வியாழன், 26 ஆகஸ்ட், 2010

அன்னை தெரசா - நூற்றாண்டு விழா நினைவுகள்!


அன்புக்கும், கருணைக்கும் ஓர் மகத்தான கட்டமைப்பை உருவாக்கி அதை உலகம் எங்கிலும் தழைத்துப் பரவச் செய்து, போற்றுதலுக்கும் வழிபாட்டுக்கும் உரிய தெய்வத் திருஉருவமாக விளங்கும் அன்னை தெரசாவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை 2010 ஆகஸ்ட் 26 ஆம் தேதி தொடங்கி இந்திய நாடும் அதன் மக்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாட இருக்கிறார்கள்.

கடந்த 2003இல் அன்னை தெரசா ஆசிர்வதிக்கப்பட்டவராக போப்பாண்டவரால் அறிவிக்கப்பட்டார். ஆசிவதிக்கப்படுதல் என்பது, "கத்தோலிக்கத் திருச்சபையின் உறுப்பினர்களில் ஒருவர் பாவமன்னிப்பு கோரியவர் அல்லது வீர மரணம் அடைந்த தியாகி என்ற முறையில் புனித வாழ்க்கைக்கு, ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கு, அதாவது சொர்க்கத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்குத் தகுதியானவர் என கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர் என்ற முறையில் போப்பாண்டவரால் பிரகடனம்" செய்யப்படுவதாகும்.

அன்னை தெரசாவின் வாழ்க்கை 'கடவுளின் சகோதரர்களில் கடைக்கோடியில் இருப்பவர்களுக்கு' சேவை செய்வதற்கு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கை என மதிப்பிடுவதற்கு உரியதாகும். பைபிளின் 'கடைசித் தீர்ப்பில்' விவரிக்கப்பட்டுள்ள ஏழைகளுக்கும், நேசிக்கப்படாதவர்களுக்கும் சேவை செய்தல் என்ற கட்டளைக்குக் கட்டுப்பட்டு மெய்யாகவே வாழ்ந்தவர் என்ற முறையில் 'சொர்க்கத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு' அவர் தகுதியானவர்:

"பிறகு அவரின் வலது கைப்பக்கத்தில் இருந்தவர்களை நோக்கி அரசர் கூறுவார், என் தந்தையால் ஆசிர்வதிக்கப்பட்டவர்களே, வாருங்கள், உலகின் அடித்தளத்தில் இருந்து உங்களுக்காக உருவாக்கப்பட்ட அரசாட்சியை ஏற்றுக் கொள்ளுங்கள்; நான் பசியாக இருநூதேன் நீங்கள் எனக்கு சாப்பிடுவதற்குக் கொடுத்தீர்கள்; நான் தாகத்துடன் இருந்தேன் நீங்கள் எனக்குக் குடிப்பதற்குக் கொடுத்தீர்கள்; புதியவனான என்னை உள்ளே அழைத்துச் சென்றீர்கள்; நிர்வாணமாக இருந்த எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்ற என்னை வந்து கவனித்தீர்கள்; சிறையில் இருந்தபோது என்னை வந்து பார்த்தீர்கள்.

அதைத் தொடர்ந்து அவருக்குப் பதில் அளிக்கும் வகையில் நியாயவான் கூறுவார் 'எப்போது நாங்கள் உங்களை பசியுடன் பார்த்தோம், உங்களுக்கு உணவளித்தோம்; அல்லது எப்போது நாங்கள் உங்களை தாகத்துடன் பார்த்து உங்களுக்கு குடிப்பதற்குக் கொடுத்தோம்? எப்போது நாங்கள் உங்களைப் புதியவராகப் பார்த்து உள்ளே அழைத்துச் சென்றோம் அல்லது நிர்வாணமாக இருந்த உங்களுக்கு ஆடை அணிவித்தோம்? அல்லது எப்போது நாங்கள் உங்களை நோயாளியாக அல்லது சிறையில் பார்த்தோம்?

இதற்குப் பதில் அளித்து அரசர் சொல்லுவார், ஆமென், என் சகோதரர்களில் கடைக்கோடியில் இருப்பவர்களில் ஒருவருக்கு நீங்கள் இதைச் செய்கின்ற காலம் வரையிலும், இதை நீங்கள் எனக்குச் செய்வதர்கள் ஆவீர்கள்."

முன்னாள் யுகோஸ்லேவியாவில் உள்ள மெசடோனியாவைச் சேர்ந்த ஸ்கோப்ஜே நகரில், 1910 ஆகஸ்ட் 26இல் ஆக்னஸ் கான்ஸா பொஜாக்ஸியு ஆகப் பிறந்த அன்னை தெரசா எப்போதுமே சுதந்திரமானவராகவும், கீழ்ப்படிந்து நடப்பவராகவும், முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட சில கருத்துக்களும் எதிர்பார்ப்புகளுக்கும் அறைகூவல் விடுப்பவராகவும் இருந்தார். எதிர்பார்த்ததற்கு முரணாகத் தோன்றினாலும் கூட மற்றவர்கள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்பதற்கு விருப்பம் உடையவராகவும், அவரது மனசாட்சியைப் பின்பற்றி நடப்பவராகவும் இருந்தார் என்பதற்கு அவரது சொந்த வாழ்க்கைக் கதையில் பல்வேறு காட்சிகள் அடங்கியுள்ளன.

எதிர்கால அன்னை தெரசா, 1928இல் அவரின் குடும்பத்தையும் அவருக்குத் தெரிந்த வாழ்க்கையையும் விட்டு விலகி வெகு தொலைவில் இருந்த அயர்லாந்தில் அவரின் சமய வாழ்க்கையைத் தொடங்கினார். இந்த வாழ்க்கைக்கு வந்த பின் அவரது தாயாரை அவர் மீண்டும் ஒருபோதும் சந்திக்கவே இல்லை. சிலருக்கு மட்டுமே புரிந்த மொழியில் அவர் பேசினார். அந்தக் காலக்கட்டத்தில் அவர் "மிகவும் சிறியவராக, அமைதியும், கூச்சமும் நிறைந்வராக இருந்தார்" என்று சகோதரி ஒருவர் நினைவு கூர்ந்திருக்கிறார். அந்த சமயப் பிரிவின் மற்றொரு உறுப்பினர் அவர் 'சாதாரணமான' பெண் ஆக இருந்தார் என்று குறிப்பிட்டிருக்கிறார். எப்படி இருந்தபோதிலும், அசைக்க முடியாத உறுதி, சுய கட்டுப்பாடு என்ற ஒரு தனிச்சிறப்பான பண்பு அவரின் வாழ்க்கையில் எப்போதுமே ஓர் அங்கமாக இருந்து வந்தது. லோரெட்டோ சகோதரிகள் அமைப்புடனான அவரது இணைப்புக்க அலு வலுவூட்டியது. அவரது வாழ்க்கை முழுவதிலும் அந்தப் பண்பு நிறைந்திருக்கிறது.

ஓராண்டு கழித்து, 1929இல் டார்ஜிலிங்கில் உள்ள லோரெட்டோ சகோதரிகள் அமைப்பில் பயிற்சி பெறுவதற்காக ஆக்னஸ் கான்ஸா அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு முதல் உறுதிமொழி ஏற்ற பிறகு, கொல்கத்தாவில் உள்ள புனித மேரி பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு அவர் அனுப்பப்பட்டார். செல்வந்தர்களின் புதல்விகளுக்கான பாதுகாக்கப்பட்ட அந்த பள்ளிச் சூழலில்தான், "ஏழைகளிலும் பரம ஏழைகளுக்கு" சேவை செய்யும் தெரசாவின் புதிய வாழ்க்கைத் தொழில் உருப்பெற்று வளர்ந்தது. 1946இல் ஓய்வெடுப்பதற்காக டார்ஜிலிங் சென்றபோது தெரசா கேட்ட "இரண்டாவது அழைப்பின்" தெளிவான செய்தியாக அது இருந்தது.

அவருக்கு அது கடவுள் காட்டிய திசைவழி என்பதில் "ஒருபோதும் சந்தேகம் கொள்ளாத" தெரசா அந்த வழியைப் பின்பற்றுவதற்காக அடுத்த இரண்டு ஆண்டுகள் எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்தினார். "தெருக்களில் இறங்கிச் செல்வதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்த லொரேட்டோ சகோதரிகள் அமைப்பை விட்டு வெளியேறுவதற்கும் முடிவு செய்தேன். எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஏசு சிறித்துவைப் பின்பற்றி குடிசைப் பகுதிகளுக்குச் சென்று ஏழைகளிலும் பரம ஏழைகள் மத்தியில் அவருக்கு சேவை செய்யுமாறு எனக்கு விடுக்கப்பட்ட அழைப்பை நான் கேட்டேன்" என்று தெரசா குறிப்பிட்டிருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக