ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

சென்னை மண்டலத்தில் வரி வசூல் அதிகம்!

தேசிய அளவை விட சென்னை மண்டலத்தில் வருமான வரிவசூல் வளர்ச்சி விழுக்காடு அதிகம் என்று சென்னை மண்டல தலைமை வருமான வரி ஆணையர் ஜி.என். ஜெயின் கூறினார். சென்னை மண்டல மத்திய கலால்துறை சார்பில் நடைபெற்ற கலால் தினம் நிகழ்ச்சியில் சிறப்பாக பணியாற்றிய கலால் மற்றும் சேவை வரித்துறை அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் ஜெயின் விருது வழங்கினார். சிறந்த சேவைக்காக குடியரசுத் தலைவர் பதக்கம் பெற்ற அதிகாரிகளும் விருது சிறப்பிக்கப்பட்டனர். இரட்டை சகோதரர்கள் இந்நிகழ்ச்சியில் வி.என்.ஜெயின் பேசியதாவது: வருமான வரித்துறையும், மத்திய கலால் துறையும் நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இரட்டை சகோதர துறைகள் ஆகும். இரண்டு துறைகளுமே வரிகளை வசூலித்து நாட்டிற்கு வருவாய் ஈட்டித் தருகின்றன. வரி வருவாய் மூலம் கிடைக்கின்ற நிதி ஆதாரங்களை கொண்டுதான் மத்திய அரசாங்கம் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்துகிறது. அந்த வகையில் அரசாங்கத்திற்கு முறையாக வரிகளை செலுத்துவோர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டியது அவசியம். தமிழ்நாட்டில் அதிகம் இந்தியாவில் வருமான வரி 1816-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது ரூ.36 லட்சமாக இருந்த வரி வசூல் தற்போது ரூ.4 லட்சத்து 46 ஆயிரம் கோடியாக அதிகரித்து இருக்கிறது. தமிழ்நாட்டை உள்ளடக்கிய சென்னை வருமான வரி மண்டலத்தில் கடந்த நிதி ஆண்டு (2011-2012) வருமான வரி இலக்கு ரூ.35 ஆயிரம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதுவரை ரூ.25 ஆயிரம் கோடி அளவுக்கு வரி வசூலாகி இருக்கிறது. வருமான வரி வசூல் வளர்ச்சி தேசிய அளவில் 8 விழுக்காடாக உள்ளது. ஆனால், சென்னை மண்டலத்தில் இது 13 சதவீதம் அதாவது தேசிய அளவை விட சென்னை மண்டலத்தில் வரிவசூல் வளர்ச்சி விழுக்காடு அதிகம். இன்றைய தினம் ஏராளமான பன்னாட்டு நிறுவனங்கள் நம் நாட்டில் நேரடி அன்னிய முதலீட்டை குவிக்கின்றன. அவர்களின் நோக்கம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதுதான். அதில் ஒன்றும் தவறு இல்லை. ஆனால், அப்படி சம்பாதிக்கின்ற பணத்திற்கு உரிய வரிகளை அவர்கள் செலுத்திட வேண்டும். வரி செலுத்துவதை அவர்கள் கடமையாக கருத வேண்டும் என்றார் அவர். பத்திரிகையாளர் இந்து என்.ராம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். கலால்வரி உயர்வு முன்னதாக வரவேற்றுப் பேசிய மத்திய கலால் துறை சென்னை தலைமை ஆணையர் கே.ஸ்ரீவத்சவா கூறியதாவது: 1946-ம் ஆண்டு ரூ.46 கோடியாக இருந்த கலால் வரி வசூல், தற்போது ரூ.1 லட்சத்து 37 ஆயிரம் கோடியாக அதிகரித்து இருக்கிறது. இதேபோல் சேவை வரியும் ரூ.70 ஆயிரத்து 391 கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது என்று குறிப்பிட்டார். `ஆயக்கர் சேவாக்' திட்டம் விழா முடிவடைந்த பிறகு வருமான வரி தலைமை ஆணையர் ஜெயின் செய்தியாளர்களிடம் கூறும்போது, ``வருமான வரி செலுத்துவதை எளிமைப்படுத்தும் வகையில் விரைவில் `ஆயக்கர் சேவாக்' என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்'' என்று கூறினார்.

பிஎஸ்என்எல்லின் கையடக்க கணிணி... விலை ஜஸ்ட் ரூ 3250!

டெல்லி; பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனம் இப்போது கையடக்க கணிகளை உருவாக்கி உள்ளது. 3 மாடல்களில் இந்த கையடக்க கணிணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. பான்டெல் என்ற நிறுவனத்துடன் இணைந்து இவை உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு ரூ3,250, ரூ10,999 மற்றும் ரூ 13,500 ஆகிய விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. மிகக் குறைந்த மாடலான "T-PAD IS701R"-ல், 2ஜிபி மெமரியும் 256எம்பி ராமும் கொண்டது. இந்த 2ஜிபியை 32ஜிபி வரை அதிகரித்துக் கொள்ளும் வசதியும் உண்டு. அடுத்த மாடல் "T-Pad WS704C". இது 512MB DDRIII ராம் கொண்டது. இதை தொலைக்காட்சியுடன் இணைத்துக் கொள்ளலாம். விலை உயர்ந்த மாடல் "T-PAD WS802C". 1.2ஜிகாஹெர்ட்ஸ் பிராசசர் கொண்டது. இவை 7 முதல் 8 இஞ்ச் வரையிலான திரையுடன் ஆண்ட்ராய்ட் 2.3 ஐ ஆபரேடிங் சிஸ்டமாகவும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே மத்திய அரசு ஆகாஷ் கையடக்க கணிணிகளை இதைவிட குறைவான விலைக்கு உருவாக்கி இருந்தாலும் பயன்பாடு ரீதியான பி.எஸ்.என்.எல். தயாரிப்பு முக்கியத்துவம் பெறும் என்பது சந்தை வல்லுநர்களின் கருத்து.

வியாழன், 23 பிப்ரவரி, 2012

அரவணைப்பு….. சில முத்தங்கள்… கணவரின் மனம் கவரும்!

தம்பதியரிடையே சின்ன சின்ன ஊடல்கள் ஏற்படுவது வாடிக்கை. அதனையே ஊதிப்பெரிதாக்கி விரிசல் ஏற்படுத்தாமல் அன்பால் அதை சரியாக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகவும், கணவரின் மனம் கவரவும் சில வழிமுறைகளை தெரிவிக்கின்றனர் குடும்ப நல ஆலோசகர்கள். அன்பால் அரவணைப்பு குடும்பத்தில் முதல் பிரச்சினையே பெற்றோர்களை கவனிப்பதில்தான் ஏற்படுகிறது. நம்முடைய பெற்றோர்களை எப்படி கவனிக்கிறோமோ அதேபோல கணவரின் பெற்றோர்களையும், கண்ணும் கருத்துமாக கவனிக்க வேண்டும். அன்பால் அரவணைத்து அவர்களுக்கு மரியாதை அளித்தால் கணவரின் குட் புக்கில் டாப் தான் நீங்கள். கணவருக்காக சமையுங்கள் கணவரின் மனம் கவர முதலில் அவரது வயிற்றுக்கு சரியான விருந்தளிக்க வேண்டும் என்று முன்னோர்கள் தெரிவிப்பர். எனவே சுவையாக சமைத்து சூடாக பரிமாருங்கள். வார இறுதி நாட்களில் ஸ்பெசல் சமையலாக இருக்கட்டும். அப்புறம் நீங்களும் அவருக்கு ஸ்பெசல்தான். மனதிற்குள் மத்தாப்பு கணவரின் துணிகளை துவைத்துப் போடுவது ஒரு கலை. திருமணத்திற்கு முன் யார் வேண்டுமானாலும் துணிகளை துவைத்திருக்கலாம். ஆனால் திருமணத்திற்குப் பின்னர் தன்னுடைய துணிகளை மனைவி துவைத்துப் போடுவது கணவரின் மனதிற்குள் மத்தாப்பு பூக்கும். இனிமையான இரவு விருந்து இரவு நேரத்தில் கணவரின் வருகைக்காக காத்திருந்து உண்பது உங்கள் மீதான அபிப்ராயத்தை அதிகரிக்கும். தனக்காக தன் மனைவி பசியுடன் காத்திருப்பாள் என்ற எண்ணமே கணவரின் மனதில் காதல் உணர்வுகளை அதிகரிக்கும். அப்புறம் சண்டையாவது ஒன்றாவது. அழகாய் அசத்தலாம் கணவருக்கு பிடித்தமான உடை அணிவது அவரது கண்ணை மட்டுமல்ல காதலையும் அதிகரிக்கச் செய்யும். அதுதான் திருமணமாகிவிட்டதே, இனி என்ன என்று உடலை கண்டுகொள்ளாமல் விடுவது குடும்ப வாழ்க்கையில் விரிசலை ஏற்படுத்தும். எனவே உடலை கச்சிதமாய் வைத்திருங்கள். அதற்கேற்ப உடையணிந்தால் கணவர் உங்கள் கைகளில் என்பதை நீங்களே உணர்வீர்கள். கொஞ்சமாய் பேசுங்கள் நிறைய கேளுங்கள் எப்பவுமே லொட லொட என நீங்கள் பேசிக்கொண்டிருப்பதை விட கணவரை பேசவிட்டு நீங்கள் கேளுங்கள். இது உங்கள் மீதான பாசத்தை அதிகரிக்கும். நம் பேச்சை கேட்க ஆள் வந்துவிட்டார் என்று அவரை அதீத உற்சாகத்தில் ஆழ்த்தும். கை கோர்க்கும் காதல் இறுதியான, முக்கியமானது படுக்கையறையில் வெற்றிகளை விட தோல்விகள் தான் அதிகம் விரும்பத்தக்கதாக உள்ளது. எனவே விட்டுக்கொடுங்கள். அவர் தடுமாறினாலும் நம்பிக்கையூட்டுங்கள். நீங்கள் தோற்பது அவரது மனதில் இடம் பெறுவதற்கான வெற்றிக்கு வழி வகுக்கும்.

இளமையை தக்கவைத்து உடலை பொலிவாக்கும் உறவு!

தம்பதியரிடையே உணர்வு பூர்வமான தொடர்பை ஏற்படுத்த உதவும் தாம்பத்ய உறவானது உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் எண்ணற்ற நன்மைகளை ஏற்படுத்துவதாக பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன. பிரகாசமான முகம் உறவானது தம்பதியர்களின் உடலிற்கு பொலிவூட்டும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். உடலுறவினால் மனஉளைச்சல் நீங்குவதால் உங்கள் முகம் எப்பொழுதும் பிரகாசமாக இருக்குமாம். உடலுறவின்போது சுவாசம் அதிகரிப்பதனால் இதயம் மற்றும் மூளைக்கு ஆக்சிஜன் அளவு சீராக கிடைக்கிறதாம். இதனால் உடல் பொலிவாகுமாம். உதட்டில் அடிக்கடி முத்தமிடுவதால் எனாமலுக்கு சக்தி கிடைக்கிறதாம். இதனால் பற்கள் பளபளப்பாகுமாம். அழகாய் பூக்குதே உறவின் போதும் வெளியேறும் வியர்வையினால் மேனி பளபளப்பாக இருக்குமாம். பெண்களுக்கு தலைமுடி பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்குமாம். கட்டான உடல் அதிகமாக காதலுணர்வு ஏற்படுவதனால் அதிகமாக உள்ள கெட்ட கொழுப்பு கரைக்கப்படுகிறதாம். இதனால் உடலில் தேவையற்ற இடங்களில் உள்ள சதைகள் கரைந்து கட்டான உடலமைப்பு ஏற்படுகிறதாம். நீச்சல் மற்றும் உடற்பயிற்சியில் ஈடுபடும் போது கிடைக்கின்ற உடல் கட்டமைப்பினை விட தாம்பத்ய உறவின் போது கிடைக்கும் உடல் அழகு 20 சதவிகிதம் அதிகமாக இருக்குமாம். ரத்த அணுக்கள் எண்ணிக்கை தினமும் உறவு கொள்ளும் தம்பதியருக்கு ஹீமோகுளோபினின் செயற்பாடு 30 சதவிகிதமாக அதிகரிக்கும் என பென்சில்வேனியா பல்கலைக்கழக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. உடலுறவினால் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் ரத்தம் சுத்திகரிக்கப்படுகிறதாம். வயதான தம்பதியர் உறவு கொள்வதன் மூலம் மூட்டு வலி, மன அழுத்தம், உயர் ரத்த அழுத்தம் போன்றவை நீங்குமாம். மூச்சடைப்பு ஏற்படாது அடிக்கடி உறவில் ஈடுபடும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதில்லையாம். உறவின் போது அதிகமாக மூச்சு வாங்குவதால் நாசித்துவாரம் சுத்திகரிக்கப்படுகிறது. இதனால் மூச்சடைப்பு உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதில்லையாம். ஆண்களுக்கு ஆஸ்துமா, புற்றுநோய் போன்ற நோய்கள் தாக்குவதில்லையாம். சிறந்த எக்ஸர்சைஸ் தாம்பத்ய உறவினால் உடல் சமநிலை பெறுகிறதாம் இதனால் ஹார்மோன் சுரப்பு சீராக இருக்கிறதாம். இதனால்தான் செக்ஸ் ஒரு சுகமான உடற்பயிற்சி என்று கூறுகின்றனர். இதயநோய் தீரும் வாரத்திற்கு குறைந்தது மூன்று முறையாவது உறவு கொள்ளும் தம்பதியருக்கு இதயக் கோளாறுகள் 50 வீதமாகக் குறைக்கப்படுகிறதாம். உறவின் போது இதயமானது 80 முதல் 150 தடவைவரை துடிக்கிறதாம். இதனால் இதயத்தை சுற்றி உள்ள கொழுப்புகள் கரைக்கப்பட்டு மாரடைப்பு வரும் வாய்ப்பு குறைகிறதாம். முக்கியமான விசயம் குறித்த முடிவு எடுக்கும் முன்பு உறவு வைத்துக்கொள்வது நல்லது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் திடமும், மன உறுதியும் ஏற்படும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

கை கோர்த்துச் சொல்லுங்கள் காதலை...!

இல்லற வாழ்க்கையில் ஆரோக்கியமான தாம்பத்திய உறவு அவசியமானது. அது மகிழ்ச்சியோடு தம்பதியரிடையே உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தும். எனவே இல்லற வாழ்க்கையில் இடைவெளி ஏற்படாமல் இருக்க பெண்களுக்கு ஆலோசனைகளை கூறியுள்ளனர் உளவியல் நிபுணர்கள். வேண்டியதை கேளுங்கள் உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை கேட்பது தவறில்லை. ஒருவேளை தவறாக நினைத்து விடுவாரோ என்ற அச்ச உணர்வும் அவசியமில்லை. உங்களின் தேவையை தவறாமல் தெரிவிக்கலாம், அதனால் உங்களவர் கூடுதல் உற்சாகமடைவார் என்கின்றனர் உளவியாலாளர்கள். ஆரோக்கியம் அவசியம் உடலை கவனமாக பராமரிக்கவேண்டும். அது ஆரோக்கியம் கூட. எனவே உடலை சுத்தமாக பராமரிப்பதோடு சுகாதாரமாகவும் இருக்கவேண்டும் என்கின்றனர் உளவியலாளர்கள். தினசரி குளித்து அதற்கேற்ப பெர்ப்யூம் போட்டாலே அந்த வாசனையே தெரிவித்துவிடும் உங்களின் தேவையை. கை கோர்த்து தெரிவியுங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு சிறப்பு பரிபாஷை உண்டு. தனியான தருணங்களில் சந்திக்கும் போது உங்களின் தேவையை கைகோர்த்து தெரிவிக்கலாம். அந்த நெகிழ்ச்சியுடனே, ஒரு வித எதிர்பார்ப்புடனே அன்றைய தினம் கழியும். மனதிலும், உடலிலும் உற்சாக பேட்டரி உற்பத்தியாகும். உற்சாக விளையாட்டு உறவின் போது எப்பொழுதுமே அவர்தான் தொடங்கவேண்டும் என்று காத்திருக்க வேண்டாம். முன் விளையாட்டுக்களை நீங்கள் தொடங்கினால் உங்களவர் உற்சாகமடைவார். அவரின் ஆர்வத்தை அதிகரிக்கும். அழகாய் உணருங்கள் இது மிகவும் முக்கியமானது. நீங்கள் எப்பொழுதுமே உங்களை அழகானவராய் உணருங்கள். ஏனெனில் உங்களவருக்கு நீங்கள்தான் உலக அழகி. அந்த எண்ணமே உங்களை உற்சாகமுடன் செயல்பட வைக்கும். யோகசனம் தினசரி யோகா செய்வது உடல் ஆரோக்கியத்தோடு மனம் ஆரோக்கியமடையும் உறவிற்கு உற்சாகம் தரும் எனவே தினசரி யோகா செய்வது நலம் என்கின்றனர் நிபுணர்கள். பாதுகாப்பான உறவு நமது உடல் நலத்திற்கு ஏற்ப பாதுகாப்பான உறவினை மேற்கொள்ளவேண்டும் என்பது உளவியல் நிபுணர்களின் மேலான அறிவுரையாகும். இவற்றை பின்பற்றினால் உங்களவர் உங்களின் தலையணை மந்திரத்திற்கு கட்டுப்படுவது உறுதி என்கின்றனர் நிபுணர்கள்.

கிங்பிஷருக்கு ரூ 1650 கோடி பெயில் அவுட் தரும் ஸ்டேட் வங்கி!

மும்பை: நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதாகச் சொல்லப்படும் கிங்பிஷர் விமான நிறுவனத்துக்கு ரூ 1650 கோடி கடன் தர அரசுக்கு சொந்தமான பாரத ஸ்டேட் வங்கி முன்வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் பஞ்சாப் நேஷனல் வங்கியும் தன் பங்குக்கு சில நூறு கோடிகள் தர முன்வந்துள்ளதாகத் தெரிகிறது. முதல் கட்டமாக குறுகிய கால இயக்க முதலீட்டுத் தொகையாக ரூ 700 கோடியையும், வங்கி உத்தரவாதத் தொகையாக ரூ 500 கோடியையும் கிங்பிஷருக்குத் தருவதன் மூலம், அந்நிறுவனத்தின் அன்றாடப் பணிகள் பாதிப்பின்றி நடக்க உதவ முன்வந்துள்ளது எஸ்பிஐ. மேலும் அடுத்த ஆண்டு இந்த வங்கிக்கு கிங்பிஷர் செலுத்த வேண்டிய ரூ 550 கோடியைத் திருப்பித் தரும் கெடுவை நீட்டிக்கவும் எஸ்பிஐ முடிவு செய்துள்ளது. மேலும் கிங்பிஷர் செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கித் தொகையான ரூ 360 கோடிக்கு எஸ்பிஐ மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கிகள் உத்தரவாதம் அளிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இந்த அரசு வங்கிகளின் முடிவு பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மைக்ரோசாப் விண்டோஸின் லோகோவில் மாற்றம்!

நியூயார்க்: மைக்ரோசாப்ட் நிறுவனம் தமது விண்டோஸ் மென்பொருளை மறுசீரமைப்பு செய்துள்ளது. 1985ஆம் ஆண்டு விண்டோஸ் லோகோ உருவாக்கப்பட்டது. 4 வண்ணக் கொடி பறப்பது போன்ற இந்த லோகோவில் அவ்வப்போது சிறு சிறு மாற்றங்களை மைக்ரோசாப்ட் நிறுவனம் செய்து வந்தது. தற்போது உருவாக்கப்பட்டுள்ள புதிய லோகோவுடன் விண்டோஸ் 8 வெளியாக உள்ளது. புதிய லோகோ 4 வண்ண கொடி பறப்பதற்கு பதிலாக ஒரு ஜன்னலைப் போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை பெளவுல் ஸெர் என்பவர் வடிவமைத்துள்ளார். "விண்டோஸ் என்ற பெயருக்கேற்பவே சாப்ட்வேரின் லோகோவை வடிவமைத்திருக்கிறோம்" என்று மைக்ரோசாப்ட் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள், 20 பிப்ரவரி, 2012

வருமானவரி செலுத்த சென்னையில் சிறப்பு ஏற்பாடு - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

சென்னை: வருமான வரி செலுத்துவோருக்காக சென்னையில் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது ரிசர்வ் வங்கி. இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் என்.எஸ்.விஸ்வநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மார்ச் மாத கடைசியில் ரிசர்வ் வங்கியில் வருமான வரியை செலுத்த வருபவர்களின் எண்ணிக்கை மிக அதிக அளவில் இருப்பதை கருத்தில் கொண்டு கூடுதல் கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. கடைசி நேர நெரிசலைத் தவிர்த்து, குறித்த நாளுக்கு முன்னதாகவே வரியை செலுத்துமாறு வேண்டுகிறோம். ரிசர்வ் வங்கிதவிர, தமிழகத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளின் சில குறிப்பிட்ட கிளைகளுக்கும் வரியை பணமாகவோ, காசோலையாகவோ பெற அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத், ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா, அலகாபாத் வங்கி, ஆந்திரா வங்கி, பாங்க் ஆப் பரோடா, பாங்க் ஆப் இந்தியா, கார்ப்பரேஷன் வங்கி, தேனா வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் நேஷனால் வங்கி, சிண்டிகேட் வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா, யூகோ வங்கி, விஜயா வங்கி, தனியார் துறை வங்கிகளில் ஆக்ஸிஸ் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ.வங்கி, ஐடிபீஜ வங்கி, எச்.டி.எப்.சி.வங்கி போன்ற வங்கிகளில் இந்த சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. வருமானவரி செலுத்துவோரின் வசதிக்காக செய்யப்பட்டுள்ள இந்த ஏற்பாட்டை பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு என்.எஸ்.விஸ்வநாதன் கூறி உள்ளார்.

கிங் பிஷர் விமான சேவையில் தொடரும் ரத்து- விமானிகள் விலகல்!

டெல்லி: கிங்பிஷர் நிறுவனத்தின் விமான சேவைகள் 4-வது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் நிறுவனம் மூடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. விமானங்களை முன்னறிவிப்பின்றி திடீரென ரத்து செய்தது தொடர்பாக விமான சேவைகள் இயக்ககத்திடம் கிங் பிஷர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சஞ்சய் அகர்வால் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றார். இந்நிலையில் மும்பையிலிருந்து 13, கொல்கத்தாவிலிருந்து 8, டெல்லியிலிருந்து 4 என விமான சேவைகளை திடீரென ரத்து செய்ததால் பயணிகள் தவிப்புக்குள்ளாகினர். பிரதான சேவையான மும்பை-டெல்லி விமானங்களையும் கூட கிங் பிஷர் ரத்து செய்துள்ளது. கிங்பிஷர் விமான சேவை நிதி நெருக்கடியால் தவிப்பதால் விமானிகள் பலரும் பணியிலிருந்து விலகிவிட்டனர். ஏற்கெனவே கடந்த சில மாதங்களாக ஊழியர்களுக்கு ஊதியமும் வழங்காத நிலையில் விமானங்களும் ரத்து செய்யப்பட்டு வருவதால் விமான சேவையை அனேகமாக கிங் பிஷர் நிறுவனம் நிறுத்திவிடக் கூடும் எனத் தெரிகிறது. இருப்பினும் இதை கிங் பிஷர் நிறுவன உரிமையாளர் விஜய்மல்லையா மறுத்துள்ளார். நிதி நெருக்கடியை சமாளிக்க எரிபொருளை நேரடியாக இறக்குமதி செய்யவும் தமது நிறுவனப் பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நேரடியாக விற்க அனுமதிக்க வேண்டும் என்பதும் விஜய்மல்லையாவின் நீண்டநாள் கோரிக்கை. மத்திய அரசின் உதவி எதுவும் தங்களுக்குத் தேவை இல்லை என்றும் கூறிவருகிறார் விஜய்மல்லையா.

கர்ப்பகாலத்தில் தியானம் கருகுழந்தைகளுக்கு நல்லது!

திருமணமான பெண்கள் கர்ப்பம் தரிப்பது இயல்பானது என்றாலும் முதல்முறையாக கருவை சுமக்கும் பெண்களுக்கு ஒருவித படபடப்பு ஏற்படுவது இயற்கையே. எனவே கர்ப்பிணிகள் தியானம், யோகா போன்றவை மேற்கொள்வதன் மூலம் அவர்களின் மன நிலை அமைதியடைவதோடு கருக்குழந்தைக்கும் நன்மை ஏற்படுவது தெரியவந்துள்ளது. மன அமைதி கர்ப்பிணிகளுக்கு பிறக்கப் போகும் குழந்தை குறித்து ஒரு வித எதிர்பார்ப்பு இருக்கும். குழந்தையை பத்திரமாக பெற்றெடுத்து அறிமுகப்படுத்தவேண்டுமே என்ற எண்ணம் கர்ப்பிணிகளுக்கு ஏற்படுவது இயல்பு. எனவே கர்ப்பிணிகள் தியானம் செய்வதன் மூலம் அவர்களுக்கு மன அமைதி ஏற்படுகிறது. குழந்தைக்கு நன்மை தரும் அமைதியான ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து கண்களை மூடி மூச்சை நிதானமாக இழுத்து விட வேண்டும். கவனம் முழுவதும் அடிவயிற்றில் உள்ள குழந்தையை பற்றியே இருக்கவேண்டும். இதனால் மனம் அமைதியடையும். இது உங்களின் கரு குழந்தைக்கு நன்மை அளிக்கும். கண்களை மூடி தியானிக்கும் பொழுது மனதிற்கு இதமான மந்திரங்களை உச்சரித்தால் கூடுதல் நன்மை தரும். இதனால் கருவில் உள்ள குழந்தை அமைதியான முறையில் சீராக வளர்ச்சியடைந்து உலகத்தை பார்க்க தயாராகும். மன அழுத்தம் குறைகிறது. தியானம் மேற்கொள்வதன் மூலம் கர்ப்ப கால மன அழுத்தம் குறைகிறது. கர்ப்பிணிகளுக்கு மசக்கை காலத்திய மயக்கம், உயர்ரத்த அழுத்தம், தூக்கமின்மை போன்றவை ஏற்படுவது கட்டுபடுத்தப்படுகிறது. தியானம் மேற்கொள்வதன் மூலம் ஆக்ஸிஜன் அதிகரிப்பதால் குழந்தைகள் வளர்ச்சிக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கிறது. குழந்தைகளுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. தியானத்தோடு கர்ப்பிணிகள் அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று செக்அப் செய்து கொள்ளவேண்டும். சத்தான உணவுகளை உட்கொண்டு வர எளிதான சுகப்பிரசவம் ஏற்படும்.

கார்களில் லோகோ பிளேட்டுகள் அபேஸ்: ஓர் உஷார் ரிப்போர்ட்!

கார் உரிமையாளர்களின் வயிற்றில் புளியை கரைக்கும் நூதன திருட்டு சம்பவங்கள் அம்பலமாகியுள்ளன. ஆம், கார்களில் உள்ள கார் நிறுவனத்தின் சின்னம் பொறிக்கப்பட்ட (லோகோ)பிளேட்டுகளை திருடிச் செல்லும் சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேற துவங்கியுள்ளன. பொது இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பிஎம்டபிள்யூ, ஆடி, வோக்ஸ்வேகன், பென்ஸ் மற்றும் ஸ்கோடா கார்களின் சின்னங்களை திருட்டுக் கும்பல் குறி வைத்து திருடி வருகிறது. மேற்கண்ட நிறுவனங்களின் லோகோ பிளேட்டுகள் நம் நாட்டு மார்க்கெட்டில் கிடைப்பதில்லை. மேலும், கார்களுக்கான குறிப்பிட்ட பாகங்களை மேற்கண்ட நிறுவனங்கள் இங்கேயே பெற்றாலும், லோகோ பிளேட்டுகளை அவை தங்களது சொந்த நாட்டிலிருந்தே இறக்குமதி செய்கின்றன. மேலும், கார்களில் லோகோ சேதம் அடைந்து மாற்ற வேண்டும் என்றால், டீலரிடம் ஆர்டர் கொடுத்து மாதக்கணக்கில் காத்துக்கிடக்க வேண்டும். விலையும் அதிகம். இந்த நிலையில்தான், முக்கிய நகரங்களில் லோகோ திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த நூதன திருட்டில், பெரிய அளவிலான நெட்வொர்க் கொண்ட திருட்டுக் கும்பல் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், போலீஸ் பிரச்னை என்று வந்தாலும் சமாளிக்கும் வகையில், சந்தேகம் வராவத வகையில் மாணவர்களை ஈடுபடுத்தி லோகோ பிளேட்டுகளை அந்த கும்பல்கள் திருடி வருவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து கார் உரிமையாளர்கள் போலீசில் புகார் கொடுப்பதில்லை என்பதும், போலீசாரும் இதுகுறித்து இதுவரை விசாரணை நடத்தாததும் லோகோ திருட்டு கும்பலுக்கு சாதகமாக இருக்கிறது. திருடப்பட்ட லோகோ பிளேட்டுகள் காய்லாங்கடை வழியாக விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதில், மும்பை மற்றும் மங்களூரில் நடந்துள்ள இந்த சம்பவங்கள் கார் உரிமையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்கோடா கார்களின் லோகோ பிளேட்டுகள்தான் திருட்டு கும்பலின் முக்கிய டார்கெட்டாக இருக்கிறது என்பதால், உரிமையாளர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.

வீடு, வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் அதிகரிக்கிறது?

டெல்லி: வீடு, வாகனங்கள், சொத்துகள் உள்ளிட்ட பொது இன்சூரன்ஸ் கட்டணங்கள் ஏப்ரல் மாதம் மூலம் அதிகரிக்கப்பட உள்ளது. தேசிய மறுகாப்பீட்டாளர்கள் மறும் பொது காப்பீட்டுக் கழகங்கள் நட்டத்தை ஏற்படுத்தும் வர்த்தக நடவடிக்கைகளை நிறுத்துமாறு மத்திய நிதி அமைச்சகம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது. நட்டத்தை ஏற்படுத்தும் வகையிலான வர்த்தகங்களுக்கு இன்சூரன்ஸ் செய்வோர்தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. கடந்த் 7-ந் தேதியன்று இத்தகைய கடிதம் ஒன்றை நிதி அமைச்சகம் அனுப்பியிருகிறது. மேலும் அரசுக்குச் சொந்தமான பொதுக் காப்பீட்டுத்துறையானது ஒரு மறுகாப்பீட்டு நிறுவனமாகும். இதர பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அனைத்துமே அரசு காப்பீட்டு நிறுவனம் மீது தங்களது சிக்கலான வர்த்தக நடவடிக்கைகளை திணிப்பதை முறைப்படுத்த உரிய சட்டம் தேவை என்கிறது மத்திய அரசு. இதனால் சொத்துகள், வாகனங்கள் மற்றும் தனிநபரின் உடல்நலனுக்கான இன்சூரன்ஸ்களுக்கான கட்டணத்தை அதிகரிக்க பொதுக்காப்பீட்டு நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஏதாவது ஒரு பொய்க் காரணங்களைக் காட்டி இன்சூரன்ஸ் பெறுவோரின் எண்ணிக்கையைத் தடுக்கும் வகையில் இத்தகைய நடவடிக்கை அமையும் என்று கூறப்படுகிறது.

வியாழன், 9 பிப்ரவரி, 2012

தனிநபர் வருமான வரிவிலக்கு ரூ.3 லட்சமாக உயர்கிறது?

டெல்லி: தனி நபர் வருமான வரிவிலக்கு உச்ச வரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்தலாம் என மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. தற்போது ரூ 1.8 லட்சமாக உள்ள இந்த உச்சவரம்பு ரூ 2 லட்சமாக உயர்த்தப்படும் என முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது, இதனை ரூ 3 லட்சமாக உயர்த்தலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனை பாராளுமன்ற நிலைக்குழு பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. இன்று சமர்ப்பிக்கப்படும் நிதி மசோதாவுடன், இந்தப் பரிந்துரைகளையும் நிலைக்குழு ஏற்கும் எனத் தெரிகிறது. ஏற்கெனவே ரூ 5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் கணக்கு தாக்கல் செய்ய விலக்கு அளிக்கப்பட்டுள்ள சூழலில், ரூ 3 லட்சம் வரை வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்படுவது நடுத்தர வர்க்க மக்களுக்கு பெரிய நிம்மதியைத் தரும் விஷயமாகும். மேலும் வரி விகிதம் என்பது மார்க்கெட்டில் நிலவும் நுகர்வு விலைக் குறியீட்டெண் அடிப்படையில் அமைய வேண்டும் என்ற ஐக்கிய முன்னணி அரசின் திட்டத்தை அமல்படுத்தும் நடவடிக்கையில் ஒன்றாகவே இந்த வருமான வரி உச்சவரம்பு நியமனம் பார்க்கப்படுகிறது. மேலும் பல வருமான வரி சீர்த்திருத்தங்களும் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிகிறது. ரூ 3 லட்சத்திலிருந்து 10 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 10 சதவீத வரியும், ரூ 20 லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு 20 சதவீதமும், அதற்கு மேல் வருமானம் இருந்தால் 30 சதவீதமும் இனி வரி விதிக்கப்படும் எனத் தெரிகிறது.