வெள்ளி, 27 ஜனவரி, 2012

கரம் பற்றி காதோரம் சொல்லுங்கள், ஐ லவ் யூ…!

நம் நேசத்தை வெளிப்படுத்தும் அற்புதமான வாக்கியம் ஐ லவ் யூ. காதலிப்பதை விட அந்த காதலை வெளிப்படுத்துவதில்தான் சிரமம் அதிகம். எங்கே, எப்படி ஐ.லவ். யூ சொல்வது என்று தெரியாமல் மண்டை காய்ந்து போனவர்கள் தான் அதிகம். ஏதாவது ஒரு இடத்தில் எக்குத்தப்பாக சொல்லி மாட்டிக்கொண்டு அடிவாங்கியவர்கள் ஏராளம். தம்பதியர் அடிக்கடி ஐ.லவ்.யூ என்று கூறிக்கொண்டாலும் அந்த வாக்கியம் எத்தனை சக்தி படைத்தது என்று உணர்வதில்லை. எனவே காதலை எப்படி சொன்னால் நல்லது என்று ஆலோசனை கூறுகின்றனர் உளவியலாளர்கள். நீங்கள் டிரை செய்து பாருங்களேன். பசுமையான தருணங்கள் இருவரின் வாழ்விலும் நிகழ்ந்த பசுமையான தருணங்களை நினைவு படுத்தலாம். அதை நினைத்து சந்தோசமாக சிரித்துக் கொண்டிருக்கும் போது துணையிடம் உங்களின் நேசத்தை வெளிப்படுத்தலாம். அந்த தருணத்தில் நிச்சயம் உங்கள் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படும். நடிப்பாக வெளிப்படுத்தலாம் நடிப்பின் மூலம் காதலை வெளிப்படுத்துவது எளிது. சமீபத்தில் பார்த்த திரைப்படத்தில் காதல் காட்சியை நினைவு படுத்தும் விதமாக நடித்து எளிதாக ஐ. லவ்.யூ கூறலாம். உங்களின் எண்ணத்தை புரிந்து கொண்டவராக இருந்தால் நிச்சயம் ஏற்றுக்கொள்வார். நகைச்சுவைப் படம் இருவரும் ஜாலியாக ஒரு நகைச்சுவைப் படத்திற்கு சென்றிருக்கும் போது உங்களின் துணை சந்தோசமாக படத்தில் மூழ்கியிருக்கும் போது மென்மையாக கரத்தை பற்றி காதோரம் ஐ.லவ். யூ சொல்லலாம். அதிக இருட்டும் இலேசான வெளிச்சமும் கலந்த தியேட்டரில் உங்களின் கோரிக்கையை உங்கள் துணை ஏற்றுக்கொள்ள வாய்ப்பு உண்டு. வேடிக்கை பேச்சு இருவரும் சந்தோசமாக நகைச்சுவையாக பேசிக்கொண்டிக்கும் போது எளிதாக உங்களின் நேசத்தை வெளிப்படுத்தலாம். அந்த நேரத்தில் சொல்லும் ஐ.லவ்.யூ கொஞ்சம் எபெக்ட் ஆகத்தான் இருக்கும். நடனம் நல்லது நடனம் என்பது உடல் முழுவதும் உற்சாகத்தை தரக்கூடியது. எனவே இருவரும் ஜோடியாக நடனமாடும் போது ஐ.லவ்.யூ சொல்வது அதீத உற்சாகத்தை தரும்.

அரை மணி நேரம்... 250 கலோரி 'காலி'!

டிரட் மில்களில் ஏறி வியர்க்க விறுக்க, நின்று கொண்டே ஓடுவது, மைதானத்தைச் சுற்றி ஓடி உடலை குறைக்க முயற்சிப்பது, சைக்ளிங் போவது, ஜிம்முக்குப் போய் மூச்சு முட்ட முட்ட உடற்பயிற்சி செய்வது... இப்படி, உடல் எடையைக் குறைக்கவும், தேவையில்லாமல் சேர்ந்து கிடக்கும் கலோரிகளைக் காலி செய்யவும் கடுமையாக முயற்சிப்பதை விட அரை மணி நேரத்தில் 250 கலோரிகளை காலி செய்ய எளிமையான வழி உள்ளது - அதுதான் 'செக்ஸ்ர்சைஸ்'! இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில்தான் செக்ஸ் உறவு ஒரு நல்ல உடற்பயிற்சி என்பதைத் தெரிவித்துள்ளனர். பெண்களிடம்தான் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர். உடல் எடையைக் குறைக்க செக்ஸ் உறவில் ஈடுபடுவதற்கு பல பெண்கள் ஆர்வம் காட்டுகிறார்களாம். கடுமையாக பாடுபட்டு உடற்பயிற்சி செய்வதை விட செக்ஸர்சைஸ் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க முடியும் என்பது அவர்கள் எண்ணமாம். இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், 76 சதவீதம் பெண்கள், உடல் எடை அதிகமாகி விட்டதாக உணரும்போது செக்ஸர்சைஸில் ஈடுபட விரும்புவோம் என்று கூறியுள்ளனர். மேலும் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள், ஜிம்முக்குப் போவதை தற்போது விட்டு விட்டதாகவும், அதற்குப் பதில் செக்ஸ் உறவில் அதிகம் ஈடுபட விரும்புவதாகவும் கூறியுள்ளனராம். அரை மணி நேர செக்ஸ் உறவின்போது நமது உடலிலிருந்து 250 கலோரிகள் காலியாகிறதாம். உறவின் நேரத்தையும், வேகத்தையும் பொறுத்து 350 கலோரி வரை கூட எரிகிறதாம். சும்மா, ஒரு மணி நேரம் சாதாரணமாக முத்தமிட்டாலே 200 கலோரி வரை காலியாகிறது என்றும் இந்த ஆய்வு கூறுகிறது...

மேலை நாட்டினருக்கு வேலை இந்திய நிறுவனங்கள் உறுதி!

டவோஸ் : அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் இந்திய சாப்ட்வேர் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிப்பதாக உலக பொருளாதார மாநாட்டில் இந்திய தொழிலதிபர்கள் கூறி உள்ளனர். உலக பொருளாதார அமைப்பின் வருடாந்திர 5 நாள் மாநாடு சுவிட்சர்லாந்தின் டவோஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். அமெரிக்க, ஐரோப்பிய நிதி நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள உலக பொருளாதார வளர்ச்சி பற்றியும், அதிலிருந்து விடுபடுவது பற்றியும் இதில் ஆராயப்படும். இந்தியா சார்பில் மத்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் ஷர்மா, மத்திய அமைச்சர் ஜோதிர்ஆதித்ய சிந்தியா, திட்டக்குழு துணைத் தலைவர் மான்டேக்சிங் அலுவாலியா, தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, அசிம் பிரேம்ஜி, ஆதி கோத்ரெஜ், ராகுல் பஜாஜ் மற்றும் சுனில் மிட்டல் உட்பட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகள் தட்டிப் பறிப்பதாக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அண்மையில் கூறியிருந் தார். இதற்கு பதிலளிக்கும் வகையில், மேற்கத்திய நாடுகளின் வேலையை இந்தியா பறிக்கவில்லை என்றும் மாறாக, அங்கு புதிய வேலை வாய்ப்பை உருவாக்குவதில் இந்திய சாப்ட்வேர் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிப்பதாக இந்திய தொழில் துறையினர் கூறியுள்ளனர். உலகமயமாக்கல் கொள்கை காரணமாக, வெளிநாடுகளில் தொழில் செய்யும் நிறுவனங்கள் உள்ளூர்வாசிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகின்றன. அந்த வகையில், அடுத்த 5 ஆண்டுகளில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கப்படும் என இந்தியாவின் எச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவன துணைத் தலைவர் வினித் நாயர் பொருளாதார மாநாட்டில் பேசிய அறிவித்துள்ளார். விப்ரோ டெக்னாலஜிஸ் தலைவர் அசிம் பிரேம்ஜி கூறுகையில், அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வர இருப்பதால், வாக்காளர்களைக் கவருவதற்காக ஒபாமா பொருத்தமற்ற குற்றச்சாட்டை கூறி வருகிறார் என கூறியுள்ளார். இந்தியர்களின் கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேவரூன் பேசியுள்ளார். இந்தியா போன்ற வளரும் நாடுகளால் ஐரோப்பிய நாடுகளுக்கு அச்சுறுத்தல் எதுவும் இல்லை, மாறாக அதிக பயன் கிடைக்கும். இப்போதைய நிதிநெருக்கடியிலி ருந்து விடுபடுவதற்கு, வளரும் நாடுகளுடன் பொருளா தார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கையை விரைவுபடுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

மோசமான கருத்துக்களை சென்சார் செய்ய நாங்க ரெடி! - ட்விட்டர் அதிரடி

டெல்லி: இந்தியாவில் எந்தவகை மோசமான, ஆபாசமான தகவல்களையும் சென்சார் செய்யமாட்டோம் என்று கூகுளும் பேஸ்புக்கும் அடம்பிடித்து வரும் நிலையில், இணைய தள உலகில் முக்கிய நிறுவனமாகத் திகழும் ட்விட்டர், சட்டம் வலியுறுத்தினால் மோசமான கருத்துக்கள், செய்திகளை நீக்கத் தயார் என அறிவித்துள்ளது. இணையதளங்களை இந்தியாவில் சென்சார் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு இதன் மூலம் புதிய பலம் கிடைத்துள்ளது. இணையதளங்களை சென்சார் செய்வது குறித்து இந்தியாவில் இப்போதுதான் புதிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இணையவெளியில் கோடிக்கணக்கான ஆபாச, வன்முறையைத் தூண்டும், மத உணர்வுகளைப் புண்படுத்தும் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. இந்த தகவல்களைத் தாங்கி வரும் தளங்களுக்கு கூகுள், யாஹூ, மைக்ரோசாப்ட் போன்ற முன்னணி நிறுவனங்கள் இடமளிக்கின்றன. இந்த நிறுவனங்களின் தேடியந்திரங்கள் (search engines) எல்லா வகையான தகவல்களையும் கொண்டு வந்து கொட்டுகின்றன. இவற்றை பல நாடுகள் தடை செய்வதில்லை. ஆனால் சில முக்கிய நாடுகளில் தடை அமலில் உள்ளது. பெரும்பாலான முஸ்லிம் நாடுகளில் ஆபாச இணையதளங்கள், மத ரீதியான வக்கிரமான கருத்துக்களைப் பரப்பும் தளங்களை தடை செய்துள்ளனர். இங்கெல்லாம் கூகுளைத் தட்டினால் இந்த வகைத் தளங்களைப் பார்க்க முடியாது. சீனாவில் 90 சதவீத சென்சார் அமலில் உள்ளது. இதனை கோல்டன் ஷீல்டு புராஜக்ட் எனும் சட்டத்துக்கு உட்பட்டு சென்சார் விதிகளை கடைப்பிடித்து செயல்படுகிறது கூகுள். ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்த கூகுள், இதற்கு கட்டுப்படாவிட்டால் கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளிவிடுவோம் என சீன அரசு எச்சரித்ததால் அடங்கிப் போனது. அதேபோல, ஜெர்மனி மற்றும் பிரான்சில் நாஜி கருத்துகளைப் பரப்பும் இணைய தளஙக்களை சென்சார் செய்ய கூகுள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களுமே ஒப்புக் கொண்டு நடைமுறைப்படுத்தி வருகின்றன. அந்த நாடுகளின் சட்டங்கள் இதை வலியுறுத்துவதால் அதை கடுமையாக பின்பற்றுகின்றன கூகுள் போன்றவை. ஆனால் இந்தியாவில் இணைய வெளியைக் கட்டுப்படுத்த குறிப்பிட்ட சட்டங்கள் எதுவும் இல்லை என்பதைக் காரணம் காட்டி, அனைத்து வகை வக்கிர, அநாகரீகக் கருத்துக்கள், படங்கள் மற்றும் வீடியோக்களை கொண்டு வந்து கொட்டுகின்றனர். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் உலகின் வக்கிர குப்பைகளைக் கொட்டும் நாடாக இந்தியா மாறிவிட்டது என்றும், இதுவே சமூகக் குற்றங்கள், வரம்பு மீறல்கள் மற்றும் மோசமான கலாச்சாரத்துக்கு வழி வகுத்துவிட்டதாகவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரி்வித்து வருகின்றனர். இந்த நிலை அரசுக்கு கவலை அளித்துள்ளது. எனவே, இந்த தளங்கள் அனைத்தையும் சென்சார் செய்ய வேண்டும், மோசமான content-ஐ தடை செய்ய வேண்டும் என வழக்கும் தொடரப்பட்டுள்ளது. நீதிமன்றங்களும் கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களை, ஏன் இந்த குப்பைகளை இந்தியாவில் தடுக்க முயற்சிக்கவில்லை என கேள்வி எழுப்பி வருகின்றன. இணையவெளியை கட்டுப்படுத்துவது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என்றும், இந்தியா ஜனநாயக நாடு என்பதால் இங்கே அதை செய்ய மாட்டோம் என்றும், அது இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும் என்றும் சமீபத்தில் கூகுள் நிறுவனம் பம்மாத்து பண்ணியது. ஆனால் கூகுளுக்கு நேர் எதிரான நிலைப்பாட்டை ட்விட்டர் தெரிவித்துள்ளது.
இந்திய அரசு சட்டப்படி வலியுறுத்தினால், தேசவிரோத, கலாச்சார விரோத கருத்துக்கள்- படங்களை நீக்கிவிடுகிறோம் என்று ட்விட்டர் தெரிவித்துள்ளது. ட்விட்டர் சீனாவில் நுழைய திட்டம் போடுகிறது. அதனால்தான் உடனடியாக இப்படி இறங்கி வந்துள்ளது. கூகுளும் யாஹூவும் ஏற்கெனவே சீனாவில் உள்ளன, என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். கூகுளும் யாஹூவும் சீனாவில் ஏற்கெனவே காலூன்றிவிட்டது உண்மைதான். ஆனால் எப்படி? சீனாவின் அனைத்து கட்டுப்பாடுகளையும் ஏற்று, அனைத்து மோசமான கருத்துக்களையும் நீக்கிய பிறகே வெளியிடுகின்றன என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. 300 மில்லியன் பயனர்களைக் கொண்ட ட்விட்டரின் இந்த அறிவிப்பால், ஆட்சியாளர்கள் இணைய வெளியை கட்டுப்படுத்தும் வகையிலான விசேஷ சட்டத்தை இயற்றுவது அவசியமாகியுள்ளது. இப்படி ஒரு சட்டம் வந்தால், கூகுள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் தாமாகவே இணையதளங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் தொழில்நுட்பத்தை மாற்றிக் கொள்வார்கள்.

சனி, 21 ஜனவரி, 2012

நீண்ட நாள் வாழ நல்லா முத்தம் கொடுங்க!

Kissகாதலின் மொழி முத்தம். காதலர்கள் ஒருவருக்கொருவர் தங்களின் அன்பை பரிமாற பயன்படுத்தும் ஆயுதம். அந்த முத்தம் மனிதர்களுக்குள் எண்ணற்ற ரசாயன மாற்றங்களை ஏற்படுத்தி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.ஆர்வம் அதிகரிக்கும்இந்தியாவில் காதல் திருமணம் செய்து கொண்டவர்களை விட வீட்டில் பெற்றோர் பேசி திருமணம் செய்து கொண்டவர்கள் அதிகம் முத்தமிட்டுக் கொள்வதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. வேலைக்குச் செல்லும் முன் தன் மனைவியை முத்தமிட்டுச் செல்பவர்கள் அப்படி செய்யாதவர்களை விட 5 ஆண்டுகள் கூடுதலாக ஆர்வமுடன் வேலை பார்த்ததாக அந்த ஆய்வு ஆச்சரியமான தகவலை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவில் பெண்கள் திருமணத்திற்கு முன்னர் 80 ஆண்களை முத்தமிட்டுள்ளதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.நோய் எதிர்ப்பு சக்திஇதழோடு இதழை இணைத்து முத்தமிடுகையில் பரிமாபப்படும் எச்சிலில், புரதம், கொழுப்பு, ஊட்டச்சத்துக்கள் அடங்கியிருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. அதேசமயம் 5 மில்லியன் பாக்டீரியாக்களும் பரிமாறப்படுகிறதாம்.தொப்பை குறையும்ஒருமுறை முத்தமிடுவதால் முகத்தின் 29 தசைகள் இயங்கவைக்கப்படுகிறது. எவ்வளவுக்கு எவ்வளவு முத்தமிடுகிறோமோ அந்த அளவிற்கு முகத்தில் சுருக்கம் விழுவது தவிர்க்கப்படும். ஒருமுறை முத்தமிடுவதன் மூலம் உடலில் 3 கலோரிகள் வரை எரிக்கப்படுகிறதாம்.

அதேசமயம் லிப் கிஸ் என்றால் 5 கலோரிகள் வரை எரிக்கப்படுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குண்டாக இருப்பவர்கள் தொடர்ந்து ஒரு நிமிடம் முத்தமிடுவதன் மூலம் 26 கலோரிகள் எரிக்கப்படுகிறதாம். அதனால் தொப்பை குறைவதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மன அழுத்தம் குறைகிறது66 சதவிகிதம் பேர் முத்தமிடுகையில் தனது முகத்தை மூடிக்கொள்கின்றனர். மீதமுள்ள 34 சதவிகிதம் பேர்தான் கண்களைத் திறந்து தனது பார்ட்னரை பார்த்து முத்தமிடுகின்றனராம். முத்தமிடுவதால் பெண்களுக்கு மன அழுத்தம் குறைகிறது. அதேசமயம் ஆண்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கிறதாம்.

இந்திய சமையல் பொருட்கள், மூலிகைகள் மையலுக்கு ஏற்றவை-ஆய்வில் தகவல்

இந்தியாவில் கிடைக்கும் மூலிகைகளும், சமையலுக்கு பயன்படுத்தப்படும் வாசனைப் பொருட்கள் உணர்வுகளை தூண்டி உற்சாகத்தை ஏற்படுத்தக்கூடியவை என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த உணவுகள் உடலின் பாலுணர்ச்சியை தூண்டும் ஹார்மோன்களை ஊக்குவிக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் சமையலுக்கு ருசிக்காகவும், வாசனைக்காகவும், ஏலம், கிராம்பு, பூண்டு, வெங்காயம், போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. இவை உணவுக்கு உடலுக்கு ஊட்டம் தருவதோடு உற்சாகத்தையும் தரும் என்றும் பாலுணர்வை தூண்டுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றும் ஆஸ்திரேலியாவைத் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர் பாலுணர்வு அதிகம் 25 லிருந்து 52 வயது வரை உடைய 60 ஆரோக்கியமான ஆண்கள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு ஆறுவாரங்களுக்கு வாரம் இரண்டு முறை மூலிகை உணவுகள் தரப்பட்டன. மூலிகைகளை உண்டவர்களின் பாலுணர்வை தூண்டும் ஹார்மோன் அளவு அதிகபட்சமாக 28 சதவிகிதம் அதாவது 16.1 லிருந்து 20.6 சதவிகிதமாக உயர்ந்திருந்தது. இந்திய சமையலில் பயன்படுத்தப்படும் நறுமணப் பொருட்கள், மூலிகைகள் போன்றவை மனிதர்களின் பாலுணர்வை தூண்டுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளன என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இந்த ஆய்வு முடிவை ‘டெய்லி மெயில்’ பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

பெண்களின் உணர்வுகளை அதிகரிக்கும் தியானம் – ஆய்வில் தகவல்

தியானம் செய்வது பெண்களின் காதல் உணர்வுகளை அதிகரிக்கும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ப்ரௌவ்ன் பல்கலைக்கழகம் ஒன்று 44 மாணவர்களிடம் ஆய்வு மேற்கொண்டது அந்த ஆய்வில் பங்கேற்ற 44 மாணவர்களில் 30 பேர் பெண்கள். 12 வாரங்களுக்கு தியானம் செய்ய பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியின் போது அமைதி, உற்சாகமான, பாலுணர்வை தூண்டும் படங்களை காண்பிக்கப்பட்டது. அப்போது தியானப்பயிற்சி செய்த பெண்கள், ஏராளமானோர் எளிதில் உணர்ச்சி வசப்பட்டனர். மேலும் தியானம் பயிற்சி செய்த பெண்களின் தன்னம்பிக்கை அதிகரித்ததும் ஆய்வில் கண்டறியப்பட்டது. எனவே தியானம் மேற்கொள்ளும் பெண்களின் கவனச்சிதறல் ஏற்படாமல் இருந்ததும் தெரியவந்ததாக டெய்லி மெயில் நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவு உளவியல் பற்றிய தகவல்களை வெளியிடும் மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

உற்சாகம் தரும் 65

65 வயதிற்கு மேல் தாம்பத்ய உறவில் ஈடுபடுவது உற்சாகத்தை அளிப்பதோடு மனதிற்கு மகிழ்ச்சி தருவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃப்ளோரிடா மாகணத்தைச் சேர்ந்த பல்கலைக்கழகம் ஒன்று நடத்திய ஆய்வில் இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது. 65 வயதிற்கு மேற்பட்ட 238 தம்பதியரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்களிடம் தாம்பத்ய உறவு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. மாதம் ஒருமுறை மகிழ்ச்சி அப்போது மாதம் ஒருமுறை உறவில் ஈடுபடுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும், உற்சாகத்தில் ஆழ்த்தியதாகவும் 40 சதவிகித்ததிற்கு மேற்பட்ட தம்பதியர் கூறியுள்ளனர். தனித்தனியாக கேட்கப்பட்ட கேள்விகளில் மாதத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறை உறவில் ஈடுபடுவது மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியதாகவும் 80 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வு முடிவு பாஸ்டனில் நடைபெற்ற ஜிஎஸ்ஏ வின் 64வது வருடாந்திர கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆரோக்கியம், உற்சாகம் அதேபோல் ஆரோக்கியமான உடல் நிலை உள்ளவர்கள் 70 வயது வரை தாம்பத்ய உறவில் ஈடுபடுவதற்கான உணர்வு இருக்கும் என்று இங்கிலாந்தின் மருத்துவ இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தின் மகப்பேறு மருந்தியல் பிரிவின் ஸ்டேசி டெஸ்லர் லிண்டாவ் தலைமையிலான குழுவினர் வயதான ஆண் மற்றும் பெண்களின் செக்ஸ் உணர்வு குறித்து வெவ்வேறு ஆய்வுகளை நடத்தினர். அதில் முதுமைக் காலத்தில் பெண்களை விட ஆண்களுக்கு பாலுணர்வு அதிகம் இருக்கும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஆரோக்கியமான உடல் நிலை உள்ளவர்கள் 70 வயது வரை தாம்பத்ய உறவில் ஈடுபாடு காட்ட முடியும் என்று ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 55 வயதான ஆண்கள் ஆரோக்கியமாக இருந்தால் மேலும் 15 ஆண்டுகளுக்கு உறவில் ஈடுபட முடியும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

'அதுக்கு' ஏத்த நேரம் 'ஏழரை மணி'தானாம்!!

காலைநேரத்தில் தம்பதிகள் உறவில் ஈடுபடுவது ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள். அதோடு அன்றைய தினம் முழுவதையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தும் என்று கூறியுள்ளது ஆய்வு முடிவு. தம்பதியர்கள் உறவில் ஈடுபடுவதற்கு ஏற்ற நேரம் என்பது குறித்து இத்தாலி நாட்டில் உள்ள தம்பதியரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வு முடிவில் காலை ஏழரை மணிக்கு உறவில் ஈடுபடுவது ஆரோக்கியமானது என்று கண்டறியப்பட்டது. காலை நேரத்தில் உறவு கொண்டால் அன்றைய தினம் உற்சாகமாக இருக்குமாம். காலை நேரத்தில் என்னதான் பரபரப்பு இருந்தாலும், பாலுணர்வை தூண்டும் ஹார்மோன் சுறுசுறுப்பாக இருக்குமாம். எனவே காலை நேரத்தில் உறவில் ஈடுபடுவது ஆரோக்கியத்தோடு ஆர்கசத்தையும் அதிகரிக்கும் என்கின்றார் ஆய்வில் ஈடுபட்ட செக்ஸாலஜிஸ்ட் சுஸி ஹெமான். அது சரி ஆபீஸ் போற அவசரத்தில அதுக்கு எங்க நேரம் என்கிறீர்களா? ஆய்வு இத்தாலியில தான் நடந்திருக்கு நம் ஊரில் இல்லை.

ஆயுளை அதிகரிக்கும் நெருக்கம் – ஆய்வில் தகவல்

தம்பதியரிடையே ஏற்படும் நெருக்கமான அன்னியோன்யமான செயல்களால் மன அழுத்தம் குறைவதோடு உயர்ரத்த அழுத்த நோய் குணமடைவதாக உளவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், தம்பதியரிடையே ஏற்படும் சர்வரோக நிவாரணியாக உள்ளது என்கின்றனர் ஆய்வாளர்கள். ஜெர்மனியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தம்பதியர் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். ஒரு வார காலத்திற்கு தம்பதியர் ஒருவரை ஒருவர் கைகளை இறுகப்பற்றுவது முதல் உறவு வரையிலான சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் உடல் ரீதியான தொடர்பால், கார்டிசோல் எனப்படும் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய ஹார்மோன் சுரப்பது குறைவாக இருப்பது தெரிய வந்தது. நோய் எதிர்ப்பு சக்தி உறவின் மூலம் டிஹெஇஏ எனப்படும் (Dehydroepiandrosterone) ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கிறதாம். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறதாம். மேலும் பாதிப்படைந்த தசை செல்கள் சரியாவதோடு, சருமத்திற்கும் பளபளப்பு ஏற்படுகிறது. ஆயுள் அதிகரிக்கும் உறவின் போது ஏற்படும் ஆர்கஸம் வாழ்வின் ஆயுளை நீடிக்கச் செய்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். தம்பதியரின் நெருக்கம், உடலில் புத்துணர்ச்சியை ஏற்படுத்துதோடு, கண்ணின் மணியை விரியச்செய்கிறது. இதனால் பார்வையை விரிவடைகிறது. நீரிழிவு போன்ற நோய்களைக் கூட தாம்பத்ய உறவு குணப்படுத்துகிறதாம். புற்றுநோய் செல்களை கட்டுப்படுத்துவதோடு அறவே குணப்படுத்தவும் செய்கிறதாம். மார்பகப் புற்றுநோயை குணப்படுத்துவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. மூளைக்கு புத்துணர்ச்சி உறவின் போது ரத்த ஓட்டம் அதிகரித்து மூளைக்கு ரத்த ஓட்டம் சீராக கிடைக்கச் செய்கிறது. இதன் மூலம் மூளை புத்துணர்ச்சியடைவதோடு உடல் உறுப்புகள் சுறுசுறுப்படைகின்றன. உடலில் கழிவுகள் எளிதில் வெளியேற்றப்படுவதால் உடலும், உள்ளமும் லேசான உணர்வை பெறுகின்றன. இளமை தரும் மருந்து 30 நிமிட உறவானது உடலில் 85 கலோரிகளை எரித்து உடலை கட்டுகோப்பாக வைக்கின்றதாம். எனவே செக்ஸ் மிகச்சிறந்த எக்ஸர்சைஸ் என்கின்றனர் ஆய்வாளர்கள். இது உடல் ரீதியான பிரச்சினைகளை போக்குவதோடு உள்ளரீதியான இறுக்கத்தையும் அகற்றுகிறது என்பது உளவியலாளர்களின் கருத்து. வலிநிவாரணி தாம்பத்யமானது வலி நிவாரணியாக திகழ்கிறது. உறவின் மூலம் ஹார்மோன் சுரப்பு அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறதாம். இது தலைவலி, தசைவலி போன்றவைகளையும் நீக்கும் வலிநிவாரணியாகவும் விளங்குகிறது. ரத்த அழுத்தம் கட்டுப்படும் தாம்பத்ய உறவின் மிக முக்கியமான நன்மையாக மன அழுத்தம் குறைவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்து நாட்டில் நடைபெற்ற ஆய்வில் மன அழுத்தமான சூழலில் இருந்த தம்பதியர் உறவிற்குப்பின் தங்களின் மன அழுத்தம் குறைந்த தாக தெரிவித்தனர். அவர்களின் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது கண்டறியப்பட்டது. எனவே காதலுக்கும், மன அழுத்தத்திற்கும் தொடர்பிருப்பது தெரியவந்தது. நெருக்கமான உறவு கொள்வதன் மூலம் , மன அமைதி ஏற்படுவதோடு ஆரோக்கியமான உடல்நலம் ஏற்படுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளி, 6 ஜனவரி, 2012

தினமும் ஒரே மாதிரியா 'இருப்பது' போரடிக்குதா?

உண்ணும் உணவும், உடுத்தும் உடையும் ஒரே மாதிரி இருந்தாலே சில சமயங்களில் போராடித்து விடும். கொஞ்சமாவது மாற்றம் வேண்டுமே என்று மனம் ஏங்கத் தொடங்கிவிடும். இப்படி இருக்கையில் தாம்பத்ய உறவின் போது ஒரே மாதிரியான சூழலை கையாண்டால் அது இருவருக்குமே போரடிக்கும் சமாச்சாரமாகிவிடும். உப்புச்சப்பில்லாமல் ஏனோதானோ வென்றுதான் இருக்கும் வாழ்க்கையும். வாழ்க்கை உற்சாகமாக இருக்கவேண்டும் என்று நினைப்பவரா நீங்கள்? மேற்கொண்டு படியுங்கள். மனதை உற்சாகப்படுத்தும் பெட்ரூம் உங்களுடைய படுக்கையறையை தினம் தினம் புதிதாக உற்சாகமூட்டும் வகையில் அலங்கரிக்கலாம். உள் அலங்காரம், மின்விளக்குகள், அறையில் உள்ள படுக்கைகள் என இடம் மாற்றி அலங்கரிக்கலாம். இதனால் புதிதாக ஒரு இடத்தில் இருப்பதைப்போன்ற எண்ணம் ஏற்படும். பிஸியில் மறந்துவிட வேண்டாம் எப்பொழுதும் வேலை வேலை என்று ஓடிக்கொண்டிருந்து விட்டு துணையை கவனிக்க முடியலையே என்று கவலைப்பட வேண்டாம். கிடைக்கும் சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தினாலே துணையை சந்தோஷப்படுத்த முடியும். அவ்வப்போது ரொமான்ஸ் மூடு ஏற்படும் வகையில் சின்ன சின்ன விளையாட்டுக்களை விளையாடலாம். இது இரவு நேர விளையாட்டிற்கு ஒத்திகை பார்த்ததைப் போல இருக்கும். புதிய இடம் புதிய வாழ்க்கை தினமும் ஒரே அறையில் இருப்பது போராடிக்கத்தான் செய்யும். எனவே இடத்தையும், ஊரையும் மாற்றுங்கள். ஹோட்டல் அறையில் புதிய சூழலில் உறவில் ஈடுபடும் போது உற்சாகம் அள்ளிக்கொண்டு போகும். துணையை உற்சாகப்படுத்தலாம் இயந்திரத்தனமாக ஈடுபடுவதை விட அவ்வப்போது துணையை உற்சாகப்படுத்த கொஞ்சம் கற்பனாசக்தியை பயன்படுத்துங்கள். இது உங்கள் துணையின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். உறவின் போது ஒரே மாதிரியாக செயல்படுவதை விட துணையை ஊக்கப்படுத்தி அவருடைய செயல்படுகளுக்கு உற்சாகம் அளிக்கவேண்டும்.

புகை ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி: ஆரோக்கியமான சிகரெட் கண்டுபிடிப்பு!

வாஷிங்டன்: திராட்சை விதையில் இருந்து புதிய வகை சிகரெட் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர் விஞ்ஞானிகள். இது விஷத்தன்மை வாய்ந்த ரசாயனம் கலக்காத சிகரெட் என்பதால் புகைப் பிடிப்பவர்கள் தைரியமாக இந்த சிகரெட்டை புகைக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். காசை கரியாக்காதே என்பார்கள் முன்னோர்கள். ஆனால் இன்றைய இளைய தலைமுறையினர் புகையாக ஊதித் தள்ளுகின்றனர். புகையை இழுக்கும் போது உற்சாகம் ஏற்பட்டாலும் அதுவே உடல் நலத்திற்கு பகை என்பதை உணர மறுக்கின்றனர். உடம்பினுள் செல்லும் சிகரெட் புகையானது புற்றுநோய், நுரையீரல் நோய்களுக்கும் அடித்தளம் அமைக்கிறது. எனவே உடல்நலம் பாதிக்காத அதே சமயத்தில் உற்சாகம் தரக்கூடிய சிகரெட் ஒன்றினை கண்டுபிடித்துள்ளனர் அமெரிக்கா நியூயார்க்கில் உள்ள கார்னல் பல்கலைக் கழக விஞ்ஞானிகள். இந்த புதிய வகை சிகரெட்டினை, திராட்சை விதையில் இருந்து அவர்கள் உருவாக்கி உள்ளனர். உடல் நலத்தை பாதிக்காது புகையிலை சிகரெட்டில் விஷத்தன்மை கொண்ட ரசாயணம் உள்ளது. இதனால் புற்று நோய் ஏற்படுகிறது. ஆனால் இந்த திராட்சை விதை சிகரெட் புகையிலையால் தயாரிக்கப்பட்ட சிகரெட் போல உடல் நலத்தை பாதிக்காது. ஆனால் புதிய வகை சிகரெட்டில் விஷதன்மை இருக்காது. இருந்தாலும் புகையிலை சிகரெட்டை புகைத்தால் என்ன உணர்வு ஏற்படுமோ அதே உணர்வு இந்த சிகரெட்டிலும் ஏற்படும் என்கின்றனர் விஞ்ஞானிகள். அதேசமயத்தில் புதிய சிகரெட் மூலம் புகையை உள்ளே இழுப்பதால் அதனால் சில பாதிப்புகள் ஏற்படும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.ஆனால் புகையிலை சிகரெட் போல அதிக பாதிப்பு ஏற்படாது என்பதால் புகை பழக்கத்தை கை விட முடியாதவர்கள். புதிய சிகரெட்டை புகைக்கலாம் என்று அவர்கள் அறிவுறித்தியுள்ளனர்.

1973ம் ஆண்டை நோக்கி இந்திய ரூபாயின் மதிப்பு; 2073ம் ஆண்டை நோக்கி விலைவாசி!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்துள்ளது. அனைத்து நாடுகளின் கரன்சிகளும், அமெரிக்க டாலருடன் ஒப்பிடப்பட்டே மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது. இதன்படி ஒரு அமெரிக்க டாலருக்கு எத்தனை இந்திய ரூபாய்கள் என்பதை வைத்தே ரூபாயின் மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது. உதாரணத்துக்கு, ஒரு டாலருக்கு 48 ரூபாய் என்றால் இந்திய ரூபாயின் மதிப்பு அதிகம் என்று அர்த்தம். அதே நேரத்தில் ஒரு டாலருக்கு 52 ரூபாய் என்றால், இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துவிட்டது என்று அர்த்தம். இப்போது ஐரோப்பாவில் நிலவும் பொருளாதாரப் பிரச்சனைகள் காரணமாக, அந்த நாடுகளின் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வதை வங்கிகளும், முதலீட்டாளர்களும் தவிர்த்து வருகின்றன. இதையடுத்து தங்கத்திலும், டாலர்களிலும் அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால் சர்வதேச அளவில் தங்கத்தின் விலையும் டாலரின் மதிப்பும் அதிகரித்து வருகின்றன. மேலும் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் வாங்க டாலரில் தான் பணப் பரிமாற்றம் செய்ய வேண்டும். ஆனால், டாலரில் மற்ற முதலீட்டாளர்கள் பணத்தை முதலீடு செய்து அதை போட்டி போட்டி வாங்க ஆரம்பித்திருப்பதால், அதன் விலை உயர்ந்து வருகிறது. இந்த விலை மேலும் உயர்வதற்கு முன் நாமும் அதை வாங்கிக் குவிப்பதே நல்லது என்று கச்சா எண்ணெய் இறக்குமதியாளர்களும் பணத்தை டாலர்களில் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர். இதனால் டாலருக்கு திடீரென டிமாண்ட் அதிகமாகிவிட்டது. எந்தப் பொருளுக்கு டிமாண்ட் அதிகமாகிறதோ அதற்கு தட்டுப்பாடும், இதனால் அதன் மதிப்பும் உயர்வது அதிகம். இது தான் டாலர் விஷயத்திலும் நடந்துள்ளது. டாலரின் மதிப்பு உயர்ந்துவிட்டதால், ஒரு டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பும் சரிந்துவிட்டது. அதே போல ஐரோப்பிய கரன்சியான யூரோ, சீன கரன்சியான யென் ஆகியவற்றின் மதிப்பும் சரிந்துவிட்டது. நேற்று மட்டும் டாலருக்கு இணையான ரூபாயின் மதிப்பு 81 காசு வரை குறைந்தது (அதாவது 0.8% வீழ்ச்சி). இன்று காலை நிலவரப்படி 1 அமெரிக்க டாலரைத் தந்தால், ரூ. 52.56 கிடைக்கும். இது கடந்த வாரத்தில் ரூ. 51 ஆகவே இருந்தது. இதற்கு முன் 1973ம் ஆண்டில் தான் இந்திய ரூபாயின் மதிப்பு 52.72 என்ற அளவுக்குச் சரிந்தது. 38 ஆண்டுகளுக்குப் பின் கிட்டத்தட்ட அதே கீழ்மட்ட அளவை இந்திய ரூபாயின் மதிப்பு எட்டியுள்ளது. (இந்த ஆண்டில் மட்டும் இந்திய ரூபாயின் மதிப்பு 17 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.) இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் சரிவதைத் தடுக்க தனது கையிருப்பில் உள்ள டாலர்களை சந்தையில் புழக்கத்தில் விட வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. மேலும் தன்னிடம் உள்ள அமெரிக்க டாலர்களை விற்பனை செய்யவும் ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வருகின்றன. ரிசர்வ் வங்கியால் முழுவதும் தடுக்க முடியாது: ஆனாலும் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருவதை முற்றிலுமாக தடுக்கும் சக்தி ரிசர்வ் வங்கியிடம் இல்லை என்று மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான துறையின் செயலாளர் கோபாலன் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், டாலருக்கு எதிரான ரூபாயின் வீழ்ச்சியை கட்டுப்படுத்துவதில் ரிசர்வ் வங்கியிடம் ஒரு அளவுக்குத் தான் சக்தி உண்டு. மதிப்பு சரிவதைத் முற்றிலும் தடுக்கும் ஆற்றல் அதனிடம் இல்லை என்றார். ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதால், இந்தியாவில் இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் கூடுதலாக செலவழிக்க வேண்டிய நிலை ஏற்படுத்துள்ளது. அதே நேரத்தில் ஏற்றுமதியாளர்களுக்கு ஓரளவு அதிக லாபம் கிடைக்கும். இறக்குமதி செய்யும் செலவு அதிகமாவதால், பெட்ரோலிய கச்சா எண்ணெய் வாங்க அதிக பணத்தை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் செலவழிக்க வேண்டி வரும் (மீண்டும் பெட்ரோல் விலை உயரும்?!). அதே போல மருந்துகள், ரசாயணம் (உரம் விலையும் மேலும் உயரலாம்), எலெக்ட்ரானிக் பொருட்கள், எண்ணெய் வித்துக்கள், ரப்பர் ஆகியவற்றை இறக்கமதி செய்ய நாடு அதிக பணத்தை செலவு செய்ய வேண்டி வரும். அதே நேரத்தில் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு லாபம் கிடைக்கும். ஜவுளி, நகைககள், நவரத்தினக் கற்கள் போன்ற இந்தியாவின் முக்கிய ஏற்றுமதிகளுக்கு போன வாரத்தில் கிடைத்ததை விட அதிகமான பணம் கிடைக்கும். ஆனால், மொத்தத் தேவையில் 80 சதவீத பெட்ரோலிய எண்ணெய்யை இறக்குமதி செய்யும் தேசம் இந்தியா. இந் நிலையில் ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்தால், பெட்ரோல், டீசலின் விலை மேலும் உயர்ந்து, அது பணவீக்கத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. பணவீக்கம் உயர்ந்தால் விலைவாசி மேலும் அதிகரிக்கும் (தமிழக மக்களுக்கு 'போனஸாக' பால் விலை, பஸ் கட்டணம் ஆகியவை வரலாறு காணாத அளவுக்கு ஏற்கனவே உயர்த்தப்பட்டுவிட்டது. இதனுடன் சேர்ந்து மேலும் மற்ற விலைகளும் உயர்ந்து வாட்டி எடுக்கும்) இந் நிலையில் சர்வதேச அளவில் நிலைமை சரியாகாவிட்டால், அடுத்த சில ஆண்டுகளில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு 54 ரூபாய் வரையில் கூட சரியலாம் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். ஆக, இதற்கு முந்தைய பாராவில் சொல்லியிருப்பது நடக்கலாம். மேலும் டாலரில் அதிகமாக முதலீடு செய்வதற்காக பங்குச் சந்தைகளில் போட்டு வைத்துள்ள பணத்தையும் பல முதலீட்டாளர்கள் எடுக்க ஆரம்பித்துவிட்டனர். இதனால், இந்திய பங்குச் சந்தையிலும் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.

ஐரோப்பிய பொருளாதார நெருக்கடி..''எப்ப பார்த்தாலும் நெகடிவா பேசி கடுப்பேத்துறான், யுவர் ஆனர்''!!

வட்டியைக் கூட கட்ட முடியாதவர்களுக்கு எல்லாம், கடன்களை அள்ளித் தந்து (subprime lending), திவால் ஆயின அமெரிக்க வங்கிகள். தாங்கள் திவால் ஆனதோடு, நாட்டின் பொருளாதாரத்தையும் கீழே இழுத்துவிட்டன. இதையடுத்து 2008ம் ஆண்டு அமெரிக்க பொருளாதாரம் உருக்குலைந்து, உலகளவில் எதிரொலித்து, லட்சக்கணக்கானோரின் வேலைகளைப் பறித்தது. பெருமளவில் பொருளாதாரத் தேக்கம் ஏற்படப் போகிறது என்ற அச்சம் பரவினாலும், நல்ல வேளையாக, அந்த பொருளாதார சிக்கலில் இருந்து அமெரிக்கா ஓரளவுக்கு வேகமாகவே வெளியே வந்து கொண்டுள்ளது. ஆனால், அமெரிக்கா தட்டுத்தடுமாறி எழுந்துவிட்டாலும், அட்லாண்டிக் கடலுக்கு அந்தப் பக்கம், ஐரோப்பாவில் நிலைமை மகா மோசமாக உள்ளது. கிரீஸ், போர்ச்சுகல், இத்தாலி, அயர்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, யூரோவின் மதிப்பைச் சரித்து, அந்த கரன்சியை பயன்படுத்தும் அனைத்து நாடுகளையும் சிக்கலில் இழுத்துவிட்டுவிட்டது. மேலே சொன்ன நாடுகளின் வளர்ச்சி விகிதம் என்னவாக உள்ளது என்று தெரியுமா.. கிட்டத்தட்ட 0%. அதாவது, இன்னும் கொஞ்சம் சறுக்கினால், மைனஸ் வளர்ச்சி விகிதத்துக்குள் போய்விடும் நிலைமை. இந்த 'பிக்ஸ்' (Portugal, Italy, Ireland, Greece and Spain நாடுகளின் முதல் எழுத்துக்களைச் சேர்த்து 'PIIGS' என்று 'அன்போடு' அழைக்கின்றனர் உலக சந்தைகளில்) நாடுகள் கிட்டத்தட்ட பொருளாதாரத் தேக்க நிலைக்குள் போய் விட்டன என்றே கருதப்படுகிறது. ஒட்டுமொத்த ஐரோப்பாவின் உற்பத்தி மதிப்பில் (GDP) 25 சதவீதத்தை பூர்த்தி செய்வது இந்த 'பிக்ஸ்' தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக, இங்கு ஏற்படும் பொருளாதாரத் தேக்கம் ஐரோப்பாவின் பலமிக்க பொருளாதார சக்திகளான ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்தையும் சேர்த்து பதம் பார்க்கப் போவதும் நிஜம். ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளின் முக்கியமான வருவாய், மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு செய்யும் ஏற்றுமதி மூலம் தான் வருகிறது. இப்போது, பெரும் கடன் சிக்கலில் உள்ள ஐரோப்பிய நாடுகள் இறக்குமதியை குறைக்க ஆரம்பித்துவிட்டதால், ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து நாடுகளின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகளின் ஏற்றுமதி மட்டுமல்ல, ஐரோப்பிய நாடுகளுக்கான அமெரிக்காவின் ஏற்றுமதியும் சரிந்துவிட்டது. ஆக, ஐரோப்பாவில் சில நாடுகளில் ஏற்பட்டுள்ள பிரச்சனை ஒட்டு மொத்த யூரோ நாடுகளையும் சரிய வைத்து, அமெரிக்காவையும் தாக்கிவிட்டது. அமெரிக்காவில் தங்களது உற்பத்தி மையங்களை வைத்துள்ள பல ஐரோப்பிய நிறுவனங்களும் உற்பத்தியைக் குறைத்துவிட்டன. இதனால், அமெரிக்காவில் ஐரோப்பிய நிறுவனங்கள் மூலம் உருவான வேலைவாய்ப்புகளும் குறைய ஆரம்பித்துவிட்டன. எனவே அட்லாண்டிக் கடலுக்கு அந்தப் பக்கமும் (அமெரிக்கா) இந்தப் பக்கமும் (ஐரோப்பா) பிரச்சனை. இந்தப் பிரச்சனைகள் அடுத்து ஆசியா உள்ளிட்ட நாடுகளின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தப் போவதும் உண்மை. ஆசிய நாடுகளுக்கு ஐரோப்பாவிலிருந்து வரும் பயணிகளின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்துவிட்டது. அடுத்ததாக ஆசிய நாடுகளில இருந்து இறக்கமதிகளையும் ஐரோப்பிய நாடுகள் குறைக்க ஆரம்பித்தால், இந்தியா உள்ளிட்ட எல்லா நாடுகளும் மீண்டும் ஒரு 2008ம் ஆண்டு பொருளாதார சிக்கலை சந்திக்க வேண்டி வரலாம். ''எப்ப பார்த்தாலும் நெகடிவாகவே பேசி கடுப்பேத்துறான், யுவர் ஆனர்'', என்று என் மீது கோபம் வரலாம். ஆனால், இந்தப் பொருளாதார சிக்கலில் இருந்து வெளியே வருவதற்கு ஒரு தீர்வையும் முன் வைக்கிறார்கள் மாபெரும் பொருளாதார நிபுணர்கள். அவர்கள் சொல்வது இது தான். ஐரோப்பிய மத்திய வங்கியான ECB நிறைய யூரோ கரன்சியை அச்சடிக்க வேண்டியது, அந்தப் பணத்தை வைத்து பிக்ஸ் நாடுகள் வெளியிடும் கடன் பத்திரங்களை (bonds) மொத்தமாக வாங்கிப் போட வேண்டியது, இதனால் கடன் பத்திரங்களின் மதிப்பு உடனடியாகக் கூடும், எப்போது கடன் பத்திரங்களின் மதிப்பு அதிகரிக்கிறதோ, அதில் முதலீடு செய்வோரின் ஆர்வம் அதிகமாகும், அதாவது அதிகமான பத்திரங்களை முதலீட்டாளர்கள் வாங்குவர், இதில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீடும் வந்து குவியும், இதனால் வங்கிகளுக்கு அரசு தரும் கடனுக்கான வட்டியைக் குறைக்கலாம், குறைந்த வட்டிக்கு பணம் கிடைத்தால், வங்கிகளும் குறைந்த வட்டிக்கு அதை நிறுவனங்களுக்கு, வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடியும், இதனால் சந்தையில் பணப் புழக்கம் பெருகும், பொருளாதார நெருக்கடியும் கட்டுக்குள் வரும். இது தான் பொருளாதார நிபுணர்கள் சொல்லும் பல தீர்வுகளில் ஒன்று. அரசே காசை அச்சடித்து பிரச்சனையை தீர்ப்பதா.. இது துக்ளக் யோசனை மாதிரியல்லவா இருக்கிறது என்று நினைக்காதீர்கள். 2008ம் ஆண்டு பொருளாதார சிக்கலின் உச்சத்தில் அமெரிக்கா இருந்தபோது அந் நாட்டின் பெடரல் ரிசர்வ் வங்கி இதைத் தான் செய்தது. டாலர்களை அச்சடித்து குவித்து, தனது பொருளாதார சிக்கலை ஓரளவுக்குக் கட்டுக்குள் கொண்டு வந்து காட்டியது. ஆனால், அமெரிக்கா ஒரே நாடு.. ஒரே டாலர்.. அச்சடித்து தீர்த்துவிட்டார்கள். ஆனால், யூரோ ஒரு நாட்டுக்கு மட்டும் சொந்தமானதல்ல. கூடுதலாக அச்சடிக்கப்படும் யூரோவால் ஜெர்மனி, பிரான்ஸ், ஹாலந்து போன்ற இப்போது பொருளாதார பிரச்சனை இல்லாத நாடுகளிலும் விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகள் வரலாம். அதாவது சந்தையில் பணம் நிறைய இருந்தால், பொருட்களின் விலை உயரும். 'பிக்ஸ்' நாடுகளைக் காப்பாற்ற நாங்கள் ஏன் விலை கொடுக்க வேண்டும் என இந்த நாடுகள் எதிர்ப்புத் தெரிவிக்கலாம். இதனால் வேறு ஏதாவது தான் செய்ய வேண்டும் என்று மண்டையை குழப்பிக் கொண்டுள்ளனர் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள்.

வியாழன், 5 ஜனவரி, 2012

எத்தனை 'சி' பையில் இருந்தாலும் மன அமைதிக்கு இந்த 'சி' முக்கியம்!

ஓடியாடி அலையும் உடலுக்கு சத்தான உணவுகள் அவசியம். அந்த உணவுகளில் இயற்கையாகவே எண்ணற்ற உயிர்சத்துக்களும், தாதுப்பொருட்களும் அடங்கியுள்ளன. உடலின் வளர்ச்சிக்கும், நோய் தாக்குதலில் இருந்து தப்பிக்கவும் உயிர்ச்சத்துக்கள் எனப்படும் வைட்டமின்கள் அவசியம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை எல்லோருடைய உடல் வளர்ச்சிக்கும் சமச் சீரான வைட்டமின்கள் தேவை. இந்த வைட்டமின்கள் நிறைந்த உணவை சரியாக எடுத்துக்கொள்ளாவிட்டால் உடல் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். நோய்களும் சொல்லாமல் கொள்ளாமல் வந்து ஒட்டிக்கொள்ளும்.அதனால், என்ன வைட்டமின் குறைந்தால் என்ன நோய்வரும், எவற்றில் அந்த வைட்ட மின்கள் உள்ளன என்பது உணவியல் வல்லுநர்கள் கூறிய அறிவுரையை தெரிந்து கொள்வோம். கண்பார்வை தரும் ‘ஏ’ முருங்கைக் கீரை, பச்சைக் காய்கறிகள், வெண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், மீன் எண்ணெய் ஆகியவற்றில் வைட்டமின் `ஏ’ அதிகம் காணப்படுகிறது. கருப்பையில் கரு வளர்வதற்கும், பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வளரவும் இந்த வைட்டமின் தேவை. எலும்புகளும் பற்களும் வளர இதுதான் முக்கியக் காரணம். இந்த உயிர்சத்து குறைந்தால் கண் பார்வை மங்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இதய பாதிப்பை நீக்கும் ‘பி’ கைக்குத்தல் அரிசி, இறைச்சி, முட்டை, காய்கறிகள் ஆகியவற்றில் வைட்டமின் பி அதிகம் உள்ளது. வைட்டமின் `பி’ குறைந்தால் வயிற்று மந்தமும், அஜீரணமும், ரத்த சோகையும் ஏற்படலாம். பக்கவாதம், இதய பாதிப்பு ஏற்படவும் சாத்தியக் கூறுகள் அதிகம். அத்துடன், வாயில் புண் உண்டாகும். மன அமைதி தரும் ‘ சி ‘ ஆரஞ்சுப்பழம், திராட்சை, சமைக்காத பச்சைக் காய்கறிகள், நெல்லிக்காய், எலுமிச்சை, தக்காளி, கொய்யா, உருளை, வெற்றிலை, பப்பாளி ஆகியவற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இந்த பழங்களை வாங்கி உண்பதன் மூலம் வைட்டமின் சி சத்தினை உடலில் தக்கவைக்கலாம். வைட்டமின் `சி’ குறைந்தவர்கள் மன அமைதி இழந்து காணப்படுவர். அவர்களின் முகத்தில் சிடு சிடுப்பு வந்துவிடும். இவர்களின் எலும்புகள் பலம் குறையக்கூடும். பல் ஈறு வீங்கி பற்கள் ஆட்டம் காணலாம். பல் ஈறுகளில் ரத்தம் கசியும். தோலில் ரத்தப் போக்கு ஏற்படும். எலும்புகளுக்கு பலம் தரும் ‘டி’ வைட்டமின் `டி’ போதிய அளவு இல்லாத குழந்தைகளின் கால்கள் வில் போல் வளைந்துவிடும். வயிறு ஊதிவிடும். வைட்டமின் `டி’ இல்லாவிட்டால் எலும்புகள் வலுவிழந்துவிடும். பற்கள் கொட்டிவிடும். போதுமான சூரிய வெளிச்சம் குழந்தைக்குக் கிடைத்தால் அதன் உடலே வைட்டமின் `டி’யை தயாரித்துக்கொள்ளும். முட்டை, மீன், வெண்ணெய் ஆகியவற்றிலும் வைட்டமின் `டி’ அதிகம் உள்ளது. மலட்டு தன்மையை நீக்கும் கோதுமை, கீரை, பச்சைக் காய்கறிகளை அதிகம் சேர்த்தால் வைட்டமின் `ஈ’ சமச்சீர் விகிதத்தில் கிடைக்கும். வைட்டமின் `ஈ’ குறைந்தால் தசைகள் பலவீனமடையும். மலட்டுத்தன்மையையும் உண்டாக்கும். நம் உடல் ஆரோக்கியத்திற்கு அனைத்து வைட்டமின்களும் தேவை எனவே, ஆரோக்கியமான உணவை உண்ணவேண்டும் என்பதே உணவியல் வல்லுநர்களின் அறிவுரையாகும்.

செவ்வாய், 3 ஜனவரி, 2012

முன்னாடி விளையாடினால் பின்னாடி நல்லா இருக்கும்!

திருமணத்திற்கு பின்னர் கணவன் மனைவி இடையே தாம்பத்யத்தில் ஏற்படும் மகிழ்ச்சியானது படுக்கையறையோடு நின்றுவிடுவதில்லை. ஆங்காங்கே இலைமறை காயாக சமையலறையில் எழும் சின்ன சின்ன சங்கீதமும், கிணற்றடியில் யாருக்கும் தெரியாமல் நிகழும் சின்ன ஸ்பரிசமும் தம்பதியரை உற்சாகத்திற்கு கொண்டு செல்லும். உறவு மட்டுமல்லாது வீட்டுக்குள் தம்பதியருக்கிடையே நிகழும் முன்விளையாட்டுகளும் அவசியம் என்கின்றனர் உளவியலாளர்கள். புதுமண தம்பதியர்களுக்கு உறவைப் பற்றி ஒரு எதிர்பார்ப்பும், குறுகுறுப்பும் இருந்து கொண்டேதான் இருக்கும் அதனால்தான் கோவில் குளத்திற்கோ, திரைப்படங்களுக்கோ தம்பதியர்கள் தனியாக சென்றுவர வேண்டும் என்று வற்புறுத்தினர் முன்னோர்கள். திருமண தினத்தன்று நிகழும் சின்ன சின்ன வேடிக்கை, விளையாட்டுக்களும் இத்தகையதே. தண்ணீர் குடத்திற்குள் ரொமான்ஸ் ஒரு சின்ன குடத்திற்குள் மஞ்சள் தண்ணீரை ஊற்றி அதனுள் சிறிய மோதிரத்தைப் போட்டு புதுமணத்தம்பதியரை எடுக்கச் சொல்லி அனைவரும் வற்புறுத்த வெட்கத்தால் நெளிந்துகொண்டே இருவரும் கைகளை குடத்தினுள் விட அந்த சின்ன மோதிரத்தை தேடும்போதே இருவரின் கைகளும் உரசிக் கொள்ளுமே,அப்பொழுதே தொடங்கிவிடுகிறது காதலின் முன்விளையாட்டு. காதல் பாடல்கள் இது கொஞ்சம் ஒல்டு பேசன்தான் என்றாலும் அவசியமானது. காதல் பாடல்களை மெதுவாய் மனைவியின் காதுகளுக்கு மட்டுமே கேட்குமாறு பாடலாம். அதன் மூலம் உங்களின் எண்ணத்தை நீங்கள் வெளிப்படுத்தியத போலவும் ஆச்சு. உங்கள் மனைவியின் உற்சாகத்தை தூண்டிவிட்டது போலவும் ஆச்சு. என்ன பாட ரெடியாகிட்டீங்களா? சமையலறை சங்கீதம் உண்மையிலேயே ரொமான்ஸ் செய்ய ஏற்ற இடம் எதுவென்றால் அது சமையலறைதான். ஏனென்றால் அதில்தான் மையல் ஒளிந்திருக்கிறதே. அவ்வப்போது சமையலில் உதவுவது போல சென்று சின்ன சின்ன ஸ்பரிசங்களின் மூலம் உங்களின் எண்ணத்தை மெதுவாக வெளிப்படுத்தலாம். அசத்தலான ஆல்பம் போராடிக்கும் தருணங்களில் திருமண ஆல்பம், ஹனிமூன் போட்டோக்களை எடுத்து பார்த்து அந்த இன்பத்தருணங்களை மறுபடியும் கண்முன் கொண்டுவரலாம். நெருக்கமாக அமர்ந்து திருமண நாளில் நடந்த விளையாட்டுக்களை வீடியோவில் கண்டு ரசிக்கலாம். சின்னதாய் ஒரு ஷாப்பிங் வீட்டிற்கு அருகில் உள்ள ஷாப்பிங் மால்களுக்கு சென்று உங்கள் வாழ்க்கைத்துணைக்கு ஏற்ற பொருட்களை சர்ப்ரைசாக வாங்கித்தருவது காதல் உணர்வுகளை அதிகரிக்கும். விடுமுறை கொண்டாட்டம் எத்தனைநாளைக்குதான் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடைப்பது என மனைவிக்கு நினைப்பு வரும். அதேபோல் அலுவலகம், வீடு என ஒரே மாதிரியாக இருப்பதும் போராடிக்கும். எனவே தனியாக நேரம் ஒதுக்கி குளிர் பிரதேசங்களுக்கு ஜாலியாய் ஒரு டிரிப் போய் வரலாம். சின்ன சின்ன காமெடி இரவு உணவுக்குப்பின்னர் மனதிற்கு பிடித்த புத்தகத்தை படித்தவாறு அதில் உள்ள நகைச்சுவை துணுக்குகளை பரிமாறலாம். தொலைக்காட்சியின் நகைச்சுவை காட்சிகளை ஓடவில்லை மனதை நெருக்கும் அழுத்தங்களில் இருந்து விடுதலை பெறலாம். வேடிக்கையான தோல்வி செஸ், கேரம்போர்டு, கார்ட்ஸ் போன்ற விளையாட்டுகளை ரொமான்ஸ்சாக தொடங்கலாம். ஜெயிக்கும் தருணத்திலும் தோல்வியை தழுவி விட்டுக்கொடுப்பது வேடிக்கையோடு உங்கள் மீதான காதலை அதிகப்படுத்தும்.

காதலிக்குப் பிடித்த கலர் பச்சையா..?-கொடுத்து வச்ச ஆளு நீங்க!

வர்ணங்கள் மனிதர்களின் குணத்தை பிரதிபலிக்குமாம். ஒருவருக்கு பிடித்த கலரைக் கொண்டு அவருடைய குணத்தை கண்டுபிடித்து விடலாம் என்கின்றனர் உளவியலாளர். அதேபோல் அவர்கள் வைத்திருக்கும் கார்களின் நிறங்கள் கூட அவர்களின் மனதையும், குணத்தையும் பிரதிபலிக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள். காதலில் நீங்கள் எப்படி என்பதைக் கூட உங்களுக்குப் பிடித்த கலரை வைத்து கண்டுபிடித்து விடலாமாம். ஆய்வாளர்கள் சொன்னது சரிதான என்பதை படித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்களேன். சந்தோஷம் தரும் மஞ்சள் மஞ்சள் நிறப் பிரியர்களின் காதல் ஆசைகள் அளவுக்கு மீறியதாக இருக்கும். அத்தனை ஆசைகளையும் இவர்களது காதல் இணையால் நிறைவேற்ற முடியாது. அதனால் இந்த நிற மனிதர்களின் காதலுக்கு ஜோடி கிடைப்பது கஷ்டம். காதலுக்காக உயிரைக்கூட கொடுப்பேன் என்பார்கள். ஆனால் பர்சில் இருக்கும் பணத்தைக்கூட செலவழிக்க யோசிப் பார்கள். இவர்கள் அறிவாளியாகவும், கொள்கையில் பிடிப்பு கொண்டவர்களாகவும் இருப்பதால் கல்யாண வாழ்க்கை என்று வந்துவிட்டால், தனது ஜோடியை எல்லா விதத்திலும் சந்தோஷப்படுத்துவார்கள். நினைத்ததை முடிக்கும் சிவப்பு சிவப்பு வர்ணத்தை விரும்புபவர்கள் காதல் உணர்வில் செம ஸ்பீடா இருப்பார்களாம். அளவிட முடியாத ஆசைகளைக் கொண்டிருப்பார்கள். தன்னுடைய கற்பனையில் கண்டதை எல்லாம் நிறைவேற்ற வேண்டும் என்று துடிப்பார்கள். இவர் விரும்பும் ஜோடிக்கும் பிடித்த நிறம் சிவப்பு என்றால், இவர்கள் வாழ்க்கையை திகட்ட திகட்ட அனுபவிப்பார்கள். ஆனால் காதல் விஷயத்தில் இவர்களின் பிடிவாத குணம், சில நேரங்களில் மிகப்பெரிய சிக்கலை உருவாக்கிவிடும். இவர்கள் ஆசைப்பட்டதை அடையாமல் விட மாட்டார்கள். காதல் மன்னன் பிங்க் பிங்க் நிறத்தை விரும்புபவர்கள் கணக்கற்ற காதல் கனவுகள் கொண்டவர்களாக இருப்பார்கள். தினமும் இரண்டு மூன்று பேருக்காவது அவர்கள் ரூட் விடுவார்களாம். காதல் விஷயங்களை படிப்பதிலும், அதை செயல்படுத்திப்பார்த்து உண்மையா, பொய்யா என்று கண்டறிவதிலும் மெனக் கெடுவார்கள். தங்கள் காதல் இணையை ரொம்பவும் புகழ்ந்து, கனவு காணவைத்து தான் நினைப்பதை சாதிக்க முயற்சிப்பார்கள். பிங்க் நிறத்தை விரும்பும் பெண்கள் தனித்துவம் பெற்றவர்களாக இருப்பார்கள். ஆண்களை எளிதில் நம்பி ஏமாந்துவிட மாட்டார்கள். காதலில் திளைக்கும் பச்சை: பச்சையை விரும்பும் பெண்களின் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிவது கடினம். இவர்கள் அதிகம் பேசமாட்டார்கள். காதல் உணர்வுகளையும் எளிதாக வெளிப்படுத்தமாட்டார்கள். ஆனால் இந்த நிறத்தை விரும்பும் பெண்களிடம் காதல் உணர்வுகள் அதிகம் இருக்கும். காதலரே கணவர் ஆனாலும் காலம் முழுக்க அவரோடு காதல் கொள்ள துடிப்பார்கள். முத்த மழையில் குளிப்பாட்டி விடுவார்கள். புதுமையை விரும்பும் நீலநிறம் நீல நிறத்தை விரும்பும் பெண்கள் நாலைந்து ஆண்களை ஆராய்ந்து, இறுதியில் அதில் ஒருவரை தேர்வு செய்து காதலிப்பார்கள். `தாம்பத்ய’ விஷயத்திலும் இவர்கள் புதுமை விரும்பிகளாக இருப்பார்கள். இந்த நிறத்தை விரும்புகிறவர்களிடம் காதல் உணர்வு அதிக மிருக்கும். நீல நிறத்திற்குரிய ஆண்களிடமும் இதே இயல்புகள் இருக்கும். சுயநலவாதியான பர்பிள் பர்ப்பிள் வர்ணத்தை விரும்புபவர்கள் காதல் என்றாலும், கல்யாணம் என்றாலும் தனது எதிர்காலத்திற்கு அதன் மூலம் எவ்வளவு கிடைக்கும் என்று கணக்கு போடும் சுயநலவாதிகள். கல்யாணத்திற்கு பெண் பார்த்தாலும் அவளிடம் தனி யாகப் பேசி தன் எதிர்பார்ப்புகளை எல்லாம் `டன்` கணக்கில் கொட்டுவார்கள். அதைக் கேட்டு அதிர்ந்துபோகும் பெண், `அவரோடு தன்னால் வாழ்க்கை நடத்த முடியாது` என்று கூறிவிடுவாள். அதனால் இந்த நிறத்தை விரும்புகிறவர்களுக்கு காதல் மட்டுமல்ல, கல்யாணமும் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கும். தத்துவம் பேசும் ஆரஞ்ச் ஆரஞ்ச் வர்ண பார்டிகளுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். காதல் இவர்களுக்கு சுட்டுப்போட்டாலும் வராது. யாராவது காதல் தூதுவிட்டாலும் தத்துவம் பேசி விரட்டிவிடுவார்கள். அதற்கு போய் யாராவது நேரத்தை செலவிடுவார்களா என்று தத்துவம் பேசுவார்கள். இந்த நிறத்தை விரும்பும் ஆண்களை, பெண்கள் சாமியார் என்பார்கள். மன அழுத்தம் தரும் கறுப்பு கறுப்பு நிறத்தை விரும்புபவர்கள் யாரிடமும் மனம்விட்டுப் பேச மாட்டார்கள். இறுக்கமான மனிதர்களாக இருப்பதால் இவர்கள் காதல் பார்வை பார்த்தாலும், எதிர்பாலினம் நம்பிக்கை கொள்ளாமல் நழுவிச்சென்றுவிடும். காதல் இவர்களுக்கு பெரும்பாலும் கைகூடாது.மன அழுத்தம் இவர்களிடம் அதிகம் உண்டு. அதை தீர்க்க சரியான மருந்து தாம்பத்ய உறவு கொள்வதுதான் என்று நம்புவதால் விரைவில் திருமணம் முடிக்க ஆசைப்படுவார்கள். காதலை வெறுக்கும் வெள்ளை வெள்ளை நிறத்தை விரும்புபவர்கள் `காதலாவது கத்தரிக்காயாவது..’ என்று எப்போதும் காதலுக்கு எதிராகவே பேசுவார்கள். காதலிப்பவர்களை தூற்றவும் செய்வார்கள். இதனை விரும்பும் ஆண்களைப் பார்த்தாலே பெண்கள் நாசூக்காக நழுவிப்போய் விடுவார்கள். ஆனால் குடும்ப வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

ஏப்ரல் 4ம் தேதி 10ம் வகுப்புத் தேர்வு: பள்ளிக்கல்வி தேர்வுத் துறை அறிவிப்பு!

சென்னை: வரும் ஏப்ரல் மாதம் 4ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் துவங்குகிறது என்று பள்ளிக்கல்வி தேர்வுத் துறை அறிவித்துள்ளது. நடப்பு கல்வியாண்டில் அனைத்துப் பள்ளிகளிலும் சமச்சீர் கல்வி அமல்படுத்துவதில் ஏற்பட்ட குளறுபடிகளால் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் தாமதமாக துவங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பாடங்கள் முழுமையாக நடத்தப்படாதது தான் அதற்கு காரணம். வழக்கமாக எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு மார்ச் மாத இறுதியில் துவங்கும். ஆனால் இந்த ஆண்டு தாமதமாக ஏப்ரல் மாதம் 4ம் தேதி துவங்குகிறது தேர்வு அட்டவணை விவரம் வருமாறு, 4-4-12 : தமிழ் முதல் தாள் 9-4-12: தமிழ் இரண்டாம் தாள் 11-4-12: ஆங்கிலம் முதல் தாள் 12-4-12: ஆங்கிலம் இரண்டாம் தாள் 16-4-12: கணிதம் 19-4-12: அறிவியல் 23-4-12: சமூக அறிவியல் இந்த ஆண்டு சுமார் 11 லட்சம் மாணவ, மாணவியர் சமச்சீர் பாடத்திட்டத்தின்படி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 2 ஜனவரி, 2012

சுடுநீர் பாத்டப்பில் உறவு கொண்டால் ஆணுறை தேவையில்லையா?

உறவு கொள்வதில் வித்தியாசத்தை விரும்புவோர் நிறைய. ஒவ்வொருவருக்கும் ஒரு வித்தியாசம், ஸ்டைல் இருக்கும். அதில் ஒன்று ஷவரில் குளித்தபடி உறவு கொள்வது, பாத்டப்பில் உறவு கொள்வது. அதேசமயம், சுடுநீரில் உறவு கொள்ளும்போது எந்தவிதமான கருத்தடை சாதனமும் தேவையில்லை. சுடுநீரில் உறவு கொள்ளும்போது கருத்தரிக்க வாய்ப்பில்லை என்று சிலர் கருதுகின்றனர். அது உண்மையா? டாக்டர்கள் சொல்வதைக் கேட்போம். எந்த முறையில் உறவு கொண்டாலும் நிச்சயம் கருத்தடை சாதனங்கள் அவசியம் - கருத்தரிப்பதை விரும்பாவிட்டால். சுடுநீரில் குளித்தால் கருத்தடை சாதனம் தேவையில்லை என்பது வினோதமாக இருக்கிறது. ஆனால் உண்மையில் அது தவறு. சுடுநீராக இருந்தாலும், குளிர்ச்சியான நீராக இருந்தாலும் விந்தனு பெண்ணுறுப்பின் வழியாக செல்வதை முறையான கருத்தடை சாதனத்தைத் தவிர வேறு எதுவுமே தடுக்க முடியாது. மேலும், ஆணுறுப்பு மற்றும் பெண்ணுறுப்பின் வழியாக பரவும் நோய்களைத் தடுக்கக் கூடிய தன்மையும் சுடுநீருக்குக் கிடையாது. எனவே ஆணுறை உள்ளிட்ட கருத்தடை சாதனங்கள் அவசியம் என்கிறார்கள் டாக்டர்கள். அதேபோல சுடுநீரில் குளித்தால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும், ஆணுறுப்பில் பாதிப்பு ஏற்படும், விந்தனு வளர்ச்சி பாதிக்கப்படும் என்ற அச்சம் சிலருக்கு உண்டு. இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், இதில் பாதி உண்மை உள்ளது. விந்தனு உற்பத்திக்கும், உடல் சூட்டுக்கும் தொடர்புள்ளது. உடல் சூடு அதிகரிக்கும்போது விந்தனு உற்பத்தி பாதிக்கப்படும். நமது உடலின் பிற பகுதிகளில் உள்ள வெப்ப நிலையை விட வி்ந்துப் பையின் வெப்ப நிலை 5 டிகிரி குறைவாகவே இருக்கும். அதற்கேற்றபடி விந்துப் பையானது தனது வெப்ப நிலையை சரிவிகித நிலையில் வைத்துக் கொள்ளும். அங்கு வெப்பம் அதிகரிக்கும்போது வி்ந்தனு உற்பத்தி நிச்சயம் பாதிக்கும் என்கிறார்கள் டாக்டர்கள்.

எதுவாக இருந்தாலும் கேட்டுச் செய்ங்க!

பெரும்பாலான பெண்கள் படுக்கையறையில் தங்களின் கணவரிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை அறிந்த கொள்ள முடிவதில்லை. இதன் காரணமாகவே பிரச்சினைகள் எழுகின்றன. மனைவியின் விருப்பங்களை நிறைவேற்ற கணவன் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை தெரிவித்துள்ளனர் பாலியல் நிபுணர்கள். மென்மையாய் கசியும் இசை படுக்கையறையில் இசைக்கு தனித்தன்மை உண்டு. நீல ஒளி உமிழும் படுக்கையறையில் மென்மையான இசையை கசியவிட்டால் அது பெண்களுக்கு மிகவும் பிடிக்குமாம். அதீத ஒலி எழுப்பும் இரைச்சலான இசையை ஒலிபரப்ப வேண்டாம். அது சிக்கலை ஏற்படுத்திவிடும் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் படுக்கையறையின் முக்கிய எதிரியே செல்போன்தான். எனவே படுக்கையறைக்கு செல்லும் முன் செல்போனை ஆஃப் செய்ய வேண்டியதுதான் முதல் பணி. இல்லையெனில் படுக்கையறையில் தொண தொணக்கும் செல்போன் ஒலியும், அதை தொடர்ந்து உங்களின் பேச்சும் மனைவிக்கு எரிச்சலை ஏற்படுத்திவிடுமாம். பிறகு என்ன செய்தாலும் சமாதானப்படுத்த முடியாது என்கின்றனர் உளவியலாளர்கள். அனுமதி அவசியம் தனக்குரிய பெண்ணாய் இருந்தாலும் அனுமதி பெறவேண்டியது அவசியம் என்று பெண்கள் எதிர்பார்க்கின்றனர். இன்று உன்னை முத்தமிடலாமா? இன்று உனக்கு சம்மதமா? இப்படி ஏதாவது கேட்டு வைப்பது நல்லது என்கின்றனர் உளவியலாளர்கள். தொடக்கம் போல இறுதி முத்தம் என்பது உறவுக்கான திறவுகோல் என்பார்கள். நெற்றியில் தொடங்கி கண்கள், கண்ணம், முகவாய், இதழ் என படிப்பாய் உற்சாகப்படுத்த வேண்டும் என்றும் எதிர்பார்ப்பார்கள். தொடக்கத்தைப்போலவே முடிவிலும் முத்தம் வேண்டும் என்பது பெண்களின் எதிர்பார்ப்பு. சுவாசப் புத்துணர்ச்சியோடு முத்தம் தரவேண்டும். செல்லப் பெயர் சூட்டுங்கள் படுக்கையறையில் செல்லப் பெயர் வைத்து அழைக்க வேண்டும் என்றுதான் அநேகம் பேர் எதிர்பார்க்கின்றனராம். தேவையில்லாத பேச்சுக்களை விடுத்து செல்லமாய் கொஞ்சவேண்டும். உடலை வருடவேண்டும், கொண்டாட வேண்டும் என்றுதான் பெரும்பாலான பெண்கள் எதிர்பார்க்கின்றனராம். பெண்களுக்கு மூட் இல்லை என்றால் கவலை வேண்டாம். உங்கள் கைகளால் இதமாக பற்றி மென்மையாய் தலையை வருடுங்கள். அந்த இதமான வருடல் பெண்மையின் மென்மையை கிளறச்செய்யும். திருப்தியுறச் செய்யுங்கள் ஆண்களின் ஆசை சில நிமிடங்களில் முடிந்துவிடும். ஆனால் பெண்கள் அப்படியல்ல. சில முத்தங்கள், சில நிமிட ஸ்பரிசம் அதனால் ஏற்படும் கிளர்ச்சியோடு சிலநிமிடங்களில் ஏற்படும் உச்சநிலை என ஒரு தொடர்கதையாக நிகழும். எனவே திருப்தியுறும் வரை அவர்களுக்கு தேவையானவைகளை செய்யவேண்டும் என்கின்றனர் உளவியலாளர்கள்.

பொங்கல் பண்டிகைக்கு 1000 சிறப்பு பஸ்கள்!

சென்னை : பொங்கல் பண்டிகைக்கு 1000 சிறப்பு பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 12 மற்றும் 13-ஆம் தேதிகளில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் அன்றைய தினம் சுமார் 1000 சிறப்பு பஸ்கள் கோயம்பேட்டில் இருந்து இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து நெல்லை, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, நாகர்கோவில், கும்பகோணம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், சேலம், கோயம்புத்தூர் உள்ளிட்ட எல்லா பகுதிகளுக்கும் சிறப்பு பஸ்கள் விடப்படுகிறது.

தினமும் 3 கப் டீ குடித்தால் மாரடைப்பை தவிர்க்கலாம்!

லண்டன் : அடிக்கடி டீ குடிப்பது நல்லதல்ல என சிலர் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கின்றனர். ஆனால், தினமும் 3 கப் பிளாக் டீ குடித்தால் மாரடைப்பு, சர்க்கரை நோயிலிருந்து தப்பிக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கேரி ருக்ஸ்டன் மற்றும் பமீலா மேசன் தலைமையிலான ஆய்வு குழுவினர் நோய் வராமல் தடுப்பதில் பிளாக் டீக்கு உள்ள பங்கு பற்றிய ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு முடிவு குறித்து இங்கிலாந்தின் ஊட்டச்சத்து பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு: பிளாக் டீ குடிக்காதவர்களைவிட குடித்தவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது ஆய்வில் தெரிகிறது. அதாவது, ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுவதை தவிர்க்கவும், ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கவும், ரத்தக் குழாய் சுருங்கி ரத்த ஓட்டம் தடைபடுவதை தவிர்க்கவும் பிளாக் டீ உதவுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த 3 விதமான பாதிப்புகள் காரணமாக இதயத்துக்கு ஆக்சிஜன் செல்வது தடைபட்டு மாரடைப்பு ஏற்படுவது குறிப்பிடத்தக்கது. இதுதவிர 2ம் நிலை சர்க்கரை நோய் ஏற்படுவதையும் டீ தடுப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். ÔÔதினமும் டீ குடிக்காதவர்களைவிட 3 முதல் 6 கப் வரை டீ குடிப்பவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு 30 முதல் 57 சதவீதம் வரை குறையும். டீயில் உள்ள ஒருவித நோய் எதிர்ப்பு பொருளே இதற்குக் காரணம்ÕÕ என ருக்ஸ்டன், மேசன் தெரிவித்தனர்.