ஞாயிறு, 28 மார்ச், 2010
பாதி நுரையீரலுடன் வெட்டி எடுக்கப்பட்ட பேனா முனை!
பேனாவின் முனையை விழுங்கிய 8 வயது சிறுவனுக்கு சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை மருத்துவக் குழுவினர், அறுவை சிகிச்சை நடத்தி பேனா முனை சிக்கியதால் அழுகிப் போன நுரையீரலின் ஒரு பகுதியை வெட்டி எடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ராமமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் சக்திவேல் (வயது 8). தனியார் பள்ளி ஒன்றில் 3-ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் போது மை பேனாவின் கீழ் இருக்கும் மூடிப் பகுதியை விழுங்கி விட்டான்.
உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காண்பித்த போது, உணவுக் குழாய் வழியாக மூடி வெளியே வந்து விடும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
சில நாட்கள் கழித்து சக்திவேல் மூச்சு விடும்போது சத்தம் கேட்டது. சளி பிடித்து காய்ச்சலும் அடிக்க ஆரம்பித்தது. இந்த நிலையில் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட சக்திவேலுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்ததில், இடது நுரையீரல் கீழ் பகுதியில் பேனா முனை இருப்பதும் அந்த பகுதியில் ரத்த ஓட்டம் தடைபட்டு பாதி நுரையீரல் அழுகி சீழ் பிடித்திருப்பதும் தெரிய வந்தது.
உடனடியாக இதய சிகிச்சை நிபுணர் மருத்துவர் பி. மூர்த்தி, மருத்துவர் வரதராஜூலு ஆகியோர் சக்திவேலுக்கு அறுவை சிகிச்சை செய்தனர்.
நுரையீரல் பகுதியில் இருந்த பேனா முனையையும், சீழ் பிடித்து செயல் இழந்த பாதி நுரையீரலையும் வெட்டி எடுத்தனர். அறுவை சிகிச்சைக்குப் பிறகு சிறுவன் உடல் நலம் தேறி வருவதாகவும், வெட்டிய நுரையீரல் பகுதி சில நாட்களில் பழைய நிலைக்கு விரிவடைந்து விடும் என்றும் மருத்துவர்கள் கூறினர்.
பெற்றோருக்கு எச்சரிக்கை தேவை
பேனாவின் மூடியை விழுங்கியதால் நுரையீரல் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் பாதி நுரையீரல் வெட்டி எடுக்கப்பட்ட சக்திவேலைப் போல ஒரு ஆண்டுக்கு 300 குழந்தைகள் மருத்துவமனைக்கு வருகின்றனர் என்று அறுவை சிகிச்சை செய்த மூர்த்தி கூறியுள்ளார்.
சக்திவேலுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் மூர்த்தி கூறுகையில், சேப்டி பின், ஊக்கு, குண்டூசி, புளியங்கொட்டை, பொம்மையில் உள்ள விசில், பட்டன், மீன் முள் ஆகிய பொருட்களை விழுங்கி நுரையீரலில் சிக்கி விட்டதாக ஆண்டுக்கு 300 குழந்தைகள், எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனைக்கு வருகின்றனர்.
95 விழுக்காடு குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் டியூப் போட்டு சிக்கியப் பொருளை எடுத்து விடுகிறோம். ஆனால் பொருள் சிக்கி சில நாட்கள் ஆகிவிட்டால், நுரையீரல் பகுதிக்கு செல்லும் ரத்த ஓட்டம் அடைபட்டு, அதனால் நுரையீரல் கெட்டுப் போகிறது.
இந்த நிலையில் அறுவை சிகிச்சை செய்து அழுகிய நுரையீரலை வெட்டி எடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
எனவே, குழந்தைகள் விளையாடும் போது பெற்றவர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். மிகச் சிறியப் பொருட்கள் குழந்தைகளின் கைகளில் கிடைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதுபோன்ற பொருட்கள் வாயில் வைத்து விளையாடும் போது பெற்றவர்கள் பிள்ளைகளை எச்சரிக்கையாக கண்காணிக்க வேண்டும். அது தவறு என்பதை எச்சரிக்கை செய்ய வேண்டும்.
அவ்வாறு ஏதேனும் பொருட்கள் சிக்கிக் கொண்டால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து வருவது நல்லது என்றும் நீங்களே அதனை எடுக்க முயற்சிப்பதோ, மலத்தின் வழியாக வந்து விடும் என்று காத்திருப்பதோ சிக்கலை ஏற்படுத்திவிடும் என்றும் மருத்துவர் மூர்த்தி எடுத்துக் கூறினார்.
வெள்ளி, 26 மார்ச், 2010
இந்தியாவில் பிரபலமாகும் கன்னித்தன்மை ஆபரேஷன்!
சென்னை: வெளிநாடுகளில் பிரபலமாக உள்ள ஹைமனோ பிளாஸ்டி எனப்படும் கன்னித்தன்மை மீட்பு அறுவைச் சிகிச்சை இந்தியா விலும் தற்போது பிரபலமாகி வருகிறதாம். இந்தியாவின் பெருநகரங்களில் இந்த வகை ஆபரேஷன் மிகவும் அதிக அளவில் நடப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
கன்னித்தன்மைக்கு எப்போதுமே நல்ல மவுசு உண்டு. அதை விட அதிக மரியாதை உண்டு. தான் காதலிக்கும், தான் மணக்க விரும்பும் பெண் கன்னித்தன்மையுடன் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பிற நாடுகளை விட இந்தியாவில்தான் அதிகம்.
தற்போது இந்த எண்ணம் வெளிநாடுகளிலும் கூட பரவியுள்ளது. அங்குள்ள பெண்கள் கன்னித்தன்மையை மீண்டும் மீட்க அறுவைச் சிகிச்சை முறைகளை நாட ஆரம்பித்துள்ளனர். தற்போது அந்த பேஷன் இந்தியாவுக்கும் தொற்றி விட்டது.
பெரும்பாலும் நடுத்தர வயதுப் பெண்கள்தான் இந்த வகை ஆபரேஷனை அதிகம் செய்து கொள்கிறார்களாம்.
வயது முதிர்ந்த பெண்கள் என்றில்லாமல் எதிர்பாராதவிதமாக கற்பழிப்பு போன்ற சம்பவங்களில் சிக்கியவர்கள், திருமணத்திற்கு முன்பு உடலுறவு கொண்டவர்கள் என சகல தரப்பினரும் இந்த ஆபரேஷன் மீது ஆர்வம் கொண்டுள்ளனராம்.
இப்படித்தான் கன்னித்தன்மை இழப்பு ஏற்படும் என்று இல்லை. விளையாட்டுத் தறையில் இருப்பவர்களுக்கு கன்னித்தன்மை என்று கூறப்படும் ஹைமன் சவ்வுப் பகுதி பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. இப்படிப்பட்டவர்களும் கூட இந்த வகை ஆபரேஷன் மூலம் கன்னித்தன்மையை மீண்டும் பெற முடியும்.
ஹைமனோ பிளாஸ்டி எனப்படும் இந்த அறுவைச் சிகிச்ச பிளாஸ்டிக் சிகிச்சை போன்றதுதான். இப்படிப்பட்ட அறுவைச் சிகிச்சை வசதிகள் தற்போது டெல்லி, சென்னை, பெங்களூர், ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட பெருநகரங்களில் சர்வ சாதாரணமாக கிடைக்கிறது. பல பிரபல மருத்துவமனைகள் என்றில்லாமல் நடுத்தர ரக மருத்துவமனைகளிலும் கூட இந்த ஆபரேஷன்களை செய்கிறார்கள்.
இதுதொடர்பாக பத்திரிக்கைகள், இன்டர்நெட்டில் விளம்பரங்களும் செய்வது அதிகரித்துள்ளது.
பெரும்பாலும் இளம் பெண்கள்தான் இந்த வகை ஆபரேஷன்களைச் செய்து கொள்ள அதிகம் வருகிறார்களாம். அந்த அளவுக்கு கலாச்சாரம் படு வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.
இந்த வகை ஆபரேஷன்களுக்கு அதிகபட்சம் ரூ. 70 ஆயிரம் வரை ஆகுமாம். சாதாரண மருத்துவமனைகளில் அதிகபட்சம் ரூ. 20 ஆயிரம் வரை செலவாகுமாம்.
செக்ஸ். காம் இணையதள ஏலம் திடீர் ரத்து- வழக்கு தொடரப்பட்டதன் எதிரொலி!
நியூயார்க்: மிகவும் பிரபலமான செக்ஸ்.காம் இணையதள டொமைன் ஏலம் திடீரென ரத்து செய்யப்பட்டு விட்டது. செக்ஸ்.காம் இணையதள டொமைன் உரிமையாளரராந எஸ்காம் நிறுவனத்திற்கு எதிராக திவால் வழக்கு தொடரப்பட்டுள்ளதால், ஏலம் ரத்தாகி விட்டது.
டொமைன் பெயர்களிலேயே மிகவும் பிரபலமானதாகவும், விலைமதிப்பு வாய்ந்ததாகவும் கருதப்படுவது செக்ஸ்.காம்.
முதன் முதலில் இந்த டொமைனை கடந்த 1994ம் ஆண்டு கேரி கிரெமன் என்பவர் பதிவு செய்து வைத்திருந்தார். இவர் மேட்ச்.காம் என்ற டேட்டிங் இணையதளத்தின் நிறுவனர் ஆவார்.
கடந்த 2006ம் ஆண்டு இந்த டொமைனை 14 மில்லியன் டாலர் விலை கொடுத்து எஸ்காம் எல்எல்சி நிறுவனம் வாங்கியது.
இந்த நிலையில் செக்ஸ்.காம் டொமைனை விற்க எஸ்காம் முடிவு செய்தது. இதையடுத்து நியூயார்க்கைச் சேர்ந்த வின்டல்ஸ் மார்க்ஸ்லேன் அன்ட் மிட்டன்டார்ப் நிறுவனத்தில் மார்ச் 18ம் தேதி ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் எஸ்காம் நிறுவனத்திற்கு எதிராக கலிபோர்னியா கோர்ட்டில் திவால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஏலம் ரத்தாகி விட்டது.
எஸ்காம் நிறுவனத்திற்கு கடன் கொடுத்தவர்கள் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டொமைன் பெயர்களிலேயே மிகவும் பிரபலமானதாகவும், விலைமதிப்பு வாய்ந்ததாகவும் கருதப்படுவது செக்ஸ்.காம்.
முதன் முதலில் இந்த டொமைனை கடந்த 1994ம் ஆண்டு கேரி கிரெமன் என்பவர் பதிவு செய்து வைத்திருந்தார். இவர் மேட்ச்.காம் என்ற டேட்டிங் இணையதளத்தின் நிறுவனர் ஆவார்.
கடந்த 2006ம் ஆண்டு இந்த டொமைனை 14 மில்லியன் டாலர் விலை கொடுத்து எஸ்காம் எல்எல்சி நிறுவனம் வாங்கியது.
இந்த நிலையில் செக்ஸ்.காம் டொமைனை விற்க எஸ்காம் முடிவு செய்தது. இதையடுத்து நியூயார்க்கைச் சேர்ந்த வின்டல்ஸ் மார்க்ஸ்லேன் அன்ட் மிட்டன்டார்ப் நிறுவனத்தில் மார்ச் 18ம் தேதி ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் எஸ்காம் நிறுவனத்திற்கு எதிராக கலிபோர்னியா கோர்ட்டில் திவால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஏலம் ரத்தாகி விட்டது.
எஸ்காம் நிறுவனத்திற்கு கடன் கொடுத்தவர்கள் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.49,000 கோடிக்கு ஜெய்ன் டெலிகாமை வாங்கியது பார்தி ஏர்டெல்!
இந்தியாவின் பார்தி ஏர்டெல் நிறுவனம் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பெரிய டெலிகாம் நிறுவனமான ஜெய்ன் டெலிகாமை வாங்கிவிட்டது.
10.7 பில்லியன் டாலர் கொடுத்து இந்த டீலை முடித்திருக்கிறது பார்தி. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ 49000 கோடி!
இந்திய தொலைத் தொடர்பு நிறுவனம் ஒன்று எல்லை தாண்டி முடித்துள்ள மிகப்பெரிய வர்த்தகம் இதுவே. இதன் மூலம் உலகின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களுள் ஒன்றாக மாறியுள்ளது பார்தி ஏர்டெல்.
ஆப்ரிக்காவின் 15 முக்கிய நாடுகளில் இதன் மூலம் கால் பதிக்கிறது ஏர்டெல்.
ஆப்ரிக்க மார்க்கெட்டைப் பிடிப்பதில் குறியாக இருந்த ஏர்டெல், ஏற்கெனவே தென்னாப்பிரிக்காவின் முன்னணி டெலிகாம் நிறுவனம் எம்டிஎன்னுடன் பேச்சு நடத்தியது. ஆனால் அது சரிவரவில்லை.
அதன் பிறகுதான் ஜெய்ன் நிறுவனத்துடன் பேச்சுக்களைத் துவங்கினார் ஏர்டெல் தலைவர் சுனில் மித்தல்.
நேற்றுதான் பேச்சுவார்த்தைகள் முழுமையாக முடிந்து, பணம் கைமாறியது என்கின்றன செய்திகள் .
பார்சி - ஜெய்ன் இரண்டும் இணைவதன் மூலம் 165 மில்லியன் சந்தாதாரர்கள், ஆண்டுக்கு 13 பில்லியன் டாலர் வருவாய் என பெரும் தொலைபேசி வர்த்தக சாம்ராஜ்யம் உருவாகவிருக்கிறது.
அதேநேரம் இந்த ஒப்பந்தம் மூலம் சில தொல்லைகளையும் பார்தி சமாளிக்க வேண்டி வரும். குறிப்பாக நைஜீரியப் பகுதி நெட்வொர்க்கில்.
இந்த நாட்டு நெட்வொர்க்கை பார்திக்கு விற்பதை ஏற்கெனவே இகோநெட் வயர்லெஸ் என்ற தென்னாப்பிரிக்க நிறுவனம் எதிர்த்தது. இப்போது கோர்ட்டுக்கு போகப் போவதாகவும் அறிவித்துள்ளது. ஜெய்ன் நைஜீரியாவில் இகோநெட்டும் ஒரு பங்குதாரர் என்பது குறிப்பிடத்தக்கது.
வியாழன், 25 மார்ச், 2010
உலகளவில் 'ஸ்பாம்'களை பரப்புவதில் 2வது இடத்தில் இந்தியா!
ஹூஸ்டன்: ஸ்பாம்களை பெருமளவில் பரப்புவதில் உலக அளவில் முதல் ஐந்து நாடுகளில் இந்தியா வுக்கு 2வது இடம் கிடைத்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த பேன்டா லேப்ஸ் என்ற நிறுவனம் இதுதொடர்பான ஆய்வை நடத்தி முடிவை வெளியிட்டுள்ளது.
இந்திய ஐபி முகவரிகள் மூலம் உலக அளவில் கிட்டத்தட்ட 10.98 சதவீத ஸ்பாம் மெயில்கள் பரவுகின்றனவாம்.
ஸ்பாம்களை அதிக அளவில் பரப்பும் நாடுகள் வரிசையி்ல் இந்தியா தவிர பிரேசில், வியட்நாம், கொரியா, அமெரிக்கா ஆகியவையும் முதல் ஐந்து இடங்களில் உள்ளன.
இந்த ஆண்டின் முதல் இரு மாதங்களில் பரவிய ஸ்பாம்களில் பெரும்பாலானவற்றை இந்த ஐந்து நாடுகளையும் சேர்ந்த ஐபி முகவரிகள்தான் பரப்பியுள்ளனவாம்.
மொத்தம் பத்து லட்சம் ஐபி முகவரிகள் மூலம் அனுப்பப்பட்ட ஐம்பது லட்சம் இமெயில்களை இதற்காக ஆய்வு செய்தது பேன்டாலேப்ஸ்.
பெருமளவிலான ஸ்பாம் மெயில்களை அனுப்பிய நகரங்கள் வரிசையில் முதலிடத்தில் சியோலும், 2வது இடத்தில் ஹனோய், 3வது இடத்தில் டெல்லி, நான்காவது இடத்தில் பகோதா, 5வது இடத்தில் சாவோ பாலோ, 6வது இடத்தில் பாங்காக்கும் உள்ளன.
கவர்ச்சிகரமான பெண்களின் புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றின் ரூபத்தில்தான் பெரும்பாலான ஸ்பாம் மெயில்களில் வைரஸ்கள் அனுப்பப்பட்டு வருவதாகவும் பேன்டா லேப்ஸின் ஆய்வு கூறுகிறது.
புதன், 24 மார்ச், 2010
எல்ஐசியில் 5578 டெவலப்மெண்ட் ஆபீஸர் பணியிடங்கள்!
எல்ஐசியில் 5578 டெவலப்மெண்ட் ஆபீஸர் பணியிடங்கள்!
மத்திய அரசு நிறுவனமான எல்ஐசி.,யில் 5578 பயிற்சிநிலை டெவலப்மென்ட் ஆபிஸர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதற்கான எழுத்துத் தேர்வு ஜூன் 13-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் நடைபெறுகிறது.
பயிற்சிக் காலத்தில் உதவித் தொகையாக மாதம் 12,421 ரூபாய் வழங்கப்படும். பின்னர், முறையான பணிநியமனம் வழங்கப்பட்டதும் அடிப்படை ஊதியமாக 7440 ரூபாயை கணக்கிட்டு ரெகுலர் ஊதியம் வழங்கப்படும்.
இப்பணிக்கு இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மேலும், இதற்கான தேர்வுக் கட்டணத்தை (ரூ. 300) அருகிலுள்ள எல்ஐசி அலுவலகத்தில் நேரில் செலுத்த வேண்டும். தேர்வு நாளன்று அழைப்புக் கடிதத்துடன் அந்த ரசீதையும் கட்டாயம் கொண்டு வரவேண்டும்.
புகைப்பட அடையாளத்துக்காக ஓட்டுநர் உரிமை அட்டை அல்லது நிரந்தர கணக்கு எண் அட்டை உள்ளிட்ட ஏதாவது ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும்.
தேர்வுக் கட்டணத்தை செலுத்துவதற்கான கடைசித் தேதி 17.4.2010.
பணியிடங்கள், தகுதி, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட அனைத்துத் தகவல்களுக்கு http://www.licindia.in/careers.htm இணையதளத்தை பார்வையிடவும்.
மத்திய அரசு நிறுவனமான எல்ஐசி.,யில் 5578 பயிற்சிநிலை டெவலப்மென்ட் ஆபிஸர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதற்கான எழுத்துத் தேர்வு ஜூன் 13-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் நடைபெறுகிறது.
பயிற்சிக் காலத்தில் உதவித் தொகையாக மாதம் 12,421 ரூபாய் வழங்கப்படும். பின்னர், முறையான பணிநியமனம் வழங்கப்பட்டதும் அடிப்படை ஊதியமாக 7440 ரூபாயை கணக்கிட்டு ரெகுலர் ஊதியம் வழங்கப்படும்.
இப்பணிக்கு இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மேலும், இதற்கான தேர்வுக் கட்டணத்தை (ரூ. 300) அருகிலுள்ள எல்ஐசி அலுவலகத்தில் நேரில் செலுத்த வேண்டும். தேர்வு நாளன்று அழைப்புக் கடிதத்துடன் அந்த ரசீதையும் கட்டாயம் கொண்டு வரவேண்டும்.
புகைப்பட அடையாளத்துக்காக ஓட்டுநர் உரிமை அட்டை அல்லது நிரந்தர கணக்கு எண் அட்டை உள்ளிட்ட ஏதாவது ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும்.
தேர்வுக் கட்டணத்தை செலுத்துவதற்கான கடைசித் தேதி 17.4.2010.
பணியிடங்கள், தகுதி, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட அனைத்துத் தகவல்களுக்கு http://www.licindia.in/careers.htm இணையதளத்தை பார்வையிடவும்.
செவ்வாய், 23 மார்ச், 2010
'சவுண்ட்' செக்ஸ்- லண்டன் பெண் கைது!
கணவருடன் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டபோது பெரும் சத்தம் எழுப்பி அக்கம் பக்கத்தினருக்கு இடையூறு செய்ததாக லண்டனைச் சேர்ந்த 49 வயதுப் பெண்ணை போலீஸார் கைது செய்து ஹாஸ்டலுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அவருக்கு என்ன தண்டனை தருவது என்பது குறித்து கோர்ட் விரைவில் முடிவு செய்யவுள்ளதாம்.
சத்தம் போட்டு செக்ஸ் வைத்து சிக்குவது இப்பெண்ணுக்கு இது முதல் முறையல்ல. ஏற்கனவே ஒரு முறை மாட்டி சிறைக்குச் சென்று வந்தவர்.
அவரது பெயர் கரோலின் கார்ட்ரைட். கடந்த ஆண்டு சத்தம் போட்டபடி செக்ஸ் செயல்பாடுகளில் ஈடுபட்டதால் இவர் கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டார். நான்கு ஆண்டுகள் இவருக்கு செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளவும் தடை விதிக்கப்ட்டது. தனது வீட்டில் மட்டுமல்ல, இங்கிலாந்து, வேல்ஸ் பகுதிகளில் எங்குமே இவர் செக்ஸ் உறவில் ஈடுபடக் கூடாது என்று அதிரடியாக தடை போட்டு விட்டனர்.
பின்னர் அவர் ஜாமீன் பெற்று ஹாஸ்டலுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் நீதிமன்றம் பிறப்பித்த மூன்று தடை உத்தரவை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டது. அதை ஜனவரி மாதம் ஒத்துக் கொண்டார் கரோலின். இதையடுத்து எட்டு வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், 12 மாத செக்ஸ் தடை, 12 மாத கண்காணிப்பு என கிடுக்கிப் பிடி போட்டது கோர்ட்.
இந்த நிலையில்தான் மீண்டும் சத்த செக்ஸ் சர்ச்சையில் சிக்கியுள்ளார் கரோலின்.
இதையடுத்து மீண்டும் கரோலின் கைது செய்யப்பட்டார். நீதிபதி முன்பு நிறுத்தப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்திய நீதிபதி தற்போது கரோலினை ஒரு மகளிர் விடுதிக்கு அனுப்பி வைத்து விட்டார். கணவரை சந்திக்கக் கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. விரைவில் கரோலினுக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்படும்.
இதுகுறித்து கரோலின் கூறுகையில், இது மிகவும் கேலிக்கூத்தாக உள்ளது. முதல் சம்பவத்திற்குப் பின்னர் நான் படுக்கை அறையில் உறவு வைத்துக் கொள்வதைத் தவிர்த்து விட்டேன். கீழ் அறையில் உள்ள சமையல் அறைப் பகுதிக்கு எனது படுக்கையை இடம் மாற்றி விட்டேன்.
அங்கு என்ன செய்தாலும் வெளியில் சத்தமே கேட்காது. மேலும் சம்பவ நாளன்று நான் வெறும் பத்து நிமிடம் மட்டுமே செக்ஸ் உறவில் ஈடுபட்டேன். முன்பெல்லாம் நான் குறைந்தது 2 மணி நேரமாவது செக்ஸ் வைத்துக் கொள்வேன். ஆனால் பிரச்சினை ஏற்பட்டதால் கட்டுக்கோப்புடன் நடந்து வருகிறேன்.
இந்த நிலையில் வெறும் பத்து நிமிட உறவால் அக்கம் பக்கத்தினருக்குத் தொல்லையாகி விட்டது என்றால் எப்படி. இது நியாயமே இல்லை என்று குமுறுகிறார் கரோலின்.
ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாகே கரோலின் வைத்துக் கொள்ளும் சத்தம் மிகுந்த செக்ஸ் செயல்பாடுகளால் பெரும் தொல்லையாக இருப்பதாக அக்கம்பக்கத்தினர் குறை கூறுகிறார்கள்.
நாட்டில் வேறு யாருமே செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதில்லையா. ஆனால் கரோலின் மட்டும் தேவையில்லாமல் கத்துவார், சிரிப்பார், கூக்குரலிடுவார். இது மிகவும் அருவருப்பாக உள்ளது என்கிறார்கள் அவர்கள்.
தொடர் வழக்குகளால் தனது திருமண வாழ்க்கை கேள்விக்குறியாகி விட்டதாக புலம்புகிறார் கரோலின்.
சீனாவுக்கு ஒரு வழியாக 'குட்-பை' சொன்னது கூகுள்!
பெய்ஜிங்: பிரபல சர்ச் என்ஜின் நிறுவனமான கூகுள் டாட் காம், தனது பிரதான சீனமொழி தேடுதளம் மூலம் (google.cn) சேவைகள் வழங்குவதை நிறுத்திக் கொண்டது.
எனினும், சீன மொழிக்கான தேடுதல் சேவைகளை ஹாங்காங்கில் இருந்து தொடரப் போவதாக அது அறிவித்துள்ளது.
google.cn எனும் சீன மொழியில் அமைந்திருந்த தேடு தளத்திற்கு வரும் பார்வையாளர்கள், google.com.hk என்ற தளத்திற்கு திருப்பிவிடப்படுவார்கள் என கூகுள் தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
இத்தகவல் வெளியான உடனடியாக பெய்ஜிங்கில் உள்ள கூகுள் நிறுவனத்தின் சீன தலைமையக அலுவலகத்தின் முன்பு ஏராளமானோர் இன்று காலை கூடிவிட்டனர்.
இன்டர்நெட் அக்கவுன்டில் அத்துமீறி ஹாக்கிங் செய்யப்பட்டது, தகவல்கள் திருடப்பட்டது என பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக சீனாவுடன் முட்டிக்கொண்டிருந்த கூகுள் எந்நேரமும் வெளியேறலாம் என்ற சூழல் தான் கடந்த சில வாரங்களாக காணப்பட்டது.
இந்த நிலையில், இன்று கூகுள் தனது அதிகாரப்பூர்வ முடிவை செயல்படுத்தி உள்ளதால், சீனாவில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஊழியர்களின் நிலையும், முதலீட்டாளர்களின் நிலையும் ஏமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளது.
பெய்ஜிங்கில் உள்ள கூகுள் தலைமையக செய்தித் தொடர்பாளர் இதுபற்றி கூறுகையில்,
'இது வழக்கமான வர்த்தக நடைமுறை தான். பணியாளர்கள் அனைவரும் ஹாங்காங்கிற்கு மாற்றப்படுவார்களா என்பது குறித்து இப்போதைக்கு தெரிவிக்க முடியாது. இவையாவும் வர்த்தக செயல்பாடுகளுக்கான மாற்று ஏற்பாடுகள் மட்டுமே' என்றார்.
கூகுளின் இந்த முடிவு 'முற்றிலும் தவறானது' என்று சீன அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சைபர் குற்றங்களுக்கு சீனாவை குற்றம்சாட்டுவதை ஏற்க முடியாது என்றும் சீனா மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆனால் கூகுளுக்கு கடுப்படிக்கும் வகையில் தொடர்ந்து சீனா செயல்பட்டு வந்தது அனைவரும் அறிந்ததுதான். கூகுளைப் போலவே போலியான ஒரு இணையதளமும் சீன மொழியில் வெளியானது. அதேபோல யூடியூபை அப்படியே காப்பி அடித்து சீன மொழியில் ஒரு இணையதளம் வெளியானது.
இதுகுறித்து சீன அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்து வந்தது. இந்த நிலையில்தான் சீனாவை விட்டு வெளியேறியுள்ளது கூகுள்.
உலக அளவில் 38 கோடி இன்டர்நெட் பார்வையாளர்களை கொண்ட சீன சந்தையில் இருந்து கூகுள் வெளியேறுவது இணைய பொருளாதாரத்தில் மிக முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.
கச்சேரி ஆரம்பம்!
மற்றவர்கள் நம்மை கிண்டல் செய்யும் முன் நம்மை நாமே கலாய்ப்பது தமிழ் சினிமாவின் புது ட்ரெண்ட். இந்த புதிய மொந்தையில் தயாராகியிருக்கும் பழைய கள், கச்சேரி ஆரம்பம்.
webdunia photoWDஊரை விட்டு ஓடிவரும் ஹீரோ. நாயகியை கண்டதும் காதலில் விழும் இன்ஸ்டன்ட் லவ். விறைப்பா அறிமுகமாகி சொதப்பலாக முடிவுறும் வில்லன் எபிசோட்... எப்படிப் பார்த்தாலும் பழமையின் தூசு படிந்த கதைதான் கச்சேரி ஆரம்பம். அறிமுக இயக்குனர் திரைவண்ணன் இந்த பழைய கள்ளில் சேர்த்திருக்கும் சிரிப்பு மாத்திரை மட்டும் பேஷ், ரொம்பப் பிரமாதம்.
ஜீவாவுக்கு படத்தில் பெயர் பாரி. பெயருக்கேற்ப இல்லாதவர்களுக்கு அப்பா காசை அள்ளிவிடுகிறார். அதுவே ஒருநாள் சொல்லாமல் கொள்ளாமல் லட்டர் எழுதி வைத்துவிட்டு சென்னைக்கு துரத்துகிறது. இயக்குனரும், எடிட்டரும் நேரத்தை சேமிப்பதில் கெட்டி. சென்னை வந்த முதல் நாளே ஹீரோயினுடன் சந்திப்பு, ஹீரோவுக்கு புது வேலை என றெக்கை கட்டுகிறார்கள்.
நக்கலான டயலாக் நயாகரா மாதிரி கொட்டும் டேக் இட் ஈஸி கேரக்டர் ஜீவாவுக்கு. ஓடுகிற ரயிலில் தாவி ஏறி, இந்தப் படத்துல நான்தான் ஹீரோ, அதுதான் இந்த பில்டப் என்று அறிமுக காட்சியிலேயே பட்டாசை பற்ற வைக்கிறார். இடைவேளை வரை அணையவில்லை இந்த இடக்கு மடக்கு.
பூனம் உதவி கேட்பது ரவுடிகளுக்கெல்லாம் ரவுடியான ஜே.டி.சக்ரவர்த்தியிடம். பூனம் பஜ்வாவை அவரது வீட்டில் ட்ராப் செய்யும் கால் மணி நேரத்தில் அவர் மீது காதலாகிவிடுகிறார் சக்ரவர்த்தி. அதன் பிறகு அவர் செய்வதெல்லாம் கில்லி செல்லத்தின் திருவிளையாடல்கள். பூனம் பஜ்வாவிடம் ஐ லவ் யூ சொல்பவனின் நாக்கை அறுக்கிறார், அவரது ஸ்கூட்டியில் உட்கார்ந்தவனின் ‘சீட்’டில் இஸ்திரியால் சூடு வைக்கிறார்.
வில்லனுக்கு எதிராக ஹீரோ தொடைதட்டி சவால்விடாமல் வில்லனின் கூட இருந்தே குழி பறிக்கும் இடத்தில் மாத்தி யோசித்திருக்கிறார் இயக்குனர். ஆனால் படம் நொண்டியடிப்பதும் இதன் பிறகுதான். அடுத்தவனை போட்டுத் தள்ளவும் பயப்படாத சக்ரவர்த்தி ஜீவாவிடம் புட்டிப் பால் குழந்தையாக குழைவதும், அவர் சொல்வதை வேத வாக்காக எடுத்துக் கொள்வதும் லாஜிக் இல்லா மேஜிக்குகள். இந்த குழப்பத்துக்கு நடுவில் ஜீவா, பூனம் பஜ்வா காதலும் கலங்கிப் போவதை சொல்லியாக வேண்டும்.
webdunia photoWDமுக்கால் பேண்டும் முகம் நிறைய விறைப்புமாக வரும் வடிவேலு கலகலக்க வைக்கிறார். ஆரம்பத்தில் பாஸாக இருக்கும் அவரை ஜீவா பீஸ் உருவும் ஒவ்வொரு காட்சியும் காமெடி பஜார். ஆனாலும் அந்த ஆய் சீன் ரொம்ப ச்சீய்..
படத்தின் மிகப் பெரிய பிளஸ் ஜீவாவின் அலட்சியமான நடிப்பும், திரைவண்ணனின் சீரியஸில்லா காட்சிகளும், சிரிப்பு வசனங்களும். பூனம் பஜ்வா தனது நெருக்கடியை கண்ணீர் மல்க ஜீவாவிடம் கூற, அவரோ பொங்கியெழாமல், டிபிக்கல் டிபிக்கல் டெம்பிள் கோயிங் என்று தமிழ் பழமொழியை ஆங்கிலத்தில் அடிக்கிறாரே... திரையரங்கில் அப்ளாஸ் அள்ளுகிறது. ஆய் ஊய் என்று கத்தாத ஜே.டி.சக்ரவர்த்தியின் வில்லத்தனத்துக்கு பாஸ் மார்க் போடலாம்.
கிளைமாக்சில் வில்லனின் நெஞ்சில் ஏறி மிதித்து பன்ச் டயலாக் பேசாமல் வித்தியாசமாக முடித்திருப்பதும் நன்றாகவே உள்ளது.
சராசரியான பாடல்கள், சராசரிக்கும் கீழான பின்னணி இசை. புதிதாக எதுவும் சொல்ல முடியாத ஒளிப்பதிவு. சொல்ல வந்த கதைக்கு தொந்தரவு செய்யாமல் இருந்ததே தொழில்நுட்ப சைடின் ஒரே ஆறுதல்.
காமெடி தூக்கலான கமர்ஷியல் கச்சேரி.
திங்கள், 22 மார்ச், 2010
உலகிலேயே இதுதான் பெரியது.
உலகில் மிகப்பெரிய விஷயங்கள் பல உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கேக் காணலாம்.
உலகிலேயே மிகப்பெரிய மலை நமது இமயமலையாகும். மிகப்பெரிய சிகரம் எவரெஸ்ட் சிகரமாகும்.
உலகிலேயே மிகப்பெரிய நீர்வீழ்ச்சி நயாகராவாகும்.
உலகின் மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம் இந்தியாவின் கரக்பூர் ரயில் நிலையமாகும். இதன் நீளம் 2,732 அடி.
உலகிலேயே மிகப்பெரிய மசூதி சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ளது.
உலகிலேயே மிகப்பெரிய ஏசுகிறிஸ்துவின் சிலை பிரேசில் நாட்டில் உள்ள ரியோடி ஜெனிரோ நகரில் அமைந்துள்ளது. இந்த சிலை 38 மீட்டர் உயரமும், 700 டன் எடையும் கொண்டது.
உலகிலேயே பெண்களுக்கு வாக்குரிமை அளித்த முதல் நாடு நியூசிலாந்து. 1893ஆம் ஆண்டு தான் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது.
உலகிலேயே அதிக ஆண்டுகள் பிரதமராக இருந்தவர் சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ. இவர் 1959 முதல் 1990 வரை பிரதமராக இருந்தார்.
உலகின் மிகப்பெரிய தேவாலயம் ஆப்ரிக்காவில் உள்ள ஐவரி கோஸ்ட்டில் உள்ளது.
உலகிலேயே மிகவும் நீளமான நெடுஞ்சாலை பான் - அமெரிக்கன் நெடுஞ்சாலை. இதன் நீளம் 24,140 கி.மீ.
உலகின் முதல் குடியரசு நாடு ஆஸ்திரியா.
உலகின் மிகப்பெரிய தீவுக்கூட்டம் இந்தோனேஷியாவில் உள்ளது.
உலகின் மிகப்பெரிய தீவு கிரீன்லாந்து.
உலகின் மிகப்பெரிய பாலைவனம் சகாரா பாலைவனமாகும்.
உலகின் மிகப்பெரிய கண்டம் ஆசியா கண்டமாகும்.
உலகின் மிகப்பெரிய சமுத்திரம் பசிபிக் மகா சமுத்திரம்.
உலகின் மிகப்பெரிய நதி நைல் நதியாகும்.
உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையம் தென் அரேபியாவின் ரியாத் பன்னாட்டு விமான நிலையமாகும்.
உலகிலேயே மிகப்பெரிய மலை நமது இமயமலையாகும். மிகப்பெரிய சிகரம் எவரெஸ்ட் சிகரமாகும்.
உலகிலேயே மிகப்பெரிய நீர்வீழ்ச்சி நயாகராவாகும்.
உலகின் மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம் இந்தியாவின் கரக்பூர் ரயில் நிலையமாகும். இதன் நீளம் 2,732 அடி.
உலகிலேயே மிகப்பெரிய மசூதி சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ளது.
உலகிலேயே மிகப்பெரிய ஏசுகிறிஸ்துவின் சிலை பிரேசில் நாட்டில் உள்ள ரியோடி ஜெனிரோ நகரில் அமைந்துள்ளது. இந்த சிலை 38 மீட்டர் உயரமும், 700 டன் எடையும் கொண்டது.
உலகிலேயே பெண்களுக்கு வாக்குரிமை அளித்த முதல் நாடு நியூசிலாந்து. 1893ஆம் ஆண்டு தான் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது.
உலகிலேயே அதிக ஆண்டுகள் பிரதமராக இருந்தவர் சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ. இவர் 1959 முதல் 1990 வரை பிரதமராக இருந்தார்.
உலகின் மிகப்பெரிய தேவாலயம் ஆப்ரிக்காவில் உள்ள ஐவரி கோஸ்ட்டில் உள்ளது.
உலகிலேயே மிகவும் நீளமான நெடுஞ்சாலை பான் - அமெரிக்கன் நெடுஞ்சாலை. இதன் நீளம் 24,140 கி.மீ.
உலகின் முதல் குடியரசு நாடு ஆஸ்திரியா.
உலகின் மிகப்பெரிய தீவுக்கூட்டம் இந்தோனேஷியாவில் உள்ளது.
உலகின் மிகப்பெரிய தீவு கிரீன்லாந்து.
உலகின் மிகப்பெரிய பாலைவனம் சகாரா பாலைவனமாகும்.
உலகின் மிகப்பெரிய கண்டம் ஆசியா கண்டமாகும்.
உலகின் மிகப்பெரிய சமுத்திரம் பசிபிக் மகா சமுத்திரம்.
உலகின் மிகப்பெரிய நதி நைல் நதியாகும்.
உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையம் தென் அரேபியாவின் ரியாத் பன்னாட்டு விமான நிலையமாகும்.
இன்று உலக தண்ணீர் தினம்!
கோடை காலம் ஆரம்பிக்கும் போதே தண்ணீர் வறட்சியும் ஆரம்பித்து விட்டுள்ள நிலையில் இன்று உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
நீர் இன்றி அமையாது உலகு என்பதற்கு ஏற்ப, நீரின்றி நாம் வாழ இயலாது என்பதும் நன்கு அறிந்ததே. பூமியில் 30 விழுக்காடு மட்டுமே நிலப்பரப்பாகும். மீதமிருக்கும் 70 விழுக்காடும் நீர்பரப்புதான். ஆனால், இன்று அந்த 30 விழுக்காட்டில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான நீரை அளிக்கும் போதிய வசதியை பூமி இழந்து வருகிறது. அதற்கும் மனித இனம்தான் காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை.
1993ஆம் ஆண்டு முதல் மார்ச் மாதம் 22ஆம் தேதியை உலக தண்ணீர் தினமாக அறிவிக்கப்பட்டு இன்று வரை கொண்டாடித்தான் வருகிறோம். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் உலகின் பல கோடி மக்கள் தண்ணீரின்றி திண்டாடி வரும் நிலையும் எந்த வகையிலும் அகலவில்லை.
மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே இருக்க, அவர்களுக்குத் தேவையான குடிநீர் தேவையும் அதிகரிக்கிறது. தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் கிடைக்கும் நீரைக் குடிக்கும் நிலைக்கு பல பகுதிகளில் உள்ள மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அதன் விளைவு கடுமையான நோய்கள்.
WDமுந்தைய காலத்தில் கோடைக் காலம் துவங்கிவிட்டால் வீட்டுக்கு வெளியே பானையோ அல்லது ஒரு பாத்திரமோ வைத்து அதில் நீர் நிரப்பி வைப்பார்கள். வழியில் செல்வோர் அந்த நீரைக் குடித்து தாகம் தீர்த்துக் கொள்வார்கள் என்ற நல்ல நோக்கத்தோடு. ஆனால் அதுபோனற்தொரு காட்சியை தற்போது நாம் எங்காவது பார்க்க இயலுமா?
காண முடியும், வாசலில் குடங்கள் இருக்கின்றன. ஆனால் அவை நீர் நிரம்பி அல்ல, நீர் நிரப்ப, எப்போதாவது வரும் குழாய் நீருக்கும், குடிநீர் லாரிக்காகவும் காத்திருக்கும் குடங்கள் அவை.
முதலில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன தெரியுமா? நீர் ஆதாரங்களை காக்க வேண்டும், தற்போது எத்தனை குளங்கள் இருந்த இடத்தில் அடுக்கு மாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன, ஏரிகள் இருந்த இடங்கள் எத்தனை காலனிகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கே தேங்கி நிற்க வேண்டிய நீர் எங்கே சென்று நிற்கும்? நினைத்துப் பார்த்ததா மனித சமூகம்? நீர் இருந்த இடத்தை காலி செய்து விட்டு அங்கே நாம் குடிபோனோம். தற்போது குடிநீர் இல்லை என்று அலைந்து கொண்டிருப்பதும் நாம்தான்.
70 விழுக்காடு பரப்பளவு நீர் இருந்தாலும் அதில் 97.5 விழுக்காடு கடலில் இருக்கும் உப்பு நீர்தான். மீதும் 2.5 விழுக்காடு அளவிற்குத்தான் நிலத்தடி நீர் உள்ளது. இதிலும் துருவப் பகுதிகளில் பனிப்பாறைகளாகவும், பனித்தரையாகவும் மாறிப் போயிருக்கிறது எஞ்சியுள்ள 0.26 விழுக்காடு நீரைத்தான் உலக மக்கள் அனைவரும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
இந்த நிலையில்தான், ஐ.நா. சபை கடந்த 1992-ம் ஆண்டு சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி குறித்த கூட்டத்தை கூட்டியது. கூட்டத்தில், நீர்வள பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும், அதை மக்களிடம் உணர்த்த `உலக தண்ணீர் தினம்' கொண்டாடப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, ஆண்டுதோறும் மார்ச் 22-ந் தேதி உலக தண்ணீர் தினம் சர்வதேச அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.
WDநிலத்தடி நீரைப் பாதுகாக்க வேண்டியதும், நீர் ஆதாரங்களை காக்க வேண்டியதும், நீர் மாசுபடாமல் இருக்க வேண்டிய நடவடிக்கை எடுக்க வேண்டியதும் மனித சமுதாயத்தின் கடமையாகிறது.
இப்போது, உலகில் உள்ள 80 நாடுகளில் 40 சதவீத மக்கள் சரிவர தண்ணீர் கிடைக்காமல் அவதிபடுகின்றனர். 110 கோடி மக்கள் நீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் வாழ்கின்றனர். இப்படியே போனால், இன்னும் சில நூற்றாண்டுகளில் உலகமே பாலைவனமாக மாறிவிடும். மக்கள், குடிநீருக்காக ஒருவரை ஒருவர் கொன்றுப் போடும் நிலைதான் ஏற்படும்.
எனவே, உலக தண்ணீர் தினமான இன்றைய நாளில், தண்ணீரை மாசு படுத்தாமல், உயிர் போல் காப்போம் என்ற உறுதி மொழியை மனதில் ஏந்தி, அதனை நிறைவேற்ற பாடுபடுவோம்.
ஞாயிறு, 21 மார்ச், 2010
2013-ல் இந்தியா சினிமா வர்த்தகம் ரூ.13 ஆயிரம் கோடியை தாண்டும்!
டெல்லி: இந்திய திரைப்படத் துறையின் உள்நாட்டு வர்த்தகம் அடுத்த நான்கு ஆண்டுகளில் ரூ.13 ஆயிரம் கோடி என்ற அளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபல சர்வதேச தணிக்கை நிறுவனமான பிரைஸ்வாட்டர்ஹவுஸ்கூப்பர்ஸ் வெளியிட்டுள்ள தகவலின் படி, கடந்த 2008ம் ஆண்டில் இந்திய சினிமா வர்த்தகம் ரூ.8 ஆயிரத்து 130 கோடியாக இருந்தது.
இந்த வர்த்தக அளவு, ஆண்டுக்கு 10 சதவீதம் உயர்ந்துள்ளது. இனி வரும் ஆண்டுகளில் அதாவது 2008-2013 காலகட்டத்தில் 11.5 சதவிகிதமாக இந்த உயர்வு இருக்கும் என்கிறது அந்த அறிக்கை.
மல்டிப்ளெக்ஸ் கலாச்சாரம் மற்றும் டிக்கெட் கட்டணங்கள் உயர்வு போன்றவற்றைக் கருத்தில் கொள்ளாமல் சராசரியான கட்டணங்கள் அடிப்படையில் கணக்கிட்டாலும், வரும் 2013ம் ஆண்டில் இந்திய சினிமா வர்த்தகம் 13 ஆயிரம் கோடி ரூபாயை தொடும் என்பது உறுதி என அந்நிறுவன அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி! இந்தியா புதிய சாதனை!
இலக்கைத் தேடி அழிக்கும் திறன் கொண்ட பிரமோஸ் ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
இதையடுத்து, சூப்பர்சானிக் ஏவுகணை தொழில் நுட்பத்தில், இலக்கைத் தேடி அழிக்கும் திறன் கொண்ட ஏவுகணை கொண்ட ஒரே நாடு என்ற பெருமையை இந்தியா பெறுகிறது.
வங்கக் கடல் ஒரிசா கடற்பகுதியில் இருந்து இன்று காலை 11.30 மணியளவில், ஐ.என்.எஸ். ரன்வீர் போர்க் கப்பலில் இருந்து செங்குத்தாக ஏவக்கூடிய பிரமோஸ் ரக ஏவுகணை செலுத்தப்பட்டது.
இவ்வாறு செலுத்தப்பட்ட பிரமோஸ் ஏவுகணை வங்கக் கடல் பகுதியில் 290 கி.மீ. தொலைவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலக்கைத் தேடிப் பிடித்து வெற்றிகரமாக அழித்தது.
இதுகுறித்து பேசிய பிரமோஸ் ஏவுகணைத் திட்டத்தின் தலைவர் ஏ. சிவதானுப் பிள்ளை, இந்த ஏவுகணை சோதனைக்குப் பிறகு, இலக்கைத் தேடி அழிக்கும் சூப்பர்சானிக் ஏவுகணை கொண்ட முதல் மற்றும் ஒரே நாடு இந்தியாதான் என்று குறிப்பிட்டார்.
இதனையடுத்து, இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி ஆகியோர், வெற்றிகரமாக ஏவுகணை சோதனை செய்த பிரமோஸ் விஞ்ஞானிகளுக்கும், கப்பற்படையினருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
வெள்ளி, 19 மார்ச், 2010
முத்தம் கொடுப்பதில் பல வகைகள் உண்டு!
பொதுவாக முத்தம் கொடுப்பது என்பது ஏதோ பேசக் கூடாத வார்த்தை என்று இருந்த காலம் போய் விட்டது. தற்போது தாம்பத்யத்தைப் பற்றிக் கூட வெளிப்படையாகப் பேசும் அளவிற்கு வாய்ப்புகள் அதிகரித்து விட்டன.
முத்தம் என்பது பொதுவாக அன்பின் அடையாளமாகக் கருதப்படுகிறது. முத்தம் என்பதை பொதுவாக அதிகமாகப் பெறுவது குழந்தைகள்தான். குழந்தைகளுக்கு பெற்றவர்கள் முதல், உறவினர்கள், நண்பர்கள் என பலரும் முத்தத்தை வழங்குவார்கள்.
இவை அன்பின் அடையாளம். அடுத்தபடியான காதலர்கள் பகிர்ந்து கொள்ளும் முத்தம் மற்றும் தம்பதிகள் பகிர்ந்து கொள்ளும் முத்தம்.
WDமுத்தத்தில் எத்தனையோ வகை உள்ளது. கை, நெற்ற, கண்ணம், தலை, உதடு என உடலின் பல்வேறு பகுதிகளில் முத்தமிடப்படுகிறது. ஒவ்வொருவரும் தங்களுக்குள் இருக்கும் அன்யோன்யத்தின் அடிப்படையிலும், முத்தமிடும் சூழ்நிலையின் அடிப்படையிலும் முத்தமிடுகின்றனர்.
அதேப் போல, ஒரு ஆண் அளிக்கும் முத்தத்திற்கும், பெண் அளிக்கும் முத்தத்திற்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
அதாவது, ஒரு ஆண் அளிக்கும் முத்தத்திற்கு அடுத்த நிலை காமமாக இருக்கும். ஒரு பெண் அளிக்கும் முத்தத்திற்கு அர்த்தம் காதலாக இருக்கும் என்பதுதான். இதனை ஒரு ஆய்வு நிரூபித்துள்ளது.
நியூயார்க் நகரின் பல்கலைக்கழகம் ஒன்று முத்தமிடுதலைப் பற்றி நடத்திய ஆய்வில் பல சுவாரஸ்யங்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஆய்வு முடிவுகளில் வெளியான பல உண்மைகள், பல தம்பதியர் உணர்வுப் பூர்வமாக உணர்ந்து இருப்பார்கள் என்பது அடுத்த விஷயம்.
சரி ஆய்வின் முடிவில் தெரிய வந்தது என்ன, முத்தத்திற்குப் பெண்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஆண்கள் கொடுப்பதில்லை என்பதுதான் அதில் பிரதான விஷயமாகும்.
WDமேலும், பெண்கள், தங்களது இணையுடனான இன்ப வாழ்க்கையில் முத்தத்தையும் ஒரு அங்கமாக எண்ணுகின்றனர். அதேப்போல, தங்களது அன்பையும், மகிழ்ச்சியையும், தங்களது நீண்ட கால உறவின் நிலைப்பாட்டையும், தம்பதிகளுக்குள்ளான உறவினை புதுப்பித்துக் கொள்ளவும் பெண்கள் முத்தத்தையே அடிப்படையாக வைத்துக் கொள்கின்றனராம்.
ஆனால், ஆண்களைப் பொறுத்தவரை முத்தம் என்பது தாம்பத்தியத்தில் இணையப் போவதற்கான ஒரு சாவி மட்டுமே. காமத்தின் துவக்கமாக மட்டுமே முத்தத்தை ஆண்கள் நினைக்கின்றனர்.
ஆண்களும் சரி, பெண்களும் சரி முத்தத்தை அதிகமாக ரசிக்கின்றனர் என்ற போதும், பெண்களே அதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர்.
நாளாக ஆக, முத்தம் என்பது ஒரு சலிப்பை ஏற்படுத்தி விடுகிறது ஆண்களுக்கு. ஆனால் பெண்களுக்கு அப்படி அல்ல. எப்போதாக இருந்தாலும் முத்தம் ஒரு புத்துணர்வை அளிக்கும் விஷயமாகவே உள்ளது. தாம்பத்தியத்தின் போது முத்தமே இல்லாமல் முழுமை பெற ஆண்களால் முடியும். ஆனால் ஒரு பெண்ணால் முத்தமில்லாத தாம்பத்தியத்தில் நிறைவு பெற முடியாது.
இப்படி முத்தம் பற்றிய ஆய்வில், ஆணுக்கும், பெண்ணுக்கும் இருக்கும் வித்தியாசம் வெளிப்பட்டுள்ளது. இதனை பல தம்பதிகளும் நிச்சயமாக ஒத்துக் கொள்வார்கள் என்று தெரிகிறது.
காதலை ஏற்றுக் கொண்டதும்.
பொதுவாக ஒரு ஆண், தான் காதலிக்கும் பெண்ணிடம் தனது காதலை தெரிவிப்பதே பெரிய விஷயமாக இருக்கும். அப்படியே தைரியமாக காதலை வெளிப்படுத்தி அந்த பெண்ணும் அதற்கு சம்மதம் சொல்லிவிட்டால்.. காதலனின் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது.
ஆனால் இந்த அளவுகடந்த மகிழ்ச்சியில் சிலர் செய்து விடும் தவறுகளைத்தான் இங்கே குறிப்பிடப் போகிறோம்.
அதிகம் என்பது எப்போதுமே ஆபத்து தரும் விஷயமே. காதலிலும் அதிகம் என்பது அதிர்ச்சியும், ஆபத்தும் தந்துவிடும்.
முதல் முறை காதலுக்கு சம்மதம் கிடைத்த பிறகு அடுத்த சந்திப்பின் போதே பெரும்பாலான அதாவது மிகவும் முக்கியமான விஷயங்களைப் பேசி முடிவெடுத்துக் கொள்வது நல்லது.
காதலர்களுக்குள் மிக நல்ல புரிதல் உண்டாகும் வரை விலை உயர்ந்த பரிசுகள் வாங்குதல், கொடுத்தல் வேண்டாம்.
கையெழுத்திட்டோ அல்லது புகைப்படங்களை இணைத்தோ வரும் பரிசுகளையும் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கலாம்.
WDஎப்போது சந்தித்தாலும் ஒரு பரிசினை வாங்கி அன்பளிப்பாக அளிப்பதையும் தவிர்க்கலாம். ஒரு சில காலத்தில் இது முடியாமல் போகும் போது, அதற்குள் சலித்துவிட்டதா என்பது போன்ற பிரச்சினை உருவாகும்.
காதலிக்கத் துவங்கியதும் அடிக்கடி தொலைபேசியில் பேசிக் கொள்வது சகஜம்தான். ஆனால், ஆரம்பத்தில் நிறைய நேரம் பேசிவிட்டு பின்னர் பேச இயலாமல் போகும் போதும் பிரச்சினை தலை தூக்கும். அதனால் எத்தனை குறைவான நேரம் பேச முடியுமோ அவ்வளவு குறைவான நேரத்தை மட்டும் குறிப்பிட்டு அதனையே கடைபிடிக்கலாம்.
எதையாவது பேச வேண்டும் என தேவையில்லாத தகவல்களை சொல்வதும் ஆபத்தாகவே முடியும். ஆரம்பத்திலேயே தேவையில்லாத சில விஷயங்களைப் பேசுவதைத் தவிர்த்துக் கொள்ளலாம்.
ஆரம்பத்தில் பொதுவான விருப்பங்கள், வெறுப்புகள், நண்பர்கள், பழக்க வழக்கங்கள் போன்றவற்றையும், அதையும் கடந்து பொதுவான நாட்டு நடப்புகளையும் பற்றி பேசலாம்.
வியாழன், 18 மார்ச், 2010
தூக்கத்திற்கு உதவும் மெலட்டோனின்!
நமது உடலில் பல்வேறு விதமான ஹார்மோன்கள் சுரக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான வேலைகளைச் செய்து வருகின்றன.
இதில் நமது உடலில் சுரக்கும் மெலட்டோனின் எனப்படும் ஹார்மோன்தான் நமது தூக்கத்திற்குக் காரணமாகிறது. இந்த ஹார்மோன் அதிகமாக சுரக்கும் போது நமக்கு தூக்கம் வருகிறது.
மெலட்டோன் சுரப்பு குறையும் போது தூக்கம் வராது. இந்த ஹார்மோனுக்கும், நம்மைச் சுற்றியுள்ள சூழ்நிலைக்கும் அதிக தொடர்பு உள்ளது.
அதாவது, நமது உடலைச் சுற்றி வெளிச்சம் அதிகமாக இருக்கும் போது இந்த ஹார்மோன் சுரப்பதில்லை. இருட்டான பகுதிக்குள் இருக்கும் போது ஹார்மோன் சுரக்க ஆரம்பிக்கிறது.
சிலருக்கு ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் பாதிப்பின் காரணமாகவே அதிகமாக தூங்கி வழிவதும், தூக்கம் வராமல் புரளுவதும் ஏற்படுகிறது.
தூக்கம் வருவதற்கு நாமும் சில வழிமுறைகளைக் கையாள வேண்டியது அவசியமாகிறது.
சீனாவில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள அவலம்!
மக்கள் தொகையில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ள சீன நாட்டில் மணமகன்களுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது என்றால் நம்ப முடிகிறதா? ஆம், அங்குள்ள சில மாகாணங்களில் திருமணமாகாமல் இருக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.
சீனாவின் குவாங்க்டோக் மாகாணத்தில் உள்ள குவாங்க்சோவ் நகரில் இளம் பெண்களுக்கு திருமணம் ஆவது தாமதமாகிக் கொண்டே போகிறதாம். மாப்பிள்ளை பார்த்து வெறுத்துப் போனற சில பெண்களின் பெற்றோர், என்ன செய்வீர்களோ.. எப்படியாவது உனக்கு பொருத்தமான துணையை தேடிக் கொள். உடனடியாக திருமணத்தை முடித்தாக வேண்டும் என்று தங்களது பெண்களிடம் கூறி விட்டார்களாம்.
பெற்றோரின் இந்த நிர்ப்பந்தம் காரணமாக 4 நாட்களுக்கு முன்பு 8 இளம் பெண்கள் நடுத்தெருவில் இறங்கி நூதனமான முறையில் மணமகன் வேட்டையில் இறங்கினார்கள். முகத்தை முகமூடியால் மறைத்துக் கொண்டு ஆடிப்பாடியதுடன், `இளைஞர்களே எங்களை திருமணம் செய்து கொள்ளுங்கள். எங்கள் அம்மாக்கள் எங்களை திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்துகிறார்கள்' என்று எழுதப்பட்ட அட்டைகளையும் வைத்திருந்தனர்.
இது மட்டுமல்ல, தெருவில் போவோர் வருவோரிடம் எல்லாம் தங்களைப் பற்றிய தகவல்கள் அடங்கிய துண்டுச் சீட்டுகளையும் வினியோகித்தனர்.
இவர்கள், கோமாளி அழகிகள் என்ற அடைமொழியை தங்களுக்குத் தாங்களே சூட்டிக் கொண்டு உள்ளனர்.
என்ன கொடுமை இது?
சீனாவின் குவாங்க்டோக் மாகாணத்தில் உள்ள குவாங்க்சோவ் நகரில் இளம் பெண்களுக்கு திருமணம் ஆவது தாமதமாகிக் கொண்டே போகிறதாம். மாப்பிள்ளை பார்த்து வெறுத்துப் போனற சில பெண்களின் பெற்றோர், என்ன செய்வீர்களோ.. எப்படியாவது உனக்கு பொருத்தமான துணையை தேடிக் கொள். உடனடியாக திருமணத்தை முடித்தாக வேண்டும் என்று தங்களது பெண்களிடம் கூறி விட்டார்களாம்.
பெற்றோரின் இந்த நிர்ப்பந்தம் காரணமாக 4 நாட்களுக்கு முன்பு 8 இளம் பெண்கள் நடுத்தெருவில் இறங்கி நூதனமான முறையில் மணமகன் வேட்டையில் இறங்கினார்கள். முகத்தை முகமூடியால் மறைத்துக் கொண்டு ஆடிப்பாடியதுடன், `இளைஞர்களே எங்களை திருமணம் செய்து கொள்ளுங்கள். எங்கள் அம்மாக்கள் எங்களை திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்துகிறார்கள்' என்று எழுதப்பட்ட அட்டைகளையும் வைத்திருந்தனர்.
இது மட்டுமல்ல, தெருவில் போவோர் வருவோரிடம் எல்லாம் தங்களைப் பற்றிய தகவல்கள் அடங்கிய துண்டுச் சீட்டுகளையும் வினியோகித்தனர்.
இவர்கள், கோமாளி அழகிகள் என்ற அடைமொழியை தங்களுக்குத் தாங்களே சூட்டிக் கொண்டு உள்ளனர்.
என்ன கொடுமை இது?
சென்னை அண்ணா சாலையில் ரூ.500 கோடியில் மேம்பாலம்!
2010-11 நிதியாண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் அன்பழகன் இன்று தாக்கல் செய்தார். அதில் உள்ள சிறம்பசங்கள் வருமாறு:
* வீடுகளுக்கு பயன்படும் பனை சட்டங்களுக்கு வரி விலக்கு
* மத்திய அரசு உதவியுடன் 7 புதிய பாலிக்டெக்னிக் அமைக்கப்படுகிறது
* சேது திட்டத்துக்கு தடையை நீக்க மத்திய அரசு முயற்சிக்க வோண்டும்
* பாக்கு மர இலைக்கட்டு, தென்னைக்கு வரிவிலக்கு
* சென்னை மெட்ரோ இரயில் திட்டத்திற்கு ரூ.600 கோடி ஒதுக்கீடு
* சென்னை கோயம்பேட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்
* மேலும் 44,80,000 இலவச வண்ணத்தொலைக்காட்சி பெட்டி வழங்கப்படும்
* சொட்டு நீர்ப்பாசனத்திட்டம் மேலும் 75 ஆயிரம் நிலம் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தப்படும்
* விவசாய சுயநிதிக் குழுக்களுக்கு சுழல்நிதி வழங்க ரூ.10 கோடி ஒதுக்கீடு
* பாக்குமர இலைத் தட்டுகளுக்கு வரிவிலக்கு.
* வீடு கட்டப் பயன்படும் பனைச் சட்டங்களுக்கு வரி விலக்கு.
* வரி வருவாயில் தென் மாநிலங்களுக்கு அளிக்கப்படும் பங்கீடு குறைப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது.
* நெல்லுக்கு ஊக்கத்தொகை வழங்க கூடுதலாக ரூ.200 கோடி ஒதுக்கீடு
* சென்னை அண்ணா சாலையில் ரூ.500 கோடி செலவில் மேம்பாலம்.
* வீடுகளுக்கு பயன்படும் பனை சட்டங்களுக்கு வரி விலக்கு
* மத்திய அரசு உதவியுடன் 7 புதிய பாலிக்டெக்னிக் அமைக்கப்படுகிறது
* சேது திட்டத்துக்கு தடையை நீக்க மத்திய அரசு முயற்சிக்க வோண்டும்
* பாக்கு மர இலைக்கட்டு, தென்னைக்கு வரிவிலக்கு
* சென்னை மெட்ரோ இரயில் திட்டத்திற்கு ரூ.600 கோடி ஒதுக்கீடு
* சென்னை கோயம்பேட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்
* மேலும் 44,80,000 இலவச வண்ணத்தொலைக்காட்சி பெட்டி வழங்கப்படும்
* சொட்டு நீர்ப்பாசனத்திட்டம் மேலும் 75 ஆயிரம் நிலம் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தப்படும்
* விவசாய சுயநிதிக் குழுக்களுக்கு சுழல்நிதி வழங்க ரூ.10 கோடி ஒதுக்கீடு
* பாக்குமர இலைத் தட்டுகளுக்கு வரிவிலக்கு.
* வீடு கட்டப் பயன்படும் பனைச் சட்டங்களுக்கு வரி விலக்கு.
* வரி வருவாயில் தென் மாநிலங்களுக்கு அளிக்கப்படும் பங்கீடு குறைப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது.
* நெல்லுக்கு ஊக்கத்தொகை வழங்க கூடுதலாக ரூ.200 கோடி ஒதுக்கீடு
* சென்னை அண்ணா சாலையில் ரூ.500 கோடி செலவில் மேம்பாலம்.
வாராக்கடன் பட்டியல்: ரிசர்வ் வங்கி உத்தரவு!
வங்கிகள் ஒவ்வொரு பிரிவு வாரியாக வாராக்கடன் (Non-Perfoming Asset) பட்டியலை வெளியிட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறை அடுத்த நிதி ஆண்டிலிருந்து ( 2009-10) செயல்படுத்த வேண்டும். இத்துடன் வங்கிகள் சிறப்பு கடன் திட்டங்களுக்கு (Special Purpose Vehile) கடன் அளித்திருந்தால், அந்த விவரத்தையும் தெரிவிக்க வேண்டும்.
இந்த உத்தரவு வங்கிகளின் செயல்பாடு வெளிப்படையானதாக அமையும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வங்கிகள் திரட்டியுள்ள வைப்பு நிதி, சேமிப்பு, வழங்கியுள்ள கடன் விபரங்களை பிரிவு வாரியாகவும், நிலுவையில் உள்ள வாராக் கடன் விவரத்தையும் வெளியிட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
இந்த புதிய நடைமுறை அடுத்த நிதி ஆண்டிலிருந்து ( 2009-10) செயல்படுத்த வேண்டும். இத்துடன் வங்கிகள் சிறப்பு கடன் திட்டங்களுக்கு (Special Purpose Vehile) கடன் அளித்திருந்தால், அந்த விவரத்தையும் தெரிவிக்க வேண்டும்.
இந்த உத்தரவு வங்கிகளின் செயல்பாடு வெளிப்படையானதாக அமையும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வங்கிகள் திரட்டியுள்ள வைப்பு நிதி, சேமிப்பு, வழங்கியுள்ள கடன் விபரங்களை பிரிவு வாரியாகவும், நிலுவையில் உள்ள வாராக் கடன் விவரத்தையும் வெளியிட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
புதன், 17 மார்ச், 2010
புகைப்பதால் நன்மை உண்டாம்!
புகைப் பிடித்தால் புற்று நோய் வரும், உடல்நிலை பாதிக்கும், ஆயுட்காலம் குறையும் என்று எத்தனையோ விதங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தியாகிவிட்டது. ஆனால் தற்போது புகைப்பதால் நன்மை உண்டு என்று கூறுகிறோமே என நம்மை சந்தேகிக்க வேண்டாம்.
அதாவது, புகைப் பிடிப்பதை நிறுத்தினால் ஓராண்டுக்குப் பிறகு, இதயத் தமணிகள் வலிமையாகி இதய நோய் ஏற்படும் வாய்ப்பை குறைப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இது குறித்து நம்மிடம் விளக்குகிறார் நியூயார்க்கில் உள்ள விஸ்கான்சின் பல்கலைக்கழக இதயவியல் தலைவர் ஜேம்ஸ் ஸ்டீன், ஒருவர் தொடர்ந்து புகைப்பிடித்துக் கொண்டிருப்பதால் அவரது ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்பதில் எந்த அளவிற்கும் சந்தேகம் இல்லை. ஆனால், அதே சமயம், புகைப் பிடிப்பதை நிறுத்தினால் ஒருவரது ஆரோக்கியம் வேகமாக அதிகரிக்கும் என்று தெரிய வந்துள்ளது.
அதாவது, இதயத்திற்குச் செல்லும் ரத்தத் தமணிகள் சிறப்பாக செயல்படும். அதனால் இதயம் வலிமையடைந்து நோய் ஏற்படும் வாய்ப்பு குறையும்.
புகைப்பதை நிறுத்துவதால் எடை அதிகரிக்கும் என்ற அச்சம் உள்ளது. எடை அதிகரிப்பு தற்காலிகமானதுதான். சில நாட்களில் அது தானாகவே சரியாகிவிடும். அதைப் பற்றிக் கவலைப் பட வேண்டாம்.
எனவே, புகைக்காமல் இருப்பவர்களை விட புகைத்துவிட்டு நிறுத்திவிட்டால் அவர்களுக்கு ஆரோக்கியம் அதிகரிக்கிறது என்பது புகைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு எல்லாம் ஒரு நல்ல விஷயம்தானே..
சரி எப்போதிலிருந்து புகைப்பதை நிறுத்துவது என்பதை உடனடியாக முடிவு செய்து கொள்ளுங்கள்.
திங்கள், 15 மார்ச், 2010
ஹைதராபாத்தில் அலுவலகம் திறக்கும் ஃபேஸ்புக்!
ஹைதராபாத்: உலகின் நம்பர் ஒன் சமூக இணைப்புத் தளம் என்ற பெருமைக்குரிய ஃபேஸ்புக், இப்போது இந்தியாவிலும் தனது அலுவலகத்தைத் தொடங்குகிறது.
ஹைதராபாதில் விரைவில் அலுவலகம் திறக்கிறது இந்த நிறுவனம். இதன் மூலம் இந்தியாவில் தனது நெட்வொர்க்கைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது, விளம்பர வருவாயைப் பெருக்குவது மற்றும் தள மேம்பாட்டுக்கான பணிகளை இந்தியாவிலும் உலகளவிலும் பெருக்கவிருப்பதாக அறிவித்துள்ளது ஃபேஸ்புக்.
தற்போது கலிபோர்னியாவில் பாலோ ஆல்டோ, அயர்லாந்தில் டப்ளின், டெக்ஸாஸின் ஆஸ்டின் ஆகிய இடங்களில் ஃபேஸ்புக் அலுவலகங்கள் உள்ளன. இவற்றுக்கு அடுத்து இந்தியாவில்தான் திறக்கப்படுகிறது.
இதுகுறித்து ஃபேஸ்புக்கின் குளோபல் ஆபரேஷன் இயக்குநர் டான் பௌல் கூறுகையில், இந்தியாவில் அதிகம் பேர் ஃபேஸ்புக் பயனாளர்களாக உள்ளனர். உள்ளூர் பிரச்சனை முதல் நாட்டுப் பிரச்சனை வரை விவாதிக்கின்றனர். இங்கு அலுவலகம் திறப்பதன் மூலம் ஃபேஸ்புக்கின் வீச்சும், பார்வையாளர் எண்ணிக்கையும் வருவாயும் பெருகும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் மூலம் அரசுக்கு ரூ.200 கோடி வரிவருவாய்!
தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். இருபது ஓவர் கிரிக்கெட் 3-வது தொடர் மூலம் மத்திய அரசுக்கு ரூ.200 கோடிக்கு மேல் வரி வருவாய் வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வருவாய்த்துறை தெரிவித்துள்ளது.
வீரர்கள், நடுவர்கள், பயிற்சியாளர்கள், வர்ணனையாளர்கள், உள்ளிட்ட பலரின் ஊதியங்களிலிருந்து டி.டீ.எஸ். வரி பிடிக்கப்படும் வகையில் ரூ.100 கோடியும், விளம்பரம், மார்கெட்டிங், ஆலோசனை சேவைகள் உள்ளிட்டதன் மீதான சேவை வரியாக ரூ.100 கோடியும் வரி வருவாயாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் ஐ.பி.எல். தொடரில் டி.டீ.எஸ். மூலம் ரூ.91 கோடி வரி வருவாய் கிடைத்தது. தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற 2-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் மூலம் சில கோடிகள் வரு வருவாய் வசூலிக்கப்பட்டது.
மும்பை வருவாய் வரித்த் துறை சமீபத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஒரு வர்த்தக நிறுவனம் போன்று செயல் படுவதால் அதனை வருமான வரி வட்டத்திற்குள் கொண்டு வருவதாக அறிவித்ததையடுத்து இந்த ஆண்டு அதிக வரி வசூலிக்கப்படும் என்று தெரிகிறது.
உடல் மெலிந்தவர்கள் சதைபிடிப்பு பெற!
பொதுவாக உடல் அதிக சூட்டைக் கொண்டவர்கள் உடல் மெலிந்து காணப்படுவார்கள். இப்படியானவர்கள் முதலில் உடல் சூட்டைக் குறைக்கும் வழியைக் காண வேண்டும்.
அதாவ பொன்னாங்கண்ணிக் கீரை உடல் சூட்டைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது. எனவே பொன்னாங்கண்ணிக் கீரையை சமைத்து அதனுடன் நெய் சேர்த்து சாப்பிட்டு வர மெலிந்த உடலில் சதை பிடிப்பு ஏற்படும்.
மெலிந்தவர்கள் பொன்னாங்கண்ணி சாப்பிட்டு வந்தால் உடல் அழகு பெறும்.
அதேப் போல பொன்னாங்கண்ணிக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வர உடலானது தங்கம் போன்ற மினுமினுப்பைப் பெறும்.
மேலும், பொன்னாங்கண்ணிக் கீரையை உப்பில்லாமல் தினமும் சாப்பிட்டு வர தூரப்பார்வை, பார்வை மங்குதல் போன்ற கண் நோயக்ள் குணமாகும்.
ஞாயிறு, 14 மார்ச், 2010
10 லட்சம் அளவைத் தொட்டது மாருதி உற்பத்தி - விற்பனை!
டெல்லி: ஆண்டுக்கு 10 லட்சம் அதாவது 1 மில்லியன் கார்கள் உற்பத்தி மற்றும் விற்பனை இலக்கைத் தொட்டுள்ளது இந்தியாவின் முதல்நிலை கார் தயாரிப்பாளரான மாருதி சுஸுகி நிறுவனம். அந்த நிறுவனத்தின் வரலாற்றில் இது ஒரு புதிய மைல்கல்லாகும்.
மாருதி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு 26 ஆண்டுகள் ஆகின்றன. இத்தனை ஆண்டுகளில் முதல் முறையாக 10 லட்சம் கார் உற்பத்தியளவையும், விற்பனை அளவையும் எட்டியுள்ளது மாருதி.
மாருதி நிறுவனம் ஒரு இந்திய அரசு நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்டது. அப்போது இதில் சுஸுகியும் ஒரு பங்குதாரராக இருந்தது. பின்னர் படிப்படியாக அரசு இந்த நிறுவனத்திலிருந்து விலகியது.
கடந்த ஏப்ரல் 09-பிப்ரவரி 10 காலகட்டத்தில் மாருதியின் உற்பத்தி அளவு 9.31 லட்சமாக இருந்தது. விற்பனையோ 9.23 லட்சமாக இருந்தது. இப்போது 10 லட்சத்தைத் தாண்டி சாதனை படைத்துள்ளது.
இந்த சாதனையை வரும் மார்ச் 23-ம் தேதி பெரிய நிகழ்வாகக் கொண்டாடுகிறது மாருதி.
இந்த உற்பத்தி மற்றும் விற்பனை சாதனையின் மூலம் சர்வதேச அளவில் மில்லியன்களில் கார் உற்பத்தி செய்யும் டொயோட்டா, ஜிஎம், வோக்ஸ்வேகன், ஃபோர்டு மற்றும் ரெனல்ட் போன்ற கார் உற்பத்தியாளர்கள் வரிசையில் முதல் இந்திய நிறுவனமாக மாருதியும் இடம் பெற்றுள்ளது.
வியாழன், 11 மார்ச், 2010
கணவரைத் தேட உள்ளாடைகளுடன் தெருவில் ஆடிப் பாடிய சீனப் பெண்கள்!!
பெய்ஜிங்: சீனாவில், எட்டு இளம் பெண்கள், தங்களுக்கேற்ற கணவரைத் தேடி தெருவில், உள்ளாடை மட்டும் அணிந்தபடி ஆடிப் பாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தங்களை கிரேஸி பியூட்டிஸ் என்று இவர்கள் வர்ணித்துக் கொண்டனர். அனைவருமே திருமண வயதைத் தாண்டியவர்கள். இருப்பினும் இன்னும் மணமகன் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகிறவர்கள்.
இதனால் வீட்டிலும் ஏச்சுப் பேச்சு கிளம்பியது. இதையடுத்து ஒரு முடிவெடுத்து எட்டு பேரும் குவோங்ஷோ நகரில் உள்ள ரயில்வே நிலையத்திற்கு வந்தனர். பின்னர் தங்களது உடைகளை படு வேகமாக கழற்றிப் போட்டனர்.
என்ன நடக்கிறது என்பது புரியாமல் அனைவரும் திகைத்து நின்றபோது உள்ளாடைகளுடன் தெருவில் இறங்கி ஆடிப் பாட ஆரம்பித்தனர். அங்கு நின்று வேடிக்கை பார்த்த வாலிபர்களை அணுகி தங்களைக் கல்யாணம் செய்து கொள்ள முடியுமா என்றும் கேட்டனர்.
இதுதவிர தங்களது பயோடேட்டா அடங்கிய தாளையும் அவர்கள் கையில் திணித்தனர். அத்தோடு நில்லாமல் எனது அம்மா என்னைக் கல்யாணம் செய்து கொள்ளுமாறு அணத்துகிறார் என்ற வாசகம் அடங்கிய தட்டியையும் ஏந்திக் கொண்டிருந்தனர்.
சிறிது நேரம் இந்தக் கூத்து நடந்தது. ஆனாலும் ஒரு வாலிபரும் அவர்களை மணக்க முன்வரவில்லை. இதையடுத்து ஏமாற்றத்துடன் உடைகளை அணிந்து கொண்டு அங்கிருந்து அவர்கள் கிளம்பிச் சென்றனர்.
உற்சாகமாக இருக்க குளிர்ந்த நீரில் குளிக்கலாம்!
மனித உடலுக்கு தண்ணீர் வைத்தியம் என்பது மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் உற்சாகமளிக்கக் கூடியதாகும்.
உங்கள் உடலுக்கும், உள்ளத்திற்கும் சக்தி தேவை என்று நீங்கள் எண்ணினால், உற்சாகமின்மையால் அவதிப்படுவதாக நீங்கள் உணர்ந்தால் உங்களுக்குத் தேவையானது குளிர்ந்த நீர் வைத்தியம்தான்.
தண்ணீர் வைத்தியம் என்றால் குளிக்கும் தொட்டியில் குளிர்ந்த நீரை நிரப்பிக் கொள்ளுங்கள். அதற்குள் இறங்கி படுத்துக் கொள்ளுங்கள்.
ஒரு நிமிடம் தண்ணீருக்குள் உங்கள் உடல் முழுவதும் இருக்கும் விதத்தில் வைத்துக் கொண்டு உடலை ஆங்காங்கே உங்கள் கைககளால் தேய்த்து விடுங்கள்.
ஒரு நிமிடம் முதல் மூன்று நிமிடங்கள் வரை இப்படி குளிர்ந்த தண்ணீரில் சோப் இன்றித் தேய்த்துக் குளிக்கும்போது நிணநீர் மண்டலம் சுறுசுறுப்பாக இயங்கி உள்ளே உள்ள உறுப்புகளை சுத்தம் செய்துவிடுகிறது. இதனால் இதயமும் சுறுசுறுப்படைகிறது.
குளித்ததும் உடலை நன்கு துடைத்துவிடுங்கள். இதனால் அடுத்த பல மணி நேரம் சுறுசுறுப்பாகப் பணிபுரியலாம்.
பாங்க் ஆப் இந்தியா வட்டி அதிகரிப்பு!
அரசு வங்கியான பாங்க் ஆப் இந்தியா, வைப்பு நிதிக்கான வட்டியை அரை விழுக்காடு அதிகரித்துள்ளது.
முன்பு 9 மாதத்தில் இருந்து 364 நாட்கள் வரையிலான வைப்பு நிதிக்கு 8 விழுக்காடு வட்டி வழங்கியது. இது தற்போது 6.5 விழுக்காடாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மூன்று வருடமும், அதற்கு அதிகமான காலத்திற்கான வைப்பு நிதிக்கு வட்டி 6.5 விழுக்காட்டில் இருந்து 7 விழுக்காடாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தனியார் துறை வங்கிகளான ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, ஹெச்.டி.எப்.சி ஆகியன சென்ற மாதம் வைப்பு நிதிக்கான வட்டியை உயர்த்தியது. இதை தொடர்ந்து அரசு வங்கியான பாங்க் ஆப் இந்தியாவும் அதிகரித்துள்ளது. இதில் இருந்து இனி கடன் மீதான வட்டி அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
புதிய சட்டசபை கட்டிட திறப்புவிழா - பிரதமர், சோனியா நாளை சென்னை வருகை.
சென்னை: சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்டுள்ள புதிய சட்டசபை மற்றும் தலைமை செயலக வளாகத்தை பிரதமர் மன்மோகன் சிங் நாளை திறந்து வைக்கிறார்.
இந்நிகழ்ச்சியில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கர்நாடக முதல்வர் எடியூரப்பா மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இதையொட்டி, சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். மத்திய சிறப்பு பாதுகாப்புப் பிரிவு போலீசார் பாதுகாப்பு வளையத்தை உருவாக்கியுள்ளார்கள். மொத்தமாக நான்கு அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக புதிய சட்டசபை கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சி மாலை 5 மணிக்கு தொடங்கி, 7 மணிக்கு முடிவடையும் என்றும், 7 மணி வரை பிரதமரும், சோனியாவும் விழா மேடையில் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் பிரதமர் மன்மோகன் சிங்கும், சோனியா காந்தியும் 6 மணிக்கே விழாவை முடித்துக்கொண்டு புறப்பட திட்டமிட்டுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, புதிய சட்டமன்ற திறப்பு நிகழ்ச்சியில் பிரதமர், 1 மணி நேரம் மட்டுமே இருக்கிறார். டெல்லியில் இருந்து பிற்பகல் 1.50 மணிக்கு சிறப்பு விமானத்தில் பிரதமரும், சோனியாவும் புறப்படுகிறார்கள்.
சென்னைக்கு மாலை 4.35 மணிக்கு அந்த விமானம் வருகிறது. 4.40 மணிக்கு மீனம்பாக்கம் விமான நிலையத்தி்ல் இருந்து காரில் புறப்பட்டு, மாலை 5 மணிக்கு, புதிய சட்டமன்ற வளாகத்துக்கு பிரதமரும், சோனியாவும் வருகிறார்கள்.
அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை அருகே அமைக்கப்பட்டுள்ள நுழைவாயில் வழியாக புதிய சட்டசபை வளாகத்துக்கு சென்று கட்டிடத்தை பார்வையிடுகிறார்கள்.
புதிய சட்டசபை வளாக வாசலில், முதலமைச்சர் வட்டத்தின் வாயிலில் மகிழம் மற்றும் வல்சுரா ஆகிய மரக்கன்றுகளை பிரதமர் மன்மோகன்சிங் நடுகிறார்.
பிறகு, முதலமைச்சர் வட்டத்தின் நுழைவாயிலில் கட்டப்பட்டிருக்கும் ரிப்பனை வெட்டி கட்டிடத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மன்மோகன்.
அதைத் தொடர்ந்து அங்கு தயாராக நிறுத்தப்பட்டிருக்கும் பேட்டரி காரில், ஒவ்வொரு கட்டிடமாக வரிசையாக பார்த்துக்கொண்டே பிரமதரும், சோனியாவும் மேடைக்கு செல்கிறார்கள்.
மாலை 6 மணிக்குள்ளாக திறப்பு விழா நிகழ்ச்சிகளை முடிந்துக் கொண்டு, பிரதமரும், சோனியாவும் புறப்படுகிறார்கள். 6.05 மணிக்கெல்லாம் அங்கிருந்து காரில் புறப்பட்டு, 6.25 மணிக்கு விமான நிலையத்தை அடைகிறார்கள்.
அவர்களது விமானம், மாலை 6.30க்கு புறப்பட்டு, டெல்லியை இரவு 9.15 மணிக்கு சென்றடைகிறது.
போக்குவரத்து ஏற்பாடுகள்..
சட்டசபைத் திறப்பு விழாவையொட்டி சென்னை நகரின் முக்கியப் பகுதிகளில் பெருமளவிலான போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
புதன், 10 மார்ச், 2010
இறந்தவர்களின் ஆவிகளை ஏலம் விட்ட நூதனப் பெண்!
வெல்லிங்டன்: நியூசிலாந்தில் இறந்தவர்களின் ஆவிகளை ஏலம் விட்டு நூதனமாக நடந்து கொண்டுள்ளார் ஒரு பெண் .
ஆன்லைன் மூலம் இந்த ஏலம் நடந்தது. இறந்த இருவரின் ஆவிகள் அடங்கிய கண்ணாடி பாட்டில்களை அந்தப் பெண் நேற்று இரவு ஏலத்திற்கு விட்டார். இந்த இரு பாட்டில்களுக்குள் இருந்த ஆவிகளை ஒருவர் 1983 அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் எடுத்துள்ளார்.
ஏவி உட்பரி என்ற அமைப்பு இந்த நூதன ஏலத்தை நடத்தியது. கிறிஸ்ட்சர்ச் நகரைச் சேர்ந்தது இந்த அமைப்பு.
இதுகுறித்து அந்தப் பெண் கூறுகையில், இந்த ஆவிகளை எனது வீட்டில் வைத்து பிடித்தேன். பின்னர் அவற்றை அடக்கி கண்ணாடிப் பாட்டில்களுக்குள் புக வைத்தேன்.
இதில் ஒரு ஆவி, 1920களில் எனது வீட்டில் வசித்து வந்த முதியவர் ஆகும். இன்னொரு ஆவி, சிறுமியாகும் என்று கூறியுள்ளார் அந்த வினோதப் பெண்.
ஆவிகளை ஏலம் விடுவதாக ஏவி உட்பரி நிறுவனம் தனது இணையதளத்தில் செய்தி வெளியிட்டவுடன் ஏகப்பட்ட பேர் ஏலத் தொகையுடன் குவிந்து விட்டனராம். கிட்டத்தட்ட 2 லட்சத்து 14 ஆயிரம் பேஜ் வியூக்களும் அதற்குக் கிடைத்துள்ளன.
இரண்டு ஆவிகளையும் ஏலத்திற்கு எடுத்த நபர் யார் என்பதை அந்த நிறுவனம் வெளியிடவில்லை.
ஈ.வே.ராமசாமி நாயக்கர் மாதிரி நியூசிலாந்தில் யாரும் பிறக்கவில்லை போலும்.
ஆன்லைன் மூலம் இந்த ஏலம் நடந்தது. இறந்த இருவரின் ஆவிகள் அடங்கிய கண்ணாடி பாட்டில்களை அந்தப் பெண் நேற்று இரவு ஏலத்திற்கு விட்டார். இந்த இரு பாட்டில்களுக்குள் இருந்த ஆவிகளை ஒருவர் 1983 அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் எடுத்துள்ளார்.
ஏவி உட்பரி என்ற அமைப்பு இந்த நூதன ஏலத்தை நடத்தியது. கிறிஸ்ட்சர்ச் நகரைச் சேர்ந்தது இந்த அமைப்பு.
இதுகுறித்து அந்தப் பெண் கூறுகையில், இந்த ஆவிகளை எனது வீட்டில் வைத்து பிடித்தேன். பின்னர் அவற்றை அடக்கி கண்ணாடிப் பாட்டில்களுக்குள் புக வைத்தேன்.
இதில் ஒரு ஆவி, 1920களில் எனது வீட்டில் வசித்து வந்த முதியவர் ஆகும். இன்னொரு ஆவி, சிறுமியாகும் என்று கூறியுள்ளார் அந்த வினோதப் பெண்.
ஆவிகளை ஏலம் விடுவதாக ஏவி உட்பரி நிறுவனம் தனது இணையதளத்தில் செய்தி வெளியிட்டவுடன் ஏகப்பட்ட பேர் ஏலத் தொகையுடன் குவிந்து விட்டனராம். கிட்டத்தட்ட 2 லட்சத்து 14 ஆயிரம் பேஜ் வியூக்களும் அதற்குக் கிடைத்துள்ளன.
இரண்டு ஆவிகளையும் ஏலத்திற்கு எடுத்த நபர் யார் என்பதை அந்த நிறுவனம் வெளியிடவில்லை.
ஈ.வே.ராமசாமி நாயக்கர் மாதிரி நியூசிலாந்தில் யாரும் பிறக்கவில்லை போலும்.
உண்ணும் பொருட்களில் அடங்கியிருப்பவை!
ஆப்பிளில் தான் அதிக சத்துக்கள் அடங்கியிருப்பதாக நாம் எண்ணுகிறோம். ஆனால், நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் வாழைப் பழமும் மற்ற எந்த பழத்திற்கும் குறைச்சல் ஆகாது.
விட்டமின் ஏ,பி,சி ஆகிய மூன்று விட்டமின்கள் அடங்கிய ஒரே பழம் வாழைப்பழம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மக்காச்சோளத்தை நீர் தெளித்துப் பொரித்தால் அதனை பாப்கார்ன் என்கிறோம். சுமார் ஆயிரம் ஆண்டுகளாக பாப்கார்ன் நமது உணவு முறையில் இருந்து வருகிறது. பாப் கார்னில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.
ஸ்ட்ராபெர்ரிப் பழத்தில் 20 விழுக்காடு அளவிற்கு பாலிக் ஆசிட் நிறைந்துள்ளது. இது ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்க உதவும். ரத்த சோகையைத் தவிர்க்கும்.
ஆலிவ் பழங்கள் கசப்பாக இருக்கும். அவற்றின் கசப்புச் சுவையை நீக்க உப்புத் தண்ணீரில் ஊறப் போட வேண்டும். நாம் வாங்கும் ஆலிவ் எண்ணையுடன் பிமென்டோஸ் என்ற ஒரு பொருள் சேர்க்கப்பட்டு சுவை கூட்டப்படுகிறது.
செவ்வாய், 9 மார்ச், 2010
ஏலத்துக்கு வருகிறது செக்ஸ்.காம்!
நியூயார்க்: இணையதள டொமைன் பெயர்களிலேயே மிகவும் காஸ்ட்லியானதாக கருதப்படும் செக்ஸ்.காம் என்ற டொமைன் பெயர் அடுத்த வாரம் ஏலத்துக்கு வருகிறது.
இணையதள உரிமையாளர்கள் மத்தியில் நியூஸ் டாட் காம், பிஸா டாட் காம் போன்ற எளிமையான பெயர்களுக்கு கிராக்கி அதிகம். பிஸா.காம் என்ற டொமைன் பெயர் கடந்த 2008ம் ஆண்டிலேயே 2.5 மில்லியன் டாலர்களுக்கு விலை போனது.
இந்த வரிசையில், செக்ஸ்.காம் என்ற டொமைன் பெயர் மிகவும் காஸ்ட்லி ஆனதாக கருதப்படுகிறது.
இரண்டாண்டுகளுக்கு முந்தைய காலத்திலேயே இந்த செக்ஸ்.காம் மூலம் தினசரி 15 ஆயிரம் டாலர் வருமானம் இருந்தது.
செக்ஸ்.காம் என்ற டொமைனை முதல்முறையாக 1994ம் ஆண்டில் கிரான்ட் மீடியாவைச் சேர்ந்த கேரி கிரிமென் என்பவர் பதிவு செய்து வைத்திருந்தார்.
இவரிடம் இருந்து 2006ம் ஆண்டில் எஸ்காம் நிறுவனம் வாங்கியது. விற்பனை ஒப்பந்த விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. என்றாலும், இந்த டொமைனை எஸ்காம் நிறுவனம் சுமார் 1.4 கோடி அமெரிக்க டாலருக்கு வாங்கியதாக செய்திகள் வெளியாயின.
அப்போது எஸ்காம் நிறுவனம், நியூஜெர்சியில் உள்ள டிஓஎம் பார்ட்னர்ஸ் என்ற கம்பெனியில் இருந்து கடனுதவி பெற்றுத்தான் செக்ஸ்.காம் டொமைனை வாங்கியிருந்தது.
இந்நிலையில், கடந்த ஒரு வார காலமாக கடனுக்கான பணத்தை எஸ்காம் திருப்பிச் செலுத்தவில்லை என்று தெரிகிறது.
இதனால், கடன் ஒப்பந்தப்படி செக்ஸ்.காம் டொமைனை ஏலத்துக்கு விட டிஓஎம் பார்ட்னர்ஸ் முடிவு செய்துவிட்டது.
வரும் 18ம் தேதி நியூயார்க்கில் உள்ள விண்டெல்ஸ் மார்க் லேன்&மிட்டென்டார்ஃப் சட்ட நிறுவனத்தில் இந்த ஏலம் சட்டப்படி நடக்கும் என டிஓஎம் நிர்வாகி ஸ்காட் மாத்யூஸ் கூறியுள்ளார்.
எனினும் எஸ்காம் மற்றும் செக்ஸ்.காம் தரப்பில் இருந்து இதுதொடர்பாக அறிக்கை எதுவும் வெளியாகவில்லை.
இணையதள உரிமையாளர்கள் மத்தியில் நியூஸ் டாட் காம், பிஸா டாட் காம் போன்ற எளிமையான பெயர்களுக்கு கிராக்கி அதிகம். பிஸா.காம் என்ற டொமைன் பெயர் கடந்த 2008ம் ஆண்டிலேயே 2.5 மில்லியன் டாலர்களுக்கு விலை போனது.
இந்த வரிசையில், செக்ஸ்.காம் என்ற டொமைன் பெயர் மிகவும் காஸ்ட்லி ஆனதாக கருதப்படுகிறது.
இரண்டாண்டுகளுக்கு முந்தைய காலத்திலேயே இந்த செக்ஸ்.காம் மூலம் தினசரி 15 ஆயிரம் டாலர் வருமானம் இருந்தது.
செக்ஸ்.காம் என்ற டொமைனை முதல்முறையாக 1994ம் ஆண்டில் கிரான்ட் மீடியாவைச் சேர்ந்த கேரி கிரிமென் என்பவர் பதிவு செய்து வைத்திருந்தார்.
இவரிடம் இருந்து 2006ம் ஆண்டில் எஸ்காம் நிறுவனம் வாங்கியது. விற்பனை ஒப்பந்த விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. என்றாலும், இந்த டொமைனை எஸ்காம் நிறுவனம் சுமார் 1.4 கோடி அமெரிக்க டாலருக்கு வாங்கியதாக செய்திகள் வெளியாயின.
அப்போது எஸ்காம் நிறுவனம், நியூஜெர்சியில் உள்ள டிஓஎம் பார்ட்னர்ஸ் என்ற கம்பெனியில் இருந்து கடனுதவி பெற்றுத்தான் செக்ஸ்.காம் டொமைனை வாங்கியிருந்தது.
இந்நிலையில், கடந்த ஒரு வார காலமாக கடனுக்கான பணத்தை எஸ்காம் திருப்பிச் செலுத்தவில்லை என்று தெரிகிறது.
இதனால், கடன் ஒப்பந்தப்படி செக்ஸ்.காம் டொமைனை ஏலத்துக்கு விட டிஓஎம் பார்ட்னர்ஸ் முடிவு செய்துவிட்டது.
வரும் 18ம் தேதி நியூயார்க்கில் உள்ள விண்டெல்ஸ் மார்க் லேன்&மிட்டென்டார்ஃப் சட்ட நிறுவனத்தில் இந்த ஏலம் சட்டப்படி நடக்கும் என டிஓஎம் நிர்வாகி ஸ்காட் மாத்யூஸ் கூறியுள்ளார்.
எனினும் எஸ்காம் மற்றும் செக்ஸ்.காம் தரப்பில் இருந்து இதுதொடர்பாக அறிக்கை எதுவும் வெளியாகவில்லை.
பங்குச் சந்தையில் நிதி திரட்ட எஸ்பிஐக்கு அனுமதி!
டெல்லி: தனக்குத் தேவையான நிதியை பங்குச் சந்தையில் திரட்டிக் கொள்ள பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) க்கு அனுமதி தரும் மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
பொதுத்துறை வங்கிகளில் மிக அதிகமான கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது பாரத ஸ்டேட் வங்கி. இதில் அரசுக்கு 55 சதவீத பங்கு உள்ளது. இதில் 4 சதவீதத்தை பங்கு வெளியீடு மூலம் விற்பனை செய்து நிதி ஆதாரத்தைப் பெருக்கிக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
2010ம் ஆண்டுக்கான பாரத ஸ்டேட் வங்கியின் திருத்த மசோதாவை நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்தார்.
இதன்படி தற்போது அரசுக்குள்ள 55 சதவீத பங்குகளை 51 சதவீதமாகக் குறைத்துக் கொள்ள இந்தத் திருத்தம் வகை செய்கிறது. இவை பங்குச் சந்தை மூலம் முன்னுரிமை பங்குகளாக வெளியிடப்படும்.
1955ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட எஸ்பிஐ சட்டம் 1993ம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்டது. அப்போது பங்குச் சந்தை மூலம் நிதி திரட்ட அனுமதி அளிக்கப்பட்டது. பங்குகளாகவோ அல்லது கடன் பத்திரங்களாகவோ வெளியிட அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் முன்னுரிமை பங்கு மற்றும் போனஸ் பங்குகள் வெளியிட அனுமதி அளிக்கப்படவில்லை.
தற்போதைய திருத்த சட்டத்தின்படி பாரத ஸ்டேட் வங்கி பங்குச் சந்தையில் முன்னுரிமை பங்குகளை வெளியிட வழி ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தேவையான நிதி ஆதாரத்துக்காக முன்னுரிமைப் பங்குகள் அல்லது குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு பங்கு ஒதுக்கீடு செய்வதன் மூலம் நிதி திரட்டிக் கொள்ள முடியும். சந்தையின் சூழலுக்கேற்ப முடிவு செய்து கொள்ளும் அதிகாரமும் வங்கிக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ரிசர்வ் வங்கியின் அனுமதியோடு ரூ. 5,000 கோடி நிதியை பங்குச் சந்தை மூலம் எஸ்பிஐ திரட்டும்.
இந்த மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தால், வங்கியில் நான்கு நிர்வாக இயக்குநரை நியமிக்கலாம். அத்துடன் துணைத் தலைவர் பதவியை முற்றிலுமாக நீக்க முடியும். ரூ. 5,000 மதிப்பிலான வங்கிப் பங்கு வைத்திருக்கும் முதலீட்டாளர்கள் கூட இயக்குநர் பதவிக்கு போட்டியிடலாம்.
இந்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்ட போது, மகளிர் மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சமாஜவாதி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர்கள் கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தனர். எனவே இதில் அவர்கள் கவனம் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விவாதம் வரும்போது இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பவும் வாய்ப்புள்ளது!
ஏர் இந்தியாவுக்கு ரூ.5,400 கோடி நஷ்டம் - பிரஃபுல் பட்டேல் தகவல்.
டெல்லி: ஏர் இந்தியா நிறுவனத்துக்கு நடப்பு நிதியாண்டில் ரூ. 5 ஆயிரத்து 400 கோடி நஷ்டம் ஏற்படும் என கணிக்கப்படுவதாக விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரஃபுல் பட்டேல் தெரிவித்தார்.
ஏர் இந்தியா நிறுவனம் ஏற்கனவே கடந்த 2007-08ம் நிதியாண்டில் ரூ.2 ஆயிரத்து 226 கோடியும், 2008-09ம் நிதியாண்டில் ரூ.5 ஆயிரத்து 548 கோடியும் நஷ்டத்தை எதிர்கொண்டது.
இந்நிலையில் நடப்பு நிதியாண்டில் ஏற்பட்ட நஷ்டத் தொகையையும் சேர்த்தால் கடந்த மூன்று நிதி ஆண்டுகளில் மட்டும் ஏர் இந்தியா மொத்தம் ரூ. 13,174.16 கோடி நஷ்டம் அடைந்துள்ளது.
ராஜ்யசபாவில் நேற்று கேள்வி ஒன்றிற்கு பதில் அளிக்கையில் இத்தகவலை தெரிவித்த அமைச்சர் பிரஃபுல் பட்டேல், வரும் 2013ம் ஆண்டு வரை ஏர் இந்தியா நஷ்டத்தை எதிர்கொண்டாக வேண்டும் எனக் கூறினார்.
செலவு குறைப்பு நடவடிக்கைகள் மற்றும் வருமானத்தை பெருக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
2009-10ம் நிதியாண்டில் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் ரூ.1,911 கோடி மிச்சப்படுத்த திட்டமிடப்பட்டது. ஆனால் ரூ.753 கோடி மட்டுமே ஏர் இந்தியாவால் சிக்கனப்படுத்த முடிந்தது என்றும் அமைச்சர் கூறினார்.
திங்கள், 8 மார்ச், 2010
வீடு, கார் கடன் வட்டி வகிதம் 50 புள்ளிகள் வரை அதிகரிப்பு!
டெல்லி: ரிசர்வ் வங்கி ரொக்க இருப்பு விகிதத்தை அதிகரித்ததன் விளைவாக ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, கோடாக் மஹிந்தரா உள்ளிட்ட வங்கிகள் கார் மற்றும் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 50 புள்ளிகள் வரை கூட்டியுள்ளன.
தனியார் துறையில் அதிகளவு கடன் வழங்கும் ஐசிஐசிஐ வங்கி தனது கார் கடன் வட்டியை 0.5 சதவீதம் அதிகரித்துள்ளது. அதோடு 8.25 சதவீத வட்டியில் வழங்கி வந்த சிறப்பு வீட்டுக் கடன் திட்டத்தையும் ஐசிஐசிஐ நிறுத்திவிட்டது.
வட்டி உயர்வுக்கான காரணத்தை வங்கிகள் தெரிவிக்க வில்லை என்றாலும், ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகிதத்தை உயர்த்தியதே இந்த மாற்றத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.
வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகிதத்தை ரிசர்வ் வங்கி 50 புள்ளிகள் அதிகரித்ததன், வாடிக்கையாளர்களின் முதலீட்டில் 5.75 சதவீதம் வரை இருப்பு வைக்க வேண்டிய நிலை வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் விளைவாக, கடன்களுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் கூட்டியுள்ளன. புதிய கார் லோன்களுக்கான வட்டி விகிதம் தற்போது 9.75 முதல் 11 சதவீதம் வரை உயரும் என ஐசிஐசிஐ அறிவித்துள்ளது.
தற்போது ஐசிஐசிஐ வங்கி, வீட்டுக்கடன் ரூ.30 லட்சம் வரை 8.75 சதவீதமும், ரூ.30 லட்சம் முதல் 50 லட்சம் வரை 9 சதவீதமும், ரூ.50 லட்சத்துக்கு மேல் 9.5 சதவீத வட்டியிலும் வழங்கி வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் வழங்கப்படும் புதிய கடன்களுக்கு இந்த வட்டி வகிதத்தில் 25 அடிப்படைப் புள்ளிகள் வரை அதிகரிக்கும்.
அதேபோல், கார் லோன் பிரிவில், 35 மாதங்கள் வரையிலான கடன்களுக்கு 9 முதல் 13 சதவீதமும், 36 முதல் 60 மாத கடனுக்கு 8.75 முதல் 12.5 சதவீதம் வரை வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மத்திய பட்ஜெட்டில் வரி உயர்வு காரணமாக கார்கள் விலை உயர்ந்துள்ள நிலையில், வட்டி விகிதமும் அதிகரித்திருப்பது கார் வாங்க திட்டமிட்டுள்ள நடுத்தர சம்பளதாரர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஐசிஐசிஐ போலவே ஹெச்டிஎஃப்சி, கோடாக் மஹிந்தரா வங்கிகளும் தங்களின் கார் கடன் மீதான வட்டி விகிதங்களை மாற்றி அமைத்துள்ளன.
இந்த மூன்று வங்கிகளிலும் புதிய வட்டி விகிதம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்பிஐயும் தனது வட்டி விகிதத்தை திருத்தி அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. வரும் மே அல்லது ஜூன் மாதத்தில் புதிய வட்டி விகிதம் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச மகளிர் தினம்
ஆண்களுக்கு இணையாக பெண்களும் தங்கள் உரிமைகளைக் கேட்டு போராடியதை குறிப்பிடத்தான் சர்வதேச மகளிர் தினம் ஆண்டுதோறும் மார்ச் மாதம் 8ம் தேதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த தினத்தினை சீனா, ரஷ்யா, பல்கேரியா, வியட்நாம் உற்பட பல நாடுகள் விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தியுள்ளன.
இனம், மொழி, கலாசாரம், பொருளாதாரம், அரசியல் ஆகிய பல்வேறு வேறுபாடுகளை மறந்து பெண்கள் தினம் அனைத்து பெண்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தினத்தில் பெண்கள் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களின் உரிமைகளுக்குப் பங்கம் விளைவிக்காமல் சாதனைகளை கொண்டாடும் வகையிலும் கடைபிடிக்க வேண்டும். இக்கொண்டாட்டங்களில் குறிப்பாக உலகம் முழுவதும் இயங்கிக் கொண்டிருக்கும் ஆக்கபூர்வமான பெண்ணிலைவாதச் செயற்பாட்டாளர்கள் தனியாகவும், குழுக்களாகவும் அமைப்புக்கள் சார்ந்தும், அக்கபூர்வமான செயல்வாதங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மகளிர் தினத்தின் சுருக்க வரலாறு:
மகளிர் தினத்தின் சுருக்க வரலாற்றினைப் பின்வருமாறு இனங்காட்டலாம். வரலாற்றுக் காலம் முதல் பெண்கள் போகப்பண்டங்களாகவும், அடிமைகளாகவும், உரிமையற்றவர்களாகவும் காணப்பட்ட நிலையிலிருந்து படிப்படியாக மீண்ட நிலை இந்நிகழ்வின் பின்னணிக்கு அடிப்படையாக அமைகின்றது. 1789ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதித்துவம் (அரசனின் ஆலோசனைக் குழுக்களில்) என்று கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியின்போது பாரீஸில் பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர்!. ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் வேண்டும் என்றும் வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணி நேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்று பெண்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர்!.
ஆர்ப்பாட்டக்காரர்களைச் சமாதானம் செய்து, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மன்னர் வாக்களித்தார். ஆனால், அது அவனால் இயலாமற்போகவே மன்னன் லூயிஸ் முடிதுறந்தார். இதனால் ஐரோப்பிய நாடுகளிலுள்ள பெண்களும் கிளர்ச்சியை ஆரம்பித்தனர். இக்கட்டத்தில் இத்தாலியிலும் பெண்கள் இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள முயன்று தங்களுக்கு வாக்குரிமை கேட்டுப் போராட ஆரம்பித்தனர். கிரீஸ் நாட்டில் 'விஸிஸ்ட்ரடா என்பவரின் தலைமையில், ஆஸ்த்ரியா, டென்மார்க், ஜெர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகளும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டபோது, ஆளும் வர்க்கம் அசைந்துகொடுக்கத் தொடங்கியது.
பிரான்ஸ் நாட்டில் புருஸ்லியனில் 2வது குடியரசை நிறுவிய லூயிஸ் ப்ளாங்க், பெண்களுக்கு வாக்குரிமை வழங்கவும், அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடமளிக்கவும் ஒப்புதல் அளித்தார். அந்த நாள் மார்ச் 8, 1848 ஆகும். உலகப் பெண்களின் போராட்டங்களுக்கு வெற்றி கிடைத்த அந்த நாளே, "மகளிர் தின"மாக அமைய அடிப்படை வித்தாக அமைந்தது!.
1857ல் நியூயோர்க்கில் உழைக்கும் வர்க்கப் பெண்களின் அமைப்புகள் தோன்றி, போராட்டங்கள் ஆரம்பமாகியிருந்தன. இப்போரட்டங்களால் ஆட்சியாளர்கள் நிலைகுலைந்தார். உலகநாடுகள் அனைத்திலும் பரவிய இப்போராட்டங்களின் விளைவாக, 1910ல் பணிக்குச் செல்லும் பெண்களுக்கான சர்வதேச மாநாடு கோபன்ஹேகனில் நடைபெற்றது. இம்மகாநாட்டில் ஜெர்மனியின் சோசலிச ஜனநாயக கட்சியின் மகளிர் அணித்தலைவியான க்ளாரா ஜெட்கின் (CLARA ZETKIN) சர்வதேச மகளிர் தினம் கொண்டாடும் ஒரு யோசனையை முன்வைத்தார்.
பெண்கள் தங்கள் உரிமைகளைக் கோர சர்வதேசம் முழுதும் ஒரு தினத்தை மகளிர் தினமாகக் கொண்டாட வேண்டியதன் அவசியத்தை அவர் எடுத்துரைத்தார். 17 நாடுகளிலிருந்து அந்த மாநாட்டில் கலந்து கொண்ட அனைவரும் அந்தத் திட்டத்தை ஏகமனதாக வரவேற்றனர். இதைத் தொடர்ந்து ஆண்டில் (1911) க்ளாரா ஜெட்கினால் 19 மார்ச்சில் சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
ஜெர்மனில் The Vote for Women மற்றும் ஆஸ்திரேலியாவில் Women’s Day என்ற பத்திரிகைகள் ஆரம்பிக்கப்பட்டு பெண்கள் உரிமைகள், பாராளுமன்றத்தில் பெண்கள், உட்பட பல கட்டுரைகளை வெளியிட்டன. எல்லாப் பத்திரிகைகளுமே பெண்களுக்கு பாராளுமன்றத்தில் தங்கள் உரிமையை நிலைநாட்ட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தின. 1911ல் சர்வதேச மகளிர் தினத்திற்கு கிடைத்த வெற்றி எட்டுத் திக்கிலும் பரவியது. அந்த வெற்றியைத் தொடர்ந்து 1848ல் பிரான்ஸ் மன்னர் ப்ளாங்க், பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க ஒப்புக்கொண்ட நாளான மார்ச் 8யை, நினைவுகூரும் வகையில், 1913 முதல் மகளிர் தினத்தை மார்ச் 8க்கு மாற்றியமைத்து.
ஆனாலும் அது உத்தியோக பூர்வமானதாக இருக்கவில்லை. இது குறித்து 1917 மார்ச் 8ம் தேதி ரஷ்யாவில் உள்ள சென்பீட்டர்ஸ் நகரில் ஒரு போராட்டம் நடாத்தப்பட்டது. இப் போராட்டத்தில் அலெக்ஸ்சாண்ட்ரா கொலன்றா என்ற ரஷ்யப் பெண்ணிலைவாதியும் கலந்து கொண்டார். இப்போராட்டத்தையடுத்து 1921ம் ஆண்டு மார்ச் 8ம் தேதியே சர்வதேச பெண்கள் தினமாக உத்தியோகபூர்வமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து மார்ச் 8ம் தேதி சர்வதேசப் பெண்கள் தினமாக கடைபிடிக்கப்பட்டு சம உரிமைகளுக்கான பெண்களது போராட்டம் தொடர்கிறது.
ஐ.நாவும் பெண்கள் முன்னேற்றத்துக்காவும் அவர்கள் சமத்துவ கோரிக்கைகளுக்காவும் பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது. 1945ல் சான்பிரான்ஸ்கோவில் நடந்த உடன்பாட்டின்படி பெண்களுக்கு சம உரிமை என்பது அடைப்படை உரிமையாக்கப்பட்டது. பெண்கள் தொடர்பான சர்வதேச கொள்கைகள், வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றும் திட்டங்கள், இலட்சியங்கள் உள்ளிட்டவற்றை மேம்படுத்த ஐக்கிய நாடு உழைத்துள்ளது.
1975ம் ஆண்டை சர்வதேச பெண்கள் ஆண்டாக ஐக்கிய நாடு அறிவித்தது. 1977ல் ஐக்கிய நாடு பொதுச் சபையில் சர்வதேச பெண்கள் தினத்தை ஐக்கிய நாடு பெண்கள் தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. அதே ஆண்டு பெண்கள் மாநாட்டுக்கும் ஐக்கிய நாடு ஏற்பாடு செய்தது. சர்வதேச அளவில் பெண்கள் தினம் கடை பிடிக்கப்பட்டதை அடுத்து பெண்கள் நலன் குறித்து சர்வதேச மாநாடுகளுக்கு அது ஊக்குவித்தது.
இச்சந்தர்ப்பத்தில் பெண்ணியம், பெண் விடுதலை, பெண்ணுரிமை போன்ற கருத்துக்கள் குறித்துச் சற்றுச் சிந்தித்தல் அர்த்தமுள்ளதாக இருக்கும். பெண்ணியத்தை எடுத்து நோக்குமிடத்து ஆண்கள் பெற்றுள்ள சட்டபுர்வமான உரிமைகள் யாவும் சமமாகப் பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்குடன் எழுந்தது. குடும்பம்இ உற்பத்தி ஆகியவற்றின் பின்னணியில் உள்ள பெண்ணடிமைத் தனத்தின் தோற்றத்தைக் கண்டுணர்ந்த மார்க்சியப் பெண்ணியம், தந்தை வழிக்கோட்பாட்டுக்கு எதிராக பெண்மையின் தனித்துவத்தை உயர்த்திப் பிடித்த தீவிரப் பெண்ணியம் என்பன பெண் என்பதற்கு ஒரு சாராம்சமான அடையாளத்தை ஏற்றுக் கொண்டுள்ளன.
இதன்படி உடற்கூற்றை (Biological Foundation ) அடித்தளமாகக் கொண்டு பெண்ணுறுப்புக்களைக் கொண்ட அனைத்து மனித உயிரிகளைப் பெண் என இந்தப் பெண்ணியக் கருத்தாக்கங்கள் அடையாளம் கண்டன. நாம் பெண் என்ற சொல்லின் கருத்தை அணுகுவதற்கு பெண்ணியம் (Feminism) என்பது பெண்ணை ஓர் ஆய்வுப் பொருளாக்கிப் பார்க்கின்ற கோட்பாடாகும். Feminism என்கின்ற ஆங்கிலச் சொல் கிபி 19ம் நூற்றாண்டில்தான் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டது.
முதலாளித்துவவாதத்திற்கு எதிராக எழுந்த மார்க்கசிய வர்க்கப் போராட்டத்தில் ஆதிக்க வெறியாளர்களை எதிர்க்கும் நோக்கில் அதன் ஒரு பகுதியாக ஆணாதிக்கத்திற்கு எதிராகவும், பெண் ஒடுக்குமுறைக்கு எதிராகவும் குரல் எழுப்பப்பட்டது. இதுதான் பெண்ணியத்தின் அடிப்படை என்றும் இதிலிருந்துதான் பின்னர் பெண்ணியம் ஒரு தனிக்கோட்பாடாக உருவாகியது என்றும் மார்க்கசியப் பெண்ணியவாதிகள் கூறுகின்றார்கள்.
பெண்ணிய ஆய்வாளரான கேட் மில்லட் என்ற பெண்மணி பெண்ணடிமை குறித்துச் சற்று ஆழமான கருத்துக்களை முன்வைத்துள்ளார். உலகம் முழுவதும் பால்வகை என்பது ஆண் என்பவன் பெண் என்பவளை அதிகாரம் செய்யக்கூடிய பான்மையில்தான் அமைந்துள்ளது. ஏனென்றால் ஆணாதிக்கச் சமூகம் வகுத்ததுதான் இந்தப் பால்வகைப் பிரிவு என்பதாகும். ஆண் என்பவன் தனக்குரிய சமூகக்களமாக இராணுவம் தொழிற்சாலை, அரசியல், நீதி, தொழில்நுட்பம், கல்வி போன்றவற்றை முன்னரே தெரிந்தெடுத்துக் கொண்டு தன்னை முதன்மைப் படுத்திக்கொண்டான்.
பெண்ணுக்கு இல்லம் என்பதை உரிமையாக்கி அதற்குள் அவளது இயக்கத்தை அவன் கட்டுப்படுத்தினான். ஆதனால் சமூகத்தில் பெண்ணின் இயக்கம் குறைந்தது. குடும்ப அமைப்பில் அடங்கிக் கிடக்கும் பெண் என்பவள் தனது சமூகத்தை அணுகுவதற்கு அவளுக்குக் கணவன் என்ற துணை தேவைப்பட்டது. அவள் அவ்வாறு கணவனைச் சார்ந்து நிற்கும்போது அவளை சுயசிந்தனை இல்லாதவளாக ஆண்மகனின் கைப்பாவையாக உருவாக்குவதற்கு துணை போயிற்று. இரண்டு பால் இனங்கள் இடையேயான அதிகார உறவுகள் வளர்ந்து பெருகுவதற்கு குடும்பம் என்ற அமைப்பும் காரணமாக அமைந்தது.
பாலியல் அடிப்படையிலான பெண் அடிமைத்தனமானது, கருத்துருவம் (IDEOLOGY) உயிரியல், (BIOLOGY) சமூகவியல் (SOCIOLOGICAL) வர்க்கம் (CLASS) பொருளாதாரமும் கல்வியும் (ECONOMICS AND EDUCATION) சக்தி (FORCE) மானுடவியல் (ANTHOROPOLOGY) உளவியல் (PHYCHOLOGY) என்று பல நிலைகளில் பல்கிப் பெருகியுள்ளதாக கேட் மில்லட் மேலும் குறிப்பிடுகிறார்.
சர்வதேச மகளிர் தினம் தொடர்பாக கோட்பாட்டு, வரலாற்று விளக்கங்கள் மேற்குறித்தவாறு காணப்பட்டாலும் கூட பெண்களுக்கு விடுதலை கிடைத்து விட்டதா என்பது கேள்விக்குறியே.
சர்வதேசப் பெண்கள் தினம் சாதாரண பெண்ணிற்கு தைரியம் அளித்து சாதனை படைக்கும் பெண்ணாக வரலாற்றில் உரிமை கோரும் பெண்ணாக உயர்த்தியது என்பது ஓரவுக்கு ஏற்றுக்கொள்ள முடிந்த போதிலும் கூட பெண்களில் அனேகமானோர் நினைக்கிறார்கள் வேலைக்குப் போகவும், சொப்பிங் செய்யவும் கணவனிடமிருந்து அனுமதி கிடைத்து விட்டால் அதுதான் பெண் விடுதலை என்று. இந்த அறியாமை மாற வேண்டும்.
பெண் விடுதலை என்பதன் பொருளை இவர்கள் சரியான முறையில் புரிந்து கொள்ள வேண்டும். பெண் விடுதலை என்பது, சம உரிமை, வேலை நேரம், சம்பளம், தொழில் வாய்ப்பில் பாரபட்சமின்மை... இவைகளில் தொடங்கி சமையலறை, படுக்கையறை, மனஉணர்வுகள்.... வரையிலான அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு விஷயம் என்பதை முதலில் பெண்களே புரிந்து கொள்ள வேண்டும். அடுத்து அதை அவர்கள் அவர்களை அண்டியுள்ள ஆண்களுக்குப் புரிய வைக்க வேண்டும். அப்போதுதான் பெண் விடுதலையின் தாற்பரியம் பற்றி சமூக ரீதியானதொரு புரிந்துணர்வு ஏற்படும்.
பெண் விடுதலை உலகளாவிய ரீதியாகக் கிடைக்க வேண்டும். பெண் சுயமாக இயங்கச் சுதந்திரம் கிடைக்க வேண்டும். பெண் இப்படித்தான் வாழ வேண்டுமென்று வீட்டுக்குள் நடைமுறுத்தப்படும் எழுதாத சட்டங்கள் அழித்தொழிக்கப்பட வேண்டும். பெண்ணை இறுகப் பற்றியிருக்கும் கண்ணுக்குத் தெரியாத, ஆனால் பெண்ணின் உயிரையும் உள்ளத்தையும் வதைக்கின்ற அத்தனை விலங்குகளும் உடைத்தெறியப்பட வேண்டும்.
இந்த விஷயத்தில் 2007ம் ஆண்டில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கி மூன் விடுத்துள்ள செய்தியில் 'அனைத்து சமூகத்திலுள்ள பெண்களின் துன்பங்களையும் அறவே ஒழிக்க வேண்டும்" என்று வலியுறுத்தியிருந்தார். பெண்களுக்கு உரிய அதிகாரம் கிடைப்பது மட்டும் இலக்கு அல்ல; இவ்வுலகில் வாழ்வதற்கான நல்ல சூழலை ஏற்படுத்துவதே நமது நோக்கம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், மனித நேயம் தழைப்பதற்கு ஒவ்வொருவரும் சர்வதேச மகளிர் தினத்தில் உறுதி கொள்ள வேண்டும் என்ற அவர், அனைத்து நாடுகளிலும் முடிவெடுக்கும் அதிகாரத்தில் பெண்கள் பின்னுக்கே தள்ளப்படுவதாகவும் வருத்தம் தெரிவித்திருந்தார். அத்துடன், பெண்கள் முன்னேற்றத்தின் அவசியம் குறித்தும் வலியுறுத்தியிருந்தார். இவ்வறிக்கையையும் இவ்விடத்தில் கருத்திற் கொள்வது பயனுடையதாக இருக்கும்.
நாடு முழுவதும் குடியிருப்பு-வணிக வளாகம் கட்ட திட்டம்: எல்.ஐ.சி
இந்திய ஆயுள் காப்பீடு கழகம் ( எல்.ஐ.சி ), நாடு முழுவதும் குடியிருப்பு, வணிக வளாகங்களை கட்டும் என்று சேர்மன் டி.எஸ்.விஜயன் தெரிவித்தார்.
கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசும் போது, இந்தியாவில் ரயில்வே துறைக்கு அடுத்த படியாக, எல்.ஐ.சி யிடம் அதிக அளவு ரியல் எஸ்டேட் ( காலி மனை, கட்டிடம் போன்றவை) சொத்துக்கள் உள்ளன. அத்துடன் அதிக அளவு முதலீடு செய்யும் நிறுவனமாகவும் உள்ளது. ரியல்எஸ்டேட் துறையில் இருந்து ரூ.200 கோடி வருவாய் வருகிறது. இதை முன்னூறு கோடியாக அதிகரிக்க உள்ளோம்.
இந்த நிதி ஆண்டில் பிரிமியம் (காப்பீடு கட்டணம்) வருவாயாக ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி வந்துள்ளது. இதை அடுத்த நிதி ஆண்டில் மேலும் 18 முதல் 19 விழுக்காடு வரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்.
இந்த நிதி ஆண்டில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு செய்துள்ளோம். இதில் 15 விழுக்காடு அடிப்படை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களில் முதலீடு செய்துள்ளோம் என்று டி.எஸ்.விஜயன் தெரிவித்தார்.
ஞாயிறு, 7 மார்ச், 2010
தேனா வங்கியில் ‘ஐ.டி. ஆபீஸர்’ வேலை வேணுமா?
தேனா வங்கியில் தகவல் தொழில்நுட்ப அலுவலர் பணியிடங்கள்
பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான தேனா வங்கியில் 28 தொழில் நுட்ப அலுவலர் பணியிடங்கலுக்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பணியின் பெயர் அலுவலர்: தகவல் தொழில்நுட்பம் /சிஸ்டம்ஸ்
காலியிடங்கள்: 26
தகுதிகள்: கம்ப்யூட்டர் சயின்ஸ்/ஐ.டி.,/இ.சி.இ., இவற்றில் ஒன்றில் பி.டெக்., அல்லது பி.இ., படிப்பை குறைந்தது 55 சதவீதத்துடன் முடித்திருக்க வேண்டும். முன் அனுபவம் பெற்றிருப்பவருக்கு முன்னுரிமை தரப்படும்.
1.4.2010 அன்று 30 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., உடல் ஊனமுற்றோருக்கு மத்திய அரசு வயது சலுகைகள் தரப்படும்.
தேர்வு முறை: இப்பணிக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக பணியாளர் தேர்வு நடைபெறும். இத்தேர்வு தமிழ்நாட்டில் சென்னையில் மட்டுமே நடத்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: இப்பணிக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பக் கட்டணம் ரூ.350. எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.75 மட்டுமே. DENA BANK – Recruitment Project for Specialist Officers 2010 என்ற பெயரில் மும்பையில் மாற்றத்தக்கதாக டிடி எடுக்கப்பட வேண்டும்.
டி.டி., மற்றும் பதிவுத் தாள் அனுப்பும் முகவரி:
DENA BANK
Recruitment Project for Specialist Officers 2010,
Post Bag No. 8471, Mandpeshwar,
Borivali (West), Mumbai 400 103
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள்: மார்ச் 8, 2010.
தபாலில் டி.டி., பதிவுத் தாள் சென்றடைய கடைசி நாள்: மார்ச் 22, 2010
இணைய தள முகவரி: http://www.denabank.com
மென்பொருள் ஏற்றுமதி மூலம் 49.7 பில்லியன் டாலர் வருவாய் எதிர்பார்ப்பு.
மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைகள் ஏற்றுமதி 5.5 விழுக்காடு அளவிற்கு உயரும் என்றும், 2009-10ஆம் ஆண்டில் 49.7 பில்லியன் டாலர் அளவிற்கு வருவாய் எதிர்பார்க்கப்படுவதாகவும் மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது :
இந்திய மென்பொருள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி மூலம் 2009-10ஆம் ஆண்டில் 49.7 பில்லியன் டாலர் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2004-05 முதல் 2008-09 வரையிலான ஐந்தாண்டு கால ஒட்டுமொத்த வருடாந்திர வளர்ச்சி விகிதத்துடன் ஒப்பிடுகையில் நடப்பு நிதியாண்டில் 29 சதவீத கூடுதல் வளர்ச்சி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் காணப்பட்ட கடும் பொருளாதார பின்னடைவு காரணமாக இந்திய மென்பொருள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியில் பெரும் சரிவு காணப்பட்டது.
எனினும், தற்போது உலகளாவிய பொருளாதார நிலையில் முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் தென்படுவதால் வளர்ச்சி விகிதம் 2010-11 மற்றும் 2011-12 ஆம் ஆண்டுகளில் ஆரோக்கியமான வளர்ச்சி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அமைச்சர் சச்சின் பைலட் கூறியுள்ளார்.
வெள்ளி, 5 மார்ச், 2010
குடும்ப வன்முறைச் சட்டத்தில் பெண்களும் தண்டிக்கப்படுவர்!
குடும்ப வன்முறைச் சட்டத்தில் பெண்களும் தண்டிக்கப்படுவர்!
பெண் சித்திரவதை என்று வருகிறபோது, அதில் ஆண்கள் மட்டுமே கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படுகிறார்கள். ஆனால் இந்த சித்திரவதைக்கு மூல காரணமாகத் திகழும் கணவன் வீட்டுப் பெண்கள் தப்பித்துக் கொள்கிறார்கள். காரணம் குடும்ப வன்முறைச் சட்டம் ஆண்களுக்கு மட்டும்தான், பெண்களுக்கில்லை என்ற நடைமுறைதான்.
இனி அந்த நிலை மாறும் என்று நம்பலாம். காரணம் சென்னை உயர்நீதிமன்றம் நேற்று வெளியிட்ட ஒரு அறிவிப்பு அப்படி…
செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் நிவாஷினி. இவர் தனது கணவன் மற்றும் கணவனின் குடும்பத்தார் மீது குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் புகார் செய்தார். இது தொடர்பாக நிவேந்திரன், ரஞ்சன், சரோஜா ரஞ்சன், சவுபர்நிக்கா, சரவணபவன், விஜயகுமாரி சரவணபவன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை, செங்கல்பட்டு 2-வது மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரும் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில் அவர்கள், ‘குடும்பநலச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரில் 3 பேர் பெண்கள். இந்த வழக்கில் பெண்கள் மீது குற்றம்சாட்ட வகையில்லை என்று இந்த சட்டத்தின் 12 மற்றும் 2 (கியு) பிரிவுகளில் கூறப்பட்டு உள்ளது.
அதனடிப்படையில் ஆண்களை மட்டும்தான் வழக்கில் உட்புகுத்த முடியும். எனவே இந்த வழக்கில் இருந்து பெண்களை நீக்க வேண்டும். எங்கள் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.
இந்த மனுவை நீதிபதிகள் சி.நாகப்பன், பி.ஆர்.சிவகுமார் ஆகியோர் இப்படிக் கூறினர்:
மனைவியை கொடுமைப்படுத்தும் கணவன் மற்றும் அவரது எந்தவொரு உறவினர் மீதும் வழக்கு தொடரலாம் என்று சட்டப் பிரிவு 1(19)-ல் கூறப்பட்டு உள்ளது. அதன்படி பார்த்தால், கணவனின் உறவினர் ஆணாக மட்டும் இருக்க வேண்டும் என்பதில்லை. எனவே மனைவியைக் கொடுமைப்படுத்தும் அவரது உறவினர்கள் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அவர்கள் மீது குற்றம்சாட்டுவதற்கு வழிவகை உள்ளது.
ஆனாலும் குற்றம்சாட்டப்பட்ட பெண்கள், அதில் இருந்து விடுதலை பெற வேண்டுமென்றால், சம்பந்தப்பட்ட கோர்ட்டு மூலமாகத்தான் அதை பெற முடியும். குற்றச்சாட்டு இல்லை என்றால் வழக்கில் சேர்க்கத் தேவையில்லை. எனவே பெண்கள் என்பதற்காக வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது. குடும்ப வன்முறைச் சட்டத்தின் அடிப்படையில், பெண்கள் (கணவனின் உறவினர்கள்) மீதும் குற்றம் சாட்ட முடியும் என்று உறுதி செய்கிறோம்..”
பெண்ணாக இருந்தாலும்…
உண்மையில் குடும்ப வன்முறைச் சட்டம் 2005-ன் பிரிவு 2 (கியூ)வில், ஒரு பெண்ணைச் சித்திரவதை செய்யும் அவளது குடும்ப உறவினர் யாராக இருந்தாலும் கைது செய்து தண்டிக்கப்பட வேண்டும் என்றே சொல்கிறது.
“Any adult male member who has been in a domestic relationship with the aggrieved person is the ‘respondent’. The respondent can also be a relative of the husband or male partner thus, a father-in-law, mother-in-law, or even siblings of the husband and other relatives can be proceeded against…” – Section 2 (q)
ஆனால் சட்டத்தை சரியாகப் புரிந்து கொள்ளாத அல்லது, இப்படித்தான் இருக்கும் என்ற குருட்டு நம்பிக்கையில் பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு காரணமாக உள்ள பெண்களை போலீசார் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின்றனர். எனவே இந்த சட்டம் குறித்த முறையான அறிவை போலீசாருக்கும் வழங்க வேண்டியுள்ளது.
கணவன் மனைவியாக திருமணம் செய்து கொண்டு வாழ்பவர்களுக்கு மட்டுமல்ல… அப்படியெல்லாம் இல்லாமல் சும்மா சேர்ந்து வாழலாம் (அதாங்க live-in சமாச்சாரம்) என்ற வாழ்க்கை முறையைக் கொண்டவர்களுக்கும் கூட இந்தச் சட்டம் பாதுகாப்பு தருகிறது.
பாதிக்கப்பட்ட பெண் ஏதோ ஒரு வகையில் குடும்ப உறவுக்குள் வர வேண்டும். அவர் மனைவியாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. சகோதரிகள், மகள்கள், கைம்பெண்கள், அம்மா, முதிய பெண்மணி.. இப்படி எந்த மாதிரி உறவாக இருந்தாலும் குடும்ப வன்முறைச் சட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ், குழந்தைகளும் கூட புகார் தர முடியும். குழந்தைகளை கொடுமை செய்யும் பெற்றோர், உறவினர்களை இந்தச் சட்டத்தின் கீழ் புகார் கொடுத்து தண்டிக்க முடியும்.
ஆனால் இந்தப் பிரச்சினைகள் அனைத்துக்கும் ஒரு சர்வரோக நிவாரணி ஒன்று உள்ளது. அதை போலீஸோ நீதி மன்றமோ கூட பரிந்துரைப்பதில்லை. ஒவ்வொருவரிடம் தயாராக உள்ள நிவாரணி அது.
அதுதான் அன்பு. ஒரு விலங்கைக் கூட கொஞ்சி மகிழும் நபர்களுக்கு சக மனிதனை அன்புடன் நடத்தத் தெரியாததாலேயே இத்தனைத் துயரங்களும் விளைகின்றன… இத்தனைச் சட்டங்களும் தேவைப்படுகின்றன!
இது என்றைக்கு புரியப் போகிறதோ…
வியாழன், 4 மார்ச், 2010
மாற்றிப் பாருங்கள் வாழ்க்கை இனிக்கும்.
காதல் வங்கித் துவக்க வேண்டிய அளவிற்கு காதலுக்குப் பஞ்சம் ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்ச வேண்டிய நிலை வந்துவிட்டது. தற்போதிருக்கும் காலக்கட்டத்தில் திருமணத்திற்குப் பின்பு ஏற்படும் சில பல பிரச்சினைகளினால் குடும்ப உறவுகள் தவிடுபொடியாகிக் கொண்டிருக்கிறது.
இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் தாம்பத்திய உறவில் ஏற்பட்டுள்ள சரிவு நிலை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
எந்த பிரச்சினையாக இருந்தாலும் மருத்துவரை அணுகும் தம்பதிகள், தாம்பத்ய உறவில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு மருத்துவரை அணுக பெரிதும் தயங்குகின்றனர். இந்த நிலையில்தான் மருத்துவர்களே, இதுபோன்ற பிரச்சினைகளுக்கு விளக்கம் சொல்ல முன்வருகின்றனர்.
அதாவது சில விஷயங்களை மாற்றிப் பாருங்கள் என்பதே அவர்களது முதல் ஆலோசனை. சில தம்பதிகள் எப்போதும் இரவில் மட்டுமே உறவு கொள்வார்கள். தூக்க களைப்பிலும், உடலுக்கு உறக்கம் தேவைப்படும் நேரத்திலும் உறவு கொள்வதால் அதில் ஒரு சலிப்பு ஏற்படலாம். சில நேரங்களில் காலையில் குளித்து முடித்து உடலும், மனமும் உற்சாகமாக இருக்கும் போது உறவு கொள்வதில் நிச்சயம் புதுவிதமான மாற்றத்தை உணர முடியும்.
அது போலவே, இருட்டில் உடல் உறவு கொள்ளும் தம்பதிகள், சிறிது வெளிச்சத்திலும், வெளிச்சத்தில் உடல் உறவு கொள்ளும் தம்பதிகள் லேசான இருட்டிலும் உடல் உறவு கொள்ளலாம்.
எப்போதும் ஒரே முறையிலான உடல் உறவு கூட சலிப்பை ஏற்படுத்தலாம். எனவே உடல் உறவு கொள்ளும் முறைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
அன்பை வெளிப்படுத்தும் விதமாக..
உடல் உறவு என்றதும் ஒரு சில நிமிடங்களே போதும் என்று நினைக்காமல், அதற்காக அதிக நேரத்தை ஒதுக்கி கணவன் - மனைவி இருவருமே தங்களது அன்பை வெளிப்படுத்தும் விதமாக நடந்து கொள்வது நல்லது. உடல் உறவு கொள்ள இந்த நாட்கள் மட்டுமே என்று பட்டியல் போட்டுக் கொள்ளாமல் தம்பதிகளின் ஆசைக்கேற்ப உடல் உறவு வைத்துக் கொள்வது நல்ல தம்பத்தியத்திற்கு வழிகோலும்.
ஒருவர் உடல் பாதிக்கப்பட்டு இருக்கும் போதோ, அதிக களைப்படைந்திருந்தாலோ அந்த சமயத்தில் உடல் உறவிற்கு அழைப்பதை துணைவர் தவிர்க்க வேண்டும். அந்த சமயத்தில் உங்களது ஆதரவும், அன்பும் அவருக்குத் தேவை என்பதை நினைவில் கொள்ளவும்.
பிரிந்திருந்தாலும் பலனளிக்கும்...
ஒரு சில தம்பதிகள் ஒரே அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் எப்போதும் கூடவே இருப்பதால் ஒரு சலிப்பு ஏற்படுவதும் உண்டு. இப்படியானவர்கள் சில நாட்களுக்கு பிரிந்திருப்பதும் (சண்டை போட்டு அல்ல) பெண் தாய் வீட்டிலோ அல்லது தோழியின் வீட்டிலோ சென்று தங்கியிருக்கலாம். சில நாட்களுக்கு கணவன் - மனைவியர் பிரிந்திருப்பது அன்பைக் கூட்டவும் செய்யும்.
பிரிந்திருக்கும் நாட்களில் மணிக்கணக்கில் போனில் பேசிக் கொண்டிருக்காமல் முழுவதுமாக ஒருவரை ஒருவர் சுதந்திரமாக விட்டுவிடுவதும் அவர்களுக்குள் இருக்கும் அன்பை ஒருவருக்கொருவர் புரிய வைக்க ஏதவாகும்.
காலம் கடந்தவர்கள்..
தாம்பத்யத்தில் வெறுப்படைந்த நிலையில் இருப்பவர்கள் தம்பதிகள் ஒருவருக்கொருவர் பேசி, ஒரு சில நாட்கள், வாரங்கள், மாதம் என ஒரு காலக் கட்டத்தை நிர்ணயித்துக் கொண்டு அதுவரை தாம்பத்யம் வைத்துக் கொள்வதில்லை என்று முடிவெடுங்கள். ஆனால், இந்த சமயத்தில் எல்லாம் தனித்தனியாக
WDஇருந்து விடாமல் ஒருவரை ஒருவர் சீண்டிக் கொண்டிருக்கலாம். இதனால் தாம்பத்யத்தின் மீது ஒரு ஏக்கம் பிறக்கும். ஒரு வேளை இந்த முயற்சியினால், காலக் கெடு வரை காத்திருக்க முடியாமல் கூட சில தம்பதிகள் தங்களது தாம்பத்யத்தை அனுபவிக்கும் நிலை ஏற்படலாம்.
எனவே எதையும் முழு ரசனையோடும், அன்போடும் செயல்படுங்கள். உங்கள் துணை வாழ்க்கைத் துணையாகும் என்கின்றனர் மருத்துவர்கள்.
மொபைல்போன்கள், வாட்ச், பொம்மைகள் விலைகள் குறைகிறது.
மத்திய பொது பட்ஜெட்டில் மொபைல்போன்கள், வாட்ச், பொம்மைகள் மற்றும் பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்களுக்கான வரி குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று தாக்கல் செய்த 2010-11 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் மொபைல்போன்கள், வாட்ச், பொம்மைகள், ஆயத்த ஆடைகள், பொம்மை பலூன்கள் மற்றும் வாட்டர் பில்டர்கள், மைரோவேவ் ஓவன்கள் உள்ளிட்ட பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்களுக்கான வரி குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மருத்துவ உபகரணங்கள், செட் டாப் பாக்சஸ்கள், சிடி,புத்தகங்கள் மீதான வரிகளும் குறைக்கப்படுவதாக பிரணாப் தெரிவித்தார்.
மைரோவேவ் ஓவன்கள் தயாரிப்பதற்கான முக்கிய பாகங்களுக்கான அடிப்படை சுங்க வரி 10 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாக குறைக்கப்படுகிறது.
மொபைல்போன்கள், வாட்ச்கள், ஆயத்த ஆடைகள் போன்ற சில்லறை விற்பனைக்காக முன்கூட்டியே அட்டைப் பெட்டியில் அடைக்கப்பட்ட பொருட்கள் மீதான சிறப்பு கூடுதல் வரி முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது.
அதேப்போன்று பொம்மை பலூன்கள் மீதான மத்திய கலால் வரி முற்றிலும் நீக்கப்படுகிறது.
வீட்டு உபயோக வாட்டர் பில்டர்கள் மீதான மத்திய கலால் வரி 4 % ஆக குறைக்கப்படுகிறது.மேலும் விளையாட்டு பொருட்கள் தயாரிப்புக்கான பொருட்கள் மீதான இறக்குமதி வரி முற்றிலும் நீக்கப்படுவதாகவும் பிரணாப் தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)