ஞாயிறு, 31 ஜனவரி, 2010

காதலிப்பது போல் நடித்து இளம் பெண்கள் கடத்தல்


திருவனந்தபுரம் : பத்தனம்திட்டை அருகே இன்டர்நெட் சாட்டிங் மூலம் இளம்பெண்ணை கடத்திய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

பத்தனம்திட்டை அருகே உள்ள கோன்னி பகுதியை சேர்ந்தவர் பிரதீப். இவரது 22 வயது மகள் பத்தனம்திட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த இரு தினங்களுக்கு முன் கல்லூரிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து பிரதீப், கோன்னி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் மாணவியை வாலிபர் ஒருவர் இன்டர்நெட் சாட்டிங் மூலம் ஏமாற்றி கடத்தி சென்றது தெரிய வந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் இதுபோல் அந்த பகுதியில் 7 பெண்கள் கடத்தப்பட்டது தெரிய வந்துள்ளது. இதன் பின்னணியில் ஒரு பெரிய கும்பல் செயல்பட்டு வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த கும்பல் பணக்கார வீட்டு இளம்பெண்களை குறிவைத்து இன்டர்நெட் சாட்டிங் மூலம் காதலிப்பது போல் நடித்து பின்னர் திருமணம் செய்வதாக கடத்தி சென்று பணம், நகை பறித்துள்ளனர். இந்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக