ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

டவ் நிறுவனத்தை மூடக் கோரி மகஇகவினர் போராட்டம் 750 பேர் கைது!


சென்னை : போபால் விஷ வாயு படுகொலைகளுக்குக் காரணமான யூனியன் கார்பைடு நிறுவனத்தை வாங்கியுள்ள டவ் நிறுவனத்தை மூடக் கோரி சென்னை [^]யில் மக்கள் [^] கலை இலக்கியக் கழகத்தினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதையடுத்து 750 பேர் கைது செய்யபப்பட்டனர்.

கிண்டியில் இந்த டவ் நிறுவனம் உள்ளது. அந்த நிறுவனத்திற்கு முன்பு இன்று சாலை மறியல் போராட்டம் நடந்தது.

போபால் விஷ வாயு போல் டவ் கம்பெனியில் இருந்தும் நச்சுவாயு வெளியெறும் அபாயம் இருக்கிறது. எனவே இந்த கம்பெனியை மூட அரசு நடவடிக்கை [^] எடுக்க வேண்டும். கம்பெனியை மூட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இதையடுத்து போராட்டம் நடத்திய 750 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக