திங்கள், 2 ஜனவரி, 2012

பொங்கல் பண்டிகைக்கு 1000 சிறப்பு பஸ்கள்!

சென்னை : பொங்கல் பண்டிகைக்கு 1000 சிறப்பு பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 12 மற்றும் 13-ஆம் தேதிகளில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் அன்றைய தினம் சுமார் 1000 சிறப்பு பஸ்கள் கோயம்பேட்டில் இருந்து இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து நெல்லை, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, நாகர்கோவில், கும்பகோணம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், சேலம், கோயம்புத்தூர் உள்ளிட்ட எல்லா பகுதிகளுக்கும் சிறப்பு பஸ்கள் விடப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக