புதன், 6 ஜனவரி, 2010

பலமுறை மசாஜ் செய்துகொண்டேன்


சென்னை : பாலியல் புகார் கூறிய இளம்பெண்ணிடம் பலமுறை மசாஜ் செய்துகொண்டேன் என்று போலீசாரிடம் சிக்கிய சாமியார் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த ஹேமலதா, தன்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் வசிக்கும் சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார், பலமுறை கற்பழித்ததாக போலீசில் புகார் செய்தார். இதுதொடர்பான விசாரணைக்கு வருமாறு சாமியாரை மாம்பலம் போலீசார் அழைத்தனர். ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டார். பின்னர், பெங்களூரில் பதுங்கியிருந்த அவரை தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் பிடித்தனர். சென்னை பனையூரில் உள்ள ரகசிய பங்களாவில் வைத்து, அவரிடம் 2 நாட்களாக போலீசார் விசாரணை நடத்தினர்.

போலீசில் சாமியார் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு: நான், மற்ற சாமியாரை போல குறி சொல்வதில்லை. ஹோமியோபதி படித்துள்ளேன். அதற்கான சிகிச்சைதான் அளித்து வந்தேன். கடவுள் பக்தி அதிகம் என்பதால் காவி வேட்டி கட்ட ஆரம்பித்தேன். ஜோதிடமும் பார்ப்பேன். எனக்கு 65 வயதாகி விட்டது.

எனக்கும், மனைவிக்கும் ஆயுர்வேத சிகிச்சை அளிக்க பெண் தேவை என்று, என்னுடைய கார் டிரைவர் ஆனந்தனிடம் தெரிவித்தேன். கென்னடி என்பவர் மூலம் ஹேமலதாவை ஏற்பாடு செய்தார். 8 முறைக்கு மேல் எனக்கும், மனைவிக்கும் வீட்டில் வைத்து மசாஜ் செய்துள்ளார்.

அபிராமபுரத்தில் ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்தேன். பின்னர், அந்த வீட்டை வாங்கினேன். அது தொடர்பாக வீட்டு உரிமையாளருக்கும், எனக்கும் பிரச்னை ஏற்பட்டது. இதுதொடர்பான வழக்கில் எனக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கும் நிலை உள்ளது. இதனால், என் மீது ஆனந்தன், கென்னடி, ஹேமலதா ஆகியோரை தூண்டி விட்டு புகார் கொடுக்க வைத்துள்ளனர். நான் ஒரு முறைகூட ஹேமலதாவிடம் தவறாக நடந்தது இல்லை. எந்த மருத்துவ பரிசோதனைக்கும் தயாராக உள்ளேன்.

எனக்கு மது குடிக்கும் பழக்கம் இல்லை. ஆனால் பீர் சாப்பிடுவேன். மாமிசமும் சாப்பிடுவேன். பெண்களுடன் தொடர்பு வைத்ததில்லை. என் மதிப்பை குலைக்கவே இந்த சதி திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு தனது வாக்குமூலத்தில் சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார் கூறியுள்ளார்.
இந்நிலையில் நுங்கம் பாக்கம் காம்தாநகரில் உள்ள சாமியாரின் வீட்டில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக