ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

பெ‌ண்க‌ளி‌ன் ‌சி‌ரி‌ப்‌பி‌ற்கு காரண‌ம் எ‌ன்ன?


‌ஸ்டே‌ன்போ‌ர்டு ப‌ல்கலை‌க்கழக‌ம் நட‌த்‌திய ஆ‌ய்‌வி‌ல், ‌10 பெ‌ண்க‌ளிட‌மும், 10 ஆ‌ண்க‌ளிடமு‌ம் நகை‌ச்சுவை‌க்கான ‌சி‌த்‌திர‌ங்க‌ள் கொடு‌க்க‌ப்ப‌ட்டு அவ‌ர்க‌ளி‌ன் மூளை‌யி‌ல் ஏ‌ற்படு‌ம் மா‌ற்ற‌ங்க‌ள் க‌ண்கா‌ணி‌க்க‌ப்ப‌ட்டது.

நகை‌ச்சுவை ‌சி‌த்‌திர‌ங்க‌ள் பட‌த்‌தி‌ல் இரு‌ந்த நகை‌ச்சுவையான வசன‌ங்க‌ள் அவ‌ர்க‌ளி‌ன் ‌சி‌ந்தனை‌யை‌த் தூ‌ண்டி ‌சி‌ரி‌ப்பை வரவழை‌த்தது. இ‌தி‌ல் பெ‌ண்க‌ள் ‌நீ‌ண்ட நேர‌ம் ‌சி‌ரி‌த்தபடி இரு‌ந்தது தெ‌ரிய வ‌ந்து‌ள்ளது.

இத‌ற்கு அவ‌ர்க‌ளி‌ன் மூளை‌யி‌ல் ஏ‌ற்படு‌ம் மா‌ற்ற‌ங்க‌ள் காரணமாகு‌ம். அதாவது பெ‌ண்க‌ளி‌ன் மூளை‌யி‌ன் கா‌ர்டெ‌க்‌ஸ் பகு‌தி‌க்கு மு‌ந்தைய அடு‌க்கு இ‌தி‌ல் மு‌க்‌கிய ப‌ங்கா‌ற்று‌கிறது.

அவ‌ர்க‌ளி‌ன் மூளை ‌விவேகமாக செய‌ல்படுவதுட‌ன் அ‌திக எ‌தி‌ர்‌பா‌ர்‌ப்‌பி‌ன்‌றி இரு‌க்‌கிறது. எனவே இய‌ல்பான நகை‌ச்சுவைகளு‌க்கு‌க் கூட அவ‌ர்க‌ளு‌க்கு ‌சிற‌ப்பாக‌த் தெ‌ரி‌கிறது.

இதனா‌ல் பெ‌ண்க‌ளி‌ன் மூளை எ‌ளி‌தி‌ல் ‌சி‌ரி‌ப்பை‌த் தூ‌ண்டி ‌விடு‌கிறது. அ‌த்துட‌ன் நகை‌ச்சுவை ச‌ற்று கூடுதலாக இரு‌ந்தா‌ல் பெ‌ண்க‌ள் இடை‌விடாம‌ல் ‌சி‌ரி‌க்‌க‌த் துவ‌ங்‌கி‌விடு‌கி‌ன்றன‌ர்.

பிளஸ் 2 தே‌ர்வு இ‌ன்று தொட‌‌க்க‌‌ம்: 7.53 ல‌ட்ச‌ம் மாணவ‌ர்க‌ள் எழுது‌கிறா‌ர்க‌ள்.


த‌மிழக‌த்த‌ி‌ல் இ‌ன்று தொட‌ங்கு‌ம் பிளஸ் 2 தேர்வை 7.53 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.

பிளஸ்2 பொது‌த் தேர்வு த‌மிழக‌ம் முழுவது‌ம் இன்று தொடங்குகிறது. இந்த தேர்வை 7 லட்சத்து 53 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். இவர்களில் பள்ளிகள் மூலம் 6 லட்சத்து 93 ஆயிரம் பேர்களும், தனித்தேர்வர்களாக 60 ஆயிரம் பேர்களும் எழுதுகிறார்கள். இதற்காக 1,800 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் 30 தேர்வு மையங்களில் 11 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகி‌ன்றன‌ர்.

பிளஸ்2 தேர்வு காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணிவரை நடைபெறும். வினாத்தாள் வாசிப்பதற்காக 15 நிமிடம் வழங்கப்படுகிறது. பிளஸ்2 தேர்வைத் தொடர்ந்து, 10‌ஆ‌ம் வகு‌ப்பு மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ-இந்தியன், ஓ.எஸ்.எல்.சி. தேர்வுகள் மார்ச் 23ஆ‌ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9ஆ‌ம் தேதி வரை நடைபெறுகின்றன.

மாணவ-மாணவிகள், தேர்வு எழுதும் அறைக்கு தேர்வு தொடங்கிய 15 நிமிடங்கள் கழித்து தேர்வு எழுத வந்தால் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். மாணவர்கள் எக்காரணம் கொண்டும் செல்போன் கொண்டுவரக்கூடாது. அவர்கள் மட்டுமல்ல தேர்வு கண்காணிப்பாளர்களும் தேர்வு எழுதும் அறையில் செல்போன் வைத்திருக்கக்கூடாது.

தேர்வு கூடத்திற்குள் துண்டுத்தாள் வைத்திருத்தல், துண்டு தாள்களை பார்த்து எழுத முயற்சி செய்தல், பிற மாணவர்களை பார்த்து எழுதுதல், தேர்வு அதிகாரிகளிடம் முறைகேடாக நடந்துகொள்ளுதல், தேர்வுத்தாள் மாற்றுதல், ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதுதல் போன்ற செயல்கள் கடுங்குற்றங்களாக கருதப்படும்.

இத்தகைய செயல்களில் ஈடுபடும் மாணவ-மாணவிகள் உடனடியாக தேர்வு மையத்தில் இருந்து வெளியேற்றப்படுவர். அதுமட்டுமல்ல அவர்கள் அதிகபட்சம் 2 வருடம் தேர்வு எழுத தடை செய்யப்படும். மொத்தத்தில் பல்வேறு தண்டனை வழங்கப்படும் என்று தேர்வுத்துறை எச்சரித்துள்ளது. மாணவர்களுக்கு குடிக்க தண்ணீரோ அல்லது பேனா சரி இல்லை என்றாலோ தேர்வு கண்காணிப்பாளரிடம் தான் கேட்கவேண்டும்.

மாணவ-மாணவிகள் காப்பி அடிப்பதை தடுக்கவும், கண்காணிக்கவும் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆகியோர் தலைமையில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

சி.பி.எஸ்.இ. 12-வது வகுப்பு தேர்வுகள் மார்ச் 3ஆ‌ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆ‌ம் தேதி முடிவடைகிறது. 10ஆ‌ம் வகுப்பு தேர்வும் மார்ச் 3ஆ‌ம் தேதி தொடங்கி மார்ச் 31ஆ‌ம் தேதி முடிகிறது.

மா‌ர்‌ச் 8‌: பொருட்காட்சியில் மகளிருக்கு இலவச அனுமதி.


வரு‌ம் மா‌ர்‌ச் 8ஆ‌ம் தே‌தி உலக ம‌க‌ளி‌ர் ‌தின‌ம் கொ‌ண்டாட‌ப்பட உ‌ள்ளதை மு‌ன்‌னி‌ட்டு, செ‌ன்னை‌யி‌ல் நட‌ந்து வரு‌ம் சு‌ற்றுலா‌ப் பொரு‌‌ட்கா‌ட்‌சி‌யி‌ல் மக‌ளிரு‌க்கு இலவச அனும‌தி வழ‌ங்க‌ப்பட உ‌ள்ளது.

கடந்த 22.12.2009 அன்று 36-வது இந்திய சுற்றுலா தொழில் பொருட்காட்சி முதலமைச்சர் கருணாநிதியால் சென்னை தீவுத்திடலில் தொடங்கி வைக்கப்பட்டது.

ஒரு புற‌ம், த‌னியா‌ர் ‌நிறுவன‌ங்க‌ளி‌ன் கடைகளு‌ம், ‌வி‌ற்பனை‌ப் ‌பி‌ரிவுகளு‌ம், ம‌ற்றொரு புறம் அர‌சு துறைக‌ளி‌ன் ‌விள‌க்க‌க் கூட‌ங்களு‌ம் அமை‌ந்து‌ள்ளன. செ‌ன்னை‌யி‌ல் வ‌சி‌க்கு‌ம் ஏராளமான குடு‌ம்ப‌த்‌தின‌ர் சு‌ற்றுலா‌ப் பொரு‌ட்கா‌ட்‌சி‌க்கு வ‌ந்து அனை‌த்து ‌விதமான பொழுதுபோ‌க்கு அ‌ம்ச‌ங்களையு‌ம் க‌ண்டு க‌ளி‌‌‌க்‌கி‌‌ன்றன‌ர்.

இப்பொருட்காட்சியினை இதுவரை மொத்தம் 11 லட்சத்து 40 ஆயிரம் பேர் பார்வையிட்டுச் சென்றுள்ளனர். இதுதவிர இரண்டரை லட்சம் மாணவ-மாணவிகளும் குடும்பத்துடன் பொருட்காட்சியினைப் பார்வையிட்டுள்ளனர். இப்பொருட்காட்சியின் வாயிலாக இதுவரை ரூ.1 கோடியே 59 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.

அத‌ன்படி, வரு‌ம் மா‌ர்‌ச் மாத‌ம் 8ஆ‌ம் தே‌தி உலக மகளிர் தினமாகக் கொண்டாடப்படுவதால், அந்நாளில் சுற்றுலா தொழில் பொருட்காட்சிக்கு வரும் அனைத்து மகளிரும் நுழைவுக் கட்டணம் ஏதுமின்றி பொருட்காட்சியினைப் பார்வையிட இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள் எ‌ன்று த‌மிழக அரசு அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

இ‌ந்த சு‌ற்றுலா‌ப் பொருட்காட்சி வருகிற 14.3.2010 அன்று‌ட‌ன் நிறைவு பெறுகிறது எ‌ன்று அரசு செய்தி குறிப்பு தெரிவித்துள்ளது.

பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் பணவீக்கம் அதிகரிக்காது.


பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பணவீக்கம் அதிகரிக்காது என்று திட்டக் குழு துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா தெரிவித்தார்.

மக்களவையிலி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், பெட்ரோல், டீசலுக்கான உற்பத்தி வரி லிட்டருக்கு ரூ. 1 உயர்த்தப்பட்டது. இதனையடுத்து பெட்ரோல் மற்றும் டீசலின் விலை லிட்டருக்கு ரூ. 3 வரை உடனடியாக அதிகரித்தது.

இதன் விளைவாக லாரி வாடகைக் கட்டணம் உயர்ந்துள்ளது. இந்த காரணங்களால் அத்தியாவசியப் பொருள்கள் உள்பட அனைத்துப் பொருள்களின் விலையும் தொடர்ந்து உயரும். இதனால் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் என்று பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில, தனியார் தொலைக்காட்சிக்கு மான்டேக் சிங் அலுவாலியா சனிக்கிழமை பேட்டி அளிக்கையில், பெட்ரோலியப் பொருள்களுக்கு உற்பத்தி வரி விதிக்கப்பட்டுள்ளதால் பண வீக்கமும் அதிகரிக்கும் என்று பயப்படத் தேவையில்லை. உண்மையாகக் கூற வேண்டுமானால் இது மிகவும் சரியான நடவடிக்கைதான். பெட்ரோலியப் பொருள்களுக்கு தொடர்ந்து மானியம் வழங்க முடியாது. இப்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் சமநிலையிலான பட்ஜெட்.
சரக்கு-சேவை வரி அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிவித்துள்ளார். இந்த வரிக்கு மாநில அரசுகள் ஏற்கெனவே எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இருந்த போதிலும் வரியை அமல்படுத்தும் விஷயத்தில் மாநில அரசுகளின் ஒத்துழைப்பை பிரணாப் பெற்றுவிடுவார் என்று நம்புகிறேன்.

இந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 6 விழுக்காடு வளர்ச்சியடைந்துள்ளது. எனினும் இது குறித்து அதிகம் கவலையடையத் தேவையில்லை. உலக அளவில் பொருளாதார நிலையில் நிச்சயமற்ற தன்மை நிலவினாலும், இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பாகவே இருக்கும். நான்காவது காலாண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 8 விழுக்காட்டை நெருங்கும் என்று அலுவாலியா நம்பிக்கைத் தெரிவித்தார்.

இந்த நிதியாண்டில் மூன்றாவது காலாண்டில் வேளாண் உற்பத்தி 2.8 விழுக்காடு குறைந்து விட்டது. இதற்கு பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட வறட்சியே காரணம். அடுத்த ஆண்டில் வேளாண் உற்பத்தி ஆறு முதல் 7 விழுக்காடு வரை இருக்கும் என்று மான்டேக்சிங் அலுவாலியா கூறினார்.

வருமான வரி பட்டியல்...


மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, நேற்று மக்களவையில் தாக்கல் செய்த 2010-11 பட்ஜெட்டால், வருமான வரி செலுத்துபவர்களில் 60 விழுக்காட்டினருக்கு, ஒரு வகையில் சலுகை கிடைத்துள்ளது.

தற்போது ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் வரை உள்ள வருவாய்க்கு வருமான வரி இல்லை. இதில் எவ்வித மாற்றமும் இல்லை.

1 லட்சத்து 60 ஆயிரத்து 1 ரூபாய் முதல் ரூ.5 லட்சம் வரை உள்ளவர்களுக்கு 10 விழுக்காடு வருமான வரி விதிக்கப்பட்டுள்ளது.

(முன்பு ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்தில் இருந்து, ரூ.3 லட்சம் வரை உள்ளவர்களுக்கு 10 விழுக்காடு வருமான வரி விதிக்கப்பட்டது.)

5 லட்சத்து 1 ரூபாயில் இருந்து, ரூ.8 லட்சம் வரை உள்ளவர்களுக்கு 20 விழுக்காடு வருமான வரி விதிக்கப்பட்டுள்ளது.

(முன்பு ரூ.3 லட்சத்தில் இருந்து, ரூ.5 லட்சம் வரை உள்ளவர்களுக்கு 20 விழுக்காடு வருமான வரி விதிக்கப்பட்டது.)

(முன்பு ரூ.3 லட்சத்திற்கு மேல் 30 விழுக்காடு வருமான வரி விதிக்கப்பட்டது.)

ரூ.8 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 30 விழுக்காடு வரி விதிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு..

65 வயதிற்குள் கீழ் உள்ள பெண்கள் ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் வரை வருமான வரி செலுத்த தேவையில்லை.

(முன்பு ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் வரை வருமான வரி செலுத்த வேண்டியதில்லை.)

1 லட்சத்து 90 ஆயிரத்து 1 ரூபாய் முதல் ரூ.5 லட்சம் வரை உள்ளவர்களுக்கு 10 விழுக்காடு வருமான வரி விதிக்கப்பட்டுள்ளது.

(முன்பு 1 லட்சத்து 90 ஆயிரத்து 1 ரூபாய் முதல் ரூ.5 லட்சம் வரை வருவாய் உள்ளவர்கள் 10 விழுக்காடு வருமான வரி செலுத்த வேண்டும்.)

5 லட்சத்து 1 ரூபாய் முதல் ரூ.8 லட்சம் வரை உள்ளவர்களுக்கு 20 விழுக்காடு வருமான வரி விதிக்கப்பட்டுள்ளது.

(முன்பு 3 லட்சத்து 1 ரூபாய் முதல் ரூ.5 லட்சம் வரை வருவாய் உள்ளவர்கள் 20 விழுக்காடு வருமான வரி செலுத்த வேண்டும்.)

ரூ. 8 லட்சத்திற்கு மேல் 30 விழுக்காடு வருமான வரி செலுத்த வேண்டும்.

(முன்பு ரூ.5 லட்சத்திற்கு மேல் 30 விழுக்காடு வருமான வரி செலுத்த வேண்டும்.)


65 வயதிற்கு மேல் உள்ள மூத்த குடிமக்களுக்கு

ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் வரை வருமான வரி செலுத்த தேவையில்லை.

(முன்பு ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் வரை வருமான வரி செலுத்த வேண்டியதில்லை.)

2 லட்சத்து 40 ஆயிரத்து 1 ரூபாய் முதல் ரூ.5 லட்சம் வரை உள்ளவர்களுக்கு 10 விழுக்காடு வருமான வரி விதிக்கப்பட்டுள்ளது.

(முன்பு 2 லட்சத்து 40 ஆயிரத்து 1 ரூபாய் முதல் ரூ.3 லட்சம் வரை உள்ளவர்களுக்கு 10 விழுக்காடு வருமான வரி விதிக்கப்பட்டது.)

5 லட்சத்து 1 ரூபாய் முதல் ரூ.8 லட்சம் வரை உள்ளவர்களுக்கு 20 விழுக்காடு வருமான வரி விதிக்கப்பட்டுள்ளது.

(முன்பு 3 லட்சத்து 1 ரூபாய் முதல் ரூ.5 லட்சம் வரை உள்ளவர்களுக்கு 20 விழுக்காடு வருமான வரி விதிக்கப்பட்டது.)

8 லட்சத்திற்கு மேல் 30 விழுக்காடு வருமான வரி விதிக்கப்பட்டுள்ளது.

(முன்பு 5 லட்சத்திற்கு மேல் 30 விழுக்காடு வருமான வரி விதிக்கப்பட்டது.)

புதிய வரிகள் மூலம் ரூ.40 ஆயிரம் கோடி.


பெட்ரோலிய பொருட்கள் மீதான உற்பத்தி வரியை மீண்டும் விதித்துள்ளதாலும், மற்ற உற்பத்தி வரியை அதிகரித்து இருப்பதால் அரசுக்கு கூடுதலாக ரூ.40 ஆயிரம் கோடி கிடைக்கும். அதே நேரத்தில் வருமான வரி சலுகைகளால் ரூ.21 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என்று மத்திய வருவாய் துறை செயலாளர் சுனில் மித்ரா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பிக்கி அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சுனில் மித்ரா செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த கூடுதல் வரி வருவாயில் ரூ.14 ஆயிரம் கோடி உற்பத்தி வரியை அதிகரித்து இருப்பதாலும், ரூ.26 ஆயிரம் கோடி பெட்ரோலிய பொருட்களின் மீது மீண்டும் உற்பத்தி வரி விதிக்கப்பட்டு இருப்பதாலும் கிடைக்கும் என்று தெரிவித்தார்.

மக்களவையில் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்த பட்ஜெட்டில், பொருளாதார நெருக்கடி காரணமாக 8 விழுக்காடாக குறைக்கப்பட்ட உற்பத்தி வரி, தற்போது 10 விழுக்காடாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததை தொடர்ந்து, பெட்ரோல், டீசல் போன்ற பெட்ரோலிய பொருட்கள் மீதான உற்பத்திவரி நீக்கப்பட்டது. இது மீண்டும் விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சேவை வரி பட்டியலில் புதிதாக 8 விதமான சேவைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சேவை வரியில் கூடுதலாக அரசுக்கு ரூ.3 ஆயிரம் கோடி கிடைக்கும். உள்நாட்டில் உற்பத்தியாகும் நிலக்கரி, அயல்நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி மீது செஸ் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கூடுதலாக அரசுக்கு ரூ.2,000 கோடி கிடைக்கும்.

வியாழன், 25 பிப்ரவரி, 2010

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி வட்டி உயர்வு


தனியார் துறை வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி வைப்பு நிதி மீதான வட்டியை அரை விழுக்காடு அதிகரித்துள்ளது.

இதற்கு முன் தனியார் துறை வங்கிகளான ஹெச்.டி.எப்.சி, ஐ.டி.பி.ஐ வங்கி ஆகியவை வட்டியை உயர்த்தியது நினைவிருக்கலாம்.

புதிய வட்டி விகிதப்படி 390 நாட்களில் முதிர்வடையும் வைப்பு நிதிக்கு 6.75 விழுக்காடு வட்டி வழங்கப்படும். பழைய வட்டி 6.5%.

இதே போல் 590 நாட்களில் முதிர்வடையும் வைப்பு நிதிக்கு 6.75 விழுக்காடு வட்டி வழங்கப்படும். பழைய வட்டி 6.25%.

கல்யாணத்திற்கு முன் செக்ஸ்-கிராமங்கள் முன்னிலை!


கல்யாணத்திற்கு முன்பு செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதில் நகர்ப்புறங்களை விட கிராமத்தினர்தான் முன்னணியில் உள்ளனராம்.

சர்வதேச மக்கள் தொகை அறிவியல் கழகம் என்ற அமைப்பு இதுதொடர்பாக நடத்திய சர்வேயில் இவ்வாறு தெரிவித்துள்ளது.

இந்த சர்வே முடிவுகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத்தும், நோபல் பரிசு வென்ற அமார்த்ய சென்னும் டெல்லியில் வெளியிட்டனர்.

ஆந்திரா, பீகார், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த, 15 முதல் 29 வயதுக்குட்பட்ட 58,000 ஆண், பெண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. 2006ல் தொடங்கி 2008 வரை இந்த ஆய்வு நடத்தப்பட்டதாம்.

ஆய்வின் சில முக்கிய அம்சங்கள்...

கிராமப்புறங்களைச் சேர்ந்த ஆண்களில் 17 சதவீதம் பேர் கல்யாணத்திற்கு முன்பு செக்ஸ் உறவு வைத்துக் கொள்கின்றனராம். அதேசமயம், நகரங்களில் இது 10 சதவீதமாக உள்ளதாம்.

நகர்ப்புற பெண்களில் 2 சதவீதம் பேர் கல்யாணத்திற்கு முன்பு செக்ஸ் உறவு கொள்கிறார்களாம். அதுவே கிராமப்புறங்களில் 4 சதவீதமாக உள்ளதாம்.

கல்யாணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்ளும் நகர்ப்புற ஆண் பெண்களும் சரி, கிராமப்புறத்தினரும் சரி பாதுகாப்பற்ற முறைகளிலேயே அதில் ஈடுபடுகின்றனர். பலருடன் தொடர்பு வைத்துக் கொள்வதும் அதிகமாகவே உள்ளதாம்.

19 வயதுக்குட்பட்டோரில் (நகரம்- கிராமம்) 8 சதவீதம் பேர் செய்துதான் பார்ப்போமே என்பதற்காக செக்ஸில் ஈடுபடுகின்றனராம்.

அதேபோல மனைவியை அடிப்பதில் தவறே இல்லை என்ற கருத்து தமிழ்நாடு மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களைச் சேர்ந்த ஆண்களிடம் நிலவுகிறதாம். கிட்டத்தட்ட 58 சதவீதம் பேர் மனைவியை அடிப்பதில் தவறில்லை என்று கூறியுள்ளனராம்.

தமிழ்நாட்டில் 56 சதவீதம் பேர மனைவியை அடிப்பது வாழ்க்கையில் ஒரு பகுதி என்று கூறினராம். ஆந்திராவில் இது மோசமாக உள்ளது. கிட்டத்தட்ட 88 சதவீதம் பேர் மனைவியை அடிப்பது எங்களது உரிமை என்று கூறியுள்ளனராம்.

இந்த ஆய்வில், இளம் பெண்களிடையே, கருத்தரிப்பு சாதனங்கள் குறித்த விழிப்புணர்வு குறைவாகவே உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. பலருக்கு எய்ட்ஸ், எச்ஐவி தடுப்பு முறைகள் குறித்து தெரியவே இல்லையாம்.

தமிழகத்தில் 10 நகரங்களில் இரயில்வே மருத்துவமனை.


தமிழகத்தில் செங்கல்பட்டு, ஈரோடு, கரூர், காட்பாடி, கும்பகோணம், நாகர்கோவில், திருச்சி, திருநெல்வேலி, விழுப்புரம், விருநகர் ஆகிய இட‌ங்களில் இரயில்வே மருத்துவமனைகளும், உடல் பரிசோதனை மையங்களும் அமைக்கப்படும் என்று இரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்து பேசிய அவர், மத்திய சுகாதார அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் நாட்டில் மொத்தம் 522 இரயில்வே மருத்துவமனைகளும், உடல் பரிசோதனை மையங்களும், இரயில்வே பணியாளர்கள் மற்றும் அவ‌ரி‌ன் குடும்பத்தினரின் நலனுக்காக அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.

புதன், 24 பிப்ரவரி, 2010

வயதுக்கேற்ற செக்ஸ்-வழிகாட்டும் 'செக்ஸ்டஸி'!


வயதுக்கேற்றார் போல சாப்பிடுகிறோம் அல்லவா. அது போலவே ஒவ்வொரு வயதினருக்கும் ஒரு வகையான செக்ஸ் உணர்வுகள், வெளிப்பாடுகள் இருக்கும் என்கிறார் செக்ஸ் குரு டிரேஸி காக்ஸ்.

செக்ஸ்டஸி என்ற பெயரில் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார் டிரேஸி. அதில் ஒவ்வொரு வயதுக்கேற்ற செக்ஸ் உணர்வுகள், அதற்குரிய வடிகால்கள் உள்ளிட்டவை குறித்து விலாவாரியாக விளக்கியுள்ளார் டிரேஸி.

அதிலிருந்து சில பகுதிகள்..

20 + வயது...

இந்த வயதில் இருக்கும் ஆண்களும் சரி, பெண்களும் சரி செக்ஸ் குறித்த கற்பனைகள், நினைவுகளில் அதிகம் மூழ்கியிருப்பராம். குறிப்பாக ஆண்களை விட பெண்களுக்கே கற்பனை உணர்வுகள் அதிகம் இருக்குமாம். நிறைய கற்பனை செய்து பார்ப்பார்களாம்.

பெண்களில் பலருக்கு செக்ஸை அனுபவித்துப் பார்த்தால் என்ன என்ற யோசனையும் அடிக்கடி வருமாம். 2006ல் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வின்படி, 20 வயதைக் கடந்த பெண்களுக்கு, சக பெண்களுடன் படுத்திருக்கும்போது ஆர்கசம் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 76 சதவீதம் பெண்களுக்கு இப்படி ஆர்கசம் வருமாம்.

இதுவே இந்த வயதில் ஆண்களுடன் படுக்கும் பெண்களில் 50 சதவீதம் பேருக்குத்தான் ஆர்கசம் வருமாம். அதாவது நிஜத்தை விட நிழலில் தான் இந்த வயதுப் பெண்களுக்கு செக்ஸ் ஆசை அதிகம் இருக்குமாம்.

20 வயதுகளில் உள்ள ஆண்களுக்கும், பெண்களுக்கும் உடலுறவுப் பொசிசன்கள் குறித்து நிறைய ஆர்வம் இருக்குமாம். அதைப் பரீட்சித்துப் பார்க்கும் ஆர்வமும் இருக்குமாம். பத்தில் ஒருவர், தங்களது 20 வயதுகளில் மூன்று பேருடனாவது உறவு வைத்திருப்பார்கள் என்கிறார் டிரேஸி.

30 + வயது...

30 வயதில் வித்தியாசமான சோதனைகளை செய்து பார்க்க விரும்புவார்களாம் ஆண்களும், பெண்களும். வீட்டுக்குள் வைத்திருந்த செக்ஸை வெளியிலும் கொண்டு போகத் துடிப்பார்களாம்.

பூங்காக்கள், கடற்கரைகள், தோட்டம், இருளான பகுதிகள் என பல்வேறு புகலிடங்களைத் தேடி இவர்களின் செக்ஸ் மனது ஓடுமாம்.

இதுபோன்ற இடங்களில் செக்ஸ் வைத்துக் கொள்ளவே அதிகம் விரும்புவார்களாம். அதேபோல ஷவரில் செக்ஸ் வைத்துக் கொள்வது, பாத் டப்பில் வைத்துக் கொள்வது என்று வித்தியாசமாகவும் திங் பண்ணுவார்களாம்.

அதேபோல வார இறுதி நாட்களில் ஜோடியாக சுற்றுவது, கையைப் பிடித்தபடி உலா வருவது, நெருக்கமாக இருப்பது போன்றவற்றிலும் இந்த வயதுக்காரர்களுக்கு ஆர்வம் அதிகம் இருக்குமாம்.

இந்த வயதில் பெரும்பாலானோருக்கு குழந்தைகள் வந்து விடும். எனவே அவர்களின் செக்ஸ் ஆசைகள் முன்பு இருந்ததைப் போல இல்லாமல் சற்று சுருங்கிப் போயிருக்குமாம். ஆனால், கர்ப்பமாக இருக்கும்போது கணவனும், மனைவியும் மாதத்திற்கு நான்கு முதல் ஐந்து முறை கூட செக்ஸ் வைத்துக் கொள்ளப் பிரியப்படுவார்களாம்.

பல பெண்கள் குழந்தை பெற்ற பின்னர் 7 வாரம் வரை லீவு விட்டு விடுவது வழக்கமாக உள்ளது. அதன் பின்னர் மாதாந்திர செக்ஸ் உறவு எண்ணிக்கை 3 அல்லது 4 முறை என்று குறைந்து விடுமாம்.

அதேசமயம், ஒருவரை ஒருவர் வருடிக் கொடுப்பது, முத்தமிடுவது, உள்ளிட்டவற்றை அதிகம் நாடுவார்களாம். குழந்தைச் செல்வங்கள் நடுவில் வந்து விட்டதால் சிலர் வாய்ப்பு கிடைக்கும்போது, பாஸ்ட் புட் ரேஞ்சுக்கு அவசர கதியில் செயல்படுவதும் உண்டாம்.

30 வயதைத் தாண்டிய பெண்களில் 90 சதவீதம் பேருக்கு ஆர்கசம் அடிக்கடி வருகிறதாம். அதேசமயம், 20 வயதுகளில் உள்ள பெண்களுக்கு இது 23 சதவீதமாகவே உள்ளதாம்.

40 + வயது...

40 வயதைத் தாண்டிய பெரும்பாலான ஆண்களுக்கு எரக்ஷன் பிரச்சினை வந்து விடுகிறதாம். மேலும், இந்த வயதில் நேரடி செக்ஸ் உறவை விட படம் பார்ப்பது, செக்ஸ் சாட்டிங் செய்வது என்று வெளி வேலைகளில் அதிக ஆர்வம் காட்டுவார்களாம் ஆண்கள்.

பெண்களுக்கோ இந்த வயதில் செக்ஸ் ஆசை அதிகரிக்குமாம். தங்களது கணவர் அல்லது பார்ட்னரை விட இளம் வயதினரைப் பார்க்கும்போது மோகம் பிறக்கிறதாம்.

மாதாந்திர உறவு எண்ணிக்கை இந்த வயதினர் மத்தியில் குறைவாக இருந்தாலும் மனசுக்குள் செக்ஸ் ஆசை நிறையவே இருக்குமாம். ஒரு தடவையாக இருந்தாலும் அதை நிறைவாக, நிதானமாக செய்ய வேண்டும் என்று நினைப்பார்களாம்.

டிரேஸி கூறியுள்ளதெல்லாம் அவரது மேற்கத்திய கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு தெரிவித்துள்ள கருத்துக்களாகும். ஆனால் இது நம்மூருக்கு பொருந்தாது என்றே தோன்றுகிறது.

கூந்தன்குளத்தில் குவியும் வெளிநாட்டு பறவைகள்


நெல்லை: நெல்லை அருகே உள்ள கூந்தன்குளம் சரணாலயத்திற்கு, இனப்பெருக்கத்திற்காக வரும் வெளிநாட்டு பறவைகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு அதிகளவில் காணப்படுகிறது.

சைபீரியா, ஜெர்மன் மற்றும் மத்திய ஆசிய பகுதிகளில் வாழும் பறவை இனங்களான பார்ஹெட்டட் கூஸ், சோவல்லார், பின்டெய்ல், காமன் டீல், பிளெமிங்கோ, கூட் ஆகியவை தற்போது கூந்தல்குளத்திற்கு வரத்தொடங்கியுள்ளன.

இது தவிர பெலிகான் பெயிண்ட், ஓயிட் ஐபிஸ், கிரே ஐபிஸ், கிரே ஹெரன், பர்பிள் ஹெரன், ஸ்பூன்பில், காட்டன் டீல், இந்தியன் மூர்கென், கிங் பிஷர் ஆகிய இந்திய வெளிமாநில பறவைகளும் குளத்தில் ஆழமான பகுதியில் கூடு கட்டியுள்ளன.

தரையில் கூடு கட்டி முட்டையிடும் மஞ்சள் மூக்கு ஆள்காட்டி, சிவப்பு மூக்கு ஆள்காட்டி, பவளக்கால் உள்ளான், வானம்பாடி ஆகிய உள்ளூர் பறவைகளும் கூந்தன்குளத்தில் முகாமிட்டுள்ளன.

பறவைகளை காண ஏராளமான சுற்றுலா பயணிகளும், ஆராய்ச்சி மாணவிகளும் இங்கு வந்த வண்ணம் உள்ளனர்.

திருநெல்வேலியில் இருந்து சுமார் 38 கி.மீ தொலைவில் நாங்குனேரி தாலுகாவில் அமைந்துள்ள கூந்தன்குளம் சரணாலயம் கடந்த 1994ம் ஆண்டு அரசால் அறிவிக்கப்பட்டது.

இங்கு சுற்றுலா பயணிகள் தங்கவும், பறவைகள் பற்றி அறிந்து கொள்ள தொலை நோக்கி கருவிகள், கண்காட்சி கோபுரம் ஆகியவையும் வனத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

எனினும் முறையான பேரூந்து வசதி இல்லாததால் நெல்லை மாவட்டத்தினர் கூட குறித்த நேரத்திற்கு சென்று திரும்ப முடியாத நிலை உள்ளதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

மின்பற்றாக்குறையை தீர்க்க 2000 மெகாவாட் மின்சாரத்தை வாங்குகிறது தமிழகம்.


சென்னை: தமிழகத்தில் நிலவி வரும் மின் பற்றாக்குறையைப் பூர்த்தி செய்ய வருகிற மே மாதம் வரை 2000 மெகாவாட் மின்சாரத்தை வாங்கவுள்ளது தமிழக அரசு.

இந்த ஆண்டு தமிழகத்தின் மின் தேவை 8 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கோடை காலத்தில் மின் தேவை மேலும் அதிகமாக இருக்கும் எனவும் அஞ்சப்படுகிறது.

2000 மெகாவாட் மின்சாரத்தை வாங்கும் முடிவு முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

இதுகுறித்து தமிழ்நாடு மின்வாரியம் வெளியி்ட்டுள்ள அறிக்கையில், மத்திய தொகுப்பிலிருந்து வருகிற ஜூன் மாதத்திலிருந்து தமிழகம் தனது பங்கான 1607 மெகாவாட் மின்சாரத்தைப் பெறும். அதுவரை பிற வழிகளிலிருந்து மின்சாரத்தை வாங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர தமிழகத்தின் மின் பற்றாக்குறையைத் தீர்க்கும் வகையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் மின் திட்டங்களை விரைவுபடுத்துமாறும் முதல்வர் கருணாநிதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

வட சென்னையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் 1200 மெகாவாட் திறனுடைய யூனிட்-1, யூனிட்-2 மின் திட்டங்கள் முறையே 2011ம் ஆண்டு மே மற்றும் நவம்பரில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் 2010 ஜூன் முதல் 2011 மே மாதத்திற்கு இடையிலான கால கட்டத்தில் கூடங்குளம் அணு மின் நிலையம், கல்பாக்கம் அணு மின் நிலையம், நெய்வேலி, சிம்மாத்ரி ஆகிய மின் திட்டங்களிலிருந்து தமிழகத்திற்கு 1607 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.

கடந்த கோடை காலத்தில் தமிழகத்தின் மின் தேவை 9000 மெகாவாட்டாக அதிகரித்திருந்தது. இது அதுவரை இல்லாத அளவாகும். வருகிற கோடைகாலத்தி்ல இந்தத் தேவை 10,000 மெகாவாட்டாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தின் மின் உற்பத்தி 8200 மெகாவாட் மட்டுமே.

ரயில்வேத் திட்டங்களுக்கு ரூ. 41.426 கோடி.


மக்களவையில் ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி சமர்பித்த பட்ஜெட்டில், 2110-11 ஆம் நிதி ஆண்டில் இதுவரை இல்லாத அளவிற்கு ரூ.41,426 கோடி திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான நிதி பட்ஜெட் ஒதுக்கீடு மூலம் ரூ.15,875 கோடியும, டீசல் வரி மூலம் ரூ.877 கோடியும், ரயில்வேயின் உள்ளாதாரங்கள் மூலம் ரூ.14,523 கோடியும், கூடுதல் பட்ஜெட் ஆதாரங்கள் மூலம் ரூ.10,151 கோடியும் பெறப்படும்.

ரயில்வே வசமுள்ள குறைந்தபட்ச நிதியாதாரங்களக் கொண்டு ரயில் மூலமான இணைப்பை விரிவுபடுத்வதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் ஆயிரம் கிமீ புதிய ரயில் பாதை அமைக்கும் இலைக்கை எட்ட, இதற்கான ஒதுக்கீடு ரூ.2,848 கோடியிலிருந்து, ரூ.4411 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்காக சென்ற ரயில்வே பட்ஜெட்டில் ரூ.923 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இது இந்த பட்ஜெட்டில் ரூ.1302 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

ரயில் மூலம் சரக்குப் போக்குவரத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன் கடந்த 2009-10 ஆம் நிதி ஆண்டவிட கூடுதலாக 54 மில்லியன் டன் சேர்க்கப்பட்டு, 944 மில்லியன் டன் சரக்குகளை கையாள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரயில்வேத் துறைக்கு நிலுவையில் உள்ள கடனை திருப்பி செலுத்துவதற்காக ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சாதாரண செலவினங்களுக்காக, ரூ.65 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டில் திருத்தப்பட்ட எதிர்பார்ப்புகளைவிட ரூ.500 கோடி குறைவாகும் என்று மம்தா பானர்ஜி சமர்ப்பித்த பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

விண்ணைத்தாண்டி வருவாயா - மு‌ன்னோ‌ட்ட‌ம்.


எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ், ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் இணைந்து தயா‌ரித்திருக்கும் படம் விண்ணைத்தாண்டி வருவாயா. கௌதம் வாசுதேவ மேனன் படத்தை இயக்கியிருக்கிறார்.

உதவி இயக்குனர் ஒருவர் கேரளாவிலிருந்து வரும் இளம் பெண்ணுடன் காதல் கொள்வதும் அதனால் வரும் பிரச்சனைகளும், காதலின் முடிவும்தான் படத்தின் கதை. கார்த்திக் என்ற உதவி இயக்குனராக சிம்பு நடித்துள்ளார். மலையாள கிறிஸ்தவ பெண் ஜெஸ்ஸியாக த்‌ரிஷா.

இவர்கள் இருவரையும் மிக இயல்பாக நடிக்க வைத்திருக்கிறார் கௌதம். படத்தின் கிளைமாக்ஸை நியூயார்க் நக‌ரில எடுத்துள்ளனர்.

“விண்ணைத்தாண்டி வருவாயா என்னுடைய கே‌ரியல் முக்கியமான படமாக இருக்கும். சிம்பு படம்னா விரல் வித்தை, பன்ச் டயலாக் இருக்கும்னு ஒரு இமே‌ஜ் இருக்கு இல்லையா? அதை இந்தப் படம் மாற்றும்” என கூறுகிறார் சிம்பு.

“நான் இயக்கிய படங்களிலேயே மனசுக்கு ரொம்ப நெருக்கமான படம் இது. பிடித்த படமும் இதுதான்” என்கிறார் கௌதம். ஏ.ஆர்.ரஹ்மானின் தீவிர விசிறி த்‌ரிஷா. அவரது இசையில் நடிக்க வேண்டும் என்பது அவரது நீண்ட நாள் விருப்பம். அந்த விருப்பம் இந்தப் படத்தின் மூலம் நிறைவேறியதாக சந்தோஷப்படுகிறார்.

கௌதமின் ஆஸ்தான கவிஞர் தாமரை பாடல்கள் எழுதியுள்ளார். மனோ‌ஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு. ஆண்டனி எடிட்டிங். கலை ரா‌ஜீவன். உடை நளினி ஸ்ரீராம்.

படத்தில் சிம்பு, த்‌ரிஷா உதட்டோடு உதடு முத்தம் கொடுக்கும் காட்சி இடம்பெறுகிறது. இதன் காரணமாக படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது தணிக்கைக் குழு.

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது.

உடல் உறு‌ப்புக‌ள் ப‌ற்‌றி.


நமது உட‌லி‌ல் மா‌ற்ற இயலாத ஒரே உறு‌ப்பு ஈர‌ல். ம‌னித உட‌லி‌ல் ‌மிக‌க் குறைவாக உ‌ள்ள தாது மா‌ங்க‌னீ‌‌ஸ்.

உட‌லி‌ல் உ‌ள்ள சுர‌ப்‌பிக‌ளி‌ல் ‌மிக‌ப்பெ‌ரிய சுர‌ப்‌பி க‌ல்‌லீர‌ல். ‌விர‌ல் நக‌ங்க‌ளி‌ல் நடு‌விர‌ல் நகமே வேகமாக வளரு‌ம்.

நா‌க்‌கி‌ல் சுமா‌ர் மூவா‌யிர‌ம் சுவை மொ‌ட்டுக‌ள் உ‌ள்ளன. தலை முடி பக‌ல் நேர‌த்‌தி‌ல் தா‌ன் அ‌திகமாக வளரு‌கிறது.

முதுகெலு‌ம்பு தரை‌யி‌ல் படுமாறு உற‌ங்கு‌ம் ஒரே உ‌யி‌ரின‌ம் ம‌னித‌ன்தா‌ன்.

நக‌ம் கடி‌க்கு‌ம் பழ‌க்க‌ம் மன அழு‌த்த‌த்‌தி‌ன் வெ‌ளி‌ப்பாடு என சொ‌ல்ல‌ப்படு‌கிறது.

சரும‌த்‌தி‌ன் அனை‌த்து ப‌க்க‌த்‌திலு‌ம் நு‌ண்‌ணிய துளைக‌ள் உ‌ள்ளன. துளைகளு‌க்கு‌க் ‌கீழே ‌விய‌ர்வை சுர‌ப்‌பிகளு‌ம் அமை‌ந்து‌ள்ளன.

இந்தியாவில் இருந்து மருந்து இறக்குமதி: இலங்கை


இலங்கையில் மருத்துவமனைகளில் உயிர்காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த தட்டுப்பாட்டை நீக்க இந்தியாவில் இருந்து அத்தியாவசிய மருந்துகளை பத்த நாட்களில் இறக்குமதி செய்யப்போவதாக இலங்கை உடல்நல துறை செயலாளர் நிகால் ஜெயதிலகா தெரிவித்தார்.

இது குறித்து நிகால் ஜெயதிலகா கூறுகையில், மருத்துவ மனைகளில் நிலவும் அத்தியாவசிய மருந்து தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்சமயம் தேவைப்படும் மருந்துகள் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும்.

இந்த வார தொடக்கத்தில் மருத்துவ மனைகள், இதன் தொடர்புடையவர்களுடன் நடந்த கூட்டத்தில், மருந்து தட்டுப்பாடு பற்றி தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக உடல்நல துறை அமைச்சர் நிமால் ஸ்ரீபாலா டி சில்வாவுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து இந்தியாவில் இருந்து மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்தரவையின் ஒப்புதல் பெறுவது என முடிவு செய்யப்பட்டது.

தற்சமயம் தேவைப்படும் மருந்தில் 80 விழுக்காடு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் என்று ஜெயதிலகா தெரிவித்ததாக அரசின் இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக வருவாய் கிடைக்கும் யூலிப் திட்டம்: ரிலையன்ஸ் இன்ஷ்யூரன்ஸ்.


அனில் அம்பானி குழுமத்தைச் சேர்ந்த ரிலையன்ஸ் ஆயுள் காப்பீடு நிறுவனம், அதிகபட்சம் இலாபம் கிடைக்கும், பங்குச் சந்தையுடன் இணைந்த காப்பீடு திட்டத்தை வெள்ளிக் கிழமை அறிமுகப்படுத்தி உள்ளது.

ஆயுள் காப்பீடு நிறுவனங்கள், ஆயுள் காப்பீடு பாலிசிகளுக்கு செலுத்தும் பிரிமியத்தில் ஒரு பகுதியை, பங்குச் சந்தையில் முதலீடு செய்கின்றன. இந்த வகை காப்பீடு திட்டங்கள் யூனிட் லிங்க் இன்ஷ்யூரன்ஸ் பிளான் என்றும், சுருக்கமாக யூலிப் என்றும் அழைக்கப்படுகிறது.

தற்போது ரிலையன்ஸ் காப்பீடு நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ள யூலிப் திட்டம் குறித்து, இதன் தலைவர் மலாஸ் கோஷ் கூறுகையில், இந்த திட்டம் இதன் 10 வருட கால கெடுவுக்குள், காப்பீடு செய்து கொண்டவர்களுக்கு அதிக பட்ச வருவாய் கிடைக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய அம்சம் காப்பீடு செய்து கொண்டவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள யூனிட்டின் மதிப்பு தினசரி கணக்கிடப்படுகிறது.

இந்த திட்டம் காப்பீடுதாரர்களுக்கு இழப்பு ஏற்படாதவாறு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இதில் கட்டப்படும் பிரிமியம் நிர்வாக கட்டணம் தவிர மீதமுள்ளவை அதிக பட்சம் வருவாய் கிடைக்கும் பங்குகளில் முதலீடு செய்யப்படும்.

இதில் இரண்டு விதமாக பணம் கட்டலாம். ரெகுலர் ஆப்ஷன் திட்டத்தின் படி வருடத்திற்கு குறைந்த பட்சம் ரூ.20 கட்ட வேண்டும். இதை மாதாமாதம், மூன்று மாதத்திற்கு ஒரு முறை, ஆறு மாதத்திற்கு ஒரு முறை என செலுத்தலாம்.

ஒரே தடவையில் கட்டும் திட்டத்தின் படி, குறைந்தபட்சம் ரூ.30 ஆயிரம் செலுத்த வேண்டும். இநத காப்பீடு திட்டத்தை 30 நாள் குழந்தை முதல் 65 வயது வரை உள்ளவர்கள் செய்து செய்து கொள்ளலாம்.

திங்கள், 22 பிப்ரவரி, 2010

பட்ஜெட்: தகவல் தொழில் நுட்ப துறைக்கு சலுகைகள் நீடிக்கப்பட வேண்டும்!


தகவல் தொழில் நுட்ப துறையைச் சேர்ந்த மென்பொருள் வடிவமைப்பு, சேவை வழங்கல் உட்பட எல்லா நிறுவனங்களுக்கும் வரி சலுகைகளை நீடிக்க வேண்டும். இது இந்த துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் போட்டியை எதிர்கொள்வதற்கு உதவியாக இருக்கும் என்று பிரபல கணக்கு தணிக்கை ( ஆடிட்) நிறுவனம் பிரிஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர் கூறியுள்ளது.

சர்வதேச அளவிலான கணக்கு தணிக்கை நிறுவனமான பிரிஸ்வாட்டர் ஹவுஸ் கூப்பர் நிறுவனத்தின் தொழில் நுடப பிரிவு தலைவர் ஹரி ராஜகோபாலச்சாரி மத்திய பட்ஜெட் எதிர்பார்ப்புகள் பற்றி கருத்து கூறுகையில், அந்நிய செலவாணி சந்தையில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்றுமதி நிறுவனங்களின் வருவாய் குறைகிறது.

மத்திய அரசு எதிர் வரும் பட்ஜெட்டில் தகவல் தொழில் நுட்பத் துறையில் உள்ள சிறு, நடுத்தர பிரிவு நிறுவனங்களுக்கு நீண்ட கால வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும். இவை எந்த பகுதியில் அமைந்திருந்தாலும், வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

லோகன் டூரர் கார் அறிமுகம்


இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான மகேந்திரா அண்ட் மகேந்திரா. ரெனால்ட் நிறுவனங்களின் கூட்டு நிறுவனம் மகேந்திரா ரெனால்ட். இந்த கூட்டு நிறுவனத்தின் சார்பாக லோகன் டூரர் என்ற புதிய ரக கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மகேந்திரா ரெனால்டில் கூட்டு நிறுவனத்தின் தயாரிப்பான லோகன் டூரர், சென்ற மாதம் புது டெல்லியில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ வாகன கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது. இது பெட்ரோல், டீசல் ஆகிய இரண்டு வகையிலும் கிடைக்கும். ஜாவா பிரவுன், மிஸ்ட் சில்வர், டைமண்ட் ஒயிட் ஆகிய மூன்று நிறங்களில் கிடைக்கும்.

இதில் ப்ளூ டூத் வழியாக ஹேண்ட்ஸ் ப்ரீ டெலிபோனி, யு.எஸ்.பி., ஐபாட் இணைப்பு ஆகிய சிறப்பு அம்சங்களும் உள்ளன. அத்துடன் உயர் நவீன மியூசிக் சிஸ்டம் லோகன் டூரரில் உள்ளது.

இதற்கு முன் நவீன வகை மாடல்களில் மட்டும் இருந்த ஸ்போர்ட்ஸ் பாக் விளக்குகள், இதில் இடம் பெற்றுள்ளன.

இந்த புதிய லோகன் டூரர் கார், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மகேந்திரா ரெனால்டு விற்பனை மையங்களிலும் கிடைக்கும் என்று இந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்கு சந்தை வர்த்தகத்தில் ஈடுபட தடை: செபி


பங்குச் சந்தையை கட்டுப்படுத்தும் செபி, பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு 16 பேருக்கு தடை விதித்துள்ளது.

இந்த தடை உடனடியாக அமலுக்கு வருவதாக, பங்குச் சந்தை பரிவர்த்தனை வாரியம் ​(செபி)​ தெரிவித்துள்ளது.

இவர்கள் பங்குச் சந்தை வர்த்தகத்தில் கூட்டு சேர்ந்து ஈடுபட்டதால், இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஹேமலதா ரமேஷ் ஹங்கரே,​​ ராஷ்மி ஆர் காந்தி,​​ அனில் ராஜ்மல் ஷா,​​ அல்பேஷ் ஆர் ஷா,​​ ஜிதேந்திர மன்னாலால் ஜெயின்,​​ ரேணு மதுசூதன்,​​ பொலிவால் ஹஸ்முக்,​​ வால்சந்த் ஜெயின்,நரேஷ் வி ரஜாவத் உள்ளிட்ட பதினாறு பேர், கூட்டு சேர்ந்து ஒருங்கிணைந்த வர்த்தகத்தில் ஈடுபட்டதாக செபி தெரிவித்துள்ளது.

இவர்கள் 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் செயற்கையாக சில நிறுவனங்களின் பங்கு விலையை உயர்த்தியுள்ளனர்.​ அத்துடன் சில பங்குகள் அதிக எண்ணிக்கையில் வர்த்தகம் ஆனதாகவும் தெரிவித்துள்ளனர்.​ ஆல் கார்கோ லாஜிஸ்டிக்ஸ்,​​ ஏசியன் ஸ்டார் நிறுவனம்,​​ கேஎஸ்எல் இண்டஸ்ட்ரீஸ்,​​ மாவென் பயோடெக்,​​ பனோர்மிக் யுனிவர்சல்,​​ ராசி எலெக்ட்ரோட்ஸ் உள்ளிட்ட சில நிறுவனங்களின் பங்குகள் அதிகம் விற்பனையானது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

இது தற்போது கண்டுபிடிக்கப்பட்டு இதனால் பயனடைந்த 16 பேரின் வங்கிக் கணக்குகளை முடக்குமாறு தேசிய பங்கு பரிவர்த்தனை டெபாசிட்டரி நிறுவனத்துக்கு ​(என்எஸ்டிஎல்)​ உத்தரவிட்டுள்ளது.

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

சேமிப்பு கணக்கு வட்டி தினசரி கணக்கிட வேண்டும்: ரிசர்வ் வங்கி.


வங்கிகளின் சேமிப்பு கணக்கில் உள்ள பணத்திற்கு, வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் தினசரி கணக்கில் உள்ள பணத்திற்கு வட்டி கிடைக்கும். தற்போது வங்கிகள் மாதத்தின் 10 ஆம் தேதி முதல் மாத இறுதிவரை உள்ள இருப்பு பணத்தில் சராசரியை இருப்பாக கொண்டு வட்டியை கணக்கிடுகின்றன.

இனி உங்கள் சேமிப்பு கணக்கில் உள்ள இருப்பை தினசரி கணக்கிட்டு, அதற்கு தகுந்தாற்போல் வட்டி வழங்கப்பட உள்ளது.

ரிசர்வ் வங்கி, சென்ற வருடம் ஏப்ரல் மாதமே, தினசரி இருப்பு அடிப்படையில் வட்டியை கணக்கிடும் படி வங்கிகளுக்கு உத்தரவிட்டது. இதற்கு ஏற்றார் வங்கிகளில் மாற்றம் செய்ய வேண்டிய திருப்பதால், புதிய வட்டி கணக்கிடும் முறையை ஒத்திவைக்கும் படி கேட்டுக் கொண்டன. அத்துடன் வங்கிகளின் சங்கமான இந்தியன் பாங்க் அசோசிசன், புதிய முறையை மேலும் ஆறு மாதத்திற்கு தள்ளிவைக்குமாறு கேட்டுக் கொண்டது.

இந்நிலையில் நேற்று ரிசர்வ் வங்கி, சேமிப்பு கணக்கில் தினசரி இருப்பில் உள்ள பணத்திற்கு வட்டியை கணக்கிட வேண்டும். இதற்கு தகுந்தாற்போல் கம்ப்யூட்டரில் தேவையான மாற்றங்களை செய்ய வேண்டும். இது எவ்வித பிரச்சனையும் இல்லாமல் சுமுகமாக நடைபெற தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.

உடல் எடை கூட்டலாம், குறைக்கலாம் எளிதாக!


உடல் எடையை கூட்டவோ, குறைக்கவோ எளிதான வழிகள் உள்ளனவா என்று நமது அழகுக் கலை நிபுணர் மஞ்சு மாதாவிடம் கேட்டோம்.

அதற்கு அவர் அளித்த பதில்,

உடல் எடையைக் கூட்ட பேரீச்சம் பழம் மிகவும் உதவும். பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உடலுக்குத் தேவையான இரும்புச் சத்துக் கிடைக்கிறது. தினமும் இரண்டு பேரீச்சம் பழமும் பாலும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும்.

அதேப்போல உடலுக்கு போதுமான இரும்புச் சத்து இருந்தால் முடி உதிர்வதும் தவிர்க்கப்படும்.

ரொம்ப ரொம்ப ஒல்லியாக இருப்பவர்கள், தங்களது உடல் எடையைக் கூட்ட வேண்டும் என்றால் நிறைய ஐஸ்க்ரீம் சாப்பிடலாம்.

பாலில் தேன் ஊற்றி சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்கும்.

அதே சமயம் உடல் எடையைக் குறைக்க வேண்டுமானால், பலரும் பல வழிகளை கையாள்கிறார்கள். உடற்பயிற்சி, நடனம் போன்றவற்றில் ஈடுபடுவதால் நிச்சயம் உடல் எடை குறையும். ஆனால் அதனை தொடர்ந்து செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. நிறுத்திவிட்டால் உடனடியாக உடல் எடை அதிகரித்துவிடும்.

அதற்கு மாற்றாக யோகா, தியானம் போன்றவற்றில் ஈடுபடலாம். எடுத்ததுமே கடினமான ஆசனங்கள் செய்யாமல் முதலில் எளிதான ஆசனங்களை செய்து படிப்படியாக யோகாவில் பயிற்சி பெறலாம்.

வெதுவெதுப்பான சுடுநீரில் தேன் ஊற்றி சாப்பிட்டால் உடல் எடை குறையும்.

வெள்ளி, 19 பிப்ரவரி, 2010

யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா பங்கு விலை நிர்ணயம்!


யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா பங்கு விலையை ரூ.60 முதல் ரூ.65 என நிர்ணயித்துள்ளது.

பொதுத்துறை வங்கியான யுனைடெட் பாங்க் ஆப் இந்தியாவின் சேர்மனும், மேலாண்மை இயக்குநருமான சி.குப்தா கூறுகையில், தற்போது 5 கோடி பொது பங்குகளை வெளியிடுகின்றோம். இந்த பங்கின் விலை ரூ.60 முதல் ரூ.66 வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பங்கு வெளியீட்டின் மூலம் ரூ.330 முதல் ரூ.350 கோடி வரை திரட்டப்படும்.

இந்த பங்குகளில் சிறு முதலீட்டாளர்களுக்காக 30 விழுக்காடு பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு பங்கு விலையில் 5 விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படும். முதலீடு நிறுவனம் இல்லாதவர்களுக்கு 10 விழுக்காடும், தகுதி பெற்ற முதலீட்டு நிறுவனங்களுக்கு 60 விழுக்காடு பங்குகளும் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

இந்த பங்குகளுக்கு பிப்ரவரி 23 முதல் 25 வரை விண்ணப்பிக்கலாம்.

ஹெச்.டி.எப்.சி வங்கி வட்டி அதிகரிப்பு!


தனியார் துறை வங்கியான ஹெச்.டி.எப்.சி வங்கி, வைப்பு நிதிக்கு வட்டியை அதிகரித்தியுள்ளது.

ரிசர்வ் வங்கி சமீபத்தில் வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதத்தை அதிகரித்தது. இதை தொடர்ந்து ஏற்கனவே ஐ.டி.பி.ஐ வங்கி வைப்பு நிதிக்கான வட்டியை கால் விழுக்காடு அதிகரித்தது.

தற்போது ஹெச்.டி.எப்.சி வங்கி வைப்புநிதி வட்டியை ஒன்றரை விழுக்காடு வரை அதிகரித்துள்ளது.

இந்த வட்டி உயர்வு குறித்து அஸிஸ் பார்த்தசாரதி கூறுகையில், தற்போதைய வட்டி உயர்வு, மற்ற வங்கிகளின் வட்டிக்கு இணையாக இருக்கும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. வைப்பு நிதிக்கு சில முதிர்வு காலத்திற்கு, மற்ற வங்கிகளுடன் ஒப்பிடுகையில், எங்கள் வட்டி விகிதம் குறைவாக இருந்தது. மற்ற வங்கிகளை போன்று சமமாக இருக்க வேண்டும் என்று விரும்பினோம்.

உதாரணமாக மூன்று வருடங்களில் முதிர்வு பெறும் வைப்பு நிதிக்கு, ஹெச்.டி.எப்.சி வங்கியின் வட்டி விகிதம் 6 முதல் 7.25 விழுக்காடாக இருந்தது. இது மற்ற வங்கிகளை விட கால் முதல் அரை விழுக்காடு வரை குறைவு. எங்கள் வங்கியின் வைப்பு நிதியில் பெரும்பான்மையானவை 1 வருடம் முதல் 3 வருடங்களுக்குள் முதிர்வு பெறுபவை. கடந்த இரண்டு வருடங்களாக மொத்த வைப்பு நிதியில் 57 விழுக்காடு வரை, 1 முதல் 3 வருடங்களுக்குள் முதிர்வு பெறுபவையாக உள்ளன. அத்துன் 25 விழுக்காடு வைப்பு நிதி ஒர வருடத்திற்குள் முதிர்வு பெறுபவையாக உள்ளன என்று தெரிவித்தார்.

ஹெச்.டி.எப்.சி வங்கி வழங்கும் கடனுக்கு வட்டி உயர்த்தப்படுமா என்று கேட்டதற்கு அஸிஸ் பார்த்தசாரதி பதிலளிக்கையில், இது நிதி சந்தையை பொறுத்தது என்று தெரிவித்தார்.

அதே நேரத்தில் இந்தியாவின் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, உடனடியாக கடனுக்கான வட்டியை அதிகரிக்கும் திட்டம் இல்லை என்று கூறியுள்ளது. இது குறித்து எஸ்.பி.ஐ-யின் துணை மேலாண்மை இயக்குநரும், தலைமை நிதி பிரிவு அதிகாரியுமான எஸ்.ரஞ்சன் கூறுகையில், நாங்கள் சில காலம் பொறுத்திருப்போம். மற்ற வங்கிகள் அதிகரித்தால், நாங்களும் உயர்த்துவோம் என்று கூறினார்.

ரிசர்வ் வங்கி சமீபத்தில் காலாண்டு பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிடும் போது, வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதத்தை முக்கால் விழுக்காடு அதிகரித்து. இதனால் நிதி சந்தையில் இருந்து ரூ.36 ஆயிரம் கோடி பணப்புழக்கம் குறையும்.

வியாழன், 18 பிப்ரவரி, 2010

இ‌ந்‌தியா‌வி‌ல் அ‌திக‌ரி‌க்கு‌ம் ஒ‌வ்வாமை!


ஒ‌வ்வாமை என‌ப்படு‌ம் அலர்ஜி காரணமாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வளரும் நாடுகளில் உள்ள மக்களே அதிக ஒவ்வாமையால் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக இந்தியாவில் நகர்ப்புற மக்களையே இந்த ஒவ்வாமை அதிகம் தாக்குகிறது.

சு‌ற்று‌ச்சூழ‌ல் ‌சீ‌ர்கேடு‌ம், இயந்திரமயமான வாழ்க்கை முறையு‌ம் 40 சதவீதம் பேர் ஒவ்வாமையால் அவதியுற‌க் காரணமா‌கிறது.

ஒவ்வாமை என்பது சுகாதாரமற்ற சூழலா‌ல், ஒரு ம‌னித‌னி‌ன் சுகாதார‌ம் பா‌தி‌க்க‌ப்படுவதா‌ல் ஏ‌ற்படு‌ம் எதிர்விளைவே ஒவ்வாமையாகும்.

உடலு‌க்கு ஒ‌‌வ்வாத ஒரு பொரு‌ள், உடலுக்குள் செல்லும் நிலையில், அது குறித்து உடலின் நோய் எதிர்ப்பு சக்தி உடனடியாக எ‌தி‌ர் தா‌க்குத‌ல் நட‌த்து‌கிறது. அத‌ன் தா‌க்க‌‌த்தை‌த்தா‌ன் நா‌ம் ஒ‌வ்வாமையாக உண‌ர்‌கிறோ‌ம்.

ஒ‌வ்வாமை‌யி‌ன் அ‌றிகு‌றிக‌ள் பல உ‌ள்ளன. ‌திடீரென ஏ‌ற்படு‌ம் தொட‌ர் தும்மல், மூக்கு, கண்களில் எரிச்சல், நீர் ஒழுகுதல், சருமத்தில் தடிப்பு, ‌சில நேர‌ங்க‌ளி‌ல் ச‌ளி ‌பிடி‌ப்பது கூட ஒவ்வாமையின் அறிகுறியாகும்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குன்றியவர்களுக்கு ஒ‌‌வ்வாமை உண்டாகும். பொதுவாக சுகாதாரமற்ற சுற்றுச்சூழலால்தான் பெரும்பாலானோருக்கு ஒ‌வ்வாமை உருவாகிறது.


WDசென்னை போன்ற பெருநகரங்களில் மக்கள் தொகைப் பெருக்கத்தால் சுகாதார சீர்கேடு அதிகம் ஏற்படுகிறது. நகரத்தை சுற்றி எண்ணற்ற தொழிற் கூடங்கள் அமைந்துள்ளன. நகர வீதிகளில் வாகனங்களின் எண்ணிக்கை பல இலட்சங்களை தாண்டிவிட்டது. இந்த தொழிற்சாலைகளும், வாகனங்களும் வெ‌ளியே‌ற்று‌ம் புகையே காற்று மண்டலத்தை மாசடைய செய்துவிட்டன. இந்தக் காற்றை சுவாசிக்கும் மனிதர்களின் உடலானது பலவகையில் பாதிக்கப்படுகிறது. இதன் வெளிப்பாடுதான் ஒவ்வாமை.

மாசடை‌ந்த கா‌ற்று, சுகாதாரமற்ற குடிநீர், பூ‌ச்‌சி‌க் கொ‌‌ல்‌லி மரு‌ந்துக‌ள் சே‌ர்‌த்து ப‌‌‌யி‌ரிட‌ப்ப‌ட்ட பொரு‌ட்க‌ள், கல‌ப்பட உணவு, தேங்கி நிற்கும் சாக்கடை நீர், நாற்றம் வீசும் குப்பைகள், மனிதக் கழிவுகள் இவற்றாலும் உடலில் ஒ‌வ்வாமை ஏற்பட வாய்ப்பு ஏ‌ற்படு‌கிறது.

மேலும் சிலருக்கு உணவுப் பொருட்களாலும் ஒவ்வாமை உண்டாகும். முட்டை, பால், கருவாடு, கத்தரிக்காய் போன்றவற்றாலும், புளித்துப்போன பொருட்களாலும் உடலுக்கு ஒவ்வாமை ஏற்படும்.

புதன், 17 பிப்ரவரி, 2010

மருந்து உற்பத்தி ரஷியா ஆர்வம்!


மருந்து தயாரிப்பில் இந்திய நிறுவனங்களின் ஒத்துறைப்பை பெறுவதில் ரஷியா ஆர்வம் காட்டியுள்ளது.

இந்தியா வந்துள்ள ரஷிய துணைப் பிரதமர் நேற்று ரஷ்ய துணைப் பிரதமர் செர்ஜி சோபியானின், தொழில்- வர்த்தக துறை அமைச்சர் விக்டர் கிரிடன்கோ ஆகியோர், மத்திய தொழில்-வர்த்தக துறை அமைச்சர் ஆனந்த் சர்மாவை சந்தித்துப் பேசினார்கள்.

அப்போது இருநாடுகளுக்கும் இடையே இருந்து வரும் முக்கியத்துவம் வாய்ந்த உறவுகளை குறிப்பிட்ட அமைச்சர் ஆனந்த் சர்மா, வர்த்தகம், இதர துறைகளில் இருதரப்பு கூட்டுறவு தொடர்ந்து நிலவி வரும் என்று நம்பிக்க தெரிவித்தார்.

இந்திய மருந்து கம்பெனிகளிடமிருந்து ஒத்துழைப்பு பெறுவதில் ரஷ்யா தரப்பில் மிகுந்த ஆர்வம் காட்டப்பட்டது அப்போது ஆனந்த் சர்மா, மருந்து தயாரிப்புத் துறையில் இந்திய நிறுவனங்கள் சிறந்து விளங்குவதை எடுத்துக் காட்டினார்.

ரஷ்ய நிறுவனங்களுடன், இந்திய நிறுவனங்கள் கூட்டு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் ஆர்வமாக இருப்பதாகவும் கூறினார்.

விண்வெளித் துறை, உரங்கள் துறை உள்ளிட்ட துறைகளில் ரஷ்யாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே நல்லுறவு நிலவி வருவதை சுட்டிக்காட்டிய ஆனந்த் சர்மா, இத்துறைகளில் மேம்பட்ட பொருளாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறினார்.

இந்தக் கூட்டத்தில் மத்திய வர்த்தக துறை செயலாளர் ராகுல் குல்லார் உள்பட உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

ரஷ்யாவிற்கும், இந்தியாவிற்கும் இடையே 2009 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை இருதரப்பு வர்த்தகம் 2188.12 மில்லியன் டாலர்கள் அளவிற்கு உள்ளது. இந்தியாவின் முக்கியமான ஏற்றுமதியான மருந்து, ரசாயனங்கள், தேயிலை, போக்குவரத்து சாதனங்கள், இயந்திரங்கள், காபி, பருத்தி நூல் உள்பட பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

ரஷியாவில் இருந்து பெட்ரோலியம், உரங்கள், இரும்பு, உருக்கு, நிலக்கரி, கோக், செயற்கை இழை ரப்பர், அச்சு காகிதம் முதலியவை அதிக அளவு இறக்குமதி செய்யப்படுகின்றன.

அதிர்ஷ்டகரமான ஜாதக அமைப்புள்ள மனைவி யாருக்கெல்லாம் அமையும்?


ஆணின் வெற்றிக்கு பின்னால் பெண் இருக்கிறாள் என்பது பழமொழி. இதுபோன்ற அதிர்ஷ்டமான மனைவி ஒருவருக்கு கிடைக்க அவரது ஜாதக அமைப்பு எப்படி இருக்க வேண்டும்?

பதில்: அதிர்ஷ்டகரமான ஜாதக அமைப்பு உள்ள பெண் ஒருவருக்கு மனைவியாக அமைய சம்பந்தப்பட்ட ஆணின் ஜாதகத்திலும் சில அமைப்புகள் இடம்பெற்றிருக்க வேண்டியது அவசியம். களத்திரகாரகன் (சுக்கிரன்) நல்ல நிலையில் அமைந்திருப்பதுடன், சப்தமாதிபதியும் (7ஆம் வீட்டிற்கு உரிய கிரகம்) சிறப்பாக இருக்க வேண்டும்.

பணக்கார வீட்டுப் பெண்களுக்கு மட்டும்தான் அதிர்ஷ்டகரமான ஜாதக அமைப்பு உள்ளது என்று சில நினைக்கின்றனர். அது முற்றிலும் தவறானது. பணக்கார வீட்டில் பிறந்து, செல்வச் செழிப்பில் வளர்ந்திருந்தாலும், திருமணமாகி புகுந்த வீட்டிற்கு சென்ற பின்னர் அந்தக் குடும்பத்தையும் வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்றால்தான் அந்தப் பெண் அதிர்ஷ்டக்கார ஜாதக அமைப்பு உடையவராக கருதப்படுவார்.

ஒரு சில பெண்கள் ஏழை வீட்டில் இருந்தாலும், நடுத்தர குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு அந்தக் குடும்பத்தின் செல்வநிலை, கௌரவம் ஆகியவற்றை உயர்த்துவார்கள். அந்தப் பெண் வந்த நேரம்தான் அந்தக் குடும்பம் தழைப்பதற்கு காரணமாக இருக்கும்.

செல்வ நிலையை மட்டும் வைத்து ஒரு பெண்ணுக்கு லட்சுமி கடாட்ஷம் உள்ளது என்று கூறிவிட முடியாது. அனைத்து தரப்பினரிடமும் மரியாதையாகப் பழகும் விதம், கணவனின் வருமானத்திற்குள் குடும்பம் நடத்துவது, கணவரை பெரிய சங்கடங்களில் சிக்க வைக்காமல் தவிர்ப்பது போன்ற குணங்களை ஒருகிணைந்து பெற்ற பெண்களே உண்மையில் அதிர்ஷ்டக்கார மனைவிகளாகத் திகழ்கின்றனர்.

பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கியில் 1246 கிளார்க் பணியிடங்கள்!

பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கியில் 1246 கிளார்க் பணியிடங்கள்!

இந்த ஆண்டு வங்கித் துறையில் ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளன.

பெரிய வணிக வங்கிகளுள் ஒன்றான பஞ்சாப் & சிந்த் வங்கி (PSB) நாடு முழுவதும் உள்ள தனது கிளைகளுக்கு 1246 எழுத்தர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மாநில வாரியாக இந்த கிளார்க் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.ஒரு விண்ணப்பதாரர் ஒரு மாநில பணிக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

தமிழகத்தில் 43 காலியிடங்கள் உள்ளன. எந்த மாநில காலியிடத்துக்கு விண்ணப்பிக்கிறோமோ அந்த மாநிலத்தில் உள்ள தேர்வு மையத்தில் மட்டுமே இந்தத் தேர்வை எழுத முடியும். மேலும் அந்த மாநில மொழியை நன்றாக அறிந்திருக்க வேண்டும்.

தகுதிகள்:

குறைந்த பட்சத் தகுதியாக பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் (பிற வங்கிகளுக்கு பிளஸ் டூ முடித்திருந்தால் போதும்). குறைந்தது 50 சதவீதத்துடன் இப் படிப்பை முடித்திருப்பதும் அவசியம். எம்.எஸ்., ஆபிஸ் சாப்ட்வேரிலும் சிறப்பான திறன் பெற்றிருக்க வேண்டும்.

25.1.2010 அன்று தேவையான கல்வித் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். இல்லாதவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.

வயது:

1.1.2010 அன்று 20 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி., பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், உடல் ஊனமுற்றோருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு தரப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

தேர்வு செய்யப்படும் முறை இப் பணிக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். தமிழகத்தில் சென்னையில் மட்டுமே போட்டித் தேர்வு நடத்தப்படும். இது ஏப்ரல் 4 அன்று நடக்கும். இதில் அப்ஜக்டிவ் முறைப் பகுதியும் விரிவாக விடையளிக்கும் பகுதியும் இடம் பெறும்.

ஆங்கிலம், கணிதம், ரீசனிங் மற்றும் கம்ப்யூட்டர்மார்க்கெட்டிங் ஆப்டிடியூட் பகுதிகள் இடம் பெறும். ஆங்கிலத் திறனை பரிசோதிப்பதாக விரிவாக விடையளிக்கும் பகுதி இடம் பெறும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப் பணிக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.300. எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.50 மட்டுமே.

வங்கியின் இணைய தளத்திலிருந்து வவுச்சர் படிவத்தை டவுண்லோடு செய்து கொண்டு இந்த வங்கியின் கிளை ஒன்றில் சென்று பணமாகச் செலுத்தி இந்த வவுச்சரை நிரப்பி அந்தக் கிளையில் பணம் செலுத்திய விபரங்களை அதில் நிரப்பிக் கொள்ள வேண்டும். பிப்ரவரி 18 வரை இதை செலுத்தலாம். பணம் செலுத்திய பின் கிடைக்கும் டிரான்சாக்ஷன் ஐ.டி.,யை ஆன்லைனில் பதிவு செய்யும் போது குறிப்பிட வேண்டும்.

எழுத்துத் தேர்வின் போது வவுச்சர் ஒரிஜினலை எடுத்துச் செல்ல வேண்டும். ஜனவரி 25 முதல் பிப்ரவரி 18 வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம். ஆன்லைனில் பதிவு செய்யும் போது கிடைக்கும் பதிவுத் தாளின் நகலை பத்திரமாக வைத்துக் கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் இணையதள முகவரி www.psbindia.com

கடைசி நாள் பிப்ரவரி 18, 2010.


செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

தீராத விளையாட்டுப் பிள்ளை விமர்சனம்!


வாடகைக்கு குடி போறதுக்கே நாலு வீடு பார்க்கிறோம். காலம்பூரா வாழப்போற வாழ்க்கைத் துணையை மட்டும் எப்படி சாய்ஸ் இல்லாம தேர்ந்தெடுக்கிறது? எதிலும் தி பெஸ்டை செலக்ட் செய்யும் விளையாட்டுப் பிள்ளை விஷாலின் இந்த ஒருவ‌ரி கேள்விதான் தீராத விளையாட்டுப் பிள்ளை.


WDதிருமணம் செய்ய மூன்று பெண்களை காதலிக்கிறார் விஷால். மூவ‌ரில் யார் பெஸ்டோ அவர்களை திருமதியாக்குவது திட்டம். இந்த மூன்று பேரையும் ஒரே நாளில் சந்திக்கும் ஆ'ரம்ப' காட்சிகளால் திணறிப் போகிறோம். ஆனால், அடுத்தடுத்து நமக்கு காத்திருப்பதோ ஆச்ச‌ரியம்.

நீது சந்திரா, தனுஸ்ரீ தத்தா, சாரா என்று மூன்று ப்ளேவர்கள். லா‌ஜிக்கை வாசலோடு விட்டு வந்தால் இந்த மூன்று பேரையும் விஷால் காதலிக்க வைக்கும் ரகளையை ரசிக்கலாம். இவருக்கு துணையாக சந்தானம், சத்யன், மயில்சாமி. கிடைக்கிற சந்திலெல்லாம் சி‌ரிக்க வைக்கிறார்கள். அதிலும் சந்தானம் அடிக்கிற நக்கல் ஒவ்வொன்றும் காமெடி ரவுசு. ‘ஒரே ஆளை காதலித்து அவனையே கல்யாணம் பண்ணிக்கணுமாம். நல்ல குடும்பத்துல பிறந்த பெண் பேசுற பேச்சா இது.’

விஷாலின் த்‌‌ரீ இன் ஒன் காதல் நீது சந்திராவுக்கு தெ‌ரிந்த பிறகு திரைக்கதையில் ஜெட் வேகம். நீதுவின் திட்டப்படி சாரா விஷாலின் வீட்டிற்கே வந்து பால் காய்ச்சுவதும், தனுஸ்ரீயின் அண்ணன் பிரகாஷ்ரா‌ஜின் அதிரடி எ‌ண்ட்‌ரியும் ஆஹா போட வைக்கும் காட்சிகள்.

நீதுவின் திட்டப்படி தனுஸ்ரீ தியேட்டர் வாசலில் வைத்து விஷாலிடம் ஓடிப் போய் திருமணம் செய்து கொள்ளலாம் என்பதும், அதுக்கென்ன என்று விஷால் திருப்பியடிப்பதும், இதை எதிர்பார்க்காத தனுஸ்ரீ திருதிருவென விழிப்பதுமாக காட்சிகள் றெக்கை கட்டுகின்றன. ஆனால் இந்த ரொமாண்டிக் காமெடி அளவுக்கு மீறிப் போவதையும் சொல்லியாக வேண்டும்.

பாடல்கள் கேட்கிற ரகம். தீராத விளையாட்டுப் பிள்ளை பாடல் மட்டும் ஒன்ஸ்மோர் வகை. படத்தின் ஆரோக்கியமான அம்சம் அர்விந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு. காட்சிகள், பாடல்கள் அனைத்திலும் கேமரா கோணமும், லைட்டிங்கும் கவர்கின்றன.


இந்தப் படத்தில்தான் அழகாக உடையணிந்திருக்கிறார் விஷால். ஆ‌க்சன் படத்தில் வரும் காமெடி காட்சிகளில் எப்படி நடிப்பாரோ அதையே இதில் படம் முழுக்க செய்திருக்கிறார். ஆனால் உறுத்தாத விதத்தில்.

நாயகிகளில் நீது சந்திராவுக்குதான் நடிக்க வாய்ப்பு. சேலையில் தனுஸ்ரீ தத்தா கொள்ளை அழகு. விஷால் தேர்வு செய்யும் சாராதான் இந்த மூவ‌ரில் சுமார். அவரது பாலினும் தூய காதல் நம்பும்படி இல்லை. சாராவை திருமணத்துக்கு சம்மதிக்க வைக்க விஷால் போடும் கிளைமாக்ஸ் நாடகமும், சினேகா எ‌ண்ட்‌ரியும் புளித்துப் போன, அதேசமயம் கலகலப்பான முடிவு.

திரைக்கதையில் வரும் சின்னச் சின்ன டுவிஸ்டுகள் காட்சிகளை பரபரப்பாக நகர்த்துகின்றன. ரம்பக் காட்சிகள் எவை என்று இயக்குனர் திருவுக்கு நன்றாக தெ‌ரிந்திருக்கிறது. சந்தானத்தை வைத்து அந்தக் காட்சிகளை நக்கல் அடிப்பதன் மூலம் சமாளிக்கிறார். இயக்குன‌ரின் இந்தப் பு‌ரிதல்தான் படத்தை காப்பாற்றுகிறது.

லா‌‌ஜிக்கை மறந்தால் ரசித்து சி‌ரிக்கலாம்.

தேவைய‌ற்ற உணவுக‌ள் வே‌ண்டா‌ம்


சிக்கன் ப்ரை, ஐ‌ஸ்க்ரீம், சாக்லேட், பாம் ஆயில், பப்‌ஸ், உருளை வறுவல் போன்றவை குழந்தையின் மூளையை மந்தமாக்கி விடும்.

குழந்தை‌யி‌ன் செய‌ல்பாடுக‌ள் ம‌ந்தமாக இரு‌ந்தா‌ல் டி‌ஸ்லெக்சியா எ‌ன்ற நோ‌ய் ஏற்பட வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு 2 விதம். ஒன்று சாதாரணமானது, மற்றது கிருமியால் ஏற்படுவது.

சாதாரண வயிற்றுப் போக்கின்போது வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்படும். பாலை மறுக்கும், அழுது கொண்டே இருக்கும்.

கிருமியால் விளைந்த வயிற்றுப்போக்கு ஏற்படும்போது, குழந்தைகள் படுத்தபடியே ஓய்வெடுக்க வேண்டும்.

கேர‌ட்டை வேகவை‌த்து அதனை கூழா‌க்‌கி, வ‌யி‌ற்று‌‌ப் போ‌க்கு‌ ஆகு‌ம் குழ‌ந்தைகளு‌க்கு கொடு‌ப்பது ந‌ல்லது.

ஊ‌ட்ட‌ச்ச‌த்து‌ள்ள உணவு அவ‌சிய‌ம்.


கர்ப்ப காலத்தில் தாய்மார்கள் உண்ணும் உணவைப் பொறுத்து குழந்தைகளின் புத்திசாலித்தனம் செயல்படுகிறது.

குழந்தை வளரும்போது தேவை‌ப்படு‌ம் ‌வி‌ட்டமின்களும் கொழுப்பும் க்ளூகோசும் தா‌ய்ப்பா‌லி‌ல் அட‌ங்‌கியு‌ள்ளது.

தாய்ப்பா‌லி‌ல் முளையின் வளர்ச்சிக்கு உதவும் அமினோ ஆசிட் லாக்டோ‌ஸ் எ‌ன்ற சத்துக்கள் உள்ளன.

குழந்தைகளுக்கு அரிசி, பார்லி, கோதுமை ஆகிய தா‌னிய வகைகளை அ‌ளி‌க்க வே‌ண்டு‌ம்.

பால், மோ‌ர், பழ‌ச்சாறுக‌ள் அ‌ளி‌ப்பது குழ‌ந்தைக‌ளி‌ன் உட‌ல் வள‌ர்‌ச்‌சி‌க்கு ந‌ன்மை அ‌ளி‌க்கு‌ம்.

கொய்யாப்பழம், மாம்பழம், ஆரஞ்சு, வாழைப்பழம், பேரிச்சை, திராட்சை போ‌ன்றவ‌ற்றையு‌ம் குழ‌ந்தைகளு‌க்கு கொ‌டு‌க்க வே‌ண்டு‌ம்.

ஹோன்டா சி.பி.டிவிஸ்டர் பைக் அறிமுகம்!


ஹோன்டா மோட்டார் சைக்கிள் அண்ட் ஸ்கூட்டர் நிறுவனம் சிபி டிவிஸ்டர் ரக மோட்டார் பைக்கை நேற்று அறிமுகப்படுத்தியது.

இதன் அறிமுகவிழாவில் துணை தலைவர் ( உற்பத்தி) வி.ஸ்ரீதர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த பைக் 110 சி.சி திறன் கொண்டது. இது இந்திய மோட்டார் பைக் சந்தையில் புதிய போக்கை உண்டாக்குவதுடன், விற்பனையிலும் உரிய இடத்தை பிடிக்கும்.

இது கிக்-டிரம்-அலாய், செல்ப்-டிரம்-அலாய், செல்ப்-டிஸ்க்-அலாய் ஆகிய மூன்று மாடல்களில் கிடைக்கிறது. இது ஐந்து நிறங்களில் கிடைக்கும்.

எங்கள் நிறுவனம் 2010-11 ஆம் ஆண்டில் 15 லட்சம் இரு சக்கர வாகனங்களுக்கும் அதிகமாக விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில் தென் பிராந்திய தலைவர் பி.ராஜகோபால் கூறுகையில், புதிய இளம் தலைமுறையினருக்காக, புத்தம் புதிய ரகங்களில் மோட்டார் பைக் தயாரிக்கின்றோம். இந்தியாவில் ஹோன்டா நிறுவனத்தின் மொத்த இரு சக்கர வாகன விற்பனையில், தமிழகத்தின் பங்கு 9 விழுக்காடாக உள்ளது என்று தெரிவித்தார்.

இதன் விலை சென்னையில் ரகத்திற்கு தகுந்தாற்போல் ரூ.43,650 முதல் ரூ.49,650 வரை.

திங்கள், 15 பிப்ரவரி, 2010

புனே குண்டுவெடிப்பு: துப்பு கொடுத்தால் ரூ.1 கோடி பரிசு


புனே குண்டுவெடிப்பு தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகள் குறித்து துப்பு கொடுப்பவருக்கு 1 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடலாமா என மத்திய அரசு ஆலோசித்து வருவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புனேவிலுள்ள கோரேகான் பகுதியில் உள்ள ஜெர்மன் பேக்கரி முன்பாக நேற்று முன்தினம் இரவு 7.15 மணியளவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 9 பேர் உயிரிழந்தனர்.மும்பைத் தாக்குதலுக்குப் பின்னர் நடத்தப்பட்ட மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதலாக இது கருதப்படுகிறது.

இந்நிலையில் இந்த தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகள் குறித்து துப்பு கொடுப்பவருக்கு 1 கோடி ரூபாய் பரிசு வழங்கலாமா என அரசு, உயர்மட்ட அளவில் ஆலோசித்து வருவதாகவும், விரைவிலேயே இது குறித்த சாதகமான முடிவெடுக்கப்படலாம் என்றும், மத்திய உள்துறை அமைச்சக உயரதிகாரி ஒருவர் கூறியதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

" துப்பு கொடுப்பவருக்கு பரிசு வழங்கப்படும் என்ற அறிவிப்பை நாங்கள் வெளியிட்டால், தகவல் தெரிவிப்பவரது அடையாளம் பாதுகாக்கப்படும் என்ற உறுதியையும் தெரிவிப்போம்.

துப்பு கொடுப்பவரது பெயரைக் கூட நாங்கள் கேட்கமாட்டோம்.ஆனால் பரிசு கொடுக்கப்படும்.அதே சமயம் கொடுக்கும் தகவல் சரியானதாக இருக்க வேண்டும்" என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

சலுகைகளை திரும்ப பெறும் போது பாதிப்பு: சுப்பாராவ்


பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள ஊக்குவிப்பு சலுகைகளை அரசு திரும்ப பெறும் போது, இதன் பாதிப்பு, ரிசர்வ் வங்கி சுயேச்சையாக இருப்பதற்கு அபாயமாகலாம் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவ் கூறினார்.

மும்பையில் நேற்று நிதி நெருக்கடியும் மத்திய வங்கிகள் சந்திக்கும் சவால்களும் என்ற தலைப்பில் சர்வதேச ஆய்வு மாநாட்டில் சுப்பாராவ் பேசும் போது, பொருளாதார பாதிப்பில் இருந்து உலக நாடுகள் மீண்டுவரும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆகவே, ஊக்குவிப்பு சலுகைகளை குறைக்கலாம் என்று திட்டமிடுகின்றனர். அதனால், அரசு நிதிக் கொள்கைக்கும் ரிசர்வ் வங்கிகளுக்கும் இடையே பதட்டம் வரும். ஆனால், இந்த விஷயத்தில் பெரிய அளவில் பதட்டம் வர வாய்ப்பில்லை என்று கருத்து தெரிவிக்கின்றனர். இப்பிரச்னை தற்காலிகமானது அல்ல.

தற்போதைய நிலையில் உலகின் முன்னேறிய நாடுகளின் கடன்சுமை, 2007 இல் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 78 விழுக்காடாகும். இது 2014 ஆம் ஆண்டு 118 விழுக்காடாக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒவ்வொரு நாட்டில் உள்ள ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கையின் சுதந்திரம் பாதிக்கப்படும். ஐ.எம்.எப்., தகவலின் படி வளர்ந்த நாடுகள் கடன் வாங்கும் நிலையில் இருந்து தப்ப முடியாது. ஏனெனில், சமுதாயப் பாதுகாப்பு திட்டங்களை நிறைவேற்றியாக வேண்டும்.

இதுவரை ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலைமையை ரிசர்வ் வங்கி சந்தித்து, ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த உரிய நடைமுறைகளை மேற் கொண்டது. இப்போது வரக்கூடிய தாக்குதலை, வெளிப்படையான, திறமையான அணுகுமுறையால், அதிக கண்காணிப்புடன் சமாளிக்க வேண்டும். பல பக்கங்களிலும் இருந்து வரும் மூலதன நிதி பொருளாதார ஸ்திரத்தன்மையை குறைக்கும். அயல்நாடுகளில் இருந்து வரும் மூலதனம் குறித்தும் அதிக எச்சரிக்கையாக ரிசர்வ் வங்கி இருக்கிறது என்று சுப்பாராவ் கூறினார்.

இந்தியர்களுக்கான மாணவர் விசா- தடை


இந்தியர்களுக்கான மாணவர் விசா- தடையை ஓரளவு தளர்த்தியது இங்கிலாந்து
லண்டன்: வட இந்திய மாணவர்களுக்கு மாணவர் விசா வழங்குவதை நிறுத்தி வைத்திருந்த இங்கிலாந்து அரசு தற்போது அந்தத் தடை யை நீக்குவதாக அறிவித்துள்ளது. அதேசமயம், இளநிலை பட்டப் படிப்புகளுக்கான மாணவர் விசாவை வழங்காமல் நிறுத்தி வைப்பது என்ற முடிவு தொடரும் என அது அறிவித்துள்ளது.

வட இந்திய மாணவர்களுக்கு மாணவர் விசா வழங்குவதை திடீரென சில நாட்களுக்கு முன்பு நிறுத்தி வைத்தது இங்கிலாந்து அரசு. இதனால் இங்கிலாந்தில் படிக்க விரும்பி விண்ணப்பித்திருந்த ஆயிரக்கணக்கான வட இந்திய மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் தற்போது இந்தத் தடையில் ஒரு பகுதியை விலக்கிக் கொண்டுள்ளது இங்கிலாந்து அரசு.

இதுகுறித்து இங்கிலாந்து வர்த்தக அமைச்சர் பாட் மெக்பாடன் கூறுகையில், குறுகிய காலத்திற்குள் மிகப் பெரிய அளவில் விண்ணப்பிங்கள் குவிந்த காரணத்தால்தான் விசாக்களை வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டது.

இருப்பினும் மார்ச் 1ம் தேதி முதல் இந்தத் தடை நீக்கப்படுகிறது. உயர் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு விசாக்கள் வழங்கப்படும்.

அதேசமயம், இளநிலைப் படிப்புகளுக்கான மாணவர் விசா வழங்குவது தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் என்றார்.


ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

ரிலையன்ஸ் மியூச்சுவல் பண்டிற்கு விருது


ரிலையன்ஸ் மியூச்சுவல் பண்ட், 2010 ஆம் ஆண்டின் சிறந்த மியூச்சவல் பண்ட நிறுவனத்திற்கான விருதை பெற்றுள்ளது.

இந்த விருதை சி.என்.பி.சி-டிவி18-கிரிசல் ஆகியவை, மல்டி கமோடிட்டி எக்சேஞ்சுடன் இணைந்து வழங்கியுள்ளன.

இது மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள், சிறந்து விளங்கும் தன்மைக்காக வழங்கப்படுகிறது.

2008-09 ஆம் வருடம் மிகுந்த பொருளாதார ரீதியாக மிகுந்த நெருக்கடி மிகுந்ததாக இருந்தது. இது மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு சவால் மிகுந்த ஆண்டாகவும் இருந்தது. இந்த சிரமமான காலத்தில் மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள், நீண்ட கால நோக்கில் முடிவுகளை எடுத்து சிறப்பாக செயல்பட்டனர்.

இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் டிவி18 இயக்குநர் அஜய் சோக்கோ பேசுகையில், நாம் நெருக்கடியில் இருந்து மீண்டு வர முதலீட்டாளர்களின் நம்பிக்கை, மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு மிக முக்கியம். மியூச்சவல் பண்ட் நிறுவனங்கள் மக்களின் சேமிப்பை திரட்டி, பங்குச் சந்தையில் முதலீடு செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று கூறினார்.

இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் செபி சேர்மன் சி.பி.பாவே, செபி முழுநேர இயக்குநர் எம்.எஸ். சாகு, கிரிசல் மேலாண்மை இயக்குநரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ரூபா குட்வா ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.

ரூபாய் மதிப்பு 11பைசா உயர்வு


மும்பை வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில், இன்று ரூபாயின் மதிப்பு அதிகரித்தது. காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலரின் மதிப்பு 11 பைசா குறைந்தது.

காலையில் 1 டாலரின் விலை ரூ.46.39 பைசாவாக குறைந்தது. இது வியாழக்கிழமை இறுதி விலையை விட 11 பைசா குறைவு.

வியாழக்கிழமை ரூபாயின் மதிப்பு 02 பைசா குறைந்து, 1 டாலரின் விலை ரூ.46.50 ஆக உயர்ந்தது.

பங்குச் சந்தையில் காலையில் சாதகமான நிலை இருப்பதே, டாலரின் மதிப்பு குறைய காரணம் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

பொது அறிவு வினா விடைகள்!


பொது அறிவு வினாவிடைகள்
1) சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர்கள் சிலையை செய்தவர் யார் ? டி பி ராய்.
2) உதகமண்டலத்தை கண்டறிந்து மேம்படுத்தியவர் யார்?
ஜான் சுல்லிவன்.
3) பெண் கமாண்டோ படையை உருவாக்கிய முதல் மாநிலம் எது ?
தமிழ்நாடு.
4) தென்னிந்தியாவின் நுழைவுவாயில் எது ?
சென்னை.
5) ஹாலிவுட் படத்திற்கு முதல் முதலில் இசை அமைத்த இந்தியர் யார் ?
வித்யா சாகர்.
6) சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்?
டாக்டர் பி ஆர் அம்பேத்கார்.
7) மிக நீண்ட காலம் சுதந்திர இந்தியாவின் குடியரசு தலைவராக இருந்தவர் யார்?
டாக்டர் ராஜேந்திர பிரசாத்.
8) இந்திய புரட்ச்யின் தை என்று அழைக்கப்படுபவர் யார் ?
மாடம் பிகாஜி காமா.
9) கிரெடிட் கரட் வழங்கிய முதல் இந்திய வங்கி எது?
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா.
10) தபால் தலையில் முதலில் இடம்பெற்ற இந்தியர் யார் ?
மகாத்மா காந்தி.

பொது அறிவு

1.தண்ணீருக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்ய உதவும் மூச்சு கருவியின் பெயர் ஸ்கியூபா ஆகும். (SCUBA - self Cointained Underwater Breathing Apparatus)

2.முதன் முதல் 1893 ம் ஆண்டு நினைவு தபால் தலையை வெளியிட்ட நாடு அமெரிக்கா.

3.தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் மூன்று அடிப்படை நிறங்கள் பச்சை, நீலம், சிகப்பு

4.பிளாஸ்டிக்குகளை எரிக்கும் பொழுது டையாக்சின் என்ற நச்சுப் புகை வெளியகிறது.

5.சூப்பர் கணனியின் வேகம் வினாடிக்கு ஃலாப்ஸ்ப் (Flops) என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

6.பாம்பு நாக்கின் மூலம் வாசனையை உணர்கிறது.

7.காண்டா மிருகத்தின் கொம்புகள் உண்மையில் எலும்புகள் அல்ல.அவை மிகக் கடினமான மயிரிழைகளால் உருவானவை.

8.அனப்லெப்ஸ் என்ற மீனுக்கு இரண்டு கண்களில் நான்கு விழித்திரைகள் உண்டு.

9.கடுமையான வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நீர் யானையின் தோலில் ஒருவித இளஞ்சிகப்பு நிறத்தாலான திரவம் சுரந்து, குளிர்ச்ச்சியை கொடுக்கிறது.

10.உண்ணி எனப்படும் தெள்ளுப்பூச்சி, ஓராண்டு வரையிலும் கூட பனிக்கட்டியினுள் உயிருடன் இருந்து, ஐஸ் கரைந்தபின் வெளிவரும் ஆற்றல் கொண்டது.

11.உலகிலேயே உயரமான சிகரம் எவரெஸ்ரட்,இதன் உயரம் 8848 மீட்டர்கள்.

12.திரை அரங்குகளே இல்லாத நாடு பூட்டான்.

13.உலகிலேயே மிகப் பெரிய நூலகம் மாஸ்கோவில் உள்ள லெனின் நூலகம்.

14.உலகிலேயே துனியில் செய்திதாள் வெளியிடும் நாடு ஸ்பெயின்.

15.அஞ்சல் தலையில் தனது நாட்டின் பெயரைக் கொண்டிராத நாடு ஐக்கிய இராஜ்ஜியம்.

16.உலகில் மிக நீண்ட நாள் வாழும் மிருகம் முதலை. இவை 300 ஆண்டுகள் வரை வாழுகின்றன.

17. இரண்டு பிரதமர்களைக் கொண்ட நாடு சான்மரீனோ.

18.உலகிலேயே ஜனாதிபதிக்கு ஒரு வருட காலம் பதவி கொண்ட நாடு சுவீட்சர்லாந்து.

19.முதல் டிரக்டர் 1900 ஹால்ட் என்பவரால் செய்யப்பட்டது.

20.முதன் முதலில் காகிதத்தினால் ரூபாய் நோட்டை அச்சிட்டு வெளியிட்ட நாடு சீனா.

21.ஐக்கிய நாடுகள் சபை 1945, அக்டோபர் 24ல் தொடங்கப்பட்டது.

22.உலகிலேயே வெப்பமான இடம் அசீசீயா (லிபியா).

23.உலகிலேயே குளிந்த இடம் சைபீரியா (ரஷ்யா).

24.விமானம் பறக்கும் உயரத்தை அள்க்க உதவும் கருவியின் பெயர் ஆல்டி மீட்டர்.

25.உலகிலேயே அதிக வயதில் பிரதமர் ஆனவர், மொகரார்ஜி தேசாய்.இவர் 1977ல் மார்ச் 24ல் பதவி ஏற்றபோது வயது 81.

26.பூனையின் கண்பார்வை மனிதனைவிட எட்டு மடங்கு கூர்மையானது.

27.ஒட்டகம் 1 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள தண்ணீரை எளிதாக கண்டுபிடித்துவிடும்.

28.கரையான் ஒரு நாளைக்கு முப்பதாயிரம் முட்டை இடும்.

29.நத்தைகளால் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரை நித்திரை கொள்ள முடியும்.

30.மனிதனுடைய காதுகளால் 130 டெசிபல் அளவுதான் பொறுத்துக்கொள்ள முடியும்

பெயர் மாற்றப்பட்ட நாடுகள்

1.டச்சு கயானா --- சுரினாம்.

2.அப்பர் வோல்டா --- புர்க்கினா பாஸோ

3.அபிசீனியா --- எத்தியோப்பியா

4.கோல்டு கோஸ்ட் --- கானா

5.பசுட்டோலாந்து --- லெசதொ

6.தென்மேற்கு ஆப்பிரிக்கா --- நமீபியா

7.வட ரொடீஷியா --- ஜாம்பியா

8.தென் ரொடீஷியா --- ஜிம்பாப்வே

9.டாங்கனீகாம,சன்ஸிபார் --- தான்சானியா

10.கோட்டே டி ஐவோயர் --- ஐவரி கோஸ்ட்

11.சாயிர் --- காங்கோ

13.சோவியத்யூனியன் --- ரஷ்யா

14.பர்மா --- மியான்மர்

15.கிழக்கு பாக்கிஸ்தான் --- பங்க்களாதேஷ்

16.சிலோன் --- ஸ்ரீலங்கா

17.கம்பூச்சியா --- கம்போடியா

18.பாரசீகம்,பெர்ஷியா --- ஈரான்

19.மெஸமடோமியா --- ஈராக்

20.சயாம் --- தாய்லாந்து

21.பார்மோஸ --- தைவான்

22.ஹாலந்து --- நெதர்லாந்து

23.மலாவாய் --- நியூசிலாந்து

24.மலகாஸி --- மடகாஸ்கர்

25.பாலஸ்தீனம் --- இஸ்ரேல்

26.டச் ஈஸ்ட் இண்டீஸ் --- இந்தோனேசியா

27.சாண்ட்விச் தீவுகள் --- ஹாவாய்

28.அப்பர் பெரு --- பொலிவியா

29.பெக்குவானாலாந்து --- போட்ஸ்வாd

தற்கொலையில் தமிழகம் முதலிடம்



டெல்லி: கொள்கை ரீதியாகவும், பிறர் மீது வைத்துள்ள பாசம் காரணமாகவும் தற்கொலை செய்து கொள்வோரில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் முதலிடத்தில் இருப்பதாக தேசிய குற்றவியல் ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.

'Accidental Deaths and Suicides in India 2008' என்ற பெயரில் ஒரு அறிக்கையை தயாரித்துள்ளது இந்த காப்பகம்.

அதில், நாட்டில் தினசரி ஒருவர், கொள்கை ரீதியாகவோ அல்லது யார் மீதாவது கொண்ட வெறித்தனமான அன்பின் காரணமாகவோ தற்கொலை செய்து கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2008ம் ஆண்டு மொத்தம் 1 லட்சத்து 25 ஆயிரத்து 17 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இதில் கொள்கை ரீதியாக அல்லது மற்றவர்கள் மீது கொண்ட வெறித்தனமான அன்பு காரணமாக தற்கொலை செய்து கொண்டோரின் எண்ணிக்கை 392 ஆகும்.

இது கடந்த 2007ம் ஆண்டில் 261 ஆகவும், 2006ல் 289 ஆகவும் இருந்தது.

2008ல் தற்கொலை செய்து கொண்ட 392 பேரில் 232 பேர் ஆண்கள் ஆவர். இதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் 191 பேர் ஆவர். இவர்களில் 73 பேர் பெண்கள்.

ஹரியானா 134 பேருடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. மூன்றாவது இடத்தில் பஞ்சாப் (28), மத்தியப் பிரதேசம் (14), குஜராத் (11), ஆந்திரா (8), அஸ்ஸம் (2), உ.பி. (1) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் வருகின்றன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஞ்சுகளை குதறும் வெறியர்கள்…


• திண்டிவனம் காவேரிப்பாக்கத்தைச் சேர்ந்த கால் ஊனமுற்ற பழனி, சத்யா தம்பதியினரின் மூன்று வயதுகூட நிரம்பாத மகள் லாவண்யா. மாலை நேரத்தில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த லாவண்யாவை தாயார் அழைக்க பதிலில்லை. மின் தடையால் எங்கும் இருட்டு. பதட்டத்தில் தேடியபோது அருகாமைப் புதரில் பிறப்புறுப்பில் இரத்தம் வடியக் கிடந்த மகளைக் கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைகின்றனர். போலீசு விசாரணையில் எதிர் வீட்டில் உள்ள பாண்டியன் எனும் 25 வயது இளைஞன் மனைவியைப் பிரிந்து வாழ்பவன் அந்தப் பிஞ்சுக் குழந்தையை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியது தெரியவந்தது.

• தூக்கத்தில் திடீர் திடீரென்று விழித்துக்கொள்ளும் ஆறு வயதான நதியா வழக்கத்துக்கு மாறாக இரவில் சிறுநீர் கழிக்கத் தொடங்கினாள். அவளைக் குளிப்பாட்டும் போதுதான் பிறப்புறுப்பில் நகக்கீறல்கள் இருப்பதைக் கவனித்தாள் அவளது தாய். குழந்தையிடம் பேச்சுக்கொடுக்கும் போதுதான் எதிர் வீட்டிலிருக்கும் இளைஞன் சாக்லெட் கொடுத்து தன்னை ஏதோ செய்ததாகக் குழந்தை சொல்லித் தெரிய வந்தது.
• போலியோவால் பாதிக்கப்பட்ட ஐந்து வயதுச் சிறுமியின் முகம் திடீரென்று வீங்கி உடல்நலம் பாதிக்கப்பட்டது. சிகிச்சை அளித்த டாக்டர் அச்சிறுமியிடம் மெதுவாகப் பேச்சுக்கொடுத்தபோது பக்கத்து வீட்டு இளைஞன் அச்சிறுமியைத் தவறாகப் பயன்படுத்தி வந்த கொடூரம் வெளிச்சத்திற்கு வந்தது.

• தெருவில் விளையாடிக் கொண்டிருந்த எட்டு வயது ரம்யாவை பலவந்தமாகத் தூக்கிச் சென்ற எதிர்வீட்டின் 45 வயதான சீனிவாசன் பலாத்காரம் செய்யும்போது கையும் களவுமாகப் பிடிபட்டான்.

• கேக் தயாரிக்கும் பேக்கரி ஒன்றில் பயிற்சிக்காக வந்த கேட்டரிங் படிக்கும் கல்லூரி மாணவர்கள் ஆறு பேர், அங்கு விளையாட வரும் ஐந்து வயதுச் சிறுமியை தங்களது இச்சைக்குப் பல நாட்களாகப் பயன்படுத்திய விவரம் தெரியவந்தபோது அதிர்ச்சியில் உறைந்தது அச்சிறுமியின் குடும்பம்.

• சென்னை மெட்ரிகுலேசன் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் ஒன்பது வயது மாணவியை உடற்கல்வி ஆசிரியர் கழிப்பறையில் வைத்து ஓராண்டாகப் பாலியல் வன்முறை செய்தது விசாரணையில் தெரியவந்தது. அதே ஆசிரியரால் குதறப்பட்ட வேறு இரண்டு மாணவிகளும் புகார் கொடுத்தனர்.



• நாகையில் அரசு உதவிபெறும் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியை 45 வயது ஆசிரியர் ஆய்வகத்தில் வைத்து பாலியல் வன்முறை செய்ததில் அம்மாணவி கருத்தரித்தாள்.

• மதுரை அரசு மேல்நிலைப் பள்ளியில் நான்கு மாணவிகளை ஆசிரியர் ஒருவர் பாலியல் வன்முறை செய்தது பொதுமக்களின் போராட்டத்திற்கு பின் தெரியவந்தது. இதற்குத் தண்டனையாக அவ்வாசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டார்.

• ஈரோடு ஆரம்பப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ஏழு வயது மாணவியைத் தவறாகப் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. கோவை பள்ளியில் இதே போன்று வன்கொடுமைக்கு ஆளான மாணவி ஒருத்தி தற்கொலை செய்து கொண்டாள்.

•••
முதல் சம்பவம் சென்ற மாதத்தில் நடந்தது. பின்னையவை சமீப காலங்களில் நடந்து பத்திரிக்கைகளில் வெளிவந்தவை. சிறார்களைப் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கும் இத்தகைய சம்பவங்கள் எங்கோ மேலை நாடுகளில் மட்டும் நடக்கும் வக்கிரம் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்களின் மதிப்பீட்டை இவை மறுதலிக்கின்றன. பல்வேறு ஆய்வுகளும் புள்ளி விவரங்களும் இதையே வழிமொழிகின்றன.

பதினெட்டு வயதுக்கும் குறைவான சிறார்களின் உலகத் தொகையில் 19% பேர் இந்தியாவில் இருக்கின்றனர். இந்திய மக்கள் தொகையில் இவர்கள் மூன்றிலொரு பங்கு இருக்கின்றனர். 2007 ஆம் ஆண்டு இந்திய அரசின் குழந்தைகள் நலத்துறையானது குழந்தைகள் மீதான பல்வேறு வன்முறை குறித்து விரிவான கருத்துக்கணிப்பை மேற்கொண்டது. பதின்மூன்று மாநிலங்களில் 12,447 குழந்தைகளிடம் மேற்கொண்ட ஆய்வில் 53% குழந்தைகள் ஏதோ ஒரு பாலியல் வன்முறைக்கு ஆளானதாகவும், 21.9% குழந்தைகள் மோசமான பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. இதில் இருபாலரும் ஏறக்குறைய சரிசமமாக உள்ளனர்.



இந்தியாவில் ஆண்டொன்றுக்கு சுமார் 7 இலட்சம் சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றார்கள். விலைமாதர்களில் 15% பேர் பதினைந்து வயதுக்குட்பட்டவராவர். 2006இல் துளிர் எனும் அமைப்பு 2211 சென்னைக் குழந்தைகளிடம் ஆய்வு செய்ததில் 42% பேர் பாலியல் கொடுமைகளுக்கு ஆளானதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. டெல்லியில் சாக்ஷி எனும் தொண்டு நிறுவனம் செய்த ஆய்வில் 350 குழந்தைகளில் 63% பேர் குடும்ப உறுப்பினர்களால் பாலியல் வன்முறைக்குப் பலியானது தெரிய வந்தது.

இறைந்து கிடக்கும் இந்தப் புள்ளிவிவரங்கள் இந்திய சமூகத்தில் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை என்பது தவிர்க்க முடியாத அங்கமாகியிருப்பதை ஆணித்தரமாகத் தெரிவிக்கின்றன. குடும்ப அமைப்பு சிதைந்துவரும் மேலைநாடுகள் போலல்லாமல் இந்தியப் பண்பாட்டிற்கு அச்சாணியாகக் குடும்பங்கள் வலுவாக இருப்பதாக நம்பும் பழமைவிரும்பிகள் கூட இந்த உண்மையை அங்கீகரித்துதான் ஆக வேண்டும்.

செல்பேசிகளும், இருசக்கர வாகனங்களும், தொலைக்காட்சிகளும் மட்டுமே நாம் காணும் மாற்றங்கள் அல்ல. பண்பாடும் கூட மாறித்தான் வருகின்றது. பொருளாதாரத்தில் நாட்டின் முன்னேற்றமும், விவசாயிகளின் தற்கொலையும் ஒருங்கே நிகழ்வது போல பண்பாட்டில், குறிப்பாக பாலுறவில் காதலும் கலவியும் எதிரெதிர்த் துருவங்களாக மாறி வருகின்றன.

பத்திரிக்கைகளின் அரைநிர்வாணப் படங்களும், மழையில் நனைந்து அங்கங்களைக் காண்பிக்கும் ‘மானாட மயிலாட’ நடனமும் இன்று அதிர்ச்சியை ஏற்படுத்துவதில்லை. நேற்று குடும்பத்துடன் பார்க்கத் தகுதியற்றவையாகக் கருதப்பட்ட திரைப்படங்களெல்லாம் இன்று குடும்பத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுவிட்டன. நேற்று ஆபாசமென ஒதுக்கப்பட்டவை இன்று கலாச்சாரத்தின் அங்கமாக மாறி விட்டன. பத்திரிக்கைகளில் மட்டுமே வந்த கள்ளஉறவுச் செய்திகள், இன்று இல்லத்தரசிகளின் மனதைக் கவரும் ‘தொடர்’களாகி விட்டன. தனது இன்பத்திற்காக எதையும் செய்யலாம் என்ற வக்கிரம் சமூக வாழ்வின் அனைத்து விழுமியங்களையும் ஆக்கிரமிக்கத் தொடங்கியிருக்கின்றது.



பார்த்து இரசிக்க வேண்டிய குழந்தைகளைப் பிய்த்துக் குதறும் காமவெறி இன்றைக்குத்தான் தோன்றியது என்று கூற முடியாது. இதன் அடிவேர் பார்ப்பனியத்தின் மூடுண்ட சமூகத்தில் இருக்கின்றது. சாதியத்தைத் தனது ஆன்மாவாக வரித்திருக்கும் சமூகம், ஆண் பெண் உறவையும் சீனப் பெருஞ்சுவரால் பிரித்திருக்கின்றது. சக மனிதனுடனேயே சாதிபார்த்து பழகும்போது காமத்திற்கு வைக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு பற்றிச் சொல்லத் தேவையில்லை. தேவதாசிகளையும், கோபுரங்களில் விதவிதமான கலவிச் சிற்பங்களையும் பார்வைக்கு வைத்திருக்கும் பண்டைய பாரதம், காமசூத்ராவை உலகிற்கு அளித்த பார்ப்பனியம், மேட்டுக்குடியினர் பாலியல் ருசிகளை அனுபவிப்பதற்கு மட்டும் வழி ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது.

இந்திய மக்களுக்கு பார்ப்பனியத்தின் சாபத்தால் காதலே மறுக்கப்பட்டிருப்பதால், பாலியல் பிரச்சினைகள் அதிகரிக்கின்றன. பாலுணர்வு எனும் இயற்கையான உணர்வு திருட்டுத்தனமான விசயமாகப் பார்க்கப்படுகின்றது. நடுத்தர வயதை எட்டிவிட்டால், காமத்தைக் குற்றமாகக் கருதி மறைத்துக் கொள்ளும் போலித்தனமும், காதலில் சுதந்திரமாக இணைவதற்கு சாத்தியங்கள் மறுக்கப்படுவதும் குறுக்கு வழிகளை நோக்கி மனத்தைத் தூண்டுகின்றன.

மணவாழ்க்கையில் குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் கணவன் மனைவிக்கிடையிலான நேசம் பல காரணங்களால் குறையத் தொடங்கும்போது, சலிக்கத் தொடங்கும்போது, அவற்றுக்கான காரணங்களை ஆராய்ந்து யாரும் சீர்செய்து கொள்வதில்லை. பிரிவு என்பது அவ்வளவு சுலபமான ஒன்றாக இல்லை.

இதுதான் வாழ்க்கை என்று விதிக்கப்பட்டிருந்தாலும் மணவாழ்வில் கிடைக்காத இன்பத்தை, குறிப்பாக ஆண்கள் (சில சமயங்களில் பெண்களும்) மணவாழ்விற்கு வெளியே தேடுகின்றார்கள். இவையெதுவும் தற்செயலாக நிகழ்வதில்லை. ஆழ்மனத்தில் கனன்று கொண்டிருக்கும் ஆசை நிறைவேறுவதற்கான தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது. சந்தர்ப்பங்கள் அதற்கு உதவுகின்றன. கள்ள உறவின் தோற்றுவாய் இப்படித்தான் இருக்கின்றது.

இத்தகைய சூழ்நிலைக்கு ஆட்படுவோர் திருட்டுத்தனத்தில் மட்டுமே சுதந்திரத்தைக் காண்கிறார்கள். இவர்களுடைய வாழ்வின் மற்ற வேலைகளை முதலில் மெதுவாகவும், பின்னர் வெகுவேகமாகவும் அரிக்கும் கரையானாகக் காமம் மாறிவிடுகின்றது. சிந்தனையின் மையத்தையே கைப்பற்றிவிடும் இந்த வெறி மற்றெல்லாச் சிந்தனைகளையும் தடுமாற வைக்கின்றது. சமூக வாழ்க்கையில் ஊக்கத்துடன் ஈடுபட வேண்டிய மனிதனை நைந்துபோக வைக்கின்றது. காதலைத் துறந்து காமத்தை மட்டும் ஒரு விலங்குணர்ச்சி போல துய்ப்பதற்கு வாய்ப்பளிக்கும் விபச்சாரமும் கூட இத்தகைய நபர்களின் பிரச்சினைகளுக்கு முடிவு கட்டுவதில்லை.



அதனால்தான் கலவியில் புதிது என்ன? என்ற கேள்வி அடுத்து வருகின்றது. அந்தக்கால மன்னர்களும், ஜமீன்தார்களும், இந்தக்கால பணக்காரர்களும், முதலாளிகளும் எல்லையற்ற காமத்தில் திளைத்தாலும் திருப்தி கொள்வதில்லை. பாலுறவுச் சுதந்திரம் கொடிகட்டிப் பறக்கும் மேலை நாடுகளிலிருந்து கோவாவின் கடற்கரைக்கும், இலங்கைக் கடற்கரைக்கும் இளஞ்சிறுவர்களைத் தேடி வெள்ளையர்கள் வருகிறார்கள்.

விபச்சாரமே குலத்தொழில் என்று விதிக்கப்பட்ட சில ஆந்திரக் கிராமங்களில் புதிதாகப் பருவமெய்தும் சிறுமிகளுக்குப் பொட்டுக்கட்டும் சடங்கும் அவர்களை ஏலமெடுக்கும் முறையும் இன்றும் தொடர்ந்து நடந்து வருகின்றன. மேட்டுக்குடி வர்க்கத்தின் காமக்களியாட்டம் ஆண்களுக்கு மட்டுமே உரியது என்ற காலமும் மாறி வருகின்றது.

உலகமயமாக்கத்தால் பெருகியிருக்கும் பணக்கொழுப்பும், இணையத்தால் திறந்துவிடப்பட்டிருக்கும் இன்பவாயில்களும் இன்று பணக்காரப் பெண்களையும் வாடிக்கையாளர்களாக்கி விட்டன. இவர்களுக்குச் சேவை புரியும் ஆண் விபச்சாரிகளும் மாநகரங்களில் பெருத்து வருகின்றார்கள். மொத்தத்தில் உயர் வர்க்கத்தினர் இதற்கேற்ற மனநிலையையும், பணநிலையையும் ஒருங்கே பெற்றிருக்கின்றனர்.

இந்த வசதி இல்லாதவர்களுக்கு விரலுக்கேற்ற விபச்சாரம் இருக்கின்றது. என்றாலும் அதனைத் தேடிப்போவது அத்தனை சுலபமாய் நடப்பதில்லை. இரகசியம் காக்க முடியாத கள்ள உறவுகளோ கொலையில் முடிகின்றன. இத்தகைய சூழ்நிலையில்தான் ஒழுக்கக்கேடுகளை நியாயப்படுத்தும் கருத்துக்கள் பரப்பப்படுகின்றன.

இந்தியா டுடே போன்ற பத்திரிக்கைகள் மூன்று மாதத்துக்கு ஒருமுறை இந்திய ஆண்களும் பெண்களும் கட்டுப்பெட்டித்தனத்தைக் கைவிட்டு பாலியல் சுதந்திரம் பெற்று வருவதைக் கொண்டாடுகின்றன. கள்ள உறவுகளும், திருமணத்துக்கு முந்தைய உறவுகளும் பெருத்து வருவதாக அவர்கள் வெளியிடும் புள்ளி விவரங்கள், ‘இவையெல்லாம் சகஜம்தான் போலும்’ என்ற கருத்தை வாசகர்கள் மனதில் எளிதில் உருவாக்குகின்றன.

செல்போனில் புழங்கும் நீலப்படங்கள், பாலியல் குற்றங்களையே கவர்ச்சிகரமான அட்டைப்படக் கட்டுரைகளாக்கும் பத்திரிக்கைகள், அவற்றையே தமது கதைக்கருவாகக் கொண்டிருக்கும் தொலைக்காட்சித் தொடர்கள் ஆகிய அனைத்தும், எரியும் தீயில் எண்ணெயை ஊற்றுகின்றன. குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினர், தான் இழந்து விட்ட இன்பம் குறித்து உள்ளுக்குள் புழுங்கத் தொடங்குகின்றனர். புதிய அதிருப்தியாளர்கள் உருவாக்கப் படுகின்றனர்.

தனிநபரின் காமம் புடைப்பதற்கேற்ற கலாச்சாரச் சூழலும் மறுபுறம் அதைத் தடை செய்யும் சமூகக் கட்டுப்பாடுகளும் கோலோச்சும் வாழ்க்கையில், என்னதான் இருந்தாலும் எல்லோரும் எல்லை மீறி விடுவதில்லை. அல்லது மனத்தளவில் எல்லை மீறினாலும் செயலில் மீறாத வண்ணம் தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்கின்றார்கள். சமூக விழுமியங்களின் அடிப்படையில் தனது சொந்த உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளப் பலரும் போராடினாலும் இந்தப் போராட்டத்தில் தோல்வியுறுபவர்களும் இருக்கின்றார்கள்.

கீழே கிடக்கும் பணத்தை உரியவரிடம் சேர்ப்பதா, யாரும் பார்க்கவில்லை என்பதால் சட்டைப்பையில் வைத்துக் கொள்வதா என்று முடிவு செய்ய வேண்டிய தருணம் பலருக்கும் வருகின்றது. ஒருமுறை எல்லை மீறிவிட்டால், பிறகு வக்கிரம் இயல்பாக மாறிவிடுகின்றது. கடுகளவு குற்ற உணர்வுகூட இல்லாமல் அடக்கப்பட்ட காமத்தை இவர்கள் வெறியுடன் தீர்த்துக் கொள்கிறார்கள். இவர்களுக்குப் பிரச்சினையில்லாத தொல்லையில்லாத இலக்கு குழந்தைகள். வயதுவந்த பெண்ணை வல்லுறவுக்கு ஆளாக்குவதும், ஒரு சிறுமியை வல்லுறவு செய்வதும் ஒன்றல்ல. பிந்தையதைச் செய்வதற்கு மிகுந்த வன்மம் வேண்டும்.

பெண்களே வல்லுறவைத் தடுக்க முடியாமல் பலியாகிவிடும் நிலையில், குழந்தைகளோ அதைப்பற்றிய சுவடு கூடத் தெரியாமல், என்ன ஏது என்று அறியாமல் பலியாகிறார்கள். விபச்சாரமும், கள்ள உறவும் வாய்க்காத தருணங்களில் அண்டை வீடுகளில் இருக்கும் பெண் குழந்தையே ஒரு காமுகனுக்கு வெறியூட்டப் போதுமானதாக இருக்கின்றது. பொதுப்பால் என்று போற்றப்படும் ஒரு குழந்தையை இத்தகைய கயவர்கள் வளர்ந்த பெண்ணாக உருவகித்துக் கொள்கின்றார்கள். ஒரு இனிப்பு வாங்கிக் கொடுத்து விட்டு மறைவிடத்தில் வக்கிரத்தைத் தீர்த்துக் கொள்கின்றார்கள். சற்றே அறியும் பருவமென்றால் மிரட்டிப் பணிய வைக்கிறார்கள்.


பள்ளிகளில் ஆதிக்கம் செய்யும் ஆசிரியர்கள் இப்படித்தான் மாணவிகளை வேட்டையாடுகின்றனர். பெயிலாக்கி விடுவேன், கொன்று விடுவேன் என்று அந்த மாணவி மிரளும் வண்ணம் மான் வேட்டை நடைபெறுகின்றது. கற்பின் புனிதம் குறித்த கருத்து ஆதிக்கம் செய்யும் சமூகத்தில் ஒரு மாணவி தனக்கு நேர்ந்ததை வெளியிலோ வீட்டிலோ அவ்வளவு எளிதாகச் சொல்லுவதில்லை. விதி விலக்காய் வெளியே தெரியும் சம்பவங்களிலிருந்துதான் இந்த வக்கிரத்தை அறிய வருகின்றோம். முனைவர் படிப்புக்காக கைடு உதவியுடன் ஆய்வு செய்யும் கல்லூரிப் பெண்கள் கூட இந்தக் கயவர்களின் மிரட்டலுக்கு அடிபணிய நேரிடுகின்றது.

சிறுவர்களும், சிறுமிகளும் வயது வந்த எதிர்பாலினத்தவருடன் உறவு கொள்ளும் நீலப்படங்கள்தான் இன்றைய சிறப்பாம். இதைப் பார்த்துத்தான் பணக்காரத் தம்பதியினர் கிளர்ச்சி அடைகிறார்களாம். சிறார்களை வல்லுறவுக்கு ஆட்படுத்தும் போக்கு உழைக்கும் மக்களிடத்தில் இருப்பதை விட மேல்தட்டு நடுத்தர வர்க்கத்திடம்தான் அதிகம் நிலவுகிறதென ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவர்களிடம் குடும்ப உறவு பண உறவாகவும், பண்ட உறவாகவும் போலித்தனம் நிரம்பியதாகவும் இருப்பதால் இத்தகைய சீரழிவுகள் அதிகம் நடக்கின்றன.

குழந்தைகளை வல்லுறவு கொள்ளும் மனிதர்கள் எவரும் சமூகத்தால் ஒதுக்கப்பட்ட கேடிகளல்ல. அந்தக் குழந்தையின் உறவினராகவோ, அண்டை வீட்டாராகவோ பொதுவாக நன்னடத்தையுடன் வாழ்பவர்கள்தான். இவர்கள்தான் இன்னொருபுறம் தமது கைகளுக்கு அருகாமையில் இருக்கும் பச்சிளம் குழந்தைகளை அவை அறியாவண்ணம் குதறுகின்றவர்களாகவும் இருக்கிறார்கள். தனது நன்னடத்தையைக் காப்பாற்றிவரும் அதே வேளையில் காம வக்கிரத்தைத் தீர்ப்பதற்கு இரகசியமான கருவிகளாகக் குழந்தைகளைப் பயன்படுத்துகின்றார்கள்.

ஒரு குழந்தையின் குழந்தைத் தன்மையை இரக்கமின்றி நசுக்கும் இந்தக் கயவர்கள் எவரும் மனநோயாளிகள் அல்ல. பிடிபடாத வரை இந்த வக்கிரத்தைத் தொடரலாம் என்று திட்டமிட்டுத்தான் இந்தக் காரியத்தில் இறங்குகின்றார்கள். குழந்தைகளை வல்லுறவு செய்தல் ஒரு விபத்து போலவும் நடப்பதில்லை. அனைத்தும் திட்டமிட்டுதான் நடக்கின்றன.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒரு குழந்தை முழுமையான வல்லுறவுக்கு ஆட்படுத்தப்பட வேண்டும் என்பதில்லை. பாலியல் வெறியுடன் ஒரு குழந்தையின் மீது கைகள் படரும் ஒவ்வொரு நிகழ்வும் வல்லுறவுதான். அந்த வகையில் பெரும்பான்மையான குழந்தைகள் இந்த அபாயத்தை சந்திக்கும் நிலையில்தான் இருக்கின்றார்கள். பருவம் வராத குழந்தைகளின் உணர்ச்சியைத் தூண்டி விடுதல், நீலப்படங்களைக் காண்பித்து உணர்வூட்டுதல் போன்றவற்றையும் இந்தக் கயவர்கள் செய்கின்றார்கள். உடலும், வயதும் முதிர்ந்த பின்னர் அறிய வேண்டிய பாலுறவை முன்பே அறிந்து கொண்டு அதற்கு பலியாகின்றார்கள் இந்தக் குழந்தைகள்.

விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படும் சிறார்களுக்கு இது வன்முறையாக நடக்கின்றது. பெற்றோர் அக்கறையோ கண்காணிப்போ இல்லாமல் இணையத்தில் மூழ்கும் மாணவர்களோ பிஞ்சிலே வெம்பி விடுகின்றார்கள். தொலைக்காட்சியின் அத்தனை நிகழ்ச்சிகளும், விளம்பரங்களும் சிறுவர்களைப் பாலியலுக்கு அறிமுகம் செய்கின்றன.

பள்ளி ஆண்டுவிழாவில் குத்தாட்டங்களுக்கு நடனம் ஆடும் சிறுமி, தான் தொலைக்காட்சியில் பார்த்த ஒரு வயதான பெண்ணின் விரகதாபத்தை அபிநயம் பிடித்துக் காட்டுகின்றாள்; அகமகிழ்கின்றார்கள் பெற்றோர்கள். அபிநயத்தில் ஆரம்பித்து அது அடுத்த கட்டத்திற்கு போவது இயல்பாக நடக்கின்றது.



பாலியல் கொடுமைகளுக்குள்ளாக்கப்படும் குழந்தைகள் அதைப் புரிந்து கொள்ளும் அறிவு வளர்ச்சியைப் பெறும்போது பெரும் மனவியல் சித்திரவதைகளுக்கு ஆளாகின்றார்கள். தனக்கு மிகப்பெரிய கொடுமை நடந்து விட்டதாகவும், தனது புனிதம் கெட்டுப்போனதாகவும், தான் கோழையென்றும், இன்னும் பலவிதமாகவும் அவர்கள் கருதிக் கொள்வதால், இத்தகைய குழந்தைகளை சிகிச்சை அளித்து மீளப்பெறுவது என்பது மிகவும் சிரமமானதாகி விடுகின்றது.

ஆசிரியர்கள் இழைக்கும் கொடுமைகளால் மாணவிகள் அடையும் மனச்சிதைவுக்கு எல்லையில்லை. எதிர்கால வாழ்வை விருப்பத்துடனும், நம்பிக்கையுடனும் எதிர்கொள்ளும் மனத் துணிவை இவர்கள் இழக்கிறார்கள். விசயம் வெளியே தெரியக்கூடாது என்று மறைக்கப்படுவதால் அது உள்ளுக்குள்ளேயே மனதை ரணமாக்குகின்றது.

பாலியல் வன்கொடுமைகளில் இருந்து தப்பிப்பதற்கு பல ஆலோசனைகள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் முன்வைக்கப் படுகின்றன. குழந்தைகளின் மறைவுறுப்புக்களை யாரும் தொட அனுமதியாத வண்ணம் கற்றுக் கொடுப்பது, குழந்தைகளுடன் தேவையானவற்றை வெளிப்படையாகப் பேசுவது, அவர்களையும் அப்படிப் பேசவைப்பது, விடலைப் பருவத்தினருக்கு செக்ஸ் கல்வி, விளையாடும் குழந்தைகளை ஆசிரியர்களும் குடும்பத்தினரும் கண்காணிப்பது, மாணவிகள் படிக்கும் பள்ளிகளுக்கு பெண்களை மட்டும் ஆசிரியர்களாக நியமித்தல் என்று பல ஆலோசனைகள் பேசப்படுகின்றன.

இவற்றையெல்லாம் செய்யலாம்தான். இவை தடுப்பு மருந்து மட்டுமே. நோயின் மூலத்தை அறிந்து அழிக்கும் சக்தி இந்த மருந்திடம் இல்லை. ஆம், குழந்தைகளை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கும் கயவர்களைத் திருத்துவதற்கு எந்த மருந்தும் அரசிடமும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிடமும் இல்லை. சொல்லப்போனால் இந்த நோயை முற்றச்செய்யும் வேலையைத்தான் உலகமயமாக்கத்தின் பண்பாடு செய்து வருகின்றது. இயற்கையான காமம் செயற்கையாக உப்பவைக்கப்படும் இன்றைய சூழலில் இவை ஒவ்வொன்றையும் எதிர்த்துப் போராடுவது மிகவும் கடினமான காரியம்.



முக்கியமாக இந்த மனவிகாரம் உள்ளவர்கள் என எல்லோரையும் சொல்ல முடியாதுதான். அதே சமயம் இந்தக் கொடுமையைச் செய்யப் போகிறவர்கள் யார் என்பதையும் கண்டு பிடிக்க முடியாது. அது அந்தக் குழந்தையின் மாமாவாகவோ, சித்தப்பாவாகவோ, ஆசிரியனாகவோ, அண்டை வீட்டு இளைஞனாகவோ இருக்கலாம்.

நான்கு சுவர்களுக்குள் நமது குடும்பத்தின் நலனை மட்டும் பேணிக் கொள்ளலாம் என்றுதான் பலரும் கருதிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், தெருவில் இறங்காமலா இருந்துவிட முடியும்? ஒழுக்கக் கேட்டையும் வக்கிரத்தையும் தோற்றுவிக்கும் சமூகச் சூழலுக்கு எதிராகப் போராடுவதன் மூலம் மட்டும்தான் அவற்றை எதிர்த்து நிற்க முடியும். அந்தக் கிருமிகளிடமிருந்து நம்மையே தற்காத்துக் கொள்ளவும் முடியும்.