செவ்வாய், 30 நவம்பர், 2010
காவலன்!
ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார். அவருக்கு நாட்டில் நல்ல பெயர். இவரைப் போல வல்லவர் உண்டா என்று அனைவருமே புகழாரம் சூட்டினர். ராஜாவும், நாட்டு மக்களை அவ்வளவு அருமையாக கவனித்துக் கொண்டார். நாட்டு மக்களுக்கு எந்தப் பாதிப்பும் வந்து விடாமல் காக்க பக்காவான காவல் ஏற்பாடுளையும் செய்து வைத்திருந்தார்.
காவலர்களும் சும்மா இல்லை. சிறப்பான பாதுகாப்பை நாட்டு மக்களுக்கும், ராஜாவுக்கும் கொடுத்தனர். ஆனால் தங்கம் தரமானதாக இருந்தாலும், குறை இருக்கத்தானே செய்யும். அதேபோல சில காவலர்கள் சரிவர செயல்படாததால், அவர்களால் நாட்டு மக்களுக்கும், ராஜாவுக்கும் சிக்கல் வந்து விட்டது. வந்த சிக்கலை எப்படியோ சமாளித்தார் ராஜா. அதன் பிறகு காவலில் படு கவனமாக இருந்தார்.
இந்தக் கதை எதற்கு என்றால், இப்படித்தான் நம்மில் பலர் 'இதை' நம்பலாம் என்று நம்பி ஏமாந்து போவார்கள், சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். இப்போது நாம் சொல்லப் போவது ஆணுறைகளைப் பற்றி.
குழந்தைப் பிறப்பைத் தடுக்க மட்டுமல்லாமல் இப்போது எச்ஐவி, பாலியல் நோய்கள் போன்றவற்றையும் தடுக்க முக்கிய சாதனமாக விளங்குவது ஆணுறைகள். பெரும்பாலான ஆணுறைகள் சிறப்பாகவே உள்ளன. ஆனால் ஆணுறைகளை முழுமையான பாதுகாப்பாக கருத முடியுமா என்றால் இல்லை என்ற பதில்தான் வருகிறது.
அதாவது 85 சதவீத அளவுக்குத்தான் ஆணுறைகளை நம்பலாம். ஆணுறைகளைப் பயன்படுத்தினால் கர்ப்பமாவதை தடுக்க முடியும் என்று உறுதியாக கூற முடியாது என்பது நிபுணர்களின் வாதம்..
இதற்கு என்ன செய்யலாம்...?
பாதுகாப்பான உடலுறவுக்குத் தயாராகி விட்ட பின்னர் ஆணுறைகளைப் பயன்படுத்தி வழக்கம் போல உறவில் ஈடுபடுங்கள். உறவு முடிந்ததும், கர்ப்பத் தடை மாத்திரைகளை தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள். இவற்றைப் பயன்படுத்துவது குறித்து முன்பே டாக்டர்களிடம் உரிய ஆலோசனை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். அதேசமயம், இதை ஒரு பழக்கமாக மாற்றிக் கொள்வதையும் தவிர்ப்பது மிக மிக அவசியம்.
ஆணுறைகள் லேட்டக்ஸ் அல்லது பாலியுரிதீன் என்ற வேதிப் பொருளால்தான் தயாரிக்கப்படுகிறது. இதன் மூலம் எர்பஸ், சிலமிடியா அல்லது டிரைகோமோனியாஸிஸ் போன்ற சில பாலியல் நோய்களைத் தடுக்க முடியும். அதேசமயம், தோல் மூலம் பரவும் நோய்கள், குறிப்பாக ஆண் மற்றும் பெண் உறுப்புகள் மூலம் பரவும் நோய்களை அது தடுக்க முடியாது.
அதேபோல விலங்குகளின் திசுக்களிலிருந்து தயாரிக்கப்பட்ட ஆணுறைகளையும் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது அவசியம்.
எச்ஐவியை முழுமையாக ஆணுறைகள் தடுக்கும் என்று கூற முடியாது. ஆண் அல்லது பெண் இருவரில் யாராவது ஒருவருக்கு எச்ஐவி பாதிப்பு இருந்தால், ஆணுறைகளைப் பயன்படுத்தினால் கூட அது பரவும் வாய்ப்பு உள்ளது.
பாதுகாப்பான, முறையான உடலுறவே நோய்களைத் தேடிப் போகாமல் தடுத்துக் கொள்ள ஒரே வழி. சில நேரம் ஆணுறைகள் பாதியிலேயே கிழிய வாய்ப்புண்டு. இதனால் விந்தணுக்குள் பெண்ணுறுப்பை ஊடுறுவிச் செல்லும் வாய்ப்புகள் உண்டு. சிலர் சரிவர ஆணுறையை கையாள தெரியாமல் பயன்படுத்தலாம்.
எனவே உடலுறவுக்குத் திட்டமிடும்போது பாதுகாப்பான முறையில் அதை அமைத்துக் கொள்வதே நல்லது. இல்லாவிட்டால் காவல் காப்பதில் கோட்டை விட்டு ராஜாவைக் கவிழ்த்திய காவலர் கதைதான்.
(நாளை, டிசம்பர் 1ம் தேதி உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது)
வெள்ளி, 26 நவம்பர், 2010
கை நிறைய 'செக்'ஸ்! திருப்திகரமான 'செக்ஸ்'!!
நீயெல்லாம் எங்கே உருப்படப் போறே, உருப்படியா ஒரு வேலையும் பார்க்கத் தெரியலே, புத்திசாலித்தனமா நடக்கத் தெரியுதா, விவரமா இருக்கத் தெரியுதா என்ற வசனங்களும், வசவுகளும், 80களில் தமிழ்நாட்டின் பெரும்பாலான வீடுகளில் சர்வ சாதாரணமாக ஒலித்த ஒன்று. ஆனால் இன்று அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை.
5 வயதுப் பையனிடம் போய் பேசி நல்லபடியாக மீண்டு வந்தால் அவர்களுக்கு பெரிய பரிசே கொடுக்கலாம். அந்த அளவுக்கு பேசுகிறார்கள் இக்காலத்துப் பொடியர்களே. அப்படி இருக்கையில் இளைஞர் குலம் எப்படி தீயாக இருக்கும்.
இருக்கிறது. செக்ஸ் மட்டுமே இளைஞர் குலத்தின் ஒரே குறிக்கோள் என்பதெல்லாம் பழங்கதையாகி வருகிறது. பார்த்தவுடன் காதல் என்பதெல்லாம் இப்போது கிட்டத்தட்ட இல்லை என்றாகி விட்டது.
ஒரு பெண் ஆணைக் கவர முன்பெல்லாம் அழகுதான் முக்கியமாக இருந்தது.
சேலையில் வரும் பெண்களை சிலருக்குப் பிடிக்கும். சிலருக்கு மாடர்ன் டிரஸ் ஓ.கே.வாக இருக்கும். கவர்ச்சிகரமான உடைகளை விட சிம்பிளான உடையில்தான் நீ தேவதை போல இருக்கிறாய் என்று கூறுவோரும் உண்டு. இந்த எட்டு கெஜ புடவையைத் தூக்கிப் போட்டு விட்டு ஜில்லென்று ஜீன்ஸ், டீ சர்ட்டில் வந்தால் எப்படி இருக்கும் தெரியுமா என்று சிலாகிப்போரும் உண்டு.
சிலருக்கு பெண்களின் கண்கள் பிடிக்கும். கண்ணை வைத்து ஏகப்பட்ட கவிதைகளையும் வடித்துத் தள்ளுவார்கள். சிலருக்கு மூக்கு பிடிக்கும். சிலருக்கு உதடு பிடிக்கும். உன் காது இருக்கே, அதுலதான் கவர்ச்சியே இருக்கு என்று 'கலாய்ப்போரும்' உண்டு.
பெண்களின் இடுப்புக்கு எது எதையோ உதாரணம் காட்டி கவிதைகளையும், வசனங்களையும் வடித்து விட்டது இந்த ஆண்குலம். இடுப்பழகை வர்ணிக்க அவர்களுக்கு வார்த்தைகளும் போதாது. அந்தக் காலத்தில் மின்னல் இடை என்றார்கள், இந்தக் காலத்தில் இஞ்சி இடுப்பாக்கி விட்டார்கள்.
சிலருக்கு பெண்களின் கால்கள் பிடிக்கும். பெண்களின் வாளிப்பான கைகளை சிலர் ஆசையாக வர்ணிப்பார்கள். சிலருக்கு முன்னழகு பிடிக்கும், சிலருக்குப் பின்னழகு பிடிக்கும்.
இதெல்லாம் ஒரு ஆண் பெண்ணைப் பார்க்கும்போது மன லேபில் 'டிஸக்சன்' செய்யும் பொதுவான விஷயங்கள். ஆனால் இக்காலத்து இளைஞர்களுக்கு பெண்களிடம் இன்னொரு விஷயம்தான் மிக மிகப் பிடித்திருக்கிறதாம். அது - பணம்.
செக்ஸியான + சவுகரியமான வேலையில் உள்ள பெண்ணைத்தான் இப்போதைய இளைஞர்களுக்குப் பிடிக்கிறதாம். இது கேட்பதற்கு ஆச்சரியமாக இருந்தாலும், இந்த டிரண்ட் வந்து ரொம்ப காலமாகி விட்டது.
உடல் ரீதியான கவர்ச்சிக்கு ஆண்கள் முக்கியத்துவம் தரும் அதே வேளையில், கை நிறைய சம்பாதிக்கும், நன்கு படித்த பெண்கள்தான் தங்களுக்கு 'சேஃப்' என்கிறார்கள்.
''செக்ஸ் மட்டும் வாழ்க்கை இல்லையே, எத்தனை நாளைக்குதான் செக்ஸிலேயே மூழ்கிக் கிடக்க முடியும். அதைத் தாண்டி வாழ்க்கையில் நிறைய உள்ளது. அதற்கு பணம் தேவை. அந்தப் பணம் இருவரிடமும் இருந்தால்தான் வாழ்க்கை வண்டியை சிரமமின்றி ஓட்ட முடியும். அதற்காகத்தான் சம்பாதிக்கும் பெண்ணை விரும்புகிறேன்.
அவர் என்னை விட அதிகம் சம்பாதிப்பவராக இருந்தால் இன்னும் சந்தோஷம். அதேசமயம், வெறும் பணத்துக்காக மட்டும் நான் பெண்ணை விரும்புவதில்லை. கூடவே எனக்கேற்ற செக்ஸியான பெண்ணாகவும் அவர் இருக்க வேண்டும்'' என்று பெரும்பாலானோர் கூறுகின்றனர்.
இதுகுறித்து மன நல மருத்துவர் ஒருவர் கூறுகையில், அக்கால இளைஞர்களைப் போல இப்போது யாரும் இல்லை. மிகப் பெரிய அளவிலான மன மாற்றம் இக்காலத்து இளைஞர்களிடையே வளர்ந்துள்ளது. இது ஆரோக்கியமானது.
வெறும் செக்ஸ் வேலைக்கு ஆகாது என்பதை அவர்கள் புரிந்து வைத்துள்ளனர். உடல் ரீதியான ஆர்வம், ஈடுபாடு, மோகம் ஒரு கட்டத்துக்கு மேல் நீர்த்துப் போய் விடுகிறது என்பதை அவர்கள் புரிந்து வைத்துள்ளனர். அதைத் தாண்டி பார்க்கும்போதுதான் அவர்களுக்கு வாழ்க்கைக்கான தேவை புரிகிறது.
அவசரப்பட்டு விவாகரத்து செய்கிறார்கள், அவசர கோலத்தில் கல்யாணம் செய்கிறார்கள், வாழ்க்கையை சீரியஸாக எடுத்துக்கொள்வதில்லை என்றெல்லாம் இக்காலத்து இளைஞர்கள், இளம் பெண்கள் மீது பொதுவான ஒரு குற்றச்சாட்டு இருந்தாலும்கூட பெரும்பாலானோர் அப்படி இல்லை.
ஒரு பெண்ணைப் பார்த்து இவள்தான் எனது மனைவி அல்லது காதலி என்ற முடிவுக்கு வருவதற்கு முன்பு அவளது உடல் அழகை மட்டுமல்லாமல், நமது பொருளாதார போராட்டங்களுக்கு இவள் எந்த அளவுக்கு உறுதுணையாக இருப்பாள் என்பதையும் பார்க்கின்றனர் இளைஞர்கள்.
பெண்கள் சம்பாத்தியத்தில் வாழ நினைக்கிறார்கள் ஆண்கள் என்று இதை கூறி விட முடியாது. மாறாக, பொறுப்புடன் யோசிக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாம். பெண்ணின் அழகும், கவர்ச்சியும் நிரந்தரமல்ல என்பதை ஆணும், இவனிடம் காணப்படும் வாட்டசாட்டம், வசீகரம் நிரந்தரமல்ல. வயதாகும்போது இவையும் சேர்ந்தே தளரும், தொய்வடையும் என்பதை ஆணும், பெண்ணும் புரிந்து வைத்துள்ளனர்.
ஆண்கள் மட்டுமல்லாது இளம் பெண்களும் கூட 'மோகம் முப்பது, ஆசை அறுபது' என்பதை தூர வைத்து விட்டு அதற்குப் பிறகு வாழப் போகும் நீண்ட வருடங்களை வசந்தமாக வைத்துக் கொள்ள இவன் உதவுவானா என்று யோசிக்க ஆரம்பித்துள்ளனர். இது நிச்சயம் தவறல்ல. இப்படி இருவருமே திருமணத்திற்கு முன்பே திட்டமிட்டு வாழக்கையைத் தொடங்கும்போது இருவரும் இணைந்து வாழும் காலம் நிச்சயம் கூடும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும், குதூகலமும் நிரந்தரமாகும் என்கிறார்.
விபச்சாரத்திலிருந்து 12000 பெண்களைக் காப்பாற்றிய நேபாளப் பெண் உலக ஹீரோவானார்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: கொடுமையானண செக்ஸ் வர்த்தகத்திலிருந்து 12000 பெண்களைக் காப்பாற்றிய நேபாள பெண்மணி அனுராதா கொய்ராலா ‘உலக ஹீரோ’வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்தப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டிருந்த நம்ம ஊர் நாராயணன் கிருஷ்ணனுக்கு 25000 டாலர் பரிசு தரப்பட்டுள்ளது.
தன்னலமற்ற சேவையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ள தனி நபர்களை உலக ஹீரோவாக அடையாளம் காட்டும் வகையில் டாப் 10 உலக ஹீரோக்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது அமெரிக்காவின் சிஎன்என் தொலைக்காட்சி. 2007-ம் ஆண்டு முதல் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
குறிப்பிட்ட சமூக சேவர்களின் பின்னணி மற்றும் சேவையைப் படித்து தெரிந்து கொண்டு, சர்வதேச அளவில் பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக சிஎன்என் இணையதளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கடந்த இரண்டு மாத காலமாக இதற்கான பொது வாக்கெடுப்பு சிஎன்என் இணையதளத்தில் நடத்தப்பட்டு வந்தது. இதற்கான முடிவுகளை சிஎன்என் சேனலின் ஆண்டர்ஸன் கூப்பர்.
இதில் பெருமளவில் வாக்குகளைப் பெற்று அனுராதா கொய்ராலா உலக ஹீரோவாக தேர்வு செய்யப்பட்டார்.
உலகம் முழுவதும் சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் கொடுமைக்கு எதிராகக் குரல் கொடுத்துவரும் நடிகை டெமி மூர்தான் அனுராதா கொய்ராலாவை அறிமுகப்படுத்தினார்.
அனுராதா கொய்ராலாவும் அவரது மைதி நேபால் அமைப்பும், மிகப் பெரிய விபச்சார சந்தையாகக் கருதப்படும் இந்திய – நேபாள எல்லையில் விற்கப்படும் இளம்பெண்களை தடுத்து காப்பாற்றி வருகின்றனர். 1993-லிருந்து இவர்களால் இதுவரை 12000 பெண்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
உலகம் முழுக்க ஒவ்வொருவரும் இந்தப் பணியில் எங்களுடன் கைகோர்க்க வேண்டும். பாலியல் தொழிலில் சிறுமிகளே இல்லாத நிலை ஏற்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் அனுராதா கொய்ராலா.
உலக ஹீரோவாக தேர்வு பெற்ற அனுராதாவுக்கு 1 லட்சம் டாலர் பரிசு வழங்கப்பட்டது.
இந்தப் போட்டியில் அனுராதாவுடன் சேர்த்து மொத்தம் 10 பேர் ஹீரோக்களாக கடந்த சனிக்கிழமையன்று மேடையில் அறிமுகப்படுத்தப்பட்டனர்.
அந்த 10 பேரில் நம்ம ஊர் நாராயணன் கிருஷ்ணனும் உண்டு. அனுராதா தவிர மற்ற அனைவருக்கும் தலா 25000 டாலர் பரிசாக வழங்கப்பட்டது.
ஹாலிவுட்டின் டாப் நடிகர்கள் டெமி மூர், ஹாலே பெர்ரி, ஜெஸிகா ஆல்பா என அனைவரும் வந்திருந்து இந்த நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
மற்ற ஹீரோக்கள் – ஒரு அறிமுகம்
க்வாடலுப் அரிஸ்ப் டி லா வேகா (Guadalupe Arizpe De La Vega): 74 வயதாகும் இவர், மெக்ஸிகோவில் ஒரு பெரிய மருத்துவமனையை நிறுவி, அதில் தினமும் 900 பேருக்கு சிகிச்சை அளித்து வருகிறார். அவர்களால் கொடுக்க முடிந்ததைப் பெற்றுக் கொள்கிறார். கொடுக்காவிட்டாலும் அதுபற்றி கவலைப்படுவதில்லை.
சூஸன் பர்ட்டன் (Susan Burton): போதை மருந்துக்கு அடிமையாகி சிறைத் தண்டனை பெற்றவர் சூஸன். ஆனால் பின்னர் அவரே ஒரு தன்னார்வ நிறுவனத்தை ஏற்படுத்தி, சிறை சென்று மீண்ட கலிபோர்னிய பெண்களுக்கு மறுவாழ்வு மையம் அமைத்து வாழ்வளித்து வருகிறார்.
லிண்டா பான்ட்ரன் (Linda Fondren): உடல் பருமனால் அவதிப்படும் மிஸிஸிப்பி பகுதி மக்கள், உடல் எடையைக் குறைக்க இலவச பிட்னஸ் வசதிகள், சத்துணவு திட்டங்களை தந்து இதுவரை பல நூறு குண்டு மனிதர்களின் 15000 பவுண்ட் எடையைக் குறைத்துள்ளார்.
நாராயனண் கிருஷ்ணன் (Narayan Krishnan): தினசரி 400 மனநலம் பாதித்த ஆதரவற்றவர்களுக்கு உணவளிக்கும் அரும்பணியைச் செய்துவரும் மதுரைக்காரர் நாராயணன் கிருஷ்ணன்.
மேக்னஸ் மாக்பார்லன் பாரோ (Magnus MacFarlane-Barrow): மேரி மீல்ஸ் என்ற பெயரில் தினசரி உலகம் முழுவதும் உள்ள 4 லட்சம் குழந்தைகளுக்கு அளித்து வருகிறார் பாரோ. 1992-ம் ஆண்டிலிருந்து, இந்த சேவையைத் தொடர்கிறார் இவர்.
ஹார்மோன் பார்க்கர் (Harmon Parker): தனது கட்டுமானத் திறமையை பயன்படுத்தி கென்யாவின் ஆறுகளுக்குக் குறுக்கே நடை மேம்பாலங்களை அமைத்து மக்களைக் காப்பாற்றி வருகிறார் பார்க்கர். இதனால் கொடிய மிருகங்களிடமிருந்தும் மக்களுக்கு பாதுகாப்புக் கிடைத்து வருகிறது. 1997-லிலிருந்து இதுவரை தனிமனிதராக 45 பாலங்களை அமைத்துள்ளார் பார்க்கர்.
அகி ரா (Aki Ra): கம்போடியாவைச் சேர்ந்த இவர் தனது குழுவினருடன் சேர்ந்து இதுவரை 50000 கண்ணிவெடிகளை அகற்றியுள்ளார். இவை அனைத்தும் என்றோ புதைக்கப்பட்டு, இன்னமும் வெடிக்காமல் இருக்கும் ஆபத்தான வெடிகள்.
இவான்ஸ் வடான்கோ (Evans Wadongo): 23 வயதே ஆன இந்த கென்ய இளைஞர், கெரசின் மற்றும் கரி அடுப்பு விளக்குகளின் புகையால் பாதிக்கப்படும் மக்களைக் காக்க இதுவரை 10000 பேருக்கு சூரிய ஒளி விளக்குகளை வழங்கியுள்ளார்.
டான் வால்ராத் (Dan Wallrath): டெக்ஸாஸைச் சேர்ந்த இவர், 2005-ம் ஆண்டிலிருந்து ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் போரில் படுகாயமடைந்தவர்களுக்கு சொந்த வீடுகளை கட்டிக் கொடுக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். இப்போதைக்கு 5 பெரிய அடுக்குமாடிக் குடியிருப்புகளை ஏற்படுத்தி வருகிறார்.
தமிழகத்தில் பிப்ரவரி 9ஆம் தேதி மக்கள்தொகை கணக்கெடுப்பு!
சென்னை: தமிழகத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி பிப்ரவரி 9ஆம் தேதி தொடங்கி 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தக் கணக்கெடுப்பில் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினர்களின் தனிப்பட்ட விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளன.
நாடு முழுவதும் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுக்கும் பணி நடத்தப்படுவது வழக்கம். 2001ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பு நடைபெறுகிறது. இதற்கான தேதி இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 9ஆம் தேதி கணக்கெடுப்புப் பணிகள் தொடங்குகிறது.
முதல் கட்டமாக வீட்டுப் பட்டியல் குறித்த விவரங்களை சேகரிக்கவும், தேசிய அடையாள அட்டை வழங்கும் பணிக்காகவும் கடந்த ஜூன் 1ஆம் தேதி தொடங்கி ஜூலை 15 ஆம் தேதி வரை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்தக் கணக்கெடுப்பில் வீடுகள், அதில் எத்தனை பேர் வசிக்கிறார்கள் என்கிற விவரங்கள் மட்டுமே சேகரிக்கப்பட்டன.
அடுத்த ஆண்டு பிப்ரவரியில் எடுக்கப்படும் கணக்கெடுப்பே முழுமையான கணக்கெடுப்பு என மக்கள்தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், இந்தக் கணக்கெடுப்பில் தனிநபர்களின் விவரங்கள் அனைத்தும் தொகுக்கப்படும். அதாவது, குடும்பத்தில் உள்ளவர்கள் எத்தனை பேர்? படிப்பு, தொழில், வருமானம், திருமணம் ஆனவர்கள் எத்தனை பேர்? குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் கேட்கப்படும். தமிழகம் முழுவதும் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அவர்கள் கூறினர்.
மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணியில் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் ஈடுபடுத்தப்படுவர். இதற்காக 3 நாள்கள் அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த நாட்களில் அவர்கள் பணி செய்ததாகவே கருதப்படும் என்று பொதுத் துறை செயலாளர் கருத்தையா பாண்டியன் வெளியிட்ட உத்தரவில் தெரிவித்துள்ளார்.
மேலும், பிப்ரவரி 9 முதல் 28-ம் தேதி வரை ஒவ்வொரு நாளும் காலை அல்லது பிற்பகல் வேளை என ஏதாவது ஒரு வேளை மட்டுமே கணக்கெடுப்புப் பணிக்கு அனுமதிக்கப்படும். மீதியுள்ள அரை நாள் பணிக்குச் செல்ல வேண்டும். கணக்கெடுப்பு முடிந்ததும் விடுபட்ட இடங்கள் குறித்த பணிகள் மார்ச் 1ஆம் தேதி 5ஆம் தேதி வரை நடத்தப்படும். இந்த ஆறு நாட்களிலும் கணக்கெடுப்புப் பணி முழு நாளாக மேற்கொள்ளப்படும் என பொதுத் துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிக்கு மாவட்டந்தோறும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, சேலம், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், வேலூர் ஆகிய மாநகராட்சிகளின் ஆணையாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், இதர மாவட்டங்களில் உள்ள முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆகியோர் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் முதன்மை அதிகாரிகளாகவும், மாவட்ட கூடுதல் அதிகாரிகளாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பிப்ரவரியில் நடத்தப்பட உள்ள கணக்கெடுப்பில் ஜாதி குறித்த விவரங்கள் கேட்கப்பட மாட்டாது என மக்கள்தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாடு முழுவதும் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுக்கும் பணி நடத்தப்படுவது வழக்கம். 2001ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பு நடைபெறுகிறது. இதற்கான தேதி இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 9ஆம் தேதி கணக்கெடுப்புப் பணிகள் தொடங்குகிறது.
முதல் கட்டமாக வீட்டுப் பட்டியல் குறித்த விவரங்களை சேகரிக்கவும், தேசிய அடையாள அட்டை வழங்கும் பணிக்காகவும் கடந்த ஜூன் 1ஆம் தேதி தொடங்கி ஜூலை 15 ஆம் தேதி வரை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்தக் கணக்கெடுப்பில் வீடுகள், அதில் எத்தனை பேர் வசிக்கிறார்கள் என்கிற விவரங்கள் மட்டுமே சேகரிக்கப்பட்டன.
அடுத்த ஆண்டு பிப்ரவரியில் எடுக்கப்படும் கணக்கெடுப்பே முழுமையான கணக்கெடுப்பு என மக்கள்தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், இந்தக் கணக்கெடுப்பில் தனிநபர்களின் விவரங்கள் அனைத்தும் தொகுக்கப்படும். அதாவது, குடும்பத்தில் உள்ளவர்கள் எத்தனை பேர்? படிப்பு, தொழில், வருமானம், திருமணம் ஆனவர்கள் எத்தனை பேர்? குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் கேட்கப்படும். தமிழகம் முழுவதும் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அவர்கள் கூறினர்.
மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணியில் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் ஈடுபடுத்தப்படுவர். இதற்காக 3 நாள்கள் அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த நாட்களில் அவர்கள் பணி செய்ததாகவே கருதப்படும் என்று பொதுத் துறை செயலாளர் கருத்தையா பாண்டியன் வெளியிட்ட உத்தரவில் தெரிவித்துள்ளார்.
மேலும், பிப்ரவரி 9 முதல் 28-ம் தேதி வரை ஒவ்வொரு நாளும் காலை அல்லது பிற்பகல் வேளை என ஏதாவது ஒரு வேளை மட்டுமே கணக்கெடுப்புப் பணிக்கு அனுமதிக்கப்படும். மீதியுள்ள அரை நாள் பணிக்குச் செல்ல வேண்டும். கணக்கெடுப்பு முடிந்ததும் விடுபட்ட இடங்கள் குறித்த பணிகள் மார்ச் 1ஆம் தேதி 5ஆம் தேதி வரை நடத்தப்படும். இந்த ஆறு நாட்களிலும் கணக்கெடுப்புப் பணி முழு நாளாக மேற்கொள்ளப்படும் என பொதுத் துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிக்கு மாவட்டந்தோறும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, சேலம், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், வேலூர் ஆகிய மாநகராட்சிகளின் ஆணையாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், இதர மாவட்டங்களில் உள்ள முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆகியோர் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் முதன்மை அதிகாரிகளாகவும், மாவட்ட கூடுதல் அதிகாரிகளாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பிப்ரவரியில் நடத்தப்பட உள்ள கணக்கெடுப்பில் ஜாதி குறித்த விவரங்கள் கேட்கப்பட மாட்டாது என மக்கள்தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாட்டின் ரகசியம் மாதுக்காக விற்பனை!
அரசியல்வாதிகள் ஒருபுறம் தங்கள் கைகளில் சிக்கிய திட்டங்களில் ஏகப்பட்ட தகிடுதத்தங்களை செய்து,பல ஆயிரம் கோடி ரூபாய்களை சுருட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்றால், மறுபுறம் அவர்களுக்கு தாங்கள் கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல என்று ஐஏஎஸ், ஐஎப்எஸ் அதிகாரிகளும் பணத்திற்காகவும், பெண்களுக்காகவும் நாட்டையே காட்டிக்கொடுக்கும் அளவுக்கு செல்வதை பார்த்து விக்கித்துபோய் நிற்கின்றனர் சமூக ஆர்வலர்கள்!
கடந்த ஏப்ரல் மாதம்தான் இஸ்லாமாபாத்திலுள்ள இந்திய தூதரக அதிகாரி மாதுரி, இந்திய ரகசியங்களை பாகிஸ்தானின் உளவு ஏஜென்சியான ஐஎஸ்ஐ- க்கு விற்றதாக கைது செய்யப்பட்டார்.
53 வயதான மாதுரி குப்தா என்ற அந்த பெண் அதிகாரி, திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வசித்து வந்தவர்.
தனக்கு அளிக்கப்பட்ட பணிகளை விட, தகவல் பிரிவில் ஆர்வத்துடன் அவர் தலையிட்டு வந்ததை அடுத்து உளவு பிரிவின் சந்தேக வலையில் சிக்கினார்.
இதனையடுத்து சுமார் 4 மாதங்களாக இந்திய உளவுத்துறையின் `கண்காணிப்பு வளைய'த்தில் இருந்து வந்த அவர், பிரதமரின் பயணம் தொடர்பாக விவாதிக்க வேண்டியதுள்ளது என்று கூறி சாமர்த்தியமாக டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
அவரிடம் முறைப்படி கவனித்து நடத்தப்பட்ட விசாரணையில், பாகிஸ்தான் தூதரகத்தில் பணிபுரிந்து வந்த இந்திய உளவு நிறுவனமான `ரா'வின் உயர் அதிகாரியான ஆர்.கே.சர்மா தன்னிடம் அளித்த ரகசிய தகவல்களை பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு நிறுவனத்துக்கு கொடுத்ததாக, உண்மையை கக்கினார்.
இவர் ஏன் இவ்வாறு நாட்டைக் காட்டிக்கொடுக்கும் அளவுக்கு செயல்பட்டார் என்று அதிகாரிகள் தோண்டி துருவியபோது, திருமணம் ஆகாத மாதுரி குப்தாவுக்கு, பாகிஸ்தான் அதிகாரி ராணாவுடன் காதல் இருந்ததும், கூடவே ஏராளமான பணத்துக்கு ஆசைப்பட்டும், இந்திய ரகசியங்களை அவர் பாகிஸ்தானுக்கு விற்றதும் தெரியவந்தது.விசாரணையின்போது இந்த தகவலை மாதுரியும் ஒப்புக்கொண்டார்.
அதே சமயம் உயர் அதிகாரிகள் தன்னை தொடர்ந்து புறக்கணித்து வந்ததாகவும், பதவி உயர்வு வழங்காமல் சிரமமான பணிகளை தனது தலையில் கட்டியதாகவும், செய்த வேலையை மதிக்காமல் தன்னை மட்டம் தட்டியதாகவும், லண்டன் அல்லது அமெரிக்காவில் தனக்கு பணி ஒதுக்கப்படும் என்று காத்திருந்து ஏமாற்றம் அடைந்ததாகவும் அவர் கூறி இருந்தார்.
இது எந்த அளவுக்கு உண்மையோ தெரியவில்லை.தற்போது மாதுரி நீதிமன்றத்தின் படிக்கட்டுகளில் ஏறிக்கொண்டிருக்கையில்தான், அடுத்ததாக உள்துறை ரகசியங்களை விற்றதாக ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டிருப்பது அரசு வட்டாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
ரவிந்தர் சிங் என்ற அந்த அதிகாரி, மத்திய உள்துறை அமைச்சகத்தின் உள்நாட்டு பாதுகாப்பு இயக்குநர் பதவியில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், இந்திய பாதுகாப்பின் ரகசிய தகவல்களை பாகிஸ்தானுக்கு கூறிவருவதாக உளவுத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது.
இந்தியாவிலுள்ள வணிக நிறுவனங்களுக்கு முக்கியமான விபரங்களை விற்றுவருவதாகவும் உளவு தகவல் தெரிவித்தது.
இதனையடுத்துதான், ரவிந்தர்சிங் நடவடிக்கைகள் கடந்த ஒரு மாத காலமாக கவனிக்கப்பட்டுவந்தது. இதன்பின்னரே அவரின் வீடு மற்றும் அலுவலகத்தின் சோதனை செய்யப்பட்டது. சோதனைக்குப்பின் டெல்லி சிறப்புக்காவல் பிரிவு அவரை கைது செய்துள்ளது.
உள்துறை தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த விபரங்களை வெளி நபர்களுக்கு தெரிவித்துள்ளதாக உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை தெரிவித்துள்ளார்.
பணம் மற்றும் செக்ஸ் ஆகியவற்றுக்காகவே அவர் இத்தகைய தேசத் துரோகத்தை அரங்கேற்றியுள்ளார்.
ரவிந்தர் சிங்கிற்கும், தனியார் நிறுவனம் ஒன்றிற்கும் இடைத்தரகராக செயல்பட்ட வினித் என்பவரையும் காவல்துறை வளைத்துள்ளது.
இந்த வினித்துதான் ரவிந்தர்சிங் சார்பில் தொலைபேசி நிறுவனம் ஒன்றுடன் பேரம் பேசியுள்ளார்.
பாதுகாப்பு தொடர்பான தகவல் ஒன்றை அளிப்பதற்காக 5 கோடி ரூபாய் தருமாறு கேட்டுள்ளார். அநேகமாக சம்பந்தப்பட்ட தொலைபேசி நிறுவனத்தின் "செக்யூரிட்டி கிளியரன்ஸ்" தொடர்பான கோப்பு உள்துறை அமைச்சகத்தில் நிலுவையில் இருந்திருக்கும்.
அதனை நகர்த்துவதற்காகவே இந்த பேரம் நடத்தப்பட்டிருக்கலாம் எனக் கூறும் அதிகாரிகள், ரவிந்தர் சிங், பணத்திற்காகவும், செக்ஸுக்காகவும் எவ்வாறு சங்கேத வார்த்தைகளை பயன்படுத்தி பேரம் பேசினார் என்ற தொலைபேசி தகவல்களையும் வெளியிட்டுள்ளனர்.
" உக்ரைன் சாப்ட்வேர் கிடைக்குமா?" என்று சிங், வினித்திடம் கேட்கிறார்.இதில் 'சாப்ட்வேர்' என்பது பெண்ணை குறிக்கும்.அதேப்போன்று ஓட்டல் அறைக்கு 'ஹார்டுவேர்' என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பணத்திற்கு 'லாடு' என்றும் ரகசிய தகவலுக்கு 'பிரசாதம்' என்றும் குறிப்பிட்டு பேசியுள்ளார் சிங்.
சிங் ஐந்து மொபைல்போன்களை பயன்படுத்தியுள்ளார். இதில் இரண்டு தொலைபேசி எண்கள், தொழிலதிபர் வினித்தின் மொபைல் போனில் பதிவாகி இருப்பது தெரியவந்துள்ளது.
இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான முக்கிய விவகாரங்களை சிங் கையாண்டுள்ள நிலையில், கடந்த காலங்களில் இவர் இதுபோன்ற எத்தனை முக்கிய விடயங்களை விற்றாரோ என அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இத்தகைய அதிகாரிகளை தட்டிகேட்டு நடவடிக்கை எடுக்கவேண்டிய இடத்தில் உள்ள அரசியல்வாதிகளும் அதே லட்சணத்தில் இருக்கையில், யார் மீது யார் நடவடிக்கை எடுக்க?
கடந்த ஏப்ரல் மாதம்தான் இஸ்லாமாபாத்திலுள்ள இந்திய தூதரக அதிகாரி மாதுரி, இந்திய ரகசியங்களை பாகிஸ்தானின் உளவு ஏஜென்சியான ஐஎஸ்ஐ- க்கு விற்றதாக கைது செய்யப்பட்டார்.
53 வயதான மாதுரி குப்தா என்ற அந்த பெண் அதிகாரி, திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வசித்து வந்தவர்.
தனக்கு அளிக்கப்பட்ட பணிகளை விட, தகவல் பிரிவில் ஆர்வத்துடன் அவர் தலையிட்டு வந்ததை அடுத்து உளவு பிரிவின் சந்தேக வலையில் சிக்கினார்.
இதனையடுத்து சுமார் 4 மாதங்களாக இந்திய உளவுத்துறையின் `கண்காணிப்பு வளைய'த்தில் இருந்து வந்த அவர், பிரதமரின் பயணம் தொடர்பாக விவாதிக்க வேண்டியதுள்ளது என்று கூறி சாமர்த்தியமாக டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
அவரிடம் முறைப்படி கவனித்து நடத்தப்பட்ட விசாரணையில், பாகிஸ்தான் தூதரகத்தில் பணிபுரிந்து வந்த இந்திய உளவு நிறுவனமான `ரா'வின் உயர் அதிகாரியான ஆர்.கே.சர்மா தன்னிடம் அளித்த ரகசிய தகவல்களை பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு நிறுவனத்துக்கு கொடுத்ததாக, உண்மையை கக்கினார்.
இவர் ஏன் இவ்வாறு நாட்டைக் காட்டிக்கொடுக்கும் அளவுக்கு செயல்பட்டார் என்று அதிகாரிகள் தோண்டி துருவியபோது, திருமணம் ஆகாத மாதுரி குப்தாவுக்கு, பாகிஸ்தான் அதிகாரி ராணாவுடன் காதல் இருந்ததும், கூடவே ஏராளமான பணத்துக்கு ஆசைப்பட்டும், இந்திய ரகசியங்களை அவர் பாகிஸ்தானுக்கு விற்றதும் தெரியவந்தது.விசாரணையின்போது இந்த தகவலை மாதுரியும் ஒப்புக்கொண்டார்.
அதே சமயம் உயர் அதிகாரிகள் தன்னை தொடர்ந்து புறக்கணித்து வந்ததாகவும், பதவி உயர்வு வழங்காமல் சிரமமான பணிகளை தனது தலையில் கட்டியதாகவும், செய்த வேலையை மதிக்காமல் தன்னை மட்டம் தட்டியதாகவும், லண்டன் அல்லது அமெரிக்காவில் தனக்கு பணி ஒதுக்கப்படும் என்று காத்திருந்து ஏமாற்றம் அடைந்ததாகவும் அவர் கூறி இருந்தார்.
இது எந்த அளவுக்கு உண்மையோ தெரியவில்லை.தற்போது மாதுரி நீதிமன்றத்தின் படிக்கட்டுகளில் ஏறிக்கொண்டிருக்கையில்தான், அடுத்ததாக உள்துறை ரகசியங்களை விற்றதாக ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டிருப்பது அரசு வட்டாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
ரவிந்தர் சிங் என்ற அந்த அதிகாரி, மத்திய உள்துறை அமைச்சகத்தின் உள்நாட்டு பாதுகாப்பு இயக்குநர் பதவியில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், இந்திய பாதுகாப்பின் ரகசிய தகவல்களை பாகிஸ்தானுக்கு கூறிவருவதாக உளவுத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது.
இந்தியாவிலுள்ள வணிக நிறுவனங்களுக்கு முக்கியமான விபரங்களை விற்றுவருவதாகவும் உளவு தகவல் தெரிவித்தது.
இதனையடுத்துதான், ரவிந்தர்சிங் நடவடிக்கைகள் கடந்த ஒரு மாத காலமாக கவனிக்கப்பட்டுவந்தது. இதன்பின்னரே அவரின் வீடு மற்றும் அலுவலகத்தின் சோதனை செய்யப்பட்டது. சோதனைக்குப்பின் டெல்லி சிறப்புக்காவல் பிரிவு அவரை கைது செய்துள்ளது.
உள்துறை தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த விபரங்களை வெளி நபர்களுக்கு தெரிவித்துள்ளதாக உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை தெரிவித்துள்ளார்.
பணம் மற்றும் செக்ஸ் ஆகியவற்றுக்காகவே அவர் இத்தகைய தேசத் துரோகத்தை அரங்கேற்றியுள்ளார்.
ரவிந்தர் சிங்கிற்கும், தனியார் நிறுவனம் ஒன்றிற்கும் இடைத்தரகராக செயல்பட்ட வினித் என்பவரையும் காவல்துறை வளைத்துள்ளது.
இந்த வினித்துதான் ரவிந்தர்சிங் சார்பில் தொலைபேசி நிறுவனம் ஒன்றுடன் பேரம் பேசியுள்ளார்.
பாதுகாப்பு தொடர்பான தகவல் ஒன்றை அளிப்பதற்காக 5 கோடி ரூபாய் தருமாறு கேட்டுள்ளார். அநேகமாக சம்பந்தப்பட்ட தொலைபேசி நிறுவனத்தின் "செக்யூரிட்டி கிளியரன்ஸ்" தொடர்பான கோப்பு உள்துறை அமைச்சகத்தில் நிலுவையில் இருந்திருக்கும்.
அதனை நகர்த்துவதற்காகவே இந்த பேரம் நடத்தப்பட்டிருக்கலாம் எனக் கூறும் அதிகாரிகள், ரவிந்தர் சிங், பணத்திற்காகவும், செக்ஸுக்காகவும் எவ்வாறு சங்கேத வார்த்தைகளை பயன்படுத்தி பேரம் பேசினார் என்ற தொலைபேசி தகவல்களையும் வெளியிட்டுள்ளனர்.
" உக்ரைன் சாப்ட்வேர் கிடைக்குமா?" என்று சிங், வினித்திடம் கேட்கிறார்.இதில் 'சாப்ட்வேர்' என்பது பெண்ணை குறிக்கும்.அதேப்போன்று ஓட்டல் அறைக்கு 'ஹார்டுவேர்' என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பணத்திற்கு 'லாடு' என்றும் ரகசிய தகவலுக்கு 'பிரசாதம்' என்றும் குறிப்பிட்டு பேசியுள்ளார் சிங்.
சிங் ஐந்து மொபைல்போன்களை பயன்படுத்தியுள்ளார். இதில் இரண்டு தொலைபேசி எண்கள், தொழிலதிபர் வினித்தின் மொபைல் போனில் பதிவாகி இருப்பது தெரியவந்துள்ளது.
இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான முக்கிய விவகாரங்களை சிங் கையாண்டுள்ள நிலையில், கடந்த காலங்களில் இவர் இதுபோன்ற எத்தனை முக்கிய விடயங்களை விற்றாரோ என அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இத்தகைய அதிகாரிகளை தட்டிகேட்டு நடவடிக்கை எடுக்கவேண்டிய இடத்தில் உள்ள அரசியல்வாதிகளும் அதே லட்சணத்தில் இருக்கையில், யார் மீது யார் நடவடிக்கை எடுக்க?
அசுர வேகத்தில் வளர்ந்து வரும் அம்பத்தூர் தொழிற்பேட்டை!
தமிழகத்தில் உள்ள தொழிற்பேட்டைகளில் அம்பத்தூர் தொழிற்பேட்டை முக்கியமானதாகும். 1965ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொழிற்பேட்டை காமராஜர் ஆட்சி காலத்தில், முன்னாள் முதலமைச்சர் பக்தவத்சலத்தால் ஆரம்பிக்கப்பட்டது. வளர்ச்சியை கருத்தில் கொண்டு தெற்காசியாவில் மிகப்பெரிய தொழிற்பேட்டையாக திகழ்கிறது அம்பத்தூர் தொழிற்பேட்டை. ஆயிரக்கணக்கான பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ள அம்பத்தூர் தொட்டி நிறுவனம் இத்தொழிற்பேட்டையில்தான் உள்ளது. டெல், டி.சி.எஸ் போன்ற நிறுவனங்களும் இத்தொழிற்பேட்டை அலுவலங்களின் உற்பத்தி திறனை கொண்டுள்ளன.
2 லட்சம் தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்கும் இத்தொழிற்பேட்டையின் பல இடங்களில் ஆட்கள்தேவை போர்டுகள் தொங்கிக் கொண்டு இருப்பதை இத்தொழிற்பேட்டை தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருவதற்கு அத்தாட்சி. இந்த வளர்ச்சிதான் இத்தொழிற்பேட்டை ஆசியாவிலேயே முதன்மையானதாக மாற்றியுள்ளது.
இரயில் நிலையங்களுக்கு அருகாமை, பரந்து விரிந்த நிலப்பரப்பு, தட்டுப்பாடு இல்லாத தண்ணீர் வசதி, போக்குவரத்து தொடர்பு, தொட்டுவிடும் தூரத்தில் துறைமுகம் ஆகியவை அம்பத்தூர் தொழிற்பேட்டை அமைக்கப்பட அடிப்படை காரணங்களாகும். தொடங்கப்பட்ட காலத்தில் 15 தொழிலதிபர்கள் இணைந்து எய்மா என்று சுருக்கமாக அழைக்கப்படும் அம்பத்தூர் தொழிற்பேட்டை, உற்பத்தியாளர்கள் சங்கத்தை தொடங்கினர்.
அரசின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட தொடர் முயற்சியால் அம்பத்தூர் தொழிற்பேட்டை அசுர வளர்ச்சி அடைந்தது. அரசாங்கத்துக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் பாலமாக செயல்படும் இந்த அமைப்பு சலுகைகள், மானியங்களை பெற்றுத்தந்து தொழிற்பேட்டையில் உள்ள நிறுவனங்களை ஊக்குவிக்கிறது.
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் கைவினைப் பொருட்கள், நகைகள், ஆயுர்வேத பொருட்கள், அழகு சாதன பொருட்கள், கிரானைட், தொல்பொருட்கள், பேப்பர் பொருட்கள், கம்ப்யூட்டர் உதிரிபாகம் தயாரிப்பு, ரப்பர் பொருட்கள் என்று பலவித பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன. அண்மை காலமாக வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு தொழிற்சாலைகள் இங்கு அதிகரித்து வருகின்றன.
தொழிற்பேட்டை ஆரம்பித்தபோது நூறுக்கும் குறைவாக இருந்த தொழிற்சாலைகளின் எண்ணிக்கை தற்போது 1,700க்கும் அதிகமாக பெருகி உள்ளது. பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையும் 2 லட்சத்தை தாண்டியுள்ளது. இதில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களும் பணியாற்றி வருகின்றனர்.
அம்பத்தூர் தொழில் நிறுவனங்களின் உற்பத்தி பொருட்களை உலக சந்தைக்கு கொண்டு செல்லும் விதமாகவும், உலகின் நவீன தொழில்நுட்பத்தை அம்பத்தூர் நிறுவனங்கள் பெரும் நோக்கத்திலும் தொழில் கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. இந்தாண்டு நடைபெற்ற கண்காட்சியில் பங்கேற்ற 425 நிறுவனங்களில் 80 நிறுவனங்கள் அயல்நாடுகளை சேர்ந்தவை. அடுத்ததாக மிகப்பெரிய கண்காட்சி நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அம்பத்தூர் தொழிற்பேட்டையின் வளர்ச்சி அதிகரிக்கும் அதே நேரம் சாலைகள், தண்ணீர் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் இந்தியாவுக்கே முன்மாதிரி தொழிற்பேட்டையாக மாறிக் கொண்டிருக்கிறது இது.
தொழிற்பேட்டையின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு புதிய பணியாளர்களை தேர்ந்தெடுத்து தரும் பயிற்சி அளிக்கின்றனர். ஏற்கனவே பணியாற்றும் பணியாளர்களுக்கு திறன்மேம்பாடு, கணினி பயிற்சி, மொழி மேம்பாடு ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதற்காக தொழில்நுட்ப பிரிவு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் வாகன உதிரிபாக தொழிற்சாலைகளே அதிகமாக உள்ளன. 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட இந்நிறுவனங்களின் வளர்ச்சிக்காக எந்திரங்களை இயக்க இளைஞர்களுக்கு சி.என்.சி எனப்படும் தொழிற்நுட்ப பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. 2,500 கோடி ரூபாய்க்கு மேல் உற்பத்தி நடைபெறும் இத்தொழிற்பேட்டையில் இருந்து 600 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனை மேலும் அதிகரிக்க அரசிடம் இருந்து உதவிகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது அம்பத்தூர் தொழிற்பேட்டை.
நாளும் பெருகி வரும் தொழிற்சாலைகள், அதிகரித்து வரும் அன்னிய செலாவணி வருவாய், பெருகி வரும் வேலைவாய்ப்புகள், பணியாளர்களுக்கான திறன்மேம்பாடு, தானும் வளர்ந்து ஏராளமானவர்களையும் வாழ வைத்துக் கொண்டிருக்கும் அம்பத்தூர் தொழிற்பேட்டை மாநிலத்தின் பிற தொழிற்பேட்டைகளுக்கு ஒரு முன்மாதிரியாக திகழ்கிறது!
2 லட்சம் தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்கும் இத்தொழிற்பேட்டையின் பல இடங்களில் ஆட்கள்தேவை போர்டுகள் தொங்கிக் கொண்டு இருப்பதை இத்தொழிற்பேட்டை தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருவதற்கு அத்தாட்சி. இந்த வளர்ச்சிதான் இத்தொழிற்பேட்டை ஆசியாவிலேயே முதன்மையானதாக மாற்றியுள்ளது.
இரயில் நிலையங்களுக்கு அருகாமை, பரந்து விரிந்த நிலப்பரப்பு, தட்டுப்பாடு இல்லாத தண்ணீர் வசதி, போக்குவரத்து தொடர்பு, தொட்டுவிடும் தூரத்தில் துறைமுகம் ஆகியவை அம்பத்தூர் தொழிற்பேட்டை அமைக்கப்பட அடிப்படை காரணங்களாகும். தொடங்கப்பட்ட காலத்தில் 15 தொழிலதிபர்கள் இணைந்து எய்மா என்று சுருக்கமாக அழைக்கப்படும் அம்பத்தூர் தொழிற்பேட்டை, உற்பத்தியாளர்கள் சங்கத்தை தொடங்கினர்.
அரசின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட தொடர் முயற்சியால் அம்பத்தூர் தொழிற்பேட்டை அசுர வளர்ச்சி அடைந்தது. அரசாங்கத்துக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் பாலமாக செயல்படும் இந்த அமைப்பு சலுகைகள், மானியங்களை பெற்றுத்தந்து தொழிற்பேட்டையில் உள்ள நிறுவனங்களை ஊக்குவிக்கிறது.
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் கைவினைப் பொருட்கள், நகைகள், ஆயுர்வேத பொருட்கள், அழகு சாதன பொருட்கள், கிரானைட், தொல்பொருட்கள், பேப்பர் பொருட்கள், கம்ப்யூட்டர் உதிரிபாகம் தயாரிப்பு, ரப்பர் பொருட்கள் என்று பலவித பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன. அண்மை காலமாக வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு தொழிற்சாலைகள் இங்கு அதிகரித்து வருகின்றன.
தொழிற்பேட்டை ஆரம்பித்தபோது நூறுக்கும் குறைவாக இருந்த தொழிற்சாலைகளின் எண்ணிக்கை தற்போது 1,700க்கும் அதிகமாக பெருகி உள்ளது. பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையும் 2 லட்சத்தை தாண்டியுள்ளது. இதில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களும் பணியாற்றி வருகின்றனர்.
அம்பத்தூர் தொழில் நிறுவனங்களின் உற்பத்தி பொருட்களை உலக சந்தைக்கு கொண்டு செல்லும் விதமாகவும், உலகின் நவீன தொழில்நுட்பத்தை அம்பத்தூர் நிறுவனங்கள் பெரும் நோக்கத்திலும் தொழில் கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. இந்தாண்டு நடைபெற்ற கண்காட்சியில் பங்கேற்ற 425 நிறுவனங்களில் 80 நிறுவனங்கள் அயல்நாடுகளை சேர்ந்தவை. அடுத்ததாக மிகப்பெரிய கண்காட்சி நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அம்பத்தூர் தொழிற்பேட்டையின் வளர்ச்சி அதிகரிக்கும் அதே நேரம் சாலைகள், தண்ணீர் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் இந்தியாவுக்கே முன்மாதிரி தொழிற்பேட்டையாக மாறிக் கொண்டிருக்கிறது இது.
தொழிற்பேட்டையின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு புதிய பணியாளர்களை தேர்ந்தெடுத்து தரும் பயிற்சி அளிக்கின்றனர். ஏற்கனவே பணியாற்றும் பணியாளர்களுக்கு திறன்மேம்பாடு, கணினி பயிற்சி, மொழி மேம்பாடு ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதற்காக தொழில்நுட்ப பிரிவு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் வாகன உதிரிபாக தொழிற்சாலைகளே அதிகமாக உள்ளன. 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட இந்நிறுவனங்களின் வளர்ச்சிக்காக எந்திரங்களை இயக்க இளைஞர்களுக்கு சி.என்.சி எனப்படும் தொழிற்நுட்ப பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. 2,500 கோடி ரூபாய்க்கு மேல் உற்பத்தி நடைபெறும் இத்தொழிற்பேட்டையில் இருந்து 600 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனை மேலும் அதிகரிக்க அரசிடம் இருந்து உதவிகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது அம்பத்தூர் தொழிற்பேட்டை.
நாளும் பெருகி வரும் தொழிற்சாலைகள், அதிகரித்து வரும் அன்னிய செலாவணி வருவாய், பெருகி வரும் வேலைவாய்ப்புகள், பணியாளர்களுக்கான திறன்மேம்பாடு, தானும் வளர்ந்து ஏராளமானவர்களையும் வாழ வைத்துக் கொண்டிருக்கும் அம்பத்தூர் தொழிற்பேட்டை மாநிலத்தின் பிற தொழிற்பேட்டைகளுக்கு ஒரு முன்மாதிரியாக திகழ்கிறது!
வெள்ளி, 19 நவம்பர், 2010
திருமணமானதும் நிர்வாண போட்டோ எடுத்துக் கொள்ளும் சீன ஜோடிகள்!
ஷாங்காய்: திருமணமானதும் சீன ஜோடிகள் செய்யும் முதல் காரியம் என்ன தெரியுமா... 'முதலிரவுதானே' என்று கேட்டு விடாதீர்கள்.
அதற்கு முன்பே, இந்த ஜோடிகள் நேராக ஸ்டுடியோக்களுக்குப் போகிறார்களாம். நிர்வாணமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை எடுத்துக் கொள்கிறார்களாம்.
ஏன் இந்த விபரீதம்?
'வேறு ஒன்றுமில்லை... திருமணமான பிறகு கணவன் -மனைவி இருவரின் உடல் அமைப்புமே மாறிப்போகிறது. இளமையாக, வனப்பாக இருக்கும்போதே ஒரு நிர்வாணப் படம் [^] எடுத்துக் கொண்டால், பின்னாளி்ல் பார்த்து மகிழ உதவுமே.. இன்னொன்று அதில் இருக்கும் கிக்கே தனி...!'
- இதுதான் அந்த ஜோடிகள் தரும் விளக்கம்.
சீன நாட்டு சட்டப்படி, இப்படி நிர்வாண புகைப்படங்கள் எடுத்துக் கொள்வது தப்பில்லையாம். அவற்றை பொதுவில் பார்வைக்கு விடுவதுதான் பெரிய குற்றமாம்.
இதற்கிடையே, இந்தமாதிரி படம் எடுக்க எந்த ஸ்டுடியோவையும் இனி அனுமதிக்கக் கூடாது என ஷாங்காய் திருமண வர்த்தக சங்கம் அரசை வலியுறுத்தியுள்ளது. ஆனால் தடைவிதிக்கக் கூடாது என நிர்வாணப் படம் எடுத்துக் கொண்ட ஏராளமான திருமண ஜோடிகள் குரல் கொடுத்துள்ளனர்.
20 கோடியைத் தாண்டிய ஏர்டெல் வாடிக்கையாளர்கள்!
சென்னை: நாட்டின் மிகப்பெரிய தனியார் தொலைபேசி நிறுவனமான ஏர்டெல்லின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 20 கோடியைத் தாண்டியுள்ளது.
இதைக் கொண்டாடும் வகையில் ஏர்டெல் நிறுவனம் தனது லோகோவை மாற்றி அமைத்துள்ளது. இந்த லோகோவில் ஆங்கில எழுத்து ஏ சிறிதாகவும் முன்னிலும் அழகிய ஸ்டைலிலும் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இளைஞர்களைக் கவரும் வகையில் புதிய பாடலையும் ஏ ஆர் ரஹ்மான் இசையில் வெளியிட்டுள்ளது ஏர்டெல்.
Read: In English
உலகின் 19 நாடுகளில் சேவைகளை வழங்கி வரும் ஏர்டெல், ஆப்ரிக்க மார்க்கெட்டில் மிகப் பெரிய சக்தியாகவும் உருவெடுத்து வருகிறது.
அடுத்த மாதத்துக்குள் ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு 3 ஜி சேவையை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.
க(தவை) ல்லூரிகளை தட்டும் வேலை வாய்ப்பு!
ஐடி தொழில்துறையில் ஏற்பட்டுள்ள அபரித வளர்ச்சியால், திறமைசாலி மாணவர்களை கொத்திக்கொண்டு போவதற்காக, ஐ.டி நிறுவனங்கள் நடத்தும் கேம்பஸ் இண்டர்வியூக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான என்ஜினியர்களை வேலைக்கு எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறி கனவுகளுடன் காத்திருக்கும் என்ஜினியரிங் மாணவர்களின் வயிற்றில் பால் வார்த்துள்ளன டிசிஎஸ், விப்ரோ மற்றும் இன்ஃபோசிஸ் உள்ளிட்ட ஐ.டி. நிறுவனங்கள்!
இதனால் எந்த ஆண்டிலும் இல்லாத வகையில் இந்த ஆண்டு வேலைக்கு அமர்த்தப்படும் என்ஜினியர்களின் எண்ணிக்கை உச்சத்தை தொடும் என்பதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன.
இதனால் வருகிற டிசம்பர் முதல் ஜனவரி மாதம் வரை என்ஜினியரிங் கல்லூரிகளில் கேம்பஸ் இண்டர்வியூ களைக்கட்டப்போகிறது.
சுமார் 1.77 லட்சம் பணியாளர்களை கொண்டுள்ள டிசிஎஸ், ஒவ்வொரு ஆண்டும் வேலைக்கு எடுக்கும் தனது பணியாளர்களில் 70 விழுக்காட்டினரை கேம்பஸ் இண்டவியூ மூலமாகவே தேர்வு செய்வது என்ற கொள்கையை கொண்டுள்ளது.2010 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் மட்டும் இந்நிறுவனம் சுமார் 24,000 பேர்களை பணிக்கு அமர்த்தியுள்ளது.
இது தொடர்பாக டிசிஎஸ் தலைமை நிர்வாகியும், நிர்வாக இயக்குனருமான என். சந்திரசேகரன் ," நடப்பு நிதியாண்டில் 30,000 பேரை வேலைக்கு எடுப்பதே எங்களது முதல் திட்டமாக இருந்தது.ஆனால் 50,000 பணியாளர்களுடன்தான் நாங்கள் நடப்பு ஆண்டு கணக்கை முடிப்போம் எனத் தெரிகிறது.அடுத்த நிதியாண்டில் இந்த ஆண்டைவிட அதிகமாகத்தான் எடுப்போமே தவிர குறைவாக எடுக்கமாட்டோம்" என்கிறார்.
தேசிய மென்பொருள் சேவை நிறுவனங்களின் சங்கமான "நாஸ்காம்' (NASSCOM), கேம்பஸ் இண்டர்வியூக்கான விதிமுறைகளை குறைத்துள்ளது.இதுவரை அந்த அமைப்பின் உறுப்பு நிறுவனங்கள் மட்டுமே என்ஜினியரிங் கல்லூரிகளில் எட்டாவது பருவத்தேர்வு( செமஸ்டர்) தொடங்கும்போது கேம்பஸ்க்குள் நுழைய அனுமதிக்கப்பட்டார்கள்.
ஆனால் தற்போது அந்த கெடுபிடிகள் குறைந்து, அதிக வேலை திட்டங்களை பெற்றுள்ள நிறுவனங்களும் தங்களது தேவைக்கேற்ற பணியாளர்களை வேலைக்கு அமர்த்திக்கொள்வதற்காக கேம்பஸ்க்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளதால், இந்த ஆண்டில் மிக அதிகவேலை வாய்ப்பு உருவாகி, ஏராளமானவர்களுக்கு வேலை கிடைக்கும்.
நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில், 30,000 பேரை வேலைக்கு எடுகப்போவதாக இன்ஃபோசிஸ் அறிவித்திருந்தது.ஆனால் செப்டம்பர் இறுதிக்குள்ளாகவே அந்த எண்ணிக்கையை அது 40,000 பேராக அதிகரித்துவிட்டது.முந்தைய நிதியாண்டில் இந்நிறுவனம் 61,000 பேரை இண்டர்வியூ செய்து, 26,200 பேருக்கு வேலை வழங்கியுள்ளதாக அதன் ஆண்டறிக்கை தெரிவிக்கிறது.
2010 மார்ச் மாதத்தின்படி, இன்ஃபோசிஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்களின் எண்ணிக்கை 1,13, 800 ஆக உள்ளது.இதில் 1.06,900 பேர் பயிற்சியாளர்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப பணியாளர்கள் ஆவர்.
இந்நிறுவனத்தின் தலைமை மக்கள் அதிகாரியான சங்கர் ஸ்ரீனிவாசன் கூறுகையில், " கடந்த ஓராண்டில்( 2009 அக்டோபர் முதல் 2010 செப்டம்பர் வரை) 27,500 க்கும் அதிகமான கூடுதல் பணியாளர்கள் எடுக்கப்பட்டனர்.தற்போது நாங்கள் கேம்பஸிலும், அனுபவம் வாய்ந்த பணியாளர்களை எடுப்பதிலும் தொடர்ந்து தீவிரமாக உள்ளோம். அதே சமயம் 2010 செப்டம்பருடன் முடிந்த இரண்டாவது காலாண்டில் மட்டும், சர்வதேச அளவில் நாங்கள் சுமார் 95,600 பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளோம்" என்றார்.
தொழில்துறையில் ஏற்பட்டுள்ள 20% வளர்ச்சி விகிதம் சுமார் 3,10,000 பணியாளர்கள் தேவையை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதில் ஒரு பகுதியினர் எம்பிஏ மற்றும் அக்கவுண்ட்ஸ் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களாகவும், சில பிரிவு பணியாளர்கள் உள்ளூரிலேயே கிடைக்கக்கூடியவர்களாகவும் இருப்பார்கள் என்று கூறுகிறார் பிரபல வேலைவாய்ப்பு ஆய்வாளரான ஆஷிஸ் சோப்ரா.
இந்த மதிப்பிட்டின்படி பார்த்தால், விப்ரோ, ஹெச்சிஎல் போன்ற நிறுவனங்கள், ஏராளனமானோரை வேலைக்கு எடுக்கவேண்டியதிருக்கும்.இதனால் அடுத்த ஓரிரு மாதங்களுக்கு என்ஜினியரிங் கல்லூரிகள் கேம்பஸ் இண்டர்வியூக்களால் அமளிதுமளிப்பட போகிறது!
இதனால் எந்த ஆண்டிலும் இல்லாத வகையில் இந்த ஆண்டு வேலைக்கு அமர்த்தப்படும் என்ஜினியர்களின் எண்ணிக்கை உச்சத்தை தொடும் என்பதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன.
இதனால் வருகிற டிசம்பர் முதல் ஜனவரி மாதம் வரை என்ஜினியரிங் கல்லூரிகளில் கேம்பஸ் இண்டர்வியூ களைக்கட்டப்போகிறது.
சுமார் 1.77 லட்சம் பணியாளர்களை கொண்டுள்ள டிசிஎஸ், ஒவ்வொரு ஆண்டும் வேலைக்கு எடுக்கும் தனது பணியாளர்களில் 70 விழுக்காட்டினரை கேம்பஸ் இண்டவியூ மூலமாகவே தேர்வு செய்வது என்ற கொள்கையை கொண்டுள்ளது.2010 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் மட்டும் இந்நிறுவனம் சுமார் 24,000 பேர்களை பணிக்கு அமர்த்தியுள்ளது.
இது தொடர்பாக டிசிஎஸ் தலைமை நிர்வாகியும், நிர்வாக இயக்குனருமான என். சந்திரசேகரன் ," நடப்பு நிதியாண்டில் 30,000 பேரை வேலைக்கு எடுப்பதே எங்களது முதல் திட்டமாக இருந்தது.ஆனால் 50,000 பணியாளர்களுடன்தான் நாங்கள் நடப்பு ஆண்டு கணக்கை முடிப்போம் எனத் தெரிகிறது.அடுத்த நிதியாண்டில் இந்த ஆண்டைவிட அதிகமாகத்தான் எடுப்போமே தவிர குறைவாக எடுக்கமாட்டோம்" என்கிறார்.
தேசிய மென்பொருள் சேவை நிறுவனங்களின் சங்கமான "நாஸ்காம்' (NASSCOM), கேம்பஸ் இண்டர்வியூக்கான விதிமுறைகளை குறைத்துள்ளது.இதுவரை அந்த அமைப்பின் உறுப்பு நிறுவனங்கள் மட்டுமே என்ஜினியரிங் கல்லூரிகளில் எட்டாவது பருவத்தேர்வு( செமஸ்டர்) தொடங்கும்போது கேம்பஸ்க்குள் நுழைய அனுமதிக்கப்பட்டார்கள்.
ஆனால் தற்போது அந்த கெடுபிடிகள் குறைந்து, அதிக வேலை திட்டங்களை பெற்றுள்ள நிறுவனங்களும் தங்களது தேவைக்கேற்ற பணியாளர்களை வேலைக்கு அமர்த்திக்கொள்வதற்காக கேம்பஸ்க்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளதால், இந்த ஆண்டில் மிக அதிகவேலை வாய்ப்பு உருவாகி, ஏராளமானவர்களுக்கு வேலை கிடைக்கும்.
நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில், 30,000 பேரை வேலைக்கு எடுகப்போவதாக இன்ஃபோசிஸ் அறிவித்திருந்தது.ஆனால் செப்டம்பர் இறுதிக்குள்ளாகவே அந்த எண்ணிக்கையை அது 40,000 பேராக அதிகரித்துவிட்டது.முந்தைய நிதியாண்டில் இந்நிறுவனம் 61,000 பேரை இண்டர்வியூ செய்து, 26,200 பேருக்கு வேலை வழங்கியுள்ளதாக அதன் ஆண்டறிக்கை தெரிவிக்கிறது.
2010 மார்ச் மாதத்தின்படி, இன்ஃபோசிஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்களின் எண்ணிக்கை 1,13, 800 ஆக உள்ளது.இதில் 1.06,900 பேர் பயிற்சியாளர்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப பணியாளர்கள் ஆவர்.
இந்நிறுவனத்தின் தலைமை மக்கள் அதிகாரியான சங்கர் ஸ்ரீனிவாசன் கூறுகையில், " கடந்த ஓராண்டில்( 2009 அக்டோபர் முதல் 2010 செப்டம்பர் வரை) 27,500 க்கும் அதிகமான கூடுதல் பணியாளர்கள் எடுக்கப்பட்டனர்.தற்போது நாங்கள் கேம்பஸிலும், அனுபவம் வாய்ந்த பணியாளர்களை எடுப்பதிலும் தொடர்ந்து தீவிரமாக உள்ளோம். அதே சமயம் 2010 செப்டம்பருடன் முடிந்த இரண்டாவது காலாண்டில் மட்டும், சர்வதேச அளவில் நாங்கள் சுமார் 95,600 பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளோம்" என்றார்.
தொழில்துறையில் ஏற்பட்டுள்ள 20% வளர்ச்சி விகிதம் சுமார் 3,10,000 பணியாளர்கள் தேவையை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதில் ஒரு பகுதியினர் எம்பிஏ மற்றும் அக்கவுண்ட்ஸ் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களாகவும், சில பிரிவு பணியாளர்கள் உள்ளூரிலேயே கிடைக்கக்கூடியவர்களாகவும் இருப்பார்கள் என்று கூறுகிறார் பிரபல வேலைவாய்ப்பு ஆய்வாளரான ஆஷிஸ் சோப்ரா.
இந்த மதிப்பிட்டின்படி பார்த்தால், விப்ரோ, ஹெச்சிஎல் போன்ற நிறுவனங்கள், ஏராளனமானோரை வேலைக்கு எடுக்கவேண்டியதிருக்கும்.இதனால் அடுத்த ஓரிரு மாதங்களுக்கு என்ஜினியரிங் கல்லூரிகள் கேம்பஸ் இண்டர்வியூக்களால் அமளிதுமளிப்பட போகிறது!
சந்தையை முறைபடுத்தும் அமைப்புகள் அவசியம்: ஐரோப்பிய மேம்பாட்டு வங்கி!
அரசின் கட்டுப்பாட்டைக் குறைத்து, சுதந்திரமான சந்தையை ஏற்படுத்துவது மட்டுமே பொருளாதார வெற்றியை உறுதி செய்துவிடாது என்று மறுகட்டுமானம் மற்றும் மேம்பாட்டிற்கான ஐரோப்பிய வங்கி (European Bank for Reconstruction and Development - EBRD) கூறியுள்ளது.
சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, பொதுவுடைமைக் கொள்கையை கடைபிடித்துவந்த ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் உள்ளதைப் போன்ற கட்டுப்பாட்டற்ற திறந்த சந்தைகளுக்கு மாறுவதற்கு உதவ உருவாக்கப்பட்ட வங்கியே மறுகட்டுமானம் மற்றும் மேம்பாட்டிற்கான ஐரோப்பிய வங்கி ஆகும்.
ஐரோப்பாவின் 29 நாடுகளில் தனது நடவடிக்கையின் பலன்களின் அடிப்படையில் பெற்ற தரவுகளை ஆராய்ந்து இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ள இந்த வங்கி, சந்தைகளை முறைப்பட்டுத்தக் கூடிய அரசு அமைப்புகள் அவசியம் என்று கூறியுள்ளது. இது, ஒரு திறந்த சந்தைப் பொருளாதாரத்தைச் சார்ந்த அதன் பழைய நிலைப்பாட்டில் இருந்து பெரும் விலகலாகும்.
“சந்தை சக்திகள் மீதும், தனியார் உடைமையின் மீதுமான அரசின் கட்டுப்பாடுகளை நீக்குவதே வெற்றிகரமான பொருளாதார வளர்ச்சியை நோக்கிய மாற்றமாக கருதப்பட்டது” என்கிற பழைய பார்வையில் இருந்து, “முறைப்படுத்தும் பொது (அரசு) அமைப்புகள் இல்லாமல் சந்தை சக்திகள் சரியாக செயல்படுவதில்லை” என்ற நிலைக்கு ஐரோப்பிய வங்கியின் அணுகுமுறை வந்துள்ளது.
“இப்படிப்பட்ட பொது முறைப்படுத்து அமைப்புகள், அரசு ஆதரவுடன் திறமையாக செயல்படவில்லையென்றால் சந்தைகள் முறையாக இயங்காது” என்று ஐரோப்பிய மேம்பாட்டு வங்கி கூறியுள்ளது.
வங்கிகளில் கடன் பெறுவோருக்கும், நுகர்வோருக்கும் பாதுகாப்பான, நியாயமான பரிமாற்றம் பெறுவதற்கு இப்படிப்பட்ட ஒழுங்குமுறை அமைப்புகள் பொருளாதாரத்தின் அங்கமாகத் திகழும் ஒவ்வொரு துறைக்கும் அவசியம் என்று கூறியுள்ள ஐரோப்பிய வங்கி, “இப்படிப்பட்ட ஒழுங்குமுறை அமைப்புகள் இல்லாமல், அரசுக்குச் சொந்தமான பொது நிறுவனங்களை விற்பதினாலும், தனியார் மயமாக்குவதாலும் திறன் மேம்பாடோ அல்லது நுகர்வோருக்கு உரிய பயன்களோ கிடைக்கமாட்டா” என்று கூறியுள்ளது.
அதேபோல், “அதிகமான, அடிப்படையற்ற அதிகமான கடன் வழங்கலை முறைப்படுத்தக் கூடிய பாதுகாப்பு அமைப்புகள் இல்லாமல், ஏற்படும் கடன் வளர்ச்சியோ அல்லது அதிகமான தனியார் வங்கிகள் தொடங்க அனுதிப்பதோ வளர்ச்சி போன்றதொரு மாயத் தோற்றத்தையே ஏற்படுத்தும்” என்று கூறியுள்ள ஐரோப்பிய வங்கி, “உள்நாட்டுத் தேவையை அதிகரிப்பது, ஏற்றுமதியை பெருக்குவது, சட்டத்தின் ஆட்சியை பலப்படுத்துவது, ஊழலை ஒழிப்பது ஆகியவற்றை கிழக்கு ஐரோப்பிய நாடுகள் கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
சந்தை சார் பொருளாதாரத்தை மிகவும் வலியுறுத்தி வந்த ஐரோப்பிய மேம்பாட்டு வங்கியின் சில பரிந்துரைகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் பல நாடுகளை பொருளாதாரச் சிக்கலில் தள்ளிவிட்டது என்ற குற்றச்சாற்றையடுத்தே அது தன்னளவில் இந்த சுய ஆய்வு செய்து மாற்றுத் திட்டத்தை பரிந்துரை செய்துள்ளது.
அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவு மிகப்பெரிய அளவிற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை பாதித்ததற்கும், அந்தச் சிக்கல் இன்றுவரை நீடிப்பதற்கும், ஐரோப்பிய மேம்பாட்டு வங்கி அளித்து யோசனைகள் முக்கிய காரணம் என்ற குற்றச்சாற்றும் இருந்தது.
இப்படிப்பட்ட நிலையில்தான், அரசுகளின் முறையாக கட்டுப்பாடின்றி இயங்கும் சந்தை பொருளாதாரம், சராசரி மக்களுக்கோ அல்லது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்காது என்ற நிலைக்கு ஐரோப்பிய வங்கி வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கருவை பாதிக்கும் பணியிடங்கள்!
சில தொழிற்சாலைகள் அல்லது தொழிற் கூடங்கள், கருவை பாதிக்கக் கூடிய அபாயத்தை ஏற்படுத்தலாம். அதாவது பணியிடங்களிலுள்ள சில சூழல்களும் வளரும் கருவைப் பாதிக்கின்றன.
குறிப்பாக அணு உலைக் கூடங்கள், ரசாயனத் தொழிற்சாலைகள், இரைச்சலும் அதிர்வும் கூடிய கனரக இயந்திரங்கள், அறுவைச் சிகிச்சையறை சூழல்கள், கதிர்வீச்சு சார்ந்த தொழில்கள் மற்றும் கதிரியக்கச் சிகிச்சைத் துறைகள் ஆகிய இடங்களில் பணிபுரியும் பெண்கள் கருத்தரிக்கும் சூழலில் அவை கருவைப் பாதிக்கின்றன;
இதுபோன்ற பணியிடங்களில் வேலை செய்யும் ஆண்களுக்கு உயிர் அணுக்களின் எண்ணிக்கைக் குறைவு, குறைபாடான அணுக்கள், ஆண்மையிழப்பு போன்ற பிரச்சனைகளும் ஏற்படுகின்றன.
குறிப்பாக, கதிர்வீச்சுக்கள், பாதசரம், பென்சீன், காரீயம் போன்ற சில ரசாயனங்கள் உள்ள இடங்களில் வேலை செய்வோருக்கும், மிகுந்த சிரமும், களைப்பும் ஏற்படுத்தும் வேலைகளைச் செய்வோருக்கும் இந்தப் பாதிப்புக்கள் அதிகம்.
எனவே, இதுபோன்ற பணியிடங்களில் வேலை செய்யும் பெண்கள், கருத்தரித்ததும் உடனடியாக தங்களது பணிச் சூழலை மாற்றிக் கொள்வது அவசியமாகிறது.
கரு பாதிக்கப்படக்கூடும் என சந்தேகித்ததால் உரிய முறையில் பரிசோதனைகள் மேற்கொள்வதோடு, தங்கள் மேலதிகாரிகளிடம் இதைப்பற்றி எடுத்துக்கூறி, பாதுகாப்பான வேறு பிரிவுகளுக்கு மாற்றல் வாங்கிக்கொள்ளலாம்.
பணியை மாற்றிக் கொள்ள இயலாது என்றால், பிரசவ காலம் வரை விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். எந்த வகையிலும், ஆபத்தான பணிச் சூழலில் கருத்தரித்த பிறகு வேலை செய்வதை தொடர வேண்டாம். அது உங்களுக்கும், உங்களது கருவிற்கும் பிரச்சினையை ஏற்படுத்தும்.
மேலும், எக்ஸ்-ரே எடுக்கும் வேலையையும், எக்ஸ்ரே அறைக்குள் அடிக்கடி சென்று வருவதையும் கருவுற்றப் பெண்கள் தவிர்க்க வேண்டும். கருவுற்ற சமயத்தில் ஏதேனும் உடல் உபாதைக்காக எக்ஸ்ரே எடுக்க வேண்டி வந்தால், வயிற்றுப் பகுதியை மிகவும் பாதுகாப்பான முறையில் மறைத்துவிட்டு பிறகுதான் எக்ஸ்ரே எடுக்க வேண்டும்.
கருவுற்ற பெண்கள் பலவற்றையும் கருத்தில் கொண்டு பணியாற்ற வேண்டும்.
குறிப்பாக அணு உலைக் கூடங்கள், ரசாயனத் தொழிற்சாலைகள், இரைச்சலும் அதிர்வும் கூடிய கனரக இயந்திரங்கள், அறுவைச் சிகிச்சையறை சூழல்கள், கதிர்வீச்சு சார்ந்த தொழில்கள் மற்றும் கதிரியக்கச் சிகிச்சைத் துறைகள் ஆகிய இடங்களில் பணிபுரியும் பெண்கள் கருத்தரிக்கும் சூழலில் அவை கருவைப் பாதிக்கின்றன;
இதுபோன்ற பணியிடங்களில் வேலை செய்யும் ஆண்களுக்கு உயிர் அணுக்களின் எண்ணிக்கைக் குறைவு, குறைபாடான அணுக்கள், ஆண்மையிழப்பு போன்ற பிரச்சனைகளும் ஏற்படுகின்றன.
குறிப்பாக, கதிர்வீச்சுக்கள், பாதசரம், பென்சீன், காரீயம் போன்ற சில ரசாயனங்கள் உள்ள இடங்களில் வேலை செய்வோருக்கும், மிகுந்த சிரமும், களைப்பும் ஏற்படுத்தும் வேலைகளைச் செய்வோருக்கும் இந்தப் பாதிப்புக்கள் அதிகம்.
எனவே, இதுபோன்ற பணியிடங்களில் வேலை செய்யும் பெண்கள், கருத்தரித்ததும் உடனடியாக தங்களது பணிச் சூழலை மாற்றிக் கொள்வது அவசியமாகிறது.
கரு பாதிக்கப்படக்கூடும் என சந்தேகித்ததால் உரிய முறையில் பரிசோதனைகள் மேற்கொள்வதோடு, தங்கள் மேலதிகாரிகளிடம் இதைப்பற்றி எடுத்துக்கூறி, பாதுகாப்பான வேறு பிரிவுகளுக்கு மாற்றல் வாங்கிக்கொள்ளலாம்.
பணியை மாற்றிக் கொள்ள இயலாது என்றால், பிரசவ காலம் வரை விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். எந்த வகையிலும், ஆபத்தான பணிச் சூழலில் கருத்தரித்த பிறகு வேலை செய்வதை தொடர வேண்டாம். அது உங்களுக்கும், உங்களது கருவிற்கும் பிரச்சினையை ஏற்படுத்தும்.
மேலும், எக்ஸ்-ரே எடுக்கும் வேலையையும், எக்ஸ்ரே அறைக்குள் அடிக்கடி சென்று வருவதையும் கருவுற்றப் பெண்கள் தவிர்க்க வேண்டும். கருவுற்ற சமயத்தில் ஏதேனும் உடல் உபாதைக்காக எக்ஸ்ரே எடுக்க வேண்டி வந்தால், வயிற்றுப் பகுதியை மிகவும் பாதுகாப்பான முறையில் மறைத்துவிட்டு பிறகுதான் எக்ஸ்ரே எடுக்க வேண்டும்.
கருவுற்ற பெண்கள் பலவற்றையும் கருத்தில் கொண்டு பணியாற்ற வேண்டும்.
மாதுளம் பழமும் மருத்துவச் சிறப்பும்!
மாதுளம் பழம் என்றாலே பெரும்பாலும் பலர் அதன் முத்துக்களின் சாரத்தை மட்டும் ருசித்துவிட்டு விதைகளை உமிழ்ந்துவிடுவார்கள்.
ஆனால் மாதுளம் பழத்தின் சத்தே அதன் விதைகளில்தான் அதிகம் உள்ளது என்பதை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.
பொதுவாக அக்டோபர் மாதத்திலிருந்து டிசம்பர் மாதத்திற்குள் பூத்துக் காய்த்து பழமாகும் மாதுளம் பழத்தின் சத்துக்களையும், மருத்துவச் சிறப்புகளையும் இப்போது பார்ப்போம்.
மாதுளம் பழத்தில் அதிகபட்சமாக நீர் சத்து 78 விழுக்காடு உள்ளது. புரதச்சத்து 1.6 விழுக்காடும், நார்ச்சத்து 5 விழுக்காடும், கார்போ ஹைட்ரேட் 14.5 விழுக்காடும், தாதுக்கள் 0.7 விழுக்காடும், சுண்ணாம்புச் சத்து 10 விழுக்காடும், மக்னீஷியம் 12 விழுக்காடும் அடங்கியுள்ளன.
இதுதவிர, சிலிக் திராவகம் 14 மில்லி கராம், கந்தகம் 12 விழுக்காடு, குளோரின் 20 விழுக்காடு, தயாமின் 0.46 விழுக்காடு, பாஸ்பரம் 1.33 விழுக்காடு, செம்பு 0.2 விழுக்காடு, நிக்கோடினிக் அமிலம் 0.30 விழுக்காடும் உள்ளன.
மேலும், வைட்டமின் சி சத்து 16 மில்லி கிராம் அளவிற்கு மாதுளத்தில் அடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மாதுளம் பழத்தைப் பொறுத்தவரை பூ, தோல், விதை என அனைத்துமே மருத்துவச் சிறப்பு வாய்ந்தவை.
மாதுளம் பூ, இரத்த வாந்தி, இரத்த மூலம், வயிற்றுக்கடுப்பு, சூடு முதலியவற்றை போக்கும். பூவை கஷாமாயம் செய்து குடித்தால் தொண்டை தொடர்பான பல பிணிகளும் அகலும்.
மாதுளம் பழ ரசம் தாதுவைப் பெருக்கும், வாந்தியை நிறுத்தும் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய்க் குறைபாடுகளை அகற்றும். இதுதவிர, காதடைப்பு, வெப்பக் காய்ச்சல், மந்தம், மயக்கம் ஆகியவற்றையும் பழ ரசம் விலக்கும்.
மாதுளம் பழ ரசத்துடன் ஒன்றரைப் பங்கு கற்கண்டு அல்லது வெள்ளைச் சர்க்கரை சேர்த்துப் பாகுபதத்தில் காய்ச்சி வைத்துக்கொண்டு சாப்பிட்டு வந்தால் பித்தம் தொடர்பாக ஏற்படக்கூடிய பிரச்சனைகள் நீங்கும்.
அன்றாடம் பாதி மாதுளம் பழம் அளவிற்கு நன்றாக மென்று சாப்பிட்டு வந்தால் மலக்கட்டு நீங்கி, நன்றாக மலம் இளகி இறங்கும்.
மாதுளம் பழச்சாறும், இஞ்சிச் சாறும் சம அளவு எடுத்து சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டால் எவ்வளவு கடுமையான இருமரும் குணமாகும்.
மாதுளம் பழத்தின் விதைகளை எடுத்து வெயிலில் உலர்த்திப் பொடி செய்து தினமும் பசும்பாலில் சிட்டிகை அளவு கலந்து சாப்பிட்டு வந்தால் தாது பலம் பெற்று உடலும் நலம் பெறும்.
இதுதவிர, மேலே குறிப்பிட்டதுபோல் தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டால் ஆண்மைக் குறைபாடு நீங்கும்.
திங்கள், 15 நவம்பர், 2010
ரத்தப் புற்று நோய் சிகிச்சைக்கு நிதியுதவி நாடும் 5 வயது சிறுவன்!
ஊட்டி: ரத்தப் புற்று நோய்க்கு சிகி்ச்சை பெற பண வசதி இல்லாமல், நிதியுதவி நாடி நிற்கிறான் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 5 வயது சிறுவன்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள மேல்ஓடன் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜு. இவரது மனைவி [^] பிந்து. இவர்களுக்கு தர்சித், தர்னேஷ் என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.
இதில் 5 வயதாகும் தர்னேஷ் ரத்தப் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளான். இந்த சிகிச்சைக்கு ரூ. 4 லட்சம் தேவைப்படும் என்று வேலூர் [^] கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், விவசாயக் கூலியாக இருக்கும் ராஜுவுக்கு தனது மகனுக்கு சிகிச்சை அளிக்கும் அளவுக்கு பண வசதியில்லை. எனவே தாராள மனம் படைத்தவர்கள் தர்னேஷின் சிகிச்சைக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மருத்துவ சிகிச்சைக்கு உதவிட விருப்பம் உள்ளவர்கள் உதவலாம்
மாஸ்டர் தர்னேஷ்
த/பெ ஹெச். ராஜு
எண் - 1 /69 B2 மேல் ஓடன் கிராமம்,
மிலித்தேன் அஞ்சல்,
கோத்தகிரி,
நீலிகிரி மாவட்டம் - 643 217.
செல் - 97860 24419.
சந்தில் சிந்து பாடும் ஆண்கள்!
காய்கறிக் கடைக்குப் போகிறோம். எல்லாம் வாங்கிய பின்னர் கொஞ்சம்போல கொத்தமல்லி கொசுறாக கேட்போம். கேட்பதுதான் கொஞ்சம், ஆனால் கடைக்காரர் கேட்டதற்கும் மேலாகவே கொடுத்தாலும் கூட, என்னப்பா இவ்ளோதானா, இன்னும் கொஞ்சம் கொடேன் என்று கேட்காதவர்களே கிடையாது. இதற்கு அடிப்படை காரணம்- ஆசை.
எது கிடைத்தாலும் இன்னும் கொஞ்சம் கூடுதலாக கிடைத்தால் நல்லாருக்குமே என்ற மனதின் அடித்தள ஆசைதான் இதற்கெல்லாம் காரணம். இது செக்ஸுக்கும் பொருந்தும்.
என்னதான் கிளி மாதிரி மனைவி [^] இருந்தாலும், குரங்கு போல ஒன்று கேட்குதாம் என்பார்கள் கிராமங்களில். இது உண்மைதான். எவ்வளவு அழகான மனைவி இருந்தாலும் அல்லது காதலி இருந்தாலும், ஆண்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் வேறு பெண்களுடன் உறவு வைத்துக் கொள்ளத் தயங்க மாட்டார்கள் என்கிறார் வில்லியம் நிக்கல்சன்.
நிக்கல்சன், இங்கிலாந்தின் பிரபல நாவலாசிரியரும், திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஆண்களைப் பொறுத்தவரை போதும் என்ற மனமே இல்லை. குறைந்தது செக்ஸ் விஷயத்தில்.
என்னதான் அழகான மனைவி இருந்தாலும் அல்லது காதலி இருந்தாலும், வாய்ப்பு கிடைத்தால், பின்விளைவுகள் இருக்காது என்று உறுதியாகத் தெரிந்தால் இன்னொரு பெண்ணுடன் உறவு வைக்க அவர்கள் தயங்க மாட்டார்கள்.
ஆண்களின் ஆசையும், செக்ஸ் ஆசையும் முற்றுப்புள்ளி இல்லாத தொடர் கதையாகவே உள்ளது. எவ்வளவு செக்ஸ் கிடைத்தாலும் அதை அனுபவிக்கவே அவர்கள் முயலுகிறார்கள். போதும் என்று நிறுத்திக் கொள்ள அவர்கள் விரும்புவதில்லை. வேடிக்கைக்காகவும், ஆசைக்காகவும்தான் இந்த கள்ள உறவுகளை அவர்கள் நாடுகிறார்கள்.
இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது பெண்கள் [^] தான். குறிப்பாக மனைவிகள். தங்களது கணவர்கள் நல்லவர்கள், ஒழுக்கமானவர்கள், பிறன் மனை நோக்காதவர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள். ஆனால் வாய்ப்பு கிடைத்தால் சந்தில் சிந்து பாடும் மன நிலைதான் அத்தனை ஆண்களுக்கும் என்பதை அவர்கள் பெரும்பாலும் அறிவதில்லை.
எனக்கு கல்யாணமாகி 22 ஆண்டுகளாகி விட்டது. இதுவரை எனது மனைவிக்கு நான் துரோகம் செய்ததில்லை. உண்மையாகவே துரோகம் செய்ததில்லை. ஆனால் நானும் ஒரு ஆண்தான். சராசரி ஆண்தான். எனது மனமும் அதுபோன்ற எண்ணங்களில் அலை பாய்ந்ததுண்டு. எனக்கும் வாய்ப்பு கிடைத்தால் நானும் அந்தத் தவறைச் செய்வேன்தான்-பின்விளைவுகள் இல்லாவிட்டால். ஆனால் நான் தவறு செய்தால் அதற்கான பின்விளைவுகள் உடனே என்னைத் தேடி வந்து விடும். எனவேதான் இதுவரை நான் அந்தத் தவறைச் செய்யவில்லை. செய்யும் வாய்ப்பும் இல்லை என்றே கருதுகிறேன் என்கிறார் நிக்கல்சன்.
ஆண்களைப் பொறுத்தவரை செக்ஸ் உணர்வு என்பது புற நிகழ்வுகளாகவே உள்ளதாக செக்ஸாலஜிஸ்டுகள் கூறுகிறார்கள். உணர்வுப்பூர்வமான செக்ஸ் உணர்வு அவர்களுக்கு வருவதில்லை. வெளி நிகழ்வுகளின் தூண்டுதலால் செக்ஸ் உணர்வை அவர்கள் அடைகிறார்கள். அந்த உணர்வை உடனடியாக வெளிப்படுத்தி விடவும் துடிக்கிறார்கள். இந்த போலியான உணர்வுகளுக்கு அவர்கள் காதல் [^] என்றும் பெயர் வைக்கத் தயங்குவதில்லை.
ஒரு பெண்ணுடன் உடலுறவுக்குத் துடிக்கும் ஆண்கள், அவர்களை உண்மையாக காதலிப்பதில் கவனம் செலுத்துவதில்லை, முக்கியத்துவம் தருவதில்லை. எனக்கு வாய்ப்பு கிடைத்தது, அந்தப் பெண்ணே சம்மதித்தாள், அதனால்தான் உறவு வைத்துக் கொண்டேன் என்று கூறும் ஆண்களே அதிகம். அதாவது பழியை பெண்கள் பக்கம் நைசாக திருப்பி விட்டு விடுகிறார்கள்.
நிக்கல்சன் தொடர்ந்து கூறுகையில், ஆண்களுக்கும், பெண்களுக்கும் செக்ஸ் உணர்வுகள் வேறுபாடானவை. பெண்கள் நம்பிக்கை அடிப்படையிலும், நீண்ட கால உறவின் அடிப்படையிலும்தான் பிறரிடம் தங்களை உடல் ரீதியாக ஒப்புவிக்க முன்வருவார்கள். இவன் நமக்கு நல்ல காவலனாக இருப்பான், இவனை நாம் நம்பலாம், இவனிடம் நம்மைக் கொடுத்தால் நலமாக இருக்கும் என்ற நம்பிக்கையில்தான் அவர்கள் ஒரு ஆணிடம் தங்களைக் கொடுக்க முன்வருகிறார்கள்.
ஆனால் ஆண்கள் அப்படி இல்லை. பெண்களின் நம்பிக்கையை குழி தோண்டிப் புதைப்பதைத்தான் முதலில் அவர்கள் செய்கிறார்கள். யாருடனும் நாம் உறவு கொள்ளலாம் என்ற முடிவுக்கு அவர்கள் வந்து விடுகிறார்கள். அதை உரிமையாகாவும் கருதிக் கொள்கிறார்கள். இதுதான் ஆண்களுக்கும், பெண்களுக்கும் செக்ஸ் விஷயத்தில் உள்ள ஒரு வேற்றுமை.
எது எப்படி இருந்தாலும், செக்ஸ் என்பது உடல் வேட்கைக்காக மட்டுமல்ல, அதில் சற்று உண்மையான உணர்வும் இருக்க வேண்டும் என்பதை இரு பாலினரும், குறிப்பாக ஆண்கள் புரிந்து கொள்ளுதல் நலம்.
காதல் என்பது...!
காதல். இதற்கு இதுதான் அர்த்தம் என்று இன்று வரை யாருமே வகுத்து வைக்கவில்லை. அது முடியாத காரியமும் கூட.
சிலர் காதலை புதிரானது என்கிறார்கள். அது ஒரு மாயம் என்பது சிலரின் கூற்று. சிந்தனையைத் தூண்ட உதவும் காதல் [^] , காதல் ஒரு மகிழ்ச்சியான அனுபவம், அது விவரிக்க முடியாத அனுபவம் என்பது சிலரின் வாதம். உற்சாகம் தருவது காதல், சொல்லித் தெரிவதில்லை காதல் என்றும் காதலுக்கு சிலர் வகுத்துள்ள இலக்கணங்கள்.
தத்துவ ஞானி பிளேட்டோ காதல் குறித்து என்ன கூறுகிறார் என்றால்- காதல் ஒருவரைத் தொடும்போது அவர் கவிஞராகிறார்.
அதையே வால்டேர் கூறும்போது, இயற்கை உருவாக்கிய அழகிய ஓவியம்தான் காதல். அதில், கற்பனையும் சேரும்போது அழகான காவியமாகிறது என்கிறார்.
காதலில் விழுந்தவர்கள் முதலில் கவிஞராகிறார்கள். பிறகு அவர்கள் பேசினாலே கவிதை [^] மழைதான்.
''நிலவு சுடும்
சூரியன் சுகமாகும்
காதல்''
காதலியை நினைத்து இரவெல்லாம் தூங்க முடியாமல் தவிக்கும் காதலனுக்கு நிலவு கூட தகிப்பை, தவிப்பைத் தருகிறது. ஆனால் அவளை சந்திக்கப் போகும் பகலை நினைத்தால் சூரியனின் அனல் கூட எனக்கு சுகமாகத் தெரிகிறதாம்.
''உன் சிரிப்பு என்னை பலவீனமாக்கி விட்டது
நான் பலம் பெற
மீண்டும் ஒரு முறை சிரியேன்''
அவளின் புன்னகையில் வீழ்ந்து போன அவனுக்கு மீண்டும் பலம் பெற அதே சிரிப்பு தேவைப்டுகிறது. காதலின் வினோதம் இது.
''தெளிவான வானமாய்
என் மனம் இருந்தும்
நீ
காதல் மேகமாய் நினைவில் வந்ததால்
எனக்குள் மழை''
இப்படி கவிதை அருவியில் அவர்கள் நனைகிறார்கள் உலகக் காதலர்கள்.
மார்ட்டின் லூதர் கிங்கிடம் காதல் குறித்து கேட்டபோது, வெறுப்புணர்வு வாழ்க்கையை முடமாக்குகிறது, காதல் வாழ்க்கையை உணர வைக்கிறது என்றார்.
கண்கள் சந்தித்த நொடியில் என் இதயத்தில் அவள் விழுந்தாள் என்பதுதான் காதல் வயப்பட்ட அத்தனை ஆண்களும் சொல்லும் ஒரே வார்த்தையாக உள்ளது. இப்படி காதலுக்கு உயர் மரியாதை கொடுத்தே அத்தனை பேரும் பேசியுள்ளனர், எழுதியுள்ளனர்.
அதேசமயம், இன்றுள்ள இளைஞர்களும் சரி, இளைஞிகளும் சரி காதல் எது, நட்பு எது என்று தெரியாமல் குழம்பிக் கிடக்கிறார்கள். ஆறுதலாக, பரிவாக, பாசமாக, தோழமையோடு யாராவது ஒரு பெண் பேசினால், உடனே அந்தப் பெண் மீது காதல் கொள்பவர்கள்தான் நிறையப் பேர் உள்ளனர். இன்னும் சிலருக்கு காதல் கொண்ட வேகத்திலேயே காமத்தின் தாக்கமும் ஏற்பட்டு குழப்பமாகி, கடைசியில் அந்தக் காதல் முறிந்து போய் சோகத்தில் மூழ்கிப் போய் விடும் நிலையையும் இன்று காண்கிறோம்.
காதல் பொறுமையானது, இரக்கமானது. பொறாமைக்கும், வெறுப்புக்கும் இங்கு இடமில்லை. பகிர்ந்து கொள்ளுதல், விட்டுக் கொடுத்தல், புரிந்து கொள்ளுதல் என்று பல நல்ல விஷயங்கள் கலந்ததுதான் காதல். பெருமைக்காக காதலைப் பயன்படுத்துவோர் பலர் உண்டு. அது காதலுக்கு பெரிய அவமரியாதை என்பதை அவர்கள் உணர்வதில்லை.
உண்மையும், நேர்மையும் கலந்த காதல் என்றும் அழிவதில்லை, தோற்பதில்லை என்பார்கள். காதலின் அடிப்படையும் கூட அதுதான். ஒரு பெண் ஒரு ஆணை ஏன் காதலிக்க முடிவு செய்கிறாள்? இவன் நம் மனதுக்கு ஒத்து வருபவனாக இருக்கிறான், இறுதிவரை உடன் வருவான், துயரங்களில் துணை இருப்பான், இவனின் சினேகிதம் ஆறுதல் தருகிறது என்ற எண்ணத்தில்தான். இது ஆண்களுக்கும் பொருந்தும். இந்த எண்ணங்கள் எந்தக் கோட்டில் உடைகிறதோ அந்த நொடியே அந்தக் காதலின் அஸ்திவாரம் தவிடு பொடியாகி விடுகிறது.
முழுமையான புரிந்து கொள்ளுதல், பாதுகாப்புணர்வு, முழுமையான நம்பிக்கை, உண்மையான நேசம், இன்ன பிறதான் ஒரு காதலை உயிர்ப்புடன், துடிப்புடன், உண்மையான காதலாக நீட்டிக்க வைக்கும்.
காமம் இல்லாத காதல் தவறா என்று கேட்கலாம். காதல் என்பது பால் என்றால், காமத்தை சர்க்கரை என்று கூறலாம். வெறும் பாலை சாப்பிட முடியும், ஆனால் வெறும் சர்க்கரையை எவ்வளவு தூரம் சாப்பிட முடியும்?. பாலும் வேண்டும், சர்க்கரையும் வேண்டும்-அளவோடு. அது காதலுக்கும், காமத்திற்கும் பொருந்தும்.
காதல் ஒரு மனிதனை முழுமையாக்க உதவுகிறது. ஏனோதானோவென்று இருக்கும் ஒருவன் காதல் வயப்பட்டவுடன் மாறிப் போவதை நாம் பார்க்கலாம். காதலுக்கு மட்டும்தான் அந்த சக்தி. அது ஏன் காதல் வயப்பட்டால் மட்டும் மாறுகிறார்கள். காதல் வயப்படுபவர்களுக்கு தன்னம்பிக்கை கூடுகிறது, புதிய அந்தஸ்து கிடைத்த சந்தோஷத்தில் தங்களை உயர்த்திக் கொள்ள விரும்புகிறார்கள். இதனால் ஏற்படுவதே இந்த மாற்றம்.
ஆண், பெண் இருவரின் உள்ளங்கள் நம்பிக்கை, நேசம், பாசம் ஆகிய இழைகளால் பிணைக்கப்படும்போது இருவரும் சேர்ந்து உயருகிறார்கள். நமக்கென்று ஒரு துணை இருக்கிறது என்ற நிலையை நினைக்கும்போது வரும் சந்தோஷம் அனுபவித்தால் மட்டுமே புரியக் கூடியது.
சரி உண்மையான காதலை எப்படி உணர்வது?
''நீ சிரித்தால்
எனக்குள் எதிரொலிக்கும்
காதல்''
இப்படித்தான் இருக்க வேண்டும், உண்மையான காதல் வயப்பட்டவர்களாக இருந்தால்.
உடல் ஈர்ப்பாக மட்டுமல்லாமல் மன ஈர்ப்பு ஏற்படும்போதான் உண்மையான காதலை உணர முடியும். நட்போடு பேசினால், நாலு வார்த்தை ஆசையாகப் பேசினால் உடனே காதல் என்று கூறி விட முடியாது. கவிதை எழுதுவது, பிடித்த பொருட்களை வாங்கித் தருவது, 'அவுட்டிங்' கூட்டிச் செல்வது, பணத்தை தாறுமாறாக செலவிடுவது- இதெல்லாமும் கூட காதலாகி விட முடியாது.
உணர்வுகளுக்கு அங்கு மதிப்பு இருக்க வேண்டும். பாசத்திலும், நேசத்திலும் பாசாங்கு இருக்கக் கூடாது. வெறும் வார்த்தையாக மட்டுமல்லாமல், உண்மையான செயல்பாடுகள் காணப்பட வேண்டும். உன் முன்னேற்றத்திற்கு நீ இப்படிச் செய்யலாம், இதை நீ செய்தால் சரியாக வரும். உனது உயர்வுக்கு இது உதவும் என்ற அறிவுரைகளில் உண்மையான காதலைக் காணலாம்.
காதல் என்றால் கூடவே எதிர்ப்பும் பின்னாலேயே நிற்கும். அதையும் உணர்ந்து, அதை எப்படி தாண்டுவது என்பதில் பாசிட்டிவான சிந்தனை இருக்க வேண்டும். அவசரம் காட்டுவது அலங்கோலத்திற்கு வழி வகுத்து விடலாம்.
உண்மையான காதல், மரியாதை, நம்பிக்கை, பாசப் பிணைப்பு ஆகியவற்றை பலமாக கொண்ட ஒரு அடித்தளமாகும். ஒற்றுமை, நல்லிணக்கத்தை ஏற்படுத்த உதவும் சக்திதான் காதல்.
எனவே, உண்மையாக காதலிப்போம், உண்மையான காதலைக் காதலிப்போம், காதலைக் கொண்டாடுவோம்.
ஃபேஸ்புக்கில் தெரிவிக்கக் கூடாத விடயங்கள்!
கூகுளையே மிரள வைக்கும் அளவுக்கு கிடுகிடு வளர்ச்சியை எட்டியுள்ள ஃபேஸ்புக் சமூக வலைத்தளம், இன்றைய இளைய சமூகத்தினரின் இணைய டைரி என்றால் அது மிகையில்லை.
அந்த அளவுக்கு நாட்டு நடப்பு முதல் வீட்டு நடப்பு வரை எல்லாவற்றையும் அதில் எழுதி தள்ளிவிடுகிறார்கள் ஆர்வத்தில் அலைமோதும் இளையதலைமுறையினர்!
நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதற்கான ஒரு வேடிக்கையான மற்றும் ஜாலியான வழிமுறை ஃபேஸ்புக் என்றாலும், இத்தகைய சமூக வலைத்தளங்களில் நம்மை பற்றிய குறிப்புகளை வெளியிடும்போது - குறிப்பாக பெண்கள் - மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.
அவ்வாறு எச்சரிக்கையாக இருக்கவேண்டியவை எந்த மாதிரியான விடயங்களில், எது எதை தெரிவிக்கலாம், எவற்றை தெரிவிக்கக்கூடாது என்பது குறித்து நிபுணர்கள் கூறுவதை பார்க்கலாம்.
" நமது சொந்த புகைப்படம் (மார்ஃபிங்கில் மாற்றப்படும் ஆபத்து) உள்பட சில வகையான புகைப்படங்களை நமது வலைப்பக்கத்தில் ஏற்றுவது ஆபத்தாக முடியலாம்.யாராவது அவதூறாக பேசலாம் அல்லது ஏதாவது குற்றத்திற்கோ அல்லது அதைவிட மோசமான நிகழ்வுகளுக்கோ ஆட்பட நேரிடலாம்.
"டேட்டா மைனிங்" - data mining - என்றழைக்கப்படும் கம்ப்யூட்டர் புரோகிராம்கள் உள்ளன. இவை ஃபேஸ்புக்கை துளாவி நமது பிறந்த தேதி, தொலைபேசி எண்கள், முகவரிகள் போன்றவற்றை எடுத்துவிடும். அப்படி கிடைக்கும் விவரங்கள் கிரிமினல் காரியங்களில் ஈடுபடுபவர்களுக்கு தங்கக்கட்டிக்கு சமமானவை" என்கிறார் பிரபல தகவல் தொழில்நுட்ப நிபுணரான டேவ் ஒயிட்லெக்.
எனவே பிறந்த தேதி, தொலைபேசி எண்கள், முகவரிகள் போன்றவற்றை ஃபேஸ்புக் தளத்தில் தெரிவிக்ககூடாது. இந்த விவரங்கள் திருடப்பட வாய்ப்புள்ள நிலையில், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்றவற்றின் இணைய பயன்பாட்டின்போது "பாதுகாப்பு கேள்விகள்" - security questions - , கடவுச்சொல் - password - ஆக கேட்கப்படுபவற்றில் மேற்கூறியவைதான் முதன்மை பங்காற்றுகிறது.
எனவே மேற்கூறிய விவரங்களை தெரிவிப்பது எத்தனை ஆபத்தானது என்பதை புரிந்துகொள்ளலாம்.
அதேப்போன்று, வங்கி விண்ணப்பங்கள், இணையத்தின் மூலமான வங்கி பண பரிவர்த்தனை போன்றவற்றில் நீங்கள் யார் என்பதன் அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொள்ள கேட்கப்படும் பாதுகாப்பு கேள்விகளில்,உங்களது தாயாரின் முதல் பெயர் என்ன என்பது கேட்கப்படுகிறது.
மேலும் நீங்கள் முதன் முதலில் படித்த பள்ளியின் பெயரும் கேட்கப்படுவது வழக்கமாக உள்ளது.
எனவே இத்தகைய விவரங்களையும் தெரிவிக்காமல் தவிர்ப்பது நல்லது.
அவ்வாறு செய்வது நமது அடையாள திருட்டை தவிர்க்க வைப்பதோடு, கொள்ளையர்கள் மற்றும் திருடர்களிடமிருந்தும் நம்மை காப்பாற்றும்.
மேலும் நீங்கள் உங்களது ஃபேஸ்புக் தளத்தில் உங்களது அன்றாட நடவடிக்கைகள் குறித்த தகவல்களை தெரிவிக்கும் வழக்கமுடையவர்களாக இருந்தால், " அடுத்த ஞாயிற்றுக்கிழமை வரை வீட்டில் இருக்கமாட்டேன்..., 2 ஆம் தேதி ஊருக்கு செல்கிறேன்; திரும்பி வர 10 நாட்கள் ஆகும்..." என்றெல்லாம் தெரிவிக்காதீர்கள்.
இப்படி தகவல்களை உளறிக்கொட்டுவது திருடர்களையும், கொள்ளையர்களையும் நாமே வெற்றிலை பாக்கு வைத்து நமது வீட்டிற்கு கொள்ளையடிக்க வர அழைப்பதற்கு சமமாகிவிடும்.
மேலும் சாதி, மதம், இனம் குறித்த அவதூறான கருத்துக்களை தெரிவிப்பதோ அல்லது சட்டவிரோத புகைப்படங்களை போடுவதோ கூடாது. அவ்வாறு செய்வது உங்களது வாழ்க்கைக்கே ஆபத்தாகக் கூட போய்விட வாய்ப்புள்ளது.
மேலும் நமது தொலைபேசி எண்களை குறிப்பிடுவதால், அதை வாங்குங்கள்...இதை வாங்குங்கள், லோன் தருகிறோம், மருத்துவக் காப்பீடு போடுங்கள்... என்றெல்லாம் வரும் தொ(ல்) லை பேசி அழைப்புகளையும் சந்திக்க வேண்டியதிருக்கும்.
அத்துடன் இப்போதெல்லாம் குழந்தைகள் கடத்தல் அதிகமாகி வருகிறது.அப்படி இருக்கையில் நம்மை பற்றிய விவரங்களை ஃபேஸ்புக் தளத்திலிருந்து சேகரித்துக்கொண்டு, நமது குழந்தைகள் பள்ளிக்கு செல்லும்போதோ அல்லது வெளியில் தனியாக செல்லும்போதோ நம்மை பற்றிய விவரங்களை கூறி, நான் உனது பெற்றோருக்கு தெரிந்தவன்தான் என்பதுபோல் காட்டிக்கொண்டு நமது குழந்தைகளை கடத்தவும் வாய்ப்புண்டு.
எனவே ஃபேஸ்புக் போன்ற தளங்களில் உங்களது பெயரை தவிர, உங்களைப்பற்றிய வேறு எவ்வித அந்தரங்க தகவல்களையும் தெரிவிக்காதீர்கள்!
வெள்ளி, 12 நவம்பர், 2010
மைனா விமர்சனம்!
ரிலீசுக்கு முன்பு ஆளாளுக்கு இந்த படம் பற்றி நிறைய பேசினார்கள். அவர்கள் பேசியதில் பாதியளவுக்கு மக்கள் பேசினாலே இந்த படம் தாறு மாறாக ஹிட். ஆனால் அது நடந்ததா? தியேட்டர் வாசலில் ஆயிரம் கருத்துகள். அதில் தொள்ளாயிரம், “படம் பருத்தி வீரன் மாதிரியே இருக்குப்பா” என்பதுதான். அந்த படத்திலேயும் ஒரு பொடியன் சண்டியர். இந்த படத்திலேயும் ஒரு பொடியன் சண்டியர். அந்த படத்திலும் குழந்தைகளின் பிஞ்சிலே பழுத்த காதலை காண்பித்தார் அமீர். இங்கேயும் அப்படியே டிட்டோ. இவற்றை தவிர்த்துவிட்டு பார்த்தால் மைனா, நிஜமான வலிதான்.
நடுத்தெருவுக்கு வந்த மைனாவின் குடும்பத்தை பார்த்து பரிதாபப்பட்டு தனது சொந்த ஊருக்கு அழைத்து வருகிறான் பொடியனான சுருளி. மைனா மட்டும் படிக்கிறாள். கொண்டு போய் விடுகிற வேலை சுருளிக்கு. சைக்கிள் சக்கரம் சுழலும்போதே மைனா ப்ளஸ் 2 வுக்கு வந்துவிடுகிறாள். சுருளி மட்டும் அந்த சைக்கிளை கூட மாற்றவில்லை. வயசுக்கு வந்த அவளுக்கு குச்சி கட்டுவது கூட சுருளியின் செலவில்தான். ஆனால் கட்டிக் கொடுப்பது மட்டும் யாருக்கோவாம். இந்த நேரத்தில் கோபம் கொள்கிற சுருளி, மைனாவின் அம்மாவை போட்டு புரட்டி எடுக்கிறார். பதினைந்து நாள் காவலில் சிறைக்கு போகிற அவர் திரும்பி வருவதற்குள் மைனாவுக்கு திருமணம் முடித்துவிட அம்மா கணக்கு போடுகிறாள். அது தெரிந்து சிறையிலிருந்து தப்பிக்கும் சுருளி, மைனாவை இழுத்துக் கொண்டு ஓடும்போதுதான் தேடி வரும் போலீஸ் பிடித்துக் கொள்கிறது.
இருவரையுமே தள்ளிக் கொண்டு போகும் போது கஞ்சா கேஸ் போட்டு ஆறு மாதம் உள்ளே தள்றேன். இவ தெருவுல பிச்சை எடுப்பா என்று போலீஸ் அதிகாரி சொல்வதால், மீண்டும் தப்பிக்கிறான் சுருளி. அப்புறம் போலீஸ் தேடிப்பிடித்து திரும்பவும் ஸ்டேஷனுக்கு வருவதற்குள் இந்த போலீசின் உயிரையே காப்பாற்றுகிறான் சுருளி. அதற்காக அவனை விடுவித்தார்களா? காதலியுடன் சேர்ந்தானா என்பதுதான் க்ளைமாக்ஸ்.
புதுமுகம் விதார்த்துக்கு நடிப்பு நன்றாக வருகிறது. சண்டைக்காட்சிகளில் மூர்க்கத்தனமான வேகம் காட்டுகிறார். அதற்காக சுப்ரமணியபுரம் ஜெய் மாதிரி காதல் வரும்போதெல்லாம் தலையை தலையை ஆட்டுவதுதான் கொடுமை. ஏன் சார். காதலிக்கிறது தப்பான்னு கேட்டு அழும்போது மட்டும் மனசை என்னவோ பண்ணுகிறார்.
சிந்து சமவெளியில் நடித்த அமலாதான் இதிலும் ஹீரோயின். அவர் காதலோடு விதார்த்தை பார்க்கும்போதெல்லாம், முந்தைய படம் நினைவுக்கு வந்து மேட்டருக்கு வர்றீயா என்பது போலவே இருக்கிறது. மற்றபடி மேக்கப் இல்லாத அமலா கூட அழகாகதான் இருக்கிறார். கடைசியில் இவரது முடிவு மிகவும் வருத்தத்திற்குரியதாக அமைந்துவிடுகிறது.
காமெடிக்கு என்று தனியாக நடிகர்களை போடாவிட்டாலும், முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் தம்பி ராமைய்யா அந்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். வடிவேலுக்கு டிராக் எழுதிக் கொண்டிருந்தாராம் இவர். பாடி லாங்குவேஜில் அது நன்றாகவே தெரிகிறது நமக்கு. இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் நபர் புதுமுகமாம். ஆச்சர்யமாகதான் இருக்கிறது. இவரது மனைவியாக நடித்திருக்கும் ராட்சசியை எங்குதான் பிடித்தார்களோ? அவரது கண்ணும் குரலும் கூட பேய் தனமாக இருக்கிறது.
திரையில் தோன்றும் நடிகர் நடிகைகளிடம் டைரக்டர் பிரபு சாலமன் வாங்கியிருக்கும் பர்பாமென்சில் கொஞ்சம் கூட குறையாமல் வாங்கியிருக்கிறார் டெக்னிகல் துறையிடமும். ஒளிப்பதிவாளர் சுகுமார், இசையமைப்பாளர் டி.இமான் இருவருமே அதிகம் ஸ்கோர் செய்திருக்கிறார்கள்.
படம் முடிந்த பின்பும் ஐந்து நிமிடங்களுக்கு நீள்கிறது ஷோ. நறுக்க வேண்டிய இடத்தில் நறுக்கியிருந்தால் எடிட்டருக்கும் ஒரு ஓ போட்டிருக்கலாம். மற்றபடி மைனா காதல் பட வரிசையில் ரொம்பவே முக்கியமானதுதான்.
ஊழல்: சோமாலியா முதலிடம்… இந்தியா 87 வது இடம்!!
பெர்லின்: ஊழல் மற்றும் முறைகேடுகளில் உலக அளவில் முதலிடத்தில் உள்ளது ஆப்பிரிக்க நாடான சோமாலியா. இந்தப் பட்டியலில் இந்தியாவுக்குக் கிடைத்துள்ள இடம் 87!
ஜெர்மனி தலைநகர் பெர்லினில் இயங்கும் ஊழல் கண்காணிப்பு நிறுவனம் உலக அளவில் ஊழலில் முன்னணி வகிக்கும் நாடுகள் பட்டியலை ஆண்டு தோறும் வரிசைப்படுத்தி வெளியிட்டு வருகிறது. 2010-ம் ஆண்டுக்கான அந்த பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
உலக நாடுகளில் உள்ள அதிகாரிகள், பொது மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடம் இருந்தும், ஊழல் தொடர்பாக பல்வேறு கேள்விகளை கேட்டு அதற்கு அவர்களிடம் இருந்து பதில்களை பெற்றது இந்த நிறுவனம்.
எந்தெந்த வேலைக்கு எவ்வளவு லஞ்சம் தரவேண்டியிருக்கிறது, தனியார் நிறுவனங்களில் பெறப்படும் லஞ்சம், அரசு ஊழியர்களின் முறைகேடுகள் போன்றவற்றின் அடிப்படையில் ஊழல் நாடுகள் பட்டியல் தயாரிக்கப்பட்டது.
அதன்படி சோமாலியா நாடுதான் ஊழலில் முதலிடத்தில் உள்ளது. இங்கு அரசுக்கு எதிராக தீவிரவாதிகள் வன்முறை செயல்கள், கொலை, கொள்ளை போன்றவற்றில் ஈடுபடுவதாகவும், இவற்றுக்கு அரசு அதிகாரிகளே பெருமளவு துணை போவதாகவும் தெரியவந்துள்ளது. இந்த ஊழலும் முரைகேடுகளும்தான் அந்த நாட்டை வறுமையில் பிடியில் நிரந்தரமாக வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஊழல் நாடுகள் பட்டியலில் ஜப்பான் 17வது இடத்திலும், இங்கிலாந்து 20-வது இடத்திலும், அமெரிக்கா 22-வது இடத்திலும், பாகிஸ்தான் 143-வது இடத்திலும் உள்ளன.
இந்தப் பட்டியலில் இந்தியா பெற்றுள்ள இடம்தான் பலரையும் ஆச்சர்யத்துக்குள்ளாக்கியுள்ளது. அரசு மற்றும் தனியார் துறைகளில், ஊழலில் புதிய இலக்கணமே படைத்துள்ள இந்தியா 87 வது இடம்பெற்றுள்ளது. கடந்த ஆண்டு 84வது இடத்திலிருந்தது. அதாவது ஊழலில் 3 புள்ளிகள் முன்னேற்றமடைந்துள்ளது!
அதே நேரத்தில் ஊழல் குறைந்த நாடுகள் வரிசையில் டென்மார்க், நியூசிலாந்து, சிங்கப்பூர், பின்லாந்து, சுவீடன், கனடா, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, சுவிட்சர்லார்ந்து, நார்வே, போன்ற நாடுகள் உள்ளன.
ஊழல் குறைந்த டாப் 10 நாடுகள் பட்டியலில் 10-க்கு 9.3 புள்ளிகளுடன் முதல் மூன்று இடங்களை வகிக்கின்றன டெனமமார்க், நியூஸிலாந்து மற்றும் சிங்கப்பூர்.
9.2 புள்ளிகளுடன் நான்காவது மற்றும் 5 வது இடத்தை வகிக்கின்றன பின்லாந்தும் ஸ்வீடனும்.
கனடா 8.9 புள்ளிகளுடன் 6 வது இடத்திலும், நெதர்லாந்து 8.8 புள்ளிகளுடன் 7வது இடத்திலும், ஸ்விட்ஸர்லாந்து 8.7 புள்ளிகளுடன் 8வது இடத்திலும், நார்வே 8.6 புள்ளிகளுடன் 9வது இடத்திலும் உள்ளன.
புள்ளிக் கணக்கில் சோமாலியா பெற்றுள்ளது 1.1 புள்ளி மட்டுமே.
2.4 புள்ளிகள் பெற்று 134வது இடம் பெற்றுள்ள பிலிப்பைன்ஸ்தான் ஆசியாவில் அதிக ஊழல் மலிந்த நாடு. ஆனால் கடந்த ஆண்டுக்கு இந்த ஆண்டு எவ்வளவோ பரவாயில்லையாம். 2009-ல் 139வது இடத்திலிருந்தது. 5 புள்ளிகள் முன்னேற்றம் கண்டுள்ளது!
ஆசிய கண்டத்தில் மிகவும் ஊழல் மலிந்த நாடுகளாக பாகிஸ்தான், இந்தோனேஷியா, ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான், நேபாளம், சாலமன் தீவுகள், மங்கோலியா, வியட்நாம், கம்போடியா, யேமன், ஈரான், தைமோர் – லெஸ்டே, சிரியா, மாலத்தீவுகள், லாவோஸ், பாபுவா நியுகினியா, லெபனான் ஆகிய நாடுகள் அதிக ஊழல் மலிந்தவையாக பட்டியலிடப்பட்டுள்ளன.
ஐரோப்பாவில் அதிக ஊழல் மிக்க நாடுகள் என்ற ‘பெருமை’ முன்னாள் சோவியத் யூனியன நாடுகளுக்கே கிடைத்துள்ளது. அவை: மால்டோவா, கொசோவா, கஜக்ஸ்தான், பெலாரஸ், அஜர்பைஜான், உக்ரைன், ரஷ்யா, தஜிகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான்!
மற்ற கண்டங்களில் ஊழல் நாடுகளின் வரிசை:
ஆப்ரிக்கா:
அல்ஜீரியா, செனகல், பெனின், கபான், எதியோப்பியா, மாலி, மொசாம்பிக், தான்சானியா, எரித்ரியா, மடகாஸ்கர், நைஜீரியா, சியர்ரா லியோன், டோகோ, ஜிம்பாப்வே, மொரிடானியா, காமரூன், கோட் டி ஐவரி, மத்திய ஆப்ரிக்க குடியரசு, கொமோரோஸ், காங்கோ- பிராஸாவில்லே, கினியா – பிஸோ, காங்கோ, கினியா
தென்னமெரிக்கா:
அர்ஜைன்டைனா, பொலிவியா, கயானா, ஈக்வடார், நிகாரகுவா, ஹோண்டுராஸ், ஹைதி, பராகுவே, வெனிசூலா.
குறிப்பு:
பட்டியலில் கடைசி இடம் பிடித்த நாடு ஊழலில் நம்பர் ஒன் என்றும், பட்டியலில் முதலிடம் பிடித்த நாடு ஊழலில் கடைசி இடம் என்றும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
உதாரணத்துக்கு சோமாலியாவுக்கு கடைசி இடம், அதாவது 178வது இடம் கிடைத்துள்ளது. அதனால் மிக மிக மோசமான ஊழல் மலிந்த நாடுகளில் முதலிடம். டென்மார்க்குக்கு பட்டியலில் முதலிடம் கிடைத்துள்ளது. அதாவது ஊழலில் கடைசி இடம் என்று அர்த்தம். இப்படி தலைகீழாகக் குறிப்பிடக் காரணம், வெளிப்படைத் தன்மை, ஊழல் நடக்கும் சூழல், விகிதம், வாய்ப்புகள் போன்ற பல criteria-க்களின் அடிப்படையில் 10-க்கு இத்தனை புள்ளிகள் என்று ஒவ்வொரு நாட்டுக்கும் குறிப்பிடப்படுகிறது.
அந்த அடிப்படையில் சோமாலியாவுக்கு 1.1 புள்ளிதான் கிடைத்துள்ளது. டென்மார்க்குக்கு அதிகபட்சமாக 9.3 புள்ளிகள் கிடைத்துள்ளன.
ஜெர்மனி தலைநகர் பெர்லினில் இயங்கும் ஊழல் கண்காணிப்பு நிறுவனம் உலக அளவில் ஊழலில் முன்னணி வகிக்கும் நாடுகள் பட்டியலை ஆண்டு தோறும் வரிசைப்படுத்தி வெளியிட்டு வருகிறது. 2010-ம் ஆண்டுக்கான அந்த பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
உலக நாடுகளில் உள்ள அதிகாரிகள், பொது மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடம் இருந்தும், ஊழல் தொடர்பாக பல்வேறு கேள்விகளை கேட்டு அதற்கு அவர்களிடம் இருந்து பதில்களை பெற்றது இந்த நிறுவனம்.
எந்தெந்த வேலைக்கு எவ்வளவு லஞ்சம் தரவேண்டியிருக்கிறது, தனியார் நிறுவனங்களில் பெறப்படும் லஞ்சம், அரசு ஊழியர்களின் முறைகேடுகள் போன்றவற்றின் அடிப்படையில் ஊழல் நாடுகள் பட்டியல் தயாரிக்கப்பட்டது.
அதன்படி சோமாலியா நாடுதான் ஊழலில் முதலிடத்தில் உள்ளது. இங்கு அரசுக்கு எதிராக தீவிரவாதிகள் வன்முறை செயல்கள், கொலை, கொள்ளை போன்றவற்றில் ஈடுபடுவதாகவும், இவற்றுக்கு அரசு அதிகாரிகளே பெருமளவு துணை போவதாகவும் தெரியவந்துள்ளது. இந்த ஊழலும் முரைகேடுகளும்தான் அந்த நாட்டை வறுமையில் பிடியில் நிரந்தரமாக வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஊழல் நாடுகள் பட்டியலில் ஜப்பான் 17வது இடத்திலும், இங்கிலாந்து 20-வது இடத்திலும், அமெரிக்கா 22-வது இடத்திலும், பாகிஸ்தான் 143-வது இடத்திலும் உள்ளன.
இந்தப் பட்டியலில் இந்தியா பெற்றுள்ள இடம்தான் பலரையும் ஆச்சர்யத்துக்குள்ளாக்கியுள்ளது. அரசு மற்றும் தனியார் துறைகளில், ஊழலில் புதிய இலக்கணமே படைத்துள்ள இந்தியா 87 வது இடம்பெற்றுள்ளது. கடந்த ஆண்டு 84வது இடத்திலிருந்தது. அதாவது ஊழலில் 3 புள்ளிகள் முன்னேற்றமடைந்துள்ளது!
அதே நேரத்தில் ஊழல் குறைந்த நாடுகள் வரிசையில் டென்மார்க், நியூசிலாந்து, சிங்கப்பூர், பின்லாந்து, சுவீடன், கனடா, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, சுவிட்சர்லார்ந்து, நார்வே, போன்ற நாடுகள் உள்ளன.
ஊழல் குறைந்த டாப் 10 நாடுகள் பட்டியலில் 10-க்கு 9.3 புள்ளிகளுடன் முதல் மூன்று இடங்களை வகிக்கின்றன டெனமமார்க், நியூஸிலாந்து மற்றும் சிங்கப்பூர்.
9.2 புள்ளிகளுடன் நான்காவது மற்றும் 5 வது இடத்தை வகிக்கின்றன பின்லாந்தும் ஸ்வீடனும்.
கனடா 8.9 புள்ளிகளுடன் 6 வது இடத்திலும், நெதர்லாந்து 8.8 புள்ளிகளுடன் 7வது இடத்திலும், ஸ்விட்ஸர்லாந்து 8.7 புள்ளிகளுடன் 8வது இடத்திலும், நார்வே 8.6 புள்ளிகளுடன் 9வது இடத்திலும் உள்ளன.
புள்ளிக் கணக்கில் சோமாலியா பெற்றுள்ளது 1.1 புள்ளி மட்டுமே.
2.4 புள்ளிகள் பெற்று 134வது இடம் பெற்றுள்ள பிலிப்பைன்ஸ்தான் ஆசியாவில் அதிக ஊழல் மலிந்த நாடு. ஆனால் கடந்த ஆண்டுக்கு இந்த ஆண்டு எவ்வளவோ பரவாயில்லையாம். 2009-ல் 139வது இடத்திலிருந்தது. 5 புள்ளிகள் முன்னேற்றம் கண்டுள்ளது!
ஆசிய கண்டத்தில் மிகவும் ஊழல் மலிந்த நாடுகளாக பாகிஸ்தான், இந்தோனேஷியா, ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான், நேபாளம், சாலமன் தீவுகள், மங்கோலியா, வியட்நாம், கம்போடியா, யேமன், ஈரான், தைமோர் – லெஸ்டே, சிரியா, மாலத்தீவுகள், லாவோஸ், பாபுவா நியுகினியா, லெபனான் ஆகிய நாடுகள் அதிக ஊழல் மலிந்தவையாக பட்டியலிடப்பட்டுள்ளன.
ஐரோப்பாவில் அதிக ஊழல் மிக்க நாடுகள் என்ற ‘பெருமை’ முன்னாள் சோவியத் யூனியன நாடுகளுக்கே கிடைத்துள்ளது. அவை: மால்டோவா, கொசோவா, கஜக்ஸ்தான், பெலாரஸ், அஜர்பைஜான், உக்ரைன், ரஷ்யா, தஜிகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான்!
மற்ற கண்டங்களில் ஊழல் நாடுகளின் வரிசை:
ஆப்ரிக்கா:
அல்ஜீரியா, செனகல், பெனின், கபான், எதியோப்பியா, மாலி, மொசாம்பிக், தான்சானியா, எரித்ரியா, மடகாஸ்கர், நைஜீரியா, சியர்ரா லியோன், டோகோ, ஜிம்பாப்வே, மொரிடானியா, காமரூன், கோட் டி ஐவரி, மத்திய ஆப்ரிக்க குடியரசு, கொமோரோஸ், காங்கோ- பிராஸாவில்லே, கினியா – பிஸோ, காங்கோ, கினியா
தென்னமெரிக்கா:
அர்ஜைன்டைனா, பொலிவியா, கயானா, ஈக்வடார், நிகாரகுவா, ஹோண்டுராஸ், ஹைதி, பராகுவே, வெனிசூலா.
குறிப்பு:
பட்டியலில் கடைசி இடம் பிடித்த நாடு ஊழலில் நம்பர் ஒன் என்றும், பட்டியலில் முதலிடம் பிடித்த நாடு ஊழலில் கடைசி இடம் என்றும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
உதாரணத்துக்கு சோமாலியாவுக்கு கடைசி இடம், அதாவது 178வது இடம் கிடைத்துள்ளது. அதனால் மிக மிக மோசமான ஊழல் மலிந்த நாடுகளில் முதலிடம். டென்மார்க்குக்கு பட்டியலில் முதலிடம் கிடைத்துள்ளது. அதாவது ஊழலில் கடைசி இடம் என்று அர்த்தம். இப்படி தலைகீழாகக் குறிப்பிடக் காரணம், வெளிப்படைத் தன்மை, ஊழல் நடக்கும் சூழல், விகிதம், வாய்ப்புகள் போன்ற பல criteria-க்களின் அடிப்படையில் 10-க்கு இத்தனை புள்ளிகள் என்று ஒவ்வொரு நாட்டுக்கும் குறிப்பிடப்படுகிறது.
அந்த அடிப்படையில் சோமாலியாவுக்கு 1.1 புள்ளிதான் கிடைத்துள்ளது. டென்மார்க்குக்கு அதிகபட்சமாக 9.3 புள்ளிகள் கிடைத்துள்ளன.
இந்தியாவில் வசிப்பது இனி ரொம்ப காஸ்ட்லி சமாச்சாரம்!
ஒரு காலமிருந்தது… மாதம் ரூ 4000 சம்பளம் கிடைத்தால் போதும், வீடு, வாகனம், வசதியான வாழ்க்கை என நிம்மதியாக இருக்கலாம் இந்தியாவில், என்ற காலம் ஒன்றிருந்தது.
ஆனால் இன்று… ரூ 40 ஆயிரம் சம்பளம் வாங்கினாலும் மாதக் கடைசி கடன்கள் நின்றபாடில்லை. வருமானம் இருக்கிறதோ இல்லையோ, விலை கூடவோ குறைவோ… தேவைக்கும் அதிகமாகவே நுகர் பொருள்களை வாங்கிக் குவிக்கிறார்கள். நுகர்வுக் கலாச்சாரம் என்ற பெயரில், பெரும் கடனாளிகளாகிக் கொண்டிருக்கும் நிலை.
இந்த நுகர்வுக் கலாச்சாரத்தை கண்ணை மூடிக் கொண்டு அனுபவிக்கத் தொடங்கியதன் விளைவு… கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் நாட்டின் விலைவாசி சராசரியாக 126 சதவீதம் உயர்ந்துவிட்டது.
மத்திய அரசின் புள்ளி விவரத்துறை அறிக்கையின்படி, இந்தியாவின் பெரும்பான்மை மக்களின் உணவான அரிசி விலை 2006-ல் குவின்டாலுக்கு ரூ 3031 ஆக இருந்தது. இன்று அதே அரிசி, அதே எடை, ஆனால் விலை ரூ 6859!
வெங்காயத்தின் விலை 98 சதவீதம் உயர்ந்துள்ளது. இறைச்சியின் விலை 44 சதவீதத்திலிருந்து 80 சதவீதம் வரை உயர்ந்துள்ளது (கோழி / ஆடு). மீன் விலை 200 சதவீதம் உயர்ந்துள்ளது! 25 ரூபாய் விற்ற ஒரு கிலோ பூண்டு, ரூ 200-ல் வந்து நிற்கிறது. இவையெல்லாம் சும்மா… சாம்பிள்கள்தான்.
நுகர்வோர் விலைக் குறியீட்டெண்களைப் பொறுத்தவரை 30 சதவீத உயர்வு காணப்படுகிறது. இதற்கு முன் எப்போதுமே பார்த்திராத மோசமான விலை உயர்வு, என அலறுகிறார்கள் நிபுணர்கள்.
பொருளியல் நிபுணர்களிடம் பேசியதில், “இந்த விலை உயர்வு பற்றி வெளிவந்திருக்கும் விவரங்கள் எல்லாமே, ஐஸ் மலையின் ஒரு சிறிய நுனிப்பகுதிதான். அதற்குக் கீழே உள்ள பிரமாண்ட ஐஸ் மலை இருக்கிறதே… அதுதான் இந்த நாட்டின் பொருளாதார முதுகெலும்பையே உடைக்கக் கூடியதாக உள்ளது. யார் சொல்லி இந்த லைஃப் ஸ்டைலுக்கு மாறினோம்…. நாமாக… விளம்பரங்கள், மார்க்கெட்டிங் உத்திகளைப் பார்த்துத்தானே… இப்போதாவது ஒரு நிதானத்துக்கு வரவேண்டும் மக்கள் . இல்லாவிட்டால், இந்தக் கப்பல், விலை என்ற ஐஸ் மலையில் மோதிச் சிதறுவதைப் பார்த்துக் கொண்டு அழும் அமெரிக்க நிலைதான் இந்தியாவுக்கும்…” என்கின்றனர் கவலையுடன்.
நாட்டின் நான்கு பெரு நகரங்களில் விலை நிலையை ஆராய்ந்ததில், இருப்பதிலேயே தலை நகர் டெல்லியில் பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு உள்ளது. ஆனால் சென்னை மகா மோசம். நாட்டின் சராசரி விலைவாசி உயர்வை விட அதிகமாக, 146 சதவீத உயர்வாக உள்ளது.
லைஃப்ஸ்டைல் மாற்றம்தான் இந்த மோசமான நிலைக்குக் காரணம் என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்கின்றனர் பொருளியலறிஞர்கள். இந்த லைஃப்ஸ்டைல்தான் ஒவ்வொரு குடும்பமும் மருத்துவ செலவுக்கென்று தனி பட்ஜெட் போட வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளியுள்ளது. வாழ்க்கை, சுகாதாரம்… இரண்டையுமே பாதித்துள்ள இந்த நவீன வாழ்க்கை முறை விபத்தில் முடியும் முன், இப்போது தேவை ஒரு உடனடி ப்ரேக்!
அதை எப்படி, எந்த கட்டத்தில் போட்டுக் கொள்ளப் போகிறோம்?
‘விரிவுரையாளர் பதவிக்கு ‘எம்பில்’ போதுமா?’
சென்னை: கல்லூரி விரிவுரையாளர் பதவிக்கு எம்.பில். பட்டதாரிகள் தகுதியானவர்களா? என்பது குறித்து 8-ந் தேதிக்குள் (திங்கட்கிழமை) பதில் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,025 விரிவுரையாளர் பணி இடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. பல்கலைக்கழக மானியக்குழுவின் (யு.ஜி.சி.) புதிய உத்தரவுப்படி, விரிவுரையாளர் பதவிக்கு ஸ்லெட் அல்லது நெட் தகுதி தேர்வில் தேர்ச்சி அல்லது பி.எச்டி. பட்டம் அவசியம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கல்லூரி விரிவுரையாளர் பதவிக்கு எம்.பில். கல்வித்தகுதியே போதுமானது என்று யு.ஜி.சி. முன்பு அறிவித்திருந்தது. பழைய விதிமுறைப்படி, 1993-ம் ஆண்டுக்கு முன்பு எம்.பில். முடித்தவர்களுக்கு ஸ்லெட், நெட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. எனவே விரிவுரையாளர் பதவிக்கு எம்.பில். தகுதியே போதுமென்ற நிலை இருந்தது.
இதனால் 1993-க்கு முன்பு எம்பில் முடிந்த பலர் ஸ்லெட்-நெட் தேர்வுகளை எழுதவில்லை.
பி.எச்டி. அல்லது ஸ்லெட், நெட் தேர்ச்சி கட்டாயமாக்கி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள விரிவுரையாளர் பணி நியமன அறிவிப்பினை ரத்துசெய்ய வேண்டும் என்று சென்னை நீதிமன்றத்தில் ஏராளமானோர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த விசாரணையின்போது, யு.ஜி.சி. உத்தரவின்படிதான் விரிவுரையாளர் பதவிக்கு தகுதி நிர்ணயிக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொண்ட முதலாவது டிவிஷன் பெஞ்சு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது யு.ஜி.சி. சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, “கல்லூரி விரிவுரையாளர் பதவிக்கு எம்.பில். பட்டதாரிகளையும் அனுமதிப்பது தொடர்பாக கடந்த 12.8.2010 அன்று யு.ஜி.சி. தீர்மானம் நிறைவேற்றி அதை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி உள்ளதாகவும், இதுவரை அதுகுறித்து தகவல் ஏதும் வரவில்லை” என்று தெரிவித்தார்.
மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ரவீந்திரன், மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடமிருந்து ஒப்புதல் தொடர்பாக தனக்கு தகவல் ஏதும் கிடைக்கவில்லை என்று கூறினார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், “விரிவுரையாளர் பதவிக்கு எம்.பில். பட்டதாரிகள் தகுதியானவர்கள்தானா?” என்பது தொடர்பாக யு.ஜி.சி. அனுப்பிய தீர்மானத்தின் மீது மத்திய அரசு எடுத்த நடவடிக்கை குறித்து வருகிற 8-ந் தேதிக்குள் தெரிவிக்குமாறு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுக்கு உத்தரவிட்டனர்.
மேற்கண்ட தேதிக்குள் தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றால் விரிவுரையாளர் பணி நியமன அறிவிப்பு ரத்து செய்யப்பட்டு, எம்.பில். கல்வித் தகுதி ஏற்றுக்கொள்ளப்பட்டதாக கருதப்படும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
'அந்த' நேரத்தில் என்ன யோசனை?
பெண்கள் மனதைக் கண்டறிவது என்பது ரொம்பக் கஷ்டமான விஷயம்தான். என்னதான் 'நூல்' விட்டுப் பார்த்தாலும், இதைத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார் என்று எந்தப் பெண்ணையுமே சரியாக கணித்து விட முடியாது.
கடலின் ஆழத்தை அறிந்து விடலாம், ஆனால் பெண்ணின் மனதை புரிந்து கொள்ள முடியாது என்று ஒரு பழைய பழமொழி ரொம்ப காலமாக உலா வருகிறது. அது கிட்டத்தட்ட உண்மை என்று கூடச் சொல்லலாம்.
ஆனால் செக்ஸில் ஈடுபட்டிருக்கும் ஒரு பெண் தனது உச்ச நிலையின்போது (ஆர்கஸம்) என்ன நினைத்துக் கொண்டிருப்பார் என்பதை அறியலாம் என அமெரிக்க ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. ஆர்கஸத்தின்போது பெண்களின் மூளை எதை யோசித்துக் கொண்டிருக்கும் என்பதை ஸ்கேனிங் மூலம் தெரிந்து கொள்ள முடியுமாம்.
இதுகுறித்து ஆய்வை மேற்கொண்ட ரட்ஜர்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறுகையில், செக்ஸ் உறவின்போது, குறிப்பாக செக்ஸ் உணர்வுகள் உச்சத்தை அடையும்போது பெண்களின் நரம்பு மண்டலம் வழக்கத்தை விட அதி வேகத்தில் துடிக்கும். செக்ஸ் அல்லாத சமயத்தில் இதுபோல நடந்தால் பெரும் வலியை உணர நேரிடும். ஆனால் செக்ஸின்போது இது தூண்டப்படுவதால் வலிக்குப் பதில் மகிழ்ச்சி உணர்வுதான் கூடும். ஆர்கஸத்தின்போது எந்தப் பெண்ணுமே இந்த நரம்பு மண்டலத் துடிப்பை உணர்வதில்லை.
ஆர்கஸத்தின்போது பெண்களின் மூளையின் 30 பகுதிகள் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக உணர்ச்சி, தொடுதல், மகிழ்ச்சி, திருப்தி, நினைவு ஆகிய செயல்களை கட்டுப்படுத்தும் பகுதிகள் இதில் முக்கியமானவை.
எங்களது ஆய்வுக்காக நாங்கள் எட்டு பெண்களைத் தேர்வு செய்தோம். அவர்களை மூளைக் கட்டிகளை கண்டறியப் பயன்படுத்தப்படும் எம்ஆர்ஐ ஸ்கேனரில் படுக்க வைத்து அவர்கள் மீது போர்வையைக் கொண்டு மூடினோம். பின்னர் அந்தப் பெண்களிடம் ஸ்டிமுலேட்டரைக் கொடுத்து செக்ஸ் உணர்வுக்கு வர வைத்தோம்.
சில பெண்களுக்கு ஐந்து நிமிடத்திற்குள்ளாகவே ஆர்கஸம் ஏற்பட்டது. சிலருக்கு 20 நிமிடம் வரை ஆனது.
அந்த சமயத்தில், அவர்களின் மூளை செயல்பாடுகளை ஸ்கேனர் மூலம் ஆய்வு செய்தோம். ஆர்கஸத்தின்போது ஒவ்வொரு இரண்டு விநாடிக்கு ஒருமுறை எந்த பகுதி ஆக்டிவாக இருக்கிறது என்பதை ஆராய்ந்தோம். இதை படமாகவும் எடுத்தோம்.
ஆர்கஸத்திற்கு 2 நிமிடங்களுக்கு முன்பு உணவு சாப்பிடுவது, மது அருந்துவது போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் மூளைப் பகுதி ஆக்டிவாக இருந்தது தெரியவந்தது.
பெண்கள் உச்ச நிலையை எட்டிய சில விநாடிகளிலேயே தொடுதல் உணர்வைக் கட்டுப்படுத்தும் பகுதிகள், உடலுக்கு சிக்னல்களை கடத்தும் தலாமஸ் போன்றவை பாதிக்கப்பட்டதை அறிய முடிந்தது.
அதேபோல ஆர்கஸம் தொடங்கியவுடனேயே உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் மூளையின் பகுதிகள் தூண்டுவிக்கப்பட்டதை அறிய முடிந்தது.
கடைசியாகத்தான் உடல் சூடு, பசி, தாகம், சோர்வு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் மூளையின் கட்டுப்பாட்டுப் பகுதி அமைந்துள்ள ஹைபோதலாமஸ் தூண்டப்பட்டது.
ஆர்கஸத்தின்போது நினைவை கட்டுப்படுத்தக் கூடிய காடேட் நியூக்ளியஸ், நியூக்ளியஸ் அக்கும்பென்ஸ் (இது மகிழ்ச்சியை தூண்டும் பகுதி) ஆகியவையும் தூண்டப்பட்டதை அறிய முடிந்தது.
இந்த ஆய்வின்போது ஆர்கஸத்தை சந்தித்த பெண்கள் பலமுறை கைகளை மேல உயர்த்தினர். இதன் மூலம் அவர்கள் அதிக அளவிலான ஆர்கஸத்தை விரும்புவதை உணர முடிந்தது. மேலும் ஆர்கஸம் நீண்ட நேரம் நீடிப்பதையே பெண்கள் விரும்புகிறார்கள் என்பதையும் அறிய முடிந்தது. மேலும் தொடர்ச்சியான ஆர்கஸத்தை பெண்கள் வரவேற்பதையும் உணர முடிந்தது என்றனர்.
வழக்கமாக பெண்களுக்கு சராசரியாக 10 முதல் 15 விநாடிகள் வரை உச்ச நிலை நீடிக்கும். அதேசமயம், ஆண்களுக்கு இது 6 விநாடிகளிலேயே முடிந்து போய் விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்கஸத்தின்போது என்ன நினைக்கிறோம் என்பது முக்கியமில்லை, பழைய காதலரையோ அல்லது பழைய காதலியையோ நினைக்காமல் இருக்க வேண்டும். அதுதான் ரொம்ப முக்கியம். இல்லாவிட்டால் 'ஆர்கஸம்' முடிந்ததும் 'அஜிட்டேஷன்' ஆரம்பித்து விடும்!
சென்னை அருகே 960 வீடுகளுடன் டாடா குடியிருப்பு-டாடா ஹவுசிங் திட்டம்!
சென்னை: டாடா ஹவுசிங் நிறுவனம் சென்னை அருகே 960 வீடுகளுடன் புதிய குடியிருப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
படப்பை அருகே கிரஸன்ட் லேக் ஹோம்ஸ் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படும் இந்த புதிய குடியிருப்பில் மொத்தம் 960 வீடுகள் விற்பனைக்கு உள்ளன.
இது குறித்து டாடா ஹவுசிங் நிறுவனம் நேற்று அறிவித்துள்ளதாவது:
கிரஸன்ட் லேக் ஹோம்ஸ் திட்டம் தாம்பரத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவிலும், வண்டலூர் ரெயில் நிலையத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவிலும், படப்பை நகரில் இருந்து 3 கி.மீ தொலைவிலும், ஓரகடம் ஜங்ஷனில் இருந்து 4 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இதன் அருகில் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் அமைந்துள்ளன.
சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த வளாகத்துக்கு வந்து செல்ல நெடுஞ்சாலை உள்ளது. முனிசிபாலிட்டிக்கு சொந்தமான ஏரி இந்த திட்டத்தின் லேண்ட்மார்க்காக உள்ளது. வீடுகள் ஒவ்வொன்றும் அதிநவீனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. காற்று மற்றும் சூரிய வெளிச்சத்துடன் ஏரி பார்வையுடன் அமைந்துள்ளன.
6 ரெசிடென்சியல் அடுக்குமாடி கட்டடங்களாக அமையும் இந்த திட்டத்தில் மொத்தம் 960 வீடுகள் உள்ளன. ஒரு படுக்கையறை, வரவேற்பறை, சமையல் அறை கொண்ட 570 சதுர அடியில் 504 வீடுகளும், 2 படுக்கையறை, வரவேற்பறை, சமையல் அறையுடன் 984/1139 சதுர அடியில் 304 வீடுகளும், 2 படுக்கையறை, வரவேற்பறை, சமையல் அறையுடன் 1,406 சதுர அடியில் 152 வீடுகளும் உள்ளன.
பள்ளி மற்றும் வணிக வளாகங்கள் இந்த குடியிருப்புடன் சேர்த்து அமைக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வசதியுடன் இந்த வீடுகள் அமைந்துள்ளன.
இவ்வாறு டாடா ஹவுசிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
படப்பை அருகே கிரஸன்ட் லேக் ஹோம்ஸ் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படும் இந்த புதிய குடியிருப்பில் மொத்தம் 960 வீடுகள் விற்பனைக்கு உள்ளன.
இது குறித்து டாடா ஹவுசிங் நிறுவனம் நேற்று அறிவித்துள்ளதாவது:
கிரஸன்ட் லேக் ஹோம்ஸ் திட்டம் தாம்பரத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவிலும், வண்டலூர் ரெயில் நிலையத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவிலும், படப்பை நகரில் இருந்து 3 கி.மீ தொலைவிலும், ஓரகடம் ஜங்ஷனில் இருந்து 4 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இதன் அருகில் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் அமைந்துள்ளன.
சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த வளாகத்துக்கு வந்து செல்ல நெடுஞ்சாலை உள்ளது. முனிசிபாலிட்டிக்கு சொந்தமான ஏரி இந்த திட்டத்தின் லேண்ட்மார்க்காக உள்ளது. வீடுகள் ஒவ்வொன்றும் அதிநவீனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. காற்று மற்றும் சூரிய வெளிச்சத்துடன் ஏரி பார்வையுடன் அமைந்துள்ளன.
6 ரெசிடென்சியல் அடுக்குமாடி கட்டடங்களாக அமையும் இந்த திட்டத்தில் மொத்தம் 960 வீடுகள் உள்ளன. ஒரு படுக்கையறை, வரவேற்பறை, சமையல் அறை கொண்ட 570 சதுர அடியில் 504 வீடுகளும், 2 படுக்கையறை, வரவேற்பறை, சமையல் அறையுடன் 984/1139 சதுர அடியில் 304 வீடுகளும், 2 படுக்கையறை, வரவேற்பறை, சமையல் அறையுடன் 1,406 சதுர அடியில் 152 வீடுகளும் உள்ளன.
பள்ளி மற்றும் வணிக வளாகங்கள் இந்த குடியிருப்புடன் சேர்த்து அமைக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வசதியுடன் இந்த வீடுகள் அமைந்துள்ளன.
இவ்வாறு டாடா ஹவுசிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
முகத்திற்கும் சில பயிற்சிகள் உண்டு!
முகத்தில் இருக்கும் தாடைகளுக்கு பயிற்சி வேண்டும் என்றால், ஏ, இ, யு, ஓ போன்ற எழுத்துக்களை அழுத்தமாக சத்தமாக சொல்லவும்.
கண்களுக்கு நல்ல பயிற்சியாக இருக்க வேண்டும் என்றால், கண்களை வட்ட வடிவில் சுற்றிப் பாருங்கள். அதாவது ஒரு பெரிய வட்டத்தை கண்களால் சுழற்றி பார்ப்பது போல் பார்க்க வேண்டும்.
விரல்களை நெற்றியில் வைத்து வட்ட வடிவில் சுற்றி சுற்றி மசாஜ் செய்யலாம். இதனால் முகத்தில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதே சமயம் நெற்றியில் ஏற்படும் சுருக்கங்கள் மறையும்.
மேலும், கண்ணங்கள் உப்பி இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள், வாயில் காற்றை நிறைத்து கண்ணங்களை உப்ப வைத்து 10 நொடிகள் இருக்கலாம். இவ்வாறு 10 முறை செய்தால் கண்ணங்கள் புசுபுசுவென்று மாறும்.
இரண்டு காதுகளையும் உள்ளங்கைகளால் அழுத்திப் பிடித்துக் கொள்ளுங்கள். உங்களால் எவ்வளவு அழுத்தமாக பிடிக்க முடியுமோ அவ்வளவு அழுத்தமாக பிடித்தபடி 25 வரை எண்ணுவும். இவ்வாறு செய்தால் காது கேட்கும் திறன் அதிகரிக்கும்.
கண்களுக்கு நல்ல பயிற்சியாக இருக்க வேண்டும் என்றால், கண்களை வட்ட வடிவில் சுற்றிப் பாருங்கள். அதாவது ஒரு பெரிய வட்டத்தை கண்களால் சுழற்றி பார்ப்பது போல் பார்க்க வேண்டும்.
விரல்களை நெற்றியில் வைத்து வட்ட வடிவில் சுற்றி சுற்றி மசாஜ் செய்யலாம். இதனால் முகத்தில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதே சமயம் நெற்றியில் ஏற்படும் சுருக்கங்கள் மறையும்.
மேலும், கண்ணங்கள் உப்பி இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள், வாயில் காற்றை நிறைத்து கண்ணங்களை உப்ப வைத்து 10 நொடிகள் இருக்கலாம். இவ்வாறு 10 முறை செய்தால் கண்ணங்கள் புசுபுசுவென்று மாறும்.
இரண்டு காதுகளையும் உள்ளங்கைகளால் அழுத்திப் பிடித்துக் கொள்ளுங்கள். உங்களால் எவ்வளவு அழுத்தமாக பிடிக்க முடியுமோ அவ்வளவு அழுத்தமாக பிடித்தபடி 25 வரை எண்ணுவும். இவ்வாறு செய்தால் காது கேட்கும் திறன் அதிகரிக்கும்.
30 வயதுக்கு மேல் குறைகிறது கால்சியம்!
ஆண்களுக்கு விபத்து அல்லது ரத்த தானம் செய்யும் போது மட்டுமே ரத்த இழப்பு ஏற்படுகிறது. ஆனால் ஒரு பெண் என்று எடுத்துக் கொண்டால், மாதவிலக்கு, மகப்பேறு போன்ற சமயங்களில் நேரடியாக ரத்த இழப்பு ஏற்படுகிறது. மேலும், பாலூட்டும் தாய்மார்களுக்கு மறைமுகமாக ரத்த இழப்பு ஏற்படுகிறது.
இதுபோன்ற சமயங்களில் பெண்கள் பலவீனமானவர்களாக மாறுகின்றனர். இதனால்தான் சுமார் 30 வயதை அடையும் பெண்களின் உடலில் கால்சியம் குறையத் துவங்குகிறது. கால்சியம் குறைபாட்டினால் ஏற்படும் வியாதிகள் பல. அதில் முக்கியமானது எலும்பு தேய்மானமாகும்.
எலும்பு தேய்மானம் என்றால் பலருக்கும் என்னவென்று தெரிவதில்லை. எலும்பில் உள்ள கால்சியம் சத்து குறைந்து எலும்பு பலவீனமாகிறது. கழுத்து, மூட்டுப் பகுதிகளில் எலும்புத் தேய்மானம் ஆனபிறகு தான் அங்கு வலிக்க ஆரம்பிக்கிறது. வலி வந்ததும் பெண்கள் மருத்துவரை அணுகினால், எலும்பு தேய்ந்து விட்டது என்று கூறுகிறார்கள். எலும்பு தேய்வை நிறுத்தலாமேத் தவிர, தேய்ந்த எலும்பை மீண்டும் சீராக்குவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவே.
சிலருக்கு எலும்புத் தேய்மானம் என்பது தீவிரமடைந்து, அவர்கள் கீழே விழுந்தால் கூட உடனடியாக எலும்பு உடைந்துவிடும் நிலையில் இருக்கும். இந்தியாவில் 45 வயதில் இருக்கும் பெண்களில் மூன்றில் ஒருவருக்கு எலும்புத் தேய்மான நோய் உள்ளது. இப்படியே சென்றால், வருங்காலத்தில் எலும்பு முறிவுகளில் பெரும் விழுக்காடு இந்தியாவில்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.
அதிலும், எலும்புத் தேய்மான நோயால் பாதிக்கப்படுபவர்களில் பெண்களே அதிகம். இதற்குக் காரணம், சத்துக்குறைபாடுதான். தாய்மார்கள் பலரும் குழந்தைகளுக்கு பாலூட்ட வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவார்களேத் தவிர, பாலூட்டும் தாய்மார்கள் போதிய உணவை சாப்பிட வேண்டும், அதற்கான மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும் என்பதில் கவனம் செலுத்த மாட்டார்கள்.
அதாவது, பாலூட்டும் தாய்மார்களுக்கு பாலுக்குத் தேவையான கால்சியம் அவர்கள் உட்கொள்ளும் உணவில் இருந்து எடுக்கப்படும். நாம் சாப்பிடும் உணவில் போதிய கால்சியம் இல்லாத நிலையில் எலும்பில் இருந்துதான் கால்சியம் செல்கிறது. நிறைய பெண்கள் பாலூட்டும் சமயத்தில் மெலிந்து போவதற்கு இதுதான் காரணம். போதிய ஊட்டச்சத்து உணவினை எடுத்துக் கொள்ளாமல் பாலூட்டும் தாய்மார்களுக்குத்தான் எலும்புத் தேய்மானம் அதிகமாக ஏற்படுகிறது.
அதற்காக தாய்ப்பால் கொடுக்காமல் இருக்க வேண்டும் என்பது அர்த்தமல்ல, தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் அதிகமாக முட்டை, பால், கீரைகளை உண்ண வேண்டும். அதில்லாமல் மருத்துவர்கள் சிபாரிசு செய்யும் இரும்பு சத்து மற்றும் கால்சியம் சத்து நிறைந்த மாத்திரைகளையும் தவறாமல் உட்கொள்ள வேண்டும். அப்போதுதான் பாலுக்குத் தேவையான கால்சியம் உடலுக்குக் கிடைக்கும்.
ஆண்டுதோறும் எலும்பு தேய்மான நோயால் சுமார் 10 லட்சம் பெண்கள் பாதிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது வருங்காலத்தில் இன்னும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும், வீட்டு வேலைகளை செய்வதால் தனியாக உடற்பயிற்சி செய்யத் தேவையில்லை என்று பெண்கள் கருதுகிறார்கள். ஆனால் உண்மை அவ்வாறு இல்லை. வீட்டு வேலை செய்யும் போது பல தவறான உடல் இயக்கங்களை நம்மை அறியாமல் செய்கிறோம். குனிந்து பொருட்களை தூக்குவது, குனிந்தபடி சில வேலைகளை செய்வது போன்றவை உடற்பயிற்சியாகாது. எனவே, வீட்டிலிருக்கும் பெண்களாகட்டும், வேலைக்குச் செல்லும் பெண்களாகட்டும், உடற்பயிற்சிக்கு என்று சில நிமிடங்களை ஒதுக்கி உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டியதும் அவசியமாகும்.
பொதுவாக எப்போதும் ஏசி அறையில் இருப்பதும், கடினமான பணிகளை செய்யாமல் தளர்வாக இருப்பதும், வியர்வையை வெளியேற்ற விடாமல் செய்கிறது. எனவே உடற்பயிற்சி செய்வதால் உடலுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதே சமயம் உடம்பில் இருந்து வியர்வை வெளியேறும். நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது.
இதுமட்டுமல்லாமல், வைட்டமின் டி பற்றாக்குறையாலும் இந்தியர்களுக்கு எலும்புத் தேய்மானம் ஏற்படுகிறது. வெப்ப நாடான இந்தியாவில் வைட்டமின் டி பற்றாக்குறை என்றால் சற்று சிந்தித்தே ஆக வேண்டும். வீட்டை விட்டு வெளியே வந்தால் நம்மை எதிர்கொள்வது சூரியன்தான். ஆனால் அந்த சூரியனிடம் இருந்து நாம் பெறும் வைட்டமின் டி நமக்கு எப்படி பற்றாக்குறையாகிறது என்பதை சற்று சிந்திக்க வேண்டும்.
அதிகாலையில் எழும்பும் பழக்கம் தற்போது பலருக்கும் இருப்பதில்லை. கிளம்ப வேண்டிய நேரத்திற்கு சற்று நேரம் முன்னதாக எழுந்து அவசர அவசரமாக கிளம்பி அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய பேருந்தை பிடித்து ஓடிப் போய் அலுவலகத்திற்குள் உட்கார்ந்து கொள்கிறோம். வீட்டில் இருப்போர் துணியை உலர்த்தக் கூடி சூரியனைப் பார்க்க வருவதில்லை. வாஷிங்மெஷனில் உள்ள ட்ரையரைப் பயன்படுத்தி உலர்த்திவிட்டு வீட்டிற்குள்ளேயே போட்டுக் கொள்கிறோம்.
வீட்டு வேலைக்காரரை அனுப்பி காய்கறி வாங்கிவரச் சொல்லிவிடுகிறோம். பிறகு எப்படித்தான் பார்ப்பது சூரியனை. சூரியனா உங்கள் வீட்டிற்குள் நுழைந்து உங்களுக்கு ஹாய் சொல்லிவிட்டுப் போகும். சூரியனையே அடிப்படையாக வைத்து வாழும் நம் பூமியில், சூரிய ஒளியேப் படாமல் வாழும் தந்திரத்தை இந்திய மக்கள் வெகுவாக கற்று வருகிறார்கள். இதன் காரணமாகத்தான் வைட்டமின் டி பற்றாக்குறை ஏற்படுகிறது.
சூரிய வெளிச்சத்தில் நாம் வெறும் 20 நிமிடங்கள் நின்றால் போதும், நம் சருமம் உடலுக்குத் தேவையான வைட்டமின் டியை எடுத்துக் கொள்ளும். ஆனால் உச்சி வெயிலில் அல்ல, காலை 8 மணிக்குள்ளும், மாலை 4 மணிக்கு மேலும். ஆனால் இந்த சமயத்தில் எல்லாம் நாம் வெளியே வருவதே இல்லையே. அங்குதானே சிக்கல். எனவே, அதிகாலையில் எழுந்து பணிகளை முடித்துவிட்டு 7 மணிக்கு வெளியில் சென்று சில நிமிடங்கள் நடக்கலாம், இயற்கையை ரசிக்கலாம் அல்லது மாலை நேரத்தில் சூரியனுக்கு ஒரு ஹாய் சொல்லலாம். இதனால் எலும்புத் தேய்மானத்தில் இருந்து நாம் விடுபடலாம் என்றால் செய்ய மாட்டீர்களா என்ன?
30 வயது வரை தான் எலும்பு வலுவானதாக இருக்கும். பின்னர், கால்சியம் சத்து குறைய ஆரம்பிக்கிறது. இதனால்தான் ஆரோக்கிய உணவு, உடல் பயிற்சி முக்கியம் என்று கூறுகிறோம். உணவிலும் கீரை, பால், முட்டை போன்றவற்றை அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். தினமும் சிறிது நேரமாவது உங்கள் மீது சூரிய வெளிச்சம் படுமாறு நிற்பது இன்னும் நல்லது. எளிதான விஷயம் கூட.
என்ன உங்கள் எலும்புகளை பலமாக்க இனி முழு மூச்சுடன் செயல்படுவீர்கள் அல்லவா? பார்க்கலாம் விரைவில் சந்திப்போம்.
போதைக்கு அடிமையாகும் மாணவர்கள்!
கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த சிறுமுளையில் சில பெட்டி கடைகளில் மதுபானங்கள் கள்ளத்தனமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டாஸ்மாக்கில் இருந்து மதுவை வாங்கி, அதில் பாதி மதுவில் எத்தில், மெத்தில் ஆல்கஹாலை சேர்ப்பதாக கூறப்படுகிறது. இங்கு விற்பனை செய்யும் மதுபானங்களில், போதை அதிகமாக உள்ளதால், பலர் இவற்றை வாங்கி குடிக்கின்றனர். குறிப்பாக பள்ளி மாணவர்களும் இந்த கடைகளில் சர்வ சாதாரணமாக மதுவை வாங்கி குடிக்கின்றனர்.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி, மகளிர் சுய உதவி குழுவினர், அப்துல் கலாம் சேவை நல மன்றத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.
இப்படிப்பட்ட மதுபானங்களில் போதை அதிகமாவதுடன் கண்கள், உயிர் பாதிக்கும் நிலையும் ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
''‘சிறுமுளை கிராமத்தில் உள்ள பெட்டி கடைகளில், அரசு மதுபானங்களில் எத்தனால் மற்றும் மெத்தனால் கலந்து விற்பனை செய்கின்றனர். இதனால் பள்ளி மாணவர்கள் சீரழிந்து வருகின்றனர். இதனால் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று அப்துல் கலாம் சேவை மன்றமும், மகளிர் சுய உதவி குழுவினரும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
சமீபத்தில் சிங்கம்புணரி அருகே ஓய்வு பெற்ற கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் அய்யாச்சாமி தனது நிலத்தில் கஞ்சா பயிரிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். சில நாட்களுக்கு முன்பு சென்னையில் போதைக்கு மாணவர்கள் அடிமையாக இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
இதேபோல் தமிழகத்தில் சில விஷமிகள் பள்ளி, கல்லூரி மாணவர்களை வலைத்து போட்டு பண ஆசை காட்டி கஞ்சா, அபீன் உள்ளிட்ட போதைப்பொருட்களை கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் விற்பனை செய்ய வைக்கின்றனர். பண ஆசையில் மேலும் தகாத வழியில் செல்லும் மாணவர்கள் முடிவில் விபசாரத்தை நோக்கி செல்லும் நிலையும் ஏற்படுகிறது.
நகர்ப்புறங்களில் கொடிகட்டி பறக்கும் இந்த தொழிலை காவல்துறையும் கண்டு கொள்ளவதே கிடையாது. காரணம் அவர்களுக்கு லட்சக்கணக்காக பணம் கிடைப்பதுதான்.
தற்போது சென்னை மெரினா கடற்கரையில் பள்ளி மாணவர்கள் பலர் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருவதாக தகவல்கள் வெளியாகின்றன. 14 முதல் 19 வயதுக்கு உள்பட்ட மாணவர்கள் தங்களது பள்ளி வகுப்புகளை 'கட்' அடித்துவிட்டு, சீருடையிலேயே மெரினாவுக்கு வருகின்றனர்.
அவர்கள் தண்ணீர் பாக்கெட்டுகளில் சிறு துளையிட்டு ஒரு பிரத்தியேக திரவத்தை தேவையான அளவு ஊசி மூலம் செலுத்தி தண்ணீர் பாக்கெட்டை நன்றாக குலுக்கி, நுரை வந்த பின் குடித்து போதையில் திளைப்பதாக கூறப்படுகிறது. இந்தப் பழக்கத்துக்கு அடிமையாகும் மாணவர்கள் சிலர் தனியாக கடற்கரையில் சுற்றுவதும், அவர்களை சமூக விரோதிகள் கண்காணித்து பாலியல் கொடுமைக்கு ஆளாக்குவதாகவும் அவ்வப்போது புகார்கள் வருகின்றன.
மெரினா கடற்கரைக்கு மக்கள் கூட்டம் மாலையில் வரும் முன்பாக இவர்கள் வெளியேறுகின்றனர். இந்த விநோத போதை பழக்கத்தால், கட்டுப்பாடற்ற மாணவர்களின் எதிர்காலம் பாழாவதாக பொது நல விரும்பிகள் கவலை தெரிவிக்கின்றனர். காவல்துறை அதிகாரிகள் இதுபற்றி உண்மை நிலவரத்தை கண்டறிந்து தக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இப்படிப்பட்ட நிலை தமிழகம் முழுவதும் நிலவுகிறது. போதை பொருட்களால் ஏற்படும் விளைவுகளை பற்றி பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மட்டுமே மாணவ சமுதாயத்தை தடுக்க முடியும். இல்லையென்றால் இப்பழக்கத்திற்கு அடிமையாகும் மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறிதான். விழித்திடுங்கள் மாணவச் செல்வங்களே, விழித்திடுங்கள்!
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி, மகளிர் சுய உதவி குழுவினர், அப்துல் கலாம் சேவை நல மன்றத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.
இப்படிப்பட்ட மதுபானங்களில் போதை அதிகமாவதுடன் கண்கள், உயிர் பாதிக்கும் நிலையும் ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
''‘சிறுமுளை கிராமத்தில் உள்ள பெட்டி கடைகளில், அரசு மதுபானங்களில் எத்தனால் மற்றும் மெத்தனால் கலந்து விற்பனை செய்கின்றனர். இதனால் பள்ளி மாணவர்கள் சீரழிந்து வருகின்றனர். இதனால் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று அப்துல் கலாம் சேவை மன்றமும், மகளிர் சுய உதவி குழுவினரும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
சமீபத்தில் சிங்கம்புணரி அருகே ஓய்வு பெற்ற கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் அய்யாச்சாமி தனது நிலத்தில் கஞ்சா பயிரிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். சில நாட்களுக்கு முன்பு சென்னையில் போதைக்கு மாணவர்கள் அடிமையாக இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
இதேபோல் தமிழகத்தில் சில விஷமிகள் பள்ளி, கல்லூரி மாணவர்களை வலைத்து போட்டு பண ஆசை காட்டி கஞ்சா, அபீன் உள்ளிட்ட போதைப்பொருட்களை கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் விற்பனை செய்ய வைக்கின்றனர். பண ஆசையில் மேலும் தகாத வழியில் செல்லும் மாணவர்கள் முடிவில் விபசாரத்தை நோக்கி செல்லும் நிலையும் ஏற்படுகிறது.
நகர்ப்புறங்களில் கொடிகட்டி பறக்கும் இந்த தொழிலை காவல்துறையும் கண்டு கொள்ளவதே கிடையாது. காரணம் அவர்களுக்கு லட்சக்கணக்காக பணம் கிடைப்பதுதான்.
தற்போது சென்னை மெரினா கடற்கரையில் பள்ளி மாணவர்கள் பலர் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருவதாக தகவல்கள் வெளியாகின்றன. 14 முதல் 19 வயதுக்கு உள்பட்ட மாணவர்கள் தங்களது பள்ளி வகுப்புகளை 'கட்' அடித்துவிட்டு, சீருடையிலேயே மெரினாவுக்கு வருகின்றனர்.
அவர்கள் தண்ணீர் பாக்கெட்டுகளில் சிறு துளையிட்டு ஒரு பிரத்தியேக திரவத்தை தேவையான அளவு ஊசி மூலம் செலுத்தி தண்ணீர் பாக்கெட்டை நன்றாக குலுக்கி, நுரை வந்த பின் குடித்து போதையில் திளைப்பதாக கூறப்படுகிறது. இந்தப் பழக்கத்துக்கு அடிமையாகும் மாணவர்கள் சிலர் தனியாக கடற்கரையில் சுற்றுவதும், அவர்களை சமூக விரோதிகள் கண்காணித்து பாலியல் கொடுமைக்கு ஆளாக்குவதாகவும் அவ்வப்போது புகார்கள் வருகின்றன.
மெரினா கடற்கரைக்கு மக்கள் கூட்டம் மாலையில் வரும் முன்பாக இவர்கள் வெளியேறுகின்றனர். இந்த விநோத போதை பழக்கத்தால், கட்டுப்பாடற்ற மாணவர்களின் எதிர்காலம் பாழாவதாக பொது நல விரும்பிகள் கவலை தெரிவிக்கின்றனர். காவல்துறை அதிகாரிகள் இதுபற்றி உண்மை நிலவரத்தை கண்டறிந்து தக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இப்படிப்பட்ட நிலை தமிழகம் முழுவதும் நிலவுகிறது. போதை பொருட்களால் ஏற்படும் விளைவுகளை பற்றி பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மட்டுமே மாணவ சமுதாயத்தை தடுக்க முடியும். இல்லையென்றால் இப்பழக்கத்திற்கு அடிமையாகும் மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறிதான். விழித்திடுங்கள் மாணவச் செல்வங்களே, விழித்திடுங்கள்!
முழு நேர வேலையை வெறுக்கும் பெண்கள்!
வேலைக்கு செல்லும் பெண்களுக்கு குழந்தைகள் இருந்தால், அவர்களில் ஏராளமானோர் பகுதி நேர வேலையையே விரும்புவதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை இணையமைப்பான "அசோசெம்" - (Assocham) டெல்லி, மும்பை, சண்டிகர், புனே மற்றும் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
சுமார் 4,700 வேலைக்கு செல்லும் தாய்மார்கள் இந்த ஆய்வில் பங்கேற்று தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.குழந்தைகளை உடைய வேலைக்கு செல்லும் பெண்கள், எத்தகைய வேலையை விரும்புகிறார்கள் என்பது குறித்தே இதில் கேட்கப்பட்டது.
அவ்வாறு கருத்து தெரிவித்தவர்களில் 10 ல் 6 பேர் வீட்டைவிட்டு வெளியே வேலை செய்யாமல் இருப்பதையே விரும்புவதாகவும், அவ்வாறு வெளியில் சென்று வேலை செய்யாமல் இருந்தால் அது தங்களது குழந்தைகளுக்கு நல்லதாக இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.
மேலும் 10 ல் ஒருவர் மட்டுமே முழு நேரம் வேலை செய்வது குழந்தைகளுக்கு நல்லதாக இருக்கும் என்றும் கூறியதாக தெரிவிக்கிறார் "அசோசெம்" பொதுச் செயலாளர் டி.எஸ். ரவத்.
குழந்தைகளை கொண்ட பெண்களில் 26 விழுக்காட்டினர் முழு நேரம் வேலை செய்வது குறித்து எதுவும் பொருட்படுத்தவில்லை.அதே சமயம் ஏறக்குறைய 56 விழுக்காட்டினர் எப்போதுமே வேலை செய்யாமல் இருப்பது தங்களுக்கு நல்லதாக இருக்கும் என்று கூறியுள்ளனர்.
மேலும் 0 முதல் 4 வயது வரையிலான குழந்தைகளை உடைய பெண்களிலும், மிகக்குறைந்த விகித்தினரே முழு நேர வேலைக்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வில் கலந்துகொண்டவர்களில் படித்தவர்கள் முதல் படிக்காதவர் வரை, அனைவரிடமுமே ஒரே மாதிரியான கருத்தே வெளிப்பட்டுள்ளது.
அதேபோன்று 72 விழுக்காடு தந்தைமார்கள், தனது மனைவி பகுதி நேர வேலை செய்வதையே விரும்புவதாக கூறியுள்ளனர்.
இந்நிலையில் வீட்டிலேயே இருந்தபடி அல்லது பகுதி நேரம் வேலை செய்யும் தாய்மார்கள் தங்களது குழந்தைகளை கவனிப்பதை விட, தாங்கள் குழந்தைகளை கவனிப்பது சற்று குறைச்சலானதுதான் என்று முழு நேரம் வேலை செய்யும் பெண்கள் தங்களைத் தாங்களே குறைத்து மதிப்பிட்டு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கிறது அந்த ஆய்வறிக்கை!
ஒன்றை பெற ஒன்றை இழக்கத்தான் செய்ய வேண்டும்.இதில் குழந்தை நலனா அல்லது வருவாயா என்று பார்க்கும்போது குழந்தை நலனைத்தான் அனைத்து பெண்களும் விரும்புவார்கள் என்றாலும், அதை தீர்மானிப்பது குடும்ப சூழ்நிலையாகத்தான் உள்ளது!
திங்கள், 1 நவம்பர், 2010
பெண்கள் எதிர்பார்ப்பது இதைத்தான்!
ஆணிடமிருந்து ஒரு பெண் எதிர்பார்ப்பது என்ன?. வெறும் உடல் ரீதியான உறவுடன் தொடர்பை முடித்துக் கொள்ள விரும்புவதில்லை பெண்கள். அதற்கும் அப்பால் அவர்களது தேடுதல் மிகப் பெரியது. அது உண்மையில் அவர்களது மனங்களுக்கு ஆறுதலாக அமைகிறது என்பதை நிறையப் பேர் புரிந்து கொள்வதில்லை. புரிந்து கொண்டால் உறவுகள் வலுப்படும், இனிமை கூடும்.
நிறையப் பெண்களுக்கு பேச்சு மிகப் பிடிக்கும். அன்பான, ஆறுதலான பேச்சை தங்களது பார்ட்னர்களிடமிருந்து நிறையவே எதிர்பார்க்கிறார்கள் பெண்கள். பேசிக் கொண்டே நடப்பது, பேச்சின் மூலம் அன்பை, நட்பை பகிர்ந்து கொள்வது அவர்களுக்கு மிகவும் பிடிக்கிறது.
நீண்ட தூரம் நடந்தபடி பேசுவது என்பது இருவரது மனங்களையும் இலேசாக்க உதவும். இது ஒரு அருமையான அனுபவமும் கூட. நான் உன்னை எந்த அளவுக்கு நேசிக்கிறேன் என்பதை இருவரும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள, அந்த பேச்சு நடை உதவும்.
சில பெண்களுக்கு தங்களது புறத்தோற்றம் குறித்த கவலை இருக்கும். இதை தங்களது காதலர் விரும்புவாரா மாட்டாரோ என்ற கவலையும் அதிகமாகவே இருக்கும். இதன் காரணமாக தங்களை கூடுதலாக அழகாக்கிக் கொள்ள விரும்புவார்கள், முயற்சிப்பார்கள்.
இதை ஆண்கள்தான் புரிந்து கொண்டு அவர்களது கவலையைப் போக்க முயல வேண்டும். உன் அழகு உருவத்தில் இல்லை, மனதில்தான் இருக்கிறது, உனது பேச்சுதான் உனக்கு அழகு, உனது சிரிப்புதான் அழகு என்று அவர்களுக்கு நம்பிக்கையூட்ட வேண்டும். அவர்களது தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட ஆண்கள்தான் உண்மையில் பெண்களுக்கு பெரும் துணைவர்களாக முடியும்.
செக்ஸ் என்பது வாழ்க்கையில் பிரிக்க முடியாதது - திருணம் செய்தவர்களுக்கு. அதேசமயம், அதை இனிய முறையில் அனுபவிக்க வேண்டும். மனத்தாங்கல், வருத்தம், வலி, வேதனையுடன் அதை அனுபவிக்கக் கூடாது. அது மனதில் நிரந்தர காயத்தையும், நீங்கா வலியையும் ஏற்படுத்தி விடலாம்.
பெண்களைப் பொறுத்தவரை மன ரீதியான திருப்தியையும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆண்கள் அவசரக்காரர்கள். காரியம் முடிந்தவுடன் மறந்து விடுவார்கள் சற்று முன் நடந்ததை. ஆனால் பெண்கள் அப்படி இல்லை. அந்த இனிய உணர்வின் நினைவுகளில் சில மணி நேரங்களாவது மூழ்கிக் கிடப்பார்கள்.
தன்னிடம் தனது பார்ட்னர் எப்படி நடந்து கொண்டார் என்பதிலிருந்து பலவற்றையும் அவர்கள் மனதுக்குள் அசை போட்டுக் கொண்டிருப்பார்கள்.
எனவே உறவுக்கு முன்பும் சரி, உறவின்போதும் சரி ஆண்கள் பெண்களிடம் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும். உறவுக்குப் பின்னரும் நம்மை நினைத்து காதலியோ அல்லது மனைவியோ சந்தோஷத்துடன் நினைத்துப் பார்க்கும்படியாக அவர்களை நடத்த வேண்டும்.
செக்ஸ் உறவின்போது மட்டும்தான் பெண்கள் சந்தோஷமடைவார்கள் என்றில்லை. அன்பான, ஆறுதலான முத்தம், கைகளைப் பிடித்து நான் இருக்கிறேன் உனக்கு என்று கூறுவது, சின்னச் சின்ன ரொமான்ஸ்கள் என நிறைய விஷயங்கள் பெண்களுக்குப் பிடித்தமானவை. இவற்றை நிறைய பேர் நிறைய செய்வதில்லை. லைட்டாக இவற்றை செய்து விட்டு நேரடியாக போய் விடுகிறார்கள். முன்விளையாட்டுக்களைத் தவிர இதுபோல நிறைய விஷயங்கள் உள்ளன. காதலி அல்லது மனைவியின் கால்களை இதமாக அழுத்தி விடலாம், லேசான மசாஜ் செய்யலாம். விரல்களைப் பிடித்து சொடுக்கு எடுக்கலாம். தலையைக் கோதி விடலாம். அன்பு மொழி பேசலாம்... இப்படி நிறைய இருக்கிறது.
எல்லாம் முடிந்து உறவை திருப்திகரமாக முடித்த பின்னர் அவ்வளவுதான் தூங்கப் போக வேண்டியதுதான் என்று கிளம்பிப் போவது கூடவே கூடாது. செக்ஸ் உறவின்போது ஆண்களுக்கு என்டார்பின் சுரப்பு அதிகமாக இருக்கும். இதனால் படு வேகமாக இயங்கி, எல்லாம் முடிந்த பின்னர் அப்படியே சோர்ந்து போய் விடுவார்கள். ஆனால் பெண்களுக்கு அப்படி இல்லை. அது, நிதானமாகவும், விவேகமாகவும்தான் நடக்கிறது. எனவே உறவு முடிந்த பின்னரும் கூட பெண்கள் கிளர்ச்சியுடன்தான் இருப்பார்கள். எனவே உறவை முடித்த பின்னர் சிறிது நேரம் அவர்களுடன் ஆசுவாசமாக, அன்பாக இணைந்து இருப்பது நல்லது.
இதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்தவைதான். ஆனாலும் நிறைய பேர், அந்த சமயத்தில் 'அதை' மட்டும் சரியாக செய்து விட்டு மற்றவற்றில் கோட்டை விட்டு விடுவதால் பல கோணல்கள் ஏற்பட்டு விடுகின்றன. இதெல்லாம் சரியாக இருந்தால் கோர்ட் பக்கம் யாருமே போகத் தேவையில்லை-விவாகரத்து கோரி.
லண்டனில் ஓட்டல் வேலை செய்யும் இந்திய எம்.பி.ஏக்கள்!
பவுண்ட்ஸில் சம்பளம்; சொகுசு காரில் பயணம்... பங்களா வீடு... என வளமான வாழ்க்கை வாழலாம் என்ற கன்வுடன் பிரிட்டனுக்கு சென்று எம்.பி.ஏ. - MBA - படித்து முடித்த ஏராளமான இந்திய இளைஞர்கள், படித்த படிப்புக்கு சம்பந்தமில்லாமல் ஓட்டலில் வெயிட்டர்களாக வேலை பார்த்துவருகிறர்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இவ்வாறு வேலை பார்ப்பவர்கள் பிரிட்டனிலேயே படித்த இந்தியர்கள் மட்டுமல்லாது, இந்தியாவிலிருந்து சென்ற எம்.பி.ஏ. மாணவர்களும் அடக்கம்.
கடந்த 2008 ல் உலகையே உலுக்கி எடுத்த பொருளாதார வீழ்ச்சியின் தாக்கத்திற்கு பிரிட்டனும் தப்பவில்லை.பா நிறுவனங்கள் மூடப்பட்டு, ஏராளமானோர் வேலை இழப்புக்கு ஆளானார்கள்.
இப்பொழுதான் அந்த வீழ்ச்சியின் பாதிப்பிலிருந்து பிரிட்டன் மெல்ல மீண்டு வருகிற நிலையில், பொருளாதார வீழ்ச்சி தாக்கம் மற்றும் இதர காரணங்களால் பிரிட்டனில் இன்னமும் வேலை இல்லாமல் இருப்போரின் எண்ணிக்கை 25 லட்சம் என்கிறது ஒரு புள்ளிவிவரம்!
இந்நிலையில் அயல்நாடுகளிலிருந்து வேலை தேடி வருவோர்களுக்கு எதிராக எப்பொழுதுமே கடுமையாக பேசி வரும் பிரிட்டன் உள்துறை அமைச்சர் டேமியன் கிரீன், குறைந்த கல்வி தகுதியுடைய வேலைகளை தேடி அயல்நாட்டவர்கள் இங்கிலாந்துக்கு வரவேண்டாம் என்றும், அத்தகைய வேலைகளை செய்ய பிரிட்டனிலேயே பல்லாயிரக்கணக்கானோர் உள்ளதாகவும், மிக உயர் தகுதியுடைய வெளிநாட்டவர்களுக்கு மட்டுமே இங்கு ஓரளவு வேலை வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளார்.
மேலும் தங்கள் நாடு குறைந்த கல்வி தகுதியுடையவர்களுக்கு, - கிட்டத்தட்ட கூலியாட்கள் - வேலை அளிக்கும் சந்தை கிடையாது என்றும் அவர் காட்டம் காட்டியுள்ளார்.
இந்த ரக தொழிலாளர்கள் வருவதை தடுப்பதற்குதான், கடந்த 2008 ஆம் ஆண்டில், முந்தைய தொழிலாளர் கட்சி அரசு வேலை தேடி வருபவர்களுக்கு அவர்களது திறமையின் அடிப்படையில், புள்ளிகள் அடிப்படையிலான Tier-1 கிரேடு முறையை கொண்டுவந்தது.
சிறந்தவர்களையும், திறமையானவர்களையும் மட்டுமே இங்கிலாந்துக்கு வரவழைப்பதற்கான ஒரு யுக்தியாகவும் இது பார்க்கப்பட்டது.
இந்நிலையில்தான் இங்கிலாந்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் படித்துக்கொண்டிருந்த மற்றும் படித்து முடித்த இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு பயின்றுகொண்டிருந்த இந்திய மாணவர்களும் மேற்கூறிய Tier-1 கிரேடு முறைக்குள் கொண்டு வரப்பட்டு, அவர்கள் தங்களுக்கான பணி அனுபவத்தை பெற மேலும் இரண்டாண்டுகள் பிரிட்டனில் தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டனர்.
அதாவது இந்த இரண்டு ஆண்டுகளில் அவர்கள் தங்களது பணி திறமைகளை அதிகரித்துக்கொள்வதோடு, அயல்நாட்டவர்கள் இங்கிலாந்தில் பணியாற்ற அதிகரிக்கப்பட்டுள்ள ஆங்கில மொழித்திறனுக்கு ஏற்ப, தங்களது தகுதியை அதிகரித்துக்கொள்ள வேண்டும்.
இந்த ஆங்கில மொழித்திறன் அதிகரிப்பு மற்றும் பொருளாதார வீழ்ச்சியினால் குறைந்துபோன வேலை வாய்ப்பு போன்ற காரணங்களால்தான், இங்கிலாந்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பயின்று வெளியே வந்த இந்திய எம்.பி.ஏ. மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர், வேலை இன்றி தவிப்பதோடு, பிழைப்பை ஓட்ட வேண்டுமே என்ற நிர்ப்பந்தம் காரணமாக ஓட்டல்களிலும் வேலை செய்யும் நிலைக்கு தள்ளபட்டுள்ளனர்.
இன்று லண்டனிலுள்ள ஓட்டல்களில் ஒரு சுற்று சுற்றி வந்தால், பாதிக்கும் அதிகமான் ஓட்டல்களில் இந்தியாவை சேர்ந்த எம்.பி.ஏ. முடித்த பலர் "வெயிட்டர்"களாக பணியாற்றுவதை பார்க்கலாம் என்கிறார் சுல்தானா என்ற இந்திய மாணவி.
ஹைதராபாத்தைச் சேர்ந்த இவர், பிரிட்டன் பல்கலைக்கழகம் ஒன்றில் எம்.பி.ஏ. முடித்தவர்.வேலை கிடைக்காமல் ஓட்டல் ஒன்றில் வெயிட்டராக பணியாற்றுகிறார்.
"துரதிர்ஷ்டவசமாக நான் எதிர்பார்த்ததுபோன்று எனக்கு வேலை கிடைக்கவில்லை.அதனால்தான் நான் ஓட்டலில் வெயிட்டராக பணியாற்றுகிறேன்.
நான் மட்டுமல்ல; என்னுடன் படித்த எனது நண்பர்கள் ஏராளனமானோரும் என்னைப்போன்றே அவர்களது படிப்புக்கேற்ற வேலை கிடைக்காமல் ஓட்டல்களில் வெயிட்டர்களாக பணியாற்றுகிறார்கள்.
சிலர் இரவு நேர செக்யூரிட்டி பணியாளர்களாகவும் வேலை பார்க்கிறார்கள்" என்று துயரத்துடன் கூறுகிறார்.
ஏற்கனவே ஆஸ்ட்ரேலியா இனவெறியை காண்பித்து இந்திய மாணவர்களை துரத்திக்கொண்டிருக்கையில், தற்போது பிரிட்டனும் பயமுறுத்துகிறது.
எனவே டாலர்களில் சம்பளம் வாங்கும் கனவில் அயல்நாடுகளுக்கு படிக்கவும் , படித்து முடித்து பணிக்கும் செல்ல நினைப்பவர்கள், "என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்...?" என்று தங்களுக்குள் கேட்டு யோசித்துவிட்டு, அதன் பின்னர் முடிவெடுப்பது நல்லது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)