ஞாயிறு, 31 ஜனவரி, 2010

காவல் நிலையத்தில் செல்போனுக்கு தடை


கோவை : கோவை மாநகரில் 15 போலீஸ் நிலையங்கள் உள்ளன. இங்கு போக்குவரத்து, புலனாய்வு, குற்றப்பிரிவு, சட்டம் ஒழுங்கு பிரிவுகள் இயங்கி வருகின்றன. சில காவல்நிலையங்களில் புகார் அளிக்க வருபவர்களை காக்க வைத்து விட்டு, போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் வெகுநேரம் செல்போனில் பேசிக்கொண்டிருப்பதாக போலீஸ் கமிஷனர் சிவனாண்டிக்கு புகார்கள் வந்தன. மேலும் சிக்னல்களில் நிற்கும் போலீசார் பல நேரங்களில் செல்போன் பேசிக்கொண்டு வாகனங்களை கண்காணிக்காமல் இருப்பதாக புகார் கூறப்பட்டது.

இதையடுத்து கமிஷனர் சிவனாண்டி நேற்று வயர்லெஸ் மூலம் அனைத்து காவல்நிலையங்களுக்கும் பிறப்பித்த உத்தரவு:

போலீஸ் நிலையங்களில் அதிகாரிகள் முதல் காவலர் வரை யாரும் செல்போன் பயன்படுத்தக்கூடாது. போலீஸ் நிலைய காம்பவுண்டுக்குள் நுழைந்ததும் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிடவேண்டும். பணி தொடர்பான அவசர தகவல்களுக்கோ மற்ற தேவைகளுக்கோ வயர்லெசையும், லேண்ட் லைன் போனையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

சாலைகளில் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் இருக்கும் போலீசாரும் செல்போன் பேசக்கூடாது. இன்று (நேற்று) முதல் இதை கட்டாயமாக பின்பற்ற வேண்டும். மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போலீஸ் நிலையங்களில் செல்போன் பேசுவதை நுண்ணறிவு பிரிவினர் கண்காணிப்பார்கள்.
இவ்வாறு உத்தரவு பிறப்பித்தார்.

கல்வி கட்டணம் செலுத்துவதற்கு கற்பு ஏலம்


சிட்னி : கல்லூரி கட்டணம் செலுத்த பணம் இல்லாத ஆஸ்திரேலியாயைச் சேர்ந்த 19 வயது இளம் பெண், தனது கற்பை ஏலம் விட முன்வந்துள்ளார்.

இதுகுறித்து ஐநீடு டாட் கோ டாட் என்இசட் என்ற இணையதளத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ÔÔகல்லூரி கட்டணத்தை செலுத்த பணம் இல்லாததால் என் கன்னித் தன்மையை விற்க முடிவு செய்துள்ளேன். ஏலத்தில் அதிகபட்ச தொகை வழங்க முன்வருபவருடன் பாதுகாப்புடன் செக்ஸ் வைத்துக் கொள்ள தயாராக இருக்கிறேன். இதுவரை யாருடனும் செக்ஸ் வைத்துக் கொள்ளவில்லைÕÕ என அவர் தெரிவித்துள்ளதாக சிட்னி மார்னிங் ஹெரால்டு இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பட்டுப்புழு விவசாயிகளுக்கு எஸ்எம்எஸ்ஸில் விலை விவரம்


பெங்களூர் : கர்நாடக மாநில பட்டுப்புழு விவசாயிகளுக்கு கூட்டுப்புழு விலை, பட்டு நூல் விலை, மழை புயல் பற்றிய விவரங்கள் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கர்நாடக பட்டுப்புழு வளர்ப்புத்துறை அமைச்சர் வேங்கடரமணப்பா கூறியதாவது:
விவசாயிகள் ஒரு ஆண்டு முழுக்க கூட்டுப்புழு விலை, பட்டு விலை மற்றும் பட்டுப்புழு வளர்ப்பு தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ள ரூ.600 சந்தா செலுத்த வேண்டும். சந்தா செலுத்தும் பொழுது தங்கள் மொபைல் தொலைபேசி எண்ணையும் குறிப்பிட வேண்டும். இந்த வசதி மிகவும் எளிமையான முறையில் செயல்படுத்தப்படுகிறது.
சந்தா செலுத்திய விவசாயிகளுக்கு ராமனகரம், சன்னப்பட்னம், சித்தலஹட்டா ஆகிய நகரங்களில் உள்ள மார்க்கெட்டுகளில் இருந்து விலை விவரங்கள் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும். கூட்டுப்புழுக்களின் விலை விவரங்களோடு பட்டுப்புழு வளர்ப்பு மற்றும் விவசாயிகளுக்கு தேவையான பருவ நிலை, உஷார் அறிவிப்புகள் ஆகியவையும் மொபைல் மூலமாகவே விவசாயிகளுக்கு கிடைக்கும்.

இது போன்ற மொபைல் தகவல் முறை மகாராஷ்டிர மாநிலத்தில் அமல் செய்யப்படுகிறது. அங்கு ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட விவசாயிகள் விலை விவரங்களுக்காக சந்தா செலுத்துகின்றனர்.

கர்நாடகாவில் உள்ள ராமனகரம், சித்தலஹட்டா ஆகிய இரண்டு கூட்டுப்புழுசந்தைகளிலும் இடைத் தரகர்களை ஒழிக்க சிசிடிவி அமைப்பு ஏற்படுத்தப்படும். இடைத்தரகர்கள் மார்க்கெட்டுக்குள் நுழைந்ததும் சிசிடிவி மூலம் கண்காணித்து வரும் அதிகாரிகள் எச்சரிக்கை வெளியிடுவார்கள் என்றார்.

முதலிரவு ரகசியங்கள்!


முதலிரவு ரகசியங்கள்

நள்ளிரவை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கும் நேரம். விருந்தினர்கள் எல்லாம் உண்ட களைப்பில் தூக்கத்தில் பெரும்பாலும் தொலைந்திருக்க, நெருங்கிய தோழியர் ஓரிருவர் சூழ்ந்துவர, வெட்கத்தில் இன்னும் அழகாகி தலைகுனிந்து வருகிறாள் அந்த அழகான இளம்பெண். கையில், ஒரு சொம்பை வைத்திருக்கிறாள். அதற்குள் சுண்டக் காய்ச்சிய பால் இருக்கிறது. நடக்கும் வேகத்தில் அது சிந்தாமல் இருக்க அதை ஒரே ஒரு டம்ளரால் தலைகீழாக கவிழ்த்து மூடி வைத்திருக்கிறாள்.

அந்த அறையை நெருங்கியதும், முழுமையாக அல்லாமல் ஓரளவே விலக்கப்படுகிறது கதவு. அதற்குள் வெட்கத்தில் மலர்ந்த இளம்பெண் மட்டுமே நுழைய தயாராகிறாள். உடன் வந்த தோழியர் அவளது காதில் ஏதேதோ கிசுகிசுக்க, அவள் இன்னும் அதிகமாக வெட்கப்பட்டுக்கொண்டே அறைக்குள் செல்கிறாள். கதவை தாளிட்டுக் கொள்கிறாள்.

அறைக்குள் அலங்கரிக்கப்பட்ட அழகான படுக்கை. அங்கே, இரவில் பால் பாத்திரத்தை தேடும் பூனையின் கால்கள் போன்று மெதுவாக நகருகிறது அவளது சிவப்பு பாதங்கள்.

தனக்கு உரியவரை நெருங்கியதும், கையில் இருந்த பாலை அருகில் வைக்கிறாள். அடுத்ததாக, தனக்குரியவரது காலில் விழுந்து வணங்குகிறாள். அவரோ, அவளது சிலிர்த்த தோள்களை இரு கரங்களால் பற்றி தூக்குகிறார்.

படுக்கையில் இருவரும் அமர்கின்றனர். இருவருக்கும் இடையே சிறிய இடைவெளி மட்டுமே இருக்கிறது. சிறிது நேரத்தில் அந்த இடைவெளி காணாமல் போகிறது. நெருங்கி அமர்கிறார்கள். ஒருவரையருவர் அணைக்கிறார்கள். அங்கே புதிய உயிரின் தேடலை ஆரம்பிக்கிறார்கள்.
- இதுதான் நம் தமிழ் சினிமாக்களில் இதுவரை காண்பிக்கப்படும் முதலிரவு அறை காட்சிகள்.
ஆனால், நிஜ வாழ்க்கையில் என்ன நடக்கிறது?

நிச்சயமாக சினிமாவைப் போன்று இல்லைதான்!

ஏற்கனவே பார்த்து, பழகி, காதலித்து, அதன்பின் திருமணம் செய்து கொண்டிருந்தால் முதலிரவில் பெரும்பாலும் பதற்றம் இருக்காது. ஆனால், முதன் முதலாக அதில் சந்தித்துக் கொள்பவர்கள் எப்படி படபடத்துப் போவார்கள் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.
அந்த இனிப்பான முதலிரவுக்கு சில இனிப்பான டிப்ஸ் :

* முதலிரவில் உடல்கள் மட்டும் பின்னிப்பிணைவதில்லை. உள்ளங்களும் பின்னிப்பிணைகின்றன. அங்கே சந்திக்கும் இரு உள்ளங்களும் தங்களை முழுமையாக புரிந்திருக்க வேண்டும். அவர்களது மனமும் "உறவு"க்கு தயாராக இருக்க வேண்டும். அப்போதுதான் அங்கே காமன் வென்று காட்ட முடியும். காமசூத்ரா எழுதிய வாஸ்த்யாயனார் கூட திருமணம் ஆன 3 நாட்களுக்கு பிறகு செக்சில் ஈடுபடுவதே சிறந்தது என்கிறார். அதனால், முதலிரவு அன்றே முழு திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்று யாரும் முயற்சிக்க வேண்டாம். காமத்தில் உடனே வெல்வதைவிட மெல்ல மெல்ல வெல்வதில்தான் சுகம் அதிகம் இருக்கிறது.

* திருமணத்தன்று மணமக்கள் இருவரும் பதற்றத்தோடு இருப்பார்கள். மேலும், உடல் சோர்வும் அதிகமாக இருக்கும். பதற்றத்திலும், சந்தோஷத்திலும் சரியாக சாப்பிட்டுக்கூட இருக்க மாட்டார்கள். இன்னும் சொல்லப்போனால், உறவினர்களை நன்றாக கவனிக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டப்போய், மணமக்கள் சாப்பிட்டார்களா? இல்லையா? என்பதை கவனிக்காமல் கோட்டை விடும் பெற்றோரும் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் முதலிரவுக்கு தயாராகுவது என்பது கடினமான ஒன்றுதான். அதனால், அதை ஓரிரு நாட்களுக்கு தள்ளிப்போடுவதில் தவறே இல்லை. அதேநேரம், உங்கள் உடலும், உள்ளமும் ஆர்வமாக இருந்தால் நிச்சயம் உறவு வைத்துக்கொள்ளலாம். அதில் தவறில்லை.

* சில சினிமாக்களில் முதலிரவு அறையில் பழைய காதல்களை புரட்டிப் பார்ப்பதாக காட்டுகிறார்கள். அதை ரியல் லைப்பில் புரட்டிப் பார்ப்பது தவறு. நீங்கள் முன்பு காதலித்து இருந்தாலும் கூட, அதுபற்றி துணையே கேட்டாலும் வாய்திறக்கக்கூடாது. புதுமணத் தம்பதியர் முதன் முதலில் ஒன்றாக இருப்பது முதலிரவு அறையில்தான். அன்றைய தினம் என்ன பேசுகிறீர்களோ, அது வாழ்க்கையின் கடைசி வரைக்கும் நினைவிருக்கும் என்பதால் பேச்சில் கவனம், கட்டுப்பாடு தேவை.

* முதலிரவு அனுபவங்கள் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். முதலிரவு இப்படித்தான் இருக்கும் என்று உங்கள் நண்பர் சொன்னால், அப்படித்தான் நமது முதலிரவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது.

* திருமணத்திற்கு விலை உயர்ந்த நகைகள், பட்டுப்புடவைகள் வாங்குவதில் கவனம் செலுத்தும் நீங்கள் உள்ளாடை வாங்கும் விஷயத்திலும் அந்த கவனத்தை செலுத்தலாம். இப்போது பல்வேறு டிசைன்களின் உள்ளாடைகள் விற்பனைக்கு வருகின்றன. உங்கள் அழகை&கவர்ச்சியை அதிகரித்துக் காட்டுவதற்கு என்றே பிரத்யேகமான உள்ளாடைகளும் உள்ளன. முதலிரவில் இந்த மாதிரியான உள்ளாடைகள் உங்கள் அழகை அதிகரித்துக் காட்டுவதோடு "மூடை"யும் அதிகரிக்கும்.

* முதலிரவு அறையில்தான் முதன் முதலாக துணையை பிறந்த கோலத்தில் பார்க்க முடியும். சிலர், ஏதேதோ படங்களை பார்த்து, துணையையும் அதுபோன்று எதிர்பார்க்கலாம். அது தவறான கண்ணோட்டம். "நான் இவ்வளவு எதிர்பார்த்தேன். ஆனால், இப்படி ஆகிவிட்டதே. இன்னும் கொஞ்சம் அதிகமாக இருந்தால் நன்றாக இருந்திருக்குமே" என்பது போன்ற எண்ணங்களை மூட்டைக்கட்டி தூர எறிந்துவிடுங்கள். உண்மையைச் சொல்லப்போனால், அந்த மாதிரியான எண்ணங்களே வரக்கூடாது. மீறி வந்தால் செக்சில் இனிமையை காண முடியாது. அங்கே வெறுமைதான் மிஞ்சும்.

* குழந்தை பற்றிய விஷயத்தை முதலிரவிலேயோ அல்லது அதற்கு முன்போ முடிவெடுத்து விடுங்கள். குழந்தை இப்போதைக்கு வேண்டாம் என்றால் பாதுகாப்பான கருத்தடை சாதனைகளை பயன்படுத்தி உறவில் ஈடுபடுங்கள். குழந்தை உடனே வேண்டும் என்பவர்கள், குழந்தை உடனே பிறக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் உறவு கொள்ள வேண்டாம். காரணம், அந்த எண்ணமே உங்களுக்கு மன நெருக்கடியை ஏற்படுத்திவிடலாம். உங்கள் மகிழ்ச்சிக்காகவும், துணையின் மகிழ்ச்சிக்காகவும் மட்டுமே உறவை வைத்திடுங்கள். அப்படியென்றால், கூடிய விரைவில் உங்கள் மனைவி கர்ப்பமாகி, அடுத்த 10-வது மாதத்தில் உங்கள் வீட்டில் குவா... குவா.... சத்தம் கேட்கலாம்.

* சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை என்பார்கள். இதனால்தான் என்னவோ, பெற்றோர்கள் பலர் அதுபற்றி தங்களது பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்க மறந்து விடுகிறார்கள். திருமணத்திற்கு காத்திருக்கும் ஒவ்வொருவரும் அதுபற்றி குறைந்தபட்சமாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதற்காக, டாக்டர்கள் பரிந்துரைத்த செக்ஸ் தொடர்பான ஆபாசம் இல்லாத புத்தகங்களை படித்து தெரிந்து கொள்வதில் தவறில்லை. ஆங்காங்கே பதுக்கி வைத்து விற்கப்படும் மஞ்சள் புத்தகத்தை மட்டும் வாங்கி படித்து விடாதீர்கள். மீறினால், உங்கள் செக்ஸ் கண்ணோட்டமே மாறிப்போய்விடும்.

* இப்போதெல்லாம், திருமணம் முடிவாகிவிட்டாலே தம்பதியராகப் போவோரை செல்போனில் மணிக்கணக்கில் கடலைபோட ஸாரி... பேச அனுமதிக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் செக்ஸ் உள்ளிட்ட எல்லா விஷயங்களையுமே அவர்கள் பரிமாறிக்கொள்ள வாய்ப்பு உள்ளது. அந்த சூழ்நிலையில், நீங்கள் செக்ஸ் தொடர்பான தகவல்களை பரிமாறிக்கொள்வதில் நன்மையும் இருக்கிறது; அதேநேரம், தீமையும் இருக்கிறது. நன்மை என்றால், செக்ஸ் பற்றிய உங்கள் சந்தேகங்கள் தீருகின்றன. தீமை என்றால், சந்தேகம் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது.

* முதலிரவிலேயே திருப்தி காண்பது பெரும்பாலும் முடியாத காரியம். சிலர் பதட்டத்தில் உடனே சோர்ந்து போகலாம். அப்படி சோர்ந்து போனால், "அய்யோ... நம்மால் முடியாதோ?" என்று மட்டும் எண்ணி விடாதீர்கள். அப்படி எண்ணிவிட்டால் செக்ஸ் என்ற சொல்லே உங்களுக்கு வெறுப்பை தந்துவிடும். நம்மால் முடியும் என்று நம்புகள். அப்படி நம்பினால் உங்களால் நிச்சயம் முடியும்.
மொத்தத்தில் செக்ஸ் என்பது அற்புதமான, அருமையான மருந்து. இந்த மருந்து மட்டும், உடலுக்கும், மனதுக்கும் சரியாக கிடைத்து வந்தால் மனநெருக்கடி கிட்ட வரவே வராது. மனநெருக்கடி இல்லையென்றால் நோய்கள் வர யோசிக்கும். நோய்கள் வராவிட்டால் நலமாக வாழலாம்தானே?

இப்படிப்பட்ட சிறப்புக்குரிய செக்ஸ் முதன் முதலாக அரங்கேறுவது முதலிரவில்தான். மேற்படி டிப்ஸ்களை உங்கள் வாழ்க்கையில் பின்பற்றினால் அந்த இனிய இரவில் நீங்கள் நிச்சயம் வென்று காட்டலாம்.


எளிதாக டைப் செய்ய கூகுள் புது வசதி


பெங்களூர் : கம்ப்யூட்டரில் மாநில மொழிகளில் எளிதாக தட்டச்சு செய்வதற்கு வசதியாக தமிழ் உட்பட 14 மொழிகளில் புதிய வசதியை கூகுள் இணைய தளம் தொடங்கியுள்ளது.
இந்த சாப்ட்வேரை பெங்களூரில் உள்ள கூகுள் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையம் வடிவமைத்தது. அதன் மூலம் உலகம் முழுவதும் இந்திய சாப்ட்வேர் ஆராய்ச்சிக்கு முக்கிய இடம் கிடைத்துள்ளது. இதுபற்றி கூகுள் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

டிரான்ஸ்லிட்ரேஷன் ஐஎம்இ என்று இந்த வசதி அழைக்கப்படும். ரோமன் கீபோர்டைப் பயன்படுத்தி 14 மொழிகளில் ஏதாவது ஒன்றில் வார்த்தையின் சத்தத்தை அடிப்படையாகக் கொண்டு தட்டச்சு செய்தால் போதும். தேர்வு செய்யும் மொழியில் அந்த வார்த்தை பதிவாகும். தட்டச்சு செய்யப்படும் வார்த்தையின் சத்தத்தை அடிப்படையாக கொண்டு அதன் மூல மொழிக்கு இந்த சாப்ட்வேர் தானாக மாற்றிக் காட்டும். உதாரணமாக, ஆங்கிலத்தில் கே&ஏ&எம்&ஏ&எல் என அடித்தால் தமிழில் கமல் என வரும். இதுபோல் தமிழ், தெலுங்கு, உருது, பஞ்சாபி, நேபாளி, மராத்தி, மலையாளம், கன்னடம், இந்தி, குஜராத்தி, கிரீக், பார்சி, பெங்காலி, அரேபிக் ஆகிய 14 மொழிகளில் இந்த சேவையைப் பெறலாம். இதற்கான சாப்ட்வேரை கூகுள் இணைய தளத்தில் இருந்து இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

இதைப் பயன்படுத்த இன்டர்நெட் இணைப்பு அவசியமில்லை. ஆப்லைன் முறையிலும் உபயோகிக்க முடியும் என்பதுதான் சாப்ட்வேரின் முக்கிய சிறப்பம்சம்.

காதலிப்பது போல் நடித்து இளம் பெண்கள் கடத்தல்


திருவனந்தபுரம் : பத்தனம்திட்டை அருகே இன்டர்நெட் சாட்டிங் மூலம் இளம்பெண்ணை கடத்திய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

பத்தனம்திட்டை அருகே உள்ள கோன்னி பகுதியை சேர்ந்தவர் பிரதீப். இவரது 22 வயது மகள் பத்தனம்திட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த இரு தினங்களுக்கு முன் கல்லூரிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து பிரதீப், கோன்னி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் மாணவியை வாலிபர் ஒருவர் இன்டர்நெட் சாட்டிங் மூலம் ஏமாற்றி கடத்தி சென்றது தெரிய வந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் இதுபோல் அந்த பகுதியில் 7 பெண்கள் கடத்தப்பட்டது தெரிய வந்துள்ளது. இதன் பின்னணியில் ஒரு பெரிய கும்பல் செயல்பட்டு வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த கும்பல் பணக்கார வீட்டு இளம்பெண்களை குறிவைத்து இன்டர்நெட் சாட்டிங் மூலம் காதலிப்பது போல் நடித்து பின்னர் திருமணம் செய்வதாக கடத்தி சென்று பணம், நகை பறித்துள்ளனர். இந்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

9 வயது சிறுமி குழந்தை பெற்றாள்


பெய்ஜிங் : ஆசியாவில் முதலாவதாக சீனாவைச் சேர்ந்த 9 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது.

பெண்கள் பருவம் அடையும் வயதாக 12 முதல் 15 வயது வரை கருதப்படுகிறது. ஆனால், வழக்கத்துக்கு மாறாக சில குழந்தைகள் முன்னதாக பருவம் அடையும் சம்பவங்கள் உலகம் முழுவதும் நடக்கின்றன. அதில் ஒன்றாக, வடகிழக்கு சீனாவைச் சேர்ந்த 9 வயது சிறுமி பருவம் அடைந்ததுடன், சக மாணவனுடன் ஏற்பட்ட உறவால் நேற்று முன்தினம் குழந்தை பெற்றாள்.

சீனாவில் 14 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்வது வல்லுறவுக் குற்றம் என்ற சட்டம் உள்ளது. ஆனால், அதை மீறி பள்ளி மாணவர்கள் இடையே தவறான உறவுகள் அதிகரித்து வருகின்றன.

சாங்சன் நகரில் உள்ள மருத்துவமனையில் அந்த சிறுமிக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. தாயும்(!) சேயும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் அறிவித்தனர். இதுகுறித்து சட்ட உதவியை சிறுமியின் பெற்றோர் கேட்டுள்ளனர்.

இந்தியா, சீனா உட்பட ஆசிய நாடுகளில் 11 வயதுக்கு கீழ் சிறுமி எவரும் குழந்தை பெற்றதாக இதற்கு முன் தகவல் இல்லை. எனவே, சீன சிறுமி குழந்தை பெற்றதுதான் முதல்முறை.

மிகக் குறைந்த வயதில் குழந்தை பெற்ற சம்பவம் 1939ம் ஆண்டில் பெரு நாட்டில் நடந்தது. 5 வயது சிறுமி அப்போது குழந்தை பெற்றாள். 2006ல் அதே நாட்டின் 8 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது.

உலகம் முழுவதும் 9 வயதில் 5 சிறுமிகளும், 10 வயதில் 9 சிறுமிகளும், 11 வயதில் 8 சிறுமிகளும் குழந்தை பெற்ற சம்பவங்கள் இதுவரை நடந்துள்ளன.

சனி, 30 ஜனவரி, 2010

மராத்தி ரியாலிட்டி இசை நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றில் தமிழர், வட இந்தியர்!


மும்பை: இசைக்கு மொழி இல்லை என்பார்கள். அது மகாராஷ்டிராவில் உண்மையாகியுள்ளது.

ஜீ மராத்தி சேனலில் நடத்தப்படும் ரியாலிட்டி இசை நிகழ்ச்சியான 'மராத்தி சரிகம' என்ற நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றுக்கு இரண்டு மராத்தி மொழி அல்லாதோர் தகுதி பெற்றுள்ளனர்.

அவர்களில் ஒருவர் தமிழர், இன்னொருவர் வட இந்தியர். அபிலாஷா செல்லம் என்பவர் தமிழ்ப் பெண். இன்னொருவரான ராகுல் சக்சேனா இந்திக்காரர்.

இறுதிச் சுற்றுக்கு வந்துள்ள ஒரே மராத்தி நபர் பத்லாபூரைச் சேர்ந்த ஊர்மிளா தங்கர் மட்டுமே.

மராத்தி இசை நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றது குறித்து அபிலாஷாவும், ராகுலும் கூறுகையில், ஆரம்பத்தில் மராத்தி மொழி எங்களுக்கு மிகக் கடினமானதாகவே இருந்தது. ஆனால் பழகப் பழக அது மிகவும் இனிய மொழியாக தோன்றியது.

கடந்த ஆண்டுதான் மும்பைக்கு இடம் பெயர்ந்தாராம் அபிலாஷா. அவர் கூறுகையில், வெறும் 7 மராத்தி பாடல்களை மனப்பாடம் செய்து வைத்துக் கொண்டுதான் இந்தப் போட்டிக்கான ஆடிஷன் டெஸ்ட்டுக்கு வந்தேன்.

ஆனால் நிகழ்ச்சியி்ல் கலந்து கொள்ள ஆரம்பித்த பின்னர் பெரிய ஆராய்ச்சியே செய்து முடித்து விட்டேன். இப்போது என்னால் மராத்தி பாடல்களை புரிந்து கொண்டு பாட முடியும்.

இந்தப் போட்டிக்காகவே ஒரு குழு உண்டு. அது பாடல்களின் அர்த்தத்தை எங்களுக்கு சொல்லித் தரும். இப்போது அது எனக்குத் தேவையாக இல்லை. காரணம் நானே அர்த்தத்தைப் புரிந்து கொண்டு பாடுகிறேன் என்றார்.

ராகுல் 7 ஆண்டுகளுக்கு முன்பு மும்பைக்கு வந்தவராம். இவருக்கு மராத்தி பாடல்கள், கலாச்சாரம் மீது பெரும் மோகம் உண்டாம். இதனால் மராத்தி பாடல்களை சும்மா இருக்கும்போது கூட முனுமுனுத்தபடி இருப்பாராம். ஆனால் அர்த்தம் தெரியாமலேயே. இப்போது அர்த்தத்தைப் புரிந்து கொண்டு பாடுகிறாராம்.

இந்தி சரிகம நிகழ்ச்சியின் வெற்றியாளர்தான் இந்த ராகுல். இந்தியன் ஐடல் போட்டியிலும் இவர் இறுதிச் சுற்று வரை முன்னேறியுள்ளார். அதேசமயம், அபிலாஷா, வாய்ஸ் ஆப் இந்தியா போட்டியில் பங்கேற்றவர்.

இருவருக்குமே மராத்தி பின்னணிப் பாடகர்களாக வேண்டும் என்ற லட்சியமே வந்து விட்டதாம்.

மேலும் அபிலாஷாவுக்கு சென்னை சென்று கர்நாடக இசையை முழுமையாக கற்கும் ஆர்வமும் உள்ளதாம்.

இப்படி இரு நான் மராத்திகளுக்கு மத்தியில் சிக்கியிருந்தாலும் போட்டியில் வெல்வது குறித்து கவலைப்படாமல் இருக்கிறார் மண்ணின் மகளான ஊர்மிளா. சிறந்தவருக்கே வெற்றி கிடைக்கும். எனவே நான் பயப்படவில்லை என்கிறார் கூலாக.

ஜனவரி 31ம் தேதி நடக்கும் இறுதிப் போட்டியில் வெற்றியாளர் அறிவிக்கப்படவுள்ளார்.

அதற்குள் ராஜ் தாக்கரே, பால் தாக்கரே கோஷ்டிகள் பஞ்சாயத்தைக் கிளப்பி விட்டு விடாமல் இருக்க பிரார்த்திப்போம்.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-6க்கு குட்பை சொல்கிறது கூகுள்!


இந்த ஆண்டுக்குள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-6 (ஐஇ-6) பிரவுசருக்கு குட்பை சொல்கிறது கூகுள். இனி வரும் காலங்களில் ஐ.இ 7, பயர்பாக்ஸ் 3, கூகுள் குரோம் 4, சபாரி 3 மற்றும் அதன் மேம்பட்ட பிரவுசர்கள் மட்டுமே கூகுள் இணையதளங்களின் பிரவுசராக தொடருமாம்.

இதுகுறித்து கூகுள் அப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், இணையதள பிரவுசர் தொழில்நுட்பத்தின் சிறந்த அம்சங்களையும், செயல்பாட்டையும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் வகையில் பல்வேறு மாற்றங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.

அதி நவீன பிரவுசர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வகையில் குறிப்பாக அதி விரைவு ஜாவா ஸ்கிரிப்ட் பிராசசர் மற்றும் எச்டிஎம்எல்5 ஆகியவை உள்ளடக்கிய அம்சங்களுக்கு ஊக்கமளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே இந்த ஆண்டுக்குள் ஐ.இ 6 பிரவுசர் கூகுள் பயன்பாட்டிலிருந்து விலக்கிக் கொள்ளப்படும். அதேபோல இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் பழைய வெர்சன்களும் கூட படிப்படியாக கைவிடப்படும். இதனால் இந்த பிரவுசர்களில் கூகுள் தளங்களை சரியாக பார்க்கவோ, 'இன்டர்ஆக்ட்' செய்வதோ முடியாது.

2010ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி முதல் கூகுள் டாக்குமென்ட் மற்றும் கூகுள் இணையதளங்கள் இந்த பிரவுசர்கள் செயல்படாது. இந்தக் கால கட்டத்திற்குப் பின்னர் மேற்கண்ட பிரவுசர்களில் கூகுள் இணையதளங்கள் சரிவர செயல்படாது.

இந்த ஆண்டின் பிற் பகுதியில், கூகுள் மெயில் மற்றும் கூகுள் காலண்டர் ஆகியவற்றுக்கும் இந்த பிரவுசர்கள் செயல்படாது.

அதே சமயம், ஐ.இ 7, பயர்பாக்ஸ் 3, கூகுள் குரோம் 4, சபாரி 3 மற்றும் அதன் மேம்பட்ட பிரவுசர்கள் மட்டுமே கூகுள் இணையதளங்களின் பிரவுசராக தொடர்ந்து செயல்படும்.

அடுத்த வாரம் முதல் பழைய பிரவுசர்களை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களுக்கு கூகுள் டாக்குமென்ட் மற்றும் கூகுள் இணையதளங்களில் ஒரு செய்தி வெளியாகும். அதில், மேம்பட்ட வெர்சன்களுக்கு மாறிக் கொள்ளும்படி அறிவுறுத்தப்படும். மேலும் மார்ச் 1ம் தேதிக்கு முன்பும் ஒரு ரிமைன்டர் கொடுக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 29 ஜனவரி, 2010

ஒரு நிமிடம் பேசினால் ரூ.1.50 லட்சம் கட்டணம்


லண்டன் : பிரிட்டனின் முன்னாள் பிரதமரான டோனி பிளேர் ஒரு நிமிடச் சொற்பொழிவுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கட்டணமாகப் பெறுகிறார்.

லான்ஸ்டவுண் பார்ட்னர்ஸ் என்ற லண்டன் ஹெட்ஜ் ஃபண்ட் நிறுவன ஊழியர்கள் மத்தியில் பேசுவதற்காக இந்தக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாம்.
இந்தக் கட்டணம் உண்மைதானா என்ற கேள்விக்கு டோனியின் பேச்சாளர் பதில் கூறவில்லை. ஆனால் உலக அளவில் சிறந்த சொற்பொழிவாளராக டோனி திகழ்கிறார் என பெரும் சொற்பொழிவே நிகழ்த்திவிட்டார். அவரது கட்டுரைகளுக்காக அவது புத்தகத்தை வெளியிடும் நிறுவனம் 46 லட்சம் பவுண்டுகள் தந்துள்ளது என்றார்.

அமெரிக்க வங்கி ஜேபி மார்கன் மற்றும் ஜூரிச் பைனான்சியல் சர்வீசஸ் எனும் இரண்டு நிறுவனங்களுக்கு ஆலோசகராக டோனி இருக்கிறார். ஜேபி மார்கன் ஆண்டுக்கு 20 லட்சம் பவுண்டுகள் வழங்குகிறது. ஜூரிச் பைனான்சியல் சர்வீசஸ் 5 லட்சம் பவுண்டு வழங்குகிறது. இதைத் தவிர அவருக்கு ஆண்டுக்கு 63,000 பவுண்டுகள் ஓய்வூதியமும் கிடைக்கிறது.
ஸ்பெயின் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் நிகழ்த்திய 90 நிமிட சொற்பொழிவுக்காக 1,80,000 பவுண்டுகள் அவருக்கு கிடைத்துள்ளது என்று அவர் கூறினார்.

பிரதமர் பொறுப்பிலிருந்து விலகிய பிறகு இதுவரை ஒரு கோடி பவுண்டுகள் டோனி பிளேர் சம்பாதித்திருக்கிறார் என கணக்கிட்டுள்ளனர்.

ஆண்கள் விபச்சாரிகளை நாடுவது ஏன்?


ஆண்கள் விபச்சாரப் பெண்களை நாடுவது ஏன் என்ற தலைப்பில் ஒரு சர்வதேச அமைப்பைச் சேர்ந்த மன நல நிபுணர்கள் ஆய்வு நடத்தி அதன் முடிவை வெளியிட்டுள்ளனர்.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 700 ஆண்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்டு பதிலை வாங்கி ஆய்வு செய்துள்னர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் சொன்ன காரணம்- செக்ஸ் தேவையை உடனடியாகத் தீர்க்க விபச்சாரப் பெண்கள்தான் சரியான வழி என்று கூறியுள்ளனராம்.

கருத்துக் கணிப்பில் கலந்து கொண்ட ஒருவர் கூறுகையில், இது இன்ஸ்டன்ட் காபி, இன்ஸ்டன்ட் உணவு காலம். விபச்சாரம் என்பது இன்ஸ்டன்ட் செக்ஸ் என்று கூறினாராம்.

21 சதவீதம் பேர் குறிப்பிட்ட இனம், செக்ஸ் அம்சங்கள் பொருந்திய பெண்களைத் தேர்வு செய்ய ஆர்வம் காட்டுகிறார்களாம். அந்த மாதிரிப் பெண்களை தேடிப் போதாக அவர்கள் கூறியுள்ளனர்.

20 சதவீதம் பேர், தங்களது மனைவி அல்லது தோழிகளிடம் எதிர்பார்த்த இன்பம் கிடைக்காததால் விபச்சாரப் பெண்களை நாடுவதாக கூறியுள்ளனர்.

15 சதவீதம் பேர் விபச்சாரப் பெண்களுடன் உறவு வைத்துக் கொண்டால் எந்தவித கமிட்மென்ட்டும் கிடையாது. அதனால்தான் போகிறோம் என்று கூறியுள்ளனர்.

செக்ஸ் வெறி, போதை, குடிப்பழக்கம் காரணமாக விபச்சாரப் பெண்களை நாடுவது 3 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

உலகத்திற்கேற்ற நல்ல ஆய்வுதான்...!

ஜக்குபாய்- பட விமர்சனம்


நடிப்பு: சரத்குமார், ஸ்ரேயா, கவுண்டமணி
இசை: ரஃபி
இயக்கம்: கே.எஸ்.ரவிக்குமார்
தயாரிப்பு: ராடான் - ஜீ

என்னதான் 'ஹைப்' ஏத்தினாலும் சரக்கு இருந்தா மட்டும்தான் எந்தப் படமும் தாக்குப் பிடிக்கும் என்பதற்கு இதோ இன்னொரு உதாரணம்.. ஜக்குபாய்.

'அடடா... திரைக்கு வரும் முன்பே படம் லீக்காகி தயாரிப்பாளர் நஷ்டம் கண்டு விட்டாரே' என்ற பார்வையாளனின் பரிதாபம் எந்த அளவு கைகொடுக்கும் என்று தெரியவில்லை...

படத்தின் கதை இது:

சென்னையை கிரிமினல்கள் இல்லாத நகரமாக்க எந்த அளவு கொடூரமான ட்ரீட்மெண்டையும் கையாளும் போலீஸ் அதிகாரி ஜெகன்னாதன் (சரத்குமார்). ஒரு நாள் தனது முன்னாள் மனைவி ஆஸ்திரேலிய கார் விபத்தில் செத்துப் போனது தெரிய வருகிறது. கூடவே அவருக்கு மோனிஷா என்ற பெயரில் ஒரு அழகான- கோடீஸ்வர மகள் (ஸ்ரேயா) இருப்பதையும் தெரிந்து கொள்கிறார்.

ஜெகன்னாதனின் பழைய எதிரி அமீத் அன்சாரியால் மோனிஷாவின் உயிருக்கே ஆபத்து என்பதை அறிந்து, அந்த போராபத்திலிருந்து மகளைக் காப்பாற்ற கவுண்டமணி துணையுடன் புறப்படுகிறார். எப்படி காப்பாற்றினார் என்பது மீதிக் கதை...

இந்தப் படத்தின் முக்கிய ப்ளஸ் பாயிண்ட் கவுண்டமணி. இளைத்தாலும், படுத்தாலும் சிங்கம் சிங்கம்தான் என்று சொல்லும் அளவுக்கு கலகலப்பூட்டுகிறார். குரலில் இன்னும் அதே 'டெஸிபலை' மெயின்டெய்ன் பண்ணுகிறார் மனிதர்.

சரத்குமார் கூட இந்தப் படத்தில் அடக்கி வாசித்திருக்கிறார். அதுவே அவரது கேரக்டருக்கு கொஞ்சம் நம்பகத்தன்மையைத் தருகிறது. போலீஸ் வேடமும் அவருக்கு மிகக் கச்சிதமாகப் பொருந்தி வருகிறது.

ஸ்ரேயா இதில் நடிக்கவும் செய்துள்ளார்!. மற்றபடி சொல்லிக் கொள்ளும் அளவு யாரும் இல்லை.

நிறைய காட்சிகளில் ஓவராக உணர்ச்சி வசப்படுகிறார்கள்... பிழியப் பிழிய செண்டிமெண்ட் காட்சிகள். அவை பொருத்தமான இடத்தில் வராததால் பார்வையாளனுக்கு எந்த உணர்வும், பாதிப்பும் ஏற்படாமல் போகிறது. அதுதான் இந்தப் படத்தின் முக்கிய மைனஸ்.

மற்றபடி 'ஆஃப் ஸ்கிரீனில்' ராதிகா வடித்த கண்ணீருக்காக இல்லாவிட்டாலும், ஆர்.டி. ராஜசேகரின் அசத்தல் கேமரா, கவுண்டமணி காமெடி, சரத்குமாரின் ஆக்ஷனுக்காக ஒருமுறை பார்க்கலாம்!

அதுசரி... அதென்ன ஜக்குபாய் என்கிறீர்களா...?

படத்தில் சரத்துக்குப் பெயர் ஜெகன்னாதன்... செல்லமாய் 'ஜக்கு'... மரியாதைக்கு 'பாய்'... அதான் 'ஜக்குபாய்'. அடடா, கே.எஸ்.ரவிக்குமாருக்கு என்ன ஒரு 'கிரியேட்டிவிட்டி'!

மன அழுத்தத்தைக் குறைக்கும் முத்தம்!


பொதுவாக தம்பதியரிடையே முத்தம் கொடுத்தல், கட்டிப்பிடித்தல் போன்ற செயல்களால் அவர்களிடையே மன அழுத்தம் குறைவதாக சுவிட்சர்லாந்தில் வெளியான ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. கையோடு, கைசேர்த்து கட்டிப்பிடிப்பதால், ஆண்பெண் இருபாலரிடமும் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய ஹார்மோன் சுரப்பது குறைவதாக அந்த ஆய்வு கூறுகிறது.

சுவிட்சர்லாந்தின் ஜூரிச்சில் உள்ள சைக்கோஸொமேடிக் மருத்துவ இதழில் இந்த ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. நெருக்கமான உறவு கொள்தல், குறிப்பாக திருமணம் செய்து கொள்வதால் ஏற்படும் பாலியல் உறவால் ஆரோக்கியமான உடல்நலம் ஏற்படுவதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

ஜெர்மனியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தம்பதியரை ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஆராய்ச்சியாளர்கள் சுமார் ஒரு வார காலம் அவர்களை ஆய்வுக்கு உட்படுத்தி இந்த முடிவை வெளியிட்டனர். தம்பதியர் ஒருவரை ஒருவர் கைகளை இறுகப்பற்றுவது முதல் பாலுறவு கொள்வது வரையிலான சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதில் உடல் ரீதியான தொடர்பால், கார்டிசோல் எனப்படும் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய ஹார்மோன் சுரப்பது குறைவாக இருப்பது தெரிய வந்தது. உடலில் பல்வேறு மன அழுத்தம் தொடர்பான மாற்றங்களுக்கு கார்டிசோல் ஹார்மோனே காரணம் என்று கண்டறியப்பட்டது.

ஆண்களைவிட பெண்கள் அதிகம் தூங்க வேண்டும்


லண்டன் : ஆண்களைவிட பெண்களுக்கு கூடுதல் தூக்கம் தேவைப்படுவதாக இங்கிலாந்து நிபுணர் தெரிவித்துள்ளார்.

லண்டனை சேர்ந்த லாப்பரோ யுனிவர்சிட்டியின் உறக்க ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் பேராசிரியர் ஜிம் ஹார்ன். தூக்கம் குறித்து அவர் கூறியதாவது:

நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் மூளைக்கு ஓய்வு கொடுப்பதுதான் தூக்கம். சோர்வடைந்த மூளைக்கு புத்துணர்ச்சி கொடுப்பதுதான் தூக்கத்தின் முக்கிய பணி. மூளையின் ஒரு பகுதி கார்டெக்ஸ். இது நினைவாற்றல், தகவல் பரிமாற்றம் ஆகிய பணிகளை செய்கிறது. ஆழ்ந்த தூக்கத்தின்போது, இது வேலை செய்வதை நிறுத்திக் கொண்டு பகல் நேர இயக்கத்தை மறுஆய்வு செய்கிறது. எனவேதான், மூளைக்கு அதிக வேலை கொடுப்பவர்களுக்கு இரவில் அதிக நேர தூக்கம் தேவைப்படுகிறது.

பெண்களின் மூளை ஆண்களின் மூளையிலிருந்து மாறுபட்டது. குழந்தைகள், கணவன் என குடும்ப பொறுப்பு மட்டுமல்லாது, அலுவலக பொறுப்புகளையும் பெண்கள் சுமக்க வேண்டியுள்ளது. எனவே, ஆண்களைவிட பெண்களுக்கு அதிக நேர தூக்கம் தேவைப்படுகிறது. சராசரியாக 20 நிமிடமாவது பெண்கள் கூடுதலாக தூங்க வேண்டும்.

நிறுவனத்தின் உயர் பொறுப்பில் உள்ள ஆண்கள் பல்வேறு முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் அவர்களுடைய மூளை மிகவும் சோர்வடைகிறது. அவர்களுக்கும் சராசரி ஆண்களை விட கூடுதல் தூக்கம் தேவைப்படுகிறது என்றார்.

முதலுதவி அளிப்பது எப்படி?


முதல் கட்டமாக, முதலுதவி செய்பவர் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் மூன்று:

1. உயிரை பாதுகாக்க வேண்டும்.
2. நிலமை மோசமாவதைத் தடுக்க வேண்டும்.
3. சீக்கிரத்தில் குணமளிக்க ஏற்பாடு செய்யவேண்டும்.

எல்லாவற்றையும் விட முக்கியமானது தைரியம். பாதிக்கப்பட்டவர்களை தேற்றி, ஆறுதல் சொல்ல வேண்டும். பயப்படக் கூடாது. தவிரவும் வேறு சில பொறுப்புகளும் உள்ளன.

1. உடனடியாக நிலமையை ஆராய்ந்து புரிந்து கொள்ள வேண்டும். பதட்டபடக் கூடாது. தகுந்த மருத்துவ உதவி கிடைக்க உதவ வேண்டும்.

2. தீ விபத்தில் சிக்கி கொண்ட ஒருவருக்கு முதலுதவி அளிக்க வேண்டும் என்றால் முதலில் முதலுதவி அளிக்க முன்வருபவருக்குத் தன்னை பாதுகாக்கத் தெரிந்திருக்க வேண்டும். பிறகு பாதிக்கப்பட்டவர், பிறகு அருகில் இருப்பவர்.

3. பாதிப்பின் தன்மையை சரியாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

4. உடனுக்குடன் சிகிச்சை அளிக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில், தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளவர் மீது நம் கவனம் முதலில் திரும்ப வேண்டும்.

5. சம்பந்தப்பட்டவரை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கோ, வீட்டுக்கோ, மருத்துவரிடமோ அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். தக்க வாகனங்களைத் தயார் செய்ய வேண்டும்-.

6. மருத்துவ உதவி கிடைக்கும்வரை சம்பந்தப்பட்டவருக்கு அருகேயே இருக்க வேண்டும்.

7. நம்மை நாமே தற்காத்துக் கொள்ள வேண்டும்.

எப்படிச் சமாளிப்பது?

நிதானத்துடன், பதற்றமில்லாமல், இவை இரண்டும் மிக மிக முக்கியம். மேலும் சில குறிப்புகள் கீழே,

1. சூழ்நிலையை உணர்தல்
2. பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துதல்
3. அவசர சிகிச்சை அளித்தல்
4. உதவி பெறுதல்
5. மீண்டு வருதல்

சாக்லெட் உடை


சாக்லெட் பெண்கள்: சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் உலக சாக்லெட் பொழுதுபோக்கு கண்காட்சி நடைபெறுகிறது. அதில் சாக்லெட்களால் செய்யப்பட்ட உடை, அணிகலன்களை அணிந்து வலம் வந்து பார்வையாளர்களை கவர்ந்த மாடல்கள்.

புதன், 27 ஜனவரி, 2010

ரிவர்வ் வங்கி கொள்கை- வட்டி உயருமா?


ரிசர்வ் வங்கியின் காலாண்டு பொருளாதார கொள்கை அறிவிப்பின் போது, பணவீக்கத்தை கட்டுப்படுத்த வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதம் அதிகரிக்கப்படலாம் என்று தெரிகிறது.

ரிசர்வ் வங்கி வருகின்ற 29 ஆம் தேதி காலாண்டு பொருளாதார ஆய்வறிக்கையையும், எதிர்காலத்திற்கான பொருளாதார கொள்கைகளையும் அறிவிக்க உள்ளது

அப்போது பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தி, அதன் வாயிலாக பணவீக்கம் அதிகரிப்பதை குறைக்க வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதம் அதிகரிக்கும். இது அரை விழுக்காடு அதிகரிக்கும் என்று தெரிகிறது. தற்போது ரொக்க இருப்பு விகிதம் 8.5 விழுக்காடாக உள்ளது. இது 9 விழுக்காடாக அதிகரிக்கப்படும். இதன் மூலம் நிதி சந்தையில் ரூ.22 ஆயிரம் கோடி புழக்கத்தில் இருப்பது குறையும்.

அதே நேரத்தில் வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி, வங்கிகள் உபரி பணத்தை ரிசர்வ் வங்கியில் வைக்கும் போது வழங்கும் வட்டி ஆகியவை அதிகரிக்கப்படாது என்று தெரிகிறது.

தற்போது வங்கி துறையில் மட்டும் ஆயிரம் பில்லியன் ரூபாய் ( 1 பில்லியன்-நூறு கோடி) புழக்கத்தில் உள்ளது.

ரிசர்வ் வங்கி எடுக்கப்போகும் நடவடிக்கை காரணமாக வங்கிகளின் வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக ஒரு தரப்பு பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவும், தொழில், வர்த்தக நிறுவனங்களுக்கு குறைந்த வட்டியிலும், எளிதாக கடன் கிடைக்க ரிசர்வ் வங்கி வட்டி விகிதம் குறைப்பு, ரொக்க கையிருப்பு விகிதம் குறைப்பு போன்ற நடவடிக்கைகளை எடுத்தது. ஆனால் வங்கி துறையில் அதிக அளவு பணபுழக்கம் உள்ளது. இவை ரிசர்வ் வங்கியில் ரிவர்ஸ் ரிபோ வாக வைக்கப்படுகிறது.

சில வங்கியாளர்கள் ரிபோ, ரிவர்ஸ் ரிபோ விகிதமும் உயர்த்துவதற்கு வாய்ப்பு இருப்பதாக கருதுகின்றனர். ஆனால் பெரும்போலோனார் அடுத்த மூன்று மாதத்திற்காவது தற்போதைய நிலை நீடிக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.

ரிசர்வ் வங்கி பணப்புழக்கத்தை அதிகரிக்கவும், கடன் எளிதாக கிடைக்க 2008 அக்டோபர் முதல் 2009 ஏப்ரலுக்குள் ரிபோ வட்டி விகிதத்தை 4.25 விழுக்காடு குறைத்தது. இது ரிபோ வட்டி விகிதம் முன்பு 9 விழுக்காட்டில் இருந்து, 4.75 விழுக்காடாக குறைத்தது.

இதோ போல் ரிவர்ஸ் ரிபோ விகிதத்தையும் 3.25 விழுக்காடாக குறைத்தது.

வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதத்தையும் 9 விழுக்காட்டில் இருந்து ஐந்து விழுக்காடாக குறைத்தது.

பொருளாதார நெருக்கடியில் இருந்து பொருளாதாரம் தற்போது வளர்ச்சி நோக்கி போய்க் கொண்டுள்ளது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி வட்டி உட்பட எடுக்கப்போகும் நடவடிக்கை அதிக அளவாக இருக்காது. வட்டி உயர்வை கட்டுப்படுத்துவது சவாலானதாக இருக்கும் என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

தொழில் வளர்ச்சி அதிகரித்துள்ளதாக புள்ளி விபரங்கள் எடுத்துக் காட்டுகின்றன. ஆனால் சில குறிப்பிட்ட தொழில்களே அதிக அளவு வளர்ச்சி அடைந்துள்ளன என்பதையும் கவணிக்க வேண்டும்

தொழில் நிறுவனங்கள் வங்கியில் இருந்து கடன் வாங்குவது குறைந்த அளவிலேயே உள்ளது. இது சென்ற காலாண்டில் சிறிது அதிகரித்துள்ளது.

ரிசர்வ் வங்கி கடன் வாங்குவது 18 விழுக்காடு அதிகரிக்கும் என மதிப்பிட்டது. ஆனால் 13.7 விழுக்காடு என்ற அளவிலேயே அதிகரித்துள்ளது. இந்த மார்ச் மாதம் முடியும் காலாண்டில் கடன் வாங்குவது 15 விழுக்காடாக அதிகரிக்கும் என்று ரிசர்வ் வங்கி எதிர்பார்க்கின்றது.

அடுத்த 3 ஆண்டுகளில் 50 லட்சம் வேலைகள்


புதுடெல்லி : அடுத்த இரண்டு ஆண்டுகளில் மோட்டார் வாகனத் தொழிற்சாலைகளில் சுமார் 50 லட்சம் தொழிலாளர்கள் கூடுதலாகப் பணியாற்ற உள்ளனர்.

மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒட்டுமொத்தமாக தற்பொழுது பணியாற்றுவோர் எண்ணிக்கை 1.3 கோடி 2016ம் ஆண்டு வாக்கில் இந்த எண்ணிக்கை 2.5 கோடியாக உயரும். இது கிட்டத்தட்ட இருமடங்கு. அடுத்த 3 ஆண்டுகளில் இத்துறையில் 50 லட்சம் வேலைகள் உருவாகும். மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் ஊழியர் பிரிவு துணைத் தலைவர் பிரின்ஸ் அகஸ்டின், ÔÔதொழிற்சாலைத் தள நிலையிலேயே ஊழியர்களின் உற்பத்தித்திறனை உயர்த்த தேவையான முதலீடுகளை பெரிய நிறுவனங்கள் செய்துவருகின்றன.

ஊழியர்களுக்கான பயிற்சித் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றனÕÕ எனக் குறிப்பிட்டார்.
இந்தியாவில் 25 முதல் 30 சதவீதம் பேர் மட்டுமே பணித்தகுதி உடையவர்களாக கல்வியை முடிக்கின்றனர். இந்த அளவை உயர்த்த 78 ஐடிஐக்களோடு இணைந்து ஆட்டோமொபைல் உறபத்தியாளர் சங்கம் செயல்பட்டு வருகிறது. இன்னும் 22 நிறுவனங்களுக்கு உதவிட திட்டம் வகுத்துள்ளது.

பேமிலி ட்யூன் அளிக்கிறது ஏர்டெல்


சென்னை : சாதாரண போன் வாடிக்கையாளர்களுக்கு பேமிலி ட்யூன் வசதியை தனியார் போன் நிறுவனமான ஏர்டெல் அறிமுகம் செய்துள்ளது.

ஏர்டெல் சாதாரண போன் வாடிக்கையாளர்கள் 29 லட்சம் பேர். 1,000க்கும் மேற்பட்ட குடும்பப் பெயர்களில் இருந்து ஒன்றை தேர்வு செய்யலாம். மற்றவர்கள் அழைக்கும்போது வாடிக்கையாளரின் குடும்பப் பெயருடன் வரவேற்பு செய்தி இசையுடன் கேட்கும். இதற்கு டவுன்லோடு கட்டணம் ரூ.15. மாதாந்திர ஹலோ ட்யூன் கட்டணம் ரூ.30.

ஏர்டெல்லுக்கு 29 லட்சம் சாதாரண போன் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

அனைவருக்கும் மும்பை சொந்தம்


லண்டன் : Ôமும்பை எல்லா இந்தியர்களுக்கும் சொந்தமானதுÕ என்று ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.

மும்பையில் மராத்தி பேசத் தெரிந்தவர்களே இனி டாக்சி ஓட்ட உரிமம் பெற முடியும் என்று அந்த மாநில அரசு சமீபத்தில் அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து அந்த உத்தரவு வாபஸ் பெறப் பட்டது.

இந்நிலையில், ராஜ்ய சபா எம்.பி. எம்.கே. சிங் எழுதிய புத்தக வெளியீட்டு விழா, லண்டனில் நடந்தது. அதில் முகேஷ் பேசியதாவது:
நாம் அனைவரும் முதலில் இந்தியர்கள். பிறகுதான் தாய்மொழி. மும்பை, சென்னை, டெல்லி போன்ற பெருநகரங்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் சொந்தமானவை. அதுதான் உண்மை.

இந்தியாவில் பொருளாதார தாராளமயமாக்கல் வந்தபோது கம்பெனி தொடங்க லைசன்ஸ் பெற வேண்டிய நடைமுறை விலகியது. பெரிய நிறுவனங்களுக்கே சுதந்திரம் கிடைத்தபோது, ஏழைகள் டாக்சி ஓட்டுவதற்கு மொழி அடிப்படையில் லைசன்ஸ் பெறுவது பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம்.

இப்போது இது பிரச்னையல்ல. இந்தியாவில் ஆண்டுக்கு 1.5 கோடி முதல் 2 கோடி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுதான் உண்மையான சவால் என்றார்.

செவ்வாய், 26 ஜனவரி, 2010

61வது குடியரசு தினம்: சென்னையில் கோலாகல விழா


சென்னை : இந்தியாவின் 61வது குடியரசு தினம் நேற்று சென்னையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

மெரினா கடற்கரையில் நடந்த வண்ணமயமான நிகழ்ச்சியில் கவர்னர் பர்னாலா தேசியக்கொடி ஏற்றி, முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். வீர தீர செயல் புரிந்தவர்களுக்கு பதக்கங்களை முதல்வர் கருணாநிதி வழங்கினார். கடும் பனியையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்வமாக பங்கேற்றனர். குழந்தைகள் குதூகலமாக கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை ரசித்தனர்.

கடற்கரை காந்தி சிலை அருகே விசேஷ பந்தல் போடப்பட்டிருந்தது. அமைச்சர்கள், நீதிபதிகள், சென்னையில் உள்ள வெளிநாட்டு தூதர்கள், எம்.பி, எம்.எல்.ஏக்கள் உட்பட ஏராளமான பிரமுகர்கள் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே வந்து அவரவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடங்களில் அமர்ந்திருந்தனர். துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.கோகலே உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் முன்வரிசையில் அமர்ந்திருந்தனர்.

காலை 7.50 மணிக்கு முதல்வர் கருணாநிதி வந்தார். அவரை தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி வரவேற்றார். கடற்கரை காமராஜர் சாலையில் காரிலேயே சென்று சாலையின் இருபுறமும் திரண்டிருந்த மக்களை பார்த்து கையசைத்து வாழ்த்து தெரிவித்தார் முதல்வர்.
பொதுமக்களும் பதிலுக்கு அவருக்கு உற்சாகமாக வாழ்த்து தெரிவித்தனர். ஐந்து நிமிடத்தில் கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா வந்தார். அவரை முதல்வர் வரவேற்று முப்படை தளபதிகள், காவல்துறை உயரதிகாரிகளை சம்பிரதாயப்படி அறிமுகப்படுத்தினார்.

காந்தி சிலை அருகே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கொடிக் கம்பத்தில் சரியாக 8 மணிக்கு பர்னாலா தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது கடலோர காவல் படையினர் ஹெலிகாப்டரில் இருந்து மலர்களை தூவினர். திரண்டிருந்த மக்கள் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

இதையடுத்து அணிவகுப்பு தொடங்கியது. முப்படை வீரர்கள், கடலோர காவல்படை, ரயில்வே பாதுகாப்பு படை, தமிழக காவல்துறை, சிறப்பு கமாண்டோ படையினர் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து சென்றனர். அணிவகுப்பு மரியாதையை பர்னாலா ஏற்றுக் கொண்டார்.
பின்னர் வீரதீர செயல் புரிந்தவர்களுக்கு அண்ணா பதக்கங்களை முதல்வர் கருணாநிதி வழங்கினார். நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் பள்ளி வேன் குளத்தில் கவிழ்ந்த விபத்தில் உயிரையும் பொருட்படுத்தாமல் நீரில் மூழ்கிய 12 குழந்தைகளை காப்பாற்றி உயிர்விட்ட ஆசிரியை சுகந்திக்கான விருதை அவரது தந்தை மாரியப்பனிடமும், வைகை அணையில் வீசப்பட்ட குழந்தையை காப்பாற்றிய முத்துராமலிங்கபுரத்தை சேர்ந்த கண்ணன் என்பவருக்கும் அண்ணா பதக்கத்தை முதல்வர் வழங்கினார்.

மத நல்லிணக்கத்துக்காக பாடுபட்ட திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூரை சேர்ந்த முகைதீனுக்கு கோட்டை அமீர் விருது வழங்கப்பட்டது. மதுவிலக்கை சிறப்பாக அமல்படுத்தியதற்காக திருச்சி மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் எஸ்பி நாகராசன், தர்மபுரி மாவட்ட கூடுதல் எஸ்பி விவேகானந்தன், தர்மபுரி மாவட்ட டிஎஸ்பி சீனிவாசன், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த இன்ஸ்பெக்டர் தெய்வசிகாமணி ஆகியோருக்கு உத்தமர் காந்தியடிகள் விருதை முதல்வர் வழங்கினார்.

இதையடுத்து, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. பல வண்ண உடைகளில் மாணவிகள் நடத்திய கோலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவர்ந்தன. ஆளுநரும், முதல்வரும் கலை நிகழ்ச்சிகளை ரசித்து பார்த்தனர். அவ்வப்போது கைதட்டி மாணவிகளை உற்சாகப்படுத்தினர். தஞ்சை தென்னக பண்பாட்டு மையம் சார்பில் பல்வேறு மாநில கலைக் குழுவினர் தங்கள் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளை நடத்தினர். மேற்குவங்க கலைக்குழுவினர் நடத்திய ராய்பென்சா நடனம் வித்தியாசமாக இருந்தது.

பின்னர், பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடந்தது. முதலாவதாக அன்னப்பறவை போல வடிவமைக்கப்பட்ட வாகனம் சென்றது. அதை தொடர்ந்து செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் வள்ளுவர் கோட்ட அலங்கார ஊர்தி சென்றது. அதில், கோவையில் நடக்கவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு முதல்வர் அழைப்பு விடுப்பது போன்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. கலைஞர் காப்பீடு திட்டத்தை விளக்கும் ஊர்தியும் அணி வகுப்பில் இடம் பெற்றது.

கலை நிகழ்ச்சிகளில் சைதாப்பேட்டை மாநகராட்சி மேல்நிலை பள்ளி முதல் பரிசை வென்றது. ராணி லேடி மெய்யம்மை மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு இரண்டாவது பரிசும், சைதாப்பேட்டை ஜெய்கோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கு மூன்றாவது பரிசும் கிடைத்தன.

கல்லூரி அளவில் குரோம்பேட்டை எஸ்.டி.என்.பி. வைஷ்ணவா மகளிர் கல்லூரிக்கு முதல் பரிசும், ராணிமேரி கல்லூரிக்கு 2வது பரிசும், அண்ணாநகர் வள்ளியம்மாள் மகளிர் கல்லூரிக்கு 3வது பரிசும் கிடைத்தன.

அலங்கார ஊர்தி அணிவகுப்பில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வாகனத்துக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. இந்த வாகனத்தில் பிரதமர் மன்மோகன்சிங், முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் போன்று வேடமிட்டவர்கள் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை ஆய்வு செய்யும் காட்சி சித்தரிக்கப்பட்டிருந்தது. இரண்டாவது பரிசு தகவல் தொழில்நுட்ப துறைக்கும், மூன்றாம் பரிசு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநல துறைக்கும் கிடைத்தன.

விழாவை ஒட்டி கடற்கரை சாலையில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் காலை 6 மணியில் இருந்தே கடற்கரை சாலையில் தேசிய கொடிகளுடன் மக்கள் குவியத் தொடங்கினர். சாலையின் இருபுறமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்து கலை நிகழ்ச்சி மற்றும் அணிவகுப்பை பார்வையிட்டனர். பலர் தேசியக் கொடியை அசைத்து வாழ்த்து தெரிவித்தனர்.

டெல்லியில் மூடு பனிக்கிடையே குடியரசு தின அணிவகுப்பு


இந்தியாவின் 60வது குடியரசு தினமான இன்று தலைநகர் டெல்லியில் நிலவிய கடுமையான மூடுபனியிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டிருக்க குடியரசு தின அணிவகுப்பு வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

இன்று காலை 9.45 மணிக்கு டெல்லியிலுள்ள அமர் ஜவான் நினைவுச் சதுக்கத்தில் நாட்டிற்காக தங்கள் இன்னுயிரை ஈந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார் பிரதமர் மன்மோகன் சிங்.

அமர் ஜோதி சதுக்கத்தில் மலர் வளையம் வைத்து பிரதமர் வணக்கம் செலுத்த, அவருடன் முப்படைகளின் தலைமைத் தளபதிகளும் அணிவகுத்து நின்று மரியாதை செலுத்தினர். அருகில் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் தங்கள் துப்பாக்கிகளை தலை கீழாக நிறுத்தி வணக்கம் செலுத்த, அஞ்சலி கீதம் முழங்கப்பட்டது.

அதன் பிறகு டெல்லி ராஜ்பாத்தில் குடியரசு தின அணிவகுப்பு துவங்கியது. அணிவகுப்பு மரியாதையை ஏற்க வந்த குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலையும், அரசு விருந்தினராக தென் கொரிய நாட்டின் பிரதமரையும் பிரதமர் மன்மோகன் சிங் வரவேற்றார்.

தேசியக் கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டது. கொடி வணக்கம் செலுத்திய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், நாட்டின் பாதுகாப்பிற்காக வீரசேவை புரிந்த மூவருக்கு இராணுவ உயரிய விருதான அசோக் சக்ராவை வழங்கி கெளரவித்தார்.

மேஜர் சிறிராம் குமார், மேஜர் மோஹித் சர்மா, ஹவில்தார் இராஜேஷ் குமார் ஆகியோருக்கு அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டது. மேஜர் மோஹித் குமாருக்கு பதிலாக அவரது மனைவி மேஜர் ரிஷிமாவும், ஜம்மு காஷ்மீர் மாநில எல்லைப் பகுதியான குப்வாராவில் நடந்த மோதலில் வீரமாகப் போராடி உயிர் நீத்த ஹவில்தார் இராஜேஷ் குமாருக்கு வழங்கப்பட்ட அசோக் சக்ராவை அவரது மனைவியும் பெற்றுக் கொண்டனர்.

இந்தியாவின் பாதுகாப்பு வல்லமையை பறைசாற்றும் குடியரசு தின அணிவகுப்பினை அணிவகுப்பு கட்டளைத் தளபதி பரம்ஜித் சிங், தனி வாகனத்தில் வந்து குடியரசுத் தலைவருக்கு வணக்கம் செய்துச் செல்ல துவங்கியது.

டோக்ரா ரெஜிமெண்ட், 61வது குதிரைப் படை ஆகியோர் அணிவகுத்து வர, அதனைத் தொடர்ந்து இந்தியாவின் அதி நவீன போர் வாகனமான அர்ஜூனா டாங்கிகள் அணி வகுத்து வந்தன.

அவைகளைத் தொடர்ந்து ராக்கெட் ரெஜிமெண்ட் என்றழைக்கப்படும் பல்குழல் பீரங்கிப் படையும், போர்க் களத்தில் முன்னேற்றத்தை உறுதி செய்யும் சர்வாத்ரா பொறியல் படை வாகனங்களும், அவற்றைத் தொடர்ந்து களத்திலிருந்து தகவலளிக்கும் அதிநவீன தகவல் தொடர்பு மற்றும் சம்யுக்தா ராடார் படை வாகனங்களும் அணி வகுத்து வந்தன.

துபாயில் ஜோய் ஆலுக்காஸ் ஷோரூம் திறப்பு


துபாய் : முன்னணி நகை நிறுவனமான ஜோய் ஆலுக்காசின் புதிய ஷோரூம், துபாய் குளோபல் வில்லேஜில் திறக்கப்பட்டுள்ளது.

அதை குளோபல் வில்லேஜின் தலைமை செயல் அதிகாரி சாயித் அலி ரெதா திறந்து வைத்தார். விழாவில் ஜோய் ஆலுக்காஸ் குழுமத் தலைவர் ஜோய் ஆலுக்காஸ் கூறுகையில், ÔÔதுபாய் குளோபல் வில்லேஜ், உலகையே ஒரு குடைக்குள் கொண்டுள்ளது. கொண்டாட்டம், மகிழ்ச்சியின் அடையாளமாகி இருக்கிறது. அதில் நாங்களும் பங்கெடுத்துள்ளோம். இங்கு கொண்டாட வருபவர்கள் ஜோய் ஆலுக்காஸ் ஷோரூமில் நகை வாங்கிச் செல்ல வசதியாக இருக்கும். வைரம், முத்து, கல் நகைகளுக்கு அதிக சலுகை அளிக்கிறோம்ÕÕ என்றார்.

ராட்சத சிலிண்டரால் ராயபுரத்தில் பரபரப்பு


சென்னை : ஒரிசா மாநிலம் ஹஜிரா என்ற ஊரில் இருந்து, சென்னை துறைமுகத்துக்கு 615 டன் எடை கொண்ட ராட்சத எரிவாயு சிலிண்டர், கப்பல் மூலம் கடந்த மாதம் கொண்டு வரப்பட்டது. மணலியில் உள்ள சென்னை பெட்ரோலியம் லிமிடெட் நிறுவனத்துக்காக இது வந்துள்ளது.
ஆறு ராட்சத கிரேன்கள் மூலம் சிலிண்டரை நேற்று கப்பலில் இருந்து இறக்கினர். ஹைட்ராலிக் டிரைலர் வாகனத்தில் அது ஏற்றப்பட்டது. அந்த டிரைலர் 420 டயர்கள் கொண்டது. 150 அடி நீளம் கொண்டது. சிலிண்டரை ஏற்றியபின் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு செல்ல துறைமுகத்தில் இருந்து டிரைலர் வெளியே வர முற்பட்டது.
சரக்கு ரயில்கள் செல்லும் தண்டவாளம் பாதிக்கப்படாமல் இருக்க ராட்சத இரும்பு பிளேட் போட்டு அதன்மூலம் டிரைலர் கடந்தது. எனினும் நீளம் அதிகமாக இருந்ததால் கேட் எண் 3, பக்கவாட்டு சுவரை உடைத்து நேற்று மாலை ராட்சத டிரைலர் ராயபுரம் கிழக்கு மாதா தெருவுக்கு கொண்டு வரப்பட்டது.

வெளியில் வந்த ராட்சத டிரைலரையும் அதிலிருந்த சிலிண்டரையும் பார்த்து அப்பகுதியினர் அதிசயித்தனர். மக்கள் கூட்டம் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. ராயபுரம், எண்ணூர் சாலை வழியாக எர்ணாவூர் மேம்பாலத்தில் சென்றால் பாலம் தாங்காது. அதனால் அதன் கீழ் உள்ள ரயில்வே கேட் வழியாக செல்ல உள்ளது. இதற்கு குறைந்தபட்சம் 5 நாட்களாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இரவில் மட்டுமே டிரைலரை இயக்கிச் செல்கின்றனர்.

சன் டிவியின் புதிய தொடருக்கு நடிகர், நடிகைகள் தேர்வு


சென்னை : இயக்குனர் திருமுருகன் இயக்கிய ‘மெட்டிஒலி’ மெகா தொடர் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. இந்த தொடருக்கு ரசிகர்களிடம், குறிப்பாக பெண்களிடம் அதிக வரவேற்பு இருந்தது. தற்போது, இயக்குனர் திருமுருகன் சன் டிவிக்காக ‘நாதஸ்வரம்’ என்ற நெடுந்தொடரை இயக்க உள்ளார். திருபிக்சர்ஸ் பிரைவேட் லிட் என்ற நிறுவனம் தயாரிக்கும் இந்த தொடர் விரைவில் திங்கள் முதல் வெள்ளிவரை ஒளிபரப்பாக உள்ளது.

இந்த தொடரில் நடிக்க முழுக்க முழுக்க புதுமுகங்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்காக கோவை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட நகரங்களில் நடிகர், நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு விட்டனர். சென்னையில் நேற்று கே.கே.நகர் தாய் சத்தியா மெட்ரிகுலேசன் பள்ளியில் நடிகர்களுக்கான தேர்வு நடந்தது. இதில் 3ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தினகரன் நாளிதழில் கடந்த சில நாட்களாக வெளியான கூப்பனை கொண்டு வந்தவர்கள் ஒவ்வொருவராக அனுமதிக்கப்பட்டனர். 4 பேர் குழு, எல்லோரையும் நடித்து காட்டச் சொல்லி தேர்வு செய்தனர். தேர்வானவர்களில் சிலரை இயக்குனர் திருமுருகன் தேர்வு செய்தார். இன்று காலை, நடிகைகள் தேர்வு நடக்கிறது.

நாதஸ்வரம் தொடர் குறித்து இயக்குனர் திருமுருகன் கூறியதாவது:
சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டிஒலி தொடர் அனைத்து தரப்பினரிடமும் எதிர்பார்பை ஏற்படுத்தியது. அந்த தொடரில் கிடைத்த அனுபவங்களை மெருகேற்றி ‘நாதஸ்வரம்’ என்ற புதிய நெடுந்தொடரை இயக்க உள்ளேன்.

இதில் நடிப்பவர்கள் அனைவருமே புதுமுகங்கள். இதனால் கதாபாத்திரத்துக்கு ஏற்ற திறமையுள்ள நடிகர், நடிகைகளை தேர்வு செய்து வருகிறேன்.
சென்னையில் நடந்த தேர்வில் 72 வயது நாடக கலைஞர் வந்திருந்தார். அந்த வயதிலும் நடிக்க வேண்டும் என்ற அவரின் ஆர்வம் என்னை வியப்படைய வைத்தது. ஆயிரக்கணக்கில் ஆட்கள் குவிந்ததால், அனைவரையும் தனித்தனியாக சந்தித்து தேர்வு செய்ய முடியவில்லை. ஒரு பகுதியினரை வரும் சனிக்கிழமை நடைபெறும் தேர்வில் கலந்து கொள்ள சொல்லியிருக்கிறோம்.

பலரை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதால், அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்கள் சந்திக்கும் பிரச்னைகளை உள்வாங்கிக் கொள்ள முடிகிறது. தேர்வான அனைருக்கும் நடிக்க வாய்ப்பு தரப்படும். இந்த தொடர் காரைக்குடி உள்ளிட்ட பல இடங்களில் எடுக்கப்பட உள்ளது. இங்குள்ள பெரிய வீடுகளை சார்ந்து வாழும் குடும்பங்களின் பின்னனியை காட்டுவதாக தொடர் அமையும்.

இவ்வாறு திருமுருகன் கூறினார்.

யுஎஸ்-வங்கி மோசடியில் சிக்கியவருக்கு பத்மபூஷண்!


டெல்லி: வங்கி மோசடியில் சிக்கியவரான அமெரிக்க இந்தியர் சந்த் சிங் சத்வாலுக்கு பத்மபூஷண் விருது அளிக்கப்பட்டிருப்பதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று கோரி குடியரசுத் தலைவருக்கும், பிரதமருக்கும் அது கடிதம் எழுதியுள்ளது.

சத்வாலுக்கு பத்மபூஷண் விருது அளிக்கப்பட்டிருப்பது குறித்து ஏமாற்றம் தெரிவித்துள்ள பாஜக, இந்த முடிவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து கட்சியின் லோக்சபா துணைத் தலைவர் கோபிநாத் முண்டே இருவருக்கும் எழுதியுள்ள கடிதத்தில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, மோசடி புகாரில் சிக்கிய சத்வாலுக்கு பத்ம பூஷண் விருது அளிக்க பரிந்துரைத்தது பெரும் ஏமாற்றம் அளிக்கிது.

இதன் மூலம் பெருமை வாய்ந்த பத்ம பூஷண் விருதுக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் பெரும் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக சர்ச்சைக்குள்ளானவர் சத்வால். அப்படிப்பட்டவர் இந்த விருதைப் பெற பொருத்தமற்றவர். எனவே இந்த முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று கூறியுள்ளதாக பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறினார்.

யார் இந்த சத்வால்...

அமெரிக்காவில் ஹோட்டல் குழுமத்தை நடத்தி வருகிறார் சத்வால்.

அங்கு 9 மில்லியன் டாலர் வங்கி நிதியை மோசடி செய்ததாக அவர் சர்ச்சைக்குள்ளானார். மேலும், இதுதொடர்பாக கைதும் செய்யப்பட்டவர். இதனால்தான் சத்வாலுக்கு பத்மபூஷண் விருது அளிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் தனக்கு இந்த விருது கிடைத்திருப்பது திரில்லாக இருப்பதாக சத்வால் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தியத் தூதர் மீராசங்கர் மூலம் எனக்கு விருது கிடைத்துள்ள தகவலை அறிந்தேன். மிகவும் திரில்லாக இருக்கிறது. இந்திய அரசுக்கு நான் நன்றிக் கடன் பட்டுள்ளேன்.

பாஜகவின் எதிர்ப்பு குறித்து எனக்குத் தெரியாது. எனது நாட்டை நான் நேசிக்கிறேன். கடந்த 30 ஆண்டுகளாக இந்தியாவின் நலனுக்காகவும் நான் உழைத்து வருகிறேன்.

கட்சிகள் குறித்து எனக்குக் கவலை இல்லை. அவை வரும் போகும். நாடு மாறாது.

இந்த விருதின் மூலம் எனது முயற்சிகளையும், சேவைகளையும் அங்கீகரித்துள்ள பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நான் நன்றி கூறுகிறேன் என்று கூறியுள்ளார் சத்வால்.

சத்வால் தவிர மேலும் 12 என்.ஆர்.ஐகளும் பத்ம விருது பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 24 ஜனவரி, 2010

நாளை குடியரசு தின விழா : நாடு முழுவதும் தீவிர பாதுகாப்பு


புதுடெல்லி: நாட்டின் 61வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்படுகிறது. குடியரசு தினத்தை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து. நாடு முழுவதும், ராணுவம் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. குடியரசு தினத்தை யொட்டி, டெல்லியில் கண்கவர்மிக்க பேரணி நடக்கிறது. குடியரசு தினவிழாவை சீர்குலைக்க பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் ஊடுருவக் கூடும் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது.

மேலும், லஸ்கர் தீவிரவாதிகள், ஐரோப்பாவில் இருந்து Ôபாரா&கிளைடர்Õ என்ற இருவர் பறக்கும் குட்டி விமானங்களை வாங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதை பயன்படுத்தி தீவிரவாதிகள் வான்வெளி தாக்குதலும் நடத்தக் கூடும் என்று தகவல் கிடைத்துள்ளதால், விமானப்படையும் ராணுவமும் உஷார்படுத்தப்பட்டு இருக்கிறது.

அணிவகுப்பு நடைபெறும் விஜய்சவுக்கில் இருந்து செங்கோட்டை வரையிலான 8 கிலோ மீட்டர் தொலைவுக்கு 15,000 டெல்லி போலீசாரும், துணை ராணுவத்தினரும் குவிக்கப்பட்டு உள்ளனர். டெல்லி முழுவதும் தரையில் இருந்து வானம் வரை தீவிர கண்காணிப்பு போடப்பட்டு இருக்கிறது. அந்தநேரத்தில் டெல்லி வான்வெளியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தின பேரணி செல்லும் பகுதிகளில் 105க்கும் அதிகமான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன. இவற்றின் மூலம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால், டெல்லி முழுவதும் பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டுள்ளது. டெல்லி மட்டுமல்லாது மும்பை, சென்னை, ஐதராபாத், பெங்களூர், கொல்கத்தா உட்பட பல முக்கிய நகரங்களின் மீது தீவிரவாதிகள் குறி வைத்துள்ளதாக உளவுத்துறை கூறியுள்ளது.

மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நடந்த தாக்குதல் போல் மீண்டும் தாக்குதல் நடத்தவும் வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது. அதனால், மும்பையில் பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டுள்ளது. மும்பைக்கு செல்லும் எல்லா வழிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இ---மெயில் பார்ப்பதால் 10 ஆண்டு உழைப்பு "அவுட்"


லண்டன்: அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள், இ&மெயில் பார்க்கவும், அவற்றுக்கு பதில் அனுப்பவும் தங்களது வாழ்நாளில் 10 ஆண்டுகள் வரை செலவிடுவதாக ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. இதை தவிர்க்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இன்றைய அவசர தேவைக்கு ஏற்ப, கடிதப் போக்குவரத்து முறையும் எலக்ட்ரானிக் மயமாகி உள்ளது. அதுதான் இ&மெயில். ஆனால், சிலர் இதற்கு அடிமையாகவே ஆகி உள்ளனர்.

கடும் வேலை நெருக்கடிக்கு இடையிலும், அலுவலக ஊழியர்கள் 5 நிமிடத்துக்கு ஒரு முறை இ&மெயில் ஏதேனும் வந்துள்ளதா என பார்ப்பதாக ஸ்காட்லாந்தின் ஐ.டி. பயிற்சி நிறுவனமான இண்டிசியா டிரெய்னிங் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மேலும் இ&மெயிலுக்கு உடனே பதிலும் அனுப்புகின்றனர். இதனால் செய்யும் வேலை பாதிக்கப்படுகிறது. இ&மெயிலுக்காகவே ஒரு வாரத்துக்கு ஒரு ஊழியர் 8.5 மணி நேரம் செலவிடுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால் வாழ்நாளில் 9.7 ஆண்டுகளை வீணடிக்கிறதாம் இ&மெயில். இந்த பழக்கம் நல்லதல்ல என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ÔÔசிலர் நடு இரவில் யூரின் போவதற்காக எழுந்தால்கூட அந்த நேரத்தில் இ&மெயில் ஏதாவது வந்துள்ளதா என பார்க்கிறார்கள். பொதுவாக எதையோ எதிர்பார்த்துக் காத்திருப்பவர்கள் இதுபோல செய்வார்கள். புகை, மது, சூதாட்டம் போன்றதுதான் இந்த பழக்கமும். இதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.ÕÕ என உளவியல் நிபுணர் டாக்டர் மைக்கேல் ரெட்டி தெரிவித்தார்.

வெண்ணெயை தடை செய்தால் ஆண்டுக்கு 3,500 பேர் உயிரை பாதுகாக்கலாம்


லண்டன்: பிரிட்டனில் வெண்ணெய் மற்றும் பிற உயர் கொழுப்பு வகை உணவுகளைத் தடை செய்தால் ஆண்டுக்கு 3,500 பேரின் உயிரைக் காக்க முடியும் என பிரிட்டனின் பிரபல இதய அறுவை சிகிச்சை நிபுணர் ஷியாம் கோல்வெகர் கூறினார். லண்டன் யூனிவர்சிட்டி மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை நிபுணராக பணி புரிபவர் ஷியாம் கோல்வெகர். அவர் கூறிய கருத்துகளை இன்டிபென்டன்ட் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

எளிதில் கிடைக்காத உணவு வகைகளை தேடிப்பிடித்து மக்கள் வாங்கிச் சாப்பிடுவதில்லை. எளிகாகக் கிடைக்கிற, எளிதில் தயாரிக்கக் கூடிய உணவு வகைகளைத்தான் விரும்புகிறார்கள். அந்த வகையில் மக்களுக்கு எளிதாகக் கிடைப்பது ரொட்டியும் வெண்ணெயும். இரண்டு ஸ்லைஸ் ரொட்டி, கொஞ்சம் வெண்ணெய், அத்துடன் தடவிக்கொள்ள ஏதாவது கிரீம் அல்லது ஜாம் அவர்களுக்கு போதும். இந்த வகை காலை உணவில் ஒருவருக்கு 16.1 கிராம் உயர் கொழுப்பு கிடைக்கிறது.

ஒருவர் நாளொன்றுக்கு உயர் கொழுப்பு வகைகளை 20 கிராம் வரை சாப்பிடலாம். அதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. ஆனால் காலை உணவில் மட்டும் 16.1 கிராம் கொழுப்பு சாப்பிடும் ஒருவர், நிச்சயம் மற்ற இரண்டு வேளை உணவிலும் கொழுப்பை அதிகமாகச் சாப்பிடும் நிலை ஏற்படுகிறது.

அதே நபர் காலை உணவில் கொழுப்பு குறைவான, வெண்ணெய்க்கு மாற்றான ஒன்றை ரொட்டித்துண்டுகளின் மேற்பரப்பில் தடவிக் கொண்டால் அவர் உண்ணும் கொழுப்பின் அளவு 92 சதவீதம் குறைகிறது. இந்த வகையில் சாப்பிடும் ஒருவர் நாளொன்றுக்கு உட்கொள்ளும் கொழுப்பின் அளவை 8 கிராம்வரை குறைக்கலாம். இதற்கு அரசு தான் உதவ வேண்டும். வெண்ணெய் போன்ற உயர் கொழுப்பு வகை உணவுப் பொருட்க¬ளை தடை செய்ய வேண்டும். இதனால் இதயநோய்களைக் குறைக்கலாம். பிரிட்டனில் பெரும் ஆட்கொல்லியாக விளங்குவது இதய நோய்தான். அதற்கு காரணம் கூடுதலான கொழுப்புள்ள உணவு வகைகள்தான். வெண்ணெய் போன்ற உயர் கொழுப்பு வகைகளை தடை செய்தால் ஆண்டுக்கு சுமார் 3500 உயிர்களைக் காக்க முடியும்.

எங்களிடம் சிகிச்சைக்கு பலர் வரும் பொழுது நாங்கள் உதவி எதுவும் செய்ய முடியாத நிலையில்தான் வருகிறார்கள். கொழுப்பில்லாத எளிய வகை உணவுக்கு மாறுவது அவர்களுக்கு பெரிய உதவிகரமான வழியாக அமையும். இவ்வாறு ஷியாம் கோல்வெகர் கூறினார்.

பாட‌ல் எழுது‌ம் கலெ‌க்ட‌ர்

பல பட‌ங்களு‌க்கு இசையமை‌த்தவ‌ர் இசையமை‌ப்பாள‌ர் பர‌த்வா‌ஜ். த‌ற்போது ஒ‌ன்‌றிர‌ண்டு பட‌ங்களு‌க்கு இசையமை‌த்து வரு‌ம் இவ‌ர் ஒரு த‌மி‌ழ் பாட‌ல் ஆ‌ல்ப‌ம் தயா‌ரி‌க்கு‌ம் முய‌ற்‌சி‌யி‌ல் இரு‌க்‌கிறா‌ர் அத‌‌ற்கான இசை கோ‌ர்‌ப்பு ப‌ணி‌யி‌ல் ஈடுப‌ட்டு வரு‌கிறா‌‌ர்.

மேலு‌ம் இ‌ந்த ஆ‌ல்ப‌த்‌தி‌ல் இட‌ம்பெறு‌ம் அ‌த்தனை பாட‌ல்களையு‌ம் த‌மி‌ழ்நாடு சு‌ற்றுலா‌த் துறை இய‌க்குன‌ர் வெ. இறைய‌ன்பு ஐ.ஏ.எ‌ஸ். எழு‌தி இரு‌க்‌கிறா‌ர். மெட‌்டு‌க்கு பாட‌ல் எழுத பழகாததா‌ல் அருவடைய க‌விதை வ‌ரிகளு‌க்கு இசை வடிவ‌ம் கொடு‌த்து‌ள்ளா‌ர் பர‌த்வா‌ஜ்.

சு‌ற்றுலா‌த் துறை‌யி‌ன் இய‌க்குந‌ர் எ‌ன்பதா‌ல் சு‌ற்றுலா இட‌ங்களை‌ப் ப‌ற்‌றியு‌ம் அத‌ன் அழகு, பாதுகா‌ப்பு, பய‌ன் ப‌ற்‌றிய பாடலாக இரு‌ப்ப‌ினு‌ம் அனைவரு‌ம் ர‌சி‌க்கு‌ம்படி இரு‌க்கு‌ம் எ‌ன்‌கிறா‌‌ர் வெ. இறைய‌ன்பு அவ‌ர்க‌ள்.

எ‌ந்த உடையை எ‌ப்போது அ‌ணியலா‌ம்

காக்ரா - சோலியை திருமணம், பார்டி, மற்ற விசேஷங்களுக்கு ஏற்றது. வெளிர் நிறங்களில் வேலைப்பாடு செய்த காக்ரா சோலியில் நீங்கள் ஜொலிக்குப் போவது நிச்சயம்.

ஸ்‌ப்லிட் ட்ரெஸ் இந்த நீண்ட ட்ரெஸ்ஸில் உள்ள கட் நடக்கும் போது உங்கள் அழகான கால்களை தெரியவைக்கும். எடை அதிகம் உள்ளவர்களும் அணியலாம்.

ட்ரா ஸ்ட்ரிங் ஷார்ட்ஸ், ஸ்ட்ரெச் டாப்ஸ் போ‌ன்றவை உட‌ல் அமை‌ப்பு அழகா‌க‌‌க் கொ‌ண்டவ‌ர்க‌ள் வா‌ங்‌கி அ‌ணியலாம. தேவையான அளவுக்கு இறுக்கி கட்டக்கூடிய வசதி உள்ள ஷார்ட்ஸ்சு‌ம் இ‌ந்த வகை‌யி‌ல் உ‌ண்டு. இது உடலோடு ஒட்டியபடி இருக்கும்.

பட்டன் ஜீன்ஸ், மல்டி கலர் ஷர்ட் போ‌ன்றவை காலேஜ், ‌விரு‌ந்து ‌நிக‌ழ்‌ச்‌சிகளு‌க்கு அணியலாம். எடை இதற்கு தடை இல்லை. மார்டனாகவும் அதே நேரத்தில் அடக்கமாகவும் தோன்ற வைக்கும்.

ஸ்போர்ட்ஸ் மினி உடைக‌ள் டென்னிஸ், பாஸ்கெட் பால், வாலி பால் போ‌ன்ற ‌விளையா‌ட்டுகளை ‌விளையாடு‌ம் போது அண‌யிலா‌ம்.

புதன், 20 ஜனவரி, 2010

200 ஆண்டுகளில் இல்லாத பெரும் நிலடுக்கம்… பதற வைக்கும் ஹைதி பேரிழப்பு!

200 ஆண்டுகளில் இல்லாத பெரும் நிலடுக்கம்… பதற வைக்கும் ஹைதி பேரிழப்பு!

போர்ட் -அவ்-பிரின்ஸ்: அமெரிக்கா அருகே உள்ள ஹைதி நாட்டின் தலைநகர் போர்ட் அவ் பிரின்ஸில் நடந்த பெரும் நில நடுக்கத்தில் பல ஆயிரம் பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3.23 மணிக்கு இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஹைதியின் நேரம் மாலை 4.35 மணி. மக்கள் தங்கள் வேலைகளில் மும்முரமாக இருந்த நேரம் என்பதால், உயிரிழப்பு கற்பனை செய்ய முடியாத அளவு கடுமையாக உள்ளதென ஏபிஸி செய்தி தெரிவிக்கிறது.

7.3 ரிக்டர் அளவு பதிவான இந்த நில நடுக்கத்தில் தலை நகர் போர்ட் அவ் பிரின்ஸ் உருக்குலைந்து போயுள்ளது. அடுத்தடுத்து 13 முறை அங்கு பூமி குலுங்கியது.

ஹைதி நாட்டு அதிபர் மாளிகையும் இந்த அதிர்வுக்கு தப்பவில்லை. ஜனாதிபதி மாளிகையின் 60 சதவீத பகுதி நொறுங்கிப் போனது. அதிர்ஷ்டவமாக ஹைதி ஜனாதிபதி ரேனி பிரிவல் காயமின்றி உயிர் தப்பினார்.

அமெரிக்காவுக்கு கிழக்கே உள்ள தீவு நாடான ஹைதியை உலுக்கியுள்ள இந்த நலநடுக்கம், அருகில் இருக்கும் கியூபாவின் சான்டியாகோ உள்ளிட்ட பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்திற்கு பின்பு சுனாமி ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் கியூபாவின் பராக்கோ நகரில் கடலோர பகுதியில் உள்ளவர்கள் கட்டிடங்களை காலி செய்து வெளியேற தொடங்கினர்.

போர்ட் அவ் பிரின்ஸ் நகரில் இருந்து தென்மேற்கே 15 கி.மீ தொலைவை மையமாகக் கொண்ட இந்த நிலநடுக்கம் இந்திய நேரப்படி அதிகாலை 3.23க்கு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தகவலில் கூறப்பட்டுள்ளது.

உலகின் மிக ஏழை நாடுகளுள் ஒன்றாக அறியப்படும் ஹைதியில் 200 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டு ஏராளமான மக்கள் வீடுகளை இழந்துள்ள நிலையில், பல்வேறு நாடுகளும் நிதிஉதவிகளை வழங்க முன்வந்துள்ளன.

தற்போதைய சூழலில் எந்த விதமான உதவிகளை அளிக்கவும் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார். மேலும் பிரான்ஸ், கனடா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளும் உதவிகள் வழங்க முன்வந்துள்ளன.

இந்தியர்கள் நிலை?

ஹைத்தியில் ஐ.நா அமைதிக் குழு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில் 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பணிபுரிவதாகவும் கூறப்படுகிறது.

ஹைத்தியில் இந்தியர் விவகாரங்களை கவனிக்கும் கியூபாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் நிலநடுக்கத்தால் இந்தியர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே, ஐநா அமைதி நடவடிக்கைகளுக்காக ஹைத்திக்கு சென்றிருந்த 950 இலங்கை ராணுவப்படை வீரர்களை நிலநடுக்கத்திற்கு பின்பு தொடர்பு கொள்ள முடியவில்லை என இலங்கை ராணுவம் தெரிவித்தது.

பின்னர் அனைவரும் பாதுகாப்புடன் இருப்பதாக இலங்கை ராணுவ செய்தித்தொடர்பாளர் உதயநாயணக்கரா அறிவித்துள்ளார்.

ஹைதி நில நடுக்கம்… சில படங்கள்:









விப்ரோ லாபம் 21 சதவீதம் உயர்ந்தது


மும்பை: கடந்த 2009 டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைந்த 3வது காலாண்டில் விப்ரோ நிறுவனத்தின் நிகர லாபம் 21.26% உயர்ந்து ரூ.1,217.4 கோடியாகி உள் ளது. இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.7,055 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் இது ரூ.6,773 கோடியாக இருந்தது. கடந்த மூன்று மாதத் தில் மட்டும் 31 புதிய வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.

திருந்தாத ஜென்மங்கள்!


ஒவ்வொரு குழந்தையும் ஒரு அழகிய பூவுக்கு சமம். பள்ளிக் கூடம் நடத்துகிறோம் எனும் பெயரில் அந்தப் பூக்களை காலில் போட்டு நசுக்கும் காவாலித்தனத்தை சிலர் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

அதன் விளைவு ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு தனியார் பள்ளியின் கூரை சரிவது, தீப் பிடிப்பது, பள்ளி வாகனங்கள் விபத்தில் சிக்குவது என பல்வேறு வழிகளில் இந்தப் பூக்கள் சிதைந்து சின்னாபின்னமாகி வருகின்றன. இந்த சம்பவங்கல் நடப்பது தவிர்க்கமுடியாத காரணங்களால் அல்ல. அலட்சியம் காரணமாகவே என்ற உண்மை ஆத்திரத்தைக் கூட்டுகிறது.

இதோ இன்று வேதாரண்யம் மற்றும் ஆத்தூரில் நடந்த இரு விபத்துகளில் 10 குழந்தைகள் துர்மரணத்தைச் சந்தித்துள்ளன.

ஒரு குழந்தையின் அழுகையையே தாங்க முடியாத மனதுக்கு 10 குழந்தைகளின் மரணம் சவுக்காலடித்த வேதனையைத் தருகின்றன. இது தவிர 40க்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த இரு விபத்துக்களிலும் காயமடைந்துள்ளனர்.

இந்த மரணங்களுக்கான காரணம் தெளிவானது… அது பள்ளிகளின் பணம் சம்பாதிக்கும் பேராசை. ஒவ்வொரு தனியார் பள்ளியும் கட்டணம் என்ற பெயரில் அடிக்கிற கொள்ளை போதாதென்று, குட்டி குட்டியாக போக்குவரத்துக் கழகங்களை வேறு ஆரம்பித்து வைத்துள்ளன.


சரியான பயிற்சி இல்லாத, குழந்தைகளுக்காக வேலை பார்க்கிறோம் என்ற குறைந்தபட்ச உணர்வு கூட இல்லாதவர்கள்தான் இந்த ‘குட்டி போக்குவரத்துக் கழகங்க’ளில் பணியாற்றுகிறார்கள். ஏலத்தில் எடுத்த அடாசு வண்டிகளையெல்லாம், ‘கவனிக்க வேண்டிய இடத்தில் கவனித்து’ எஃப்சி பண்ணி பயன்படுத்துவது இவர்கள் டெக்னிக்.

குழந்தைகளின் வசதியை இவர்கள் கவனத்தில் கொள்வதே இல்லை.

‘எத்தனை ட்ரிப் அடிக்கிறது… ஏத்துடா மொத்தத்தையும் ஒரே ட்ரிப்புல’ என்று பொதி மூட்டைகள் மாதிரி இந்த மழலைச் செல்வங்களை ஏற்றிக் கொண்டு செல்வதுதான் பல விபத்துக்களுக்குக் காரணமாகிறது.

இன்று நடந்த விபத்துக்கும் இதுதான் காரணமாகியுள்ளது. கூடவே, இந்த செல்போன் சனியனும் சேர்ந்து கொண்டது. அப்படி என்னதான் பேசுவார்களோ… காதில் வைத்தால் கருமத்தை எடுக்க மாட்டேன் என்கிறார்கள். இந்த பள்ளிக் குழந்தைகள் பேருந்தை இயக்கிய ஓட்டுநரும் முக்கிய வளைவு ஒன்றை நெருங்கும்போது செல்போன் பேச ஆரம்பித்து, பேலன்ஸ் தடுமாறி குளத்தில் விட்டிருக்கிறான் பேருந்தை.

பழைய தகர டப்பா வேன் வேறு. இதனால் குழந்தைகள் 10 பேர் அந்த இடத்திலேயே இறந்து போக, மீதியுள்ளவர்கள் குற்றுயிரும் குலையுயிருமாக மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு முறை பெரும் விபத்து நேரும் போது மட்டும் ஆளாளுக்கு கண்ணீர் சிந்துவதும், தற்காலிக சபதங்கள் எடுப்பதும் ஓரிரு நாளில் அந்த சபதத்துக்கும் சேர்த்து பாலூற்றிவிட்டு, மீண்டும் அவரவர் வேலையைப் பார்க்க ஆரம்பிப்பதும்தான் அனைத்து தவறுகளுக்கும் காரணம். பெற்றோர்களுக்கும் இந்த பாவத்தில் பங்கிருக்கிறது.

இறந்தபோன குழந்தைகளுக்கு தலா ரூ 50 ஆயிரம் இழப்பீடு கொடுத்துவிட்டு, அடுத்த நஷ்ட ஈட்டை யாருக்குத் தரலாம் என்று தேடிக் கொண்டிருப்பது அரசுக்கு அழகல்ல.

நல்ல தனியார் பள்ளிகளைத் தட்டிக் கொடுத்தும், மோசமான உள்கட்டமைப்பு உள்ள தனியார் பள்ளிகளை ஒழிப்பதற்கும் சரியான திட்டம் ஒன்றை என்றைக்குத்தான் செயல்படுத்தப்போகிறார்களோ?