வியாழன், 30 செப்டம்பர், 2010

சுய இன்பம் ஆபத்தா?


நிறைய பேருக்கு இதில் பெரும் குழப்பமே இருக்கும். ஆனாலும் இது ஒன்றும் தலை போகும் பிரச்சினை அல்ல என்பதே டாக்டர்களின் கருத்து.

காலத்தே பயிர் செய் என்பார்கள்.. இது விவசாயத்திற்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் கூட நிறையவே பொருந்தும்.

இளம் பிராயத்தில் குறிப்பாக டீன் ஏஜ் பருவத்தில் இந்த சுய இன்பப் பழக்கம் அத்தனை பேரையும் ஆட்டிப்படைத்திருக்கும். இதை யாரும் இல்லை என்று சொல்ல முடியாது. இதுகுறித்து வெட்கப்படவும் தேவையில்லை. அந்த வயதில் டீன் ஏஜினர் சந்திக்கும் பல முக்கியப் பிரச்சினைகளில் இதுவும் ஒன்று.

சிலருக்கு 12-15 வயதில் தொடங்கிய சுய இன்பத்தை விட முடியாமல் நீண்ட காலத்திற்கு நீடிக்கும் வழக்கமும் உண்டு. இதனால் அவர்களுக்கு எதிர்கால செக்ஸ் வாழ்க்கை எப்படி ஆகுமோ என்ற கவலை ஏற்படுவது இயற்கை.

இதுகுறித்து டாக்டர்கள் சொல்வது என்ன...?

டீன் ஏஜ் வயதில் வரும் பிரச்சினைகளில் சுய இன்பமும் ஒன்று. அந்த வயதில் வரும் மிகச் சாதாரண பிரச்சினைதான் இது. அதிலிருந்து தப்பி விடுபவர்கள் வாழ்க்கையில் நல்ல நிலையில் இருப்பார்கள், செக்ஸ் வாழ்க்கை சிறப்பாக இருக்கும், அதில் சிக்கியவர்கள் கதி அதோ கதிதான் என்ற எண்ணம் நிறைய பேருக்கு உள்ளது. இரண்டுமே தவறு.

சிறு வயது முதல் 25-30 வயது வரை சுய இன்பத்திற்கு அடிமையானவர்கள் நிறையப் பேர் உள்ளனர். அவர்கள் அனைவருமே செக்ஸ் வாழ்க்கையில் பின் தங்கினர் என்று கூற முடியாது. அது அவரவர் மனதைப் பொறுத்தது.

நமக்குள் ஏற்படும் செக்ஸ் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு வழிதான் இந்த சுய இன்பம். இயற்கையாகப் போக வேண்டிய உணர்வுகளை, செயற்கையாக நாம் வெளியேற்றுகிறோம், அவ்வளவுதான்.இதனால் நமது செக்ஸ் உணர்வுகளோ அல்லது செக்ஸ் உறவின்போதான செயல்பாடுகளையோ இது பாதிக்கும் என்று கூற முடியாது.

சிலருக்கு கவர்ச்சிகரமான பெண்களின் படங்களைப் பார்த்தால் உடனே செக்ஸ் உணர்வு அதிகரித்து சுய இன்பவம் அனுபவிக்க வேண்டும் என்று தோன்றும். அதை அடக்காமல் வெளியேற்றி விடுவது ஒரு வகையில் நல்ல விஷயம்தான்.

சுய இன்பப் பழக்கத்திற்கு அடிமையானவர்களால் அதை விடுவது எளிதல்ல. ஏன், திருமணமான பிறகும் கூட சுய இன்பத்தைத் தொடருபவர்கள் நிறையப் பேர் உள்ளனர்.

இதனால் செக்ஸ் வாழ்க்கையில் குழப்பம் ஏற்படுமோ என்ற பயம் மட்டும் நிச்சயம் தேவையில்லை. எதுவும் தலைக்கு மேல் போய் விடாது. உங்களது மனதை ஒருநிலைப்படுத்த முயற்சித்தால் நீங்கள் சுய இன்பத்திலிருந்து விடுபட முடியும். மனக் கட்டுப்பாட்டுக்கு நல்ல பயிற்சி எடுங்கள். சுய இன்பத்தை தடாலடியாக நிறுத்தி விட முயற்சிக்காதீர்கள். படிப்படியாக குறையுங்கள்.

அதுபோன்ற சமயத்தில், வேறு பக்கம் கவனத்தை திருப்ப முயற்சியுங்கள். அப்படியும் முடியவில்லை என்றால் செய்து விடுங்கள்.

நல்ல புத்தகங்கள் படிப்பது, நல்ல விஷயங்களை அறிய முயற்சிப்பது, தேடுதல் நோக்கத்தை வேறு பக்கம் திருப்புவது, யோகாசனம், ஆரோக்கியமான செயல்பாடுகளில் கவனத்தைத் திருப்புதல் என சுய இன்பத்திலிருந்து மீள நிறைய வழிகள் உள்ளன.

தேவைப்பட்டால் ஒரு மன நல ஆலோசகரை அணுகி ஆலோசனை கேட்கலாம். அவர்கள் உங்களுக்கு நிச்சயம் உதவுவார்கள்.

சிலருக்கு உடல் ரீதியான பிரச்சினைகள் இருக்கலாம். அதாவது கவர்ச்சிகரமான படத்தைப் பார்த்தாலோ அல்லது அதுபோன்றவற்றை கேட்டாலோ, மனதில் நினைத்தாலோ கூட அவர்களுக்கு விந்தணு வெளியேறி விடும். அப்படிப்பட்டவர்கள் டாக்டரைக் கன்சல்ட் செய்யலாம்.

ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் கூட இந்த சுய இன்பச் சிக்கல் ஏற்படுவது சகஜமானதுதான். இரு பாலினரும் இதை உரிய முறையில் அணுகினால் எந்தத் தொந்தரவும், மனப்புழுக்கமும் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

மொத்தத்தில் இது பெரிய பிரச்சினையே அல்ல, மாறாக உங்களது நம்பிக்கைக்கு விடப்படும் சவால், அவ்வளவுதான். அதை நீங்கள் வென்றால் சுய இன்பத்திற்கு வேலையே இல்லை.

அயோத்தி வழக்கு: நீதிபதி அகர்வால் வழங்கிய தீர்ப்பின் சில முக்கிய அம்சங்கள்!


அயோத்தி வழக்கில் இன்று மதியம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் சர்ச்சைக்குரிய பாபர் மசூதி பகுதி 3 பாகங்களாகப் பிரிக்கப்பட்டு இஸ்லாமியர்கள், இந்துக்கள், மற்றும் அறக்கட்டளையான நிர்மோஹி அகாரா ஆகியவற்றுக்குச் சொந்தமானது என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தத்த் தீர்ப்பை வழங்கிய 3 நீதிபதிகளில் ஒருவரான சுதிர் அகர்வால் அவர்களின் தீர்ப்பின் முக்கிய அம்சங்களில் சில வருமாறு:

1. சர்ச்சைக்குரிய இடத்தில் மையக் கூரையின் கீழ் உள்ள பகுதி இந்துக்களின் மதநம்பிக்கைகளின் படி ராமர் பிறந்த இடமே.

2. சர்ச்சைக்குரிய பகுதி எப்போதும் மசூதி என்பதாகவே எடுத்துக் கொள்ளப்பட்டு நம்பப்பட்டு வருகிறது. இதனால் மொகமதியர்கள் இங்கு வழிபாடு செய்துவந்தனர். இருப்பினும் அது பாபரால் 1528ஆம் ஆண்டுதான் கட்டப்பட்டது என்பது நிரூபிக்கப்படவில்லை.

3. இது குறித்த மாற்று கோரிக்கைகளோ, வேறு தடயங்களோஇல்லாத பட்சத்தில் சர்ச்சைக்குரிய அமைப்பு எப்போது யாரால் கட்டப்பட்டது என்பதை உறுதி செய்ய முடியாது. ஆனால் ஜோசப் டைஃபென்தாலர் என்பவர் வருவதற்கு முன் 1766 - 1771 ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்டது என்பது வரை தெளிவாக உள்ளது.


4. சர்ச்சையில் உள்ள இந்த கட்டிடம், அதற்கு முன்பு அங்கிருந்த இஸ்லாம் அல்லாத சமயக் கட்டிட அமைப்பைத் தகர்த்துக் கட்டப்பட்டுள்ளது. அதாவது இந்துக் கோயில்.

5. சர்ச்சையில் உள்ள கட்டிடந்த்தின் மையக்கூரையின் கீழ்ப்பகுதியில் விக்ரகங்கள் டிசம்பர் 1949ஆம் ஆண்டு 22 மற்றும் 23ஆம் தேதி இரவில் வைக்கப்பட்டது.

மோசடி மோட்டல்கள்!


சீ‌ட்டு பண‌ம் நட‌த்‌தியும்... வேலை வா‌ங்‌கி‌த் தருவதாகவும் கூறி செய்வது ஒருவகையான மோசடி என்றால், ஓட்டல்களிலும், ‌பொதுக் க‌ழி‌ப்‌பறைகளிலும் மாண்புமிகுக்களின் ஆசியோடு நடந்தேறி வருகிறது வேறு வகையான மோசடிகள்.

செ‌ன்னை‌யி‌ல் இரு‌ந்து தெ‌ன் மாவ‌ட்ட‌ங்க‌ளு‌க்கு த‌மிழக அரசு ‌விரைவு பேரு‌ந்துக‌ளி‌ல் ஒருநாளை‌க்கு பல ஆ‌யிர‌க்கண‌க்கான ம‌க்க‌ள் செ‌ன்று வருகின்றனர்.இ‌ந்த பேரு‌ந்துக‌ளி‌ல் பயண‌ம் செ‌ய்பவ‌ர்க‌ள் சா‌ப்பிடு‌வத‌‌ற்கு, பே‌‌ரு‌ந்து ஓ‌ட்டுந‌ர்க‌ள் பேருந்து நிலையத்திலிருந்து சில கிலோ மீட்டர்கள் தொலைவிலேயே, நெடு‌ஞ்சாலை‌யி‌ல் த‌னியாக இரு‌க்கு‌ம் மோ‌ட்ட‌ல்க‌ளி‌ல் பேரு‌ந்துகளை ‌நிறு‌த்‌தி ‌விடு‌கிறா‌ர்க‌ள்.

அ‌ங்கு சா‌ப்‌பிட போகு‌ம் ம‌க்களு‌க்கோ அ‌தி‌ர்‌ச்‌சி. ஒரு தோசை 30 ரூபா‌ய், ச‌ரி இ‌ட்‌லியை கொடு‌ங்க‌ள் எ‌ன்று கே‌ட்டா‌ல் ஒ‌ன்று ப‌த்து ரூபா‌ய். ச‌ரி இதுவு‌ம் வே‌ண்டா‌ம் புரோ‌ட்டா கொடு‌ங்க‌ள் எ‌ன்றா‌ல் அத‌ன் ‌விலையோ 20 ரூபா‌ய். வேறு எ‌ன்ன செ‌ய்வது ப‌சி‌க்கு சா‌ப்‌‌பி‌ட்டு‌த்தா‌ன் ஆக வே‌ண்டு‌‌ம் எ‌ன்ற ‌நினை‌ப்‌‌பி‌ல் இ‌ந்த தொகை‌க்கு கொடு‌‌த்து ‌படுமோசமான சா‌ப்பா‌‌டுகளை ம‌க்க‌ள் ச‌பி‌த்து‌க் கொ‌ண்டேதான் சா‌ப்‌பி‌‌ட்டு செ‌‌ல்‌கிறா‌ர்க‌ள்.

இ‌ப்படி இ‌ந்த மோ‌ட்ட‌ல்க‌ளி‌ல் நட‌ந்து கொ‌‌ண்டி‌ரு‌ப்பது ஓ‌ட்டுந‌ர், நட‌த்துன‌ர்களு‌க்கு தெ‌ரியு‌ம்.‌பி‌ன்ன‌ர் ஏ‌ன் அ‌ந்த மோ‌ட்ட‌‌ல்க‌ளி‌ல் பேரு‌ந்துகளை ‌நிறு‌த்து‌கிறா‌ர்க‌ள் எ‌ன்று கே‌ட்கும் ம‌க்க‌ளிடம், மறைமுக (வாய்மொழி) மேலிட உ‌த்தர‌வினா‌ல்தா‌ன் ‌நிறு‌த்‌த‌ப்படு‌கிறது எ‌ன்‌கிறா‌ர்.

விழு‌ப்புரம் அருகே மோட்டல்கள் நிறுத்தபடுவதற்கு அம்மாவட்ட மாண்புமிகுவை கைகாட்டுகிறார்களாம் போக்குவரத்து துறை அதிகாரிகள்! இ‌தி‌ல் கொடுமை எ‌ன்னவெ‌ன்றா‌ல் சாலைக‌ளி‌ல் உ‌ள்ள அ‌ந்த மோ‌ட்ட‌ல்க‌ளி‌‌ல் இர‌ண்டு அரசு அ‌‌திகா‌‌ரிக‌ள் எ‌ப்போது‌ம் ‌நி‌ன்று கொ‌ண்டுதா‌ன் இரு‌க்‌கிறா‌ர்க‌ள். அவ‌ர்க‌ள்தான் அரசு பேரு‌ந்துகளை ச‌ம்ப‌ந்‌த‌ப்‌‌ப‌ட்ட மோ‌ட்‌ட‌ல்க‌ளு‌க்கு அனு‌ப்‌பி வை‌க்‌கி‌‌ன்றன‌ராம்.அ‌ப்படி அ‌ந்த மோ‌ட்ட‌ல்களு‌க்கு செ‌‌ல்லாத பேரு‌ந்து ஓ‌ட்டுந‌ர்க‌ள், நட‌த்துன‌ர்க‌ள் ப‌ணி‌யிடை ‌நீ‌க்க‌ம் செ‌ய்ய‌ப்படு‌கிறா‌ர்க‌ள்.

‌திரு‌ச்‌சி‌‌பக்கமும் இதே ‌நிலைதா‌ன் ‌நீடி‌த்து வருவதாக கூறுகிறா அண்மையில் ‌திரு‌ச்‌சியிலிருந்து சென்னை வந்த ப‌ய‌ணி ஒருவ‌ர்! ” திரு‌ச்‌சியிலிருந்து ‌அரசு பேரு‌ந்‌தி‌ல் அ‌திகாலை 5 ம‌ணி‌க்கு புற‌ப்ப‌டு‌கிறே‌ன். 8 ம‌ணி‌‌க்கு சா‌ப்‌பிட வே‌ண்டு‌ம் எ‌ன்று ஓ‌ட்டுந‌ரிட‌ம் கே‌ட்டபோது, ‌ ஒரு குறிப்பிட்ட ஊரைச் சொல்லி அதைத் தா‌ண்டி அ‌ந்த கு‌றி‌ப்‌பி‌ட்ட ‌விடு‌தி‌யி‌‌ல்தா‌ன் ‌‌‌நி‌று‌த்த முடியு‌ம் எ‌ன்றா‌ர்.ஏ‌ன் எ‌ன்று கே‌ட்டத‌ற்கு, அது ஒரு மா‌ண்பு‌மிகு‌வி‌ன் சகோத‌‌ரரி‌ன் ‌விடு‌தி எ‌ன்று‌ம் அ‌ங்குதா‌ன் ‌நிறு‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்று எழு‌த்த‌ப்ப‌டாத உ‌த்தரவு ‌‌பிற‌‌ப்‌‌பி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது எ‌ன்று‌ம் அ‌ந்த ஓ‌ட்டுந‌ர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர். மீ‌றி ‌‌நிறு‌த்தா‌ம‌ல் செ‌ன்றா‌ல் ஓ‌ட்டுநரு‌ம், நட‌த்துனரு‌ம் ப‌ணி‌யிடை ‌நீ‌க்க‌ம் செ‌ய்ய‌ப்படு‌வோ‌ம் எ‌ன்று‌ம் அ‌ந்த ஓ‌ட்டுந‌‌ர் தெ‌ரி‌வி‌த்தாக அ‌ந்த ப‌ய‌ணி கூ‌றினா‌ர்.

கன்னியாகுமரி மற்றும் நெல்லை பக்கமிருந்து வருபவர்களுக்கும் இதே அனுபவம்தான்! கயத்தார், விருதுநகர், சாத்தூர் மற்றும் மதுரை பேருந்து நிலையங்களில் பேருந்து நிற்காது! அதற்கு சில கிலோ மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டிருக்கும் இத்தகைய மோட்டல்களில்தான் நிற்கும்.

இது ஒரு வகையான மோசடி என்றால்..., பேருந்து நிலையங்கள் மற்றும் மேற்கூறிய மோட்டல்கள் அமைந்திருக்கும் கட்டண கழிப்பறைகளில் நடைபெறும் மோசடி, அந்த இடத்தைப்போலவே முக சுளிக்க வைக்கிறது!

சென்னை‌, கோவை, தூ‌த்து‌க்குடி, ‌திருநெ‌‌ல்‌வே‌லி, ‌திரு‌ச்‌சி, சேல‌ம், மதுரை உ‌ள்‌ளி‌‌ட்ட ப‌ல்வேறு மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல் அரசு ப‌ல்வேறு மு‌க்‌கிய இட‌ங்க‌ளி‌ல் க‌‌ழி‌ப்‌பிட‌ம் க‌ட்டியு‌ள்ளது. இ‌‌‌ந்த க‌‌ழி‌ப்‌பிட‌த்தை ச‌ம்ப‌ந்‌த‌ப்ப‌ட்ட மாநகரா‌ட்‌‌சி த‌னியாரு‌க்கு ஒ‌ன்று மு‌த‌ல் இரண்டு ஆ‌ண்டுக‌ள் வரை குத்தகை‌க்கு ‌விடு‌கிறது. அதோடு ச‌ரி இ‌‌தி‌ல் எ‌ன்ன நட‌க்‌கிறது எ‌ன்று மாநகரா‌ட்‌சி அ‌‌திகா‌‌ரிக‌ள் க‌ண்டு கொ‌ள்வதே ‌கிடையாது.

அ‌ந்த ‌‌க‌‌ழி‌ப்‌பிட‌த்‌தி‌ல் ‌‌‌சீறு‌நீ‌ர் க‌ழி‌‌க்க முத‌லி‌ல் ஒரு ரூபா‌ய் வசூ‌லி‌க்க‌ப்ப‌ட்டது. இது படி‌ப்படியாக 2 ரூபா‌ய் ஆனது. த‌ற்போது 3 ரூபா‌ய் வசூ‌லி‌க்க‌ப்ப‌ட்டு வ‌ரு‌கிறது. மலம் க‌ழி‌க்க ‌ரூபா‌ய் வசூ‌‌லி‌க்க‌ப்ப‌டுவதாக பொதும‌க்க‌ள் குமுறு‌கி‌ன்றன‌ர். ஏ‌ன் இ‌ப்படி செ‌ய்‌‌கி‌றீ‌ர்க‌ள் எ‌ன்று கே‌ட்டா‌ல் அ‌திகார தோரணை‌யி‌ல் அவ‌ர்க‌ள் பேசு‌ம் ஆபாச பேச்சுக்களை காதுகொடுத்து கேட்க முடியாது என்று கூறு‌‌கி‌ன்றன‌ர் பொதுமக்கள்!

உதாரணத்திற்கு நெ‌ல்லை இர‌யி‌ல் அருகே உ‌ள்ள மாநகரா‌ட்‌சி‌க்கு சொ‌ந்தமான க‌‌ழி‌ப்‌பிட‌த்தில் அண்மையில் க‌ண்கூடாக காண முடி‌ந்தது இத்தகைய கட்டணக் கொள்ளையை!
அவசரமாக சிறு நீர் கழிக்க வந்தவரிடம், 3 ரூபாயை வைத்துவிட்டு உள்ளே போ என்றார் அங்கிருந்த குத்தகைதாரர்!

தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்கள் தொடங்கிவிட்ட நிலையில், சொந்த ஊர்களுக்கு பயணிக்கும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கும்.இந்நிலையில் இத்தகைய கொள்ளைகளுக்கு அரசு முடிவு கட்டினால் நல்லது!

வேலைவாய்ப்பு பதிவுக்கு புதிய சலுகை!

வேலைவாய்ப்பு பதிவுக்கு புதிய சலுகையை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையாளர் ஏ.எஸ்.ஜீவரத்தினம் வெளியிட்ட அறிவிப்‌பி‌ல், பதிவு செய்தவர்கள் தங்களது பதிவினை மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். அவ்வாறு புதுப்பிக்கும் மாதத்திலோ அல்லது அதனைத் தொடர்ந்து இரண்டு மாதங்களிலோ தங்களது பதிவுகளை புதுப்பித்துக் கொள்ளலாம்.

அவ்வாறு பதிவினை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு புதுப்பித்தல் மாதத்திலிருந்து 18 மாதங்கள் வரை கால அவகாசம் ஒரே ஒருமுறை மட்டும் சலுகையாக வழங்கப்பட்டு வந்தது. இப்போது அரசால் கம்ப்யூட்டர் வழியே ஒருங்கிணைப்புத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால், ஆன்லைனில் புதுப்பிக்க ஏதுவாக ஒரேசீரான நடைமுறை கடைப்பிடிக்கும் வகையில் 18 மாத புதுப்பித்தல் சலுகையை மறுமுறை கோரினாலும் அனுமதிக்கலாம் என உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வேலைவாய்ப்பு அலுவலக பதிவுதாரர்களுக்கு வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே வழங்கப்பட்டு வந்த இந்த 18 மாத புதுப்பித்தல் சலுகை தளர்த்தப்பட்டு அடுத்த புதுப்பித்தல் தேதிகளிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அவ்வாறு, விடுபட்ட பதிவினை 18 மாத சலுகையின்படி, புதுப்பிக்கையில் பழைய பதிவு மூப்பு கணக்கில் கொள்ளப்படும் என தனது அறிவிப்பில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

வெப்ப சக்தியில் கணினிகள் இயங்க முடியும் - ஆய்வு!


கணினியிலிருந்து வெளியாகி விரயமாகிச் செல்லும் வெப்பத்தைக் கொண்டே கண்னியை இயக்க வைக்கும் அதிசய தொழில்நுட்ப ஆய்வுமுறையை ஓஹியோ பல்கலைக் கழக ஆய்வாளர்கள் மேற்கொண்டனர்.

அதாவது காலியம் மாங்கனீஸ் ஆர்சினைட் என்ற செமி-கண்டக்டர் மூலம் வெப்பத்தை மின்சக்தியாக மாற்றும் முறையை இந்த ஆய்வாளர்கள் ஆய்வு செய்துவருகின்றனர்.

வெப்ப சக்தியை இந்த செமி கண்டக்டர் மின்சக்தியாக மாற்றும் 'ஸ்பின்' என்ற நிகழ்வு இந்த செமி-கண்டக்டரில் நிகழ்ந்துள்ளதை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த முறை முழுமை அடையும்போது ஒருங்கிணைந்த மின்சுற்றுப்பாதைகள் வெப்பத்திலேயே இயங்க முடியும் என்று கூறுகின்றனர் இந்த ஆய்வாளர்கள்.

அனல் மின்சக்தி, மற்றும் இவர்கள் கண்டுபிடித்துள்ள 'ஸ்பின்ட்ரானிக்ஸ்' என்ற இரண்டையும் இந்த ஆய்வு இணைத்துள்ளதாக நேனோ தொழில்நுட்ப நிபுணரான ஓஹியோ பல்கலை. கல்விப்புல ஆய்வாளர் ஜோசப் ஹெரிமான்ஸ் தெரிவித்துள்ளார்.

ஸ்பின்ட்ரானிக்ஸை, தெர்மோ எலெக்ட்ரானிக்ஸுடன் பிணைக்கும் வேலையை இந்த ஆய்வாளர்கள் முயன்று வருகின்றனர். இந்த முறையில் வெப்பசக்தி மின்சக்தியாக மாற்றமடையும்.

இந்த தெர்மோ-ஸ்பின்ட்ரானிக்ஸின் மற்றொரு சாத்தியமாகக் கூடிய பயன் என்னவெனில் மரபான மைக்ரோ புரோசசரின் மேல் வைக்கப்படும் ஒரு உபகரணம் விரயமாகும் வெப்பத்தை உறிஞ்சி வெளியேற்றும் இதனால் கூடுதல் மெமரியும், கணினி இயக்கமும் சாத்தியமாகும் என்று கூறுகின்றனர் இந்த ஆய்வாளர்கள்.

விரயமாகும் வெப்பத்தை மின்சக்தியாக மாற்றும் காலியம் மாங்கனீஸ் ஆர்சினைட் என்ற இந்தப் பொருளை அவர்கள் ஒருபக்கம் வெப்பமேற்றி பரிசோதனை செய்தனர். மறுபுறம் வெப்பமற்ற பகுதி. இதில் வெப்பமேற்றப்பட்ட பகுதியில் எலெக்ட்ரான்கள் ஸ்பின்-அப் பகுதி என்ற மின்சக்தியாக மாறும் திசை நோக்கி தாமாகவே செல்வதைக் கண்டுள்ளனர்.

இந்த ஆய்வில் அவர்களுக்கு கிடைத்துள்ள மற்றொரு ஆச்சரியமான விஷயம் என்னவெனில் இந்த செமிகண்டக்டர் பொருளை எதனுடனும் இணைக்கவோ, பொருத்தவோ அல்லது தொடுமாறோ வைக்க வேண்டியதில்லை என்பது. தொடர்பில்லாமலேயே விளைவுகள் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு செல்வதையும் இவர்கள் கண்டுள்ளனர்.

இந்த ஆய்வுகள் இன்னும் ஆரம்ப நிலையிலேயே உள்ளது, மேலும் இது வளர்ச்சியடைந்து முழுமை அடைய மேலும் சில பரிசோதனைகள் தேவைப்படலாம் என்று தெரிகிறது.

உ‌ங்க‌ள் ந‌ண்பரை‌க் காத‌லி‌க்‌கி‌றீ‌ர்களா?


காத‌ல் எ‌ப்படி வரு‌ம், யா‌ரிட‌ம் வரு‌ம், எ‌‌ங்கு வரு‌ம் எ‌ன்பதெ‌ல்லா‌ம் சொ‌ல்ல முடியாது. காத‌ல் எ‌ன்பத‌ற்கு முத‌லி‌ல் க‌ண் இ‌ல்லை எ‌ன்று சொ‌ல்வா‌ர்க‌ள். அ‌ப்படி இரு‌க்க ஒருவ‌ர் தனது ந‌ண்பரையே காத‌லி‌ப்ப‌தி‌ல் ம‌ட்டு‌ம் தவறு இரு‌க்க முடியுமா?

பொதுவாக பா‌ர்‌த்தது‌ம் காத‌ல் வரலா‌ம், அ‌ல்லது இ‌ப்படி பே‌சி‌ப் பழ‌கி ந‌ல்ல ந‌ண்ப‌ர்களாக இரு‌‌ப்ப‌வ‌ர்களு‌க்கு இடையே காத‌ல் மலரலா‌ம். ஒருவரை ஒருவ‌ர் பு‌ரி‌ந்து கொ‌ண்டு இருவரு‌ம் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பே‌சி நம‌க்கு‌ள் ந‌ட்‌பி‌ற்கு‌ம் மேலாகா ஏதோ ஒ‌ன்று இரு‌க்‌கிறது எ‌ன்பதை உண‌ர்‌ந்து கொ‌ண்டு ‌பி‌ன் காதல‌ர்களாக மா‌றியவ‌ர்களு‌ம் உ‌ண்டு.

ஆனா‌ல், ந‌ண்ப‌ர்களு‌க்கு‌ள் காத‌ல் வருவது ‌மிக‌ப்பெ‌ரிய அவ‌‌ஸ்தை எ‌ன்பது ம‌ட்டு‌ம்‌ ‌நிஜ‌ம். ஒருவ‌ர் தனது ந‌ண்பரை காத‌லி‌க்‌கிறா‌ர் எ‌ன்றா‌ல், அதை அவ‌ர் உண‌ர்வத‌ற்கே ‌சில கால‌ம் ‌பிடி‌க்கு‌ம். எ‌ப்போது‌ம் அவருட‌‌ன் ‌நினை‌வி‌ல் பே‌சி‌க் கொ‌ண்டிரு‌ப்பது, அவரது பே‌ச்சை‌க் காதுக‌ள் கே‌ட்‌டுக் கொ‌ண்டிரு‌ப்பது போ‌ன்ற உண‌ர்வு, அவரை‌த் த‌விர உலக‌த்‌தி‌ல் யாரையு‌ம் ‌பிடி‌க்காத அள‌வி‌ற்கு போவது வரை தனது ந‌ண்பரை தா‌ன் காத‌லி‌க்‌கிறோ‌ம் எ‌ன்பதை உண‌ரவே ‌சில கால‌ம் ‌பிடி‌க்கு‌ம்.

அத‌ற்கு‌ள், அவ‌ர்களது ந‌ட்பு ப‌ற்‌றி அவ‌ர்களு‌க்கு‌ள்ளேயே ஒரு பெருமை வ‌ந்‌திரு‌க்கு‌ம். அ‌ப்போது அவ‌ர்களது ந‌ட்பை‌ப் ப‌ற்‌றி த‌ம்ப‌ட்ட‌ம் அடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ப்பா‌ர்க‌ள் த‌ங்களை சு‌ற்‌றியு‌ள்ள ந‌ண்‌ப‌ர்க‌ளிட‌ம்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல், தனது ந‌‌ண்பரை தா‌ன் காத‌லி‌க்‌கிறோ‌ம் எ‌ன்ற எ‌ண்ணமே முத‌லி‌ல் கு‌ற்ற உண‌ர்‌ச்‌சியாக மாறவு‌ம் வா‌ய்‌ப்பு உ‌ள்ளது. அதையு‌ம் ‌மீ‌றி, அவரு‌ம் த‌ன்னை காத‌லி‌க்‌கிறாரா எ‌ன்பதை ஆராய மனது அலைபாயு‌ம். இத‌ற்‌கிடையே அவ‌ர் வேறு யாரையு‌ம் காத‌லி‌த்து ‌விட‌க் கூடாதே எ‌ன்று‌ம் மன‌ம் பதபதை‌க்கு‌ம்.

நனது ந‌ண்ப‌ர் வேறு யா‌ரிடமாவது பே‌சினா‌ல் முத‌லி‌ல் அ‌தீத ப‌ற்று (பொச‌சி‌வ்ந‌ஸ்) என‌ப்படு‌ம் த‌ன்னுட‌ன் ம‌ட்டுமே பேச வே‌ண்டு‌ம், பழக வே‌ண்டு‌ம் எ‌ன்ற எ‌ண்ண‌ம் பொறாமையாகவோ, கோபமாகவோ, வெறு‌ப்பாகவோ‌க் கூட மாறலா‌ம்.

ஒருவ‌ர் த‌ன் ந‌ண்பரை‌க் காத‌லி‌க்க‌த் துவ‌ங்‌கியது‌ம் செ‌ய்ய வே‌ண்டிய ‌விஷயம‌், தனது‌ காதலை வெ‌ளி‌ப்படு‌த்துவது அ‌ல்ல. அவரது மன‌தி‌ல் த‌ன் ‌மீது காத‌ல் ஏ‌ற்படுவத‌ற்கான ‌விதை உ‌ள்ளதா அ‌ல்லது காத‌ல் ‌விதையை‌த் தூவுவத‌ற்கான வா‌ய்‌ப்பு உ‌ள்ளதா எ‌ன்பதுதா‌ன். அத‌ற்கு மு‌ன் வேறு யாரேனு‌ம் காத‌ல் ‌விதையை‌ ‌விதை‌த்து உ‌ள்ளனரா எ‌ன்பதை அ‌றி‌ந்து கொ‌ள்வதுதா‌ன் முத‌ல் வேலையாக இரு‌க்க வே‌ண்டு‌ம்.

அவ‌ரது மன‌தி‌ல் காத‌ல் ஏ‌ற்படவே இ‌ல்லை, த‌ன்னை ‌மிகவு‌ம் ந‌ல்ல ந‌ண்பராக ‌நினை‌க்‌கிறா‌‌ர் எ‌ன்று உறு‌தியாக‌த் தெ‌ரி‌ந்த ‌பிறகு, காத‌லி‌க்க வை‌ப்பத‌‌ற்கான வ‌ழிக‌ளி‌ல் ஈடுபடலா‌ம்.

நமது ந‌ட்பை பெ‌ரிதாக ம‌தி‌க்‌கிறா‌ர், த‌ன்னை ஒரு ந‌‌ல்ல ந‌ண்பராக அவ‌ர் ‌நினை‌க்‌கிறா‌ர் எ‌ன்று ‌நீ‌ங்க‌ள் எ‌ண்‌ணினா‌ல், உ‌ங்களது காத‌ல் முடிவை ‌சில கால‌ம் த‌ள்‌ளி‌ப் போடலா‌ம்.

ஆனா‌ல், நா‌ம் காத‌லி‌க்கு‌ம் ந‌ம் ந‌ண்ப‌ர், வேறு ஒருவரை காத‌லி‌க்‌கிறா‌ர் எ‌ன்ற ச‌ந்தேகமாவது உ‌ங்களு‌க்கு வ‌ந்தா‌ல் உ‌ங்க‌ள் காதலை கட‌லி‌ல் தூ‌க்‌கி‌ப் போட‌த் தய‌ங்க‌க் கூடாது. அத‌ற்கு‌ம் தயாராக இரு‌க்க வே‌ண்டு‌ம். உ‌ங்க‌ள் காதலை‌த் தூ‌க்‌கி‌ப் போ‌ட்டு‌வி‌ட்டு வேறு ஏதேனு‌ம் உ‌ங்களு‌க்கு‌ப் ‌பிடி‌த்த வேலை‌யி‌ல் முழு நேரமு‌ம் ஈடுபடு‌ங்க‌ள். கால‌ம் எதையுமே மா‌ற்று‌ம் ச‌க்‌தி படை‌த்தது. ‌நீ இ‌ல்லாம‌ல் நா‌ன் இ‌ல்லை எ‌ன்று த‌ற்கொலை வரை செ‌ன்றவ‌ர்களை‌க் கூட, வேறு க‌ல்யாண‌ம் செ‌ய்து கொ‌ண்டு குடு‌ம்ப‌‌ஸ்தனா‌க்கு‌ம் ச‌க்‌தி கால‌த்‌தி‌ற்கு உ‌ண்டு. இ‌ப்படி எ‌ல்லா‌ம் நா‌ம் இரு‌‌ந்‌திரு‌க்‌கிறோமா எ‌ன்று எ‌ண்‌ணி ‌சி‌ரி‌க்க வை‌க்கவு‌ம் இ‌ந்த கால‌த்தா‌ல் முடியு‌ம். அதே கால‌ம் உ‌ங்க‌ள் காதலை மற‌க்க வை‌க்க முடியு‌ம். ஆனா‌ல் உ‌ங்க‌ளு‌க்காக உ‌ங்க‌ள் ந‌ண்ப‌ர் உ‌ங்களுட‌ன் இரு‌ப்பா‌ர்.

ஒரு வேளை உ‌ங்க‌ள் காதலை ‌நீ‌ங்க‌ள் அவசர‌ப்ப‌ட்டு வெ‌ளி‌ப்படு‌த்‌தி, அவரது மனதை அது பா‌தி‌க்குமானா‌ல், ‌நீ‌ங்க‌ள் இழ‌ப்பது ஒரு காத‌லியை அ‌ல்ல.. ந‌ல்ல ந‌ண்பரை. ஒரு வேளை ‌நீ‌ங்க‌ள் காதலை வெ‌ளி‌ப்படு‌த்‌தியது‌ம், அது அவரு‌க்கு‌ப் ‌பிடி‌க்கா‌ம‌ல் போனா‌ல், ‌நீ‌ங்க‌ள் இ‌வ்வளவு காலமு‌ம் ந‌ண்பரை‌ப் போல இரு‌ந்தது வெறு‌ம் நடி‌ப்பாக அவரு‌க்கு‌த் தோ‌ன்றலா‌ம். இனா‌ல் உ‌ங்களு‌க்கு இடையே எ‌ந்த ப‌ந்தமு‌ம் இ‌ல்லாமலே‌ப் போகலா‌ம்.

காதலை மன‌தி‌ல் அட‌க்‌கி வை‌த்து‌க் கொ‌ள்வது கடினமான ‌விஷயமாக இரு‌ந்தாலு‌ம் அதனா‌ல் ஏ‌ற்படு‌ம் பா‌தி‌ப்பு பெ‌ரித‌ல்‌ல. உ‌ங்களு‌க்கு எ‌ந்த ‌பிர‌ச்‌சினை‌யிலு‌ம் தோ‌‌ள் கொடு‌க்க உ‌ங்களு‌க்காக ஒரு ந‌ண்ப‌ர் உ‌ங்களுட‌ன் இரு‌ப்பா‌ர். அதை ‌விட வேறு எ‌ன்ன வே‌ண்டு‌ம் உலக‌த்‌தி‌ல்?

செவ்வாய், 28 செப்டம்பர், 2010

அம்பலமாகும் பெட்ரூம் டாக்! -எச்சரிக்கை ரிப்போர்ட்!


"நெட்மூலம் பகிரங்கமாகிக்கிட்டு இருக்கும் என் மானத்தை நக்கீரன்தான் காப்பாத்த ணும்'’’என்றபடி நம்மிடம் கண்ணீருடன் வந்தார் அந்த இளம் குடும்பத்தலைவி. துணைக்கு தன் அக்காவையும் அழைத்துவந்திருந்த அவரிடம் ஏகத்துக்கும் பதட்டம்.

"முதல்ல கவலையை விடுங்க. என்ன பிரச்சினை? உங்க படத்தை யாராவது...?'’ என நாம் முடிக்கும் முன்பே...

""இல்லைங்க. எனக்கு கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம்தான் ஆகுது. கல்யாணமான நாலாவது மாசமே என் கணவர் குவைத் போயிட்டார். என் மேல் அளவுகடந்த காதல் அவருக்கு. அதனால் இரவு நேரங்கள்ல எங்கிட்டே ரொமாண்டிக்கா பேசுவார். என்னையும் அவர் அளவுக்கு பேசவைப் பார்..''’சொல்லும்போதே அவர் கண்கள் சங்கடம் கலந்த பயத்தில் தவித்தது. அவரைத்தேற்றும் விதமாக நாம்.. ‘

"சரி விடுங்க. இது பல இடங்கள்ல நடக்கு றதுதானே... இதில் என்ன பிரச்சினை?'’ என்றோம்..

அந்த குடும்பத் தலைவி, அடுத்து சொன்ன தகவல் நம்மை ஏகத்துக்கும் அதிரவைத்தது.

""அவரும் நானும் ரொமாண்டிக் மூடில் எல்லை மீறி பேசிய கிளுகிளு பேச்சுக்கள்... இப்ப இண்டர் நெட்டில் வருதாம். யாரோ ஒரு கிரிமினல் பேர்வழி... எங்களுக்கே தெரியாமல்... எங்க பேச்சை ரெக்கார்டு பண்ணி... இப்படிப் பண்ணியிருக் கான். இதை என் வீட்டுக்காரர்தான் பார்த்துட்டு... அதிர்ந்துபோய்... எனக்குத் தகவல் சொன்னார். கூடவே "நக்கீரன்ட்ட உதவி கேள்'னும் சொன்னார். அதான் வந்தேன்''’என்று நம்மை அதிரவைத்த வர்... அந்த இணையதள முகவரியையும் நம்மிடம் கொடுத்தார்.

அவருக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்த நாம்... அவர் சொன்ன விவகாரமான இணையதளத் தை கவனித் தோம்.

கணவன்- மனைவிகள், காதல் ஜோடி கள், கள்ள உறவு ஜோடிகள் என பலதரப்பட்ட ஆண் -பெண்களின் லச்சையற்ற அப்பட்டமான உரையாடல்கள்... அங்கே பதியப்பட்டிருந்தன. காதுகள் கூசும் அளவிற்கு... பலரும் தங்களது அந்தரங்க உணர்வுகளை யார் கவனிக்கப்போகிறார்கள் என்ற தைரியத்தில்.. தங்கள் பார்ட்னர்களிடம் செல்லச் சீண்டல் சிணுங்கல் சகிதமாய்ப் பகிர்ந்துகொண்ட விஷயங்கள்... அங்கே தோரணம் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தன.

உரையாடல்களிலேயே இப்படி ஒரு மன்மத உலகமா? என திகைத்துப்போன நாம்...

நமக்குத் தெரியாமல் நாம் செல்போனில் பேசுவதை தனி நபர் ஒருவரால் ரெக்கார்டு செய்யமுடியுமா? என விசாரிக்க ஆரம்பித்தோம்.

பிரபல மொபைல் கம்பெனியில் டெக்னிக்கல் பிரிவு உயர் அதிகாரியாகப் பணிபுரியும் அவரைத் தொடர்புகொண்டோம். அந்த அதிகாரியோ... ஒரு குபீர்ச் சிரிப்பை உதிர்த்துவிட்டு... ""இந்த மாதிரி யான பேச்சுக்கள் 3 விதமா பதிவாக வாய்ப்பிருக்கு. முதல் வகை... நீங்களோ, நானோ மொபைல்ல ரெக்கார்டிங் வாய்ஸ் சாஃப்ட்வேர்கள இன்ஸ்டால் பண்ணிக்கிட்டோம்ன்னா நமக்கு வர்ற இன்கம்மிங், அவுட்கோயிங் கால்கள் தானா துல்லியமா பதிவாயிடும். இதில் பெரிய பிரச்சினை இல்லை.

இரண்டாவது, எங்களை மாதிரியான செல்போன் நிறுவனங்கள் கஸ்டமர்களின் பிரச்சினைகள தீர்த்து வைக்க 24 மணி நேரமும் இயங்கும் கால்சென்டர்கள உருவாக்கி வச்சிருக்கு. இந்த கால்சென்டர்கள்ல பணிபுரியும் ஒருத்தர் நினைச்சா... யார் பேச்சை வேணும்னாலும் ரெக்கார்ட் பண்ணமுடியும். பொதுவா நைட் ஷிப்டில் அதிக வேலையிருக்காது. அப்ப டூட்டியில் இருக்கறவங்க... நீண்ட நேரமா ஒரு கால் பேசப்படுதுன்னா அவுங்க என்ன பேசறாங்கன்னு ஒட்டு கேட்க முடியும். நைட்ல கள்ளக்காதலர்கள், கணவன்-மனைவி, காதலர்கள் உணர்ச்சியோட கிளுகிளுப்பா பேசுவாங்கங்கற ரகசியம் எல்லோருக்கும் தெரிஞ்சதுதானே. இந்த மாதிரி பேச்சுக்களை கேட்டுக்கேட்டு கிக் ஆகற சிலர் இருக்கத்தான் செய்றாங்க. அப்படி ரெக்கார்ட் பண்ணியது அப்படியே பரவி நெட் வரைக்கும் வர வாய்ப்பிருக்கு.

மூணாவதா சில குறிப்பிட்ட இணையதளங்கள், "உங்களுக்காக எங்களது பெண்கள் காத்திருக்கிறார்கள். அவர்களிடம் நீங்கள் எதைப்பற்றி வேண்டுமானாலும் கேட்கலாம், செக்ஸ் பற்றி மற்றவர்களிடம் பேச தயங்குவதை இவர்களிடம் பேசலாம்'னு குறிப்பிட்டு 12 இலக்க எண் தந்திருப்பாங்க. அதுல ஏதாவது ஒரு நம்பர காண்டக்ட் பண்ணி பேசனிங்கன்னா நீங்க பேசற கிளுகிளு பேச்சை நமக்கே தெரியாம ரெக்கார்ட் பண்ணி நெட்ல போட்டுடுவாங்க. இது காசு கொடுத்து நமக்கு நாமே சூன்யம் வச்சிக்கறதுக்கு சமம்''’என்றார் விரிவாக.

பெண்களுடன் செக்ஸ் உரையாடல்களுக்கு அழைப்பு விடுக்கும் அந்த கிளுகிளு இணையதளங் கள் குறித்தும் விசாரித்தோம். அதில் கையைச் சுட்டுக்கொண்ட ஒரு நண்பர் தன் அனுபவங்களை சங்கோஜத்துடனே சொல்ல ஆரம்பித்தார். ""பொதுவா செக்ஸ் வெப்ஸைட்டுகள்ல நான் உலவிக்கிட்டு இருந்தப்ப... "எந்த நேரத்திலும் மனதில் இருக்கும் ஆசைகளை உரையாடல் மூலம் இந்தப் பெண்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்'னு ஒரு வெப்ஸைட் கூவியழைத்தது. அதில் உடம்பைத் திறந்து போட்டி ருந்த ஒருத்தியைப்... படத்தைப் பார்த்தே... கிளுகிளு உரையாடலுக்கு செலக்ட் பண்ணி அவங்க கொடுத் திருந்த ஐ.எஸ்.ஐ. எண்ணில் தொடர்பு கொண்டேன். எடுத்த எடுப்பிலே "என் பேரு நந்தினி. மும்பையில காலேஜ் படிக்கறேன். என் சொந்தவூர் சென்னைதான். உங்களோட செக்ஸா பேசணும்னு ஆசையா இருக்கு' என்றவள்.... தன் உடல் பாகங்களை வர்ணித்து... அதில் உள்ள மச்சங்களை யும் சொல்லி கண்டபடி கிக் ஏத்தினாள். இப்படி அவளோடு 22 நிமிடம் உரையாடல் நீண்டது. அந்த மாத பில் வந்தபோது மயக்கம் வந்துவிட்டது. காரணம் அந்த 22 நிமிட பேச்சுக்கு 3,050 ரூபாய் சார்ஜ் ஆகியிருந்தது. நொந்துபோய் இதுபற்றி விசாரித்த போது இணையதளத் தரப்பும் தொலை பேசித் தரப்பும் கூட்டு சேர்ந்து என்னை மாதிரியான சபல பார்ட்டிகள்கிட்ட பணம் புடுங்க இந்த மாதிரி பண்ணிக் கிட்டிருக்காங்கன்னு தெரிஞ்சிது. லோக்கல் கால்களை ஐ.எஸ்.டி கால்களா மாத்தித்தான் பணம் புடுங்குறாங்க. என்னை மாதிரி தினம் தினம் எத்தனைபேர் இப்படி... பணத்தை அந்த ஆபாசக் கும்ப லிடம் பறிகொடுத்துக் கிட்டு இருக்காங் களோ''’ என்றார் எரிச்சலாக.

வழக்கறிஞரான ரமேஷ்கிருஸ்ட்டி நம்மிடம் ""சென்னை ரிச்சி ஸ்ட்ரீட்டில் குளோனிங் செல்லை உருவாக்கித் தர்றாங்க. இது எதுக்குன்னா கணவன் மீது மனைவிக்கோ... அல்லது மனைவி மீது கணவனுக்கோ சந்தேகம் இருந்தா... அவங்க சிம் கார்டைக் கொடுத்து அதே நம்பருக்கான குளோனிங் சிம்கார்டை வாங்கிக்கலாம். சம்பந்தப்பட்டவங்க யார்ட்ட பேசினாலும் இந்த குளோனிங் சிம் போட்ட செல்போனிலும் கேட்கும். இப்படி ஒரு வியாபாரம் அங்க நடக்குது. அதேபோல்... இன்னொரு விஷேச ஆண்ட னாவையும் அங்க விக்கிறாங்க. அந்த மினி சைஸ் ஆண்டனாவை வீட்டு மொட்டை மாடியில பொருத்திட்டா போதும்... அக்கம் பக்கத்தலயிருக்கற செல்போன் லைன்களுக்கு வர்ற அத்தனை கால்களையும் ஒட்டுக்கேட்டு.. ரெக்கார்டும் பண்ணமுடியும். இதன் மூலம் சின்னஞ்சிறிய ஜோடிகள், தம்பதிகள், லவ்வர்கள் இவங்க அந்தரங்க உரையாடல்கள் கொள்ளையடிக்கப்படுது. இந்த குளோனிங் செல்போனை அவங்க 20 நிமிசத்தில் ரெடிபண்ணிக் கொடுக்குறாங்க. இதுக்கு சார்ஜ் 3,500 ரூபாயாம். நாடு எங்கேயோ போய்க்கிட்டு இருக்கு. இந்த மாதிரியான டேஞ்சரஸ் விவகாரங்களை உடனே அரசாங்கம் தடுக்கணும்'' என்றார் கவலையாக.

சென்னையில் உள்ள சைபர் க்ரைம் பிரிவு ஏ.சி. சுதாகரிடம் இதுபற்றி நாம் கேட்டபோது...’""மொபைல்ல சாஃப்ட்வேர்ஸ் இன்ஸ்டால் பண்ணி ரெக்கார்ட் பண்ணிக்கறது அவுங்களோட தனிப்பட்ட விருப்பம். ஆனா அத வச்சி மிரட்டறது, வெளியிட றது குற்றம். இதுக்கு கடுமையான தண்டனையுண்டு. நம் பேச்ச மொபைல் கம்பெனிங்க ரெக்கார்ட் பண்ண வாய்ப்பு குறைவு. குளோனிங் சிம், மினி ஆண்டனாவெல்லாம் புது விவகாரமா யிருக்கு. இதனால பெரிய பிரச்சினைகள் வர்றதுக்கு வாய்ப் பிருக்கு. நாங்க இத தீவிரமா கண்காணிக் கிறோம்''’ என்றார் உறுதியான குரலில்.

மொபைல் போனில் பேசும் முன் யோசித்து பேசுங்கள். இல்லையேல்.... உங்கள் அந்தரங்கமும் நாளை உலகமெங்கும் உலா வரலாம்.

ஆஸ்திரியா-ரூ. 1 கோடிக்கு ஏலம் போன ஹிட்லர் ஓவியங்கள்

வியன்னா: ஆஸ்திரியாவில் நடந்த ஏலத்தில் ரூ. 1 கோடிக்கு ஹிட்லர் வரைந்த ஓவியங்கள் ஏலம் போயின.

ஜெர்மனியை மட்டுமல்லாமல் யூத குலத்தையே நடுநடுங்க வைத்தவர் ஹிட்லர். 2ம் உலகப் போர் மூ்ள காரணகர்த்தா இவர்தான். மிகப் பெரிய சர்வாதிகாரியாக திகழ்ந்தாலும் சிறந்த ஓவியராகவும் திகழ்ந்தவர் ஹிட்லர்.

கடந்த 1908ம் ஆண்டு ஹிட்லர் பல ஓவியங்களை தீடச்டியிருந்தார். சாதாரண வாட்டர்கலர் மூலம் பண்ணை நிலங்கள், தேவாலயங்கள், தொழிற்கூடங்கள், கிராமங்கள் [^], இயற்கைக்காட்சிகள் ஆகியவற்றை வரைந்து தள்ளியிருந்தார்.

அவற்றில் இரண்டு ஓவியங்களை வியன்னாவில் ஏலத்திற்கு விட்டனர். அவை இரண்டையும் ரூ.1 கோடிக்கு ஒரு வக்கீல் ஏலம் மூலம் பெற்றுள்ளார். அந்த வக்கீல் யார், எந்த நாட்டைச்சேர்ந்தவர் என்ற விவரம் வெளியிடப்படவில்லை

தினசரி 400 ஏழைகளுக்கு 3 வேளை உணவளிக்கும் நாராயணன் கிருஷ்ணன்!


சென்னை: ஏழைகள் பசியால் அவதிப்படுவதை பார்த்து வருத்தமடைந்த மதுரை [^]யைச் சேர்ந்த நாராயணன் கிருஷ்ணன் என்ற மனிதர், தினமும் 400 பேருக்கு 3 வேளை உணவளித்து வருகிறார்.

இதனால், உலகளவில் நல்ல மாற்றத்தினை கொண்டு வரும் சிறந்த மனிதர்களுக்கான விருது [^] போட்டிக்கு இவரை தேர்ந்தெடுத்துள்ளது அமெரிக்காவின் சிஎன்என் தொலைக்காட்சி.

பசியில் வாடும் அனைவருக்கும் உணவளிப்பதே இறைப்பணி என்று வாழ்ந்தார் வள்ளலார். அதேபோல நாராயணனும் ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் கண்டு வருகிறார். இந்த காலத்திலும் வீதியில் அனாதையாய் இருக்கும் ஏழைகளுக்கு உணவளிப்பததையே வாழ்வின் லட்சியமாக கொண்டு ஒருவர் வாழ்கிறார் என்றால் கேட்பதற்கே ஆச்சரியமாக உள்ளது அல்லவா?.

இந்த மனிதர் மதுரையை சேர்ந்த நாராயணன் கிருஷ்ணன். நட்சத்திர ஹோட்டலில் நல்ல சம்பளத்தில் செஃப் ஆக வேலை பார்த்து வந்தவர் நாராயணன். ஆனால் சமுதாயத்தால் கைவிடப்பட்டு வீதியில் ஆனாதையாய் திரியும் ஏழைகளைப் பார்த்து அதிர்ந்து பெரும் பணத்தைத் தரும் அந்த வேலையை விட்டு விட்டு தினமும் தானே உணவு தயார் செய்து அவர்களது பசியை போக்கி வருகிறார். தினமும் 400 பேருக்கும் மேல் 3 வேளை உணவு அளித்து வருகிறார்

சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நல்ல சம்பளத்திற்கு செஃப் வேலைக்கான வாய்ப்பு நாராயணனுக்கு வந்தது 2002ம் ஆண்டில். இதற்கான நேர்முகத் தேர்வுக்காக சுவிஸ் சென்றார். பின்னர் அதை முடித்துக் கொண்டு வெற்றிகரமாக மதுரை திரும்பினார்.

வீட்டுக்குச் செல்லும் வழியில் அவர் கண்ட காட்சி அவரது இதயத்தை ஒரு விநாடி நிறுத்திப் போட்டது. சிக்குப் பிடித்த தலை முடியுடன், உடலில் ஒட்டிக் கிடந்த துணியுடன், நகரக் கூட முடியாத நிலையில், சாப்பிட வழியில்லாமல் தனது மலத்தையே சாப்பிட்டுக் கொண்டிருந்தார் ஒரு பாவப்பட்ட முதியவர்.

இந்தக் காட்சி அவரை அப்படியே புரட்டிப் போட்டு விட்டது. இதுகுறித்து அவர் கூறுகையில், அந்தக் காட்சியைப் பார்த்து நான் பெரும் அதிர்ச்சி அடைந்தேன். எனது சொந்த சகோதரர் ஒருவர் இப்படிப்பட்ட அவலமான நிலையில் இருக்கும்போது வெளிநாட்டு வேலை எனக்குத் தேவையில்லை என்ற முடிவுக்கு நான் வந்தேன். இந்தியாவிலேயே தங்க முடிவு செய்தேன்.

முதல் வேலையாக அந்த முதியவருக்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்தேன். அவருக்கு நல்ல உடை கொடுத்து, தலைமுடியை வெட்டி சரிப்படுத்தினேன். அன்று தொடங்கியது எனது இந்த பணி.

பின்னர் இதை பெரிய அளவில் செய்ய வேண்டும் என்பதற்காக 2003ம் ஆண்டு அட்சயா டிரஸ்ட்டைத் தொடங்கினேன். அட்சயப் பாத்திரத்தை ஏந்திய மணிமேகலையின் நினைவாக இந்தப் பெயரை வைத்தேன். அந்த அட்சயப் பாத்திரத்தில் அள்ள அள்ள குறையாமல் வந்ததுபோலு எனது திட்டமும் நிற்காமல் தொடர்ந்து இயங்க வேண்டும் என்ற நம்பிக்கையில்தான் இந்தப் பெயரை வைத்தேன் என்றார் நாராயணன்.

நாராயணனும், அவரது அறக்கட்டளைக் குழுவினரும் அதிகாலை 4 மணிக்கே எழுந்து விடுகின்றனர். தனது கையால் சமைத்த உணவுப் பொருட்களை பொட்டலமாக போட்டு எடுத்துக் கொண்டு கிட்டத்தட்ட 170 கி.மீ அளவுக்கு சுற்றி வந்து ஏழை, எளிய மக்களை சாப்பிட வைக்கின்றனர்.

ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 400 பேர் வரை நாராயணனால் சாப்பிடும் வாய்ப்பைப் பெறுகின்றனராம்.

இத்துடன் நிற்கவில்லை இவர்களது வேலை. சாப்பாடு கொடுக்கிறார். அதை சாப்பிடக் கூட முடியாத நிலையில் (மன வளம் குன்றியவர்கள்) இருந்தால், பக்கத்திலேயே உட்கார்ந்து அவர்களுக்கு சாப்பாட்டை ஊட்டி விடுகின்றனர். குடிக்க தண்ணீரும் கொடுத்து அவர்கள் சாப்பிட்டு முடித்த பின்னர்தான் இடத்தை விட்டு நகர்கின்றனர்.

அத்தோடு நிற்காமல் அழுக்குப் படிந்த தலைமுடி, காடாக வளர்ந்து கிடக்கும் தாடியுடன் யாராவது இருந்தால் அவர்களை தனது காரில் ஏற்றி தனது இருப்பிடத்திற்கு அழைத்து வருகிறார். அவர்களுக்கு தானே உட்கார்ந்து அழகாக முடி வெட்டி, தாடியை ஒட்ட வழித்தெடுத்து, முகத்தை சீராக்குகிறார் நாராயணன்.

பிறகு தான் பெற்ற குழந்தைக்குச் செய்வது போல ஒரு ஸ்டூலைப் போட்டு அவர்களை உட்கார வைத்து சோப்பு போட்டு குளிக்க வைத்து அழகுபடுத்தி நல்ல உடையைக் கொடுத்து உடுத்திக் கொள்ள வைக்கிறார். அப்போது தங்களையே புதிதாக பார்த்த மகிழ்ச்சியில் அவர்களது முகத்தில் தெரியும் வெட்கச் சிரிப்பைப் பார்த்து நாராயணன் அடையும் பூரிப்பு-அதை வார்த்தையால் சொல்ல முடியாது.

இதுவரை கிட்டத்தட்ட 10.2 லட்சம் சாப்பாடுப் பொட்டலங்களை இலவசமாக விநியோகித்துள்ளாராம் நாராயணன்.

நாராயணன் குழுவினர் அணுகும் ஏழைகளில் பெரும்பாலானோர் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள்தான். தனக்காக சாப்பாடு தரும் நாராயணனுக்கு நன்றி சொல்லக் கூடத் தெரியாத அளவுக்கு மனதால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள்.

இது தனக்கு பெரும் மன நிறைவு தருவதாக கூறுகிறார் நாராயணன். நான் சமைப்பதை விட அதை சாப்பிடும்போது அவர்கள் முகத்தில் தெரியும் நிம்மதிதான் எனக்கு பெரும் மன நிறைவைத் தருகிறது. அவர்களின் ஆன்மா திருப்தி அடைவதை அவர்களின் முகத்தில் பார்க்கிறேன். எனது மக்களை பட்டினியிலிருந்து காக்க விரும்புகிறேன் என்றார் கண்களில் நீர் துளிர்க்க.

உலகளவில் நல்ல மாற்றத்தினை கொண்டு வருபவர்களில் 10 பேரை தேர்ந்தெடுத்து மக்கள் [^] வாக்களிப்பின் மூலம் அவர்களில் ஒருவரை ஒவ்வொரு ஆண்டும் ஹீரோவாக தேர்ந்தெடுத்து விருது அளித்து வருகிறது சிஎன்என் தொலைக்காட்சி. இந்த வருடம் சிஎன்என் தேர்ந்தெடுத்த பத்து பேரில் நாராயணன் கிருஷ்ணனும் ஒருவர்.

இவருக்கு விருது கிடைத்தால் விருதுக்கு தான் பெருமையாக இருக்கும். ஆனால் இந்த விருதின் மூலம் அவர் பணி மேலும் வளர்ந்து விரிவடைந்து பெரிய ஆலமரமாக வாய்ப்புள்ளது. நீங்களும் அவருக்கு ஆதரவாக வாக்க அளிக்க இங்கு சென்று வாக்களிக்கலாம்.

அடால்ஃப் ஹிட்லர் ஒரு தோல்வியடைந்த ஓவியர்!


உலகின் மிகக் கொடூரமான எதேச்சதிகாரியான, நாஜி ஜெர்மனியின் அதிபரான, அடால்ஃப் ஹிட்லர் தனது ஆரம்ப காலங்களில் ஒரு ஓவியராக இருந்தார் என்றால் நம்ப முடிகிறதா? ஆம்! தீவிர கலை உள்ளத்திலிருந்து தீவிர ஆதிக்க வெறி உருவாகிவிட்டதோ என்று கலை எதிர்ப்பாளர்கள் உணர்ச்சி வசப்படவேண்டாம்!

அவரும் தனது கலை உள்ளத்தை வெளிப்படுத்த ஓவியத்தை வரைந்தாரா என்பது தெரியவில்லை, ஆனால் அப்போது அவரிடம் சல்லிகாசு கிடையாது என்றும் அதனால் தன் வாழ்வாதாரத்திற்காக அவர் ஓவியம் வரைந்தார் என்றும் கூறப்படுகிறது.

1908ஆம் ஆண்டு அவர் வரைந்த ஓவியங்கள் இந்த ஆண்டு ஏலத்திற்கு வருகிறது. 1,50,000 பவுண்டுகளுக்கு அந்த ஓவியங்கள் விற்கப்படலாம் என்று லண்டனிலிருந்து வெளிவரும் 'டெய்லி டெலிகிராஃப்' பத்திரிக்கை செய்தி கூறுகிறது.

ஆஸ்ட்ரியா நாட்டின் ஒரு மிகப்பெரிய பண்ணையில் இந்த ஓவியங்களை கண்டெடுத்தவர் பெயர் தெரியாத ஒரு வழக்கறிஞர்.

மிகப்பெரிய பண்ணை நிலத்தைச் சுற்றியுள்ள காட்சிகளை அவர் வாட்டர் கலர் பெயிண்டிங் செய்துள்ளார் ஹிட்லர். சாலை, சர்ச், தொழிற்சாலைகளின் வரிசை என்று அவர் ஓவியம் தீட்டியுள்ளார்.

அந்தக் காலங்களில் அவரது ஒரே வேலை வெளியே சென்று ஓவியம் தீட்டுவதாக மட்டுமே இருந்ததாக முல்லாக்ஸ் ஏல நிறுவனத்தின் ரிச்சர்ட் வெஸ்ட்வுட் என்பவர் தெரிவிக்கிறார். அந்தக் காலக்கட்டத்தில் அவரிடம் காசு பணம் இல்லை என்றும் அவர் கூறுகிறார்.

FILE
வியன்னாவில் உள்ள கலை/ஓவியக் கழகத்தில் ஹிட்லர் தொழில்பூர்வ ஓவியராவதற்காக விண்ணப்பம் செய்திருந்ததாகவும், ஆனால் இரண்டு முறை அவரது விண்ணப்பம் ஏற்கப்படவில்லை என்றும் லண்டன் நாளேடு செய்திக் குறிப்பு கூறுகிறது.

அப்போது ஹிட்லர் மனிதர்களை ஓவியத்தில் வரையும் போது அவரது சிந்தனை சரியாக இல்லை என்ற காரணத்தினால் அவரை நிராகரித்தனர் என்றும் கூறப்படுகிறது.

விண்ணப்பம் மறுக்கப்பட்டது, அவரை ஒரு ஓவியராக ஏற்கப்படாதது குறித்து நிறைய ஆய்வுகள் நடைபெற்றன. ஆனால் அவரை ஓவியராக ஏற்று கொண்டிருந்தால் வரலாற்றில் அவர் செய்த கொடூரமும், ஜெர்மன் மக்களை காலங்காலமாக குற்றவுணர்வில் தள்ளிய யூதப்படுகொலைகளும், இரண்டாம் உலகப் போரும் நடைபெறாமலே கூடப் போயிருக்கலாம் என்றும் ஒரு சில ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஓவியக் கழகம் ஒரு கலைஞனை இழந்ததோ என்னவோ தெரியாது, ஆனால் அவர் மனுவை ஏற்காததுதான் அவரது மனதில் ஆழமான மனித விரோத சிந்தனைகளை வளர்த்திருக்கும் என்று ஒரு சிலர் கருதுகின்றனர்.

ஹிட்லரின் ஓவியங்கள் இம்மாதம் 30ஆம் தேதி ஏலத்திற்கு வருகிறது.

ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

ஆண் குழந்தையை பெற தீர்மானிக்கும் உணவு!


ஆண் குழந்தைக்கு ஆசைப்படாத பெண்கள் யார்தான் இல்லை? அப்படி ஆண் குழந்தை பெற விரும்பும் பெண்கள், கர்ப்ப காலத்தின் துவக்கத்தில் அவசியம் காலை உணவை உட்கொள்ள வேண்டும் என்று கூறுகிறது சமீபத்திய மருத்துவ ஆய்வு ஒன்று!

கர்ப்பம் உறுதிபடுத்தப்பட்ட பின்னர் பெண்களுக்கு இயல்பாகவே வரும் மசக்கை மற்றும் வாந்தி போன்றவை, சில பெண்களுக்கு உணவின் மீதே வெறுப்பை ஏற்படுத்தி விடும்.

ஆனால் குழந்தை - அதுவும் ஆண் குழந்தையாக - பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை மட்டும் ஆகாசம் வரை இருக்கும்.

பொதுவாகவே கர்ப்பம் தரித்திருக்கும் பெண்கள் நல்ல சத்தான் உணவை வேளை தவறாமல் உண்ண வேண்டும்; அதுவும் சிறிது சிறிதாக ஐந்து வேளை வரை உட்கொள்ளலாம் என்றெல்லாம் அறிவுறுத்துகின்றனர் மகப்பேறு மருத்துவர்கள்.

இந்நிலையில், கர்ப்ப காலத்தின் தொடக்கத்தில் ஒரு பெண் உட்கொள்ளும் உணவின் தன்மைதான் அவளது குழந்தை ஆணாக உருவாகுமா அல்லது பெண்ணாக உருவாகுமா என்பதையும், அந்த குழந்தையின் ஆரோக்கியத்தையும் தீர்மானிக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்!

இது தொடர்பாக அண்மையில் கொலம்பியாவில் உள்ள மிஸ்ஸோரி பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், ஒரு பெண் கர்ப்ப காலத்தின் தொடக்கத்தில் காலை உணவை தவறாமல் உட்கொள்வதோடு, நல்ல கொழுப்பு சத்தான ஆகாரத்தையும் எடுத்துக்கொண்டால் ஆண் குழந்தை பிறக்க மிகப்பிரகாசமான வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது.

அதுவே குறைந்த கொழுப்பு சத்துடைய உணவையும், உணவு இடைவேளையை நீண்ட நேரமாக வைத்துக்கொள்ளும் பெண்களுக்கு பெண் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதாகவும் கூறுகிறார்கள் அந்த ஆய்வை மேற்கொண்ட மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.

சரி ஆண்குழந்தைக்காக இத்தனை தூரம் ஆராய்ச்சியெல்லாம் மேற்கொண்டவர்கள், பெண் குழந்தைதான் வேண்டும் என்று அடமாக ஆசை கொள்ளும் பெண்களுக்காக இதுபோன்ற ஆராய்ச்சியெல்லாம் மேற்கொள்ளவில்லையா என்று கேட்டால், அதற்கும் "உள்ளேன் ஐயா!" என்று ஆஜராகிறார்கள் ஹாலந்தின் மாஸ்ட்ரிக்ட் பல்கலைக் கழக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்!

இவர்கள் மேற்கொண்ட ஆய்வில், கர்ப்ப காலத்தில் பெண்கள் வாழைப்பழம் உண்பதை நிறுத்தி, உப்பு சேர்ப்பதை குறைத்துக் கொண்டால் பெண் குழந்தை பிறக்க பிரகாசமான வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது.

குறிப்பாக சோடியம், பொட்டாசியம் அதிகம் உள்ள இறால், அரிசி உணவுகள், உருளைக் கிழங்கு, பிரட் போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்.அவற்றுக்குப் பதிலாக கால்சியம் மற்றும் மக்னீசியம் சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளலாம் என பரிந்துரைக்க்கிறார்கள் மாஸ்ட்ரிக்ட் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள்.

இவர்கள் கூறுவதை, கொலம்பிய பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் கூறியவற்றுடன் - அதாவது கொழுப்பு சத்து குறைந்த உணவை உட்கொள்ளும் கர்ப்பிணி பெண்களுக்கு பெண் குழந்தை பிறக்க அதிக வாய்ப்புள்ளது என்று தெரிவித்ததோடு - ஒப்பிட்டு பார்க்கையில் நம்பகத்தன்மை மேலும் அதிகரிப்பதாகவே தோன்றுகிறது.

ஆனால் இந்த ஆராய்ச்சி, ஆய்வு எல்லாம் இன்ன குழந்தைதான் வேண்டும் என்று அடம் பிடிப்பவர்களுக்குத்தான்...!

ஆண் குழந்தையோ அல்லது பெண் குழந்தையோ, ஒரு தாய்க்கு எந்த குழந்தையுமே அவள் குழந்தைதானே?!

வேலைவாய்ப்பை பறிக்கும் வயது வரம்பு!

2001ஆ‌‌ம் ஆ‌ண்டு நட‌ந்த த‌மி‌ழ்நாடு ச‌ட்டம‌ன்ற பொது‌த் தே‌ர்த‌லி‌ல் த‌னி மெஜா‌ரி‌ட்டி‌யி‌ல் ஆ‌ட்‌‌சியை ‌பிடி‌த்து முதலமை‌ச்சராக பத‌வி ஏ‌ற்றவுடனேயே, முந்தைய திமுக அரசு கஜானாவைக் காலி செய்துவிட்டதால், கடும் நிதி நெருக்கடியில் தமிழக அரசு தவிப்பதாக கூறி, அரசு ஊ‌‌ழிய‌ர்களு‌க்கு கடுமையான நெரு‌க்கடியை கொடு‌க்க‌த் தொடங்கினார் ஜெயலலிதா.
ஒரு க‌ட்ட‌த்‌தி‌ல் இவரது நெரு‌க்கடியை தா‌ங்‌கி‌க்கொ‌ள்ள முடியாத ஊ‌ழிய‌ர்க‌ள் போரா‌ட்ட‌த்தி‌ல் ஈடுப‌ட்டன‌ர். இதனா‌ல் ஆ‌த்‌‌திர‌‌த்‌தின் உ‌ச்‌சி‌க்கே செ‌ன்ற ஜெய‌ல‌லிதா, போரா‌ட்ட‌த்தி‌ல் ஈடுப‌ட்ட 4 ல‌ட்ச‌ம் அரசு ‌ஊ‌ழிய‌ர்களை ஒரே நாளி‌ல் டி‌ஸ்‌மி‌ஸ் செ‌ய்தா‌ர்.

அதோடு ‌நிறு‌த்‌தி‌க் கொ‌ள்ளாமல், உடனடியாக வேலைவா‌ய்‌ப்பு அலுவலக‌ம் மூல‌ம் 15 ஆ‌யிர‌ம் ஊ‌‌ழிய‌ர்களை த‌ற்கா‌லிகமாக ‌நிய‌மி‌த்தா‌ர். டி‌‌ஸ்‌மி‌ஸ் செ‌ய்ய‌ப்ப‌ட்ட ஊ‌ழிய‌ர்க‌ள் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ற்கு செ‌ன்று தடை ஆணை பெ‌ற்ற‌த்தை தொட‌ர்‌ந்து இ‌ந்த ‌பிர‌ச்சனை முடிவு‌க்கு வ‌ந்ததது. பு‌தியதாக ‌நிய‌மி‌க்க‌ப்ப‌ட்ட ஊ‌‌ழிய‌ர்களு‌ம் ப‌ணி‌யி‌ல் தொட‌ர்‌ந்தன‌ர்.

இத‌ற்கு அடு‌த்த இடியாக, அரசு‌த் துறைக‌ளி‌ல் கா‌லியாக உ‌ள்ள ‌இட‌ங்களை ‌நிர‌ப்ப தடை ‌வி‌தி‌த்தா‌ர் ஜெய‌ல‌லிதா. இதனா‌ல் ஒ‌வ்வொரு துறை‌யிலு‌ம் உ‌ள்ள ப‌ணியாள‌ர்களு‌க்கு வேலை பளு அ‌திக‌ரி‌த்தது. கா‌லி இட‌ங்களை ‌நிர‌ப்ப‌க் கோ‌ரி பொதும‌க்க‌ள் பல போரா‌ட்ட‌ங்களை நட‌த்‌தியு‌‌ம் எ‌ந்த‌வித ‌பிரயோசனமு‌ம் இ‌ல்லை.

ஆனா‌ல் அத்தியாவசியப் பணிகள் என கருதப்படும் காவல், மருத்துவம், ஆசிரியப்பணி ஆகிய மூன்று துறைகளுக்கு மட்டுமே பணியாட்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

2006ஆ‌ம் ஆ‌ண்டு த‌மிழக‌த்‌தி‌ல் ஆ‌ட்‌சி மா‌ற்ற‌ம் ஏ‌ற்ப‌ட்டது. ஜெயல‌லிதா தலைமை‌யிலான அ.இ.அ.‌தி.மு.க. ஆ‌ட்‌சி முடிவு‌க்கு வ‌ந்ததை‌த் தொட‌ர்‌ந்து ‌த‌மிழக‌த்‌தி‌ல் கா‌ங்‌கிர‌ஸ் தயவுட‌ன் கூ‌ட்ட‌ணி ஆ‌ட்‌சியை அமை‌‌த்தது ‌தி.மு.க. முதலமை‌ச்சராக கருணா‌நி‌தி பொ‌று‌ப்பே‌ற்றவுட‌ன் வேலை‌க்கான தடை ஆணைய ‌நீ‌க்‌கினா‌ர்.

2006ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதி முதல் இந்த வயது தளர்வுச் சலுகை அமலுக்கு வந்தது. அதோடு 5 ஆ‌ண்டுகளாக அரசு‌த்துறை‌யி‌ல் கா‌லியாக உ‌ள்ள இட‌‌‌ங்களை ‌நிர‌‌ப்புவத‌ற்கான நடவடி‌க்கை‌யி‌ல் கருணா‌நி‌தி ஈடுப‌ட்டா‌ர்.

வயது கட‌ந்து ‌வி‌ட்டதா‌ல் இ‌னி அரசு வேலை ‌கிடை‌க்காது எ‌ன்று ‌நினை‌த்தவ‌ர்க‌ளு‌க்கு கருணா‌நி‌தி இ‌னி‌ப்பு செ‌ய்‌தியாக வயது வர‌‌ம்பை உய‌ர்‌த்‌தினா‌ர். இதனா‌ல் வேலை வா‌ய்‌ப்‌பி‌ல் ப‌திவு செ‌ய்‌திரு‌ந்தவ‌ர்க‌ள் ம‌கி‌ழ்‌ச்‌சி அடை‌ந்தன‌ர். பாதிக்கப்பட்ட இளைஞர்களும் பயன்பெற வேண்டும் என்பதற்காக வயது தளர்வுச் சலுகை அமல்படுத்தப்பட்டது. ஐந்தாண்டுகள் வயது தளர்வு என அறிவிக்கப்பட்டது.

2001ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமல்படுத்தப்பட்ட பணி நியமன தடைச் சட்டம் காரணமாக, அரசின் மற்ற எந்தத் துறைகளுக்கும் நேரடி நியமனங்கள் மூலம் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இதனால், தாங்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வேதனை தெரிவித்தனர்.

அதாவது, குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க உச்சபட்ச வயது வரம்பு 35 என்றால், ஐந்தாண்டுகள் வயது தளர்வுச் சலுகையுடன் சேர்த்து 40 வயதுக்குட்பட்டவர்கள் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். இதனால், ஏராளமான இளைஞர்கள் வேலைவாய்ப்பைப் பெற விண்ணப்பிக்கும் வாய்ப்பு பெற்றனர்.

இதை‌த் தொட‌‌ர்‌ந்து வேலைவா‌ய்‌ப்பு அலுவலக‌ம் மூல‌ம் அரசு‌த்துறை‌யி‌ல் கா‌லியாக உ‌ள்ள ‌இட‌ங்க‌ள் ‌நிர‌ப்ப‌‌ப்பட்டது. இ‌தி‌ல் மற‌க்க முடியாதது எ‌ன்னவெ‌ன்றா‌ல் 2007ஆ‌ம் ஆ‌ண்டு 2,500 ‌கிராம ‌நி‌ர்வாக அலுவல‌ர்களை தே‌ர்வு செ‌ய்ததுதா‌ன். இ‌தி‌ல் 5 ல‌ட்ச‌த்‌தி‌ற்கு‌ம் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள் ‌வி‌ண்ண‌‌ப்‌பி‌த்தன‌ர் எ‌ன்பது ‌‌நினை‌‌வி‌ல் கொ‌‌ள்ள‌த்த‌க்கது.

வேலைவா‌ய்‌ப்பு அலுவலக‌த்‌தி‌ல் ப‌திவு செ‌ய்தவ‌ர்க‌ள் த‌ங்களு‌க்கு வேலை‌க்கு ‌கிடைக்கு‌ம் எ‌ன்று கா‌‌த்‌திரு‌ந்தவ‌ர்களு‌க்கு த‌மிழக அரசு த‌ற்போது ஆ‌‌ப்பு வை‌த்து‌ள்ளது. அரசுப் பணித் தேர்வுகளை எழுத இளைஞர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஐந்தாண்டு வயது தளர்வுச் சலுகை அடுத்த ஆண்டு (2011) ஜூலை வரை மட்டுமே அமலில் இருக்கும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஐந்தாண்டு வயது தளர்வுச் சலுகை எந்த ஆண்டு வரை அமலில் இருக்கும் என்பது குறித்து தேர்வு எழுதும் இளைஞர்கள், அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் யாருக்கும் தெளிவான விவரம் தெரியவில்லை.

இந்நிலையில், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை செயலர் கே.என்.வெங்கடரமணன் வெளியிட்ட அரசு உத்தரவில், ''2006ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதி முதல் 2011ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி வரையிலான காலத்தில் மட்டுமே வயது தளர்வுச் சலுகை அமலில் இருக்கும். இந்தக் காலகட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு அறிவிக்கைகளில் உள்ள வயது வரம்புடன் ஐந்தாண்டு வயது தளர்வுச் சலுகையைச் சேர்த்துக் கொள்ளலாம்'' எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் பல்வேறு தேர்வுகள் இப்போது நடத்தப்படவுள்ளன. குரூப் 1, குரூப் 2, வி.ஏ.ஓ. ஆகியன அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள மற்றும் அறிவிக்கவுள்ள முக்கியமான தேர்வுகளாகும். த‌ற்போது வயது வர‌ம்பை த‌மிழக அரசு தள‌ர்‌த்த உ‌ள்ளதா‌ல் அரசு வேலை‌‌கிடை‌க்கு‌ம் எ‌ன்று எ‌தி‌ர்பா‌ர்‌த்து இரு‌ந்தவ‌ர்க‌ளு‌க்கு ஏமா‌ற்றமே ‌கிடை‌த்து‌ள்ளது.

100 ஆண்டு பழமை வாய்ந்த ஆங்கிலேயர் ஆட்சிகால ஆர்ச் இடிப்பு!


தென்காசி: தென்காசதியில், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட 100 ஆண்டு பழமை வாய்ந்த வரவேற்பு வளைவு இடிக்கப்பட்டது.

தென்காசி வட்டார பொதுமக்களின் 20 ஆண்டுகால கோரிக்கையான ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிக்கு மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து ஒப்புதல் வழங்கி ரூ.30 கோடி செலவில் தென்காசி-மதுரை சாலையில் மேம்பாலம் அமைக்க அனுமதி அளித்தது. இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக மேம்பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இப்பாலம் அமைக்கும் பணிக்காக கடந்த 1901-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இங்கிலாந்து அரசியாக எலிசபெத் ராணி பதவி ஏற்றதை கொண்டாடும் வகையில் ஆங்கிலேய அரசு தென்காசியின் நுழைவுப் பகுதியில் ஒரு வரவேற்பு வளைவினை அமைத்தது.

நகருக்குள் வரும் பயணிகளை வரவேற்கும் வண்ணம் அமைக்கப்பட்ட இந்த வளைவு, மேம்பால பணிகளுக்கு தடையாக இருந்து வந்ததாகக் கூறப்பட்டது. எனவே, நேற்று இந்த வளைவு நகராட்சி அதிகாரிகள் அனுமதியோடு இராட்சத இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.

ஆங்கிலேயர் ஆண்டதற்கு சான்றாக இருந்த வரவேற்பு வளைவு அகற்றப்பட்டதை பார்த்த பல பேர் வேதனை தெரிவித்தனர். இப்பணி முடிந்தபின் இது போன்று ஒரு வளைவு அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வியாழன், 23 செப்டம்பர், 2010

பணக்கார அமெரிக்கர்கள்: ஆப்பிள் நிறுவன தலைவரை பின்தள்ளிய பேஸ்புக் நிறுவனர்!


போஸ்டன்: மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், போர்ப்ஸ் இதழின் 400 பெரும் பணக்கார அமெரிக்கர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

தொடர்ந்து 17வது ஆண்டாக அவர் இந்த இடத்தை தக்க வைத்து வருவது குறிப்பிடத்தக்கது. கேட்ஸின் சொத்து மதிப்பு 54 பில்லியன் டாலர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலதிபர் வாரன் பபட், 45 பில்லியன் டாலருடன் 2வது இடத்தைப் பிடித்துள்ளார். 27 பில்லியன் டாலர் சொத்துக்களை உடைய ஆரக்கிள் நிறுவனத்தின் இணை நிறுவனரும், சிஇஓவுமான லேரி எலிசன் 3வது உலகப் பெரும் பணக்கார அமெரிக்கராக உருவெடுத்துள்ளார்.

இந்த பட்டியலில் பேஸ் புக் நிறுவனர் மார்க் சுகர்பெர்க் 35வது இடத்தைப் பிடித்துள்ளார்.

ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் [^] ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் மீடியா பிரபலம் ஓப்ரா வின்பிரேயை விட சுகர்பெர்க் பெரும் பணக்காரராக இருக்கிறார். ஜாப்ஸ் 42வது இடத்திலும், வின்பிரே 103வது இடத்திலும் உள்ளனர்.

கேப்டனால் டைட்டானிக் விபத்து!


டைட்டானிக் கப்பல் விபத்துக்கு பல காரணங்கள் கூறப்பட்ட நிலையில், தற்போது அக்கப்பல் கேப்டன் முட்டாள்தனமாக கப்பலை செலுத்தியதே விபத்துக்கு காரணம் என்ற புதுத் தகவல் ஒன்று வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதலில் "டைட்டானிக்" என்ற ஹாலிவுட் திரைப்படம் வெளியான பிறகே உலகில் பலருக்கு, டைட்டானிக் என்ற ஒரு ஆடம்பர மற்றும் பிரமாண்டமான கப்பல் தயாரிக்கப்பட்டதும், அந்த கப்பலின் முதல் பயணமே விபத்தில் முடிந்ததும் பற்றிய தகவலே தெரிந்தது.

1912 ல் இங்கிலாந்தின் தென் கடலோரப் பகுதியில் அமைந்திருக்கும் ஹாம்ஷிர் என்ற நாட்டிலுள்ள மிகப்பெரிய நகரான சவுதாம்ப்டனிலிருந்து, அமெரிக்காவின் நியூயார்க்கிற்கு பயணித்த டைட்டானிக் கப்பல், வேகமாக சென்றதாலும், எதிரே பனிப்பாறையை அக்கப்பல் கேப்டன் கவனித்து சுதாரிப்பதற்குள் அதில் மோதியதாலும் உடைந்து மூழ்கியதாகவே இதுநாள் வரை ஆண்டாண்டு காலமாக கூறி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் நிகழ்ந்து ஏறக்குறைய 100 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், விபத்துக்கு அந்த கப்பல் கேப்டன் முட்டாள்தனமாக செலுத்தியதே காரணம் என்று புதுத் தகவலை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளது லண்டனில் வெளியாகி உள்ள " குட் அஸ் கோல்ட்" ( Good as Gold ) என்ற புத்தகம்!

"கப்பல் பனிப்பாறையில் மோதிவிடாமால் தவிர்க்க நிறைய நேர அவகாசம் இருந்தது. ஆனால் கேப்டன் பீதியடைந்து பதற்றத்திலும், அவசரத்திலும் தவறான பாதையில் கப்பலை செலுத்தியதே விபத்துக்கு காரணமாக அமைந்துவிட்டது.

அந்த நேரத்தில் அந்த தவறு நிகழாமல் சரி செய்திருக்கலாம். ஆனால் விபத்தை தவிர்ப்பதற்கு கேப்டன் சுதாரிப்பதற்குள் காலம்கடந்து, பனிப்பாறையில் மோதியதால் அந்த மாபெரும் டைட்டானிக் கப்பலில் ஓட்டை விழுந்து, கடல் தண்ணீர் உள்ளே புகுந்து நடக்கக்கூடாததெல்லாம் நடந்துவிட்டது.

மேலும் பனிப்பாறையில் மோதி கப்பலில் ஓட்டை ஏற்பட்டபோதிலும், கப்பலை தொடர்ந்து செலுத்தாமல், அப்படியே நிறுத்தி வைத்திருந்தால் கூட அதில் பயணித்த பயணிகளையும், கப்பல் சிப்பந்திகளையும் காப்பற்றியிருக்கலாம். ஆனால் கப்பலை நிறுத்துவதற்கு பதிலாக, தொடர்ந்து செலுத்த முயற்சித்ததால், கப்பலின் உடைந்த பகுதி வழியாக கடல் நீர் உள்ளே புகுந்து விட்டதாக" கூறி நமது அதிர்ச்சி டெசிபல்- ஐ கூட்டுகிறது அப்புத்தகம்!

இதுநாள் வரை இப்படி ஒரு தவறு நிகழ்ந்தது தெரிய வராமல் இருந்த நிலையில், அந்த கப்பல் விபத்தில் தப்பி பிழைத்த சார்லஸ் லைட்டாலர் என்ற மூத்த அதிகாரி ஒருவர், தனது குடும்பத்தினரிடம் தெரிவித்த தகவலின் அடிப்படையிலேயே இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது.

சரி... இதனை தனது குடும்பத்தினரிடம் தெரிவித்த சார்லஸ், டைட்டானிக் கப்பல் விபத்து தொடர்பாக நடந்த இரண்டு கட்ட விசாரணைகளில் ஆஜரானபோது ஏன் தெரிவிக்கவில்லை என்று கேட்டால், தனது மற்றும் தனது சக பணியாளர்களின் வேலை பறிபோய்விடுமே என்ற பயம் காரணமாகவே விசாரணைக் குழுவிடம் தெரிவிக்காமல் மறைத்துவிட்டதாக கூறுகின்றார் சார்லஸின் பேத்தியும், மேற்கூறிய புத்தகத்தை எழுதியிருப்பவருமான லூஸி பேட்டன்!

கப்பல் கேப்டன் அந்த முட்டாள்தனத்தை செய்யாமல் இருந்திருந்தால் , பனிப்பாறையில் கப்பல் மோதாமல் எளிதில் தவிர்த்திருக்கலாம்.

இரண்டு மைல் தொலைவில் இருக்கும்போதே பனிப்பாறையை கப்பலின் முதல் நிலை அதிகாரி வில்லியம் முர்டோச் பார்த்துவிட்டார். உடனடியாக அவர் இது குறித்து கப்பலை ஓட்டிக்கொண்டிருந்த ராபர்ட் ஹிட்ச்சின்ஸ்க்கு தகவல் தெரிவித்தார்.

உடனே பதற்றமடைந்த ராபர்ட் கப்பலை இடதுபுறமாக திருப்புவதற்குப் பதிலாக,வலது புறமாக திருப்பினார். உடனே நடந்துவிட்ட தவறை உணர்ந்த வில்லியம், கப்பலை சரியான பாதையில் செலுத்துமாறு அப்போதுகூட எச்சரித்தார். அதனைக் கேட்டு ராபர்ட் சுதாரிப்பதற்குள் கப்பல் பனிப்பாறையில் மோதியேவிட்டது.

கப்பல் உடைந்து உள்ளே தண்ணீர் புக தொடங்கியும் கூட, கப்பலை நிறுத்தாமல் தொடர்ந்து 10 நிமிடங்களுக்கு கப்பலை செலுத்தியுள்ளார் கேப்டன். இதனால்தான் கப்பல் மூழ்கும் நிலை ஏற்பட்டது.

கூடவே டைட்டானிக் கப்பலின் உரிமையாளர் புரூஸ் இஸ்மேவும், தனது கப்பல் கம்பெனியின் பெயர் கெட்டுவிடுமே... லட்சக்கணக்கான டாலர்களை கொட்டி உருவாக்கிய தனது கப்பல் முதலீடு போய்விடுமே என்று பயந்து, கப்பலை தொடர்ந்து ஓட்டிச் செல்லுமாறு கேப்டனுக்கு உத்தரவிட்டுள்ளார்.கப்பல் மூழ்கியதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.

" கப்பலை தொடர்ந்து செலுத்தாமல் அப்படியே நிறுத்தியிருந்தால், கப்பல் தொடர்ந்து மிதந்தபடியே நின்றிருக்கும்; நான்கு மணி நேர பயண தொலைவிலேயே வந்து கொண்டிருந்த மற்றொரு கப்பலிலிருந்து உதவி கிடைத்திருக்கும்" என்றும் தனது தாத்தா ஆதங்கப்பட்டதாக அப்புத்தகத்தில் கூறியிருக்கிறார் லூஸி!

செவ்வாய், 21 செப்டம்பர், 2010

32 மாதங்களுக்குப் பிறகு 20000 புள்ளிகளைக் கடந்தது சென்செக்ஸ்!


மும்பை: உலக பொருளாதார மந்த காலகட்டத்துக்குப் பிறகு முதல் முறையாக இந்தியப் பங்குச் சந்தை 20000 புள்ளிகளைத் தாண்டியுள்ளது.

இன்றைய வர்த்தகம் துவங்கிய சில நிமிடங்களில் மும்பை பங்குச் சந்தை 135 புள்ளிகள் உயர்ந்து 20041.52 ஆக நின்றது. அப்போது முதலீட்டாளர்களும் புரோக்கர்களும் மகிழ்ச்சியில் கைதட்டி மகிழந்தனர். மும்பை பங்குச் சந்தை கட்டடத்துக்கு வெளியில் நின்றிருந்த முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் கை குலுக்கிக் கொண்டனர்.

சென்செக்ஸில்அனைத்துத் துறைப் பங்குகளும் இன்று 1.30 சதவீத வளர்ச்சியைக் கண்டன.

நாடு தழுவிய பங்குச் சந்தையான நிப்டியும் இன்று 6000 புள்ளிகளைக் கடந்தது. இன்று மட்டும் 36.40 புள்ளிகள் உயர்வு கண்டது நிப்டி.

32 மாதங்களுக்குப் பிறகு மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள் இந்த உயர்வைக் கண்டுள்ளன.

அதிக‌ம் சம்பாதிக்கும் மனைவிகள் கொடுக்கும் விலை "டைவோர்ஸ்"!


கணவனைக் காட்டிலும் அதிகம் சம்பாதிக்கும் பெண், அதற்கு விலையாக கொடுப்பது தனது திருமண வாழ்க்கையை என்று கூறி திடுக்கிட வைக்கிறது சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று!

பொதுவாகவே கணவன் குடும்பத்தை விட அதிக செல்வ செழிப்புக் கொண்ட குடும்பத்திலிருந்து வரும் பெண்கள் அல்லது கணவனைக் காட்டிலும் அதிக சம்பாத்தியத்தியம் கொண்ட பெண்கள் இயல்பிலேயே சற்று கர்வம் கொண்டவர்களாக இருப்பர்.(இதில் விதி விலக்குகளும் உண்டு.)

சம நிலையில் உள்ள அல்லது கணவன் மட்டுமே சம்பாதிக்கும் தம்பதியர்களே முட்டிமோதிக்கொள்ளும் இன்றைய சமூக சூழலில், மேற்கூறிய கர்வம் கொண்ட பெண்கள் மனைவியாக இருக்கும்போது பிரச்சனைகள் வெடித்துக் கிளம்ப கேட்கவா வேண்டும்?

அதே சமயம் வேலைக்கே செல்லாத கணவனைக் கட்டி அழுதுகொண்டு அல்லது கணவனைக் காட்டிலும் அதிக சம்பாத்தியம் ஈட்டியும், அனைத்தையும் கணவனிடமும் அல்லது கணவன் குடும்பத்தினராலும் பறிகொடுத்து தினமும் அவஸ்தையில் தவித்துக்கொண்டிருக்கும் ரக பெண்களும் உண்டு!

இந்நிலையில், கணவனைக் காட்டிலும் அதிகம் சம்பாதிக்கும் பெண்,எவ்வித கர்வமோ அல்லது பெருமையோ கொள்ளாமல் இயல்பாகவே இருந்தாலும், மனைவியைவிட குறைவாக சம்பாதிக்கிறோமே என்ற தாழ்வு மனப்பான்மையில் உழலும் கணவன்கள், அந்த தாழ்வு மனப்பான்மையை மறைப்பதற்காக மனைவியை தனது கட்டுப்பாட்டில் வைக்கிறோம் பேர்வழி என்று அதட்டி, மிரட்டி சமயங்களில் அடித்தும் அடாவடியில் ஈடுபடுவதையும் இன்றைய சமூகம் ஒவ்வொரு வீதிகளிலும் கண்டுகொண்டுதான் உள்ளது.

மொத்தத்தில் இத்தகைய பிரச்சனைகளை சந்திக்கும் பெண்கள், விவாகரத்து கோரி நீதிமன்ற கதவுகள் தட்டுவது அதிகரித்து வருகிறதாம்.

இத்தகைய பிரச்சனைகள் நம் நாட்டில் மட்டும்தானா என்றால், உதட்டை பிதுக்கும் சமூக ஆர்வலர்கள், உலகம் முழுவதுமே இத்தகைய பிரச்சனைகள் காணப்படுவதாக கூறி, உதாரணத்திற்கு சமீபத்தில் அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கைகளை தூக்கி போடுகின்றனர்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 16 வயதுப் பெண் அமெரிக்க டீன் அழகியாக தேர்வு!


லண்டன்: அனிஷா பனீசர் என்ற 16 வயது இந்திய வம்சாவளிப் பெண், அமெரிக்காவின் பர்பக்ட் டீன் என்ற அழகிப் பட்டத்தை வென்றுள்ளார். ஆனால் அவர் இங்கிலாந்து பிரஜை என்பதால் இந்தப் பட்டத்தை அவருக்குத் தரக் கூடாது என்று தோல்வி அடைந்த அழகிகளின் பெற்றோர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

அனிஷா தனது குடும்பத்தினருடன் இங்கிலாந்தின் கிளாமர்கானில் உள்ள லங்கான் என்ற இடத்தில் வசித்து வருகிறார். கார்டிப்பில் உள்ள ஹோவல்ஸ் பள்ளியில் படித்து வருகிறார்.

இந்த நிலையில் விடுமுறைக்காக அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள தனது விடுமுறை கால வீட்டுக்கு அவர் குடும்பத்தினருடன் வந்திருந்தார். வந்த இடத்தில் டீன் ஏஜ் அழகிகளுக்கான பர்பக்ட் டீன் அழகிப் போட்டி குறித்து கேள்விப்பட்டு அதில் கலந்து கொண்டார்.

இதில், அமெரிக்காவில் பிரபலமான பல்வேறு டீன் ஏஜ் அழகிகள் 30 பேர் கலந்து கொண்டனர். ஆனால் அத்தனை பேரையும் தனது அசத்தல் அழகு மற்றும் அறிவால் தோற்கடித்து விட்டார் அனிஷா.

இதையடுத்து அவருக்கு 2000 டாலர் பரிசுத் தொகை கிடைத்தது.

ஆனால் அனிஷாவுக்கு பட்டத்தைக் கொடுத்ததற்கு தோல்வி அடைந்த அழகிகளும், அவர்களது பெற்றோர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இங்கிலாந்தைச் சேர்ந்தவருக்கு எப்படி அமெரிக்க அழகிப் போட்டி பரிசைத் தரலாம் என்று அவர்கள் முறையிட்டனர்.

ஆனால் இதை நிராகரித்துள்ளார் அனிஷா. இதெல்லாம் பொறாமையால் வரும் வார்த்தைகள். அவர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை என்பதற்காக வெற்றி பெற்ற என்னை வி்மர்சிப்பது தவறு என்றார் படு கூலாக.

அனிஷாவுக்கு அமெரிக்காவில் உள்ள ஒரு ஒலிபரப்பு நிறுவனத்தில் பயிற்சி பெறவும் இந்தப் போட்டி மூலம் 18,000 டாலர் ஸ்காலர்ஷிப் தொகையும் கிடைத்தது. மேலும் தனியாகவும் ஒரு டிவி நிகழ்ச்சியை அவர் நடத்தத் திட்டமிட்டுள்ளாராம்.

வெள்ளி, 17 செப்டம்பர், 2010

திருட்டுப் பள்ளிகளும் திருந்தாத பெற்றோர்களும்!


சென்னை அண்ணா நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளி அது. கல்விக் கட்டணம் வழக்கம் போல எக்கச்சக்கம். அட்மிஷன் கிடைப்பது குதிரைக் கொம்பு. எம்பி, அமைச்சர், பெருந்தொழிலதிபர் சிபாரிசெல்லாம் இருந்து, பெருந்தொகையும் செலுத்தினால் அட்மிஷன் கிடைக்கும்.

கல்வி என்ற பெயரில் பகிரங்கமாகக் கொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகளின் கட்டணத்தை முறைப்படுத்த நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டியை அமைத்து தமிழக அரசு புதிய கல்விக் கட்டணங்களை அறிவித்தது.

அவ்வளவுதான்… இந்தப் பள்ளி நிர்வாகம் பேயாட்டம் போட ஆரம்பித்தது. இத்தனை நாள் வருடத்துக்கு ஒரு முறை குறிப்பிட்ட பெருந்தொகையைப் பெற்றுக் கொள்வார்கள். மாதாமாதம் வழக்கம் போல கல்விக் கட்டணம் செலுத்த வேண்டும்.

ஆனால் நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி பரிந்துரைத்த கட்டணத்தை தமிழக அரசு அரசு ஆணையாக வெளியிட்ட பிறகு, பெற்றோர்களை அழைத்தது அப்பள்ளி. கட்டணத்தை இருமடங்கு உயர்த்தியிருப்பதாகவும், இது விஷயமாக யாருக்காவது ஆட்சேபணை இருந்தால் அவர்கள் பிள்ளைகளை திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறிவிட்டது.

வாயை பலமாக பொத்திக் கொண்ட பெற்றோர், அப்போதே பள்ளி நிர்வாகம் கேட்ட தொகைக்கு செக்கை கிழித்துக் கொடுத்துவிட்டுத் திரும்பினர். இத்தனை காலமும் வருடத்துக்கு ஒரு முறை பெருந்தொகையை கட்டணமாகப் பெற்ற நிர்வாகம், இப்போது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அதே அளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூற, அதற்கும் மறுபேச்சின்றி கட்டிவிட்டு வந்தனர் பெற்றோர்.

தமிழகம் முழுக்க உள்ள தனியார் பள்ளிகளில் இன்று 60 சதவீதப் பள்ளிகளில் இதுதான் நிலைமை. சென்னையை விடுங்கள்.,.. சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களில் அந்த விகாஸ், இந்த விகாஸ் என்ற பெயரில் பள்ளிக் கடை திறந்து கல்வி வியாபாரம் செய்யும் பெருமுதலைகள் வாங்கும் கல்விக் கட்டணம் பல லட்சங்களைத் தாண்டுகிறது.

6-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனுக்கு 3 லட்சம் ஆண்டுக் கட்டணமும், ரூ 60 ஆயிரம் மதிப்புக்கு சீருடை, புத்தகம் மற்றும் நோட்டுகள் வாங்க வேண்டும் என்றும் கரூரைச் சேர்ந்த ஒரு பள்ளி நிர்வாகம் கடிதம் அனுப்பியிருந்ததை என்னவென்பது!

தனியார் பள்ளிகளுக்கு நாம் முன் வைப்பது ஒரேயொரு கருத்தைத்தான்… குறைந்த செலவில் கல்வி வசதியை அளிக்க துப்பில்லாத நீங்கள் எதற்காக கல்வி நிறுவனங்களை அறக்கட்டளைகளின் பெயர்களில் நடத்த வேண்டும்? ஏதோ ஒரு மன்னார் அண்ட் கம்பெனி என்று போர்டு மாட்டிக் கொண்டு வியாபாரத்தை தொடரலாமே… அரசுக்கு நியாயமாக செலுத்த வேண்டிய வரிகள் உள்ளிட்டவற்றைச் செலுத்தலாமே… எதற்கு சலுகைகள் கோருகிறீர்கள்?

கல்வியை சேவையாக செய்ய வக்கில்லாத நீங்கள், எதற்காக அரசின் அனைத்து சலுகைகளையும் அனுபவிக்க வேண்டும்? கல்வி என்பது அரசு மற்றும் தனியார் இணைந்து பணியாற்றவேண்டிய துறை. இதில் வியாபார நோக்கம் இருக்கக் கூடாது என்கிறது இந்திய அரசியல் சாசன சட்டம். இதற்கு முரணாக, பெரும் பணத்தைக் கறப்பதிலேயே குறியாக இருக்கும் உங்களுக்கு கல்வித் துறையில் என்ன வேலை?

அரசுகள் மக்கள் நலன் கருதி கொண்டு வரும் முக்கிய திருத்தங்களைக் கூட நிறைவேற்ற சிணுங்கும் தனியார் பள்ளிகளை இழுத்து மூடுவதுதான் இன்று நாட்டின் தலையாய பணி. பல தலைமுறைகள் காப்பாற்றப்பட இது வழி வகுக்கும்.

அடுத்த குற்றவாளிகள் பெற்றோர்கள்…

அவர்கள் என்ன செய்வார்கள் பாவம்? என்று மட்டும் யாரும் கேட்டுவிடாதீர்கள்.

அதிக பணம் கேட்கும் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்த்தால்தான் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவார்கள் என்ற கருத்து கிட்டத்தட்ட ஒரு மூட நம்பிக்கையாகவே மாறி வருகிறது.

இதை நன்கு புரிந்து வைத்துள்ள தனியார் பள்ளிகள், முடிந்த வரை பணம் கறப்பதிலேயே குறியாக உள்ளன.

தங்களை யாரும் கட்டுப்படுத்தக் கூடாது என்ற திமிர்த்தனத்தில், மாணவர் – பெற்றோர் நலன் கருதி அரசு பிறப்பிக்கும் சட்டங்களுக்கே சவால் விடுகின்றன இந்தப் பள்ளிகள். மக்களிடம் கொள்ளை பணம் பிடுங்க வேண்டும். அதே நேரம் மக்கள் வரிப்பணத்தில் அரசு தரும் அத்தனை சலுகைகளையும் கல்வி சேவை என்ற பெயரில் அனுபவிக்கவும் வேண்டும். இதுதான் தனியார் பள்ளிகளின் அல்டிமேட் நோக்கம்.

இதற்கு தெரிந்தே துணை போகிறார்கள் பெற்றோர்கள். கொள்ளைக்காரனுக்கு எதிரே பணப்பெட்டியைத் திறந்து வைத்து, ‘வா வா வந்து எடுத்துக்கோ…’ என்று கூவாத குறைதான் இவர்கள் மனநிலை. இது புரிந்திருப்பதால்தான் நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டியின் புதிய கல்விக் கட்டண அமலாக்கத்துக்கு தடை வாங்கும் அளவுக்கு போயிருக்கிறார்கள் பள்ளி உரிமையாளர்கள்.

நியாயமாக, திருடனை விட, தெரிந்தே அவனுக்கு தி்ருட்டுக் கொடுக்கும் அடி முட்டாளைத்தான் அதிகம் தண்டிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

இந்த சூழ்நிலையிலாவது அரசுப் பள்ளிகளின் பக்கம் பெற்றோர் கவனம் திரும்புமா? தனியார் பள்ளிகளை முற்றாக ஒதுக்கித் தள்ளும் முடிவுக்கு மக்கள் வருவார்களா? என்று சிலர் கேட்கிறார்கள்.

ம்ஹூம்… எனக்கு நம்பிக்கை இல்லை. இந்த ஆட்டு மந்தை திருந்தி சிந்தனைப் பாதைக்குத் திரும்பும் என்ற நம்பிக்கை அறவே இல்லை!

என்னைப் பொறுத்தவரை, கல்வித் துறையின் நோய்கள் இந்த கல்வி வியாபாரிகள் மட்டுமல்ல, கண்மூடித்தனமான பெற்றோர்களும்தான்!

3 ஆண்டுகளில் அமெரிக்காவில் 2.5 லட்சம் வேலைகளை உருவாக்கிய இந்திய ஐ.டி. நிறுவனங்கள்!


டெல்லி: இந்திய சாப்ட்வேர் நிறுவனங்களால் கடந்த 3 ஆண்டுகளில் அமெரிக்காவில் 2.5 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன.

சென்ற ஆகஸ்டு மாதத்தில் மட்டும் 7,000 அமெரி்க்கர்களுக்கு வேலை கிடைத்துள்ளது. இந்த தகவலை மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்தார்.

டி.சி.எஸ், இன்போசிஸ் உள்ளிட்ட முன்னணி ஐ.டி. நிறுவனங்கள் உள்நாட்டில் மட்டுமல்லாமல் அமெரிக்காவிலும் வலுவாக காலூன்றி அந்நாட்டிம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன.

இந்த நிறுவனங்கள் அமெரிக்காவில் கடந்த மூன்று ஆண்டுகளில் 2.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை அளித்துள்ளன.

இந்நிலையில் அமெரிக்க அரசு, இந்திய ஐ.டி. நிறுவனங்களுக்கு அதிக சுமையை ஏற்படுத்தும் வகையில், எச்-1பி உள்ளிட்ட விசாக்களுக்கான கட்டணத்தை கணிசமாக உயர்த்தியுள்ளது.

இது குறித்து ஆனந்த் சர்மா கூறுகையில், பொருளாதார மந்தநிலையின்போது, உள்நாட்டில் வேலைவாய்ப்பு குறைவதை தடுப்பது எந்த நாடும் எடுக்கும் இயல்பான நடவடிக்கை தான். அதே நேரத்தில் பிற நாட்டு நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயல்படுவது, எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும் என்றார்.

கல்வி முறையில் மாற்றம் தேவை - த‌ந்தை பெ‌ரியா‌ர்!


பகு‌த்த‌றிவு‌ப் பகலவ‌ன் த‌ந்தை‌ப் பெ‌ரியா‌‌ரி‌ன் 132வது ‌பி‌ற‌ந்த நா‌ள் ‌பிற‌ந்தநா‌ள் இ‌ன்று.

இ‌ந்நா‌ளி‌ல், க‌ல்‌வி முறை கு‌றி‌த்து 1954 ஆ‌ம் ஆ‌ண்டு நவ‌ம்ப‌ர் 7ஆ‌ம் தே‌தி ‌திரு‌ச்‌சி‌யி‌ல் பெ‌‌ரியா‌ர் ஆ‌ற்‌றிய உரையை ‌‌நினைவு கூ‌ர்வோ‌ம் :

FILE
நம் நாட்டு மாணவர்கள் கல்விப் படிப்பினால் எந்தவிதமான பகுத்தறிவையும் எதையும் ஆராய்ந்து அறியும்படியான தன்மையையும் அடைய முடிவதில்லை. அவர்கள் படிக்கின்ற படிப்பினால் பிற்கால வாழ்க்கையைத் தரித்திரமின்றி நடத்த வேண்டும். அதற்காக, ஏதாவது உத்தியோகத் துறையிலோ, வேறு பணம் சம்பாதிக்கின்ற வழியிலோ பயன்பட வேண்டும் என்பதற்காகவே படிக்கிறார்கள். பெற்றோர்களும் தங்களுடைய குழந்தைக்கு அறிவு வளர வேண்டும் என்ற காரணத்திற்காகப் பள்ளிக்கு அனுப்புவதில்லை; படித்துப் பட்டம் பெற்று வந்ததும் ஜீவனத்துக்கு வேண்டிய முறையில் எங்காவது உத்தியோகம் கிடைக்குமா என்ற நோக்கத்தோடேயே பெற்றோர்கள் முயற்சிக்கிறார்கள்.

ஆகையால், அவர்கள் பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் கூறுகின்ற ஒவ்வொன்றையும் அப்படியே மனப்பாடம் செய்து, அதையே பிறகு அவர்கள் கேட்கும்பொழுது சொல்லுவதாலும், எழுதுவதாலும் தேர்வில் வெற்றி பெறுகிறார்கள். இந்த முறையில் ஒரு மாணவன் எவ்வித உயர்ந்த பட்டத்தை அடைந்த படிப்பாளி என்று கூறப்பட்டாலும், அவனுக்குப் போதிய பொது அறிவும், உலகியலில் தகுந்த ஞானமும் அடைந்தவனாகக் கருதப்பட மாட்டான். ஆசிரியர் சொல்லுவதைத்தான் கேட்க வேண்டும்; புத்தகத்திலுள்ளதைத்தான் மனப்பாடம் செய்து திரும்பவும் ஒப்புவிக்க வேண்டும் என்பது, நம் நாட்டுக் கல்வி முறை. இக்கல்வி முறையினால் மாணவர்களுக்கு அறிவு புகட்டப்படுவதால் அவர்கள் பிற்காலப் பழக்க வழக்கங்களுக்கும், நல்லொழுக்கத்திற்கும் தகுதியுடையவர்களம்க ஆகமாட்டார்கள்.

ஆனால், பலர் பலவிதமாக அறிவு, ஞானம் என்பதைக் கருதுகிறார்கள். பெரும்பாலோர் ஞானம் என்பதும், அறிவு என்பதும் கடவுளைக் காண்கிறதும், மோட்சத்தை அடைவதும்தான் என்று நினைக்கிறார்கள். இந்த எண்ணம் குழந்தையிலிருந்தே நம் பிள்ளைகளுக்கு ஊட்டப்பட்டு வருவதால், மேன்மேலும் ஒரு மாணவன் தெளிவற்றவனாகவே ஆக்கப்படுகிறான். பொதுவாகவே மாணவன் அதற்கு இடம் கொடுக்காமல் தன்னை இன்னான் என்றுணர்ந்து "நம் பருவம் எதையும் அறிந்து கொள்ளுகின்றதும், தெரியாதவைகளைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுகிறதுமான மாணவப் பருவம்' என்பதை உணர வேண்டும். இவ்வித எண்ணமுள்ள மாணவன்தான் பிற்காலத்தில் எதையும் அறிந்த அறிவாளியாக விளங்க முடியும்.

மேல்நாட்டு மாணவர்கள் எல்லோரும் இவ்வித எண்ணம் கொண்டவர்களாக இருப்பதாலும், அவர்களுக்கு இந்தப்படியே பயிற்சி அளிப்பதாலும்தான் அவர்கள் எதையும் ஆராயும் தன்மையுள்ளவர்களாகவும், மென்மேலும் ஒவ்வொன்றையும் எடுத்துக் கொண்டு இது ஏன்? எப்படி? எதற்காக? இதனால் என்ன செய்ய முடியும்? என்று இப்படிப் பலவிதமான கேள்விகளுக்குப் பதில் தெரிந்து கொண்டே பார்த்ததால் இன்றைக்கு அவர்கள் அறிவாளிகளாகவும், விஞ்ஞானிகளாகவும் விளங்குகிறார்கள். மற்றும் பல பொது விஷயங்களிலும் நம் நாட்டு மக்களைப் போல் இல்லாது, எவ்விடத்திலும் பிறருடன் நன்முறையில் பழகுகிறார்கள்.

ஆனால், நம் நாட்டு மாணவர்களுக்குப் பொது அறிவைப் புகட்டுவதற்கு வேண்டிய சாதனங்கள் ஒன்றும் இல்லாததாலும், நம் நாட்டுக் கல்வி முறையில் இவை கற்பிக்கப்படாததாலும் அவர்கள் வயதுவந்தவர்களானதும் பொது இடங்களிலும், உலகத்தோடும் நன்முறையில் பழகுவது கிடையாது. புகைவண்டி நிலையம் சென்றால், எவன் ஒருவன் முதலில் டிக்கட் வாங்குகிறானோ, அவன்தான் சமர்த்தன் என்று புகழப்படுகிறான். புதிய சினிமா இன்றுதான் முதலில் வெளியிடப்படுகிறது என்றால் அன்றைக்கு படத்திற்கு முதல் டிக்கட் வாங்குகிறவன் அதிபராக்கிரம புத்திசாலி என்று போற்றப்படுகிறான். ஏதாவது ஒரு உண்மையை மறைக்க ஆயிரம் பொய்களைக் கூறித் தப்பித்துக் கொண்டால் அவன் அறிவிற் சிறந்தவன்; அவன் கூறியது பொய்யானாலும் தன் புத்தியின் யூகத்தால், வெகு சாமர்த்தியமாகத் தப்பித்துக் கொண்டான் என்றுதான் கூறுவர்.

நன்னடத்தை என்பது என்னவென்று பார்த்தால் ஒரு மனிதனிடம் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்களோ, நீங்கள் மகிழ்ச்சியடையவும், திருப்தியடையவும் அவன் என்ன செய்யவேண்டுமோ, அதே முறையில் நீங்களும் பிறரிடம் பழகும்போது அவர்களுக்கு மகிழ்ச்சியையும், திருப்தியையும் உண்டாக்கும்படியான வழியில் நடந்து கொள்வதாகும். உங்களிடம் ஒருவர் நடந்து கொள்வதிலிருந்து உங்களுக்குக் கஷ்டத்தையும், மனக்கலக்கத்தையும் அதிருப்தியையும் உண்டாக்குகிற முறைகள் எவை எவையென்று தோன்றுகிறதோ, அவையவைகளை விட்டுவிட வேண்டும். இது ஒரு சுலபமான கருத்து. இதை யாவரும் கைக்கொள்ளுவதால் நல்லறிவும், பொது அறிவும் அடைந்தவர்களாகலாம்.

வெ‌ளி‌‌யீடு : விடுதலை 12.11.1954

புதன், 15 செப்டம்பர், 2010

மணமகளை ரூ.30,000க்கு ஏலத்தில் எடுத்த மணமகன்: நரிக்குறவர்களின் வினோத திருமணம்!

ஆம்பூர்: நரிக்குறவ இனத்தைச் சேர்ந்த இளைஞர் தான் விரும்பிய பெண்ணை, ரூ. 30,000க்கு ஏலத்தில் எடுத்துள்ளார். இவர்களுக்கு இன்று திருமணம் [^] நடைபெறுகிறது.

நரிக்குறவர் சமூகத்தினர் ஆம்பூரை அடுத்த சோளூரில் முகாமிட்டுள்ளனர். இங்கு வசிக்கும் டாலர்மணி என்பவரது மகள் ரூபினி (14). இவர் தன் குலத் தொழிலான பாசிமணியை விற்பவர்.

பள்ளிகொண்டா சந்தையில் பாசிமணி விற்றுக் கொண்டிருக்கையில் அங்கு தன்னைப் போன்று பாசிமணி விற்ற நரிக்குறவர் வந்தராஜா என்பவரின் மகன் திருமலையின்(15) மேல் காதல் [^] வயப்பட்டார் ரூபினி.

இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டனர். இனம் ஒன்றாக இருந்ததால் தடை ஏற்படவில்லை. ரூபினியை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு திருமலை டாலர்மணியிடம் முறைப்படி பெண் கேட்டார். அவரும் இவர்கள் காதலுக்கு பச்சைக் கொடி காட்டிவிட்டார்.

இனி என்ன திருமணம் தான் என்று நினைத்தால் அது தவறு. ஏனென்றால், நரிக்குறவர் இனத்தில் திருமணம் முடிக்க வேண்டுமென்றால் மணமகன் தான் விரும்பும் பெண்ணை ஏலத்தில் எடுக்க வேண்டும். திருமலை தன் காதலியை ரூ. 30,000 கொடுத்து ஏலத்தில் எடுத்தார்.

இதையடுத்து இவர்களின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி உற்றார் உறவினர் புடைசூழ நடந்தது. இன்று இவர்கள் திருமண பந்தத்தில் இணையவிருக்கின்றனர். மாப்பிள்ளை தாலி கட்டினால் மட்டும் போதாது. திருமண வைபவத்திற்கு வரும் அனைத்து பந்துக்களுக்கும் வயிறார விருந்து, மதுபானம், ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 100 கொடுக்க வேண்டுமாம்.

டைட்டானிக் கப்பலில் பயணம் செய்த கடைசி நபரும் மரணம்!


லண்டன்: டைட்டானிக் கப்பலில் பயணம் செய்தவர்களில் உயிருடன் இருந்த கடைசி பயணியான மில்வினா டீன் என்ற பெண் இங்கிலாந்தில் தனது 97வது வயதில் மரணமடைந்தார்.

கடந்த 1912ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி அமெரிக்காவில் இருந்து இங்கிலாந்து [^] சென்று கொண்டிருந்த டைட்டானிக் என்ற சொகுசு கப்பல் பனிபாறையில் மோதி அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கியது.

இந்த விபத்தில் 1,517 பேர் மரணமடைந்தனர். 706 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். அவர்களில் ஒருவர் தான் மில்வினா டீன் என்ற பெண்மணி. அந்த கப்பலில் மில்வினா டீன் தனது தந்தை பெர்ட்ராம், தாயார் ஜார்கட்டா மற்றும் அண்ணன் பெர்ட் ஆகியோருடன் வந்திருந்தார்.

விபத்தில் அவரது தந்தை மரணமடைந்துவிட்டார். அப்போது இரண்டு மாத கை குழந்தையாக இருந்த மில்வினா டீன், அவரது தாயார் மற்றும் சகோதரர்கள் உயிர் பிழைத்தனர்.

இந்த விபத்து [^] டைட்டானிக் என்ற பெயரில் ஆங்கில படமாக எடுக்கப்பட்டு, ஆஸ்கர் விருதுகளை அள்ளி சென்றது. உலகம் முழுவதும் கோடி கணக்கில் வசூலை அள்ளி குவித்தது.

தற்போது விபத்து நடந்து கிட்டதட்ட நூறு ஆண்டுகளை நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் இந்த விபத்தில் உயிர் பிழைத்தவர்களில் மில்வினாவை தவிர்த்து மற்ற அனைவரும் ஏற்கனவே இறந்துவிட்டனர்.

திருமண பந்தத்தில் இணையாமல் தனிமையில் வாழ்ந்து வந்த மில்வினா கடைசி காலத்தில் வறுமையில் வாடினார். இதையடுத்து இவர் தனது வீட்டு பொருட்களை ஏலத்துக்கு விட்டு வாழ்க்கை நடத்த வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்.

இதை கேள்விப்பட்ட டைட்டானிக் திரைப்பட நாயகன் டீ கேப்ரியோ, நாயகி கேட் வின்ஸ்லெட் மற்றும் இயக்குனர் [^] ஜேம்ஸ் காம்ரூன் ஆகியோருக்கு அவருக்கு ரூ. 17 லட்சம் உதவி செய்தனர். மேலும் அவர் வறுமை காரணமாக ஏலத்தில் விட்ட அவரது பொருட்கள் அனைத்தும் அவரிடமே மீண்டும் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் 97 வயதான மில்வினா நேற்று முன்தினம் வயது முதிர்வு மற்றும் நிமோனியா காய்ச்சல் காரணமாக இங்கிலாந்து மருத்துவமனையில் மரணமடைந்தார். இது குறித்து சர்வதேச டைட்டானிக் சமுதாயம் என்ற அமைப்பின் தலைவர் [^] சார்ஸல் ஹாஸ் கூறுகையில், மில்வினா நகைச்சுவையான பெண்மணி. அன்பானவர் என்றார்.

உலகப் பணக்காரர்களில் எமிரேட்ஸ் வெளிநாட்டவர்கள்: 25 நாடுகளில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் முடிவு!


துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவராக உள்னர் என்று கணக்கொடுப்பு ஒன்று தெரிவித்துள்ளது. அங்குள்ள வெளிநாட்டவர்கள் வரி இன்றி, சொகுசான வாழ்க்கை வாழ்கின்றனர்.

உலகின் மிகப் பெரிய வெளிநாட்டுப் பணக்காரர்கள் நிறைந்த நாடு குறித்த ஒரு கணக்கெடுப்பை ஹெச்.எஸ்.பி.சி. நடத்தியது. அதில் ரஷ்யா முதலிடத்தைப் பிடித்துள்ளது. 2வது இடம் பஹ்ரைனுக்கும், 3வது இடம் சவூதி அரேபியாவுக்கும் கிடைத்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நான்காவது இடம் கிடைத்துள்ளது.

கடந்த முறை ஐந்தாவது இடத்தில் இருந்து வந்த எமிரேட்ஸ், ஒரு படி முன்னுக்கு வந்து நான்காம் இடத்தைப் பிடித்துள்ளது.

இதில் வருவாய், செலவு, சேமிப்பு, முதலீடு, பொருளாதாரத்தின் தாக்கம் ஆகியவற்றை 25 நாடுகளில் வசிக்கும் வெளிநாட்டவர்களுடன் ஒப்பிட்டப்பட்டது.

அந்த அடிப்படையில், சொகுசாக வாழ உகந்த நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகம் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

உலகின் பிற பகுதிகளில் வாழும் வெழிநாட்டவர்களை விட இங்கு வாழ்பவர்கள் அதிகமான கார்களை வைத்துள்ளனர். இங்கு வசிப்பவர்கள் விடுமுறைகள், நிறைய சொத்து, வீட்டு வேலைக்கு ஆள் என சுகபோகமாக வாழ்கின்றனர். வரி இல்லாதது தான் இவர்களுக்கு கிடைத்துள்ள மிகப் பெரிய ஊக்கமாக உள்ளது என்று அந்த கணக்கெடுப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த நாட்டைச் சேர்ந்தவர்களை விட 94 சதவிகித வெளிநாட்டவர்கள் குறைந்த வரியைத் தான் செலுத்தியுள்ளனர்.

வருவாயை மதிப்பீடு செய்ததில் வெளிநாட்டவர்கள் தாங்கள் சார்ந்த நாட்டை விட அதிக அளவில் வரி செலுத்த வேண்டியிருந்தது. அதிகமாக சம்பாதிப்பது மட்டுமின்றி நிறைய சேமிக்கவும் செய்கின்றனர் என்று தெரிய வந்துள்ளது. கணக்கெடுப்பில் பங்குபெற்றவர்களில் 79 சதவிகிதத்தினர் தாங்கள் வெளிநாட்டவர்கள் ஆன பிறகே அதிகம் சேமித்ததாகக் கூறுகின்றனர்.

வருகிறது 'நானோ டீலக்ஸ்'!


டாடா நிறுவனம் தயாரித்துள்ள உலகின் மிகக்குறைந்த விலைக் காரான நானோ, அடுத்து 'டீலக்ஸ்' நானோ எனும் பெயரில் 2012ம் ஆண்டில் வெளியாகிறது.

இதுதொடர்பாக, டாடா மோட்டார்ஸ் நிறுவன உயர் அதிகாரி டிலாங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஐரோப்பிய சந்தையில் 'நானோ ஐரோப்பா' என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கார் [^]தான், இந்தியாவில் 'டீலக்ஸ்' நானோ என்ற பெயரில் அறிமுகமாக உள்ளது.

ஜெனிவாவில், கடந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச கார் கண்காட்சியில், 'நானோ ஐரோப்பா' கார் இடம் பெற்றது. அப்போதே, அந்தக் காருக்கு மக்களிடையே பெரும் வரவேற்பிருந்தது.

3 சிலிண்டர் கொண்ட முழுவதும் அலுமினியத்தாலான எம்பிஎப்ஐ இஞ்ஜின், 5 ஸ்பீட் ஆட்டோமெடிக் டிரான்ஸ்மிசன், பவர் ஸ்டீயரிங், ஏர்பேக்ஸ் உள்ளிட்ட சிறப்பம்சங்களை கொண்ட இந்த 'டீலக்ஸ்' நானோ, சாதாரண நானோவை விட விலை அதிகம். இதுகுறித்து விரைவில் அறிவிக்கப்படும்" என்று கூறியுள்ளார்.

பிளேபாய்களுக்கு ஆயுசு கம்மி!


"நம்மளையெல்லாம் ஃபிகருங்க பார்த்தாலே படிஞ்சிரும் மச்சி!" ன்னு பீலா விட்டு திரியும் பெண் பித்தர்களான பிளேபாய்களுக்குத்தான் இந்த எச்சரிக்கை!

சதா எந்த நேரமும் பெண்கள் பற்றிய நினைப்பும், அவர்களை கவிழ்ப்பது எப்படி? என்பது குறித்து ஏக சிந்தனையில் ஆழ்ந்து போகும் பிளேபாய்களுக்கு ஆயுள் குறைச்சல் என்று தெரியவந்துள்ளதாம்.

பிளேபாய்கள் என்றால் யார்? சுருக்கமாக பெண் பித்தர்கள் என்று சொல்லிவிடலாம்

இதில் பல ரகத்தினர் உள்ளனர். காதில் கடுக்கன், கருப்பா, செம்பட்டையா என்றே யூகிக்க முடியாத அளவுக்கு பிளீச்சிங் என்ற பெயரில் விநோத சாயம் பூசி, கொத்தி குதறியெடுத்த சிகையலங்கராத்துடன், "பெண்களை கவிழ்க்கிறேன்" பேர் வழி, மன்மத உணர்வு பொங்கி வழிய வளைய வருபவர்கள்.

இதுபோன்ற அபத்தங்கள் எதுவுமே இன்றி, கமுக்கமாக செயல்பட்டு பெண்களை கவிழ்க்கும் வகையறாக்கள்.

இதுமாதிரியெல்லாம் இல்லாமல் பணம், வேலை, பதவி ஆசைகாட்டி அல்லது மிரட்டி பெண்களை அடைபவர்கள் ஒருபுறம் என ரக வாரியாக உள்ளனர்.

இவர்கள் எல்லோருக்குமே நோக்கம் ஒன்றே ஒன்றுதான்; அது எவ்வளவு முடியுமோ அவ்வளவு விதவிதமான பெண்களை கட்டிலில் வீழ்த்துவதுதான்! கூடவே பெண்கள் புடை சூழ வளைய வருவதும், தங்களுக்கு பெண் ஃபிரண்ட்ஸ்கள் அதிகம் என்பது போன்ற இமேஜை நண்பர்கள் மத்தியில் வளர்த்துக் கொள்ளவும் இதுபோன்று செயல்படுவார்கள்.

அதே சமயம் அசரடிக்கிற பெர்சனாலிட்டி மற்றும் கொஞ்சமே கொஞ்சம் போக்கிரித்தனத்துடன் பெண்களை தானாகவே வந்து வட்டமடிக்க வைக்கிற பிளேபாய்களும் உண்டு.

ஆனால் பெண்கள் மத்தியில் இவர்களுக்கு பெயர் ஸ்வீட் ராஸ்கலாம்!

இந்த மாதிரியான ஆண்கள் குறித்துதான், ஆஸ்ட்ரேலியாவின் நியூ சவுத் வேலஸ் பல்கலைக் கழகம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டு, மேற்கூறிய "ஆயுசு குறைச்சல்" என்ற அதிர்ச்சி வெடியை கொளுத்தி போட்டுள்ளது!

இத்தகைய பிளேபாய்கள் மற்றும் ஸ்வீட் ராஸ்கல்களிடமெல்லாம் காணப்படும் ஒரு பொதுவான குணம் மனம்போன போக்கில் வாழ்வது!

வாழ்க்கை தொடர்பான எத்தகைய நெறிமுறைகளுக்கும் உட்படாமல், புதுப்புது பெண்களை தேடி கண்டபடி திரியும் இவர்களது இந்த குணம்தான் இவர்களது ஆயுளுக்கும் எமனாக அமைந்துவிடுவதாக கூறுகிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட ஆஸ்ட்ரேலியாவின் பிரபல ஆராய்ச்சியாளர் அலெக்ஸ் ஜோர்டான்!

உலகிலேயே இந்தியாவில்தான் அதிகமாக குழந்தைகள் இறக்கின்றன!


இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக பிறக்கும் 2.6 கோடி குழந்தைகளில், 18.3 இலட்சம் குழந்தைகள் 5 வயதை எட்டுவதற்கு முன்னரே இறந்துபோகின்றன என்று ‘குழுந்தைகளைக் காப்போம’ என்கிற பன்னாட்டு அமைப்பு நடத்திய ஆய்வி்ல் தெரியவந்துள்ளது.

இந்தியாவின் பொருளாதாரம் சிறக்கிறது, பறக்கிறது என்று புள்ளி விவரங்களை வைத்து மத்திய, மாநில அரசுகள் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிற நிலையில், ‘வாழ்வதற்கான ஒரு நியாயமான வாய்ப்பு’ (A fair chance to Life) என்ற பெயரில் உலகளாவிய அளவில் குழந்தைகள் நலன் குறித்த அந்த ஆய்வு, இந்தியாவில் பிறக்கும் 48 விழுக்காடு குழந்தைகள் சத்துணைவு அற்ற நிலையில் வளர்வதாகவும், 20 விழுக்காடு குழந்தைகள் மிகவும் சத்தற்ற உணவையே பெறுகின்றன என்றும், பிறக்கும் குழந்தைகளி்ல 22 விழுக்காடு மிகக் குறைந்த எடையுடன் பிறப்பதாகவும் கூறியுள்ளது.

பிறந்த 5 வயதிற்குள் இறக்கும் குழந்தைகளில் பாதிக்கும் மேற்பட்டவை பிறந்த ஒரு மாதத்தில் இறப்பதாக கூறியுள்ள அந்த ஆய்வறிக்கை, சமூகத்தின் கீழ் தட்டில் வாழும் மக்களிடையே பிறக்கும் குழந்தைகளே, மூன்றில் இரண்டு பங்கு 5 வயதிற்குள் இறக்கின்றன என்று கூறியுள்ளது.

ஆயினும் குழந்தை இறப்பு விகிதம் 1990ஆம் ஆண்டு புள்ளி விவரத்துடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைந்துள்ளது என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. 1990இல் ஆயிரத்திற்கு 116 குழந்தைகள் பிறந்த 5 ஆண்டுகளில் இறந்தன, அந்த விகிதம் 200இல் 69 ஆக குறைந்துள்ளது.

2000வது ஆண்டு பிறந்தபோது நிர்ணயிக்கப்பட்ட புத்தாயிரம் மேம்பாட்டு இலக்குகளின் (Millennium Development Goals - MDG) படி, இறப்பு எண்ணிக்கை அடுத்த ஏழு ஆண்டுகளில் (அதாவது 2007ஆம் ஆண்டிற்குள்) அப்போது இருந்ததைவிட 6.28 விழுக்காடு குறைந்திருக்க வேண்டும். ஆனால் இந்த இலக்கில் இந்தியா சாதித்துள்ளது 2.25 விழுக்காடு மட்டுமே!

FILE
இந்தியாவில் 5 வயதிற்குள் இறக்கும் குழந்தைகளில் 90 விழுக்காடு நிமோனியா (கபவாதம் என்றழைக்கப்படும் நுரையீரல் வீங்கும் நோய்), சின்னம்மை, வாந்திபேதி, மலேரியா ஆகியவற்றால் இறக்கின்றன.

இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளின் உடல் நிலை, ஆப்ரிக்காவில் உள்ள மிக வறுமையான நாடுகளில் உள்ள குழந்தைகளின் நிலையை ஒத்துள்ளது என்று கூறியுள்ள அந்த அறிக்கை, எதியோப்பியாவில் உள்ள குழந்தைகளின் நிலையை விட மூன்று மடங்கு அதிகமாக இந்தியாவில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் குடும்பங்களில் குழந்தைகளின் நிலை உள்ளதென அந்த அறிக்கை கூறுகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக, நாடுகள் வரிசையில் பிறந்த குழந்தைகள் 5 வயதிற்குள் சாகும் எண்ணிக்கை அதிகம் உள்ள நாடு உலகிலேயே இந்தியாவில்தான் என்று கூறியுள்ளது அந்த அறிக்கை.
ஐ.நா.வின் புத்தாயிரம் மேம்பாட்டு இலக்குகள்:

1. வறுமையையும் பசிப்பிணியையும் ஒழிப்பது

2. அனைவருக்கும் ஆரம்ப கல்வியை முழுமையாக அளிப்பது

3. ஆண் பெண் சமத்துவத்தை ஏற்படுத்துவது, பெண்களை அதிகாரமயப்படுத்துவது

4. குழந்தைகள் இறப்பைத் தடுப்பது

5. மன நலத்தை அதிகரிப்பது

6. ஹெச்ஐவி, எய்ட்ஸ் உள்ளிட்ட கொடும் நோய்களை தடுப்பது

7. வளங்குன்றா சுற்றுச் சூழலை உருவாக்குவது

8. பரந்த மேம்பாட்டிற்கான உலகளாவிய கூட்டாணைமையை ஏற்படுத்துவது.

இந்த இலக்குகளில் எந்த அளவிற்கு இந்தப் பத்து ஆண்டுகளில் சாதிக்கப்பட்டுள்ளது என்பதை ஆராய வரும் 20ஆம் தேதி முதல் 3 நாட்கள் நியூ யார்க் நகரில் மாநாடு கூட்டப்பட்டுள்ளது.

ஐ.நா.வின் இந்த புத்தாயிரம் மேம்பாட்டு இலக்குகளை நிறைவேற்றும் திட்டத்தில் இந்தியா உட்பட 192 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.

வெள்ளி, 10 செப்டம்பர், 2010

விண்கல் நெருங்குது பூமி ‘ஜஸ்ட் எஸ்கேப்’!


வாஷிங்டன்: இரண்டு விண்கற்கள் இன்று பூமியை நெருங்கி வருவதாக நாசா தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’ கூறியிருப்பதாவது: பிரபஞ்சத்தில் ஏராளமான கோள்கள், துணைக் கோள்கள், விண்கற்கள் சுற்றி வருகின்றன. இவற்றில் 2 விண்கற்கள் பூமியை நெருங்கி வருவதை டஸ்கன் நகரில் உள்ள கேடலினா விண்ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது. 2010ஆர்எக்ஸ்30 என்று பெயரிடப்பட்டுள்ள விண்கல் சுமார் 32 முதல் 65 அடி நீளம் இருக்கலாம் என்று தெரிகிறது.

இது பூமியை 2.46 லட்சம் கி.மீ. தூரத்தில் புதன்கிழமை கடக்கும். 2010ஆர்எப்12 என்ற கல் 20 முதல் 46 அடி நீளம் இருக்கும் என்று தெரிகிறது. இது 78 ஆயிரம் கி.மீ. தூரத்தில் கடந்து செல்லும். பிரபஞ்சத்தை பொருத்தவரை இந்த தொலைவு மிகமிக குறைவு. அதனால், ‘நூலிழையில்’ பூமி தப்பியது என்றே கூறலாம். இந்த கற்களால் பூமிக்கு ஆபத்து இல்லை.

கட்டாயப்படுத்தி செக்ஸ் உறவு-பிரிட்னி மீது பாடிகார்ட் வழக்கு!


பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ், தன்னைக் கட்டாயப்படுத்தி செக்ஸ் உறவு வைத்துக் கொண்டார். தொடர்ந்து இவ்வாறு கட்டாயப்படுத்தி உறவு கொண்டார் என்று கூறி வழக்கு தொடர்ந்துள்ளார் ஸ்பியர்ஸின் முன்னாள் பாதுகாவலர் பெர்னாண்டோ ப்ளோர்ஸ்.

ஸ்பியர்ஸிடம் பாடிகார்ட் ஆக இருந்தவர் ப்ளோர்ஸ். இப்போது விலகி விட்டார். இந்த நிலையில், லாஸ் ஏஞ்சலெஸ் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார் ப்ளோர்ஸ்.

அதில், நான் பிரிட்னி ஸ்பியர்ஸிடம் பணியாற்றியபோது என்னைக் கட்டாயப்படுத்தி பலமுறை செக்ஸ் உறவு வைத்துக் கொண்டார். அடிக்கடி இவ்வாறு நடந்து கொணாடார்.

நான் மறுக்கும்போதெல்லாம் தனது அறைக்கு என்னை அழைத்து, முழு உடைகளையும் களைந்து விட்டு நிர்வாணமாக போஸ் கொடுத்து என்னிடம் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வார்.

நான் உடன்பட மறுத்தால், எனக்கு முன்னாலேயே தனது குழந்தைகளை அடிப்பார் பிரிட்னி. அவரால் எனக்கு பெரும் மன உளைச்சல் ஏற்பட்டது. இதையடுத்தே அவரிடமிருந்து விலகினேன் என்று கூறியுள்ளார் ப்ளோர்ஸ்.

இந்த வழக்கு அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தனது வழக்கு சரியானதுதான் என்று நியாயப்படுத்தியுள்ளார் ப்ளோர்ஸ்.

வெள்ளி, 3 செப்டம்பர், 2010

லஞ்சம் வாங்குவதைத் தடுத்த பெண் எஸ்.பி. யைத் தாக்கி 1.5 கிலோமீட்டர் இழுத்துச் சென்ற ஏட்டுகள்!

பரேலி: உ.பி. மாநிலம் பரேலியில், பெண் எஸ்.பி. கல்பனா சக்சேனா என்பவர் தனக்கு கீழ் பணி புரிபவர்களால் தாக்கப்பட்டு, வாகனத்தில் தர தரவென இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போக்குவரத்தை சரிபார்க்கிறோம் என்ற பெயரில் பயணிகளை மிரட்டிப் பணம் வாங்குவதைத் தடுக்க முயன்றதால் அவருக்கு இந்த கோர நிலைமை. கிட்டத்தட்ட ஒன்றரை கிலோமீட்டர் தூரத்திற்கு அவர் வாகனத்தில் இழுத்துச் செல்லப்பட்டார்.

கல்பனா சாக்சேனா தற்போது மருத்துவமனையில் உடைந்த கையுடனும், தலையில் காயத்துடனும் சிகிச்சைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்.

இந்த சம்பம் குறித்து அவர் கூறியதாவது,

ஜாட் ரெஜிமென்டுக்கு அருகில் போக்குவரத்து ஏட்டுகள் டிரக் ஓட்டுநர்களை மிரட்டி லஞ்சம் வங்குவதாக ராணுவ வீரர் ஒருவர் எனக்கு நேற்று மாலை தகவல் கொடுத்தார்.

இதைக் கேட்டவுடன் துப்பாக்கி சுடுபவர் மற்றும் கார் ஓட்டுநருடனும் தனியார் காரில் அந்த இடத்திற்கு விரைந்தேன். அவர்களை கையும் களவுமாக பிடிக்க நினைத்தேன். அங்கு சென்றபோது பணியில் இருந்த ஏட்டுகள் லஞ்சம் வாங்குவதைப் பார்த்தேன். என்னை அடையாளம் கண்டுகொண்ட அவர்கள் அந்த இடத்தில் இருந்து தப்பிக்க நினைத்ததோடு, அவர்கள் வாகனத்தை வைத்து என்னை நசுக்கப் பார்த்தார்கள்.

அவர்களை பிடிக்க ஓடியபோது வாகன ஓட்டுநரின் கழுத்தைப் பிடித்து விட்டேன். ஆனாலும் வண்டியை நிறுத்தாமல் நடுத் தெருவில் சுமார் 1 கிலோ மீட்டருக்கும் மேலாக என்னை இழுத்துக்கொண்டே சென்றனர். இறுதியில் என்னை தெருவில் தள்ளிவிட்டுச் சென்றுவிட்டனர் என்று அவர் கூறினார்.

குற்றவாளிகளில் ஒருவரைக் கைது செய்துள்ளதாகவும், மற்ற இருவரைத் தேடிக் கொண்டிருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இது குறித்து போலீசார் தெரிவித்ததாவது,

நேற்று மாலை சக்சேனாவிற்கு காவலர்கள் லஞ்சம் வாங்குவதாக வந்தத் தகவலை அடுத்து அவர் துப்பாக்கி சுடுபவர், கார் ஓட்டுநருடன் அந்த இடத்திற்குச் சென்றுள்ளார்.

அங்கிருந்த 3 ஏட்டுகளை விசாரித்ததில் தாங்கள் லஞ்சமே வாங்கவில்லை என்று மறுத்துள்ளனர். இதையடுத்து அவர் தனது உதவியாளரை விட்டு அந்த 3 பேரின் சட்டைப் பைகளை சோதனை செய்ய உத்தரவிட்டுள்ளார்.

வலையில் சிக்கிய அவர்கள் சக்சேனாவைத் தாக்கிவிட்டு அந்த இடத்தைவிட்டு ஓட முயன்றனர்.

அவர்கள் தப்பிக்கும் போது சக்சேனா ஒரு காவலரின் சட்டைக் காலரைப் பிடித்துள்ளார். அவர்கள் வண்டியை நிறுத்தாமல் சாக்சேனாவை இழுத்துக் கொணடே சென்றுள்ளனர் என்று அவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக டி.ஐ.ஜி. என். கே. ஸ்ரீவாஸ்தவ் கூறியதாவது,

சம்பந்தப்பட்ட 3 பேரையும் தற்காலி பணிநீக்கம் செய்து, அவர்கள் மீது கன்ட் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் ஒருவரான மனோஜ் குமாரை கைது செய்துள்ளோம். மற்ற 2 பேரையும் தீவிரமாகத் தேடிக் கொண்டிருக்கிறோம் என்று அவர் கூறினார்.

பெரிதாகி வரும் அமெரிக்கப் பெண்களின் மார்புகள்!


அமெரிக்கப் பெண்களின் மார்புகள் பெரிதாகி வருகிறதாம். இதனால் பிரா விற்பனையில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் இன்றைய தலைமுறை இளம் பெண்களுக்கு குறிப்பாக டீன் ஏஜ் வயதுப் பெண்களுக்கு மார்பு அளவு இயல்பை விட பெரிதாக உள்ளதாம். இதன் காரணமாக கடைகளில் விற்பனையாகும் பிரா விற்பனையில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

தங்களது அளவுக்கேற்ற பிராவை வாங்கிச் செல்லும் பெண்கள், சீக்கிரமே சைஸ் மாறி விடுவதால் பிராக்களை மாற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்களாம்.

அமெரிக்காவின் முன்னணி பிரா தயாரிப்பாளரான வகோல் அமெரிக்கா நிறுவனம், கடந்த ஆண்டு 36டி என்ற பிரா வகையை அறிமுகப்படுத்தியது. அது அமெரிக்கப் பெண்களிடையே சீக்கிரமே பிரபலமானது. ஆனால் இந்த ஆண்டு அதை தூக்கி விட்டு 36 டிடி என்ற புதிய பிராவை அறிமுகப்படுத்தியுள்ளது அந்த நிறுவனம். காரணம், ஆரம்பத்தில் நன்றாகப் போய்க் கொண்டிருந்த 36டி பிரா, பின்னர் சைஸ் சரியாக இல்லை என்று பெருமளவில் புகார்கள் வந்ததால்தான் இப்போது 36டிடி என்ற அடுத்த பிராவை களம் இறக்கியுள்ளதாம்.

அமெரிக்கப் பெண்களுக்கு குறிப்பாக டீன் ஏஜ் வயதினருக்கு மார்பக வளர்ச்சி இயல்பை விட பெரிதாக இருப்பதே இந்த பிரா குழப்பத்திற்குக் காரணம் என்கிறார்கள்.

ஏற்கனவே அமெரிக்காவில் பொருளாதாரப் பிரச்சினை. இப்போது இந்த 'பிரா'ப்ளம் வேறயா...!

ஆண்மைக் குறைவும் - காரணமும்!

ஆண்மைக் குறைவு பற்றிய கட்டுரைகள், விளம்பரங்கள் வந்தால் அது உண்மையா? பொய்யா என்பதைக் கூட தெரிந்துகொள்ள முயற்சிக்காமல், அதை எவ்வாறு தீர்த்துக் கொள்வது என்ற உணர்விலேயே மூழ்கிப் போய் பணத்தை வாரியிறைத்து செலவு செய்பவர்கள் நம்மிடம் இருக்கிறார்கள்.

இது ஒரு பிரச்சனை இல்லை என்று சொன்னால் நம்ப மாட்டீர்கள். சிக்மண்ட் பிராய்டு காலத்தில் 99 விழுக்காட்டினருக்கு வரும் ஆண்மைக் குறைவிற்கு மனநிலையே காரணம் எனக் கருதப்பட்டது. அண்மையில் நடந்த ஆராய்ச்சிகள் சுமார் 25 விழுக்காடு அளவு நபர்கள் மனநிலை காரணமாக இந்த பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்கின்றன.

ஆண்மைக் குறைவை எப்படியாவது போக்கிவிட வேண்டும் என்பதற்காகத்தான் சிட்டுக்குருவி லேகியம் முதல், ஆணுறுப்பில் தடவும் எண்ணெய்கள், களிம்புகள் ஆகிய பொய்யான விளம்பரங்களை நம்பி ஏமாந்து கொண்டுள்ளனர். இவற்றைத் தீர்ப்பதற்காக நவீன சிகிச்சை முறைகள் உள்ளன. முதலில் ஆண்மைக் குறைவிற்கான காரணங்களைப் பார்ப்போம்.

எல்லா ஆண்களுக்குமே வாழ்நாளில் ஓரிரு முறை விறைப்புத் தன்மை அடையாமல் போவதுண்டு. அதிகமான உடலுழைப்பு, மிகுந்த மனக்கவலை, புதிய பெண்ணுடன் பாலுறவு, புதிய சூழலில் படபடப்பான நிலையில் பாலுறவு கொள்ளுதல், அதிக மது அருந்துதல், புகை மற்றும் போதைப் பழக்கம், நீரிழிவு, மனநோய்கள், இரத்தக் கொதிப்பு, சில நோய்களுக்காக சாப்பிடும் மாத்திரைகளின் பக்கவிளைவுகள் காரணமாக ஆணுறுப்பு விறைப்படையாத நிலை வருகிறது.

இராசாயனத் தொழிற்சாலையில் பணிபுரிவோருக்கும், கதிர்வீச்சுத் துறைகளில் பணிபுரிவோருக்கும், வாகன ஓட்டுநர்களுக்கும் ஆண்மைக் குறைவு வரும் வாய்ப்பு அதிகம்.

இருபது வயதுள்ள ஏழு ஆண்களில் ஒருவருக்கு இந்த குறைபாடு உள்ளது. வயது கூடக்கூட பாதிப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

அறுபது வயதில் இரண்டு ஆண்டுகளில் ஒருவருக்கு இந்தப் பிரச்சனையிருக்கும். எழுபது வயதில் ஆசையிருக்கும் ஆனால் பத்து விழுக்காட்டினருக்கு மேல் பாலுறவு கொள்ள முடிவதில்லை.

ஆண்மைக் குறைவு : வருமுன் காத்தல்!


இப்போதுள்ள இளைஞர்களிடம் புகைப்பழக்கம் அதிகம் உள்ளது. இதனால் இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு ஆணுறுப்பு சரிவர விறைப்படையாமல் போகும். புகைப்பழக்கத்தை விட்டுவிட்டால் போது‌ம் இப்பிரச்சனை நாளடைவில் சரியாகும்.

மதுப்பழக்கத்தால் செக்ஸ் உணர்வுகள் அதிகரிக்கும் என்ற தவறான எண்ணம் கொண்டு பாலுறவில் ஈடுபடும் இளைஞர்களுக்கு மூளைச் செயல்திறன் குறைவு, நரம்பு மண்டல பாதிப்புகள், தண்டுவடக் கோளாறு போன்றவை ஏற்பட்டு நாளடைவில் ஆண்மைக் குறைவு உண்டாகும். எனவே மது பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.

உடல் எடை அதிகரிக்கும் போது பாலுறவில் நாட்டம் இல்லாமை, விறைப்பு ஏற்படாத நிலை ஆகியவை தோன்றும். எடையைக் குறைப்பதற்கான உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்வது வருவது நல்லது.

தேவையில்லாமல் தூக்க மாத்திரைகள் அல்லது போதை மாத்திரைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிடுங்கள்.

இரத்தக் கொதிப்பு, மனநோய் ஆகியவற்றிற்கு தரப்படும் சில மாத்திரைகள் ஆண்மைக் குறைவை உண்டாக்குவதால் அவற்றுக்கு பதிலாக வேறு வகையான மாற்று மருந்துகளைப் பயன்படுத்துவது நல்லது.

இரத்தத்தில் சர்க்கரையளவு உயராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முதலிலிருந்தே சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் ஆண்மைக் குறைவைத் தவிர்க்கலாம்.

நிபுணத்துவம் பெற்ற பாலியல் மருத்துவர்கள் எழுதிய நல்ல நூல்களை வாங்கிப் படியுங்கள். இவை பாலுறவு பற்றி பல பயனுள்ள தகவல்களைத் தரும். அவ்வாறின்றி பொய்யான நம்பிக்கை தருகின்ற போலி மருத்துவர்களை அணுகுவது, அஞ்சல் மூலமாக அவர்கள் அனுப்பும் லேகியங்களை வாங்கிச் சாப்பிடுவது, வேறுவித சிகிச்சைகள் ஆகியவை கூட அதிக பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

- டா‌க்ட‌ர் டி.காமரா‌ஜ்