திங்கள், 30 ஆகஸ்ட், 2010

2012ஆம் ஆண்டு நிகழும் மிகப்பெரிய சூரியச் சூறாவளி!


00மில்லியன் ஹைட்ரஜன் குண்டுகளின் சக்தி கொண்ட மிகப்பெரிய சூரியப்புயல் ஒன்று 2012ஆம் ஆண்டு ஏற்படும் என்றும் இதனால் பூமியில் பலத்த சேதங்கள் ஏற்படும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நாடுகளின் மின்சார வினியோக அமைப்புகளும் தகவல் தொடர்பு அமைப்புகளும் பலத்த சேதமடையும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

விமானப் போக்குவரத்து, மின்னணுச் சாதன அமைப்புகள், கப்பல் போக்குவரத்திற்கு உதவும் உபகரணங்கள் முக்கியமாக செயற்கைக் கோள்கள் வேலை செய்யாது.

நாசாவின் சூரியப்பௌதீகப் பிரிவு விஞ்ஞானி டாக்டர் ஃபிஷர் இது பற்றிக் கூறுகையில் 100 ஆண்டுகளில் அசாதாரண சக்தி கொண்ட இந்த சூரியப்புயல் முதன் முதலாகத் தாக்கவுள்ளது. இதனால் பெரிய அளவுக்கு மின்வினியோகத் தடைகளும், தகவல்தொடர்பு சிக்னல்கள் இழக்கப்படும். என்று எச்சரித்துள்ளார்.

சூரியப்புயல் தாக்குகையில் சூரியனின் வெப்ப அளவு 10,000 டிகிரி பாரன்ஹீட்டையும் கடந்து விடும்.

இந்த சூப்பர் சூரிய சூறாவளி இடி இடிப்பது போன்று நிகழும். பூமியின் காந்தப்புலங்களை நம்பி இயங்கும் நமது தகவல்தொழில் நுட்ப உலகம் பெரிதும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

இந்த வகை அதிசக்தி சூரியப்புயல் 2012 ஆம் ஆண்டிலோ அல்லது நிச்சயமாக 2013ஆம் ஆண்டிலோ ஏற்படும் என்பது உறுதி ஆனால் விளைவுகள் பற்றி இன்னமும் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

இந்தச் சூரியப்புயலால் ஏற்படும் சூரிய எரிதழல்கள் பூமியின் காந்தப் புலத்தை பாதிக்கும். ஆனால் இது மிகமிகவேகமாக நடக்கும், ஒரு இடி இடிப்பது போன்ற நேரத்தில் அனைத்தும் நடந்து முடிந்து விடும் என்கிறார் நாசா விஞ்ஞானி பிஷர்.

இதனால் ஏற்படும் மின்வினியோக அமைப்புகள் சேத உள்ளிட்ட பிற சேதங்களை சீர் செய்ய மிகப்பெரிய அளவில் பணம் செலவழியும் என்பதோடு நீண்ட காலம் பிடிக்கும் என்பதும் உண்மை.

சூரியசுழற்சியில் 24ஆம் கட்டத்தை அது எட்டுவதால் இந்த நிகழ்வு தவிர்க்க முடியாதது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

இந்தக் கண்டுபிடிப்புகள் ஆஸ்ட்ரேலியன் சயன்ஸ் என்ற பத்திரிக்கையில் வெளியாகியுள்ளது.

மனித உரிமைகளுக்குக் காவலா? அச்சுறுத்தலா?


“காவல் துறையினரின் நடவடிக்கைகளின் காரணமாக நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மனித உரிமைகள் மீறப்படாத ஒரு சூழலை உயர் அதிகாரிகளாகிய நீங்கள் உறுதி செய்ய வேண்டும்” என்று தேச மனித உரிமை ஆணைய்த்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ள உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

காவல்துறையினர் மக்களின் காவலர்களா? அல்லது ஆட்சியாளர்களின் கருவிகளா? என்ற கேள்வி நமது நாட்டு மக்களிடையே நீண்ட காலமாக ஒரு விவாதப் பொருளாகவே இருந்து வருகிறது. ஏனெனில், மக்களின் பாதுகாவலன் என்ற நிலையில் காவல் துறையினர் செயல்படும் காலம் ஒன்றை இந்தியாவின் எந்த மாநிலத்து மக்களும் இதுவரை அனுபவிக்கவில்லை என்பதே!

உலகில் வேறு எந்த ஜனநாயக நாட்டையும் விட, இந்தியாவில் தான் மனித உரிமை மீறல்களில் அதிகம் ஈடுபடுவது காவல் துறையினராக உள்ளனர் என்பது வெளிப்படையான உண்மையாகும். அதனால்தான், இந்த நாட்டின் தேச மனித உரிமை ஆணையத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ள நீதிபதி பாலகிருஷ்ணன் அவர்கள் இவ்வாறு பேசியுள்ளார்.

தலைநகர் டெல்லியில், நமது நாட்டின் உள்நாட்டு உளவுத் துறை (இண்டலிஜன்ஸ் பியரூ) சமீபத்தில் ஏற்பாடு செய்த காவல் துறை தலைவர்கள், காவல் தலைமை ஆய்வாளர்கள் மாநாட்டில், முதல் முறையாக தேச மனித உரிமை ஆணையத்தின் தலைவர் உரையாற்ற அழைக்கப்பட்டுள்ளார்.
நீதிபதி பாலகிருஷ்ணனுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த கலந்துரையாடலில், காவல் துறைத் தலைவர்கள் தங்கள் அனுபவத்தின் அடிப்படையில் பல கேள்விகளைக் கேட்டுள்ளனர் என்றும், அதற்கெல்லாம் நீதிபதி பாலகிருஷ்ணன் உரிய விளக்கங்கள் அளித்ததாகவும் செய்திகள் கூறுகின்றன.
இந்த மாநாட்டில் பேசிய நீதிபதி பாலகிருஷ்ணன், காவல் துறையினருக்கு அளித்துள்ள பல யோசனைகள், காவல் துறைத் தலைவர்களால் முழுமையாக பின்பற்றப்படுமானால், அது உண்மையிலேயே நமது நாட்டின் சமூகச் சூழலில், ஒரு பெரிய மாற்றத்தை உண்டாக்கும் என்பதில் ஐயமில்லை.

“சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும் என்ற உணர்வோடு தங்களுக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகளும், காவலர்களும் நடந்து கொள்வதை மூத்த அதிகாரிகள் உறுதி செய்தால், அதுவே மனித உரிமை மீறல்களுக்கு எதிரான பாதுகாப்பாக அமையும்” என்று நிதிபதி பாலகிருஷ்ணன் கூறியிருப்பது மிக முக்கியமானது.

இங்கே சட்டத்தின் ஆட்சி என்று கூறியிருப்பது, இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தின் ஆட்சி என்பதை காவல் துறையினரில் எத்தனை பேர் புரிந்துகொண்டிருப்பார்கள் என்பது கேள்விக்குறியே! சட்டத்தின் ஆட்சி என்றால், தங்களுக்குள்ள அதிகாரத்தை உச்சக்கட்ட அளவிற்குப் பயன்படுத்துவது என்ற புரிதல்தான் காவல் துறையிலுள்ள பெரும்பான்மையாளர்களுக்கு உள்ளது என்பதை அவர்களின் பேச்சிலும், மக்களுடனான அவர்களின் அணுகுமுறையிலும் வெகுவாக புலப்படுகிறது.

நமது நாட்டின் காவல் துறையினரின் பொதுவான மனப்பாங்கு, வெள்ளையன் காலத்து காலனி ஆதிக்க அரசில் பணியாற்றிய காவலர்களின் மனப்பாங்கோடுதான் இப்போதும் தொடர்கிறது. தங்களைக் கண்டு மக்கள் அஞ்சி, அடங்கி இருக்க வேண்டும் என்பதை மிரட்டலான நடத்தையின் மூலம் இன்றளவும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர்.

அதேபோல், வெள்ளை துரைமார்களுக்கு எப்படி அதீத மரியாதை காட்டி நடந்துகொண்டார்கள் என்று சினிமாவில் பார்க்கிறோமா, அதேபோல்தான் இன்றளவும் ஆட்சியாளர்களுக்கு அதீத மரியாதை கொடுத்து நடந்துகொள்கிறார்கள். ஆட்சி மாறினால், அவர்களும் தங்களது மரியாதைகளை மாற்றிக் கொள்கிறார்கள். அது எந்த அளவிற்கு செல்லும் என்பதை முன்னாள் முதல்வர் ஒருவர் கைது செய்யப்பட்டபோது அந்தப் ‘பணி’யை நிறைவேற்றிய காவல் அதிகாரிகள் நடந்துகொண்டதே அதற்கு அத்தாட்சியாகும்.

நாம் இன்னமும் ஒரு விடுதலை பெற்ற நாட்டின் குடிமக்களாகவில்லை என்பதை பல நேரங்களில் நிரூபிப்பவர்கள் காவல் துறையினரே. சமீபத்தில் திருவள்ளுவர் மாவட்டம் திருப்பெரு்ம்புதூரில் பசுமை விமான நிலையம் அமைப்பதற்காக தங்கள் நிலங்களை கையகப்படுத்தும் அரசின் நடவடிக்கையை எதிர்த்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கச் சென்ற மக்கள் மீது, அவர்கள் போக்குவரத்திற்கு இடையூறு செய்கிறார்கள் என்று கூறி காவல் துறையினர் நடத்திய தடியடித் தாக்குதல்!

இதேபோல், தஞ்சை மாவட்டம் வடசேரி கிராமத்து மக்கள் தங்கள் ஊரின் வேளாண்மைக்கு வேட்டு வைக்கும் வகையில் அமையவிருந்த எரிசாராய தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கருத்துக் கேட்புக் கூட்டத்திற்கு வந்தபோது ஏற்பட்ட ஒரு சிறு சம்பவத்தை சாக்காக வைத்து, பெரியவர்கள், பெண்கள் என்று பாராமல் காட்டுமிராண்டித்தனமாக அவர்கள் மீது காவல் துறையினர் நடத்திய தடியடித் தாக்குதல். இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளரே ‘தலைமை’யேற்று நடத்தி முடித்ததுதான் வேதனையான வேடிக்கை!

த‌ர்மபு‌ரி பேரு‌ந்து எ‌ரி‌ப்பு வழ‌க்‌கி‌ல் 3 பே‌ரி‌ன் தூ‌க்கு த‌ண்டனையை உறு‌தி செ‌ய்தது உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம்!


த‌‌ர்மபு‌ரி பேரு‌ந்து எ‌ரி‌ப்பு வழ‌க்‌கி‌ல் மூ‌ன்று பேரு‌க்கு தூ‌‌க்கு த‌ண்டனையை உறு‌தி செ‌ய்து உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்து‌ள்ளது. மேலு‌ம் வழ‌க்‌கி‌ல் இரு‌ந்து ‌விடு‌வி‌க்க கோ‌ரிய 25 பே‌ரி‌ன் மனுவு‌ம் ‌நிராக‌ரி‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

கடந்த 2000ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ஆ‌ம் தேதி கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில், அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ‌நீ‌திம‌ன்ற‌ம் இர‌ண்டு ஆ‌ண்டு தண்டனை விதித்ததை‌த் தொட‌ர்‌ந்து பல இடங்களில் அ.இ.அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அந்த சமயத்தில் தர்மபுரிக்கு சுற்றுலா வந்த கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக பேரு‌ந்து, தர்மபுரி அருகே உள்ள இலக்கியம்பட்டியில் தீவைத்து எரிக்கப்பட்டது. இதில் கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகிய 3 மாணவிகள் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர்.


இது தொடர்பாக அ.இ.அ.தி.மு.க.வினர் 31 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை சேலம் முதலாவது கூடுதல் அம‌ர்வு ‌நீ‌திம‌ன்ற‌ நீதிபதி கிருஷ்ணராஜா விசாரித்தார். வழக்கு விசாரணையின் போது தர்மபுரி மாவட்ட ஆ‌ட்‌‌சிய‌ர், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் உள்பட 123 பேர் சாட்சியம் அளித்தனர்.

இந்த வழக்கில், தர்மபுரி நகர அ.இ.அ.தி.மு.க. செயலர் நெடு என்ற நெடுஞ்செழியன், முன்னாள் எம்.ஜி.ஆர். மன்ற செயலர் மாது என்ற ரவீந்திரன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முனியப்பன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனையும் தலா ரூ.59 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

webdunia photo
WD
மேலும் 25 பேருக்கு பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் தனித்தனியாக ‌சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதன்படி அவர்கள் 25 பேரும் தலா 7 ஆண்டு 3 மாதம் ‌சிறை தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 2 பேர் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போதே ஒருவர் விபத்தில் மரணம் அடைந்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து அவர்கள் 28 பேரும் சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌‌ல் மே‌ல்முறை‌யீடு செய்தனர். இதில் 3 பேரின் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. மற்ற 25 பேரும் தனித்தனியாக ‌சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பதை மாற்றி, ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனால் அவர்கள் அதிகபட்சமாக 2 ஆண்டு ‌சிறை தண்டனை அனுபவித்தால் போதும் என்ற நிலை ஏற்பட்டது. இந்த தீர்ப்பு கடந்த 2007ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆ‌ம் தேதி வழ‌ங்க‌ப்ப‌ட்டது.

webdunia photo
WD
செ‌ன்னை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ன் இந்த தீர்ப்பை எதிர்த்து, தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்ட நெடு என்ற நெடுஞ்செழியன், மாது என்ற ரவீந்திரன், முனியப்பன் ஆகிய 3 பேரும் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மே‌ல்முறை‌யீடு செய்தனர். இ‌ந்த மனுவை நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, பி.எஸ்.சவுகான் ஆகியோர் விசாரித்தன‌‌ர். கடந்த ஜூலை 28ஆ‌ம் தேதி விசாரணை முடிவடைந்து தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது.

இ‌ந்‌நிலை‌யி‌ல் இந்த வழக்கில் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, பி.எஸ்.சவுகான் ஆகியோர் ‌தீ‌‌ர்‌ப்ப‌ளி‌த்தன‌ர். நெடு என்ற நெடுஞ்செழியன், மாது என்ற ரவீந்திரன், முனியப்பன் ஆ‌கியோ‌ரி‌ன் தூ‌க்கு‌த் த‌ண்டனை உறு‌தி செ‌ய்த ‌நீ‌திப‌திக‌ள், அவ‌ர்க‌‌ளி‌ன் மே‌ல்முறை‌யீ‌ட்டு மனுவை ‌நிராக‌ரி‌த்தன‌ர்.

மேலு‌ம் வழ‌க்‌கி‌ல் இரு‌ந்து ‌விடு‌வி‌க்க கோ‌ரிய 25 பே‌ரி‌ன் மனுவையு‌ம் ‌‌நீ‌திப‌திக‌ள் ‌நிராக‌ரி‌த்து‌ள்ளன‌ர்.

‌நிராயுதபா‌ணியாக இரு‌ந்த மாண‌விக‌ள் ‌மீது தா‌க்குத‌ல் கா‌ட்டு‌மிரா‌‌ண்டி‌த்தனமான செய‌ல் எ‌ன்று கூ‌றியு‌ள்ள ‌நீ‌திப‌திக‌ள், பேரு‌ந்து ‌தி‌ட்ட‌மி‌ட்டு ‌தீ வை‌த்து எ‌ரி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது எ‌ன்று‌ம் பேரு‌ந்து‌க்கு ‌தீ வை‌த்தது சமூக‌த்‌தி‌ற்கு எ‌திரான செய‌ல் எ‌ன்று‌ம் தெ‌ரி‌வி‌‌த்து‌ள்ளன‌ர்.

பேரு‌ந்து எ‌ரி‌ப்பை காவ‌ல்துறை கைக‌ட்டி வேடி‌க்கை பா‌ர்‌த்தாக ‌‌நீ‌திப‌திக‌ள் க‌ண்டன‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

இ‌ந்த த‌ண்டனையை எ‌தி‌ர்‌த்து 3 பேரு‌ம் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ‌‌சீரா‌ய்வு மனு தா‌க்க‌ல் செ‌ய்யலா‌ம். அ‌திலு‌ம் அவ‌ர்க‌ளி‌ன் ‌மனு நிராக‌ரி‌க்க‌ப்ப‌ட்டா‌ல் குடியரசு‌த் தலைவ‌ரிட‌ம் கருணா‌ மனு கொடு‌க்கலா‌ம். அ‌ந்த மனுவையு‌ம் குடியரசு‌த் தலைவ‌ர்‌ ‌நிராக‌‌‌ரி‌த்து ‌வி‌ட்டா‌ல் 3 பேரு‌க்கு‌ம் தூ‌க்கு உறு‌தி.

இன்டர்போலின் 'வான்டட்' பட்டியலில் 650க்கும் மேற்பட்ட இந்தியர்கள்!


டெல்லி: சர்வதேச போலீஸான இன்டர்போலின் தேடப்படுவோர் பட்டியலில் 650க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இதுவரை இந்தப் பட்டியலில் 656 இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு எதிராக ரெட் அலர்ட் நோட்டீஸ்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள். பலர் இந்தியாவில் பிறந்து வெளிநாடுகளில் வசிப்பவர்கள். கடந்த ஐந்து வருடங்களாக இவர்கள் தேடப்பட்டு வருகின்ரனர்.

இவர்களில் பலரும் இந்தியாவில் அல்லாமல் வெளிநாடுகளில் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள்.

இவர்களைப் பிடிக்க இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்டர்போல் அமைப்பு உலகின் மிகப் பெரிய சர்வதேச போலீஸ் அமைப்பாகும். இதில் 188 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

சிறு குற்றம் முதல் தீவிரவாத குற்றச்சாட்டு வரை பல்வேறு தரப்பிலான குற்றங்களைச் செய்து விட்டு தலைமறைவானோர் இன்டர்போல் மூலம் தேடப்படுகிறார்கள்.

ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள 656 பேரில், கடந்த ஆண்டு மட்டும் 150 பேருக்கு ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டது. 2006ல் 119 பேருக்கு எதிராகவும், 2007ல் 133 பேருக்கு எதிராகவும் பிறப்பிக்கப்பட்டது.

இவர்களில் பலரும் சவூதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், அமெரிக்கா, ஹாங்காங், ரஷ்யா, பெலாரஸ், எகிப்து, ஆஸ்திரேலியா, பெல்ஜியம் ஆகிய நாடுகளில் குற்றம் இழைத்தவர்கள் ஆவர்.

பண மோசடி, வரி ஏய்ப்பு, பாலியல் பலாத்காரம், ரயில்வே போக்குவரத்துக்கு இடையூறு செய்தது, இமெயில் மோசடி, வரதட்சணைக் கொடுமை என பல தரப்பட்ட குற்றங்களைச் செய்தவர்கள் இவர்கள். இவர்களில் 25 சதவீதம் பேர் அதிக வேகமாக கார்ஓட்டியது, சாலை விபத்துக்களை ஏற்படுத்தியது ஆகிய குற்றங்களில் சிக்கியவர்கள் ஆவர்.

அஸ்வினி ஸ்ரீவத்சவா என்பவர் ஆர்டிஐ மூலம் கோரிய தகவலின் கீழ் இவை தெரிய வந்துள்ளது.

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

10 நிமிட செக்ஸ் ஓ.கே.!


ஒரு திருப்திகரமான செக்ஸ் உறவு என்பது பத்து நிமிடங்களுக்குள் முடிந்து விடும் என்று ஒரு ஆய்வு கூறியுள்ளது.

இது நிறைய பேருக்கு ஆச்சரியமாக இருக்கலாம், சிலருக்கு அப்படியெல்லாம் இல்லை என்ற எதிர்ப்பு [^] எழலாம். ஆனால் உண்மையில் பத்து நிமிட செக்ஸ் உறவில் போதுமான திருப்தியும், மகிழ்ச்சியையும் எட்ட முடியும் என்கிறது இந்த ஆய்வு.

இதுதொடர்பாக செக்ஸ் தெரப்பி மற்றும் ஆய்வுக் கழகத்தைச் சேர்ந்த 50 பேர் சேர்ந்து ஒரு ஆய்வை மேற்கொண்டனர். செக்ஸ் பிரச்சினைகள் தொடர்பான அறிவுரை, சிகிச்சை முறைகளைக் கொடுக்கக் கூடியது இந்த அமைப்பு.

இந்த ஆய்வில் தெரிய வந்துள்ள சுவாரஸ்யமான விஷயங்கள்...

ஒன்று முதல் 2 நிமிடம் வரையிலான உறவு என்பது மிக மிக குறுகியது. இதில் இருவருக்குமே திருப்தி கிடைக்காது. 3 முதல் 7 நிமிடம் வரை என்பது நார்மலானது. இதில் இருவருக்கும் முழு திருப்தி கிடைக்கும். 13 நிமிடங்கள் வரை நீடிப்பது என்பது மிகவும் நீளமானது. இதிலும் இருவருக்கும் திருப்தி இருக்கும், அதேசமயம், கூடவே சில அசவுகரியங்களையும் சந்திக்க நேரிடும்.

எனவே 7 முதல் 13 நிமிடங்கள் வரை என்பது இரு தரப்புக்கும் ஏற்ற, பொருத்தமான, சரியான கால அளவாகும். அதிலும் 10 நிமிடம் என்பது மிகவும் பர்பக்ட் ஆன கால அளவு.

செக்ஸ் உறவில் திருப்தி, மகிழ்ச்சி என அனைத்தையும் அனுபவிக்க, உணர நீண்ட நேரம் தேவையில்லை, வெறும் பத்து நிமிடமே போதுமானது என்பதே இந்த ஆய்வின் முடிவு.

அதேசமயம், உறவுக்கு முந்தைய விளையாடல்கள், சீண்டல்கள் போன்றவற்றுக்கு இவ்வளவு நேரம்தான் என்று கணக்கில்லை. அது எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நீடிக்கலாம். ஆனால் உச்சகட்ட உறவுக்கு பத்து நிமிட அவகாசம் என்பது சரியானது, பொருத்தமானது, போதுமானது என்கிறது இந்த ஆய்வு.

இதுகுறித்து பென் ஸ்டேட் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் எரிக் கார்ட்டி கூறுகையில், இரவு முழுவதும் உல்லாசமாக இருந்தால்தான் திருப்திகரமாக இருக்கும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. உண்மையில் உங்களுக்கு 7 முதல் 13 நிமிடங்கள் அல்லது பத்து நிமிடங்கள் போதும்.

சிலருக்கு பெரும் எதிர்பார்ப்புகள் இருக்கும். நீண்ட உடலுறவைக் கொடுத்தால்தான் பார்ட்னருக்கு திருப்தி கிடைக்கும், மகிழ்ச்சி கிடைக்கும் என்று ஆண்களும், பெண்களும் எண்ணுவதால் பல அவுசகரியங்களே ஏற்படுகிறது. மேலும் அதுபோல நடப்பதும் இல்லை. இதனால் ஏமாற்றமும், விரக்தியும் ஏற்படுகிறது.

சில பலான படங்களில் நீண்ட நேரம் உறவு கொள்வது போல காட்டுகிறார்கள். ஆனால் பார்ப்பவர்களை குஷிப்படுத்துவதற்காக எடுக்கப்படும் செயற்கைப் படங்கள். அதில் உண்மையில்லை. அது நிறையப் பேருக்குப் புரிவதில்லை. அதேபோல செய்ய வேண்டும் என்று இறங்கி ஏமாற்றத்திலும்,விரக்தியிலும் போய் நிற்பார்கள்.

இரவு நீண்டிருந்தாலும், நம் உறவுக்கு தேவை சில நிமிடங்கள் மட்டுமே. இதை புரிந்து கொண்டு உறவில் இறங்கினால் குழப்பங்கள், கவலைகள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

உண்மையைப் புரிந்து கொண்டு எதார்த்தமாக உறவுக்குள் நுழைவதே மனதுக்கும், நமது உடலுக்கும், செக்ஸ் வாழ்க்கைக்கும் சிறந்தது என்கிறார் கோர்ட்டி.

மாதச் சம்பளதாரர்களுக்கு குஷி செய்தி-ரூ. 2 லட்சமாக உயருகிறது வருமான வரி உச்சவரம்பு!


டெல்லி: மாதச் சம்பளம் வாங்குவோருக்கு ஒரு குஷியான செய்தியை மத்திய அரசு [^] வெளியிட்டுள்ளது. 2011ம் ஆண்டு முதல் வருமான வரி உச்சவரம்பு ரூ. 2 லட்சமாக உயரப் போகிறது. அதேசமயம், வருமான வரி விலக்குக்கான சேமிப்புகளின் அளவை குறைக்கலாம் என்று தெரிகிறது.

நேரடி வரி விகிதம் தொடர்பாக அரசு கடந்த ஆண்டு ஒரு வரைவு மசோதாவை உருவாக்கியது. அதில் மாதச் சம்பளம் வாங்குவோருக்கும், வீட்டுக் கடன் பெற்றோருக்கும் எந்தவித பலனும் இல்லாத வகையில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. இதற்கு கடும் எதிர்ப்பு [^] எழுந்தது. இதையடுத்து அதில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

தற்போது ஆண்டுக்கு ரூ. 1.60 லட்சம் வரை சம்பளம் வாங்குவோருக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. அதற்கு மேல் ரூ. 5 லட்சம் வரை வாங்குவோருக்கு 10 சதவீத வரி விதிப்பு கடைப்பிடிக்கப்படுகிறது. 5 முதல் 8 லட்சம் வரை பெறுவோருக்கு 20 சதவீதமும், 8 லட்சத்திற்கு மேல் வாங்குவோருக்கு 30 சதவீதமும் வரி விதிக்கப்படுகிறது.

இது தற்போது கீழ்க்கண்டவாறு மாற்றி அமைக்கப்படவுள்ளது.

ரூ.2 lakh - ரூ.5 lakh: 10%
ரூ.5 lakh - ரூ.10 lakh: 20%
ரூ.10 lakh: 30%
மூத்த குடிமகன்களுக்கு ரூ. 2.5 லட்சமாக உயரவுள்ளது.

அதேபோல வீட்டுக் கடன்களுக்கான வட்டிக்கு அதாவது ரூ. 1.5 லட்சம் வரை வரி விலக்கு உண்டு. அது தொடர்ந்து நீடிக்கும். முன்பு அரசு அறிவித்த வரைவு நேரடி வரி விகித வரைவு மசோதாவில் இதை நீக்குவதாக கூறியிருந்தது. ஆனால் பொதுமக்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து தற்போது இது தொடரவுள்ளது.

இதுதொடர்பான நேரடி வரி விதிப்பு மசோதாவுக்கு நேற்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. திங்கள்கிழமை இது ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி [^] கூறுகையில், நிறுவனங்கள் மீதான வரி விதிப்பு 30 சதவீதமாக தொடர்ந்து நீடிக்கும். புதிய வரி விகிப்பு விகிதங்கள் 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரும்.

ஒட்டுமொத்த வரி விதிப்பு விகிதங்களையும் எளிமையாக்குவதும், சலுகைகளை கட்டுப்படுத்துவதுமே இந்த மசோதாவின் முக்கிய நோக்கம்.

புதிய வரி விகிதத் திருத்தத்தில், ஜிபிஎப், பிபிஎப், ஆர்பிஎப் ஆகியவற்றின் மீதான சலுகைகள் தொடர்ந்து நீடிக்கும். அதில் மாற்றம் இல்லை என்றார்.

மருத்துவப் பணி சாராத நிபுணர்களை உருவாக்கும் மருத்துவப் பட்டப்படிப்பு!


மருத்துவத் துறையின் குறிப்பாக மருத்துவமனைகளில் பல்வேறு நிபுண‌ர்களின் தேவை அதிகரித்திருப்பதையொட்டி மியாட் அகாடமி ஆஃப் அலைடு ஹெல்த் சயன்ஸ் மற்றும் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகம் ஆகியவை இணைந்து 'திறன்கள் அடிப்படையிலான' மருத்துவ பி.எஸ்.சி. பட்டப்படிப்புகளை அறிமுகம் செய்துள்ளது.

இது குறித்து மியாட் மருத்துவமனை நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது மருத்துவமனைகளில் பல்வேறு பிரிவுகளில் பல்வேறு அறுவை சிசிச்சைகள், நோய் முன் கணிப்புகள் ஆகியவற்றில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அபரமிதமாக ஏற்பட்டுள்ளது.

இதனை ஒரு அறுவை சிகிச்சையிலோ அல்லது பிற மருத்துவ சிகிச்சையிலோ பயன்படுத்தும் போது அதனை மட்டுமே அறிந்த தொழில்நுட்ப நிபுணர்களின் தேவை அதிகரித்துள்ளது. மேலும் ஒரு குறிப்பிட்ட சிகிச்சையின் போது பல்வேறு உபபிரிவுகளில் தொழில் சார்ந்த நிபுணர்களையே மருத்துவமனைகளும் மருத்துவர்களும் சார்ந்து இருக்க வேண்டியுள்ளது. இதனால் கால தாமதமும் ஏற்படுகிறது.

இது போன்ற துறைகளில் ஒரு குறிப்பிட்ட மருத்துவப் பிரிவுகளில் மட்டுமே பட்டப்படிப்பு படித்தவர்கள் இருந்தால் போதுமானது என்ற யோசனையின் அடிப்படையில் எழுந்ததே இந்த மியாட்-எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலை. கூட்டாண்மை.

உதாரணத்திற்குக் கூறவேண்டுமென்றால் அறுவை சிகிச்சையின் போது நோயாளிகளுக்குக் கொடுக்கப்படும் உணர்வகற்றும் மருந்து. இதில் அறுவை சிகிச்சை முழுதும் அனஸ்தீஷியா நிபுணர்கள் உடனிருப்பது அவசியமாகிறது. இது பல வேளைகளில் கடினமாக உள்ளது.

இப்போது உணர்வகற்றுதல் மருத்துவத்தில் மட்டும் பயிற்சி பெற்ற நிபுணர்களை உருவாக்கினால் அது சௌகரியமானது என்று கருதப்படுகிறது!

"அதேபோல் இதயத்தமனி அறுவை சிகிச்சையில் ஈடுபடும் ஒரு அறுவை நிபுணர் அனாஸ்டோமேசிஸ் -க்காக நாளங்களை பிரித்து வைப்பதில் நேரம் செலவழிக்க வேண்டியதில்லை. மருத்துவ உதவியாளர் போன்றதொரு பயிற்சி பெற்ற மருத்துவம் சாராத நிபுணர்கள் இச்செயல் முறையை மேற்கொள்ளலாம்."

என்று மியாட்-எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலை. கூட்டாண்மை நம்புகிறது.

"இந்த சிறப்புத் தேவைப்பாடுகளை ஈடேற்றும் வகையில் அனுபவம் வாய்ந்த மருத்துவர்களைக் கொண்டு மருத்துவம் சாராத படிப்புகள் மிக குறிப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. 12-ஆம் வகுப்பு கல்வித் தகுதியுடன் சிறப்பான மனப்பாங்கு கொண்ட மாணவர்கள் புதிய தொழில் நுட்பங்களைக் கற்று மருத்துவர்களுக்கு உதவுவதோடு நோய்களைக் குணப்படுத்தவும் உதவலாம்." என்று அந்த செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இப்பட்டப் படிப்புகள் 3 ஆண்டுகள் கால அளவு கொண்டதாகும். முதல் ஆண்டில் மனித உடல் மற்றும் உடல் இயக்கவியல் குறித்த அடிப்படைத் தகவல்கள், உடலிலுள்ள திசுக்கள் உறுப்புகள் நோயிற்கு காட்டும் எதிர்வினை குறித்த கொள்கைகளுடன் காலை நேர பொதுப்பாடங்களாக பயிற்றுவிக்கப்படும்.

மதியம் மாணவர்கள் தேர்ந்தெடுத்த குறிப்பிட்ட பிரிவுகளில் நேரடி அனுபவம் பாடமாக வழங்கப்படும். பொருத்துமானதொரு தேர்வுக்கு பிறகு தமிழ்நாடு டாக்டர். எம்.ஜி.ஆர். பல்கலைக் கழகம் பி.எஸ்.சி. பட்டம் (அலைடு ஹெல்த் சயன்ஸ் என்று பெயரிட்ட) வழங்கும்.

அந்தப் பட்டப்படிப்புகளின் சில உதாரணங்கள் இதோ:

1. பி.எஸ்.சி. ஆக்சிடெண்ட் அண்டு எமர்ஜென்சி கேர் டெக்னாலஜி
2. பி.எஸ்.சி. கார்டியாக் பல்மனரி கேர் டெக்னாலஜி
3. பி.எஸ்.சி. கிரிட்டிகல் கேர் டெக்னாலஜி
4. பி.எஸ்.சி. ஆபரேஷன் தியேட்டர் & அனஸ்தீஷியா டெக்னாலஜி
5. பி.எஸ்.சி. பிசிசியன் அசிஸ்டண்ட்
6. பி.எஸ்.சி. ரேடியாலஜி இமேஜிங் டெக்னாலஜி

கண் பார்வையைத் திருடும் கிளொகோமா!


கண் நரம்புகளைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பாதித்து, இறுதியில் கண் பார்வையை முற்றிலுமாக அழித்துவிடும் கிளொகோமா எனும் வியாதி குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர்.

இந்தியாவில் பார்வைக் கோளாறுகளால் கண் பார்வையைப் பறிக்கும் இரண்டாவது பெரிய அச்சுறுத்தலாக கிளொகோமா உள்ளது என்று கூறும் கண் மருத்துவர்கள், இதனை ஆரம்ப நிலையில் கண்டு பிடித்து சிகிச்சையளித்தால் பார்வையைக் காப்பாற்றிவிடலாம் என்று கூறுகின்றனர்.

ஆனால் தங்கள் பார்வை மங்கி வருவதை பொதுவாக மக்கள் அறிவதில்லை என்கின்றனர் மருத்துவர்கள். கண்ணின் பார்வை நரம்புகளைத் தாக்கும் இந்த நோய் மிக மெதுவாக பரவுவதால், பாதிக்கும் மேற்பட்ட அளவிற்கு பார்வை மங்கும் நிலையிலேயே மருத்துவர்களை நாடுகிறார்கள் என்றும், இதனால் அவர்கள் இறுதிவரை சிகிச்சையிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது என்றும் கூறுகின்றனர்.

சென்னையில் கண் மருத்துவத்தில் சிறந்து விளங்கிவரும் சங்கர நேத்ராலயாவின் மருத்துவர் எல்.விஜயா, கிளொகோமாவை ஆரம்பத்தில் கண்டுபிடித்துவிட்டால் கண் பார்வையை காப்பாற்றிவிடலாம் என்று பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

தங்களுக்கு கிளோகோமா உள்ளது என்பதையே பலரும் அறிவதில்லை, அது நன்கு பரவிய பிறகுதான் அறிந்து கொண்டு மருத்துவத்திற்கு வருகின்றனர் என்று கூறும் மருத்துவர் விஜயா, கிளொகோமாவை ‘மெளனப் பார்வைக கொல்லி’ என்று வர்ணிக்கிறார்.

கிளோகோமாவி்ற்கு கண்ணில் மருந்தை விடுதல், கதிர் சிகிச்சை, அறுவை ஆகியன உள்ளது. ஆனால் இவையாவும் கிளோகோமா பரவாமல் தடுப்பதற்கான சிகிச்சையாக மட்டுமே உள்ளன.

கிளோகோமா நன்கு பரவியவர்கள் குறித்த கால இடைவெளியில் கண் பார்வையை சோதித்துக் கொள்வது, தவறாமல் மருந்துகளை எடுத்துக் கொள்வது மிக அவசியம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கிளோகோமா என்று கூறி, அதற்கு அறுவை சிகிச்சை அவசியம் என்று கூறி பணம் கறக்கும் மருத்துவர்களும் உள்ளனர். என்வே கண் பார்வை சோதனையை நம்பத்தக்க, மிகச் சிறந்த மருத்துவமனைகளில் மட்டும் செய்துக்கொள்ள வேண்டும்.

வியாழன், 26 ஆகஸ்ட், 2010

'பி்ன்னாடி' என்ன இருக்கு?!?


எதை எதைதான் இன்சூர் செய்வது என்ற விவஸ்தையே இல்லாமல் போய் விட்டது நம்மூர் நடிகை [^]களுக்கு. தனது 'பின்புறம்' (பட்டக்ஸ்) மிக அழகாக அம்சமாக இருப்பதாக கருதும் இந்தி [^] நடிகை மினிஷா லம்பா, அதை இன்சூர் செய்யவுள்ளாராம்.

தங்களுக்கு அழகு சேர்க்கும் அழகான வாழைத் தொடை, அழகிய கால்கள், அம்சமான முகம் ஆகியவற்றை இன்சூர் செய்வது நடிகைகளுக்கு வழக்கமாகி விட்டது. ஹாலிவுட்டில் அழகான, எடுப்பான முன்னழகைக் கூட இன்சூர் செய்கிறார்கள்.

இந்த வரிசையில் படு வித்தியாசமாக, தனது பின்புறத்தை இன்சூர் செய்யவுள்ளார் இந்தி நடிகை மினிஷா லம்பா. இவர் மினி டிரஸ்களில் கவர்ச்சிகரமாக வருவதை ஒரு கொள்கையாகவே வைத்திருப்பவர். காஷ்மீரில் பிறந்த அழகு ரோஜா.

'பட்டக்ஸை' பாதுகாப்பாக இன்சூர் செய்வது இது முதல் முறையல்ல. சமீபத்தில் நடிகர் [^] ஜான் ஆப்ரகாம் கூட தனது பின்புறத்தை இன்சூர் செய்தார். அவர் வழியில் இப்போது மினிஷாவும் பின்புறத்தை இன்சூர் செய்யப் போகிறாராம்.

தனது பின்புறம் மிக அழகாக, எடுப்பாக, செக்ஸியாக இருப்பதாக பெருமையுடன் கூறுபவர் மினிஷா. பிரேசில் பெண்களுக்குத்தான் இப்படி எடுப்பாக பின்புறம் இருக்கும். உங்களுக்கும் அதுபோலவே இருக்கே என்று பலரும் பாராட்டிக் கூறுகிறார்களாம். இதைப் பார்த்து புளகாங்கிதமடைந்து போன மினிஷா இப்போது அதை இன்சூர் செய்ய முடிவு செய்துள்ளாராம்.

எனது பின்புறம் எனக்குப் பொக்கிஷம் போல. அதைக் காக்க நான் விரும்புகிறேன். எனவேதான் இன்சூரன்ஸ் எடுக்க முடிவு செய்துள்ளேன் என்கிறார் பெருமிதத்துடன்.

முன்னாடி இன்சூரன்ஸ் செய்யலாம், பின்னாடியுமா, அடி அம்மாடி...!

+1-ல் பெயிலாகிய மாணவனை +2 -விற்கு அனுப்ப ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

சென்னை: பிளஸ் ஒன் படிப்பில் பெயிலான மாணவனை பிளஸ்டூவுக்கு அனுப்ப சென்னை [^] உயர்நீதிமன்றம் [^] [^] உத்தரவிட்டது.

காரைக்காலைச் சேர்ந்த கலைராஜன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது,

எனது மகன் குரு அரவிந்த் காரைக்காலில் உள்ள செயின்ட் மேரீஸ் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஆண்டு +1 படித்தான். தேர்ச்சி பட்டியலில் அவன் பெயர் இல்லை. அவன் தேர்வில் தோல்வி அடைந்ததாக பள்ளி நிர்வாகம் அறிவித்தது.

ஆனால் மற்ற மாணவர்களை +2 விற்கு அனுப்பினர். இதனால் என் மகன் மனம் உடைந்து போனான். அவனுக்கு பள்ளிக்குச் செல்வதில் ஆர்வம் அதிகம் உள்ளது. அவனின் கடந்த ஆண்டு வருகைப் பதிவின் சதவிகிதம் 95 ஆகும். எனவே, கல்வி [^]யில் ஆர்வமுள்ள அவனை +2-விற்கு அனுப்பினால் அவன் தேர்ச்சி பெற நாங்கள் அவனுக்கு ஊக்கம் அளிப்போம். இவ்வாறு அவர் அதில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி தனபாலன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவர் ஒரு மாணவனை தயார் செய்வது என்பது ஒரு நாட்டை தயார் செய்வது போலாகும். ஆகையால், கல்வியில் ஆர்வமுள்ள இந்த மாணவனுக்கு சலுகை அளித்து +2 வகுப்புக்கு இந்த கல்வி ஆண்டிலேயே அனுப்ப வேண்டும் என்று பள்ளி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.

கடந்த 2 மாதங்களுக்கு முன் தான் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களை பெயில் (தோல்வி) ஆக்கக் கூடாது என்று சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

எ‌ய்‌ட்‌ஸ் பா‌தி‌ப்பு மு‌க்‌கிய நகர‌ங்க‌ளி‌ல் குறை‌ந்து‌ள்ளது!

2006 ஆ‌ம் ஆ‌ண்டு 0.36 ‌விழு‌க்காடாக இரு‌ந்த எ‌ச்.ஐ.‌வி. ‌கிரு‌மி பா‌தி‌ப்பு த‌ற்போது க‌ணிசமாக குறை‌ந்து‌ள்ளதாகவு‌ம், மேலு‌ம் 6 மு‌க்‌கிய நகர‌ங்க‌ளி‌ல் எ‌ய்‌ட்‌ஸ் நோ‌ய் பா‌தி‌ப்பு குறை‌ந்து‌ள்ளதாகவு‌ம் ம‌த்‌திய சுகாதார‌த் துறை அமை‌ச்ச‌ர் குலா‌ம் ந‌பி ஆசா‌த் கூ‌றியு‌ள்ளா‌ர்.

தேசிய எய்ட்ஸ் பாதுகாப்புத் திட்டத்தின் மூன்றாம் கட்ட செயல்பாடு குறித்து விவாதிக்க மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத் துறையின் நாடாளுமன்ற ஆலோசனைக் குழு கூட்டம் நே‌ற்று நடந்தது. இதில் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சர் குலாம் நபி ஆசாத் கலந்து பேசியதாவது :

எய்ட்ஸ் நோய்க்கு ஆளாகக்கூடிய மக்களை இலக்காகக் கொண்டு செயல்படுத்தப்பட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டங்கள் பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையே வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது. இதன் மூலம் தென் மாநிலங்களில் எச்ஐவி-ன் தாக்குதல் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இடம் பெயர்பவர்களும், லாரி ஓட்டுனர்களும் எய்ட்ஸ் பாதிப்புக்கு ஆளாகாமல் இருக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை வெற்றியடைந்துள்ளது. மொத்தமுள்ள 1.44 கோடி பேரில் தாய்மார்களாக்கூடிய 61 லட்சம் பேருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. இது ஒருங்கிணைந்த ஆலோசனை, ஆய்வு மையங்கள் மூலம் நாடெங்கிலும் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொது மக்களிடையே எய்ட்ஸ் விழிப்புணர்வை அதிகரிக்கச் செய்யும் நோக்கத்தில் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம் ரெட் ரிப்பன் எக்ஸ்பிரஸ் என்ற விழிப்புணர்வு ரயிலை கடந்த டிசம்பர் 2009 அன்று அறிமுகப்படுத்தியது. உலக அளவில் மிகப் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்திய முயற்சி இதுவாகும். தற்போது இந்த ரயில் மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், ஹரியானா மற்றும் ஜம்மு-காஷ்மீர் வழியாக டெல்லி வந்தடைகிறது.

எச்ஐவி-யால் பாதிக்கப்பட்டவர்களுக்காக கடந்த ஓராண்டில் 64 சிகிச்சை மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 89,000 புதிய நோயாளிகள் இலவசமாக எய்ட்ஸ் சிகிச்சை பெற்று வருகின்றனர். 21 சமூக பாதுகாப்பு மையங்களும் மற்றும் இதனுடன் இணைந்த நவீன எய்ட்ஸ் சிகிச்சை முறை வழங்கும் மையங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்குத் தேவையான மருந்துகள் இந்திய நிறுவனங்களிடமிருந்து முதல் கட்டமாக ஆண்டொன்றுக்கு 800 அமெரிக்க டாலர் மதிப்பில் பெறப்பட்டுள்ளது. தற்போது மாதம் ஒன்றுக்கு 10 அமெரிக்க டாலர் மதிப்பிலான மருந்துகள் வாங்கப்படுகின்றன.

முன்னதாக 2006ஆம் ஆண்டு 0.36 சதவீதமாக இருந்த எச்ஐவி கிருமி தாக்குதல் தற்போது கணிசமாக குறைந்துள்ளது. 6 முக்கிய நகரங்களில் எய்ட்ஸ் கிருமி பாதிப்பு குறைந்து வந்துள்ளது தெரிய வந்துள்ளது எ‌‌ன்று அமைச்சர் தெரிவித்து‌ள்ளா‌ர்.

19 மாதங்களில் 170 இராணுவ வீரர்கள் தற்கொலை!


கடந்த ஒன்றரை ஆண்டில் பாதுகாப்பு படை வீரர்கள் 170 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இந்தப் போக்தைத் தடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி தெரிவித்தார்.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து ஏ.கே.அந்தோணி கூறியதாவது :

2009ஆம் ஆண்டில் பாதுகாப்பு படை வீரர்கள் 111 பேரும் இந்த ஆண்டில் கடந்த ஜூலை மாதம் வரை 59 வீரர்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்தப் போக்கைத் தடுக்க பல்வேறு முயற்சிகளை மத்திய அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது.

மன அழுத்தம், டென்ஷனில் இருந்து விடுபடுவது குறித்து வீரர்களுக்கு தகுதி வாய்ந்த மனநல நிபுணர்கள், மருத்துவர்கள் ஆலோசனை வழங்குகின்றனர். கலந்தாய்வுக் கூட்டங்கள், கருத்தரங்கு, விவாத நிகழ்ச்சிகள் ஆகியவை மூலம் வீரர்களின் குறைகளை உயரதிகாரிகள் கண்டறிந்து அவற்றை தீர்க்கின்றனர்.

விடுமுறை எடுப்பதில் வீரர்களுக்கு கெடுபிடி விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. விடுமுறை முடிந்து பணிக்கு‌த் திரும்புகிறவர்களை ரெஜிமெ‌ண்ட் மருத்துவ அதிகாரி சோதனை செய்து, விசாரணை நடத்துவார். அவர்களிடம் மன அழுத்தம், விர‌க்திக்கான அறிகுறிகள் தெரிந்தால் மனதை தெளிவுபடுத்தும் கூர்நோக்கு பயிற்சிக்கு அனுப்பப்படுகின்றனர்.

வீரர்களின் மனநலனை அதிகரிக்கும் வகையில் மதத் தலைவர்களின் போதனை வகுப்புகள் நடத்தப்படுகின்றன. யோகா, பிராணாயாமம் (சுவாச பயிற்சி) ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. வீரர்களுக்கு தரமான உணவு, உடை வழங்கப்படுகிறது. மணமான வீரர்கள் குடும்பத்துடன் தங்குவதற்கும் இடவசதிகள் அளிக்கப்படுகின்றன எ‌ன்று ‌அ‌ந்தோ‌ணி கூ‌றியு‌‌ள்ளா‌ர்.

அன்னை தெரசா - நூற்றாண்டு விழா நினைவுகள்!


அன்புக்கும், கருணைக்கும் ஓர் மகத்தான கட்டமைப்பை உருவாக்கி அதை உலகம் எங்கிலும் தழைத்துப் பரவச் செய்து, போற்றுதலுக்கும் வழிபாட்டுக்கும் உரிய தெய்வத் திருஉருவமாக விளங்கும் அன்னை தெரசாவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை 2010 ஆகஸ்ட் 26 ஆம் தேதி தொடங்கி இந்திய நாடும் அதன் மக்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாட இருக்கிறார்கள்.

கடந்த 2003இல் அன்னை தெரசா ஆசிர்வதிக்கப்பட்டவராக போப்பாண்டவரால் அறிவிக்கப்பட்டார். ஆசிவதிக்கப்படுதல் என்பது, "கத்தோலிக்கத் திருச்சபையின் உறுப்பினர்களில் ஒருவர் பாவமன்னிப்பு கோரியவர் அல்லது வீர மரணம் அடைந்த தியாகி என்ற முறையில் புனித வாழ்க்கைக்கு, ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கு, அதாவது சொர்க்கத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்குத் தகுதியானவர் என கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர் என்ற முறையில் போப்பாண்டவரால் பிரகடனம்" செய்யப்படுவதாகும்.

அன்னை தெரசாவின் வாழ்க்கை 'கடவுளின் சகோதரர்களில் கடைக்கோடியில் இருப்பவர்களுக்கு' சேவை செய்வதற்கு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கை என மதிப்பிடுவதற்கு உரியதாகும். பைபிளின் 'கடைசித் தீர்ப்பில்' விவரிக்கப்பட்டுள்ள ஏழைகளுக்கும், நேசிக்கப்படாதவர்களுக்கும் சேவை செய்தல் என்ற கட்டளைக்குக் கட்டுப்பட்டு மெய்யாகவே வாழ்ந்தவர் என்ற முறையில் 'சொர்க்கத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு' அவர் தகுதியானவர்:

"பிறகு அவரின் வலது கைப்பக்கத்தில் இருந்தவர்களை நோக்கி அரசர் கூறுவார், என் தந்தையால் ஆசிர்வதிக்கப்பட்டவர்களே, வாருங்கள், உலகின் அடித்தளத்தில் இருந்து உங்களுக்காக உருவாக்கப்பட்ட அரசாட்சியை ஏற்றுக் கொள்ளுங்கள்; நான் பசியாக இருநூதேன் நீங்கள் எனக்கு சாப்பிடுவதற்குக் கொடுத்தீர்கள்; நான் தாகத்துடன் இருந்தேன் நீங்கள் எனக்குக் குடிப்பதற்குக் கொடுத்தீர்கள்; புதியவனான என்னை உள்ளே அழைத்துச் சென்றீர்கள்; நிர்வாணமாக இருந்த எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்ற என்னை வந்து கவனித்தீர்கள்; சிறையில் இருந்தபோது என்னை வந்து பார்த்தீர்கள்.

அதைத் தொடர்ந்து அவருக்குப் பதில் அளிக்கும் வகையில் நியாயவான் கூறுவார் 'எப்போது நாங்கள் உங்களை பசியுடன் பார்த்தோம், உங்களுக்கு உணவளித்தோம்; அல்லது எப்போது நாங்கள் உங்களை தாகத்துடன் பார்த்து உங்களுக்கு குடிப்பதற்குக் கொடுத்தோம்? எப்போது நாங்கள் உங்களைப் புதியவராகப் பார்த்து உள்ளே அழைத்துச் சென்றோம் அல்லது நிர்வாணமாக இருந்த உங்களுக்கு ஆடை அணிவித்தோம்? அல்லது எப்போது நாங்கள் உங்களை நோயாளியாக அல்லது சிறையில் பார்த்தோம்?

இதற்குப் பதில் அளித்து அரசர் சொல்லுவார், ஆமென், என் சகோதரர்களில் கடைக்கோடியில் இருப்பவர்களில் ஒருவருக்கு நீங்கள் இதைச் செய்கின்ற காலம் வரையிலும், இதை நீங்கள் எனக்குச் செய்வதர்கள் ஆவீர்கள்."

முன்னாள் யுகோஸ்லேவியாவில் உள்ள மெசடோனியாவைச் சேர்ந்த ஸ்கோப்ஜே நகரில், 1910 ஆகஸ்ட் 26இல் ஆக்னஸ் கான்ஸா பொஜாக்ஸியு ஆகப் பிறந்த அன்னை தெரசா எப்போதுமே சுதந்திரமானவராகவும், கீழ்ப்படிந்து நடப்பவராகவும், முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட சில கருத்துக்களும் எதிர்பார்ப்புகளுக்கும் அறைகூவல் விடுப்பவராகவும் இருந்தார். எதிர்பார்த்ததற்கு முரணாகத் தோன்றினாலும் கூட மற்றவர்கள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்பதற்கு விருப்பம் உடையவராகவும், அவரது மனசாட்சியைப் பின்பற்றி நடப்பவராகவும் இருந்தார் என்பதற்கு அவரது சொந்த வாழ்க்கைக் கதையில் பல்வேறு காட்சிகள் அடங்கியுள்ளன.

எதிர்கால அன்னை தெரசா, 1928இல் அவரின் குடும்பத்தையும் அவருக்குத் தெரிந்த வாழ்க்கையையும் விட்டு விலகி வெகு தொலைவில் இருந்த அயர்லாந்தில் அவரின் சமய வாழ்க்கையைத் தொடங்கினார். இந்த வாழ்க்கைக்கு வந்த பின் அவரது தாயாரை அவர் மீண்டும் ஒருபோதும் சந்திக்கவே இல்லை. சிலருக்கு மட்டுமே புரிந்த மொழியில் அவர் பேசினார். அந்தக் காலக்கட்டத்தில் அவர் "மிகவும் சிறியவராக, அமைதியும், கூச்சமும் நிறைந்வராக இருந்தார்" என்று சகோதரி ஒருவர் நினைவு கூர்ந்திருக்கிறார். அந்த சமயப் பிரிவின் மற்றொரு உறுப்பினர் அவர் 'சாதாரணமான' பெண் ஆக இருந்தார் என்று குறிப்பிட்டிருக்கிறார். எப்படி இருந்தபோதிலும், அசைக்க முடியாத உறுதி, சுய கட்டுப்பாடு என்ற ஒரு தனிச்சிறப்பான பண்பு அவரின் வாழ்க்கையில் எப்போதுமே ஓர் அங்கமாக இருந்து வந்தது. லோரெட்டோ சகோதரிகள் அமைப்புடனான அவரது இணைப்புக்க அலு வலுவூட்டியது. அவரது வாழ்க்கை முழுவதிலும் அந்தப் பண்பு நிறைந்திருக்கிறது.

ஓராண்டு கழித்து, 1929இல் டார்ஜிலிங்கில் உள்ள லோரெட்டோ சகோதரிகள் அமைப்பில் பயிற்சி பெறுவதற்காக ஆக்னஸ் கான்ஸா அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு முதல் உறுதிமொழி ஏற்ற பிறகு, கொல்கத்தாவில் உள்ள புனித மேரி பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு அவர் அனுப்பப்பட்டார். செல்வந்தர்களின் புதல்விகளுக்கான பாதுகாக்கப்பட்ட அந்த பள்ளிச் சூழலில்தான், "ஏழைகளிலும் பரம ஏழைகளுக்கு" சேவை செய்யும் தெரசாவின் புதிய வாழ்க்கைத் தொழில் உருப்பெற்று வளர்ந்தது. 1946இல் ஓய்வெடுப்பதற்காக டார்ஜிலிங் சென்றபோது தெரசா கேட்ட "இரண்டாவது அழைப்பின்" தெளிவான செய்தியாக அது இருந்தது.

அவருக்கு அது கடவுள் காட்டிய திசைவழி என்பதில் "ஒருபோதும் சந்தேகம் கொள்ளாத" தெரசா அந்த வழியைப் பின்பற்றுவதற்காக அடுத்த இரண்டு ஆண்டுகள் எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்தினார். "தெருக்களில் இறங்கிச் செல்வதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்த லொரேட்டோ சகோதரிகள் அமைப்பை விட்டு வெளியேறுவதற்கும் முடிவு செய்தேன். எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஏசு சிறித்துவைப் பின்பற்றி குடிசைப் பகுதிகளுக்குச் சென்று ஏழைகளிலும் பரம ஏழைகள் மத்தியில் அவருக்கு சேவை செய்யுமாறு எனக்கு விடுக்கப்பட்ட அழைப்பை நான் கேட்டேன்" என்று தெரசா குறிப்பிட்டிருக்கிறார்.

புதன், 18 ஆகஸ்ட், 2010

மலேசிய இந்திய தொழிலதிபர்களுக்கு ஒரு லட்சம் பணியாளர் தேவை!


கோலாலம்பூர்: மலேசியாவில் உள்ள இந்திய தொழிலதிபர்களுக்கு சுமார் ஒரு லட்சம் வெளிநாட்டு பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள் என்று மலேசிய - இந்திய தொழில் வர்த்தக சபை தலைவர் கே.கே.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கே.கே.ஈஸ்வரன் மலேசிய பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

மலேசியாவில் இந்தியர்களால் நடத்தப்படும் உணவகங்கள், கட்டுமான நிறுவனங்கள், நகை ஆபரண மையங்கள், மினி-மார்க்கெட், பல சரக்கு கடைகள் போன்றவற்றுக்கு உள்ளூர் ஆட்களை நியமிக்க இயலவில்லை.

மேலும் லாண்டரி, சிகையலங்கார மையங்கள், ஜவுளி, தையலகங்கள், மலர் அலங்கார நிலையங்கள் போன்றவற்றுக்கும் ஏராளமான பணியாளர்கள் தேவைப்படுகின்றனர்.

இவற்றில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு எல்லாம் வெளிநாட்டு ஆட்களை நியமிக்க வேண்டிய நிலைக்கு தொழிலதிபர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

உள்ளூரிலேயே ஆட்கள் நியமனத்தை உடனடியாக செய்ய முடியாததால், ஆள் பற்றாக்குறை காரணமாக பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட தொழில் துறையில் தங்களின் தேவைகள் மற்றும் நுணுக்கங்களை இயல்பாகவே அறிந்துள்ள இந்தியர்கள் இருந்தால், கூடுதல் பலன் அளிக்கும் என இங்குள்ள இந்திய தொழிலதிபர்கள் எண்ணுகின்றனர்.

மலேசியாவில் உள்ள இந்திய உணவகத்திலோ, கைவினைப் பொருட் கூடத்திலோ இந்தியர்கள் பணியாற்ற வேண்டியது தானே இயற்கை? இதுபோல பல்வேறு பிரத்தியேக குறைபாடுகளை இந்திய தொழிலதிபர்கள் எதிர் கொண்டுள்ளனர்' என்றார்.

இந்திய தொழிலதிபர்களுக்காக தயாராகும் 157 விமானங்கள்!


டெல்லி: இந்தியா [^] ஏழை நாடு என்று யாராவது சொன்னால் நிச்சயம் அவர்களை அடிக்க வந்து விடுவார்கள் வெளிநாடுகளில். காரணம், அந்த அளவுக்கு பணத்தில் புரள ஆரம்பித்துள்ளது இந்தியா.

இந்தியாவைச் சேர்ந்த பெரும் கோடீஸ்வர தொழிலதிபர்கள் 157 ஜெட் விமானங்களை வாங்க ஆர்டர் கொடுத்துள்ளனராம். எல்லாம் பெரும் பெரும் பட்ஜெட்டிலான அதி நவீன விமானங்கள்.

முக்கிய கூட்டங்கள், வர்த்தக பேரங்கள், திருமணம் [^] உள்ளிட்ட நிகழ்ச்சிகள் என வெளிநாடுகளுக்கு தினசரி பறக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் நமது நாட்டின் முன்னணி தொழிலதிபர்கள். இதற்கெல்லாம் ஹெலிகாப்டர் சரிப்படாது, அதெல்லாம் சைக்கிள் மாதிரி ஆகி விட்டது நமது தொழிலிதபர்களுக்கு. இதனால் அதி நவீன ஜெட் விமானங்களை வாங்கிப் போட்டு விமான நிலையங்களில் பார்க் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

இப்படியாக கிட்டத்தட்ட 1 பில்லியன் டாலர் மதிப்பிலான 157 ஜெட் விமானங்களுக்கு இந்தியத் தொழிலதிபர்கள் ஆர்டர் கொடுத்துள்ளனராம். அடுத்த ஆண்டுக்குள் இவை டெலிவரி செய்யப்படவுள்ளதாம். அனைத்துமே அட்டகாசமான, அதி நவீன விமானங்களாம்.

இந்த விமானங்கள் டெலிவரி செய்யப்பட்டு விட்டால், உலகிலேயே அதிக விமானங்களை சொந்தமாக வைத்திருக்கும் தொழிலதிபர்கள் நிறைந்த நாடு வரிசையில் இந்தியாவுக்கு 4வது இடம் கிடைக்குமாம்.

தனியார் விமானங்கள் (தொழிலதிபர்கள், நிறுவனங்களுக்கு சொந்தமானது) அதிகம் வைத்திருக்கும் நாடுகள் வரிசையில் தற்போது 18வது இடத்தில் உள்ளது இந்தியா. இந்தியாவில் பெரும் பணக்கார நிறுவனங்களுக்குச் சொந்தமாக மட்டும் 111 குட்டி விமானங்கள் உள்ளதாம். இது சீனாவை விட அதிகம் என்கிறார்கல்.

அம்பானி சகோதரர்கள்தான் விமானங்களில் பெருமளவில் பறப்பவர்களாம். எங்கு போனாலும் விமானங்களில்தான் போகிறார்களாம். இரு சகோதரர்களும் தற்போது ஒரே நிறுவனத்தைச் சேர்ந்த இரு ஜெட் விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்துள்ளனராம். அதேபோல டாடா, ரூயா, டிவிஎஸ், கேபி சிங், கெளதம் தபார், ஜின்டால் குடும்பத்தினர், சைரஸ் பூனாவாலா உள்ளிட்டோரும் புதிய ஜெட் வி்மானங்களுக்கு ஆர்டர் கொடுத்துள்ளனராம்.

அனைவருமே புத்தம் புதிய விமானங்களை வாங்குகிறார்கள். பழைய விமானங்களை இவர்கள் விரும்பவில்லை. பல்வேறு வசதிகளுடன் கூடியதாக ஜெட் விமானங்கள் இருக்குமாறும் இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனராம்.

திடீரென அதிக அளவில் நமது தொழிலதிபர்கள் விமானங்கள் வாங்கிக் குவிக்க வேண்டிய அவசியம் என்ன?.

இதுகுறித்து பால்கன் பிசினஸ் ஜெட்களை தயாரிக்கும் டஸ்ஸால்ட் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் இந்தியப் பிரதிநிதி போஸ்னியா ராவ் கூறுகையில், இந்திய நிறுவனங்கள் முன்பு போல இல்லை. வெளிநாடுகளிலும் அவை பெரிய அளவில் வியாபித்து வருகின்றன. வெளிநாட்டு நிறுவனங்களை இந்தியர்கள் [^] வாங்குவது அதிகரித்து விட்டது. இதனால் வெளிநாடுகளுக்கு அடிக்கடி போக வேண்டியுள்ளது. சொந்த விமானத்தில் போவதையே அவர்கள் அதிகம் விரும்புகிறார்கள். இதனால்தான் விமானங்களை வாங்கும் மோகம் அதிகரித்துள்ளது என்கிறார்.

மேலும், ஒரே நேரத்தில் பலரை உடன் அழைத்துச் செல்ல சொந்த விமானம் வைத்திருந்தால்தான் சவுகரியம் என்பதும் கூடுதல் காரணம்.

சென்னைக்குப் பக்கத்தில் ஒரு 40 கிலோமீட்டர் தூரத்திற்குள், அரை கிரவுண்டு இடம், சகாய விலையில் கிடைத்தால் சவுகரியமாக இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு மத்தியில் இந்த விமானங்கள் விரைவில் 'டர் புர்'ரென்று டபாய்க்கப் போகிறது, வேடிக்கை பார்க்கலாம், வேறென்ன செய்ய முடியும் நம்மால்....!

திங்கள், 16 ஆகஸ்ட், 2010

காதலர்கள் கல்லால் அடித்துக் கொலை; தாலிபான்கள் அட்டூழியம் தொடர்கிறது!


வடக்கு ஆப்கானில் காதலர்கள் இருவரை தாலிபான்கள் கல்லால் அடித்துக் கொன்றனர்.

காதலர்களின் பெற்றோர் இஸ்லாமிய பூசாரிகளிடம் புகார் கொடுக்க இருவரையும் கைது செய்த தாலிபான்கள் இருவரையும் பொது இடத்தில் வைத்து கல்லால் அடித்துக் கொன்றனர்.

தஷ்டே ஆர்ச்சி என்ற கடைவீதியில் இருவரையும் கல்லால் அடித்துக் கொன்றதாக குண்டூஸ் மாகாண ஆளூநர் மொகமட் ஓமர் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் இஸ்லாமிய மதக் குருமார்கள் கண்டிப்பான இஸ்லாமிய மத விதிகளைக் கடைபிடிக்காதவர்களுக்கு மரண தண்டனை விதிக்கவேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்தனர்.

அதன் பிறகு நடக்கும் இரண்டாவது கொலைச் சம்பவமாகும் இது.

காதலர்கள் இருவருக்கும் பெற்றோர்கள் வேறு இடங்களில் வரன் பார்த்து வைத்திருப்பதாக அவரகள் புகார் கொடுத்ததையடுத்து இந்தக்கொடூரத்தை அரங்கேற்றியுள்ளனர் தாலிபான் இஸ்லாமிய அடிப்படைவாதிகள்.

1996-2001ஆம் ஆண்டுகளில் ஆப்கானில் ஆட்சியிலிருந்த போதே தாலிபான்கள் மதத்தின் பெயரால் இது போன்ற கொடூரமான கொலைகளை தண்டனை என்ற பெயரில் நிறைவேற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

92 வயதில் உடல் தானம் செய்ய கடிதம் அளித்த நாகர்கோவில் பெரியவர்!


நாகர்கோவில்: 92 வயதாகும் குமரி மாவட்டம் குன்னத்தூரைச் சேர்ந்த பெரியவர் குட்டி நாடார் தனது உடலை தானம் செய்வதாக நாகர்கோவில் அரசு [^] மருத்துவக் கல்லூரிக்குச் சென்று கடிதம் அளித்து அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.

மார்த்தாண்டம் அருகே உள்ள ஊர் குன்னத்தூர். இந்த ஊரைச் சேர்ந்தவர் குட்டி நாடார். 92 வயதான இவர் ஒரு பத்திர எழுத்தர் ஆவார். இவருக்கு ஒரே ஒரு மகள் உள்ளார்.

நாடு 64வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த நேரத்தில், நாட்டுக்காக ஏதாவது செய்ய விரும்பினார் குட்டி நாடார். இதையடுத்து தனது உடலை தானமாக அளிக்க முடிவு செய்தார். இதைத் தொடர்ந்து நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரிக்குச் சென்ற அவர் அங்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் [^] மோகன் [^] ராமை சந்தித்து தனது உடலை தானமாக அளிக்க முன்வருவதாக தெரிவித்தார். இதுதொடர்பான ஒப்புதல் கடிதத்தையும் முதல்வரிடம் அவர் அளித்து விட்டுச் சென்றார்.

92 வயதில் உடலைத் தானமாக வழங்குவதாக மருத்துவக் கல்லூரிக்கு நேரில் வந்து ஒப்புதல் கடிதம் அளித்த அந்தப் பெரியவரை அனைவரும் வியப்புடன் பார்த்தனர்.

உலகின் பேஷன் தலைநகரம் நியூ யார்க்: மும்பை, டெல்லிக்குப் பின்னடைவு!


லாஸ் ஏஞ்சல்ஸ்: 2010-ம் ஆண்டிற்கான உலக பேஷன் தலைநகரம் என்ற பட்டத்தை மறுபடியும் பெற்றுள்ளது நியூ யார்க் நகரம். இதற்கான கணக்கெடுப்பில் மும்பை [^]யும், டெல்லியும் முதல் 20 இடங்களில் கூட இல்லை.

குலோபல் லாங்குவேஜ் மானிடர்சின் வருடாந்திர கணக்கெடுப்பில் மும்பை 28-வது இடத்தையும், டெல்லி 30-வது இடத்தையும் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு மும்பை 16-வது இடத்திலும், டெல்லி 17-வது இடத்திலும் இருந்தது. கடந்த 2008-ம் ஆண்டு மும்பையும், டெல்லியும் 22, 24 ஆகிய இடங்களில் இருந்தது.

கடந்த ஆண்டு கணக்கெடுப்பில் தொடர்ந்து 5 வருடங்களாக முதல் இடத்தில் இருந்த நியூ யார்க்கை பின்னுக்கு தள்ளியது மிலன். ஆனால் இந்த ஆண்டு மிலனுக்கு கிடைத்தது 6-வது இடம் தான்.

நியூ யார்க்கை தொடர்ந்து ஹாங்காங், லண்டன், பாரிஸ், லாஸ் ஏஞ்சல்ஸ், மிலன், சிட்னி, மயாமி, பார்சிலோனா மற்றும் மாட்ரிட் உள்ளது.

ரூபாய் குறியீட்டுடன் கூடிய கீபோர்ட்-வெளியிட்டது டிவிஎஸ்!


சென்னை புதிய ரூபாய் குறியீட்டுடன் கூடிய கம்ப்யூட்டர் கீபோர்டை வெளியிட்டு புதிய சாதனை படைத்துள்ளது டிவிஎஸ் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம்.

சமீபத்தில்தான் இந்த புதிய ரூபாய் குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டது. இதையடுத்து ரூபாய் குறியீட்டுடன் கூடிய கீபோர்டை அறிமுகப்படுத்தியுள்ள முதல் நிறுவனம் டிவிஎஸ்தான்.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

டிவிஎஸ் கோல்ட் பாரத் கீபோர்ட் (சுருக்கமாக டிவிஎஸ் - இ) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கீபோர்டின் உதவி கொண்டு எளிதாக புதிய ரூபாய் குறியீடை எளிதாக இடம்பெறச் செய்யலாம்.

490மிமீ நீளம், 180மிமீ அகலம் மற்றும் 20மிமீ உயரம் கொண்ட இந்த புதிய கீபோர்டு, யுஎஸ்பி மற்றும் பிஎஸ்2 சப்போர்டை பெறும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் மற்றும் லினக்ஸ் ஆப்ரேடிங் சிஸ்டங்களில் இந்த புதிய கீபோர்டு தங்குதடையின்றி இயங்கும்.

இத்தகைய சிறப்பம்சங்களைக் கொண்ட டிவிஎஸ் - இ கீபோர்டின் விலை ரூ. 1,495 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இ‌தன்மூலம், புதிய ரூபாய் குறியீடு கொண்டுள்ள கீபோர்டை வடிவமைத்த முதல் மற்றும் இந்தி [^]யாவின் ஒரே நிறுவனம் என்ற பெருமையை டிவிஎஸ் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் பெறுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கீபோர்டின் பிற சிறப்பம்சங்கள்:

- நீண்ட காலத்திற்கு உழைக்கும் வகையிலான பட்டன்கள். அதாவது 5 கோடி கீஸ்டிரோக்குகள் வரை தாக்குப் பிடிக்கக் கூடியவை.

- டிவிஎஸ் கோல்ட் பைலிங்குவல் கீபோர்டுகள் இந்திய மொழிகளான தமிழ் [^], தெலுங்கு [^], இந்தி, மலையாளம் [^], கன்னடம், குஜராத்தி, அஸ்ஸாமிஸ், மராத்தி, பெங்காலி உள்ளிட்ட மொழிகளையும் சப்போர்ட் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அப்துல் கலாமுக்கு கார்டு அனுப்பி வாழ்த்து தெரிவித்த 1200 மாணவர்கள்!


கல்பெட்டா (கேரளா): சுதந்திர தினத்தையொட்டி முன்னாள் குடியரசுத் தலைவர் [^] டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமுக்கு, கேரளாவைச் சேர்ந்த ஒரு பள்ளிக்கூட மாணவ மாணவியர் தபால் கார்டு மூலம் வாழ்த்து தெரிவித்து அசத்தியுள்ளனர்.

மொத்தம் 1200 மாணவ, மாணவியரும் தனித் தனியாக போஸ்ட் கார்ட் மூலம் வாழ்த்துக்களைத் தெரிவித்து சாதனை படைத்துள்ளனர்.

இளம் வயதினர் மனங்களில் சுதந்திர உணர்வை ஊக்குவிக்கும் வகையில் இவ்வாறு செய்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த தபால் கார்டு மழையைப் பார்த்து வியந்து போன கலாம், பள்ளிக்கூடத் தலைமை ஆசிரியைக்கு ஒரு பதில் கடிதம் அனுப்பி வைத்துள்ளார். அதில், அடுத்த முறை கேரளாவுக்கு வரும்போது கண்டிப்பாக உங்களது பள்ளிக்கு வராமல் போக மாட்டேன் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளாராம்.

சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடம் கேரள மாநிலம் கல்பெட்டா அருகே உள்ள முட்டில் என்ற இடத்தில் உள்ளது. அதன் பெயர் முஸ்லீம் ஆதரவற்றோர் மேல் ஆரம்பப் பள்ளி என்பதாகும். அதன் தலைமை ஆசிரியை வி.ஜே. ரோஸா இதுகுறித்துக் கூறுகையில், ஒவ்வொரு மாணவ, மாணவியும் ஒவ்வொரு விதத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர்.

சிலர் கவிதை [^] வடித்திருந்தனர். சிலர் படம் [^] வரைந்திருந்தனர். சிலர் வெறுமனே பெஸ்ட் விஷஸ் மற்றும் சுதந்திர தின வாழ்த்துகள் என எழுதியிருந்தனர்.

நாட்டு மக்கள் [^] மனதில் குறிப்பாக இளைஞர்கள் மனில் சுதந்திர உணர்வும், நாட்டுப்பற்றும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே இந்த வித்தியாசமான ஐடியாவை அமல்படுத்தினோம். நாட்டுப்பற்று, இளைஞர்கள் என்று வரும்போது முதலில் நம் மனதில் தோன்றுவது அப்துல் கலாம்தான். மேலும் பள்ளிக்குழந்தைகளின் மனம் கவர்ந்த நாயகனும் கூட. எனவேதான் அவருக்கு வாழ்த்து அட்டைகளை அனுப்ப முடிவு செய்தோம் என்றார் புன்னகையுடன்.

சுதந்திர தினத்திற்கு சில நாட்களுக்கு முன்பே இந்த அட்டைகளை மூட்டையாக கட்டிச் சென்று தபால் அலுவலகத்தில் கொடுத்து போஸ்ட் செய்தனராம்.

முன்கூட்டியே கொடுத்தது நல்லதுதான், இல்லாவிட்டால் அடுத்த சுதந்திர தினத்திற்குத்தான் அது கலாமை சென்றடைந்திருக்கும். நம்ம ஊர் தபால் துறையின் வேகம் சில நேரங்களில் அப்படிதான் உள்ளது.

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

பான்டீஸ் விளம்பரத்தில் நடிக்கும் மந்திரா பேடி!


டிவி நடிகை, சினிமா [^] நடிகை, டிவி தொகுப்பாளினி என பல அவதாரம் எடுத்துள்ள மந்திரா பேடி முதல் முறையாக பான்டீஸ் விளம்பரத்தில் நடிக்கவுள்ளார்.

சாந்தி டிவி தொடர் மூலம் நடிகையானவர் மந்திரா பேடி. அந்தத் தொடர் மந்திராவுக்கு பெரும் பெயரை தேடித் தந்தது. இதையடுத்து டிவி நிகழ்ச்சிகளை நடத்தும் ஹோஸ்ட் ஆக மாறினார். பின்னர் சினிமாவிலும் நடித்தார். தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே படத்தில் அவர் நடித்த சின்ன கேரக்டர் பெரிதாக பேசப்பட்டது.

பி்ன்னர் கிரிக்கெட் [^] போட்டிகளை தொகுத்து அளிக்கும் பிரசன்டராக அவதாரம் எடுத்தார். இந்த நிலையில் தற்போது பான்டீஸ் விளம்பரம் ஒன்றில் நடிக்கிறார் மந்திரா பேடி. பாடிகேர் நிறுவன தயாரிப்பான பான்டீஸுக்காக இந்த நடிப்பு அவதாரம்.

இதுகுறித்து மந்திரா வெளியிட்டுள்ள அறிக்கையில், இப்போதெல்லாம் பெண்கள் [^] மிகவும் விவரமாகவும், தெளிவாகவும் உள்ளனர். நல்ல பிரான்ட் உள்ளாடைகளைத்தான் விரும்புகிறார்கள். தேர்வு செய்வதிலும் கில்லாடியாக உள்ளனர்.

இந்தியாவில் எத்தனையோ பான்டீஸ்கள் இருந்தாலும், பாடிகேர் சிறந்த ஒரு தயாரிப்பாக உள்ளது. பெண்மைத்தனம் நிரம்பிய பான்டீஸ் இது. வேடிக்கையாகவும் உள்ளது.

இதை நானே அனுபவித்துப் பார்த்த பின்னரே நடிக்க ஒப்புக் கொண்டேன். பெண்களுக்கு மிகவும் சவுகரியமாக, வசதியாக இது உள்ளது. நல்ல ஸ்டைலாகவும் உள்ளது என்றார் மந்திரா.

1992ம் ஆண்டு முதல் இந்த பாடிகேர் உள்ளாடைகள் வெளியாகி வருகின்றன. ஐரோப்பிய மாடல் உள்ளாடை இவை. பாடிகேர் பிரான்ட் பான்டீஸ் விளம்பரத்தில் நடிக்கப் போகும் முதல் பிரபலம் மந்திரா பேடிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

டவ் நிறுவனத்தை மூடக் கோரி மகஇகவினர் போராட்டம் 750 பேர் கைது!


சென்னை : போபால் விஷ வாயு படுகொலைகளுக்குக் காரணமான யூனியன் கார்பைடு நிறுவனத்தை வாங்கியுள்ள டவ் நிறுவனத்தை மூடக் கோரி சென்னை [^]யில் மக்கள் [^] கலை இலக்கியக் கழகத்தினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதையடுத்து 750 பேர் கைது செய்யபப்பட்டனர்.

கிண்டியில் இந்த டவ் நிறுவனம் உள்ளது. அந்த நிறுவனத்திற்கு முன்பு இன்று சாலை மறியல் போராட்டம் நடந்தது.

போபால் விஷ வாயு போல் டவ் கம்பெனியில் இருந்தும் நச்சுவாயு வெளியெறும் அபாயம் இருக்கிறது. எனவே இந்த கம்பெனியை மூட அரசு நடவடிக்கை [^] எடுக்க வேண்டும். கம்பெனியை மூட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இதையடுத்து போராட்டம் நடத்திய 750 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சனி, 14 ஆகஸ்ட், 2010

கூகுள் மீது வழக்கு தொடர்ந்தது ஆரக்கிள்!


நியூயார்க்: ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களுக்கான மென்பொருள் உருவாக்கத்தில், காப்புரிமை மீறல் தொடர்பாக பிரபல கூகுள் நிறுவனம் மீது வழக்குத் தொடர்ந்துள்ளது ஆரக்கிள் நிறுவனம்.

கலிபோர்னியா நீதிமன்றத்தில் கடந்த வியாழனன்று தொடரப்பட்ட இந்த வழக்கில், "கூகுள் நிறுவனம் வேண்டுமென்றே, மீண்டும் மீண்டும் ஆரக்கிள் நிறுவனத்தின் ஜாவா அடிப்படையிலான அறிவுசார் சொத்துரிமையை அப்பட்டமாகக் காப்பியடிக்கிறது. இதற்கு உரிய தீர்வு காண வேண்டும்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சன் மைக்ரோசிஸ்டம் நிறுவனத்திடமிருந்து 5.6 பில்லியன் டாலர் கொடுத்து ஜாவா மென்பொருள் உரிமையைப் பெற்றது ஆரக்கிள். இணையதளம் சார்ந்த பல வசதிகளுக்கு ஜாவா தொழில்நுட்பம் அவசியம். ஆனால் கூகுள் நிறுவனம் எந்த வித காப்புரிமைத் தொகையும் தராமல் இந்த மொன்பொருள் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி வருவதாக நீண்ட நாட்களாகக் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இதைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகளில் இப்போது ஆரக்கிள் இறங்கியுள்ளது.
Read: In English
"டிவிடிகள், செல்போன்கள், கம்ப்யூட்டர்கள் என பல மின்னணு சாதனங்களிலும் இன்றைக்கு ஜாவா பயன்பாடு அவசியமாகிறது. எனவே ஜாவா இன்றைக்கு முக்கிய சொத்தாகத் திகழ்கிறது. அதன் உரிமையை உரிய அனுமதியின்று யாரும் அனுபவிக்க விடமாட்டோம்" என்கிறார் ஆரக்கிள் நிறுவன சிஇஓ லாரி எல்லிசன்.

கூகுளின் ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்களில் ஜாவா தொழில்நுட்பம் மிக முக்கியமான ஒன்றாகும். நாளொன்றுக்கு உலகம் முழுக்க 2 லட்சம் ஸ்மார்ட் போன்கள் விற்பனையாகின்றன.

ஹைதராபாத்.... இந்தியாவின் சிறந்த விமான நிலையம்!


விமானப் போக்குவரத்தில் இன்று உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது இந்தியா. முன்பு தூங்கி வழிந்து கொண்டிருந்து இந்திய விமான நிலையங்கள் மகா சுறுசுறுப்பாகக் காட்சியளிக்கின்றன. முக்கிய, பெரிய விமான நிலையங்களை தனியார் நிறுவனங்களுடன் இணைந்து நவீனப்படுத்தி வருகிறது விமானப் போக்குவரத்து [^] இயக்ககம்.

இங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்கைட்ராக்ஸ் நிறுவனம், சமீபத்தில் இந்தியாவின் சிறந்த விமான நிலையமாக ஹைதராபாத்தை தேர்வு செய்துள்ளது. வாடிக்கையர் திருப்தி, விமானங்களின் வருகை, செக் இன் செய்யப்படும் முறை என பல்வேறு விஷயங்களில் பயணிகளின் திருப்தியை அடிப்படையாகக் கொண்டு ஹைதராபாத்துக்கு இந்த கவுரவத்தை அளித்துள்ளது இந்த நிறுவனம்.

இது தவிர இந்தியாவின் சிறந்த 10 விமான நிலையங்களையும் அறிவித்துள்ளனர். ஆனால் இவற்றுக்கு ரேங்க் எதுவும் வழங்கப்படவில்லை.

அந்த வகையில் ஹைதராபாத் உள்பட இந்தியாவின் சிறந்த 11 விமான நிலையங்கள்...

1. ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம் [^], ஹைதராபாத்

ஹைதராபாத் நகரிலிருந்து 25 கிமீ தூரத்தில் உள்ளது இந்த விமான நிலையம்.

ஆண்டுக்கு 4 கோடி பயணிகளைக் கையாளும் திறன் கொண்ட இந்த விமான நிலையத்தில் எவ்வளவு பெரிய விமானமும் தரையிறங்கலாம்.

இந்திய அரசும் ஜிஎம்ஆர் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள விமான நிலையம் இது. ஆந்திரப் பிரதேச அரசு மற்றும் மலேசிய ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்க்ஸ் ஆகியவையும் இதன் பங்குதாரர்கள். 31 மாதங்களில் கட்டப்பட்டு கடந்த மார்ச் 2008-ல் பயன்பாட்டுக்குவிடப்பட்டது. இதில் 13 லவுஞ்ச்கள் உள்ளன.

சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் அமைக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையத்துக்கு 'Leadership Energy and Environment Design' விருது வழங்கப்பட்டது. உலகிலேயே இந்த விருது பெற்ற முதல் விமான நிலையம் ஹைதராபாத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

2. இந்திரா காந்தி சர்வதேச விமானநிலையம், டெல்லி

நாட்டின் மிகப்பெரிய விமான நிலையம் இதுவே. ஜிஎம்ஆர் குழுமம், ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா, ப்ராபோர்ட் மற்றும் மலேசியன் ஏர்போர்ட் ஹோல்டிங்க்ஸ் ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் கட்டப்பட்டுள்ளது. மூன்று டெர்மினல்கள் உள்ளன.

இதில் மூன்றாவது டெர்மினல் மிக சமீபத்தில் கட்டப்பட்டது. உலகத் தரத்தில் அமைந்த இந்த மூன்றாவது டெர்மினல் சர்வதேச நாடுகளையும் வியக்க வைத்துள்ளது. அத்தனை நவீன வசதி. உலகின் எட்டாவது பெரிய பயணிகள் டெர்மினல் இதுவே. இந்த ஒரு டெர்மினலில் மட்டும் 34 மில்லியன் பயணிகள் வந்து போகமுடியும், ஆண்டுக்கு.

ஆட்டோமேடிக் பார்க்கிங் வசதி உண்டு. ஒரே நேரத்தில் 4300 கார்களை 7 அடுக்குகளில் நிறுத்தலாம்.

இரண்டடுக்கு கட்டடமாக உள்ள இந்த மூன்றாம் டெர்மினலில் 168 செக்-இன் கவுண்டர்கள் உள்ளன. 48 விசாரணை அல்லது தொடர்பு கவுன்டர்கள், 78 ஏரோபிரிட்ஜஸ், 72 இம்மிக்ரேஷன் கவுன்டர்ஸ், 15 ஸ்கேன் கவுன்டர்கள் என பிரமாண்ட வசதிகள் இங்குள்ளது.

3. சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம், மும்பை

தெற்கு ஆசியாவில் அதிக பயணிகளைக் கையாளும் விமான நிலையம் என்ற பெருமைக்குரியது மும்பை விமான நிலையம். முன்பு சர்வதேச விமானங்கள் மற்றும் உள்ளூர் விமானங்களுக்கு தனித்தனி டெர்மினல்கள் இருந்தன.

இப்போது அவை ஒன்றாக்கப்பட்டு சத்ரபதி சிவாஜி விமான நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. ஜிவிகே இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த புதிய விமான நிலையம் 2006-ல் உருவாக்கப்பட்டது.

4. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையம், கொல்கத்தா

கிழக்கு இந்தியாவின் பெரும் விமான சேவை மையம் கொல்கத்தா சர்வதேச விமான நிலையம். பங்களா தேஷ், பாங்காக் போன்ற பகுதிகளுக்கு இங்கிருந்துதான் செல்ல வேண்டும்.

ஆண்டுக்கு 8.5 மில்லியன் பயணிகளை கையாளும் திறன் கொண்டது இந்த விமான நிலையம்.

5. சென்னை சர்வதேச விமான நிலையம், சென்னை

நகருக்குள்ளேயே அமைந்துள்ள ஒரே விமான நிலையம் என்ற பெருமை கொண்டது சென்னை விமான நிலையம். புதிதாக இரண்டாவது டெர்மினல் அமைக்கப்பட்டு வருகிறது. ரூ 2350 கோடி செலவில் அதிநவீனமயமாக்கப்பட்டு வருகிறது.

கட்டுமானப் பணிகள் முடிந்த பிறகு ஆண்டுக்கு 50 மில்லியன் பயணிகளைக் கயாளும் திறன் கொண்ட முன்னணி விமான நிலையமாகத் திகழவிருக்கிறது சென்னை.

6. சர்தார் வல்லபபாய் பட்டேல் சர்வதேச விமான நிலையம், அகமதாபாத்

நாளொன்றுக்கு 150 விமானங்களைக் கையாளும் இந்த விமான நிலையம் 1124 ஏக்கரில் பரந்து விரிந்துள்ளது. மூன்று டெர்மினல்களைக் கொண்ட அகமதாபாத் விமான நிலையத்துக்கு நாட்டின் அனைத்துப் பகுதியிலிருந்தும் விமானங்கள் உண்டு.

ஆகஸ்ட் 14 முதல் இதன் புதிய டெர்மினல் இயக்கப்படுகிறது.

7. லோக்ப்ரிய கோபிநாத் போர்டோலாய் சர்வதேச விமான நிலையம், கவுகாத்தி

ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த விமான நிலையம் இந்திய விமானப் படைத் தளமாகவும் செயல்படுகிறது. முதன்முதலாக அசாம் மாநிலத்தின் முதல்வராக இருந்தவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான கோபிநாத் போர்டோலாய் பெயரில் அமைக்கப்பட்டுள்ளது.

கிழக்காசிய நாடுகளின் முக்கிய நகரங்களுக்கு இங்கிருந்து விமான சேவை உண்டு. எதிர்காலத்தில் இந்த விமான நிலையத்தை பெருமளவில் விஸ்தரித்து, கிழக்கு இந்தியாவின் முதன்மை விமான நிலையமாக்க மத்திய அரசு [^] திட்டமிட்டுள்ளது.

8. ராஜா சான்ஸி சர்வதேச விமான நிலையம், அமிர்தசரஸ்

தினசரி 90 விமானங்களைக் கையாளும் அமிர்தசரஸ் விமான நிலையம், சமீபத்தில்தான் முற்றாகப் புதுப்பிக்கப்பட்டது. முன்பு வெறும் 12770 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலிருந்த இந்த விமான நிலையம்,

இப்போது 40175 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. அனைத்து நவீன வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 2009-ம் ஆண்டுதான் திறக்கப்பட்டது.

9.டபோலிம் விமான நிலையம், கோவா

கோவா மாநிலத்தின் ஒரே விமான நிலையம் இது. இந்திய ராணுவத்தின் விமானப் படைத் தளமாகவும் இது செயல்படுகிறது. இதந் ஏர் ட்ராபிக் கண்ட்ரோல் இந்தியக் கடற்படை வசமுள்ளது.

நாளொன்று 250 விமானங்கள் வருகை மற்றும் புறப்பாட்டுக்கேற்ற வகையில் கட்டப்பட்டுள்ளது கோவா விமான நிலையத்தின் உள்நாட்டு முனைமம்.

வெளிநாட்டு முனைமம் 1996-ல் கட்டப்பட்டது. இப்போது புதிய டெர்மினல் கட்டப்பட்டு வருகிறது.

10. பெங்களூரு சர்வதேச விமான நிலையம், பெங்களூரு

பெங்களூரிலிருந்து 40 கிமீ தொலைவில் உள்ளது இந்த விமான நிலையம். 4000 ஏக்கரில் அமைந்துள்ள இந்தப் புதிய விமான நிலையம் 2008 முதல் செயல்படுகிறது. 2009-ல் நாளொன்றுக்கு 280 விமானங்களைக் கையாண்டது இந்த விமான நிலையம்.

பெங்களூரிலிருந்து இந்தியா மற்றும் உலகின் 50 முக்கிய நகரங்களுக்கு தினசரி விமானங்கள் இயக்கப்படுகின்றன.

தற்போது 9 மில்லியன் பயணிகளைக் கையாளும் பெங்களூரு விமான நிலையம், 2015-ல் 17 மில்லியன் பயணிகளைக் கையாளும் அளவுக்கு தரம் உயர்த்தப்பட உள்ளது.

11. கொச்சி சர்வதேச விமான நிலையம், கொச்சி

கொச்சியிலிருந்து 30 கிமீ தூரத்தில் நெடும்பாசேரி என்ற இடத்தில் உள்ளது இந்த விமான நிலையம்.

ரூ 31500 கோடியில் கட்டப்பட்டு, நாட்டிலேயே பொதுத்துறை நிறுவனமாக அறிவிக்கப்பட்ட முதல் விமான நிலையம் இதுதான். 30 நாடுகளைச் சேர்ந்த 10000 என்ஆர்ஐகள் இந்த விமான நிலையத்தில் முதலீடு செய்துள்ளனர்.

4 லட்சம் கிராமங்களில் மின்சாரம் இல்லை: எரிசக்தி துறை!


நாட்டில் 4 லட்சம் கிராமங்களில் மின்சார வசதி இல்லை என்று தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு துறைத் தலைவர் ஆர்.கிறிஸ்துதாஸ் காந்தி தெரிவித்தார்.

சென்னை பிர்லா கோளரங்கத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி குறித்து பள்ளி ஆசிரியர்களுக்கான கருத்துப்பட்டறை நே‌ற்று நடந்தது.

இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ஆர்.கிறிஸ்துதாஸ் காந்தி பேசுகை‌யி‌ல், மின்சாரத்தின் மூலம் ஒரு சில இடங்களில் மட்டும் அனைத்து வசதிகளையும் பெற்றுவிட்டால், மின்சாரத்துக்குப் பிரச்சனையே இல்லை என்று கூறிவிட முடியாது. ஏனென்றால் நாட்டில் 4 லட்சம் கிராமங்களில் மின்சாரமே இல்லாத நிலை உள்ளது.

இதற்கு மாற்று எரிசக்தி மிகவும் அவசியம். சாணம், கழிவுகள், காற்று, சூரியசக்தி ஆகியவை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி குறித்து விழிப்புணர்வு வேண்டும் என்றார் ‌கி‌றி‌ஸ்துதா‌ஸ் கா‌ந்‌தி.

விசா கட்டண உயர்வு இரு நாட்டு பொருளாதார நலன்களைப் பாதிக்கம்: சிஐஐ!


அமெரிக்காவில் பணியாற்றச் செல்லும் இந்திய தொழில் நெறிஞர்களுக்கு அளிக்கப்படும் ஹெச் 1பி, எல் 1 ஆகிய விசாக்களுக்கான கட்டணத்தை அந்நாட்டு அரசு உயர்த்தியிருப்பது அமெரிக்காவின் பொருளாதார பாதுகாப்பு மனப்பாங்கையே காட்டுகிறது என்று இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) குற்றம் சாற்றியுள்ளது.

தங்கள் நாட்டின் பொருளாதார நலன்களை பாதுகாத்திடும் நடவடிக்கைகளை வளரும் நாடுகள் மேற்கொள்ளும் போதெல்லாம் அதனை சுய பாதுகாப்பு நடவடிக்கைகள் (Protectionist) என்று கூறிய அமெரிக்கா, இப்போது பாதுகாப்புக் காரணங்களைக் கூறி அப்படிப்பட்ட நடவடிக்கையையே எடுத்துள்ளது என்று இ.தொ.கூ. குறை கூறியுள்ளது.

எல்லைப் பாதுகாப்பு சட்ட வரைவு என்ற பெயரில் அயல் நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு பணி புரிய வருவோருக்கு வழங்கும் விசா கட்டணங்களை 4,000 டாலர்கள் வரை அமெரிக்கா உயர்த்த இந்த சட்ட வரைவு வழிவகுக்கிறது.

அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கை அந்நாட்டில் தங்கள் வணிக கிளைகளை நிறுவி தொழில் செய்யும் இந்திய வர்த்தக நிறுவனங்களுக்கு ஆண்டொன்றுக்கு 250 மில்லியன் டாலர் கூடுதல் செலவை ஏற்படுத்தும்.

இந்த நடவடிக்கை இரு நாடுகளின் பொருளாதார நலன்களுக்குக் கேடானது என்றும் இ.தொ.கூ. கூறியுள்ளது.

பாகிஸ்தானுக்கு இந்தியா ரூ. 23 கோடி வெள்ள நிவாரண நிதி!



வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானுக்கு நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காக ரூ. 23 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.

பாகிஸ்தானில் சமீபத்தில் கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்திற்கு சுமார் 1,700 பேர் பலியாகினர்; ஒரு கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பாகிஸ்தான் அயலுறவுத் துறை அமைச்சர் ஷா முகம்து குரேஷியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசிய இந்திய அயலுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் மக்களுக்கு நிவாரண பணிகளை மேற்கொள்ள இந்தியா சார்பில் ரூ. 23 கோடி (5 மில்லியன் டாலர்) வழங்குவதாக தெரிவித்தார்.

மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் மக்கள், அந்த துயரத்திலிருந்து மீண்டு வருவதற்கான இந்தியாவின் ஆதரவையும் தெரிவித்துக்கொள்வதாக குரேஷியிடம் கிருஷ்ணா குறிப்பிட்டதாக இந்திய அயலுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

தமிழகத்தில் 8 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் கண்டுபிடிப்பு!


சென்னை: தமிழகத்தில் 12 மாவட்டங்களில் சுமார் 8 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டுள்ளன.

போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்க தமிழகத்தில் கடந்த இரு ஆணடுகளாக வீடு வீடாக ஆய்வு நடத்தப்பட்டு வந்தது.

இந்தப் பணி கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டது. இதன்மூலம் 12 மாவட்டங்களில் 8 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உணவுத்துறை அமைச்சர் வேலு கூறுகையில்,
உணவுத்துறை ஊழியர்கள் வீடு வீடாக சென்று ஆய்வு நடத்தியதில் 12 மாவட்டங்களில் 8 லட்சம் ரேஷன்கார்டுகள் போலியான முகவரி கொடுத்து பெற்றிருப்பது கண்டுடிக்கப்பட்டது.

அவற்றை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தவிர மேலும் 4 மாவட்டங்களில் 10 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளதாக சந்தேகிக்கிறோம். அவையும் கண்டுபிடிக்கப்பட்டு ரத்து செய்யப்படும்.

தகுதியான, உண்மையான குடும்ப அட்டைதாரர்கள் ஒருவர் கூட பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பலவாய்ப்புகள் கொடுக்கப்படுகின்றன. வட்ட வழங்கல் அலுவலர், மாவட்ட வழங்கல் அலுவலர் என ஆய்வுகளுக்கு பிறகுதான் போலி கார்டுகள் நீக்கம் செய்யப்படுகின்ற.

அனைத்து மாவட்டங்களிலும் சேர்த்து மொத்தம் 15 முதல் 20 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் இருக்கும் என்று கருதுகிறேன்.

திமுக அரசு 2006ல் பொறுப்பேற்றபோது 1 கோடியே 97 லட்சம் ரேஷன் கார்டுகள் இருந்தன. இதுவரை 16.34 லட்சம் புதிய கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

ஒரு இடத்தில் குடியிருப்பதற்கான தகுந்த ஆதாரங்களுடன் விண்ணப்பித்தால் 60 நாட்களுக்குள் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என்றார்.

மணிச் சத்தும் வருங்கால விவசாயமும்!


-சதுக்கபூதம்

பயிருக்கு தேவையான சத்துக்களில் முக்கியமானது தழைச் சத்து எனப்படும் நைட்ரஜனும், மணிச் சத்து என்னும் பாஸ்பரசும், சாம்பல் சத்து எனப்படும் பொட்டாசும் ஆகும்.

உலக மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்றாற்போல் உணவு உற்பத்தியை பெருக்குவதற்கு உரங்களின் தேவை இன்றியமையாதது ஆகும்.

ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் 17 மில்லியன் டன் மணிச் சத்து சார்ந்த உரங்களை இடுகின்றனர். அதுமட்டுமன்றி இதன் தேவை ஆண்டொன்றுக்கு 3 சதவீதம் அதிகரித்து வருகிறது.

தற்போது மற்றொரு அதிர்ச்சிகரமான செய்தி வர தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரபடி இன்னும் 30-40 ஆண்டுகள் வரைதான் விவசாய வளர்ச்சிக்கு இணையாக மணிச் சத்து சார்ந்த உரங்களை உற்பத்தி செய்ய முடியும்.

அது மட்டுமல்ல. தற்போது உற்பத்தியாகும் மணிச் சத்தில் 90% மொராக்கோ, சீனா, தென் அமெரிக்கா, ஜோர்டான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் தான் கிடைக்கிறது.

எண்ணெய் வளம் கூட 75% பன்னிரென்டு நாடுகளிலிருந்து கிடைக்கிறது. ஆனால், மணிச் சத்தோ 5 நாடுகளிடம் மட்டுமே உள்ளது. தட்டுபாடு காலங்களில் சீனா மணிச் சத்துக்கான ஏற்றுமதி வரியை 135 சதம் உயர்த்தியது.

அமெரிக்காவின் மணிச் சத்து சுரங்கங்கள் இன்னும் 20 வருடங்களில் வற்றி விடும் அபாய நிலை உள்ளது. இதன் விளைவாக கடந்த 2003 முதல் 2006 வரை மணிச் சத்தின் விலை 350 சதம் உயர்ந்துள்ளது.

30 வருடங்களுக்கு பிறகு மணிச் சத்தின் உற்பத்தி பெருமளவு குறைந்தால் மால்தூஸ் கூறியபடி பெரும் பஞ்சம் வரக்கூட வாய்ப்புள்ளது.

இதற்கு தீர்வாக முழுமையான இயற்கை விவசாயத்தை நோக்கி சென்றாலும் வளரும் மக்கள் தொகைக்கு உணவளிப்பது கடினம்.

இதற்கு தீர்வு தான் என்ன?

1. முடிந்த அளவு மணிச் சத்தை தற்போதிலிருந்தே சானம் மற்றும் இயற்கை எருக்கள் (பசுந்தாள் உரம்) மூலம் இடத் தொடங்க வேண்டும்.

2. தேவையற்ற மணிச் சத்து உரத்தை அளிப்பதை தவிர்க்க வேண்டும். பயிருக்கு தேவையான அளவு மணிச் சத்தை தேவையான நேரத்தில் தேவையான முறையில் மட்டும் கொடுக்க வேண்டும். இதன் மூலம் மணி சத்து வீணாவதை குறைப்பதுடன் பயிரின் உற்பத்தி செலவை குறைத்து லாபத்தையும் பெருக்கலாம். மண் பரிசோதனை செய்வதன் மூலம் பயிருக்கு தேவையான மணிச் சத்தின் சரியான விகிதத்தை எளிதில் அறிந்து கொள்ளலாம்.

3. மண்ணில் அதிக அளவு மணிச் சத்து உள்ளது. ஆனால் அவை தாவரங்களால் உபயோகபடுத்த முடியாத நிலை உள்ளது. ஒரு சில நுண்ணுயிர்கள் அமிலத்தை உற்பத்தி செய்து மணிச் சத்தை கரைத்து பயிர்களின் வேர்கள் உறிஞ்சும் நிலைக்கு மாற்றித் தருகின்றன. இதன் மூலம் மணிச் சத்து உரத்தின் தேவையை குறைக்கலாம். இவ்வகை நுண்ணுயிரிகளை பாஸ்போபாக்டீரியா என்று அழைக்கிறோம். இந்த நுண்ணுயிர் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளை தீவிரமாக்க வேண்டும்.

4. மணிச் சத்தை குறைந்த அளவு பயன்படுத்தி அதிக விளைச்சளைத் தரும் ரகங்களை வேளாண் விஞ்ஞானிகள் கண்டுபிடிக்க வேண்டும்.

5. மனிதக் கழிவுகளில் தான் அதிக அளவு மணி சத்து உள்ளது. எனவே நகர்புற மனிதக் கழிவுகளிலிருந்து மணிச் சத்தை எடுக்கும் வழி வகையை கண்டுபிடிக்க வேண்டும்

எண்னெய் வளம் குறைந்தால் கூட அதற்கு மாற்று சக்தியாக சூரிய ஒளி,காற்று, அணு சக்தி என்று பல உள்ளது. ஆனால் மணிச் சத்து உரத்துக்கு மாற்று மேல் சொன்ன முறைகள் தான் என்பதை மறந்து விட கூடாது.

வருங்கால சந்ததியரின் உணவு தேவை குறித்து இப்போதே சிந்திப்பது நல்லது.

ஆனால், இந்த பிரச்ச்னையின் பரிமாணம் இன்னும் உலகுக்கு பெரிய அளவில் தெரியவில்லை என்பது தான் சோகம்.

சர்வதேச இளைஞர் ஆண்டு-இன்று ஆரம்பம்!

-புன்னியாமீன்

ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்ட சர்வதேச இளைஞர் ஆண்டு இன்று (ஆகஸ்ட் 12 , 2010) ஆரம்பமாகிறது.

இந்த இளைஞர் ஆண்டின் தொனிப்பொருள் ‘சம்பாஷணையும் பரஸ்பர புரிந்துணர்வும்’ என்பதாகும். இளைஞர் ஆண்டு; ஆகஸ்ட் 11, 2011ம் தேதி நிறைவு பெறும்.

2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் சர்வதேச இளைஞர் வருடத்தை பிரகடனம் செய்யும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை நிறைவேற்றியது. இதற்கான உத்தியோகபூர்வமான அறிவித்தலை டிசம்பர் 18, 2009ல் விடுத்தது.

சர்வதேச ஆண்டுகள் பொதுவாக ஜனவரி மாதத்தில் தான் ஆரம்பமாகும். ஆனால், இளைஞர் தினம் சர்வதேச இளைஞர் தினமான ஆகஸ்ட் 12ம் தேதி ஆரம்பமாவது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச இளைஞர் ஆண்டை குறிக்கும் வகையில் பிரதேசிய மட்டத்திலும், தேசிய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு உலகளாவிய ரீதியில் அரசுகளையும் சிவில் சமூகங்களையும், தனிநபர்களையும் ஐக்கிய நாடுகள் சபை கோரி நின்றது.

சர்வதேச இளைஞர் ஆண்டானது பல சந்ததிகள், கலாசாரங்கள், மதங்கள், நாகரிகங்கள் ஆகியவற்றுக்கு மத்தியில் சமாதான கோட்பாடுகளை ஊக்குவித்து மனித உரிமைகளுக்கும் ஒருமைப்பாட்டுக்கும் மதிப்பளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தீவிர வறுமை, பட்டினி போன்றவை முதற்கொண்டு தாய்- சேய் மரணம்,கல்வி, சுகாதார பராமரிப்பை பெறுவதற்குரிய வசதியீனங்கள் போன்ற சமூகப் பிரச்சினைகளுக்கு 2015ம் ஆண்டளவில் தீர்வுகாண முனையும் ஐ.நா. மில்லேனிய அபிவிருத்தி இலக்குகளை அடைதல் உள்ளடங்கலாக முன்னேற்றத்தை போஷிப்பதற்கு தம்மை அர்ப்பணித்துக் கொள்ளுமாறு இளைஞர் ஆண்டு இளைய தலைமுறையை ஊக்குவிக்கிறது.

15 முதல் 24 வரையிலான வயதெல்லைக்கு உட்பட்டவர்களை ஐக்கிய நாடுகள் சபை இளைய தலைமுறையாக வரையறை செய்கிறது. இந்த அடிப்படையில் சமகாலத்தில் உலக சனத்தொகையின் 18 சதவீதமானவர்கள் அல்லது 120 கோடி மக்கள் இளைய தலைமுறையினர்.

இவர்களில் வளர்முக நாடுகளைச் சேர்ந்த 87 சதவீதமானவர்கள் வளங்கள், சுகாதாரப் பராமரிப்பு, கல்வி, பயிற்சி, தொழில் வாய்ப்பு, பொருளாதார வாய்ப்புக்கள் போன்றவற்றைப் பெறுவதற்குரிய வசதியீனங்களால் சவால்களை எதிர்கொள்கிறார்கள்.

சகல நாடுகளையும் சேர்ந்த இளைஞர், யுவதிகள் அபிவிருத்தி,ஆக்கபூர்வமான சமூக மாற்றம், தொழில்நுட்ப ரீதியான புதுமுயற்சிகள் போன்றவற்றிற்குரிய பாரிய மனித வளங்களாகத் திகழ்கிறார்கள் என்பதை ஐக்கிய நாடுகளின் அங்கத்துவ நாடுகள் அங்கீகரிக்கின்றன. இவர்களின் கொள்கைகள், பலம், தொலைநோக்கு போன்றவை தொடர்ச்சியான சமூக அபிவிருத்திக்கு அத்தியாவசியமானவை.

இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் பயனாளிகளாக மாத்திரம் இல்லாமல் மாற்றத்திற்குரிய வினைத்திறன் மிக்க முகவர்களாக இருக்கிறார்கள். அர்ப்பணிப்பு, ஆர்வம், ஆக்கத்திறன் ஆகிய பண்புகளைக்கொண்ட இளைஞர், யுவதிகள் சமூகத்தின் சவால் மிக்க விவகாரங்களை எதிர்கொண்டு அபிவிருத்தியில் பங்களிப்பு நல்குகிறார்கள்.

ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரப் பிரகாரம் சர்வதேச இளைஞர் தினம் International Youth Day (IYD) ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 12ம் திகதி கொண்டாடப்படுகின்றது. இளைஞர்கள் ஒரு நாட்டின் நிர்ணய சந்ததிகள். இளைஞர்களை ஆக்கபூர்வமாகவும் பயன்படுத்தலாம். அதேநேரம், அழிவுபூர்வமாகவும் பயன்படுத்தலாம். பொதுவாக ஒரு நாட்டின் சொத்துக்களாகக் கருதப்படும் இளைஞர்களை நெறிப்படுத்தி அவர்களை ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி சௌபாக்கியமான எதிர்காலமொன்றுக்கு வழிகாட்டுவதும் அவர்களது உணர்வுகளை சிறந்த முறையில் நெறிப்படுத்துவதும், நம்பிக்கை உணர்வினையும், வெற்றி மனப்பாங்கினையும் ஏற்படுத்துவதுடன், இளைஞர்களின் செயற்பாடுகளை கௌரவித்து மதிப்பளிப்பதும் இளைஞர் தினத்தின் முக்கிய நோக்கமாகக் கொள்ளப்படுகின்றது.

1998ம் ஆண்டு ஆகஸ்ட் 08ம் தேதி முதல் 12ம் தேதி வரை லிஸ்பன் நகரில் நடைபெற்ற உலக நாடுகளின் இளைஞர் விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் குழு சர்வதேச ரீதியில் இளைஞர்களின் பிரச்சினைகளையும், இளைஞர்களின் செயல்பாடுகளையும் கவனத்திற் கொள்ளும் வகையில் இளைஞர்களுக்கான சர்வதேச தினம் ஒன்றை பிரகடனப்படுத்த வேண்டும் என சிபாரிசு செய்தது. இதன்படி 1999 டிசம்பர் 17ம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின் 54/120/ ( resolution 54/120) இலக்க பிரேரணைப்படி சர்வதேச இளைஞர் தினம் ஆகஸ்ட் 12ம் தேதி கொண்டாடப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய 2000ம் ஆண்டு முதல் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

உலக இளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை பிரதானமாக கவனத்தில் ஈர்க்கும் முகமாக உலகளாவிய ரீதியில் அரசுகள், அரச நிறுவனங்களும், அரச சார்பற்ற நிறுவனங்களும் செயல்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை தீர்மானத்தில் எதிர்பார்க்கப்படுகின்றது.

இவ்வாறாக ஆகஸ்ட் 12ம் தேதி சர்வதேச ரீதியில் இத்தினம் பிரகடனப்படுத்தப்பட்டாலும்கூட, சர்வதேச தினம் என்பதை விட ஒவ்வொரு நாடுகளும் தேசிய ரீதியில் இத்தினத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து கொண்டாடுவதை அவதானிக்கலாம். உதாரணமாக இந்தியாவில் விவேகானந்த அடிகளாரின் பிறந்த தினத்தை மையமாகக் கொண்டு 1985ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஜனவரி 12ம் தேதி தேசிய இளைஞர் தினம் கொண்டாடப்படுகின்றது. எவ்வாறாயினும் சர்வதேச ரீதியிலும் சரிää தேசிய ரீதியிலும் சரி, பிரதேச ரீதியிலும் சரி இவ்வாறு கொண்டாடப்படும் விழாக்கள் ஒரே அடிப்படையினைக் கொண்டிருப்பதை அவதானிக்கலாம்.

நமது வாழ்க்கையை உடலியல் அடிப்படையில் குழந்தைப் பருவம், இளமை, முதுமை என மூன்று பிரதானப் பிரிவுகளாக வகுக்கலாம். குழந்தைப் பருவத்தில் உடலாலும் மனதாலும் நமது தேவைகளை நிறைவு செய்ய மற்றவர்களைச் சார்ந்துள்ளோம். இந்தப் பருவம் ஒவ்வொருவரின் எதிர்கால வாழ்க்கைக்கு மிக முக்கியமானது. நல்ல பழக்கங்கள், துணிச்சல் தன்னம்பிக்கை ஆகியன ஆழ்மனதுக்குள் செலுத்தப்பட வேண்டிய பருவம். சொந்த அனுபவங்கள் இல்லாத பருவம். பாகுபாடு காணத் தெரியாத உழைக்க முடியாத பருவம்.

விடலைப் பருவம் அல்லது வளரிளம் பருவம் என்பது, மனிதருடைய உடல் மற்றும் உள வளர்ச்சிக் கட்டங்களில் சிறுவருக்கும், வளர்ந்தோருக்கும் இடைப்பட்ட ஒரு மாறுநிலைக் கட்டமாகும். இப் பருவத்துக்கான வயதெல்லை எல்லாப் பண்பாடுகளிலும் ஒரே அளவாகக் கருதப்படுவதில்லை. பல காலமாகவே பருவமடைதல் என்பது விடலைப் பருவத்துடன் தொடர்புபடுத்தப்பட்டுவந்துள்ளது. அண்மைக் காலங்களில் பருவமடைதல் காலம் விடலைப் பருவத்துக்கு முன்னதாகவே தொடங்கி விடலைப் பருவத்துக்கு அப்பாலும் போவதைக் காணக்கூடியதாக உள்ளது. உலக சுகாதார நிறுவனம் விடலைப் பருவத்தை 10 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட காலம் என வரையறை செய்துள்ளது.

விடலைப் பருவத்துக்கு பின்னர் வரும் பருவம் இளமை ஆகும். பொதுவாக 18 - 24 வயது வரை இளமைப் பருவம் அமைகின்றது. சில அறிஞர்களின் கருத்துப் பிரகாரம் 29 வயதுவரை இளமைப் பருவம் வரையறுக்கப்படுகின்றது.

இவர்களை இளையோர் அல்லது வாலிபர் என்பர். பிற பருவத்தினருடன் ஒப்பிடுகையில் இளயோரிடம் குறிப்பிடத்தக்க சில பண்பியல்புகள் உண்டு. இளைய பருவம் மாற்றத்தை இலகுவில் ஏற்று தன்னை மாற்றியமைத்துக்கொள்ள கூடியதுää துணிவுமிக்கது, செயற்பாட்டை முதன்மைப்படுத்துவது. இப்பருவத்தில் பாலியல் கவர்ச்சியும் ஈடுபாடும் அதிகம் இருக்கும். இளையோரை பெரும் சதவீதமாக கொண்ட ஒரு சமூகம் வன்முறைப் போக்கு எடுப்பதற்கு கூடிய சாத்தியக் கூறுகள் உண்டு என்றும் கூறப்படுகின்றது. அனேக நாடுகளில் இளையோரே அதிகம் வேலையற்றோராக இருக்கின்றார்கள்.

முதுமை என்பதை 60க்கு மேல் எனக் கூறுவதே பொருத்தமாய் இருக்கும். பெரும்பாலும் 60 வருடம் என்பது பணி நிறைவுக்கான வயது. அதன்பின் ஓய்வு என்பது நடைமுறையிலுள்ள அரசு விதி, முதுமையில் பணிபுரிவதில் சக்தியின்மை இருந்தாலும் வாழ்க்கை அனுபவத்தால் இளைய தலைமுறைக்கு வழிகாட்டும் வாய்ப்பு உண்டு.

ஒரு தடவை சுவாமி விவேகானந்தர், “இளைஞர்கள் 100 பேரை என்னிடம் கொடுங்கள்; இந்திய நாட்டையே நல்ல நாடாக மாற்றிக் காட்டுகிறேன்” என்று கூறியது இளைஞர் தம் சிறப்பு. உத்வேகம், அர்ப்பணிப்பு, நாட்டுப்பற்று மிக்க இளைஞர்களை வழிநடத்திச் செல்லக் கூடிய இளமை, துடிப்பு, சுயநலமில்லாது பாடுபடும் அர்ப்பணிப்பு, ஞானம் மிகுந்த விவேகானந்தரைப் போல் ஒரு வழிகாட்டியைக் கண்டுகொள்வதுதான் இன்றையச் சு10ழலின் தேவையாகிறது.

இன்று உலகின் எல்லா நாடுகளிலும் இளைஞர்கள் தம் திறமையை வெளிப்படுத்தி அந்த நாடுகளின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக உள்ளனர். கடும் குளிர், மிகுந்த வெப்பம் என எந்தவிதமான நிலையிலும் பணிபுரியும் தகுதியுள்ளவர்கள். உடல் ஆற்றலுடன் அறிவாற்றலில் சிறந்து விளங்குபவர்கள் நம் நாட்டு இளைஞர்கள். உலகின் பல முன்னோடி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளைத் தம் தகுதியால் அலங்கரித்து வருபவர்கள். பணிபுரிய சுய கௌரவம் பார்க்காமல் குடும்பப் பொறுப்புடன் செயல்படும் இளைஞர் பட்டாளம் நம்மிடையே உள்ளது. சிக்கலான கல்வி கற்பதிலே முன்னணியில் நிற்பவர்கள் நம் இளைஞர்கள். தமக்கென தனிப் பாதையை வகுத்துக் கொண்டு, அதில் திறமையுடனும், துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் பயணிப்பவர்கள்தான் நம் இளைஞர்கள்.

இவ்விடத்தில் சோக்ரடீஸின் வரலாற்றுடன் இணைந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகின்றது. ஓர் இளைஞன் சோக்ரடீஸிடம் வந்து வெற்றிக்கான இரகசியத்தைப் பற்றிக் கேட்டான். அதற்கு சோக்ரடீஸ் மறுநாள் காலை ஆற்றங்கரைக்கு வருமாறு கேட்டுக் கொண்டார். மறுநாள் காலை ஆற்றங்கரையில் இருவரும் சந்தித்துக் கொண்டனர். சோக்ரடீஸ் அந்த இளைஞனை ஆற்றை நோக்கி உள்ளே வரும்படி கேட்டுக் கொண்டார். கழுத்தளவு நீர் வரை உள்ளே வந்தவுடன் அந்த இளைஞனை நீரினுள் வைத்து அமுக்கினார். அவன் வெளியே வர முயற்சி செய்தான். ஆனாலும் அவனை அப்படியே அமுக்கியவாறு அவனது முகம் நீல நிறமாக மாறும் வரை வைத்திருந்தார். சற்றுப் பொறுத்து அவனது தலையை நீரினுள்ளிருந்து வெளியே இழுத்தவுடன் அந்த இளைஞன் செய்த முதல் வேலையே தன்னால் இயன்ற அளவு காற்றை மீண்டும் மீண்டும் உள்ளிழுத்தான். சோக்ரடீஸ் அவனிடம் “நீ நீருக்குள் இருந்த போது நீ எதை அதிகம் விரும்பினாய்?” என்று கேட்டார். அந்த இளைஞன் “காற்று” என்று பதிலளித்தான். சோக்ரடீஸ், “வெற்றியின் இரகசியமே அது தான் .நீ எவ்வளவு அதிகமாக காற்றை விரும்பினாயோ அது போன்றே வெற்றியையும் விரும்பினால் உனக்கு அது கிட்டும்” என்று சொன்னார். இதைத் தவிர வேறு எந்த இரகசியமும் இல்லை.

இந்த உதாரணம் இளைஞர்களின் உணர்வுக்களிக்கப்படும் முக்கியத்துவத்தை படிப்பினையுடன் கூடி எடுத்துக் காட்டுகின்றது. ஒவ்வொரு இளைஞனும் தன்னம்பிக்கையுடன் தனது பணியினை முன்னெடுக்கக் கடமைப்பட்டுள்ளான்.

இன்றைய இளைஞர்கள் ஒருவரைப் பின்பற்றும்போது முழுக்க முழுக்க அவராகவே மாறிவிடக்கூடாது. மாறாக, நல்ல குணங்களை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை விவேகானந்தர் அழகாகக் கூறுகிறார். ‘ஒரு விதையை நிலத்தில் போடுகிறோம். அதன் வளர்ச்சிக்குத் தேவையான எருää தண்ணீர் ஆகியவற்றை அளிக்கிறோம். அவ்விதை எருவாகவோ, தண்ணீராகவோ மாறாமல் தன் இயல்பிலேயே எடுத்துக்கொண்டு பிரம்மாண்ட மரமாகிறது’. அது போல, ‘கற்றுக்கொள்ள வேண்டியதை மட்டும் கற்றுக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற வழி சொல்கிறார்.‘அளவற்ற தன்னம்பிக்கை உடையவர்களாக இருங்கள். நான் இளமையில் அத்தகைய நம்பிக்கை உடையவனாக இருந்தேன். அதுதான் இப்பெரிய காரியங்களைச் செய்யக்கூடிய சக்தியை எனக்களித்து இருக்கிறது. இளமையும், சக்தியும், நம்பிக்கையும் இருக்கும் காலத்தில்தான் உங்கள் எதிர்கால இலட்சியத்தை நீங்கள் முடிவு செய்ய வேண்டும் என்று கூறி தன்னம்பிக்கை ஊட்டுகிறார்.

உங்களின் மீதும் உங்கள் திறமைகளின் மீதும் உங்களுக்கு உள்ள ஆழமான நம்பிக்கைதான் உங்கள் கனவுகளை நிறைவேற்றும். உங்கள் கனவைச் சொல்லும்போதுää உங்கள் வார்த்தைகளில் உயிர் துடிப்பு இருக்க வேண்டும். உங்களின் ஆர்வம் கேட்போரைத் தொட வேண்டும். உங்கள் கனவு எதுவாக இருந்தாலும் அதை சாத்தியமில்லாது என்று ஒதுக்க வேண்டாம். “சாத்தியமில்லாதது” என்று எதுவுமேயில்லை.

தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்றது. தன்னம்பிக்கையோடு திட்டமிட்டு, விடாமுயற்சியோடு செயல்வடிவம் கொடுக்க வேண்டும்.“Never, neer, neer give up’ என்று வின்ஸ்டன் சர்ச்சில் சொல்வதுண்டு. வீட்டில் சன்னலருகே வைக்கப்பட்டுள்ள செடியானது வெளிச்சம் தேடி வெளியே வளைந்து செல்வதைப் போல, விடா முயற்சியுடையவர்கள் புதிய பாதைகளைத் தேடிக்கொண்டு தொடர்ந்து முன்னேறுவர்.

வெற்றி பெற்றவர்கள் அனைவரும் மற்றவர்கள் உறங்கிக் கொண்டிருக்கும்போது தாங்கள் மட்டும் விழித்திருந்து உழைத்தவர்களே. சலிப்புக்கு இடங்கொடாமல் கடும் உழைப்பை உணவாக உட்கொண்டவர்கள், “ஒளி படைத்த கண், உறுதிகொண்ட நெஞ்சம், களிபடைத்த மொழி, கடுமை கொண்ட தோள், தெளிவு பெற்றமதி” என்றெல்லாம் முகமன் கூறிய பாரதியின் வார்த்தைகளை இளையபாரதம் மெய்ப்பிக்க வேண்டும். குறுகிய சிந்தனையில் வாழ்வைக் குலைத்துக்கொள்ளாமல் சமுதாய நோக்கில் சிந்தித்து செயல்பட்டால் இளைஞர்களுக்கு வெற்றி நிச்சயம்.

சர்வதேச இளைஞர் தினம் கலைவிழாக்கள், போட்டி நிகழ்ச்சிகள், இளைஞர் பாசறைகள், கலாசார நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களினூடாக முன்னெடுக்கப்படுகின்றன. 2000ம் ஆண்டில் முதலாவது சர்வதேச இளைஞர் தினம் கொண்டாடப்பட்ட போது இத்தினத்தை முறைப்படி கடைபிடிப்பதற்கு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. அதேபோல இளைஞர் ஆண்டிலும் பல்வேறு திட்டங்களை ஒவ்வொரு நாடுகளின் அரசாங்கங்களும் தனியார் அமைப்புகளும் ஐக்கிய நாடுகள் சபையும் ஒழுங்கு செய்துள்ளது.

2001ம் ஆண்டில் வேலையின்மை, சுகாதாரம் ஆகியவற்றில் இளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும், 2002ம் ஆண்டில் நிகழ்க்காலத்திலும், எதிர்காலத்திலும் அபிவிருத்தி செயற்பாடுகளில் இளைஞர்களின் பங்களிப்புகள் குறித்தும், 2003ம் ஆண்டில் இளைஞர்களுக்கு பண்புமிக்கதும்,உற்பத்தித் திறனுடையதுமான தொழில் வாய்ப்புக்களை தேடிக் கொடுப்பது பற்றியும், 2004ம் ஆண்டில் சமூக அபிவிருத்தியில் இளைஞர்களின் பங்கு பற்றியும், 2005ம் ஆண்டில் இளைஞர்களின் பணிகள் பற்றியும், 2006ம் ஆண்டில் வறுமை ஒழிப்பில் இளைஞர்களின் பங்கு பற்றியும், 2007ம் ஆண்டில் அபிவிருத்திப் பணிகளில் இளைஞர்களின் கடப்பாடு பற்றியும், 2008ம் ஆண்டில் காலநிலை மாற்றம், நேரமுகாமைத்துவம் ஆகியவற்றில் இளைஞர்களின் பங்களிப்பு பற்றியும், 2009ம் ஆண்டில் அபிவிருத்தி, உற்பத்தி செயற்பாடுகளில் இளைஞர்களின் சவால்களும், எதிர்காலம் பற்றியும் கருப்பொருளாகக் கொள்ளப்பட்டன.


குறிப்பாக சுழல், சமூகம், பொருளாதாரம் ஆகிய செயற்பாடுகளில் இளைஞர்களின் மனோநிலை விருத்தியை வளர்ப்பது குறித்தும், இளைஞர்களின் திறமைகளை வெளிக்கொணர்வது குறித்தும் இத்தினத்தில் விசேடமாகக் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு வருகின்றன.

இளைஞர் தினத்தின் தொணிபொருள்களை பின்வருமாறு ஒரு பார்வையில் நோக்கலாம்.

2009 - SUSTAINABILITY: OUR CHALLENGE. OUR FUTURE.
2008 - Youth and Climate Change: Time for Action
2007 - Be seen> Be heard: Youth participation for development
2006 - Tackling Poverty Together
2005 - WPAY+10: Making Commitments Matter
2004 - Youth in an Intergenerational Society
2003 - Finding decent and productive work for young people everywhere
2002 - Now and for the Future: Youth Action for Sustainable Development
2001 - Addressing Health and Unemployment

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களது ஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:editor.kannadiputhagam@gmail.com

வம்சம் - மு‌ன்னோ‌ட்ட‌ம்!


மேக்னா மூவிஸ் சார்பில் தமிழக முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.தமிழரசு தயா‌ரித்திருக்கும் படம், வம்சம். புதுக்கோட்டையை கதைக்களமாகக் கொண்டு இப்படம் தயாராகியுள்ளது.

WD
பசங்க படத்தில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த பாண்டிரா‌ஜின் இரண்டாவது படம் வம்சம் என்பது படத்தின் மீதான அதிக எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணம். வம்சாவழியைப் பற்றிய கதைகளில் வன்முறை தூக்கலாக இருக்கும். ஆனால் வம்சத்தில் வலி இருக்குமே தவிர வன்முறை இருக்காது என்கிறார் பாண்டிரா‌ஜ்.

படத்தில் அருமையான காதல் ஒன்றும் வருகிறது. காதலனாக அருள்நிதியும், காதலியாக சுனைனாவும் நடித்துள்ளனர். அருள்நிதி தயா‌ரிப்பாளர் மு.க.தமிழரசுவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

கஞ்சா கருப்பு, ஜெயப்பிரகாஷ், அனுபமா, ரா‌ஜ்குமார் ஆகியோரும் நடித்துள்ளனர். மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்ய தா‌ஜ்நூர் என்பவர் இசையமைத்துள்ளார். இவர் இசையமைக்கும் முதல் படம் வம்சம்.

காதல், பகை, விருந்து, திருவிழா என கிராமத்தின் அனைத்து அத்தியாயங்களுடன் தயாராகியிருக்கும் வம்சம் வரும் 13 ஆம் தேதி திரைக்கு வருகிறது. சென்சார் இப்படத்துக்கு கொடுத்திருக்கும் சான்றிதழ், யு.

ர‌ம்ஜா‌ன் நோ‌ன்பு இ‌ன்று தொட‌ங்‌கியது!


பு‌னித ரமலா‌ன் ‌மாதத்தையொ‌ட்டி இ‌‌ஸ்லா‌மிய‌ர்க‌ளி‌‌ன் ர‌‌ம்ஜா‌ன் நோ‌ன்பு இ‌ன்று தொட‌ங்‌கியு‌ள்ளது.

இ‌ஸ்ல‌ா‌மிய‌ர்க‌ளி‌ன் ஐ‌ந்து கடமைக‌ளி‌ன் ஒ‌ன்றான நோ‌ன்பு பு‌னித ரமலா‌ன் மாத‌த்‌தி‌ல் 30 நா‌ட்க‌ள் கடை‌பிடி‌க்க‌ப்படுவது வழ‌க்கமாகு‌ம்.

அ‌திகாலை தொழுகை நே‌ர‌ம் துவ‌ங்‌கி சூ‌ரிய‌ன் மறையு‌ம் வரை இ‌ஸ்லா‌மிய‌ர்க‌ள் நோ‌ன்பு இரு‌ப்பா‌ர்க‌ள். ‌‌வி‌ண்‌ணி‌ல் ‌பிறை தெ‌ரி‌ந்தது‌ம் ர‌ம்ஜா‌ன் நோ‌ன்பு துவ‌ங்க‌ம்.

நே‌ற்று மாலை த‌மிழக‌ம், ஆ‌ந்‌திரா, மகாரா‌‌ஷ்டிரா, உ‌த்‌‌‌திர‌ப்‌பிரதேச‌ம் உ‌ள்‌ளி‌ட்ட நா‌ட்டி‌ன் ப‌ல்வேறு மா‌நில‌ங்க‌ளி‌ல் ‌பிறை தெ‌ரி‌ந்ததாக இ‌ஸ்லா‌மிய ம‌த‌த் தலைவ‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.

ரமலா‌ன் மாத‌த்தை இ‌ஸ்லா‌மிய‌ர்க‌ள் ‌சி‌ற‌ப்பு மாதமாக கருது‌கிறா‌ர்க‌ள். இ‌ந்‌நிலை‌யி‌ல் இ‌ஸ்லா‌மிய‌ர்க‌ளி‌‌ன் பு‌னித நூலான ‌திரு‌க்குரா‌ன் ரமலா‌ன் மாத‌த்த‌ி‌ல் தா‌ன் அருள‌ப்ப‌ட்டது.

நோ‌ன்பு கால‌ங்க‌ளி‌ல் ‌பி‌ன்‌னிர‌வி‌ல் உ‌ண்ண‌ப்படு‌ம் உணவை இ‌‌‌ஸ்லா‌மிய‌ர்க‌ள் சஹ‌ர் உணவு எ‌ன்று அழை‌க்‌கிறா‌ர்க‌ள். நோ‌ன்பு பெருநாளான ர‌ம்ஜா‌ன் ‌தின‌த்த‌ி‌ல் ‌‌மி‌த்ரா எ‌ன்னு‌‌ம் த‌ர்ம‌த்தை இ‌ஸ்லா‌மிய‌ர்க‌ள் த‌ங்க‌ள் கடமையாக கருது‌கிறா‌ர்க‌ள்.

''16 வய‌தி‌ல் ‌திருமண‌ம் செ‌ய்தாலு‌ம் ச‌ட்ட‌ப்படி செ‌ல்லு‌ம்''!



''16 வய‌தி‌ல் ‌திருமண‌ம் செ‌ய்தாலு‌ம் அது ச‌ட்ட‌ப்படி செ‌ல்லு‌ம்'' எ‌ன்று டெ‌ல்‌லி உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் பரபர‌ப்பு ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்து‌ள்ளது.

டெ‌ல்‌லியை சே‌ர்‌ந்த 18 வயது ‌ஜிதே‌ந்‌திர குமா‌ர், 16 வயது பூன‌ம் ச‌ர்மா ஆ‌கியோ‌ரி‌ன் குடு‌ம்ப‌த்‌தின‌ர் தொட‌ர்‌ந்த வழ‌க்‌கி‌ல் ‌தீ‌ர்‌ப்ப‌‌ளி‌த்த டெ‌ல்‌லி உய‌ர் ‌நீ‌திம‌ன்ற ‌நீ‌திப‌திக‌ள் அகம‌த், ‌ஜி.கே.ஜெ‌யி‌ன் இருவரு‌ம் ‌பா‌லிய‌ல் விவாக‌ம் எ‌ன அழை‌‌க்க‌ப்படு‌ம் குழ‌ந்தை ‌திருமண‌ம் ச‌ட்ட‌ப்படி தவறானது எ‌ன்று சு‌ட்டி‌க்கா‌ட்டியு‌ள்ளன‌ர்.

அதே நேர‌த்த‌ி‌ல் இள‌ம்வய‌தி‌ல் அ‌தாவது, ஆ‌ண் 18 வய‌திலு‌ம், பெ‌ண் 16 வய‌திலு‌ம் ‌திருமண‌ம் செ‌ய்து கொ‌ண்டா‌ல் அது ச‌ட்ட‌ப்படி தவறு ‌கிடையாது எ‌ன்று ‌நீ‌திப‌திக‌ள் ‌தீ‌‌ர்‌ப்ப‌ளி‌த்து‌ள்ளன‌ர்.

இ‌தி‌ல் ஆணோ அ‌ல்லது பெ‌ண்ணோ எ‌தி‌ர்‌ப்பு தெ‌ரி‌வி‌த்து வழ‌க்கு தொட‌ர்‌ந்தா‌ல் ம‌ட்டுமே இள‌ம் வய‌து ‌திருமண‌ம் செ‌ல்லுபடியாது எ‌ன்று‌ம் இள‌ம்பெ‌ண் ‌திருமண‌த்தை ர‌த்து செ‌ய்ய‌க் கோ‌ரி வேறு யாரு‌ம் புகா‌ர் செ‌ய்ய‌க் கூடாது எ‌ன்று‌ம் ‌நீ‌தி‌ப‌திக‌ள் த‌ங்க‌ள் ‌தீ‌ர்‌‌ப்‌பி‌‌ல் கூ‌‌றியு‌ள்ளன‌ர்.

இ‌ந்‌தியா‌வி‌ல் ‌திருமண வயது ஆணு‌க்கு 21 வயது எ‌ன்று‌ம், பெ‌ண்ணு‌க்கு 18 வயது எ‌ன்று‌ம் இரு‌க்கு‌ம் ‌நிலை‌யி‌ல் இ‌ந்த ‌தீ‌ர்‌ப்பு மு‌க்‌கிய‌த்துவ‌ம் வா‌ய்‌ந்ததாக கருத‌ப்படு‌கிறது.

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

செலவாளி மிஷல் ஒபாமா-அமெரிக்கர்கள் அதிருப்தி!


வாஷிங்டன்: செலவு செய்வதில் பெரும் சாதனை படைத்து வருகிறார் அமெரிக்க அதிபர் [^] பராக் ஒபாமாவின் மனைவி [^] மிஷல். இதனால் அவரை அந்தக்காலத்து பிரெஞ்சு மகாராணி மேரி ஆன்டாய்னட்டுடன் ஒப்பிட்டுப் பேச ஆரம்பித்துள்ளனர் அமெரிக்கர்கள்.

அமெரிக்கப் பொருளாதாரம் [^] அந்தா, இந்தா என்று தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கிறது. வேலைவாய்ப்புகள் இல்லாமல் அமெரிக்கர்கள் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள். எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் பெரும் சிக்கலில் இருக்கிறார் அதிபர் ஒபாமா. இந்த நிலையில் மிஷல் ஒபாமா செய்து வரும் ஆடம்பர செலவுகளால் அமெரிக்கர்களிடையே கடும் அதிருப்தி அலை வீசத் தொடங்கியுள்ளது.

விடுமுறைக்காக ஸ்பெயின் சென்றார் மிஷல். தனியாக இல்லை, 40 தோழர், தோழியருடன். மிஷலின் இந்த பயணத்தால், ஒரு நாளைக்கு குறைந்தது 80 ஆயிரம் டாலர்களாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மிஷலின் இந்த ஆடம்பர செலவுப் பயணத்தால் அதிருப்தி அடைந்துள்ள அமெரிக்கர்கள் அவரை விளாசித் தள்ள ஆரம்பித்துள்ளனர். ஒரு அமெரிக்கர் தனது பிளாக்கில், மிஷலை மேரி ஆன்டாய்னட்டுடன் ஒப்பிட்டு எழுதியுள்ளார்.

அந்தக்காலத்து பிரெஞ்சு மகாராணிதான் மேரி. மிக மிக ஆடம்பரமானவர். கடைசியில் அவரை தலையைத் துண்டித்துப் படு கொலை செய்தனர். அந்த அளவுக்கு மக்களின் வெறுப்பை சம்பாதித்தவர் ஆஸ்திரியாவில் பிறந்து பிரெஞ்சு மகாராணியான மேரி. அவருடன் தற்போது மிஷலை ஒப்பிட்டுள்ளதால் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

ஸ்பெயினும் கூட மிஷலை விமர்சித்து பேச்சுக்கள் கிளம்பியுள்ளன. இதற்குக் காரணம், மிஷல் தனது மகள்களுடன் நீச்சலடித்து மகிழ்ச்சியாக பொழுதுபோக்குவதற்கு வசதியாக, மார்பெல்லாவில் உள்ள கடற்கரைப் பகுதியை பொதுமக்கள் பயன்படுத்த சிறிது நேரம் தடை விதித்தனர். இதுவே ஸ்பெயினும், மிஷலுக்கு எதிராக குரல்கள் கிளம்பக் காரணம்.

மிஷலின் இந்த ஸ்பெயின் பயணத்தால் அதிபர் பராக் ஒபாமா தனது பிறந்த நாளை தனியாக கொண்டாட நேரிட்டதாம்.

நான்காண்டுகளில் 3,976 இந்திய குழந்தைகள் தத்துகொடுப்பு!


கடந்த 2005 முதல் 2009 ஆ‌‌ம் ஆ‌ண்டு வரையிலான நான்காண்டுகளில் இ‌ந்‌தியா‌வி‌ல் இரு‌ந்து மொத்தம் 3,976 குழந்தைகள் வெளிநாடுகளுக்கு தத்துகொடுக்கப்பட்டுள்ளதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் கிருஷ்ணா தீரத் மாநிலங்களவையில் தெரிவித்து‌ள்ளார்.

கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் அவர் கூறியதாவது :

மத்திய தத்துகொடுத்தல் வள முகமை (CARA) வாயிலாக நமது நாட்டிலிருந்து குழந்தைகள் அயல்நாடுகளுக்கு தத்து கொடுக்கப்படுகிறார்கள். அமெரிக்காவிற்கு 1500 பேர், டென்மார்க் 145, ஸ்பெயின் 320, இத்தாலி 679, சுவீடன் 210, ஐக்கிய அரபு நாடுகள் 163, சுவிட்சர்லாந்து 118, கனடா 116, ஆஸ்திரேலியா 85, ஜெர்மனி 82, பிரான்சு 92, நார்வே 84, இங்கிலாந்து 92, பெல்ஜியம் 71, நெதர்லாந்து 53 இந்திய குழந்தைகள் தத்து கொடுக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாடுகளுக்கு குழந்தைகளை தத்து கொடுப்பதற்கான நெறிமுறைகளை கரா அமைப்பு வகுத்துள்ளது. நாடுகள் இடையே தத்து கொடுத்தல் தொடர்பாக ஹேக் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையிலும், உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களின் பேரிலும் இந்திய அரசு இந்த நெறிமுறைகளை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு அமைப்புகள் கவனமாக பரிசீலித்த பின்பு நமது நாட்டிலிருந்து குழந்தைகள் வெளிநாடுகளுக்கு தத்து கொடுக்கப்படுகிறார்கள். தத்து கொடுக்கப்பட்ட பின்பு, இரண்டாண்டு காலத்திற்கு, அயல்நாட்டு அமைப்புகள் வாயிலாக இக்குழந்தைகளின் நிலை பற்றிய அறிக்கைகள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பெறப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன எ‌ன்று அமைச்சர் கிருஷ்ணா தீரத் தெரிவித்து‌ள்ளா‌ர்.