்ணம் நிலவுவதே இதற்குக் காரணம். அன்று நாம் நிச்சயம் உறவு வைத்துக் கொண்டாக வேண்டும். இல்லாவிட்டால் மனைவியோ அல்லது கணவரோ தப்பாக நினைத்துக் கொள்வார்களோ என்ற பயமும் இதற்கு இன்னொரு காரணம்.

அதேசமயம் முதல் நாளிலேயே உறவு வைத்தாக வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் இல்லை. மன ரீதியாகவும் சரி, உடல் ரீதியாகவும் சரி முதலிரவு நாளன்று உறவு வைத்துக் கொள்வதில் சில சங்கடங்களை சந்திக்க நேரிடும் என்பதால் அன்றைய தினம் தவிர்ப்பது என்பதும் நல்ல விஷயம்தான் என்கிறார்கள் டாக்டர்கள்.

குறிப்பாக, பெற்றோர்கள் பார்த்து நிச்சயம் செய்யும் திருமணம் என்று வரும்போது, அந்த மணமகனும் சரி, மணமகளும் சரி அதற்கு முன்பு வரை பார்த்திருக்க மாட்டார்கள், பேசியிருக்க மாட்டார்கள், இருவருக்குள்ளும் நெருக்கமான நட்பு இருந்திருக்க வாய்ப்பு இல்லை. அப்படிப்பட்ட நிலையில் ஒருவிதமான இறுக்கமான மன நிலையுடன்தான் இருவரும் தனியறையில் சந்திக்கிறார்கள். எனவே முதலில் இருவருக்குள்ளும் இருக்கும் இடைவெளியை இட்டு நிரப்பி, அன்னியோன்யத்தை ஏற்படுத்திக் கொள்ள இந்த முதலிரவைப் பயன்படுத்தலாம் என்பது டாக்டர்கள் மட்டுமல்லாமல், மன நல மருத்துவர்களின் அறிவுரையும் கூட.

மேலும், திருமண நாளன்று மணமகனும், மணமகளும் படு பிசியாக இருப்பார்கள். போட்டோவுக்குப் போஸ் கொடுப்பது, உறவினர்கள், நண்பர்களின் பாராட்டுக்கள், வாழ்த்துகளை ஏற்பது என்று பிசியாக இருக்கும் அவர்களிடம் நிறைய அசதிதான் மேலோங்கியிருக்கும். எனவே முதல் நாள் இரவை ஓய்வாக கழிப்பதும் நல்ல விஷயம்தான்.

இன்னொரு முக்கிய விஷயம், முதல் நாளன்றே உறவு கொள்ள ஆர்வப்பட்டு, அதில் ஏதாவது குழப்பமாகி, கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ, தனது பார்ட்னர் மீதான திறமை குறித்த அவ நம்பிக்கை வந்து விடும் வாய்ப்புகளும் நிறையவே உள்ளதால், முதல் உறவை, பதறாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

அது முதல் இரவோ அல்லது மூன்றாவது இரவோ, எதுவாக இருந்தாலும் உறவு என்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்று என்பதை யாரும் மறந்து விடக் கூடாது. இருவரும் இணைந்து தொடங்கப் போகும் இல்லற வாழ்க்கையில், செக்ஸ் மட்டும்ல்லாமல் அதையும் தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன. எனவே அனைத்தையும் சிறப்பாக தொடங்க அருமையான, அழகான அடித்தளம் தேவை. அதை ஆற, அமர திட்டமிடுவதில் தவறு இருக்க முடியாது.

அதற்காக முதலிரவு நாளன்று, படுக்கை அறையில் உட் கார் ந்து கொண்டு, அங்க பிளாட் வாங்கலமா, இங்க வீடு கட்டலாமா, எந்தக் கார் வாங்கலாம் என்ற ரீதியிலான ஆலோசனைகளில் மட்டும் தயவு செய்து குதித்து விடக் கூடாது.

செக்ஸ் உறவு என்பது இருவருக்கும் இடையிலான அன்னியோன்யத்தைப் பொறுத்தது என்பதால், இருவரது மனங்களும் ஒன்றாக இணைந்து, இன்பத்துடன் தொடங்குவது என்பது முக்கியமானது.

அதேசமயம், ஏற்கனவே அறிமுகமாகி, திருமணத்திற்கு முன்பே உடல் ரீதியாகவும் இணைந்து பின்னர் திருமணத்தில் ஐக்கியமாவோருக்கு இந்த காத்திருப்பு தேவைப்படாது.

அடிவயிற்றுக்குள் பட்டாம் பூச்சி படபடக்க முதலிரவு அறைக்குள் நுழையும்போது மனம் பூராவும் மகிழ்ச்சி சிறகடிக்கும். அந்த மகிழ்ச்சி இருவருக்குள்ளும் நீடித்து நிலைக்கும் வகையில், திருமண உறவு செழிப்பாக இருக்கும் வகையில், உங்களது முதல் உறவை அமைத்துக் கொண்டால்
சரிதான்.

கச்சத்தீவு அருகே எண்ணெய் கிணறு தோண்டும் பிரிட்டிஷ் நிறுவனம்!!

தூத்துக்குடி: கச்சத்தீவு அருகே பிரிட்டிஷ் நிறுவனமான கெய்ர்ன் எனர்ஜி எண்ணெய்க் கிணறுகள் தோண்டும் முயற்சியில் தீவிரமாக உள்ளது.

இதனால் தமிழக மீனவர்களுக்கு ஆபத்து மேலும் அதிகரித்துள்ளதோடு, மன்னார் வளைகுடாவில் உள்ள அரிய கடல்வாழ் உயிரினங்களுக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக மீனவ அமைப்புகள், கடல் சூழல் ஆராய்ச்சியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்துக்கு நேர் கிழக்கே உள்ள மன்னார் வளைகுடாப் பகுதி யுனெஸ்கோ அமைப்பால் கடல்சார் தேசிய பூங்காவாக அங்கீகரிக்கப்பட்டு, உயிர்க்கோள் காப்பகமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அரிய வகை பவளப் பாறைகள், கடல் தாவரங்கள், கடல் பசு, டால்பின், கடல் அட்டை, கடல் ஆமை போன்ற அரிய கடல்வாழ் உயிரினங்களின் உறைவிடமாக இப்பகுதி திகழ்கிறது. எனவே, இங்குள்ள 21 குட்டித் தீவு பகுதிகளில் மீன் பிடிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மன்னார் வளைகுடாவை ஒட்டிய கச்சத்தீவு பகுதியில், பிரிட்டனைச் சேர்ந்த கெய்ர்ன் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் துணை நிறுவனமான கெய்ர்ன் லங்கா என்ற நிறுவனம் எண்ணெய் வளம் குறித்த ஆய்வை மேற்கொண்டு வருகிறது.

இலங்கையின் வடமேற்குப் பகுதியில் கச்சத்தீவு அருகே சுமார் 3 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவில் இந்த ஆய்வை மேற்கொள்ள கெய்ர்ன் லங்கா நிறுவனத்துக்கு இலங்கை அரசு 2008-ல் அனுமதி அளித்தது.

இதற்காக, அந்நிறுவனம் பூகம்பம் தொடர்பான முப்பரிமாண ஆய்வுகளை நடத்தி முடித்துள்ளதாகவும், இப் பகுதியில் 3 எண்ணெய்க் கிணறுகளை இந்த ஆண்டு மத்தியில் அமைக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கெனவே, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வரும் நிலையில், இப் பகுதியில் எண்ணெய்க் கிணறுகள் அமைக்கப்பட்டால் தமிழக மீனவர்களின் பாதுகாப்பு மேலும் கேள்விக்குறியாகும் என அச்சம் தெரிவித்தார் கடலோர மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எம்.புஷ்பராயன்.

"மீனவர்களை கடல் பகுதியிலிருந்து விரட்டிவிட்டு பன்னாட்டு நிறுவனங்களுக்கு கடல் பகுதிகளைத் தாரை வார்க்கும் முயற்சிதான் இது. மன்னார் வளைகுடா பகுதியில் எண்ணெய் எடுக்கும் முயற்சியில் இந்தியா, இலங்கை நாடுகள் கூட்டாக ஈடுபட வேண்டும் என 1974 இந்தியா- இலங்கை ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில்தான் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. ஆனால், அந்த ஒப்பந்தத்தை மீறி இலங்கை செயல்படுகிறது. அதனை இந்திய அரசு வேடிக்கை பார்க்கிறது" என்றார் அவர்.

கெய்ர்ன் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் என்ற அந்த பிரிட்டிஷ் நிறுவனம் இந்தியாவில் கெய்ர்ன் இந்தியா என்ற பெயரிலும், இலங்கையில் கெய்ர்ன் லங்கா என்ற பெயரிலும் துணை நிறுவனங்களை நடத்தி வருகிறது.

கச்சத்தீவு பகுதியில் எண்ணெய்க் கிணறுகள் அமைக்கப்பட்டால் அந்த திசைக்கே தமிழக மீனவர்கள் மட்டுமல்ல, இலங்கை மீனவர்கள் கூட செல்ல முடியாது. புயல், காற்று நேரத்தில் கூட அப் பகுதியில் ஒதுங்க முடியாத நிலை உருவாகும் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த எண்ணெய்க் கிணறுகளால் மீனவர்களுக்கு மட்டும் ஆபத்து அல்ல, மன்னார் வளைகுடாவில் உள்ள அரிய வகை கடல்வாழ் உயிரினங்களுக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறார் கடல் சூழல் ஆராய்ச்சியாளரான முனைவர் மன்னர்மன்னன்.

"பாதுகாக்கப்பட்ட மன்னார் வளைகுடா தேசியப் பூங்காவுக்கு மிக அருகில் இந்த எண்ணெய்க் கிணறுகள் அமையவிருப்பதால், அரிய வகை உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும். கச்சா எண்ணெய் உறிஞ்சி எடுக்கப்படும்போது, கசிவு ஏற்பட்டு கடலில் பரவ வாய்ப்புள்ளது. இளம் கடல்வாழ் உயிரினங்கள், நுண்ணியிரிகளை உண்டுதான் வாழ்கின்றன. எனவே நுண்ணியிரிகள் அழியும். அதன்மூலம் இளம் கடல்வாழ் உயிரினங்களும் அழிய நேரிடும்", என்றார் அவர்.

'லேட்'டானாலும் 'கிரேட்'டா...!

தாமதங்களால் லாபம் இல்லை என்பது ஒரு பொதுவான கருத்து. அதேசமயம், தாமதங்கள் பல நேரத்தில் நல்லவற்றுக்கு அடி கோலுவதை நாம் 'பிராக்டிகல்' வாழ்க்கையில் பார்க்கலாம்.

இது செக்ஸுக்கும் பொருந்தும். குறிப்பாக திருமண வாழ்க்கையில் செக்ஸ் உறவு என்பது பலவற்றுக்கும் அடிப்படையாக உள்ளது. சிறந்த செக்ஸ் அடித்தளத்தை அமைத்துக் கொண்டால், திருமண வாழ்க்கையை சிறப்பாக அமைக்க முடியும் என்கிறார்கள் உளவியலாளர்கள்.

புதிதாக திருமணமானவர்களுக்கு செக்ஸ் ஆர்வம் மிக அதிகமாக இருக்கும், அதீதமாகவும் இருக்கும். ஆனால் ஒரேயடியாக அதில் மூழ்கிப் போய் விடாமல், சற்று நிதானத்துடன் நடந்து கொண்டு, செக்ஸ் உறவை முறைப்படுத்தி செயல்பட்டால் அது மிக மிக ஆரோக்கியமான, நீடித்த திருமண பந்தத்திற்கு வழி கோலும் என்பது அவர்களின் கருத்து.

எடுத்த எடுப்பிலேயே 'டாப்' கியருக்குப் போனால் அது 'ஆக்சிடன்ட்'டில்தான் போய் முடியும். அதேசமயம், படிப்படியாக கியரை மாற்றி 'டாப்'புக்குப் போனால் 'எக்சலன்ட்' ஆக இருக்கும். திருமணமான இளம் தம்பதியர், செக்ஸ் வாழ்க்கையில் தீவிரமாவதற்கு முன்பு, முதலில் இருவரும் ஒருவரை ஒருவர் சரிவர புரிந்து கொள்ளுதல் அவசியம். அதற்கான வாய்ப்புகளை இருவரும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சரியான புரிதல், சிறந்த தகவல் தொடர்பு என சகலவற்றிலும் இருவரும், நல்ல புரிதலுக்கு வர வேண்டும். அதன் பிறகு செக்ஸ் வாழ்க்கையில் தீவிரமானால் அதில் வழக்கத்தை விட அதிகமான பிடிப்பும், அன்பும் இருக்கும் என்கிறார்கள் அவர்கள்.

இப்படி அவர்கள் சொல்வதற்கு முக்கிய காரணம் - எடுத்த எடுப்பிலேயே இருவரும் செக்ஸில் மட்டும் அதிக நாட்டம் செலுத்தினால், யாராவது ஒருவருக்கு திருப்தி ஏற்படாமல் போய் விட்டால், அது 'பார்ட்னர்' மீதான வெறுப்புணர்வை உள்ளூர வளர்த்து விடும். அது உடனடியாக வெளியே தெரியாது. ஆனால் விரைவிலேயே இருவருக்கும் செக்ஸ் வாழ்க்கையும் சரி, குடும்ப வாழ்க்கையும் சரி கசக்க ஆரம்பித்து விடும்.

எனவே இருவருக்குள்ளும் முதலில் நல்ல புரிதல் உணர்வு வர வேண்டியது அவசியம். அதன் பிறகே அன்பில் ஆழமாக வேண்டும் என்கிறார்கள் இவர்கள்.

அமெரிக்காவில் இதுதொடர்பாக ஒரு சர்வே நடத்தினர். அதில், செக்ஸ் உறவை தாமதப்படுத்தி, பின்னர் ஈடுபட்டவர்கள் திருமண வாழ்க்கை (அல்லது சேர்ந்து வாழுதல்) அதிக பாசப்பிணைப்புடன் இருப்பது தெரிய வந்தது. அதேசமயம், அவசர கதியில் செக்ஸுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்து வருபவர்களிடையே ஒரு விதமான அதிருப்தி நிலவுவதும் தெரிய வந்ததாம்.

வலுவான திருமண பந்தம் என்பது இருவரது மணங்களும் ஒன்றாக இணைவதில்தான் உள்ளது. வெறுமனே உடல் சேர்க்கையில் இது சாத்தியப்படாது. உணர்வுப் பூர்வமாக, உள்ளப் பூர்வமாக இருவரும் முதலில் இணைய வேண்டும். நீ என்பதில் நானும் அடங்கும், நான் என்பதில் நீயும் அடங்கும் என்ற வைரமுத்துவின் வரிகளைப் போல இருவரும் ஒருவருக்குள் ஒருவர் புக வேண்டும். அதன் பிறகு உடல்களின் கூடலுக்கு முக்கியத்துவம் தரலாம். அப்போதுதான் அது உண்மையான பந்தமாக இருக்க முடியுமே தவிர, செக்ஸ் மட்டுமே முக்கியம் என்ற எண்ணம் எழுந்தால் அது நிச்சயம், கூடலுக்குப் பிந்தைய ஊடலுக்கு வித்திடும் என்பதில் சந்தேகம் இல்லை.

சும்மாவா சொல்லி வைத்தார்கள் அந்தக் காலத்தில் - மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள் என்று. அது நிச்சயம் உண்மைதான். ஆனால் இந்த பழமொழியை பொய்யாக்க வேண்டுமானால் திட்டமிடுதலுடன் கூடிய உறவைக் கடைப்பிடிப்பது அவசியம்.

தூக்கமின்மை ஒரு 'டைம்பாம்'!

பின் தூங்கி முன் எழுவதை சிலர் பெருமையாகவே கூறிக்கொள்வது உண்டு. ஆனால் இது 6 மணி நேரத்திற்கும் குறைவாக போனால் மாரடைப்பு உள்ளிட்ட பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று அபாய சங்கை ஊதுகிறது ஆய்வு ஒன்று!

"நீங்கள் என்ன உண்கிறீர்கள் அல்லது அருந்துகிறீர்கள் என்பது மட்டுமே உங்களது உடல் நலத்தை தீர்மானிக்கப்போவதில்லை; தூக்கமும்தான்!" என்று கூறுகிறார்கள் மருத்துவர்கள்!

மாரடைப்பு உள்ளிட்ட இருதய சம்பந்தமான நோய்கள் குறித்து சமீப காலமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், தூக்கமின்மையும் அதற்கு ஒரு முக்கிய காரணமாக உருவெடுத்திருப்பது தெரியவந்துள்ளது.

லண்டனில் அண்மையில் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில், இரவில் ஆறு மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு, இருதய நோயால் அல்லது மாரடைப்பால் உயிரிழப்பதற்கு மற்றவர்களை காட்டிலும் 48 விழுக்காடு அதிக வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்த ஆராய்ச்சி சென்னை, மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களில் இயந்திர வாழ்க்கையில் உழலும் பின் தூங்கி முன் எழுபவர்களுக்கும் பொருந்தும் என்கிறார்கள் சென்னை மற்றும் மும்பையை சேர்ந்த முன்னணி இருதய நோய் மருத்துவ நிபுணர்கள்!

இது தொடர்பாக மும்பையை சேர்ந்த பிரபல இருதய சிகிச்சை நிபுணரான பின்டோ, பின் தூங்கி முன் எழும் பழக்கமுடைய தமது நண்பரின் 43 வயது மகன் ஒருவர் அதிகாலை 5 மணி அளவில் ஜாக்கிங் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென மார்பை பிடித்து சுருண்டு விழுந்தபடியே உயிரை விட்டதை நினைவு கூறுகிறார்.

"இரவில் பின் தூங்குவதும், அதே சமயம் உடற்பயிற்சி கட்டாயம் செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் அதிகாலை எழும்-அதாவது 6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கும்-பழக்கம் நமது இளைய தலைமுறையினரிடையே தற்போது மிக அதிகமாக காணப்படுகிறது.உடற்பயிற்சிக்காக தூக்க நேரத்தை குறைக்கும் இவர்களுக்கு அதில் உள்ள ஆபத்து புரிவதில்லை.ஏழு மணி நேரம் மிக நல்லது.முடியாவிட்டால் 6 மணி நேரமாவது கட்டாயம் தூங்க வேண்டும்.அது இல்லாமல் போனால் ஆபத்தை அதுவே உணர்த்திவிடும்" என்கிறார் பின்டோ.

அதேப்போன்று மற்றொரு இருதய சிகிச்சை நிபுணரான மேத்தா,"முதல்முதலாக மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைகளின் அவசர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட 60 விழுக்காட்டினருக்கும் அதிகமானோர்,குறைவான நேரம் தூங்குபவர்களாகவும்,அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்பவர்களாகவுமே இருப்பது தெரியவந்துள்ளது" என்கிறார்.

இதுமட்டுமல்ல அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட 8 நாடுகளில், சுமார் 4.7 லட்சம் பேரிடம் வார்விக் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்விலும் இது உண்மைதான் என்பது நிரூபணமாகியுள்ளது.

"ஒருவர் இரவில் 6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினாலோ அல்லது தூக்கம் பாதிக்கப்பட்டாலோ அவருக்கு மற்றவர்களை காட்டிலும் இருதய நோயால் இறப்பதற்கான வாய்ப்பு 48 விழுக்காடு அதிகமாக உள்ளது.மேலும் 'ஸ்ட்ரோக்'கால் இறப்பதற்கான வாய்ப்பும் மற்றவர்களை காட்டிலும் 15 விழுக்காடு அதிகமாக உள்ளது" என்று தெரியவந்துள்ளதாக கூறும் அந்த ஆய்வறிக்கை,"பின் தூங்கி முன் எழுவது உடலிலேயே கட்டிக்கொண்டிருக்கும் 'டைம்பாம்' க்கு சமமம் என்று எச்சரிக்கிறது.

இது ஒருபுறம் இருக்க"ஐந்து மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் சர்க்கரை நோயும், உடல் பருமனும் இணைந்த டயப்ஸிட்டி - diabesity (diabetes and obesity) - என்ற நோய் வர அதிக வாய்ப்புள்ளதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

அதே சமயம் கும்பகர்ணன் கணக்காக 10 மணி நேரத்திற்கும் அதிகமாக ஒருவர் தூங்கினால் அதுவும் கேடுதான் என்கிறார்கள் மருத்துவர்கள்.

திங்கள், 21 பிப்ரவரி, 2011

வேலைவாய்ப்புகளுக்கு பஞ்சமில்லாத நானோ டெக்னாலஜி!

அடுத்த 10 ஆண்டுகளில் அஞ்சத்தக்க வளர்ச்சி பெறும் துறையாக நானோ டெக்னாலஜி (Nano technology) கணிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் கடந்த 1985ஆ‌‌‌ம் ஆ‌ண்டு உருவான இந்தத் தொழில்நுட்பம், இன்று வரை அதன் துவக்க கால வளர்ச்சியை மட்டுமே அடைந்துள்ளது.

உலகம் முழுவதும் நானோ டெக்னாலஜி தொடர்பான ஆய்வுகளும், படிப்புகளும் புதிது புதிதாக உருவெடுத்து வருகின்றன. இந்தியாவும் பிற நாடுகளுக்கு சவால் விடுக்கும் வகையில் நானோ டெக்னாலஜி தொழில்நுட்பத்தை ஊக்குவிக்கும் படிப்புகள், ஆய்வகங்களை உருவாக்கி வருகிறது.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூட நானோ டெக்னாலஜி தொழில்நுட்பத்தின் வளர்ச்சி பற்றி விரிவாக விவரித்துள்ளார். மருத்துவம், அறிவியல், இயற்பியல் துறைகளில் நேனோ டெக்னாலஜி மாபெரும் மாற்றத்தை உருவாக்கியுள்ளதாகவும், மனிதன் நோயின்றி வாழ்வதற்கும் இந்த தொழில்நுட்பம் பெரிதும் உதவும் என்றும் கலாம் தெரிவித்துள்ளார்.

பொதுவாக 100 நானோ மீட்டருக்கும் குறைவான அளவுகளால் அமைந்த உருவ அமைப்புகளைக் கொண்டும், அந்த சிறு அளவுகளால் சிறப்பாகப் பெறப்படும் பண்புகளைக் கொண்டும் உருவாக்கப்படும் கருவிகளையும், பொருட்பண்புகளையும் நானோ தொழில்நுட்பம் என்று அழைக்கிறோம்.

ஒரு நானோ மீட்டர் என்பது ஒரு மீட்டரின் 1,000,000,000ல் (ஒரு பில்லியனில்) ஒரு பங்கு. ஒரு நானோ மீட்டர் நீளத்தில் 8-10 வரையான அணுக்களின் அமர முடியும். சாதாரணமாக மனிதர்களின் தலைமுடியானது 70,000 முதல் 80,000 நானோ மீட்டர் தடிப்புடையது.

நானோ டெக்னாலஜி என்பது உண்மையிலேயே பல துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய, ஏற்படுத்திவரும் ஒரு தொழில்நுட்பம். இது ஒரு தனிப்பட்ட துறையில் மட்டும் செல்வாக்கு செலுத்தவில்லை. மாறாக உயிரியல், வேதியியல், இயற்பியல், மின்னணுவியல், மருத்துவம், பொறியியல் என்று பல துறைகளில் ஆதிக்கம் செலுத்துகிறது.

பார்க்கின்சன்ஸ் (Parkinson's) எனப்படும் மூளை செயல்பாடுகளை மட்டுப்படுத்தும் அபாயகரமான நோயின் பாதிப்பைக் குறைக்கும் சிகிச்சை முறையில் கூட நானோ டெக்னாலஜி குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல் சளித் தொந்தரவு போன்ற அன்றாட நோய்களுக்கும் நானோ டெக்னாலஜி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வீரியமான மருந்துகளை தயாரிக்கும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். பொதுவாக தற்போதைய மருத்துவ முறையில் சிகிச்சை அளித்தாலும் சளித் தொந்தரவு 3 முதல் 4 நாட்களுக்கு நீடிக்கும்.

ஆனால் நானோ டெக்னாலஜி மூலம் தயாரிக்கப்பட்ட மாத்திரைகளை உட்கொள்வதன் மூலம் ஒரே நாளில் நிவாரணம் பெற முடியும் என இத்துறை வல்லுனர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதுபோன்ற ஆயிரம் ஆச்சரியங்களை தனக்குள் அடக்கியுள்ள நானோ டெக்னாலஜி தொடர்பான படிப்புகளை எங்கு படிக்கலாம்? அதன் மூலம் என்னென்ன வேலைவாய்ப்புகளைப் பெறலாம் என்பதை இந்தக் கட்டுரையில் காண்போம்.

இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு சில கல்லூரிகளே இளநிலை, முதுநிலையில் நானோ டெக்னாலஜி படிப்பை வழங்குகின்றன.

இளநிலை படிப்புகள்: அமிதி இன்ஸ்டிடியூட் ஆஃப் நானோ டெக்னாலஜி, கோவை பாரதியார் பல்கலைக்கழகம், தஞ்சாவூரிலுள்ள சாஸ்திரா பல்கலைக்கழகம் ஆகியவை இளநிலை அளவில் நானோ டெக்னாலஜி கல்வியை வழங்குகின்றன. இதில் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில், நானோ டெக்னாலஜி B.Sc Physics படிப்பு உள்ளது.

முதுநிலை படிப்புகள்: நொய்டாவில் (டெல்லி அருகேயுள்ளது) உள்ள அமிதி (Amity) இன்ஸ்டிடியூட், கொச்சியில் உள்ள அமிர்தா சென்டர் ஃபார் நானோ சயின்ஸ், கோவை அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பயோசிஸ் பயோடெக்ஸ்& ரிசர்ச் சென்டர், சண்டிகரில் உள்ள சென்ட்ரல் சயின்டிஃபிக் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் ஆர்கனைஷேசன், மும்பை, கான்பூர், சென்னை, டெல்லி, குவஹாட்டியில் உள்ள ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்கள், பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ், புதுடெல்லியில் உள்ள ஜமியா மில்லியா இஸ்லாமியா கல்லூரி, போபால் மவுலானா ஆசாத் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, புனேவின் நேஷனல் கெமிக்கல் லெபாரட்ரி, குருஷேத்திரா, ரூர்கேலாவில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, புதுடெல்லி நேஷனல் ஃபிசிக்கல் லெபாரட்ரி, தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், வேலூரி‌ல் உள்ள வி.ஐ.டி. ஆகிய இடங்களில் முதுநிலை நானோ டெக்னாலஜி படிப்புகள் வழங்கப்படுகின்றன.

வேலைவாய்ப்புகள்: இந்தியாவில் வளர்ந்து வரும் நானோ டெக்னாலஜி படிப்பை வழங்கும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை விரைவில் அதிகரிக்கும் என்பதால், பேராசிரியர், ஆய்வாளர்கள் பணிக்கு ஏராளமானோர் தேவைப்படுவர்.

இதேபோல் நானோ டெக்னாலஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நிறுவனங்களும் புதிதாக உருவாக்கப்படும் நிலையில், அதற்கும் ஏராளமான பணியாளர்கள் தேவைப்படுவர். இதுமட்டுமின்றி நேனோ டெக்னாலஜி தொழில்நுட்பம் தொடர்பான ஆய்வுகளுக்கும் சர்வதேச அளவில் விஞ்ஞானிகளின் தேவை அதிகரித்து வருகிறது.

புதன், 16 பிப்ரவரி, 2011

125 ஆண்டுகளுக்கு பிறகு கோகோ-கோலாவின் பார்முலா ரகசியத்தை அமெரிக்க ரேடியோ வெளியீடு!


நியூயார்க்: 125 ஆண்டுகளுக்குப் பிறகு ரகசியமாக வைக்கப்பட்ட கோகோ-கோலாவின் பார்முலா வெளியாகியுள்ளது.

கடந்த 1886-ம் ஆண்டு தான் கோகோ-கோலா முதன்முதலாக தயாரிக்கப்பட்டது. முதலில் அட்லாண்டாவில் மட்டுமே விற்பனையான இந்த குளிர்பானம் பிறகு உலகம் முழுவதும் விற்பனையாகி வருகிறது.

கோகோ-கோலா விற்பனையாகத் துவங்கியது முதல் பலரும் அதற்கு பிரத்யேக சுவை அளிக்கும் பார்முலாவை தெரிந்து கொள்ள முயன்றனர். அதில் பலர் தாங்கள் கண்டுபிடித்துவிட்டதாகக் கூட கூறினர். ஆனால் யார் கையிலும் சிக்காமல் பார்முலா பரம ரகசியமாகவே பாதுகாக்கப்பட்டு வந்தது. அப்படிப்பட்ட பார்முலாவை கண்டுபிடித்தவர் ஜான் பெம்பர்டன்.

இந்த பார்முலா ரகசியத்தை அமெரிக்காவில் இருந்து ஒளிபரப்பாகும் ஒரு ரேடியோ தெரிவித்துள்ளது. அதன் நிகழ்ச்சி ஒரு இணையதளத்திலும் வெளியாகி உள்ளது.

கோகோ-கோலாவின் அதிகாரப்பூர்வமான எழுத்துப் பிரதி அட்லாண்டாவில் உள்ள சன்டிரஸ்ட் வங்கியின் பாதுகாப்பு அறையில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் 2 ஊழியர்களுக்கு மட்டும் தான் அந்த பார்முலா தெரியும் என்று கூறப்படுகின்றது. அவர்கள் இருவரும் ஒன்றாகப் பயனிப்பதில்லை என்று தெரிகிறது. இந்நிலையில் அவ்விருவர் மூலம் தான் ரகசியம் வெளியாகி இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

தூத்துக்குடி, நாகர்கோவில், செங்கோட்டை, கோவைக்கு கோடைகால சிறப்பு இரயில்கள் இய‌க்க‌ம்!


கோடைக்காலத்தையொட்டி பயணிகளின் வசதிக்காக சென்னையில் இருந்து தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், செங்கோட்டை, கோவைக்கு கோடைக்கால சிறப்பு இரயில்களை தெற்கு இரயில்வே இயக்குகிறது.

சென்னை எழும்பூரில் இருந்து திருச்செந்தூருக்கு வாரந்தர சிறப்பு இரயில் (06037) மயிலாடுதுறை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி வழியாக இயக்கப்படுகிறது. இந்த இரயில் எழும்பூரில் இருந்து ஏப்ரல் 4ஆ‌‌ம் தேதி முதல் ‌ஜூன் 20ஆ‌ம் தேதி வரை ஒவ்வொரு திங்கட்கிழமையும் இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 2.15 மணிக்கு திருச்செந்தூரை சென்றடையும்.

மறுமார்க்கத்தில் திருச்செந்தூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு சிறப்பு இரயில் (06038) ஏப்ரல் 5ஆ‌ம் தேதி முதல் ஜூன் 21ஆ‌ம் தேதி வரை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் இரவு 7.15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10.30 மணிக்கு எழும்பூரை வந்தடையும்.

சென்னை எழும்பூரில் இருந்து தூத்துக்குடிக்கு வாரந்தர அதிவிரைவு சிறப்பு இரயில் (06039) ஏப்ரல் 7ஆ‌ம் தேதி முதல் ‌ஜூன் 23ஆ‌ம் தேதி வரை ஒவ்வொரு வியாழக்கிழமையும் இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10 மணிக்கு தூத்துக்குடியை சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில் தூத்துக்குடியில் இருந்து சென்னை எழும்பூருக்கு ஏப்ரல் 8ஆ‌ம் தேதி முதல் ஜூன் 24ஆ‌ம் தேதி வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சிறப்பு இரயில் (06040) இரவு 9 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8.50 மணிக்கு எழும்பூரை வந்தடைகிறது.

சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டைக்கு வாரந்தர அதிவிரைவு சிறப்பு இரயில் (06041) ஏப்ரல் 9ஆ‌ம் தேதி முதல் ‌ஜூன் 25ஆ‌ம் தேதி வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு 6.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6.50 மணிக்கு செங்கோட்டையை சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில் செங்கோட்டையில் இருந்து ஏப்ரல் 10ஆ‌ம் தேதி முதல் ஜூன் 26ஆ‌ம் தேதி வரை சிறப்பு இரயில் (06042) மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.25 மணிக்கு எழும்பூரை வந்தடைகிறது.

கோவையில் இருந்து சென்னை சென்‌ட்ரலுக்கு வாரந்தர அதிவிரைவு சிறப்பு இரயில் (06618) ஏப்ரல் 5ஆ‌ம் தேதி முதல் ஜூன் 28ஆ‌ம் தேதி வரை இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.15 மணிக்கு கோவையை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் ஏப்ரல் 6 முதல் ஜூன் 29 வரை ஒவ்வொரு புதன்கிழமையும் சிறப்பு இரயில் (06617) இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6.50 மணிக்கு சென்‌ட்ரலை வந்தடைகிறது.

திருச்சியில் இருந்து சென்னை எழும்பூருக்கு மயிலாடுதுறை வழியாக வாரந்தர சிறப்பு இரயில் (06802) ஏப்ரல் 6ஆ‌ம் தேதி முதல் ஜூன் 29ஆ‌ம் தேதி வரை இரவு 8 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.25 மணிக்கு சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் எழும்பூரில் இருந்து திருச்சிக்கு ஏப்ரல் 7ஆ‌ம் தேதி முதல் ஜூன் 30ஆ‌ம் தேதி வரை சிறப்பு இரயில் (06801) இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை திருச்சியை 6 மணிக்கு சென்றடைகிறது.

நாகர்கோவிலில் இருந்து சென்னை எழும்பூருக்கு வாரந்தர அதிவிரைவு சிறப்பு இரயில் (06304) ஏப்ரல் 3ஆ‌ம் தேதி முதல் ஜூன் 26ஆ‌ம் தேதி வரை மாலை 5 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6.05 மணிக்கு எழும்பூரை வந்தடைகிறது. மறுமார்க்கத்தில் எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு வாரந்தர சிறப்பு இரயில் (06303) மதியம் 2.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.30 மணிக்கு நாகர்கோவிலை சென்றடைகிறது.

சென்னை சென்‌ட்ரலில் இருந்து நாகர்கோவிலுக்கு வாரந்தர ஏழைகள் ரதம் சிறப்பு இரயில் (06021) ஏப்ரல் 13ஆ‌ம் தேதி முதல் ஜூன் 22ஆ‌ம் தேதி வரை ஒவ்வொரு புதன்கிழமையும் இரவு 6.15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11 மணிக்கு நாகர்கோவிலை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து சிறப்பு இரயில் (06022) ஏப்ரல் 14ஆ‌ம் தேதி முதல் ஜூன் 23ஆ‌ம் தேதி வரை மதியம் 2.20 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8.25 மணிக்கு சென்டிரலை வந்தடைகிறது.

இந்த இரயில்களுக்கான முன்பதிவு நாளை தொடங்குகிறது எ‌ன்று தெ‌ற்கு இர‌யி‌ல்வே தெ‌ரி‌‌வி‌த்து‌ள்ளது.

திங்கள், 14 பிப்ரவரி, 2011

இரவில் பாதுகாப்பான டிரைவிங்குக்கு சில டிபஸ்...


பகல் நேரங்களை விட இரவு நேரங்களில் வாகனம் ஓட்டும்போது வேகத்தையும்,தூரத்தையும் கணிப்பதில் பல சிரமங்கள் ஏற்படுகின்றன.தவிர,எதிரே வரும் வாகனங்களின்ம முகப்பு விளக்குகளின் வெளிச்சம் நம் கண்களை சில வினாடிகள் இருளாக்கி விடும்.இதனால்,இரவு நேரங்களில் அதிக விபத்துக்கள் நடக்கின்றன.பகல் நேரத்தைவிட இரவு நேரத்தில்,விபத்துக்கள் மூன்று மடங்கு அதிகம் நிகழ்வதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

பகல் நேரத்தை போன்று இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு போதிய வெளிச்சமும்,பார்வை திறனும் கிடைப்பதில்லை.வாகனத்தின் முகப்பு விளக்குகள் குறைந்த தூரத்திற்கு மட்டுமே வெளிச்சத்தை தருகின்றன.இதனால்,இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் சாலையை கணித்து ஓட்டுவதில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன. எனவே,இரவு நேர பயணங்களில் டிரைவர்கள் மிகவும் விழிப்புடன் செயல்படுவதற்கான சில முன் யோசனைகள்...

•கார்களில் இரவு நேர பயணம் செல்வதை பெரும்பாலும்,தவிர்த்து விடுங்கள்.தவிர்க்க முடியாத காரணங்களால் செல்லும்போது,டிரைவர் இருந்தாலும் கார் ஓட்ட தெரிந்த மற்றொருவர் காரில் இருப்பது அவசியம்.அவசர சமயங்களிலோ அல்லது டிரைவருக்கு அயர்ச்சி ஏற்பட்டாலோ மற்றொருவர் காரை ஓட்டலாம்.

•கார்களில் அடிக்கடி இரவு பயணங்கள் செல்லும் தேவை இருந்தால்,வெள்ளை நிற காரில் செல்வது பாதுகாப்பானது.கார் வாங்கும்போதே இதை நினைவில் கொள்ளுங்கள். இரவில் சாலை ஓரங்களில் நிறுத்தினாலோ அல்லது இருளான பகுதிகளில் செல்லும்போதோ பின்னால் வரும் வாகன ஓட்டிகள் மற்றும் எதிரே வரும் வாகன ஓட்டிகளுக்கு வெள்ளை நிறம் கொண்ட கார் தெளிவாக தெரியும்.

•பவர் ஸ்டியரிங் மற்றும் அதிக எஞ்சின் திறன் கொண்ட கார்களை ரத்த அழுத்தம்,சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரவில் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.

•இரவு நேர பயணத்தின்போது முகப்பு கண்ணாடிகள்,முகப்பு விளக்குகள்,பின்பக்கமுள்ள எச்சரிக்கை விளக்குகளை துடைத்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

•முகப்பு விளக்குகள் எதிரில் சரியான திசையில் ஒளிரும் வகையில் பொருத்தி இருக்க வேண்டும்.இல்லையென்றால் உங்களுக்கு மட்டுமல்ல எதிரில் வாகன ஓட்டிகளுக்கும் சிரமத்தை ஏற்படுத்தும்.

•மது அருந்திவிட்டு இரவில் வாகனம் ஓட்டுவதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.ஆல்கஹால் தரும் ஒரு சில மணி நேர சந்தோஷம்,ஒரு சில வினாடிகளில் உங்கள் உயிரையே பறித்துவிடக்கூடும்.

•முன்னால் செல்லும் வாகனத்துக்கும்,உங்கள் வாகனத்துக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்குமாறு பார்த்து வாகனத்தை ஓட்டுங்கள்.மேலும்,வாகனத்தை பின்தொடரும்போதும்,எதிரில் வாகனம் வரும்போதும் முகப்பு விளக்கை டிம் செயது ஓட்டுங்கள்.

•தொடர்ந்து கார் ஓட்டுவதை தவிர்த்து விடுங்கள்.குறிப்பிட்ட தூரத்திற்கு ஒரு முறை காரை நிறுத்தி டீ,காபி அல்லது கூல் டிரிங்ஸ் குடித்து உடலை ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள்.

•எதிரில் அதிக வெளிச்சத்துடனும்,அதிவேகமாகவும் வாகனங்கள் வருவதை உணர்ந்தால்,வேகத்தை குறைத்து கவனமாக ஓட்டுங்கள்.

நள்ளிரவில் தூக்கம் வருவதாக தோன்றினால்,பார்க்கிங் லே-பை அல்லது மக்கள் நடமாட்டமிக்க பகுதிகளில் காரை நிறுத்திவிட்டு குட்டி தூக்கம் போடுங்கள்.அதன்பின்,முகத்தை தண்ணீரில் நன்றாக கழுவிக்கொண்டு பயணத்தை தொடர்வது நல்லது.

•எதிர் திசையில் வாகனம் வருவது தூரத்தில் தெரிந்தாலும்,முன்னாள் செல்லும் வாகனத்தை அவசரப்பட்டு ஓவர்டேக் செய்ய வேண்டாம்.இரவு நேரத்தில் எதிரில் வரும் வாகனம் தொலைவு மற்றும் வேகத்தை கணிப்பது கடினம்.இதுபோன்று ஓவர்டேக் செய்வதால்தான் அதிக விபத்துக்கள் நிகழ்கின்றன.

காரில் இரவு பயணம் செல்லும்போது மேற்கண்ட சில எளிய வழிமுறைகளை பின்பற்றினால்,உங்கள் இரவு பயணமும் மகிழ்ச்சியானதாகவே அமையும் என்பதில் எள் அளவும் ஐயமில்லை.

ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

காதலர் தினத்தில் திருமணம்!


அன்பிற்கும் காதலிற்குமான மாதமாக பிப்ரவரி மாதம் கருதப்படுகிறது. அதிலும் பிப்ரவரி மாதத்தில் வரும் காதலர் தினத்திலோ அல்லது அந்த நாளின் நெருக்கத்திலோ திருமணம் செய்து கொள்வது என்பது மிகவும் பொருத்தமுடையது. திருமணத்தைப் பற்றி தாமஸ் மூர், “வேறுபட்ட விதியையும், வாழ்வையும் கொண்ட இரண்டு ஆத்மாக்கள் தங்களையும், தங்கள் குடும்பத்தினரையும் இணைக்கும் உன்னதமான பந்ததைத்தை ஏற்படுத்துவது திருமணமாகும்” என்று கூறினார்.

ஒவ்வொரு நாளும் நமது வாழ்வு என்பதும் கூட நமது ஆத்மனின் புரியாத, கால வரையறையற்ற ஒரு பந்தம்தான். காதலர் தினத்தில் தங்களது திருமண வாழ்வை அமைத்துக் கொள்ள முடிவு செய்துள்ள எனது வாசகர்கள், அது தொடர்பான பணிகளில் மூழ்கியுள்ள வேளையில் நான் இதனை எழுதுகிறேன். இருந்தாலும், உங்களுடைய வாழ்வை அன்பினாலும், காதலாலும் நிரப்ப நினைத்தால் உங்கள் திருமணத்திற்கு நான் கூறும் இந்த ஆலோசனைகளையும் சேர்த்துக்கொண்டால், அது உங்கள் மண நாளை மேலும் நிறைவுடையதாக்கும்.

உங்களுடைய திருமண அழைப்பிதழில் இருந்தே காதலர் தின வண்ணத்தை கொடுக்கத் துவங்குங்கள். திருமண அழைப்பிதழில் மன்மதனின் அழகிய உருவத்தை பொறித்து, வார்த்தைகளை தங்க நிறத்தில் இருக்குமாறு அமையுங்கள். உங்கள் நாளின் வண்ணத்தை உங்கள் அழைப்பிதழ் பறைசாற்றட்டும். திருமண அழைப்பிதழில் உங்கள் இருவரின் புகைப்படங்களையும் பொறித்திடுங்கள்.

உங்கள் திருமண பந்தத்தை அனைவருக்கும் தெரிவிக்கும் அந்த நிகழ்விற்கான மண்டபத்தை மிக எச்சரிக்கையாக தெரிவு செய்யுங்கள். நீங்கள் எந்த மண்டபத்தை தெரிவு செய்தாலும், அங்கு ஏராளமான மெழுகு வர்த்திகளை கொளுத்தி வைக்கும் வசதியுள்ளதாக அது இருக்கட்டும், ஏனெனில் மெழுகு வர்த்திகள் திருமண நாளிற்கான மனச் சூழலைத் தரும். இயற்கையான ஒரு சூழலில் திருமண நிகழ்வு நடைபெறட்டும். அதற்கேற்ற வகையில் ஒரு தோட்டத்தையோ அல்லது மலர்கள் பூத்த செடிகள் நிறைந்த மாடி வீட்டையோ தெரிவு செய்யுங்கள்.

திருமண நிகழ்விற்கு முக்கியமானது மலர்களே, மிக அதிகமான மலர்களே. காதலர் தினத்தை...

நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்களோ அதனை உணர்த்தும் விதமான மலர் அமைப்பு ஒழுங்கமையுங்கள். திருமண மண்டபத்தின் மையத்தில் தங்க நிறத்தில் மன்மதனின் சிறு பொம்மைகள் பதிக்கப்பட்ட மலர் அலங்காரத்தை செய்து அசத்துங்கள். உங்களுடை மதிப்புமிக்க விருந்தினர்கள் அமரும் இருக்கைகள் பின்னால் மலர் அலங்காரம் அமையுமாறும் செய்யலாம்.

மண நாளிற்கான ஒரு வண்ணத்தை தெரிவு செய்து அதனை பளிச்சிடச் செய்வது நன்றாக அமையும். மண்டபத்தின் ஒரங்களையும், திருமணம் நடைபெறும் பந்தலையும் தங்க கரையுடன் கூடிய தூய வெள்ளை நிற துணியைக் கொண்ட அலங்காரத்தைச் செய்யலாம். இதோடு, நீங்கள் விரும்பினால், சிகப்பு அல்லது இளஞ்சிவப்பு வண்ணத்தை தனியாகவோ அல்லது சேர்த்தோ மேலும் அழகு சேர்க்கலாம். உங்களின் திருமணத்திற்கு மிக முக்கியமான காதலர் தின உணர்வை ஏற்படுத்த பளபளக்கும் நீலத்துடன், மிளிரும் தங்கம், பச்சை ஆகியவற்றை வெண்மையுடன் கலந்து அலங்காரங்களை அமையுங்கள்.

காதலர் தினத்தில் திருமணம் செய்துகொள்ளப்போகும் நீங்கள், அன்றைய தினத்தில் உங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் உடையையே அணிய வேண்டும். சிகப்பு கரையுடன் கூடிய வெண்மை நிற ஆடைகளை அணியலாம். சிவப்பு வண்ணத்தை பயன்படுத்தலாம், ஏனெனில் அது அன்பைக் குறிப்பதல்லவா? உங்களின் அழகிய கூந்தல் அலங்காரத்திற்கேற்ற மலர்களை கூந்தலோடு இணையுங்கள். உங்கள் திருமண நகைகளும் காதலர் தின உணர்வை வெளிப்படுத்தும் விதத்தில் இதயம், ரோஜா, மன்மதன், புறாக்கள் ஆகிய ஏதாவதொன்று பொறிக்கப்பட்டதாக இருக்கட்டும். கெம்பு அல்லது சிவப்பு நிற ஆபரணக் கல் பொதித்த மோதிரங்களை அணியுங்கள். மணமகன் சிகப்பு வண்ண டை கட்டியிருத்தலும், மணமகள் இளம் சிவப்பு, வெள்ளி நிர உடையுடன் இருப்பதும் பொருத்தமாக இருக்கும்.

காதலர் தினத்தில் திருமணம் செய்யும்போது இசை இல்லாமலா? காதலை வெளிப்படுத்தும் இதமான இசையை பரப்புங்கள். எல்லோருக்கும் பரிச்சயமான காதல் பாடல்களை ஒலிக்கச் செய்யுங்கள். உங்களை வாழ்த்த வந்துள்ளவர்களும் காதல் உணர்வில் திளைக்கச் செய்யும் இசையை வாசிக்குமாறு செய்யுங்கள்.

காதலர் தினத்தில் திருமணம் செய்வது என்பது தொன்று தொட்டு நடைபெற்றுவருவதாகும். காதலுக்காக அர்ப்பணம் செய்யப்பட்ட நாளை விட வேறு எந்த நாளில் வாழ்வு முழுவதையும் அன்பிற்காக அர்ப்பணிக்கும் பந்தத்தை அமைக்க முடியும்? இந்த நாளில் உங்களின் திருமணத்தை வைத்துக்கொண்டால் அதுவே உன்னதமான அந்தக் காதல் உணர்வைத் தரவல்லதாகும்.

காதலர் தினம்: ஸ்ட்ராபெர்ரி விற்பனை அமோகம்!


ஷிம்லா: காதலர் தினத்தை முன்னிட்டு ஸ்ட்ராபெர்ரி உற்பத்திக்கு பெயர் போன ஹிமாச்சல பிரதேசத்தில் ஸ்ட்ராபெர்ரி விற்பனை சூடுபிடித்துள்ளது.

இது குறித்து அம்மாநில பழ மொத்த வியாபாரி தாகூர் கூறியதாவது,

காதலர் தினத்தை முன்னிட்டு ஸ்ட்ரெபெர்ரிக்கு ஏகக் கிராக்கி ஏற்பட்டுள்ளது. அதனால் அனைத்து விவசாயிகளும் அறுவடையை வழக்கத்திற்கு முன்பே ஆரம்பித்துவிட்டனர்.

தற்போது தினமும் 250 கிராம் எடைகொண்ட ஸ்ட்ராபெர்ரி டிரேகள் 150 முதல் 200 வரை விற்பனையாகிறது. கடந்த வாரம் வரை 50 முதல் 75 டிரேக்கள் தான் விற்பனையாகின. இவை குறிப்பாக சன்டிகர், பஞ்சாப் மற்றும் டெல்லியில் அமோக விற்பனையாகும். ஒரு டிரேயின் ரூ. 50-70 வரை விற்கப்படுகிறது என்றார்.

சுற்றுலாப் பயணிகளும், இளைஞர்களும் வரும் இடங்களில் தான் ஸ்ட்ராபெர்ரிக்கு அதிக கிராக்கி. அதனால் ஒரு டிரே ரூ. 100 முதல் 120 வரை விற்பனை செய்யப்படும். சமவெளிகளில் விளையும் ஸ்ட்ராபெர்ரியை விட மலைப்பகுதிகளில் விளைவதற்கு மவுசு அதிகம். தற்போது காதலர் தினத்தை முன்னிட்டு அதிக கிராக்கி இருப்பதால் வியாபாரிகள் அதிக ஸ்ட்ராபெர்ரிகளை கொள்முதல் செய்கின்றனர் என்று பழ வியாபாரி ராஷித் முஹமது தெரிவித்ததார்.

பொதுவாக ஸ்ட்ராபெர்ரி மார்ச் மாத துவக்கத்தில் தான் மார்க்கெட்டுக்கு வரும். ஆனால் காதலர் தினத்தை முன்னிட்டு ஏராளமான விவசாயிகள் ஏற்கனவே பழங்களை மார்க்கெட்டுக்கு அனுப்பத் துவங்கி விட்டனர். கடந்த ஆண்டு அம்மாநிலத்தில் 500 குவிண்டால் ஸ்ட்ராபெர்ரி உற்பத்தி செய்யப்பட்டது.

திங்கள், 7 பிப்ரவரி, 2011

கூகுள் வேலை... குவிந்தன விண்ணப்பங்கள்!!


புதிதாக வேலைக்கு ஆளெடுப்பதாக கூகுள் நிறுவனம் அறிவித்ததைத் தொடர்ந்து ஒரே வாரத்தில் 75000 விண்ணப்பங்கள் குவிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் 6000 புதிய பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டது கூகுள். இத்தனை ஆண்டுகளில் கூகுளின் மெகா வேலைவாய்ப்பு அறிவிப்பு இதுதான்.

இந்த அறிவிப்பு வெளியான வேகத்தில் விண்ணப்பங்கள் குவிய ஆரம்பித்துவிட்டன கூகுளுக்கு. 2007-ம் ஆண்டு முதல் முதலாக வேலைவாய்ப்பு அறிவிப்பை கூகுள் ஆரம்பித்ததிலிருந்து, அந்நிறுவனம் பெற்றுள்ள அதிகபட்ச விண்ணப்பங்கள் எண்ணிக்கை இதுதான்.

1 பணியிடத்துக்கு 12 நபர்கள் வீதம் இப்போது விண்ணப்பித்துள்ளனர்.

முதல் முதலில் கூகுள் நிறுவனம் நியூயார்க் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட போது 3000 பணியாளர்கள் மட்டுமே இருந்தனர். இன்று பொருளாதார மந்தம், பணவீக்கம் என பல பிரச்சினைகளால் சில ஆயிரம் பணியாளர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையிலும் உலகம் முழுக்க 24400 பேர் இந்நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர். உலகம் முழுக்க மொத்தம் 63 கிளைகள் கூகுளுக்கு உள்ளன.

சாப்ட்வேர் எஞ்ஜினீயர்கள், டிஸைனர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், சாப்ட்வேர் டெவலப்பர்கள், நிர்வாகப் பணியாளர்கள், உள்ளடக்கம் வழங்குநர்கள் என பல பதவிகளுக்கு ஆட்கள் தேவை என விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

மலைகிராமங்களுக்கு இன்னும் எட்டாத கல்வி!


ஈரோடு மாவட்டத்தில் மலைகிராம மக்களுக்கு இன்னும் முழுமையான கல்வி கிடைக்காத நிலை நீடித்து வருகிறது. இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்தால்தான் எதிர்கால குழந்தைகளின் வாழ்க்கையில் வெளிச்சம் கிடைக்கும்.

ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர் அடுத்துள்ள பர்கூர், தாமரக்கரை, தட்டக்கரை, சத்தியமங்கலம் மலைப்பகுதியான கடம்பூர், தாளவாடி பகுதியை சுற்றிலும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இந்த கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பள்ளி செல்லும் பருவத்தில் உள்ளனர்.

ஆனால் இந்த குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்கிறதா? அப்படியே செல்லும் குழந்தைகளுக்கு ஆசியர்கள் மூலம் முழுமையான கல்வி போதிக்கப்படுகிறதா? சமவெளி கிராமங்கள், நகர் பகுதிகளில் கிடைக்கும் கல்வியில் கால்பங்காவது இந்த மலைகிராம பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு கிடைக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை என்றே பதில்சொல்ல வேண்டும்.

ஆம்! மலைகிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கு ஆசிரியர்க‌ள் சுழற்சி முறையில் நியமிக்கப்படுகின்றனர். மலைப்பகுதி உள்ளடங்கிய ஒன்றியங்களில் பணியாற்றும் அனைத்து ஆசிரிய, ஆசிரியைகளும் கட்டாயம் ஒரு வருடமாவது மலைகிராமங்களில் பணியாற்றியே தீரவேண்டும் என்பது கல்விதுறையின் ஆணை. இந்த ஆணை நிறைவேற்றியும் வருகின்றனர்.

ஆனால் இப்படி நியமிக்கப்படும் ஆசிரிய, ஆசிரியைகள் நாள்தோறும் தங்களுக்கு நியமிக்கப்பட்ட பள்ளிக்கு சென்று குழந்தைகளுக்கு பாடம் சொல்லி கொடுக்கிறார்களா என்றால் நிச்சயமாக இல்லை என்றுதான் கூறவேண்டும்.

மலைகிராமத்தில் வசிக்கும் பெற்றோர்களுக்கு போதிய பொது அறிவு மற்றும் கல்வி அறிவு இல்லாத காரணத்தால் தங்கள் குழந்தைகளை கட்டாயம் படிக்க வைக்கவேண்டும் என்ற எண்ணத்தில் அவர்கள் பள்ளிக்கு அனுப்புவதில்லை என்பது உண்மை. அரசாங்கத்தின் அறிவுறுத்தலால் மட்டுமே பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்கள் சிலர், தாங்கள் பணிக்கு சென்றுவிட்டால் பிள்ளை வீட்டில் தனியாக இருக்கும், ஆகவே பள்ளிக்கு அனுப்பிவிடலாம் என்று நினைத்து அனுப்புவர் சிலர். இப்படி இருக்கும் பெற்றோர்களை ஆசிரிய, ஆசிரியைகள் நன்றாக பயன்படுத்தி கொள்கின்றனர்.

அடர்ந்த மலைகிராமங்களுக்கு செல்லும் ஆசிரிய, ஆசிரியைகள் வாரத்திற்கு ஒருநாள் மட்டும் பள்ளிக்கு சென்று அங்குள்ள வருகை பதிவேட்டில் கையெழுத்தை போட்டுக்கொண்டு அவர்கள் வந்த பேரு‌ந்து திரும்பி வரும்போது மீண்டும் அதே பேரு‌ந்‌தி‌ல் ஏறி தங்கள் வீட்டுக்கு வரும் நிலைமையே தொடர்ந்து நீடித்து வருகிறது. அரசாங்கம் சார்பில் கொடுக்கப்படும் புத்தகங்களை வைத்துக்கொண்டு மலைகிராம குழந்தைகள் அவர்களாகவே படித்துக்கொள்ள வேண்டியதுதான்.

எல்ல ஆசிரிய, ஆசிரியைகளும் இப்படித்தான் நடந்துகொள்கிறார்களா என்றால் இல்லை. ஆனால் 95 சதவீத ஆசிரிய, ஆசிரியைகள் இப்படித்தான் நடந்துகொள்கிறார்கள் என உறுதியாக சொல்லமுடியும்.

இது குறித்து சம்பந்தப்பட்ட ஆசிரிய, ஆசிரியைகளிடம் கேட்டபோது அவர்கள் கூறும் காரணம், எங்களுக்கு போக்குவரத்து வசதி கிடையாது. தனியாக இருசக்கர வாகனத்தில் வனப்பகுதியின் வழியாக வனவிலங்குகள் அச்சுறுத்தலில் வரமுடிவதில்லை என்கின்றனர்.

அப்படியெனில் மலைகிராமத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் கல்வி‌த்துறை சார்பாக ஆசிரிய, ஆசிரியைகள் குடியிருப்பு கட்டிதர அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். கட்டாயம் மலைகிராமங்களில் நியமிக்கப்பட்ட ஆசிரிய, ஆசிரியைகள் பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள ஆசிரிய, ஆசிரியைகள் குடியிருப்பில்தான் தங்கி பணியாற்ற வேண்டும் என அரசு ஆணை பிற‌‌ப்பிக்கவேண்டும்.

இப்படி முடிவெடுத்தால்தான் மலைகிராமத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கு நகர்புற கல்வியில் பாதியளவாவது கிடைக்கும் என்பதே உண்மையான நிலையாகும்.

அளவுக்கதிகமான ஆன்ட்டிபயாட்டிக் மாத்திரைகளால் செவிடாகும் சீனக் குழந்தைகள்!


ஸ்ட்ரெப்டோமைசின் என்ற ஆன்ட்டிபயாடிக் மாத்திரைகளை அளவுக்கு மீறி எடுத்துக்கொண்ட, மற்றும் முறையற்று பயன்படுத்திய வகையில் 10 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகளின் காது செவிடாகியுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனா மருத்துவக் கழகத்தைச் சேர்ந்த யாங் சினின் என்பவர் இது பற்றிக் கூறுகையில், "சீனாவில் மொத்தம் 18 லட்சம் குழந்தைகளுக்கு காது கேளாமை ஏற்பட்டுள்ளது. இதில் 60% ஸ்ட்ரெப்டோமைசினை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தியதால் விளைந்ததே" என்று கூறியுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் சீனாவில் மட்டும் 2 லட்சம் முறையற்ற மருந்து உபயோகத்திற்காக பலியாகிவருகின்றனர். இதில் குறிப்பாக ஆன்ட்டிபயாட்டி மருந்துகளை தாறுமாறாக எடுத்துக் கொள்வோர் விகிதம் 40 விழுக்காட்டிற்கும் மேல் என்று கூறுகிறது நாளிதழ் ஒன்று.

இந்த நிலமைக்கு பெரும்பாலும் மருத்துவர்களே காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக மருத்துவர்கள் சாதாரண மாத்திரைகளில் சரி செய்ய வேண்டிய நோய்களுக்குக் கூட அதிக சக்தியுள்ள ஆன்ட்டி பயாட்டிக் மருந்துகளை கொடுக்கின்றனர். இதன் மூலம் நோய் விரைவில் குணமடையும் என்ற தவறான நம்பிக்கை உள்ளது. இது தவிர மருத்துவன் நிறுவனங்களுடன் 'டீல்' செய்து கொண்டும் மருத்துவர்கள் தேவைக்கு அதிகமாஅ மருந்துகளை எழுதி வருகின்றனர். என்று சீனாவில் உள்ள சமூகப் பணி ஆர்வலர்கள் சாடியுள்ளனர்.

ஒவ்வொரு சீனரும் ஆண்டொன்றிற்கு 138 கிராம்கள் ஆன்ட்டி பயாட்டிக் மருந்துகளை எடுத்துக் கொள்கின்றனர். அமெரிக்காவின் தனி நபர் ஆன்ட்டி பயாடிக் நுகர்வைக் காட்டிலும் இது 10 மடங்கு அதிகமாகும்.

வியாழன், 3 பிப்ரவரி, 2011

நாலணா காசு காணாமல் போகிறது!


கால் ரூபாய் என்று பெருமையுடன் அழைக்கப்பட்டு, பின் நாலணா என்றாகி பல பத்தாண்டுகள் புழக்கத்தில் இருந்த கிராமப் பணமான 25 காசு நாணயம் வரும் ஜூன் மாதம் இந்திய பொருளாதாரத்தில் இருந்து ஓய்வு பெறுகிறது.

25 காசு நாணயத்தை வரும் ஜூன் மாதம் வரை ஏற்றுக்கொள்ளுமாறு வங்கிகளையும் தனியார் நிதியமைப்புகளையும் இந்திய மைய வங்கி (ஆர்பிஐ) கேட்டுக்கொண்டுள்ளது.

25 பைசா நாணயமும், அதற்கும் குறைவான காசுகளும் ஜூன் மாதத்துடன் பயனில் இருந்து நீக்கப்படுகின்றன. நமது நாட்டில் உணவுப் பொருட்களின் பணவீக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், ஒரு மிட்டாய் வாங்குவதற்குக் கூட போதுமானதாக இல்லாத நாணயமாக 25 பைசா ஆகிவிட்டது. இந்த நிலையில் இதற்கு மேலும் அதனை பயன்பாட்டில் வைத்திருப்பதில் பொருளில்லை என்று மைய வங்கி இந்த முடிவை எடுத்துள்ளது.

அதுமட்டுமின்றி, 50 காசிற்கு குறைவான சில்லரையை சிறு வணிகர்களும் அளிக்க மறுத்துவிடுவதாலும் (50 காசுக்கும் இதே நிலைதான்...தமிழ்நாட்டுப் பேருந்தில்), 25 காசு நாணயம் அடிக்க ஆகும் உலோக செலவு அதன் மதிப்பை விட அதிகம் ஆகிவிட்டதாலும், அதனை நிறுத்திவிட மைய வங்கி அறிவிப்பு வெளியிட்டுவிட்டது.

பெருமையாக இருந்த கால் ரூபாய் பணம்

“நான் இளைஞனாக இருந்த காலத்தில் கால் ரூவா பணம் என்பது உழைப்பாளியின் ஒரு நாள் ஊதியம்” என்று பேசத் தொடங்கினார் பிரபல ஓவியர் சந்தானம்.

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

செக்ஸுக்கான தகுதி வயது குறைக்கப்படாது!


டெல்லி: விருப்பத்துடன் கூடிய செக்ஸ் உறவை வைத்துக் கொள்வதற்கான தகுதி வயதை 16 என்பதிலிருந்து 12 ஆக குறைக்க வகை செய்யும் சட்ட அம்சத்தை மத்திய அரசு கைவிட்டுள்ளது.

செக்ஸ் குற்றங்களிலிருந்து சிறார்களைப் பாதுகாக்கும் வரைவுச் சட்டத்தை அரசு உருவாக்கியுள்ளது. இதில் விருப்பத்துடன் கூடிய செக்ஸ் உறவில் ஈடுபடுவோருக்கு தற்போது குறைந்தபட்ச வயதாக 16 என்று உள்ளதை 12 ஆகக் குறைக்கும் அம்சமும் இடம் பெற்றிருந்தது.

12 வயது மற்றும் அதைத் தாண்டியவர்கள் விருப்பத்துடன் செக்ஸ் வைத்துக் கொள்வது சட்டவிரோதமானதல்ல என்று இந்த சட்டப் பிரிவு கூறுகிறது. அதேசமயம், தற்போது குறைந்தபட்ச வயது 16 என்று இருப்பதையும் குறைக்கவும் சட்ட அம்சம் வகை செய்கிறது. இருப்பினும், தற்போது இந்த அம்சத்தை அரசு நீக்கி விட்டது.

வரைவு சட்டத்தின் நகலை அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அனுப்பி கருத்து கேட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், 12 வயது என்ற அம்சத்தை மத்திய அரசு கைவிட்டுள்ளது. அதேசமயம், தற்போது உள்ளபடியே குறைந்தபட்ச வயது 16 ஆக நீடிக்கும் என்று மத்திய மகளிர் மற்றும் சிறார் நலத்துறை அமைச்சர் கிருஷ்ணா தீரத் தெரிவித்தார்.

ஒப்பந்த ஊழியர்க‌ளி‌ன் திடீர் வேலை நிறுத்த‌த்தா‌ல் ஆவின் பால் ‌கிடை‌க்காம‌ல் பொதும‌க்க‌ள் அவ‌தி!

ஊ‌திய உய‌ர்வு‌க் கோ‌ரி ஒ‌ப்ப‌ந்த ல‌ா‌ரி ஓ‌ட்டுந‌ர்க‌ளி‌ன் ‌திடீ‌ர் வேலை ‌நிறு‌த்த‌த்தா‌‌ல் செ‌ன்னை‌யி‌ல் ஆ‌வி‌ன் பா‌ல் சேவை பா‌தி‌க்க‌ப்ப‌ட்டது. இதனா‌ல் பா‌ல் ‌கிடை‌க்காம‌‌ல் பொதும‌க்க‌ள் அவ‌தி‌ப்ப‌ட்டன‌ர்.

சென்னை, புறநகர் பகுதிகளுக்கு தினமும் 10 லட்சத்து 30 ஆயிரம் லிட்டர் ஆவின் பால் வழ‌ங்க‌ப்ப‌ட்டு வரு‌கிறது. பால் வினியோகத்தில் 100 லாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தனியார் பால் வாகனங்களின் ஒப்பந்தம் நேற்றுடன் முடிவடை‌ந்ததை‌த் தொட‌ர்‌ந்து இன்று முதல் புதிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. புதிய ஒப்பந்தம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ஊ‌திய உய‌ர்வு கோ‌ரி பால் லாரி ஓ‌ட்டுந‌ர்க‌ள், கிளினீர்கள் நே‌ற்‌‌றிரவு திடீர் வேலை ‌நிறு‌த்த‌த்‌தி‌ல் ஈடுப‌ட்டன‌ர்.

இதனால் பண்ணையில் இருந்து பால் வெளியே கொண்டு செல்ல‌ப்பட‌வி‌ல்லை. இதனா‌ல் சென்னை, புறநகர் பகுதிகளில் அட்டைதாரர்களுக்கு ஆவின் பால் வினியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது.

‌தினமு‌ம் அ‌திகாலை 4 மணிக்கு லாரிகள் மூலமாக பால் வினியோகம் செய்யப்பட்டு விடும். ஆனா‌ல் ஓ‌‌ட்டுந‌ர்க‌ளி‌ன் வேலை ‌நிறு‌த்த‌த்தா‌ல் காலை 9 மணி வரை அட்டைதாரர்களுக்கு பால் கிடைக்கவில்லை.

இத‌னிடையே ஊழியர்களிடமும், லாரி உரிமையாளர்களிடமும் பால் வளத்துறை அதிகாரிகள் நட‌த்‌‌திய பேச்சுவார்த்தை‌யி‌ல் சம்பள உயர்வுக்கு லாரி உரிமையாளர்கள் ஒத்துக் கொண்டனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு ஊழியர்கள் பணிக்கு திரும்பினர்.

ஊழியர்களின் போராட்டத்தால் 5 மணி நேரம் ஆ‌வி‌ன் பால் கிடைக்காமல் பொதுமக்கள் இ‌ன்ன‌ல்களு‌க்கு ஆளானதோடு ‌சி‌ல்லறை கடைக‌ளி‌ல் அ‌திக பண‌ம் கொடு‌த்து பா‌ல் வா‌ங்‌கி செ‌ன்றன‌ர்.

‌நியாய‌விலை கடைக‌ளி‌ல் இ‌ன்று மு‌த‌ல் பரு‌ப்பு ரூ.30, பாமா‌யி‌ல் ரூ.25‌க்கு ‌‌வி‌‌ற்பனை!


நியாய‌விலை கடைக‌ளி‌ல் ஒரு ‌கிலோ உளு‌த்த‌ம் பரு‌ப்பு, துவ‌‌ர‌ம் பரு‌ப்பு 30 ரூபா‌ய்‌க்கு‌ம், ஒரு ‌‌லி‌ட்ட‌ர் பாமா‌யி‌ல் 25 ரூபா‌ய்‌க்கு‌ம் இ‌ன்று மு‌த‌ல் ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌கிறது.

த‌மிழக‌ம் முழுவ‌து‌ம் 30 ஆ‌யிர‌ம் ‌நியாய‌விலை கடைக‌ளி‌‌ல் இ‌ன்று முத‌ல் ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்ப‌டு‌கிறது.

இத‌‌ற்கு மு‌ன் ‌நியாய‌விலை கடைக‌ளி‌ல் ஒரு‌ ‌கிலோ உரு‌த்த‌ம் பரு‌ப்பு, துவர‌ம் பரு‌ப்பு 40 ரூபா‌‌ய்‌க்கு ‌‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்‌ப‌ட்டு வ‌ந்தது. 30 ரூபா‌ய்‌க்கு ‌‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்ப‌ட்ட பாமா‌யி‌ல் இ‌ன்று 25 ரூபா‌ய்‌க்கு ‌‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌கிறது.

வெளிச்சந்தையில் முதல் ரக துவரம் பருப்பு கிலோ ரூ. 63இல் இருந்து ரூ.73க்கும், 2ம் ரக துவரம் பருப்பு ரூ. 55இல் இருந்து ரூ. 65க்கும் விற்பனையாகிறது.

இதே போல் கிலோ ரூ. 63க்கு விற்பனையான முதல் ரக உளுத்தம் பருப்பு ரூ.68‌க்கும், ரூ. 58க்கு விற்பனையான 2ஆம் ரக உளுத்தம் பருப்பு ரூ. 63க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ ரூ.60க்கு விற்பனையான பாமாயில் இப்போது ரூ.64க்கு விற்பனையாகிறது என்பது குறிப்படத்தக்கது.

யுத்தம் செய் - மு‌ன்னோ‌ட்ட‌ம்!


கல்பாத்தி எஸ் அகோரத்தின் ஏ‌ஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் தயா‌ரித்திருக்கும் படம் யுத்தம் செய். மிஷ்கின் படத்தை இயக்கியுள்ளார்.
யுத்தம் செய், தொடர் கொலைகள் செய்யும் ஒரு கொலைகாரனை சிபிசிஐடி போலீஸான சேரன் துப்பறிந்து கண்டுபிடிக்க முயல்வதை சித்த‌ரிக்கிறது. நாட்டில் ஒரு கொலை நடந்தால் அதை இரண்டு நாள் நியூஸாக பாவித்து ஒவ்வொருவரும் கடந்து செல்கிறோம். ஆனால் அந்தப் பொறுப்பின்மை எவ்வளவு பெ‌ரிய தவறு என்பதை இப்படம் சொல்ல முயல்வதாக பேட்டியில் மிஷ்கின் தெ‌ரிவித்துள்ளார்.

முக்கியமான வேடம் சேரனுக்கு. அவர்தான் படத்தின் நாயகன். அவருக்கு உதவியாளராக வருகிறார் தீபா ஷா. கண்ணும் கண்ணும் படத்தை இயக்கிய மா‌ரிமுத்துவும் படத்தில் நடித்துள்ளார். மிஷ்கின் படங்களில் தொடர்ந்து வரும் மஞ்சள் சேலை அணிந்த பெண்ணின் குத்துப் பாடலும், நடனமும் இதிலும் உண்டு. இதில் மஞ்சள் சேலை பாக்கியம் கிடைத்திருப்பது நீது சந்திராவுக்கு. அவருடன் இயக்குனர் அமீர் ஆடியிருக்கிறார். இவர்களுடன் ஒய்.‌ஜி.மகேந்திரன், யுகேந்திரன் ஆகியோரும் இருக்கிறார்கள்.

பி.சி.ஸ்ரீராமின் சீடர்களில் ஒருவரான சத்யா ஒளிப்பதிவு செய்துள்ளார். குறும்படங்கள் பலவற்றுக்கு இசையமைத்த கிருஷ்ணகுமார் இசையமைத்துள்ளார். திரைப்படத்துக்காக அவர் தனது பெயரை கே என மாற்றியுள்ளார். கே என்பது காப்காவின் விசாரணை நாவலில் வரும் பிரதான கதாபாத்திரத்தின் பெயர்.

வரும் 4ஆம் தேதி யுத்தம் செய் திரையரங்குக்கு வருகிறது.