வெள்ளி, 8 ஜனவரி, 2010

சென்னை சங்கமம் நாளை தொடக்கம்


சென்னை : சென்னை சங்கமத்தின் ஒருங்கிணைப்பாளர் கனிமொழி எம்பி நேற்று கூறியதாவது:
தமிழ் மையம், தமிழக அரசு சுற்றுலா வளர்ச்சி & பண்பாட்டுத்துறை இணைந்து இந்தியாவின் மிகப்பெரும் திறந்தவெளி கலை, பண்பாட்டு திருவிழாவான சங்கமம் நிகழ்ச்சியை சென்னையில் நடத்த உள்ளன. இந்நிகழ்ச்சியை, முதல்வர் கருணாநிதி நாளை மாலை தீவுத்திடலில் தொடங்கி வைக்கிறார். அமைச்சர் சுரேஷ்ராஜன் தலைமை வகிக்கிறார்.

தொடக்க விழா சிறப்பு நிகழ்ச்சியாக 300க்கும் மேற்பட்ட கலைஞர்கள், Ôபிறப்பொக்கும்Õ என்ற இசை, நடன, நாடக நிகழ்ச்சி நடத்துகின்றனர். 16ம் தேதி மாலை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் சங்கமம் நிகழ்ச்சி நிறைவு பெறும்.
இவ்வாறு கனிமொழி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக