வியாழன், 25 பிப்ரவரி, 2010

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி வட்டி உயர்வு


தனியார் துறை வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி வைப்பு நிதி மீதான வட்டியை அரை விழுக்காடு அதிகரித்துள்ளது.

இதற்கு முன் தனியார் துறை வங்கிகளான ஹெச்.டி.எப்.சி, ஐ.டி.பி.ஐ வங்கி ஆகியவை வட்டியை உயர்த்தியது நினைவிருக்கலாம்.

புதிய வட்டி விகிதப்படி 390 நாட்களில் முதிர்வடையும் வைப்பு நிதிக்கு 6.75 விழுக்காடு வட்டி வழங்கப்படும். பழைய வட்டி 6.5%.

இதே போல் 590 நாட்களில் முதிர்வடையும் வைப்பு நிதிக்கு 6.75 விழுக்காடு வட்டி வழங்கப்படும். பழைய வட்டி 6.25%.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக