சனி, 31 ஜூலை, 2010

போரடித்தால் 'செக்ஸ்'!!


பெண்கள் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள விரும்புவதற்கு வேறு சில காரணங்களும் இருப்பதாக ஒரு ஆய்வில் கண்டுபிடித்து தெரிவித்துள்ளனர்.

போரடிப்பதை விரட்டவும், மண்டையை உடைக்கும் தலைவலியிலிருந்து சற்று நிம்மதி பெறவும் கூட பெண்கள் [^] செக்ஸ் உறவை விரும்புவதாக அந்த ஆய்வு கூறுகிறது. அதாவது காதல் [^], காமம் சம்பந்தப்படாத காரணங்களுக்காகவும் கூட பெண் [^]கள் செக்ஸ் உறவை விரும்புவதாக இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளதாம். சில நேரம் ஆண்கள் மீது பரிதாபப்பட்டும் கூட செக்ஸ் உறவுக்கு பெண்கள் முன் வருகிறார்களாம்.

டெக்ஸாஸ் பல்கலைக்கழக பேராசிரியர்களான சின்டி மெஸ்டன் மற்றும் டேவிட் பஸ் ஆகிய இருவரும் இதுதொடர்பான ஆய்வு நூலை வெளியிட்டுள்ளனர். அதில் பெண்கள் உடலுறவை விரும்புவதற்கான 200 காரணங்களை விளக்கியுள்ளனர்.

போரடிப்பதிலிருந்து விடுபட, மன அமைதிக்காக, தலைவலியிலிருந்து தப்ப, பார்ட்னர்கள் தங்களை நல்ல டின்னருக்கு அழைத்துச் சென்றதற்கு 'தேங்க்ஸ்' சொல்வதற்காக, 'பாவமாக' இருக்கிறதே என்ற பச்சாதாபத்திற்காக என்று ஏகப்பட்ட காரணங்களை இவர்கள் அந்த நூலில் அடுக்கியுள்ளனர்.

பெரும்பாலான ஆண்களுக்கு பெண்களைப் பார்த்ததுமே அவர்கள் மீது மோகம் பிறக்கிறது. ஆனால் பெண்களுக்கு அப்படி இல்லை. ஆண்களைப் பார்த்ததுமே அவர்களுக்கு மோகம் வருவதில்லை என்றும் இந்த பேராசிரியர்கள் கூறியுள்ளனர்.

தங்களது ஆய்வுக்காக 1006 பெண்களை இவர்கள் பேட்டி கண்டுள்ளனர். இந்த பேட்டியின்போது பல சுவாரஸ்யமான தகவல்களும் கிடைத்தனவாம்.

சிலர் தங்களது செக்ஸ் திறமைகளை மேம்படுத்திக் கொள்வதற்காக அடிக்கடி உறவுக்கு தயாராவதாக கூறியுள்ளனர்.

பெரும்பாலானவர்கள் சொன்ன பதில், மன அமைதிக்காகவும், உடல் திருப்திக்காகவும் செக்ஸ் உறவை நாடுவதாக கூறியுள்ளனர்.

இன்னும் சிலரோ, தங்களது பார்ட்னர்களிடம் சில வேலைகளைச் செய்யக் கொடுத்து அதை அவர்கள் செய்வதற்காக செக்ஸ் உறவுக்கு உடன்படுவதாகவும் (அதாவது லஞ்சம்!) கூறியுள்ளனர்.

ஒரு பெண் கூறுகையில், எனக்கு போரடித்தால் பிடிக்காது. அந்த மாதிரி உணர்வு வந்தால் உடனே செக்ஸ் வைத்துக் கொள்வேன். இதனால் போரடிப்பது போன்ற உணர்வும் போகும், கொஞ்சம் ரிலாக்ஸ்டாகவும் இருக்கும் என்று கூறியுள்ளார்.

இன்னொரு பெண் கூறுகையில், நான் இரண்டு பேரை சந்தித்தேன். அவர்களைப் பார்க்கவே பாவமாக இருந்தது. இதனால் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டேன் என்று கூறியுள்ளார்.

பத்தில் ஒரு பெண், தங்களுக்கு ஏதாவது பரிசு, நல்ல இரவு விருந்து கிடைத்ததற்கு நன்றிக் கடனாக செக்ஸ் உறவை தங்களது பார்ட்னர்களுக்கு வழங்குவதாக கூறியுள்ளனர்.

ஒரு பெண்மணி கூறுகையில், எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். கடவுளை நெருங்க செக்ஸ் சிறந்த வழி என்பது எனது எண்ணம். அதனால் செக்ஸ் உறவு கொள்ளும்போது கடவுளுக்கு அருகில் செல்வது போல உணர்கிறேன். இதனால் செக்ஸ் உறவை விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

அதனால்தான் சாமியார்களுக்கும், செக்ஸுக்கும் நிறைய தொடர்பு இருக்கிறதோ...!!!

இன்று பெண்கள் உடுத்தும் பிரா கண்டுபிடிக்கப்பட்டு 100 ஆண்டுகளாகிறது!


கடந்த 1910ம் ஆண்டு நியூயார்க்கைச் சேர்ந்த பெண்மணியான மேரி பெல்ப்ஸ் ஜேக்கப் என்பவர்தான் இப்போது பெண்கள் [^] அணியும் பிராவைக் கண்டுபிடித்தவர் ஆவார்.

ஸ்டீம் போட்டைக் கண்டுபிடித்த ராபர்ட் புல்டன் பரம்பரையைச் சேர்ந்தவர் மேரி. 1910ம் ஆண்டு 19 வயதாக இருந்த மேரி, அப்போது நடைமுறையில் இருந்த உள்ளாடையை அணிந்த போது மிகவும் அசவுகரியமாக உணர்ந்துள்ளார்.

இப்படி ஒரு உள்ளாடையா என்று கடுப்பான அவர் தனது வேலைக்காரப் பெண்ணை அழைத்து, இரண்டு வெள்ளை நிற கர்ச்சீப்களை கையில் கொடுத்து அவற்றை ஒரு பிங்க் நிற ரிப்பனால் இணைத்து (அதாவது இப்போது உள்ள பிராவைப் போல) அதை தனது மார்பில் அணிந்து கொண்டு பின்புறமாக கட்டிக் கொண்டார்.

இது பெரிய அளவில் வசதியாக இல்லாவிட்டாலும் கூட அப்போது இருந்த பிராக்களை விட மிக மிக வசதியாக இருந்ததாக மேரி உணர்ந்தார். இதையடுத்து இதே பாணியைக் கடைப்பிடித்து விதம் விதமான முறையில் தனது தேவைக்கேற்ப உள்ளாடையை உருவாக்கிப் பார்த்தார்.

அதில் அவருக்கு வெற்றி [^] கிடைத்தது. இதை தனது தோழிகளிடம் சொல்ல அவர்களுக்கும் ஆர்வம் அதிகமாகி அவர்களும் கேட்டு வாங்கி அணிய ஆரம்பித்தனர். இப்படியாக மேரி உருவாக்கிய பிரா பிரபலமானது. இதையடுத்து 1914ம் ஆண்டு அவர் காப்புரிமை பெற்றார். பின்னர் வெறும் 1500 டாலர்களுக்கு அந்த காப்புரிமையை வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்திடம் விற்றார்.

அதன் பிறகு உலகம் [^] முழுவதும் மேரி தயாரித்த பிராக்கள் புகழ் பெற ஆரம்பித்தன. 1970ம் ஆண்டு தனது 78வது வயதில் மேரி மரணமடைந்தார். அப்போது பிரா தயாரிப்பு பெரும் தொழிலாக மாறியிருந்தது.

தான் கண்டுபிடித்த பிரா குறித்து மேரிஒருமுறை கூறுகையில், பிரேசியருக்கு வரலாற்றில் இவ்வளவு பெரிய இடம் கிடைக்கும் என நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. எனது சுய தேவைக்காகவே இதை உருவாக்கினேன். ஆனால் இது இன்று உலகம் முழுவதும் முக்கியமான விஷயமாக மாறியுள்ளது. ஆச்சரியமாக இருக்கிறது என்றார் மேரி.

வெள்ளி, 30 ஜூலை, 2010

சென்னையில் லேப்டாப் விற்பனை 173% அதிகரிப்பு!


டெல்லி: இந்தியாவில் 2009-10ம் நிதியாண்டில் கம்ப்யூட்டர்கள் மற்றும் லேப்டாப்கள் விற்பனை 18 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதில் லேப்டாப்கள் விற்பனை 65 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில் மட்டும் 25.08 லட்சம் லேப்டாப்கள் விற்றுள்ளன.

சென்னை, மும்பை [^], டெல்லி [^], கொல்கத்தா ஆகிய 4 நகரங்களில் இதன் விற்பனை 173 சதவீதம் அதிகரித்துள்ளது.

கம்ப்யூட்டர்களைப் பொறுத்தவரை 55.26 லட்சம் விற்பனையாகியுள்ளன.

அதே போல லேசர் பிரிண்டர்கள் விற்பனையும் அதிகரித்துள்ளது. மொத்தத்தில் பிரிண்டர்கள் விற்பனை 6 சதவீதம் அதிகரித்து 17.20 லட்சம் என்ற எண்ணிக்கையைத் தொட்டுள்ளது.

மேலும் யு.பி.எஸ். விற்பனையும் 53 சதவீதம் உயர்ந்துள்ளது.

இந்தியாவில் 2020இல் கடும் தண்ணீர் பற்றாக்குறை: அமெரிக்கா எச்சரிக்கை!


இந்தியாவில் இன்னும் 10 ஆண்டுகளில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என அமெரிக்க அமைச்சர் ராபர்ட் பிளேக் எச்சரித்துள்ளார்.

தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க அயலுறவுத் துறை துணை அமைச்சரான ராபர்ட் பிளேக் வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசுகை‌யி‌ல், மக்கள் தொகை பெருக்கம் மற்றும் நகரமயமாக்கல் ஆகியவற்றால் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் என்பது இந்தியாவில் சவாலாக உருவெடுத்துள்ளது. மாநிலங்களுக்கு இடையே மோதல் மற்றும் எல்லைப் பிரச்னைகளுக்கு தண்ணீர் ஒரு காரணமாக ஆகிவருகிறது.

இந்தியாவில் 12 சதவீதம் பேருக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை. நாட்டில் மொத்தம் உள்ள 626 மாவட்டங்களில் பாதிக்கும் மேற்பட்டவை 2009-ல் வறட்சியால் பாதிக்கப்பட்டன. இந்தியாவின் தண்ணீர்த் தேவையில் 75 சதவீதம் 3 மாதங்களில் பெய்யும் மழை மூலம் கிடைக்கிறது. ஆனால், அதை தேக்கிவைக்க போதுமான வசதிகள் இல்லை.

நகரப் பகுதிகளில், எல்லா வருவாய் தரப்பினரும் தண்ணீரை பணம் கொடுத்து வாங்கும் நிலையே உள்ளது. நகரங்களில் 40 சதவீத குடும்பங்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில்லை. 36 சதவீதம் குடும்பங்களுக்கு மட்டுமே கழிப்பிட வசதி உள்ளது. அசுத்தமான குடிநீர் காரணமாக பலவிதமான நோய்களுக்கு மக்கள் ஆளாகிறார்கள். இதனால் குழந்தை இறப்பு விகிதமும் அதிகரிக்கிறது.

நாட்டின் பல பகுதிகளில் விவசாயத்துக்கு போதுமான நீர் கிடைப்பதில்லை. 2025-ல் உலகில் மூன்றில் இரண்டு பங்கு நாடுகளில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மக்கள் தொகை பெருக்கம், பருவநிலை மாற்றத்தால் பனிமலைகள் உருகுதல் உள்ளிட்டவையால் தோன்றும் இதுபோன்ற சவால்களை அரசாங்கத்தால் மட்டுமே எதிர்கொள்ள முடியாது. மக்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று பிளேக் கூ‌றினா‌‌ர்.

''2050ஆ‌ம் ஆ‌ண்டு இந்திய மக்கள்தொகை 170 கோடியாகும்''


உலக மக்கள்தொகை வரும் 2050ஆம் ஆண்டில் 940 கோடியைத் தொட்டுவிடும். அப்போது இந்தியாவின் மக்கள்தொகை 170 கோடியாக அதிகரிக்கும் என அமெரிக்க மக்கள்தொகை ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

இப்போது உலக மக்கள்தொகை 680 கோடியாக உள்ளது. 2025ஆம் ஆண்டுவாக்கில் இந்த எண்ணிக்கை 800 கோடியைத் தொட்டுவிடும். உலக மக்கள்தொகையில் சீனா 130 கோடியுடன் முதலிடத்தை வகிக்கிறது. 2வது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவின் மக்கள்தொகை 120 கோடியாகும்.

இதே விகிதத்தில் மக்கள்தொகை வளர்ச்சி இருக்குமானால் 2050இல் உலக மக்கள்தொகை 940 கோடியாக அதிகரிக்கும். இதில் ஆசியக் கண்டத்தில் மட்டும் மக்கள்தொகை 550 கோடியாக இருக்கும். இந்திய, சீன நாடுகளின் மக்கள்தொகை பெருக்கத்தைப் பொருத்து இந்த எண்ணிக்கை மாறுபடலாம்.

ஆப்பிரிக்கக் கண்டத்தில் 2050இல் மக்கள்தொகை 210 கோடியாக அதிகரிக்கும். அமெரிக்காவிலும் மக்கள்தொகை அதிகரித்து வருகிறது. இப்போது 31 கோடியாக உள்ள அமெரிக்க மக்கள்தொகை, 2050இல் 39.9 கோடி அல்லது 45.8 கோடி அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், ஐரோப்பிய நாடுகள் மற்றும் ர‌ஷ்யாவில் மக்கள்தொகை 2050இல் குறையக் கூடும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

வியாழன், 29 ஜூலை, 2010

கிளிண்டன் மகள் திருமணத்திற்கு ஒபாமாவை அழைக்கவில்லையாம்!

வாஷிங்டன்: முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனின் மகள் செல்சியா கிளிண்டன் திருமணம் [^] தான் அமெரிக்காவின் தற்போதைய பரபரப்பாக உள்ளது. ஆனால் இந்தக் கல்யாணத்திற்கு அதிபர் ஒபாமாவை கிளிண்டன் தம்பதியினர் அழைக்கவில்லையாம்.

முன்னாள் அமெரிக்க அதிபர் கிளிண்டன் மற்றும் தற்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் [^] ஹில்லாரி கிளிண்டன் தம்பதியின் மகள் செல்சியாவுக்கும், மார்க் மெஸ்வின்ஸ்கிக்கும் வருகிற சனிக்கிழமை திருமணம் நடைபெறவுள்ளது. இத் திருமணத்திற்கு ஒபாமாவிற்கு அழைப்பிதழ் கொடுக்கவில்லை.

இது குறித்து ஒபாமா கூறுகையில்,

என்னை இந்த திருமணத்திற்கு ஹில்லாரியும், பில்லும் அழைக்கவில்லை. அவர்கள் இந்த நிகழ்வை செல்சியாவுக்கும் அவரது வருங்கால கணவருக்கும் மட்டும் உரியதாக்குகின்றனர் என்று நான் நினைக்கிறேன்.

ஒரே திருமணத்தில் 2 அதிபர்கள் இருந்தால் ரகசிய போலீஸ், மெடல் டிடக்டர்கள் என்று வரும் விருந்தினருக்கு தொல்லை என்றார்.

இதேபோல கிளிண்டனிடம் துணை அதிபராக இருந்த அல் கோர், பிரபலங்கள் பார்பரா ஸ்ட்ரூசன்ட், டெட் டர்னர் ஆகியோரும் செல்சியா கல்யாணத்திற்கு அழைக்கப்படவில்லை.

இந்த திருமணம் மான்ஹாட்டனில் இருந்து வடக்கே 90 மைல் தூரத்தில் உள்ள குட்டி நகரில் உள்ள ஒரு ஆடம்பர எஸ்டேடில் நடக்கிறது. இதற்காகும் செலவு சுமார் 3 முதல் 5 மில்லியன் டாலர் ஆகும். வரும் சனிக்கிழமை நடக்கும் இந்த திருமணத்தின் பாதுகாப்பு [^] செலவு மட்டும் 200,000 டாலர்கள்.

ஏராளமான கடைகளில் மணமக்களை வாழ்த்தி போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். பாட்ரிசியா நிக்சன் திருமணத்திற்கு பின் இவ்வளவு கவனத்தை ஈர்த்துள்ளது இந்த திருமணம் தான் என்று டான்னி பிரவுன் என்னும் திருமண ஏற்பாடுகள் செய்பவர் கூறினார். இந்த ஆண்டின் மிகப் பெரிய திருமணம் இது தான் என்று அவர் மேலும் தெரிவித்தார்

த்‌ரிஷா, இலியானா – யாருக்கு அதிர்ஷ்டம்?


3 இடியட்ஸ் ‌ரீமேக்கில் யார் யாரை நடிக்க வைப்பது என்பது இன்னும் முடிவாகவில்லை. ஹீரோக்கள் மட்டுமல்ல ஹீரோயின் விஷயத்திலும் இழுபறிதான்.

3 இடியட்ஸ் ‌ரீமேக்கை ஷங்கர் இயக்குவதால் எப்படியும் படத்தில் இடம்பெறுவது என நடிகைகள் மத்தியில் தள்ளு முள்ளு. ஆனால் இறுதி லிஸ்டில் இடம் பிடித்திருப்பவர்கள் த்‌ரிஷாவும், இலியானாவும்தான்.


இவர்களில் யார் க‌‌ரீனா கபூர் நடித்த வேடத்தில் நடிக்கப் போகிறார் என்பதை இவர்களின் கால்ஷீட்டும், ஷங்கரும்தான் முடிவு செய்வார்கள். எந்திரன் ‌ரிலீஸுக்கு முன்பே இதற்கான விடை தெ‌ரிந்துவிடும் என்கிறார்கள் ஜெமினி ஃபிலிம் சர்க்யூட்டில்.

இந்தியாவில் செல்பேசி விற்பனை 18.5% அதிகரிக்கும்!


செல்பேசி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், 2010ஆம் ஆண்டில் மட்டும் செல்பேசி விற்பனை 18.5 விழுக்காடு உயர்ந்து 13.86 கோடியாக உயரும் என்று இது குறித்து ஆய்வு செய்துள்ள கார்ட்னர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

2009ஆம் ஆண்டில் இந்தியாவில் விற்ற மொத்த செல்பேசிகளின் எண்ணிக்கை 11.7 கோடியாகும். இந்த நிலை தொடர்ந்து அதிகரித்து 2014ஆம் ஆண்டில் 20.6 கோடியாக செல்பேசி விற்பனை அதிகரிக்கும் என்று கார்ட்னர் கூறியுள்ளது.

இந்திய சந்தையில் துவக்கத்தில் ஆதிக்கம் செலுத்தியவை நோக்கியா, மோட்டரோலா, ரிலையன்ஸ், வோடாபோன் ஆகியன, ஆனால் இப்போது குறைந்த விலை உள்ளுர் தயாரிப்புகளும், சீன தயாரிப்புகளும் மேற்கண்ட நிறுவனங்களுக்கு கடும் போட்டியை அளித்து வருகின்றன என்று கார்ட்னர் ஆய்வு நிறுவனத்தின் முதன்மை பகுப்பாய்வாளர் அன்சுல் குப்தா கூறியுள்ளார்.

தற்போது இந்திய சந்தையில் 50க்கும் மேற்பட்ட செல்பேசி நிறுவனங்களின் தயாரிப்புகள் விற்பனை ஆகி வருவதாக கார்ட்னர் தெரிவித்துள்ளது.

3ஜி என்றழைக்கப்டும் மூன்றாவது தலைமுறை செல்பேசிகள் இந்தியாவில் அறிமுகமாகியிருந்தாலும், அவைகளின் விற்பனைப் பங்கு 2010ஆம் ஆண்டில் 16.7 விழுக்காடாக மட்டுமே இருக்கும் என்றும், எதிர்காலத்தில் 3ஜி செல்பேசிகளின் விற்பனை மொத்த எண்ணிக்கையில் 69 விழுக்காடு அளவிற்கு உயரும் என்றும் கூறியுள்ள கார்ட்னர், ஸ்மார்ட் போன்களில் விற்பனை தற்போது 5.2 விழுக்காடாக உள்ளது, இது 2014இல் 18 விழுக்காடாக இருக்கும் என்றும் கூறியுள்ளது.

செவ்வாய், 27 ஜூலை, 2010

இளைஞர்கள் தற்கொலை எண்ணிக்கை தென்னிந்தியாவில் அதிகம்!


உலகிலேயே இளம் வயதில் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை தென்னிந்தியாவில் அதிகம் என்று ஊடகவியாளருக்கான மனநல விழிப்புணர்வு கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டு‌ள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு லட்சம் பேருக்கு 11 பேர் என்ற விகிதத்தில் தற்கொலை செய்து கொள்கின்றனர். நாட்டின் மொத்த எண்ணிக்கையில் சென்னை 3ஆ‌ம் இடத்தில் இருப்பதாகவும், இங்கு தற்கொலை செய்துகொள்வோரின் விகிதம் 11 விழுக்காடு எனவும் மனநல மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஊடகவியாளருக்கான மனநல விழிப்புணர்வு கருத்தரங்கு நே‌ற்று சென்னையில் நடைபெற்றது. மத்திய அரசின் பத்திரிகைத் தகவல் அலுவலகமும், மனச்சிதைவு நோய் ஆராய்ச்சி நிறுவனமும் (ஸ்கார்ஃப்) இணைந்து ஏற்பாடு செய்திருந்த இக்கருத்தரங்கில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற மனநல மருத்துவரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான டாக்டர் சாரதா மேனன் சிறப்புரையாற்றினார்.

மனநலம் குறித்த சரியான புரிதலுடன் ஊடகங்கள் செய்திகளை வெளியிட வேண்டும் என்ற கேட்டுக்கொண்ட அவர், பொது மக்களிடம் மனநலம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஊடகங்கள் முக்கிய பங்காற்ற இயலும் என்று தெரிவித்தார். மனச்சிதைவு உள்ளிட்ட மனநோய்களை முற்றிலும் குணப்படுத்த முடியும் என்று கூறிய டாக்டர் சாரதா மூட நம்பிக்கைகளை கைவிட்டு அறிவியல் பூர்வமாக இதனை அணுக வேண்டும் என்று கூறினார்.

உரிய மருத்துவரின் ஆலோசனைகளுடன் சரியான மருந்துகளை உட்கொண்டால் மனநலம் பாதித்தவர்களை குணப்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார். மனநோய்களால் பாதிக்கப்பட்டவர்களை திரைப்படங்கள் சரியான கோணத்தில் சித்தரிக்க வேண்டும், ஆக்கபூர்வமாக அணுக வேண்டும் என்றும் டாக்டர் சாரதா தெரிவித்தார்.

கருத்தரங்கில் துவக்க உரையாற்றிய அபிராமி ராமநாதன், மனச்சிதைவு நோயால் ஒருவருக்கு ஏற்படும் பாதிப்புகளை நேரடியாக பார்த்த அனுபவம் தனக்கு உண்டு என்றும் சரியான மருத்துவ சிகிச்சையும், குடும்பத்தினரின் அன்பும் அரவணைப்பும் மனநோயாளிகளுக்கு தேவை என்றும் எடுத்துரைத்தார்.

கருத்தரங்கில் உரையாற்றிய பத்திரிகைத் தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் க.மா.ரவீந்திரன், இன்றைய அவசர உலகில் மக்களை பெரிதும் பாதிப்பது மன அழுத்தமும், அதன் விளைவுகளும் தான் என்று கூறினார். மனநலம் தொடர்பான விழிப்புணர்வு செய்திகளை ஊடகங்கள் தொடர்ந்து வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

ஸ்கார்ப் அமைப்பு வருடம் தோறும் "ஃப்ரேம் ஆஃப் மைன்ட்" என்ற மனநலம் தொடர்பான விழிப்புணர்வு திரைப்பட விழாவை நடத்தி வருவதாகவும், ஐந்து நிமிடங்களுக்குள் மனநலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் குறும்படங்களுக்கு பரிசுகள் வழங்கப்படுவதாகவும் இந்த அமைப்பின் இயக்குனர் டாக்டர் தாரா தெரிவித்தார். 'மனநல குறைபாடு மற்றும் நோய்களை தீர்ப்பதில் குடும்பத்தின் பங்கு' என்பது இந்த ஆண்டு குறும்பட போட்டிக்கான தலைப்பு. போட்டிக்கான குறும்படங்களை இந்த ஆண்டு திரைப்பட விழாவிற்கு ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று அவர் கூறினார்.

மன அழுத்தமும், தற்கொலையும் என்ற தலைப்பில் சினேகா தற்கொலை தடுப்பு மையத்தின் இயக்குனர் டாக்டர் லட்சுமி விஜயகுமார், சிறுவர் மற்றும் வளர் இளம் பருவத்தினரின் மனநலம் என்ற தலைப்பில் குழந்தைகள் நல மருத்துவமனையின் மனநலத்துறை தலைவர் டாக்டர் ஜெயந்தினி, மனச்சிதைவு நோய், மனநலம் மற்றும் ஊடகங்கள் என்ற தலைப்பில் ஸ்கார்ப் அமைப்பைச் சார்ந்த டாக்டர் மங்களா ஆகியோர் உரையாற்றினர். பல்வேறு ஊடகங்களைச் சேர்ந்த செய்தியாளர்கள் இக்கருத்தரங்கில் பங்கேற்றனர்.

'xxx' டொமைனுக்கு 'டபுள்' ஓகே!

நீண்ட காலப் போராட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளனர் ஆபாச படத் துறையினர். தங்களுக்கென தனி டொமைன் வேண்டும் என்று கோரி அவர்கள் போராடி வந்தனர். இதை ஏற்றுள்ள பிரஸ்ஸல்ஸில் உள்ள இணையதளங்களுக்கான டொமைன்களை முடிவு செய்யும் ஐசிஏஎன்என் அமைப்பு, .xxx என்ற டொமைனுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது.

இதன் மூலம் செக்ஸியான, ஆபாசமான படங்கள், செய்திகள் அடங்கிய தளங்களை, இந்த டொமைன் மூலம் தனியாக இயக்கிக் கொள்ளலாம்.

2005ம் ஆண்டிலேயே இந்த xxx டொமைனுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இருப்பினும் பிற்போக்குவாத குழுவினரின் கடும் எதிர்ப்பு காரணமாக இந்த ஒப்புதல் திரும்பப் பெறப்பட்டது.

இந்த நிலையில் xxx டொமைனுக்கான தொடர் அழுத்தங்கள் அதிகரித்துக் கொண்டே வந்ததைத் தொடர்ந்து தற்போது xxx டொமைனை அனுமதிப்பது என்ற முடிவை ஐசிஏஎன்என் எடுத்துள்ளது.

இதையடுத்து இனிமேல் செக்ஸியான, ஆபாசமான படங்களையும், செய்திகளையும் கொண்ட தளங்கள் xxx என்ற டொமைனில் தனியாகவே இயங்கும்.

'அணில்' பீர், 'சீ'யர்ஸ்!


சிங்கம் மார்க் பீர் சாப்பிட்டிருப்பீர்கள். கிங்பிஷர் பீர் கூட சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் அணில் பீர் சாப்பிட்டிருக்கிறீர்களா?. 'ஜஸ்ட்' 765 டாலரில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பீர் அணில் உள்ளிட்ட இறந்த விலங்குளின் உடலிலிருந்து உருவாக்கப்படுகிறது என்பதைக் கேள்விப்பட்டால் உள்ளே போன பீர் வாந்தி ரூபத்தில் வெளியே வரக் கூடும்.

ஆனால் இது நிஜம். என்ன, நம்ம நாட்டில் இது இன்னும் விற்பனைக்கு வரவில்லை. அதனால் தைரியமாக இந்த செய்தியை தொடர்ந்து படிக்கலாம்.

இந்த விலை உயர்ந்த அணில் பீர், அணிலின் உடலிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் 55 சதவீத ஆல்கஹால் இருக்குமாம். இதனால் போதை நிறைய இருக்கும்.

இதுகுறித்து ஸ்காட்லாந்தைச் சேர்ந்த பீர் தயாரிப்பு நிறுவனமான ப்ரூடாக் கூறுகையில், உலகின் மிகவும் விலை உயர்ந்த, அதிர்ச்சிகரமான, அதேசமயம் வினோதமான பீர் இதுதான்.

முதல் கட்டமாக 12 பாட்டில் பீர் மட்டுமே தயாரித்துள்ளோம். அத்தனையும் விற்றுப் போய் விட்டது. அமெரிக்கா, கனடா, இத்தாலி, டென்மார்க், ஸ்காட்லாந்து, இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் இதை வாங்கியுள்ளனர். விரைவில் அவர்களுக்கு பார்சல் செய்து அனுப்பவுள்ளோம் என்றனர்.

அணில்கள், கீரிப்பிள்ளை உள்ளிட்ட விலங்குகளின் உடலிலிருந்து இந்த பீரைத் தயாரித்துள்ளனராம். அனைத்துமே ஏற்கனவே இறந்தவை என்று ப்ரூடாக் நிறுவன இணை நிறுவனர் ஜேம்ஸ் வாட் கூறுகிறார்.

வாந்தி வருவது போல இருக்கிறதா?

செல்போனில் தமிழ் செய்திகள்..உடனுக்குடன்!


இந்தியாவிலேயே முதல் முறையாக எஸ்.எம்.எஸ். மூலம் தமிழ்ச் செய்திகளை வழங்குகிறது MyToday.com.

இந்தியாவில் இப்படி எஸ்.எம்.எஸ். மூலம் செய்திகளை வழங்குவதி்ல் முன்னோடி மைடுடே.காம் தான். இந்த இணையம் மூலம் செல்போனில் செய்திகளை வழங்கப் போவது உங்கள் தட்ஸ்தமிழ்.

இந்த சேவையில் ஒரு விசேஷம் உண்டு. செய்திகளை பிரேக்கிங் நியூஸாக தருவதோடு நின்று விடாமல் அதை பிரவுஸ் செய்து பார்க்கவும் வசதி உண்டு.

இந்த சேவைக்கான கட்டணம், மாதம் வெறும் 5 ரூபாய் மட்டுமே. அதாவது, வருடத்திற்கு ரூ. 60 மட்டுமே.

இந்த சேவையை 15 நாட்கள் இலவசமாக பெறலாம்

இந்தக் கட்டணத்தை உங்களது கிரடிட் கார்டு, டெபிட் கார்டு அல்லது நெட் பாங்கிங் கணக்கின் மூலம் செலுத்தலாம். அல்லது உங்களது கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி போன் மூலமே செலுத்தலாம். ப்ரீ பெய்டு கேஷ் கார்டு மூலமாகவும் கட்டலாம். இல்லாவிட்டால் செக் கூட அனுப்பலாம்.

கட்டணம் குறித்த மேலும் விவரங்கள் அறிய.

பிறகென்ன, உங்களது மொழியில் செய்திகளை உடனுக்குடன் அறிய இப்போதே இந்த சேவைக்குள் நுழையுங்கள். வார நாட்களில் தினமும் நான்கு முறை உங்களது செல்போனைத் Subscribe to MyTodayதேடி செய்திகள் வரும்- உங்களது மொழியில்.

இந்த சேவையைப் பெற நீங்கள் செய்ய வேண்டியது start ONE-TANEWS என்ற எஸ்.எம்.எஸ். தகவலை 09212 012345 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டியது தான்.

இந்தியாவில் மட்டுமே இந்த சேவை கிடைக்கும்.

வியாழன், 15 ஜூலை, 2010

ஏரியில் நீர் வற்றுகிறது-மூடப்படுகிறது வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்!


வேடந்தாங்கல்: காஞ்சிபுரம் மாவட்டம் வேடந்தாங்கலில் உள்ள பறவைகள் சரணாலயம் சீசன் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து நாளையுடன் மூடப்படுகிறது. வட கிழக்குப் பருவமழை தொடங்கிய பின்னரே மீண்டும் அது திறக்கப்படும்.

வேடந்தாங்கலில் உள்ள பறவைகள் சரணாலயம் மிகவும் பிரபலமானது. இங்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பறவைகள் சீசனின்போது வருகை தருவது வழக்கம்.

ஆண்டுதோறும் நவம்பர் மாதம் சீசன் இங்கு தொடங்கும். இந்த ஆண்டும் சீசன் நவம்பர் மாதம் தொடங்கியது. ஆஸ்திரேலியா, இலங்கை, மியான்மர் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அரிவாள் மூக்கன் உள்ளிட்ட 80, 000 பறவைகள் வேடந்தாங்கலுக்கு வந்தன.

இவற்றை கிட்டத்தட்ட 2 லட்சம் பார்வையாளர்கள் பார்த்துச் சென்றனர். இந்த நிலையில் தற்போது வேடந்தாங்கல் ஏரியில்நீர் வற்றத்தொடங்கி விட்டது. இதையடுத்து அங்கு வந்திருந்த பறவைகள் கிளம்பிச் செல்ல தொடங்கி விட்டன.

இதைத் தொடர்ந்து நாளை முதல் பறவைகள் சரணாலயம் மூடப்படுகிறது. வட கிழக்குப் பருவ மழை தொடங்கிய பின்னரே மீண்டும் சரணாலயம் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகப் பெண்களிடம் கேரள வன அதிகாரிகளின் செக்ஸ் அட்டூழியம்-சைபர் கிரைம் போலீஸ் விசாரணைக்கு உத்தரவு!

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கும்பாவுருட்டி அருவிப் பகுதிக்குச் சென்ற தமிழகப் பெண்களிடம் பாலியல் ரீதியாக மகா அசிங்கமாக நடந்து கொண்ட கேரள வனத்துறை அதிகாரிகள் சிக்கியுள்ள வீடியோ குறித்தும், இந்த சம்பவம் குறித்தும் விசாரிக்க சைபர் கிரைம் போலீஸாருக்கு அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக-கேரள எல்லையும், புகழ் பெற்ற ஐயப்பன் கோவில் அமைந்துள்ள அச்சன்கோவில் வனப்பகுதியில் அமைந்துள்ளது, மணலாறு, கும்பாவுருட்டி அருவிகள்.

ஆண்டுக்கு 9 மாதங்கள் இந்த அருவியில் தண்ணீர் வரும். இதனால் கேரள மற்றும் தமிழக சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் இங்கு வந்து செல்வார்கள்.
கும்பாவுருட்டி அருவிக்கும், ஆரியங்காவு பாலருவிக்கும், தென்மலை எக்கோ டூரிசம் சென்டருக்கும் செல்வதுண்டு.

இதில் கும்பாவுருட்டி அருவிக்கு செல்லும் குடும்ப பெண்களை இங்குள்ள வனசம்பரக்ஷன் சமிதி மற்றும் வனத்துறையினர் பாலியல் ரீதியாக சித்திரவதை செய்து வருகின்றனர்.

கடந்த வாரம் இந்த அருவிக்கு குளிக்க சென்ற பெண்களை இக்கும்பல் மிரட்டி பலாத்காரம் செய்தது. மேலும், ஒரு தாயும், மகளையும் பலாத்காரம் செய்வதையும், காட்டு பகுதியில் நிர்வணமாக ஓடவிடுவதும், அதை கேமரா செல்லில் பதிவு செய்வதும், ஆபாசமாக பேசுவதுமான வீடியோ காட்சிகள் இன்டர்நெட் மூலம் பரவியது.

இச்சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி தற்போது தமிழகத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் கேரள சட்டசபையில் கடந்த 2 நாட்களாக பிரச்சனையை எழுப்பியுள்ளது.

இதுகுறித்து நேற்று சட்டசபையில் கேட்கப்பட்ட கேள்விக்கு காவல்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன் பதிலளிக்கையில், இதுகுறித்து அதிகாரிகளை விசாரிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் இன்று மீண்டும் சட்டசபையில் பிரச்சனை எழுப்பப்பட்டது. அப்போது பதிலளித்த கொடியேறி பாலகிருஷ்ணன், இந்த வீடியோ காட்சிகள் குறித்து சைபர் கிரைம் போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

புனே: ஊழியர்களை இழுப்பதை நிறுத்திக் கொண்ட ஐடி நிறுவனங்கள்!


புனே: விப்ரோ, இன்போசிஸ், டிசிஎஸ், காக்னிசன்ட் ஆகியவை பரஸ்பரம் பணியாளர்களை தங்கள் நிறுவனத்துக்கு இழுப்பதை நிறுத்திக் கொண்டுள்ளன. புனே நகரில் உள்ள இந்த நிறுவனங்களின் கிளைகள் இது தொடர்பாக தங்களுக்குள் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.

இதன்படி ஒரு நிறுவனத்தில் 'நோட்டீஸ் பிரீயடை' நிறைவு செய்யாத எந்த ஊழியரையும் இன்னொரு நிறுவனம் சேர்த்துக் கொள்வதில்லை என்று முடிவு செய்துள்ளன.

புனே ஹின்ஜேவாடி சாப்ட்வேர் பார்க்கி்ல் விப்ரோ, இன்போசிஸ், டிசிஎஸ், காக்னிசன்ட் உள்ளிட்ட 28 முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்களின் கிளைகள் உள்ளன.

இங்கு ஒரு நிறுவனத்தில் இருந்து இன்னொரு நிறுவனம் பணியாளர்களை இழுப்பது வழக்கம். தங்கள் ப்ராஜக்டுகளை விரைவில் முடிக்க ஏதுவாக, இந்த ஊழியர்களிடம் 'ரிலீவிங் ஆர்டர்' கூட இல்லாமல் பணியில் சேர்க்க ஆரம்பித்தன. இதனால் நோட்டீஸ் பிரீயடைக் கூட நிறைவு செய்யாமல் ஊழியர்கள் நிறுவனம் விட்டு நிறுவனம் தாவ ஆரம்பித்தனர்.

இந்த நோடீஸ் பிரீயடுக்காக பழைய நிறுவனத்தில் அந்த ஊழியர் செலுத்த வேண்டிய பணத்தை புதிதாக சேர்க்கும் நிறுவனம் 'ஜாயினிங் போனஸ்' என்ற பெயரில் வழங்கி வந்தது.

இதனால் இந்த நிறுவனங்களில் அடிக்கடி பணியாளர்கள் விலகலும், இதனால் ப்ராஜக்டுகள் தாமதமாவதும் வழக்கமாகிவிட்டது. இதன் காரணமாக எல்லா நிறுவனங்களுக்குமே பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

இதையடுத்து பரஸ்பரம் ஒரு நிறுவனத்திலிருந்து இன்னொரு நிறுவனம் பணியாளர்களை வேலைக்குச் சேர்ப்பதை கைவிடுவது என இந்த நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இது தொடர்பாக கடந்த மாதம் இன்போஸிஸ் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் 28 நிறுவனங்களின் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

அப்போது திறமையான பணியாளர்களை ஒரு நிறுவனத்தில் இருந்து இழுப்பதை தவிர்க்க முடியாது என்றே பெரும்பாலான நிறுவனங்கள் முதலில் கருத்துத் தெரிவித்தன. ஆனால், எல்லோருக்குமே பாதிப்பு ஏற்படுவதைக் கருத்தில் கொண்டு ஊழியர்களை சேர்க்க சில புதிய விதிகளை இந்த நிறுவனங்கள் உருவாக்கியுள்ளன.

அதன்படி ஒரு நிறுவனத்தில் நோட்டீஸ் பிரீயடை நிறைவு செய்யாமல் பாதியிலேயே திடீரென விட்டுவிட்டு வரும் எந்த ஊழியரையும் அடுத்த நிறுவனம் சேர்ப்பதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.

புனே நகரில் இந்த 28 நிறுவனங்களில் மட்டும் 1 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவை ஆண்டு்க்கு ரூ. 19,000 கோடி அளவுக்கு சாப்ட்வேர் ஏற்றுமதி செய்து வருகின்றன.

இந்த நிறுவனங்களில் பணியாளர்கள் விலகல் விகிதம் 17% ஆக உள்ளது. இதனால் ஆண்டுக்கு ரூ. 850 கோடி வரை இந்த நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்பட்டு வருவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

புனேயில் இந்த நிறுவனங்கள் செய்து கொண்டுள்ள இந்த 'அமைதி ஒப்பந்தம்' வெற்றி பெற்றால், நாடு முழுவதும் மேலும் பல பகுதிகளிலும் இது அமலாகலாம்.

நாடு முழுவதும் இன்போஸிஸ் நிறுவனத்தில் இருந்து மட்டும் கடந்த காலாண்டில் மட்டும் 16 சதவீத ஊழியர்கள் விலகியுள்ளனர் என்பது குறி்ப்பிடத்தக்கது.

'நரகத்துக்கு ஒப்பானவை இந்திய சிறைகள்'!


இந்தியாவில் உள்ள சிறைகள் நரகத்துக்கு ஒப்பானவை என ஐக்கிய அரபு எ‌மிரே‌ட் சிறைகளில் தண்டனை அனுபவித்து வரும் இந்திய கைதிகள் தெரிவித்துள்ளனர்.

தங்களது எஞ்சியகால தண்டனையை இந்திய சிறைகளில் அனுபவிப்பதை நினைத்துக் கூட பார்க்க முடியாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய அரபு எ‌மிரே‌ட் சிறைகளில் காணப்படும் தூய்மை, மருத்துவ பராமரிப்பு மற்றும் கண்ணியமான நடத்தை முறைகளை இந்திய சிறைகளில் எதிர்பார்ப்பது மிகவும் கடினம் என கைதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியா- ஐக்கிய அரபு எ‌மிரே‌ட்டு இடையே கைதிகள் பரிமாற்றத்துக்கான ஒப்பந்தம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஒப்பந்தம் கையெழுத்தாகும் பட்சத்தில் பல்வேறு குற்றங்களுக்காக ஐக்கிய அரபு எ‌மிரே‌ட்டில் சிறை தண்டனை அனுபவித்து வரும் குற்றவாளிகள், தங்கள் எஞ்சிகால தண்டனையை இந்தியாவிலுள்ள சிறைகளில் கழிக்க முடியும்.

இதனிடையே, பெரும்பாலான கைதிகள் தங்கள் தண்டனை காலத்தை இங்குள்ள சிறைகளிலேயே கழிக்க விரும்புகின்றனர்.

இது தொடர்பாக, ஐக்கிய அரபு எ‌மிரே‌ட்டி‌லுள்ள மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வரும் இந்தியாவைச் சேர்ந்த விநாயக் (76) என்பவர் கூறுகை‌யி‌ல், நானும், எனது கூட்டாளிகள் ஐந்து பேரும் இங்கு ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ளோம். கடந்த 12 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறோம்.

இந்நிலையில், கைதிகள் பரிமாற்றம் தொடர்பாக நாங்கள் இந்தியாவிலுள்ள சிறைகளுக்கு அனுப்பப்படுவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. இங்கு எங்களுக்கு நல்ல உணவு, மருத்துவ வசதிகள், கழிப்பிட வசதிகள் செய்து தரப்படுகின்றன. சிறை வார்டன்களும் எங்களை நல்ல முறையில் நடத்துகின்றனர்.

இந்திய சிறைகளில் நிலவும் நடைமுறையே வேறு. இந்திய சிறைகளின் பராமரிப்பும், கைதிகளை அங்குள்ள அதிகாரிகள் நடத்தும் விதமும் இங்குள்ளதற்கு நேர்மாறனது. இன்னும் சொல்லப்போனால் நரகத்தில் வாழ்வதற்கு இணையானது என்றார்.

இதே கருத்தை, ஐக்கிய அரபு எ‌மிரே‌ட் சிறையிலிருக்கும் வேறு சில இந்திய கைதிகளும் தெரிவித்துள்ளதாக அங்கிருந்து வெளியாகும் செய்தித்தாளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதன், 14 ஜூலை, 2010

சன் டிவி-நெட்வோர்க் 18 கைகோர்ப்பு!


டெல்லி: சிஎன்என்-ஐபிஎன் ஆங்கிலத் தொலைக்காட்சி உள்பட பல்வேறு சேனல்களை உள்ளடக்கிய நெட்வோர்க் 18 நிறுவனத்துடன் சன் நெட்வார்க் கைகோர்த்துள்ளது.

இரண்டும் இணைந்து 'சன் 18' என்ற புதிய நிறுவனத்தை உருவாக்கியுள்ளன.

இந்த இரு நிறுவனங்களும் இணைந்து இந்தியா முழுவதும் கேபிள்கள், டிடிஎச், ஐபிடிவி, எச்ஐடிஎஸ், எம்எம்டிஎஸ் உள்ளிட்ட அனைத்து வகையான தொழில்நுட்பங்கள் மூலமும் தங்களது சேனல்களை வினியோகிக்கவுள்ளன.

இந்த இரு நிறுவனங்களிடமும் சேர்த்து மொத்தம் 33 சேனல்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் மிக அதிகமாக சேனல்களை வழங்கும் தொலைக்காட்சி கூட்டமைப்பாக சன் 18 உருவெடுத்துள்ளது.

இதன்மூலம் நெட்வோர்க் 18 முதன்முறையாக தொலைக்காட்சி அலைவரிசை வினியோகத்தில் கால் பதிக்கிறது. இதுவரை இந்த நிறுவனம் தொலைக்காட்சி சேனல்களை மட்டுமே நடத்தி வந்தது.

இப்போது சன் டிவியின் உதவியோடு கேபிள் டிவி நெட்வோர்க், டிடிஎச் உள்ளிட்ட சேவைகளில் நெட்வோர்க் 18 இறங்குகிறது.

இந்த சன் 18 நிறுவனம் Sun18 Media Services North Co, Sun18 Media Services South Co என இரு துணை நிறுவனங்களைக் கொண்டதாக இருக்கும்.

இதன் வடக்கு பிராந்திய நி்ர்வாகத்தின் தலைமை செயல் அதிகாரியாக ஹரேஸ் சாவ்லாவும், தென் பிராந்திய தலைமை அதிகாரியாக டோனி டிசில்வாவும் இருப்பர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 13 ஜூலை, 2010

சென்னை வரும் ஜாக்கி சான்!


ஹாலிவுட்டையே சீனாவுக்கு திருப்பிய சூப்பர் ஸ்டார் ஜாக்கி சான் மீண்டும் சென்னை வருகிறார். தனது படத்தின் பிரிமியர் ஷோவில் அவர் பங்கேற்கிறார்.

ஹாலிவுட்டுக்குப் போகாமலேயே, ஹாங்காங்கிலும் சீனாவிலும் இருந்தபடி அதிரடிப் படங்களில் நடித்து தயாரித்து இயக்கி வெற்றி கண்டு வருபவர் ஜாக்கி சான்.

வட அமெரிக்காவில் அதிக வசூலைக் குவிக்கும் ஹாலிவுட்டைச் சேராத ஒரே ஆசிய நட்சத்திரம் இவர்தான்.

மூன்று ஆண்டுகளுக்கு முன் கமல் நடித்த தசாவதாரம் [^] படத்தின் பாடல் வெளியீட்டுக்காக சென்னை வந்தார் ஜாக்கி சான். முதல்வர் [^] கருணாநிதி [^], பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் ஆகியோருடன் மேடையில் தோன்றினார்.

ஆடியோ வெளியீட்டின் போது, மாதிரி சிடியின் மேல் சுற்றப்பட்டிருந்த பேப்பர் உறையை நம்ம ஊர் வழக்கப்படி கழற்றிப் போட்டு விட்டு, அடுத்த வேலையில் அவரவர் பிஸியாக இருக்க, ஜாக்கி சான் மட்டும் பொறுப்பாக அந்த பேப்பரை எடுத்துப் போய் மேடைக்கு பின்புறம் போட்டார். அவரது இந்த பண்பைக் கண்டு மேடையிலிருந்து பலரும் வெட்கித் தலைகுனிந்தது நினைவிருக்கலாம்.

இப்போது மீண்டும் இரண்டாவது முறையாக சென்னை வருகிறார் ஜாக்கி. முன்பு அவரை சென்னைக்கு அழைத்து வந்தவர் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன். இப்போது அழைத்து வருபவர் ரவிச்சந்திரனின் அண்ணன் விஸ்வாஸ் சுந்தர்.

ஜாக்கி நடித்து விரைவில் வெளியாக உள்ள 'லிட்டில் பிக் சோல்ஜர்' படத்தின் இந்திய உரிமையை அவர் பெற்றுள்ளார்.

இந்தப் படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகிறது. படத்தின் ஆங்கில - தமிழ் பிரத்தியேகக் காட்சி சென்னை உள்ளிட்ட மூன்று நகரங்களில் நடக்கிறது. இந்தக் காட்சிகளுக்கு கட்டாயம் வருவதாக சுந்தரிடம் வாக்களித்துள்ளாராம் ஜாக்கி சான்.

'ஷுகர்' நோயாளிகளுக்கு ஒரு ஸ்வீட் நியூஸ்!

சர்க்கரை வியாதியால் இனிப்பை தொட்டுக் கூட பார்க்க முடியாத நிலையில் இருப்பவர்களுக்கு இது நிச்சயம் இனிப்பான செய்திதான். பராகுவேயில் பிரபலமான ஒரு செடி இப்போது உலகெங்கும் உள்ள சர்க்கரை வியாதியஸ்தர்களை பெரிதும் கவரத் தொடங்கியுள்ளது.

அதன் பெயர் ஸ்டீவியா. அதன் தாவரவியல் பெயர் ஸ்டீவியா ரிபாடியானா (Stevia rebaudiana), சுருக்கமாக ஸ்டீவியா.

இந்த செடி மகா இனிப்பானது. இதன் இலையிலிருந்து எடுக்கப்படும் சாறு அத்தனை இனிப்பு நிறைந்தது. இதை செயற்கை சர்க்கரை போல பயன்படுத்தி வருகின்றனர்- தென் அமெரிக்காவில். இத்தனை இனிப்பாக இருந்தாலும், சர்க்கரை வியாதியஸ்தர்களுக்கு இது மிகவும் பாதுகாப்பானது என்பதுதான் இதன் விசேஷமே.

இந்த செடியின் பூர்வீகம் தென் அமெரிக்காவில் உள்ள பராகுவே ஆகும். பல நூற்றாண்டுகளாக இந்த மூலிகைச் செடியை பராகுவேயில் உள்ள குவாரனி என்ற இனத்தவர் ஸ்வீடனராக பயன்படுத்தி வருகின்றனர். மிகச் சிறிய அளவிலான இந்த செடியின் இலைகளில்தான் இந்த இனிப்புத் தன்மை காணப்படுகிறது. சாதாரண சர்க்கரையை விட இதன் இனிப்பு 300 மடங்கு அதிகமாகும்.

மேலும் சர்க்கரையி்ல் உள்ளது போல அல்லாமல், இந்த ஸ்டீவியாவில் கலோரி ஒரு துளி கூட கிடையாது. மேலும் ரத்தத்தில் நமது சர்க்கரையின் அளவையும் இது அதிகரிக்காது.

இந்த செடிக்கு பராகுவேயில் கா ஹே ஹே (kaa he-he) என்று பெயர். கா ஹேஹே என்றால் இயற்கை மூலிகை என்று பொருளாகும். ஸ்பெயின் நாட்டவர் பராகுவேக்கு வந்து ஆக்கிரமிப்பு செய்வதற்கு முன்பிருந்தே இந்த ஸ்டீவியாவை பராகுவே மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.

நம் ஊரில் கடுங்காபி என்று சொல்வோமே அதேபோன்ற தேனீர் தயாரிப்பி்ல இந்த குவாரனி இனத்தவர் விசேஷமானவர்கள். அதற்கு இனிப்பு சேர்க்க சர்க்கரைக்குப் பதில் இந்த ஸ்டீவியா சாற்றைத்தான் கலக்கிறார்கள்.

இத்தாலியைச் சேர்ந்த தாவரவியல் நிபுணரான டாக்டர் மோய்சஸ் சான்டியாகோ பெர்டோனி என்பவர் 1800களின் இறுதியில்தான் இந்த ஸ்டீவியாவின் அருமையைக் கண்டுபிடித்தார். பராகுவேயில் உள்ள விவசாய கல்லூரியின் இயக்குநராக இருந்தவர் பெர்டோனி.

அவரது கண்டுபிடிப்பைத் தொடர்ந்து பராகுவேக்குள்ளேயே முடங்கிக் கிடந்த ஸ்டீவியா தென் அமெரிக்கா முழுவதும் பரவியது. மேலும், தென் அமெரிக்கக் கண்டத்தைத் தாண்டி அமெரிக்காவுக்கும் பரவியது.

1918ம் ஆண்டு முதல் முறையாக அமெரிக்காவுக்கு ஸ்டீவியா செடி பயணித்தது. அங்கு அதை தோட்ட முறையில் பயிரிட்டு வளர்த்தனர். இருப்பினும் கூட வட அமெரிக்காவில் இது பிரபலமாகமலேயே இருந்து வந்தது.

1931ம் ஆண்டு இரண்டு பிரெஞ்சு வேதியியல் நிபுணர்கள், ஸ்டீவியா செடியின் இனிப்புத் தன்மைக்கு ஸ்டீவியோசைட் என்ற கூட்டுப் பொருள்தான் காரணம் என்பதை கண்டுபிடித்து அறிவித்தனர். இருப்பினும் ஜப்பானில்தான் இதை வர்த்தக ரீதியாக பயன்படுத்தலாம் என்பதை நிரூபித்தனர்.

ஸ்டீவியோசைடை எந்த அளவுக்கு இனிப்பு போல பயன்படுத்தலாம் என்பதை நிரூபித்த ஜப்பானிய விஞ்ஞானிகள், சாதாரணமாக பயன்படுத்தப்படும் சர்க்கரைக்குப் பதில் ஸ்டீவியோசைடின் பிரித்தெடுத்த வடிவத்தை பயன்படுத்த முடியும் என்பதையும் வெளியுலகுக்கு அறிவித்தனர்.

1988ம்ஆண்டு வாக்கில், ஜப்பானின் மாற்று சர்க்கரைச் சந்தையில் ஸ்டீவியோசைடின் பங்கு 41 சதவீதமாக எகிறியது. மேலும், ஐஸ் க்ரீம், பிரெட், பிஸ்கட், ஊறுகாய், கடல் உணவு, காய்கறிகள், குளிர்பானங்கள் என சகலத்திலும் ஸ்டீவியோசைடை பயன்படுத்த ஆரம்பித்தனர் ஜப்பானியர்கள்.

இன்று ஸ்டீவியா செடியின் மகாத்மியம் பல நாடுகளிலும் பவி சீனா, ஜெர்மனி, மலேசியா, இஸ்ரேல், தென் கொரியா என பரவி விட்டது.

அமெரிக்காவில் சமீப காலம் வரை ஸ்டீவியாவை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது கோகோ கோலா மற்றும் பெப்சி நிறுவங்களின் இரு புதிய தயாரிப்புகளுக்கு இந்த ஸ்டீவியாவை பயன்படுத்த அனுமதி தரப்பட்டுள்ளது.

கோக்கின் ட்ரூவியா மற்றும் பெப்சியின் பியூர்வியா ஆகியவற்றில் ஸ்டீவியாவின் சாறான ரெபியானாதான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

உலக நாடுகளை மயக்கிக் கொண்டிருக்கும் இந்த ஸ்டீவியா தற்போது இந்தியாவுக்கும் வரவுள்ளது. இதுகுறித்து ஸ்டீவியா பயோடெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சவுரப் அகர்வால் கூறுகையில்,

நறுமணம் மிக்க ஸ்டீவியா மூலிகைச் செடி செம்மண்ணிலும் பிற வளம் நிறைந்த மண்ணிலும் நன்றாக வளரக்கூடியது. 50 முதல் 95 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தில் வளரக்கூடிய இந்த செடியை பயிரிட்டு வளர்ப்பதும் பராமரிப்பதும் மிகவும் எளிது. இந்திய தட்பவெட்ப நிலையில் இந்த செடி நன்றாக வளரும். எனவே இதை இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பயிரிடலாம். வீட்டு தோட்டத்திலும் வளர்க்கலாம்.

ஸ்டீவியா செடியின் இலை, விதை, தண்டு ஆகியவற்றை காயவைத்து பொடியாக்கி சர்க்கரைக்கு பதிலாக பயன்படுத்தலாம். இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த மாற்று இனிப்பு பொருள் ஆகும். ஸ்டீவியா பவுடரை தொடர்ந்து பயன்படுத்தினால் அது இன்சுலின் சுரப்பை ஊக்குவிக்க உதவும் என்பதும் கண்டு அறியப்பட்டு உள்ளது.

ஸ்டீவியா செடி இந்தியாவில் பயிரிடப்பட உள்ளது. இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த செடியை இந்தியாவில் பயிர் செய்ய பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கேட்டு மத்திய விவசாய அமைச்சகத்துடன் தொடர்புடைய பல்வேறு துறைகளை எங்கள் நிறுவனம் அணுகி இருக்கிறது என்றார்.

வறுமை: ஆப்பிரிக்காவை விஞ்சிய இந்தியாவின் 8 மாநிலங்கள்!


டெல்லி: ஆப்பிரிக்காவின் 26 மிக ஏழ்மையான நாடுகளை விட மிக அதிகமான மக்கள் பிகார், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒரிஸ்ஸா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய இந்தியாவின் 8 மாநிலங்களி்ல் கடும் வறுமையின் பிடியில் சிக்கி உழன்று வருவதாக சர்வதேச ஆய்வறிக்கையொன்றில் கூறப்பட்டு்ள்ளது.

2020ம் ஆண்டில், அதாவது இன்னும் 10 ஆண்டுகளில் இந்தியா உலகின் மாபெரும் வல்லரசு நாடுகளில் ஒன்றாகிவிடும் என்று நம் நாட்டு அரசியல் கட்சிகளும் (இடதுசாரிகள் தவிர்த்து) அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளும் பிரச்சாரம் செய்து வருகின்றன.

இது எவ்வளவு பெரிய பொய் பிரச்சாரம் என்பதை இந்த ஆய்வு முடிவுகள் பொட்டில் அடிப்பது போல தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளன.

படிப்பறிவிலும் சமூகராதியிலும் மிகவும் பிற்பட்ட பிகார், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒரிஸ்ஸா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய எட்டு மாநிலங்களில் மட்டும் 42.1 கோடி மிகக் கொடுமையான வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர்.

இந்த எண்ணிக்கை உலகின் மிக ஏழ்மையான கண்டமான ஆப்பிரிக்காவில் உள்ள மிக மிக ஏழ்மையான 26 நாடுகளில் வசிக்கும் மிக ஏழ்மையான மக்களின் ஒட்டுமொத்த கூட்டுத் தொகையை விட அதிகமாகும். இந்த நாடுகளில் மிகக் கடுமையான ஏழ்மையில் உள்ளோர் எண்ணிக்கை 41 கோடியாகும்.

ஐ.நா. சபையின் மனிதவள மேம்பாட்டுத்துறையும் ஆக்ஸ்போர்ட் மனிதவளத்துறையும் இணைந்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் ஆப்பிரிக்க நாடுகளை விட இந்தியாவில் தான் வறுமை அதிகமாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியப் பெண்களில் பாதிபேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்வதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.

உலகின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் பாதிப்பேர், அதாவது 48.4 கோடி பேர் தெற்காசிய நாடுகளிலும் 25 சதவீதம் பேர் ஆப்பிரிக்க நாடுகளிலும் வாழ்கின்றனர்.

இதில் தண்ணீர், மின்சாரம், கழிப்பிட வசதி இல்லாத உலக மக்களில் 51 சதவீதம் பேர், அதாவது 84.4 கோடி பேர் தெற்காசியாவிலும், 28 சதவீதம் பேர் அதாவது 45.8 கோடி பேர் ஆப்பிரிக்காவிலும் உள்ளனர்.

உலகிலேயே நைஜர் நாட்டில் தான் மிக அதிகபட்சமாக மொத்த மக்கள் தொகையில் 93 சதவீதம் பேரும் வறுமையில் வாழ்கின்றனர்.

5.2 பில்லியன் மக்கள் வசிக்கும் 104 நாடுகளில் நடத்தப்படப்பட்ட ஆய்வில் 1.7 பில்லியன் மக்கள் வறுமையில் தான் உள்ளனர்.

சனி, 10 ஜூலை, 2010

பாம்பே டையிங் பாலியஸ்டர் தொழிற்சாலையை வாங்கும் ரிலையன்ஸ்!


மும்பை: முப்பது ஆண்டுகளுக்கு முன் ரிலையன்ஸ் நிறுவன அதிபர் [^] அம்பானிக்கும் பாம்பே டையிங் அதிபர் நுஸ்லி வாடியாவுக்கும் இடையே நடந்த மோதல் உலகப் பிரசித்தம்.

அதன் பின்னர் ரிலையன்ஸ் அசுர வேகத்தில் வளர்ந்து வாடியாவின் ஒட்டுமொத்த நிறுவனங்களை விட பல மடங்கு பெரிய நிறுவனமாகிவிட்டது. இந் நிலையில் இப்போது வாடியாவுக்குச் சொந்தமான பாம்பே டையிங் நிறுவனத்தி்ன் பாலியஸ்டர் தொழிற்சாலையை வாங்க முகேஷ் அம்பானி பேச்சு நடத்தி வருகிறார்.

இரு தரப்பும் விட்டுத் தந்து பேச்சுவார்த்தை நடத்தி இந்த 'டீலை' முடித்தால், 30 வருட கால வாடியா-ரிலையன்ஸ் மோதல் முடிவுக்கு வரலாம் என்கிறார்கள் தொழில்துறை நிபுணர்கள்.

பெட்ரோகெமிக்கல் துறையில் வாடியாக்களை வென்றுவிட்ட அம்பானி, பாலியஸ்டர்-ரேயான் உற்பத்தியிலும் வாடியா நிறுவனத்தை எப்போதோ பின்னுக்குத் தள்ளிவிட்டார்.

வாடியாக்கள் நடத்தி வரும் இந்த பாலியஸ்டர் ஆலை நீண்டகாலமாகவே நஷ்டத்தில் தான் இயங்கி வருகிறது. இதை வாங்க இண்டோ ராமா, ஜேபிஎப் ஆகிய நிறுவனங்கள் போட்டியிட்டு வரும் நிலையில், முகேஷ் அம்பானியும் கோதாவில் குதித்து வாடியாக்களுடன் பேச்சு நடத்த ஆரம்பித்துள்ளார்.

இந்த நிறுவனம் தொடர்பாகத்தான் நுஸ்லி வாடியாவும் தீருபாய் அம்பானியும் 1980களில் கடும் மோதலி்ல் ஈடுபட்டனர் என்பது நினைவுகூறத்தக்கது.

வாடியாக்கள் இப்போது ரியல் எஸ்டேட் துறையில் வெற்றிக் கொடி நாட்டியுள்ள நிலையில், வருடத்துக்கு 1,65,000 டன் பாலியஸ்டர் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இந்த ஆலையை விற்றுவிட்டு, அந்த நிதியையும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த ஆலை ரு. 300 கோடி வரை விலை போகும் என்கிறார்கள்.

பெட்ரோகெமிகல்ஸ் மற்றும் பாலியஸ்டர் தொழிற்சாலைகளால் கடந்த ஆண்டில் வாடியாக்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் ரூ.100 கோடி. அதே நேரத்தில் அவர்களது ரியல் எஸ்டேட் பிரிவு ரூ. 350 கோடி லாபம் ஈட்டியுள்ளது.

பாம்பே டையிங் ஆலையை ரிலையன்ஸ் வாங்கினால் அவர்களது பாலியஸ்டர் தயாரிப்பு 9 லட்சம் டன்னைத் தாண்டிவிடும்.

தமிழ் படிக்கும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணச் சலுகை-தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகம்!

சென்னை: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பாடத் திட்டத்தில், இந்தக் கல்விஆண்டு முதல், பி.ஏ.தமிழ் மற்றும் எம்.ஏ. தமிழ் படிப்பவர்களுக்கு கல்வி கட்டணத்தில் 25 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து,தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் கல்யாணி அன்புச்செல்வன் கூறுகையில்,

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் தீர்மானப்படி, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பாடத்திட்டத்தில், தமிழ் ஆயத்த படிப்பு பாடத்தில், உயர் தனிச் செம்மொழி என்றத் தலைப்பில் செம்மொழி குறித்த பாடம் சேர்க்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தக் கல்விஆண்டு முதல்(2010-11), பி.ஏ.தமிழ் மற்றும் எம்.ஏ. தமிழ் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு, கல்விக் கட்டணத்தில் 25 சதவீதம் சலுகை வழங்கப்படும்.

ஒரு முதுநிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் [^], அத்துடன் ஒரு பட்டயப் படிப்பையும் சேர்த்துப் படித்தால், அந்தப் பட்டயப் படிப்புக்கு 50 சதவீதம் கல்விக் கட்டணச் சலுகை வழங்கப்படும்.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்தில், இரண்டு விதமான படிப்புகள் உள்ளன. ஒன்று, முறையாக எஸ்.எஸ்.எல்.சி.+2 படித்தவர்கள் பட்டப்படிப்பை இங்கு படிப்பது. இந்த படிப்பு படித்தால் உலகம் முழுவதும் உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் செல்லுபடியாகும்.

ஆனால், +2 படிக்காமல் பட்டப்படிப்பை நேரடியாக படித்தால் அது வேலை வாய்ப்புக்கு செல்லுபடியாது. அந்த நிலையை மாற்றி, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக பட்டங்கள் அனைத்தும் வேலைவாய்ப்புக்கு ஏற்புடையதாக இருக்கும் வகையில் நடவடிக்கை [^] எடுக்கப்பட்டு வருகின்றது. இதற்காக ஒரு நபர் குழு அமைக்கப்பட உள்ளது என்றார்.

உலகின் அதிவேக கார் புகாட்டி வெய்ரான்!


உலகின் அதிவேக காராக உருவெடுத்துள்ளது புகாட்டி வெய்ரான். இதன் வேகம் மணிக்கு 268 மைல்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பூமியிலேயே அதிவேகமான காராக இது அறிவிக்கப்பட்டுள்ளது.

காரை ஸ்டார்ட் செய்து கிளம்பியதும் மணிக்கு 60 மைல்கள் என்ற வேகத்தை எட்ட இந்தக் கார் [^] எடுத்துக் கொள்ளும் நேரம் வெறும் 2.5 விநாடிகள்தான். அதேபோல 124 மைல்கள் என்ற வேகத்தை எட்ட 7.3 விநாடிளையும், 186 மைல்கள் என்ற வேகத்தைப் பிடிக்க 15 விநாடிகளையும் மட்டுமே இது எடுத்துக் கொள்கிறது.

புகாட்டி கார் ஏற்கனவே கின்னஸ் சாதனையையும் மேற்கொண்டுள்ளது. அந்தக்காரை ஓட்டிய டிரைவர் பியரி ஹென்றி ரபேனல் அதிகபட்சம் மணிக்கு 265.9 மைல்கள் மற்றும் 269.8 மைல்கள் வேகத்தில் காரை ஓட்டி சாதனை படைத்துள்ளார்.

புகாட்டி வெய்ரான் சூப்பர்ஸ்போர்ட் கார், 8 எல் டபிள்யூ 16 என்ஜினில் இயங்குகிறது. இந்த என்ஜின் 12000 குதிரை சக்தியில் இயங்கக் கூடியதாகும்.

ரேஸ்களில் பயன்படுத்தக் கூடிய கார்களுக்கான வடிவமைப்புடன் கூடியதாக இந்த கார் உள்ளதாலேயே இந்த அளவுக்கு மின்னல் வேகத்தில் பயணிக்க முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சின்டிக்கு 'ஃபிகர்' ஓ.கே.!


தனக்கு இப்போது இருக்கும் இளமையும், அழகும், ஃபிகரும் போதும் என்கிறார் சூப்பர் மாடல் சின்டி கிராப்போர்ட்.

2 குழந்தைகளுக்குத் தாயான சின்டிக்கு ஹாலிவுட் [^]டில் இன்னும் மவுசு குறையவில்லை. இருந்தாலும் இவரது உடல் அமைப்பும், இளமைப் பொலிவும் குறையத் தொடங்கியுள்ளதாக சிலர் கூறுவதால் சற்றே கவலை அடைந்தாலும் அதற்காக எந்தவிதமான ட்ரீட்மென்ட்டையும் தான் செய்யப் போவதில்லை என்கிறார் சின்டி.

போட்டோக்ஸ் டிரை செய்து விட்டேன். பிடிக்கவில்லை. பிளாஸ்டிக் சர்ஜரியை நினைத்தாலே டென்ஷனாகி விடுகிறது. எனவே நிச்சயம் எனது அழகை கூட்ட பிளாஸ்டிக் சர்ஜரி செய்யவே மாட்டேன்.

இதெல்லாம் நமது முகத்தையும், அழகையும் பாதிக்காத வரை ஓகேதான். இருந்தாலும் எனக்கு இப்போதுள்ள அழகும், எழிலும் போதும் என்று நினைக்கிறேன்.

எனது உடல் அமைப்பும், தோற்றப் பொலிவும் என்னைப் பொறுத்தவரை திருப்திகரமாகவே உள்ளது என்கிறார் அடக்கமாக.

சின்டிக்கு வயது 44 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வயதில் இளமை இன்னும் இருப்பதே சந்தோஷமான விஷயம்தானே...!

மதுபானமும் அரசும்!


2003 நவம்பரில் மதுபானங்களை டாஸ்மக் கடைகள் மூலம் விற்பனை செய்வது என்று அப்போதைய அரசு முடிவு செய்தது; இதனால் அரசுக்கு 2004-2005 நிதியாண்டில் ரூ 4872 கோடி வருமானமாய் கிடைத்தது; இந்த வருமானம் வருடந்தோறும் அதிகரித்துக் கொண்டே வந்தது.

கடந்த நிதியாண்டில் (2009-2010 )டாஸ்மாக் முலம் அரசுக்கு கிடைத்த வருமானம் ரூ 12492 கோடி.இது அதற்கு முந்தைய நிதியாண்டை ( 2008-2009 ) விட ரூ 1889 கோடி அதிகம்.
இது அல்லாமல், 'பார்' களை ஏலம் விடுதல்,கால் பாட்டில்கள் அட்டைப் பெட்டிகளை ஏலம் விடுதல் போன்றவற்றின் மூலமாக கூடுதலாக ரூ 500 கோடி வரை வருமானம் கிடைக்கிறது.
ம்துபானங்களை விற்பதன் மூலம் கிடைக்கும் இந்த அபரிமிதமான வருமானத்தின் மூலமே அரசு ரூபாய்க்கு 1 கிலோ அரிசி, மற்று பல்வேறு இலவசத் திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.

வியாழன், 8 ஜூலை, 2010

ஒட்டு மொத்த பிரபஞ்சத்தையும் படமெடுத்த ஐரோப்பிய செயற்கைக்கோள்!


ஐரோப்பிய விண்வெளி ஆராச்சி மையத்தின் பிளாங்க் கனல்சா என்ற செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டுள்ள தொலைநோக்கி, ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும் ஒரே புகைப்படமாக எடுத்துள்ளது.

ஒட்டுமொத்த பிரபஞ்சமும் ஒரே புகைப்படமாக நமக்கு கிடைத்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

இந்த புகைப்படத்தின் மூலம் பிரபஞ்சம், நடத்திரங்கள், கோள்கள், தாதுக்கள், உயிர்கள் உருவானது குறித்த ஆய்வுகள் மேலும் மேம்படும் என ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு 'பிங் பேங்' எனப்படும் பேரண்ட வெடிப்புக்குப் பின்னர் பிரபஞ்சம் உருவானது.

அப்போது உருவான ஒளியி்ன் மிச்சத்தையும் இந்த செயற்கைக் கோள் படம் பிடித்துள்ளது. இந்தப் படத்தின் நடுப் பகுதியில் காணப்படும் வெள்ளை நிற ஒளிக் கோடு நமது சூரிய குடும்பம் அடங்கிய பால்வெளி மண்டலத்தில் (Milky Way galaxy) இருந்து வெளியாகும் கதிர்வீச்சாகும்.

படத்தின் இரு ஓரங்களிலும் காணப்படும் ஒளி, 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் பேரண்ட வெடிப்பில்போது உருவான முதல் ஒளியின் மிச்சமாகும்.

இந்தப் படம் நமக்குக் காட்டுவது பிங்-பேங் வெடிப்பைத் தொடர்ந்து பரவிய தூசி, வாயு மண்டலங்களின் கதிர்வீச்சு தான். இந்தக் கதிர்வீ்ச்சைத் தான் பிளாங்க் செயற்கைக் கோளில் உள்ள மைக்ரோவேவ் தொலைநோக்கி தனது இன்ப்ரா-ரெட் (Infra red) லென்ஸ் மூலம் படம் பிடித்துள்ளது.

இந்த முழுப் படமும் இன்ப்ரா ரெட் கதி்ர்வீச்சை 9 அலைவரிசைகளாகப் படம்பிடித்து ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டதாகும்.

கடந்த ஆண்டு ஏவப்பட்ட ஐரோப்பிய விண்வெளி கழகத்தின் செயற்கைக்கோள் நேற்று இந்தப் படத்தை எடுத்தது.

இந்தப் புகைப்படம் குறித்து ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையமத்தின் அறிவியல், ரோபோட்டிக் பிரிவு இயக்குநர் டேவிட் செளத்உட் கூறுகையில், இந்தப் படம் நமது பிரபஞ்சம் குறித்தும், அது உருவான விதம், நட்சத்திரக் கூட்டங்களின் பிறப்பு, பிங் பேங் விட்டுச்சென்ற வெப்பத்தின் அளவு உள்ளிட்டவற்றை கணிக்க உதவும் என்றார்.

விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ள பிளாங்க் செயற்கைக்கோள் 2012ம் ஆண்டு வரை செயல்படும். அதற்குள் பிரபஞ்சத்தை முழுவதுமாக ஸ்கேன் செய்து இதேபோன்ற மேலும் நான்கு புகைப்படங்களை அது அனுப்பவுள்ளது.

ஆசியா பசிபிக் பிராந்தியத்திலேயே நம்பர் 1 பால் பிராண்ட் அமுல்!


ஆனந்த்: குஜராத் மாநிலத்தின் அமுல் பால் உற்பத்தி நிறுவனம், ஆசியா பசிபிக் பிராந்தியத்திலேயே நம்பர் ஒன் பால் பிராண்ட் ஆக தேர்வாகியுள்ளது.

தொடர்ந்து 2வது ஆண்டாக இவ்வாறு அது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு இந்தியாவிலும் இதுதான் நம்பர் ஒன் பால் பிராண்ட் ஆக உள்ளது.

உலக அளவில் புகழ் பெற்ற கிராப்ட், வால்ஸ், எவரிடே ஆகியவற்றை பின்னுக்குத் தள்ளி அமுல் சாதனை படைத்துள்ளது.
Read: In English
மேலும் உலக அளவில் அமுல், 83வது இடத்திலிருந்து 73வது இடத்திற்கு முன்னேறி புதிய சாதனையும் படைத்துள்ளது.

உலக அளவில் மிகச் சிறந்த 1000 பால் பொருள் உற்பத்தி நிறுவனங்களின் பட்டியலை மீடியா மேகசின் வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவிலிருந்து அமுல் மட்டுமே இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

குளுகுளுவென மாறியது சென்னை-காலை முதல் விட்டு விட்டு மழை!


சென்னை: வெப்பச் சலனம் காரணமாக சென்னை நகரிலும் கடலோரப் பகுதிகளிலும் இன்று காலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் நகரே குளுமையாக மாறிப் போயுள்ளது.

சென்னையில் இன்று காலையில் லேசான மழை பெய்ய ஆரம்பித்தது. சில இடங்களில் இது வலுத்தும், சில பகுதிகளில் லேசான தூறலாகவும் இருந்தது. காலை பெய்யத் தொடங்கிய இந்த மழை விட்டு விட்டுபெய்து கொண்டிருக்கிறது.

வெப்பச் சலனம் காரணமாக இந்த மழை பெய்வதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இந்த மழை மேலும் 24 மணிநேரத்துக்கு நீடிக்கும் எனவும், மாலையில் இடியுடன்கூடிய மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

காலையிலேயே மழை பெய்ய ஆரம்பித்ததால் பள்ளிகள், அலுவலகங்களுக்கு செல்வோர் சிரமத்திற்குள்ளாகினர். இருப்பினும் மழையால் வெப்பம் குறைந்து குளுகுளுவென மாறியுள்ளதால் சென்னை மக்கள் குஷியாகியுள்ளனர்.

கர்நாடக உயர்நீதி்மன்றத்தில் பெண் வக்கீல் படுகொலை!


பெங்களூர்: கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இன்று பெண் வக்கீலை பழைய குற்றவாளி ஒருவர் கத்தியால் குத்திப் படுகொலை செய்தார். இந்தசம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூர் விதான சவுதா எதிரே கர்நாடக உயர்நீதிமன்றம் உள்ளது. அங்கு இன்று காலை பெண் வக்கீல் ஒருவரை ஒரு நபர் கத்தியால் குத்திக்கொலை செய்தார்.
பின்னர் தனது தொண்டையைக் கிழித்து தற்கொலை செய்து கொள்ளவும் அவர் முயன்றார். அவரை போலீஸார் மடக்கிப் பிடித்துக் கைது செய்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அந்த நபர் பழைய குற்றவாளி என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

செவ்வாய், 6 ஜூலை, 2010

கமலின் மன்மதன் அம்பு படத்தில் நடிக்கும் த்ரிஷா அம்மா!


கமலஹாசன் நடிக்கும் மன்மதன் அம்பு படத்தில் த்ரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணன் நடிக்கிறார். இதன் மூலம் அவரும் நடிகையாகிறார்.

அழகான தாய்க்குலங்களைக் கொண்டுள்ள நடிகைகளில் ஒருவர் த்ரிஷா.

உமா தான் த்ரிஷாவின் கால்ஷீட் விஷயங்களை பார்த்துக் கொள்கிறார். மேலும், த்ரிஷாவுடன் வெளியூர் படப்பிடிப்புக்கும் செல்கிறார். அழகாக இருக்கும் அவரை ஏற்கனவே நிறைய பேர் நடிக்க அழைத்துள்ளனர். ஆனால், அவர் மறுத்து விட்டார்.

அன்மையில் சென்னை ஏ.வி.எம். ஸ்டூடியோவில் மன்மதன் அம்பு பட துவக்க விழா நடந்தது. அதற்கு த்ரிஷாவுடன் உமாவும் வந்திருந்தார். அப்போது மகள் மட்டுமல்லாமல் அம்மாவும் விழாவுக்கு வந்தவர்களை கவர்ந்தார்.

இந்த நிலையில், மன்மதன் அம்பு படத்தில் த்ரிஷா அம்மாவுக்கு ஏற்ற கதாபாத்திரம் ஒன்று இருந்தது. அதில் அவரை நடிக்குமாறு கே.எஸ்.ரவிக்குமார் கேட்டபோது மறுத்த உமா கமல் வற்புறுத்தியதும் ஒத்துக் கொண்டார்.

இந்த படத்தில் கமல் ஜோடியாக நடிக்க நயன்தாரா, த்ரிஷா இடையே கடும் போட்டி நிலவியது. மர்மயோகி படத்தில் த்ரிஷாவை நடிக்க வைப்பதாக கமல் உறுதி அளித்து இருந்தார். ஆனால், அந்த படம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் மன்மதன் அம்பு படத்தில் த்ரிஷாவை தேர்வு செய்தார். இதனால் தான் கமல் வற்புறுத்தியதும் உமா நடிக்க ஒப்புக்கொண்டார்.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் நடந்து கொண்டிருக்கிறது. உமா சம்பந்தப்பட்ட காட்சிகள் அங்கேயே படமாக்கப்பட உள்ளது. உமாவின் கதாபாத்திரம் பற்றிய தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

எத்தனையோ பேர் நடிப்பு அம்பை உமாவை நோக்கி வீசியும் அவர் படியவில்லை. கடைசியில் மன்மதன் அம்பு வந்துதான் உமாவை நடிப்புக் களத்திற்குக் கொண்டு வந்துள்ளது!

புதிதாக 2,653 ‌வி.ஏ.ஓ.‌க்க‌ள் நியமனம்: 25ஆ‌ம் தேதி அறிவிப்பு வெளி‌யீடு!

தமிழக அரசின் வருவாய் துறையில் புதிதாக 2,653 கிராம நிர்வாக அதிகாரிகள் (V.A.O) நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வரு‌ம் 25ஆ‌ம் தேதி வெளியாகிறது.

கடந்த 2008ஆம் ஆண்டு 2,500 கிராம நிர்வாக அதிகாரிகள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (T.N.P.S.C) போட்டித்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவர்களில் 900 பேர் பெண்கள். வி.ஏ.ஓ. தேர்வு பதவிக்கு 10ஆ‌ம் வகு‌ப்பு படிப்பு அடிப்படை கல்வித்தகுதி என்ற போதிலும் கடந்த முறை பட்டதாரிகளும், முதுநிலை பட்டதாரிகளும்தான் அதிக எண்ணிக்கையில் தேர்வில் கலந்து கொண்டனர். கிட்டத்தட்ட 4 லட்சம் பேர் அந்த தேர்வை எழுதினார்கள்.

இந்த நிலையில், காலி இடங்கள் அதிகமாக இருப்பதால், மேலும் 2,500 கிராம நிர்வாக அதிகாரிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அரசு அறிவித்தது. சாதி சான்றிதழ், இருப்பிடச்சான்று, வருமானச்சான்றிதழ், பட்டா, சால்வன்சி சான்றிதழ் என மக்களின் அன்றாட வாழ்க்கையோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்ட பதவியாக இது இருப்பதால் காலி இடங்களை உடனடியாக நிரப்ப அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

வி.ஏ.ஓ. தேர்வு பற்றிய அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று வேலையில்லாத இளைஞர்கள், இளம்பெண்கள் ஆவலோடு எதிர்பார்த்து வந்தனர். இந்த நிலையில், 2,653 காலி இடங்களை நிரப்ப பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒப்புதல் வழங்கியது. காலி இடங்கள் பட்டியலும் டி.என்.பி.எஸ்.சி.யிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, 2,653 வி.ஏ.ஓ. பணி இடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி. முடிவு செய்துள்ளது. மொத்த காலி இடங்களில் 1,576 இடங்கள் பொது காலி இடங்கள் ஆகும். எஞ்சியுள்ள 1027 காலி இடங்கள் எஸ்.சி., எஸ்.டி மற்றும் அருந்ததியர்களுக்கான சிறப்பு காலி இடங்கள் ஆகும்.

கடந்த வி.ஏ.ஓ. தேர்வை 4 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுதினர். தற்போது இந்த ஆண்டு தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என்று டி.என்.பி.எஸ்.சி. எதிர்பார்க்கிறது.

எனவே, இந்த வி.ஏ.ஓ. தேர்வுக்காக 12 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. அவற்றை தபால் அலுவலகங்களில் விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக டி.என்.பி.எஸ்.சி. உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வி.ஏ.ஓ. தேர்வு அறிவிப்பை தொடர்ந்து, 650 உதவி பொ‌றியாள‌ர்க‌ள் நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. உதவி பொ‌றியாள‌ர் காலி இடங்கள் நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறையில் ஆகியவற்றில் நிரப்பப்பட இருக்கின்றன. காலி இடங்களில் சிவில், மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பிரிவுகளில்தான் அதிக இடங்கள் உள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

திங்கள், 5 ஜூலை, 2010

கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுமா கோவை செம்மொழி மாநாட்டுப் பந்தல்?


கோவை: கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கா அமைக்கப்பட்ட பந்தல் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் என்று தெரிகிறது.

மாநாட்டுத் தொடக்கவிழா மற்றும் நிறைவு விழாவுக்காக கோவை கொடிசியா அரங்கின் முன்பகுதியில் பிரமாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டது. இதில் நடந்த கருத்தரங்குகள், கவியரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை ஆயிரக்கணக்கான மக்கள் அமர்ந்து பார்த்தனர்.

4.5 லட்சம் சதுர அடி பரப்பில் அமைக்கப்பட்ட இந்தப் பந்தலில் 60,000 பேர் அமரவும், 1 லட்சம் பேர் நின்று நிகழ்ச்சிகளைப் பார்க்கவும் வசதியாக அமைக்கப்பட்டது.

400 பேர் 45 நாட்கள் இரவு பகலாக பாடுபட்டு இந்தப் பந்தலை அமைத்தனர்.

இந்தப் பந்தல் தான் உலகிலேயே அமைக்கப்பட்ட மிகப் பெரிய பந்தல் என்று தெரியவந்துள்ளது.

இதையடுத்து இதை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறச் செய்ய தஞ்சாவூரைச் சேர்ந்த பந்தல் அமைப்பு [^] நிர்வாகம் விண்ணப்பிக்க முடிவு செய்துள்ளது.

ரொனால்டோ தந்தையானார்!


போர்ச்சுகல் சூப்பர் ஸ்டார் ரொனால்டோ தந்தையாகியுள்ளார். ஆனால் இவருக்கு இன்னும் கல்யாணமாகவில்லை. இருப்பினும் அமெரிக்கப் பெண் [^] ஒருவருடன் தீவிரக் காதலில் ஈடுபட்டிருந்த ரொனால்டோவுக்கு அப்பெண் மூலம் குழந்தை [^] பிறந்துள்ளது.

தனது காதலி யார் என்பதை இதுவரை ரொனால்டோ ரகசியமாக வைத்துள்ளார். கடைசி வரை தனது குழந்தையை ரகசியமாகவே வைத்திருக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து போர்ச்சுகல் நாட்டு மீடியாக்கள் செய்தி [^] வெளியிட்டுள்ளன. இந்த செய்தி உண்மைதான் என்று ரொனால்டோவின் ஏஜென்ட் உறுதிப்படுத்தியுள்ளார். இருப்பினும் தனது குழந்தை மற்றும் அதன் தாயாரை வெளியுலகுக்கு அறிமுகப்படுத்தும் திட்டம் ரொனால்டோவிடம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

ரொனால்டோவின் காதலி அமெரிக்காவைச் சேர்ந்தவர் என்றும், ஜூன் மாதம் குழந்தை பிறந்துள்ளதாகவும் அந்த ஏஜென்ட் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பையில் போர்ச்சுகல் வாய்ப்பிழந்ததால், ரொனால்டோ பெரும் சர்ச்சைக்குள்ளானார். இந்த நிலையில் குழந்தை பிறந்திருப்பது ரொனால்டோவுக்கு சற்று சந்தோஷத்தை அளிக்கும் என எதிர்பார்க்கலாம்.

வெள்ளி, 2 ஜூலை, 2010

மைக்கேல் ஜாக்சனைப் பாதித்த 'விடிலிகோ' சரும நோய் மகனுக்கும் வந்தது!


லண்டன்: பாப் மன்னன் மைக்கேல் ஜாக்சனின் உடல் மற்றும் முகத்தின் நிறத்தை கோரமாக்கிய விடிலிகோ என்ற சரும நோய் தற்போது ஜாக்சனின் மகன் பிரின்ஸ் மைக்கேல்-1க்கும் வந்துள்ளது.

மைக்கேல் ஜாக்சன் உயிருடன் இருந்தபோது முகம் மற்றும் உடலின் நிறம் திடீரென மாறத் தொடங்கியது. அலங்கோலமாக மாறியதால் அவரது முகமும், உடலும் நலிவடைந்து போனது.

உடலின் கருமை நிறத்தை மறைக்க ஜாக்சன் செய்த ப்ளீச்சிங்கால்தான் இப்படி ஆனதாக அப்போது கூறினார்கள். ஆனால் உண்மையில் அவருக்கு வந்த விடிலிகோ என்ற சரும நோய்தான் இந்த அலங்கோலத்திற்குக் காரணம்.

ஜாக்சன் இதைக் கூறியபோது யாரும் நம்பவில்லை. இந்த நிலையில் தற்போது ஜாக்சனின் 13 வயது மகன் பிரின்ஸ் மைக்கேலுக்கும் இந்த சரும நோய் வந்துள்ளதால் குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர்.

சமீபத்தில் ஹவாய்க்கு தனது தங்கை பாரிஸ், தம்பி பிரின்ஸ் மைக்கேல்-2 ஆகியோருடன் சென்றிருந்தான் பிரின்ஸ். அப்போது அவனது அக்குள் பகுதியில் வெள்ளைத் திட்டுக்கள் இருப்பதைப் பார்த்தனர் குடும்பத்தினர்.

முதலில் இது சூரிய ஒளியால் ஏற்பட்ட திட்டுக்களாக இருக்கும் என சந்தேகித்தனர். ஆனால் மருத்துவ சோதனையில்தான் இது விடிலிகோ எனத் தெரிய வந்தது.

விடிலிகோ என்பது மரபு ரீதியாக வரும் நோயாகும். இது வந்தால் தோலின் நிறம் மொத்தமாக மாறிப் போய் விடும். உடலின் பொலிவே போய் விடும்.

தற்போது பிரின்ஸுக்கு இந்தப் பிரச்சினை வந்துள்ளதால் அவனது குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர்.

அதேசமயம், இப்போதாவது பிரின்ஸ்தான், மைக்கேல் ஜாக்சனின் வாரிசு என்பதை அனைவரும் புரிந்து கொள்ளட்டும் என்று அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனராம்.

பன்னா சுரங்கத்தில் மிகப் பெரிய வைரம் கண்டெடுப்பு!


மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா வைர சுரங்கத்தில் மிகப் பெரிய வைரம் ஒன்று கண்டெடுக்கப்படுள்ளது. அதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.2 கோடியாகும் என்று தேச கனிம மேம்பாட்டுக் கழகம் தெரிவித்துள்ளது.

“2005ஆம் ஆண்டில் கண்டெடுக்கப்பட்டதை விட மிகப் பெரிய, இதுவரை இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட வைரங்களிலேயே மிகப் பெரிய வைரம் இது. அளவில் மட்டுமின்றி, தரத்திலும் மிகச் சிறந்ததாக உள்ளது” என்று கூறிய தே.க.மே.கழக்கத்தின் திட்ட மேலாளர் சி.இ. கிந்தோ, அதனை 34.37 காரட் வைரம் என்று குறிப்பிட்டுள்ளார்.

65 ஆண்டுக்கால வைர சுரங்க கண்டெடுப்புக்களில் இதுவே மிகப் பெரியது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த வைரம் விரைவில் ஏலத்திற்கு வரும் என்று கூறியுள்ளனர்.

பன்னா வைர சுரங்கம், தரமான வைரங்கள் கொண்ட உலகின் இரண்டாவது பெரிய சுரங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. தென் ஆப்ரிக்க சுரங்கமே உலகின் பல பெரிய வைரங்களை கொடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வியாழன், 1 ஜூலை, 2010

திருக்குறளை பரப்பப் போகிறதாம் ஏர்டெல்!


உலகப் பொதுமறையாம் திருக்குறளை தனது செல்பேசியின் வாயிலாக தனது வாடிக்கையாளர்களுக்கு கொண்டு செல்லப்போவதாக பார்த்தி ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது!

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பார்த்தி ஏர்டெல் நிறுவனத்தின் தென்னிந்திய சேவைகளுக்கான தலைமை செயல் அலுவலர் ராஜீவ் ராஜகோபால் இதைத் தெரிவித்துள்ளார்.

ஏர்டெல் செல்பேசி வாடிக்கையாளர்கள் தங்கள் செல்பேசியில் 54321 என்ற எண்ணிற்கு குறுஞ்சேவை செய்து விண்ணப்பித்தால் ஒரு நாளைக்கு ஒரு குறள், அதன் விளக்கத்துடன் அனுப்பப்படும் என்றும், அதற்கு ஒரு ரூபாய் வசூலிக்க்ப்படும் என்றும் ராஜீவ் ராஜகோபால் கூறியதாக யு.என்.ஐ.செய்தி கூறுகிறது.

பார்த்தி ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலராக இருப்பவர் ராஜன் பார்த்தி மிட்டல். இவர்தான் இந்திய தொழில் வர்த்தக அமைப்புகளின் கூட்டமைப்பான ஃபிக்கியின் (Federation of Industries and commerce of India -FICCI) தலைவராகவும் உள்ளார். தமிழர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி இலங்கைத் தலைநகர் கொழும்புவில் இந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கு விழாவை ஐஃபா(India International film Academy - IIFA)வுடன் இணைந்து நடத்தியது இந்த ஃபிக்கி அமைப்புதான்.

விருது வழங்கு விழாவுடன் உலக வர்த்தக மாநாட்டையும் (Global Business Conclave) கொழும்புவில் நடத்தியது ஃபிக்கி அமைப்பு. ஐஃபா விருது வழங்கு விழா கொழு்ம்புவில் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழர் அமைப்புகள், விழாவை வேறு எங்கு வேண்டுமானாலும் நடத்திக் கொள்ளுங்கள் என்று வலியுறுத்தியபோதும் அதைக்கண்டுகொள்ளாமல் கொழும்புவிலேயே விழாவை நடத்தியது ஃபிக்கி என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழினப் படுகொலை நடந்த இலங்கையை ஒரு புதிய நாடு என்றும், முதலீட்டிற்கும் வணிக வளர்ச்சிக்கும் வாய்பளிக்கும் கவர்ச்சியான இடம் என்றும் தனது இணைய தளத்திலேயே குறிப்பிட்டு வணிக நிறவனங்களை கொழும்புவிற்கு வரவேற்றது ஃபிக்கி.

அதனால்தான், தமிழர்களின் எதிர்ப்பை மீறி அங்கு திரைப்பட விருது வழங்கு விழாவையும், வர்த்தக மாநாட்டையும் நடத்திய ஃபிக்கி அமைப்பை மனித குல விரோத அமைப்பாக அறிவித்து, அதன் தலைவராக இருக்கும் ராஜன் பார்த்தி மிட்டல், தலைமை செயல் அலுவலராக உள்ள ஏர்டெல் நிறுவனத்தின் செல்பேசி, இணைய சேவை ஆகிய அனைத்தையும் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று தமிழர் அமைப்புகள் போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளன எனபது குறிப்பிடத்தக்கது.

தமிழினப் படுகொலை செய்த சிறிலங்க அரசோடு கைகோர்த்து இலங்கையில் செல்பேசி சேவை நடத்திக்கொண்டு, இங்கு தமிழ்நாட்டில் திருக்குறளையும் பரப்ப (காசுக்குத்தான்) முன்வந்துள்ளது ஏர்டெல்!

ஷாப்பிங் போறீங்களா, உஷார்!


ஷாப்பிங் போகும் ஆண்களே, ரொம்ப கவனம். அதனால் ஒரு 'இம்பார்ட்டன்ட்' பிரச்சினையை சந்திக்க நேரிடும் - அதுததான் 'இம்பொடன்சி'.

இதை ஒரு ஆராய்ச்சி மூலம் நமது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கடைக்குப் போய் சாமான் வாங்கப் போனால் எப்படி மலட்டுத்தன்மை வரும் என்று கேள்வி கேட்கலாம். அதற்குப் பதில் தெரிய தொடர்ந்து படியுங்கள்.

வர்த்தக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், ஜவுளிக்கடைகள் உள்ளிட்டவற்றுக்குப் போகும்போது அங்குள்ள கேஷ் கவுன்டர்களில் தரப்படும் ரசீதுகளில், அதாவது அந்தத் தாள்களில் பிஸ்ஃபெனால் ஏ (Bisphenol A (BPA) என்ற ஆபத்தான பொருள் அடங்கியிருக்குமாம். அதை தொடும் ஆண்களுக்கு (பெரும்பாலும் பொருட்களை பெண்கள் [^] வாங்கினாலும், பர்ஸைப் பறி கொடுக்கும் பொறுப்பு ஆண்களுக்குத்தானே வந்து சேருகிறது!) அந்த பொருள் நமது உடல்மூலமாக ஊடுறுவி, நமது செக்ஸ் ஹார்மோன்களை செயலிழக்க வைத்து விடுமாம்.

இந்த வேதிப் பொருளை பிரின்டர்களில் பயன்படுத்தப்படும் மையில் கலநது விடுகிறார்கள். அதாவது பளிச்சென எழுத்துக்கள் தெரிய வேண்டும் என்பதற்காக இவ்வாறு பிபிஏவை மையில் கலக்கிறார்கள். ஆனால் இது ஆண்களின் பர்ஸை மட்டுமல்ல, எல்லாவற்றையும் காலி செய்து விடும் ஆபத்து இப்போதுதான் தெரிய வந்திருக்கிறது.

இந்த வேதிப் பொருள் அடங்கிய ரசீதை வாயில் வைப்பது, கையால் தொடுவது உள்ளிட்டவற்றின் மூலமாக நமது உடலுக்குள் இது போகிறதாம்.

இதுகுறித்து பெர்லினைச் சேர்ந்த பிராங் சோமர் என்பவர் கூறுகையில், இது ஆண்களின் செக்ஸ் ஹார்ன்மோன்களை காலி செய்து விடும் சக்தி படைத்தது.

ஷாப்பிங் செல்லும் பழக்கம் அதிகம் உடைய ஆண்களுக்கு இந்தப் பிரச்சினை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எழுச்சியின்மை, விறைப்புத்தன்மை குறைவு போன்றவற்றுக்கும் இது இட்டுச் செல்லும்.

இது மட்டுமல்லாமல் மார்பகப் புற்றுநோய், இதய நோய்கள், உடல் பருமன், ரத்த அழுத்தம் உள்ளிட்டவையும் கூட வரும் வாய்ப்பு உள்ளது. இந்த வேதிப் பொருளுக்கு அமெரிக்கா [^], கனடாவில் தடை [^] செய்யப்பட்டுள்ளது என்றார்.

எனவே ஆண்குலமே, ஷாப்பிங் போகும்போது ரொம்பக் கவனம். இல்லாவிட்டால் இழக்க நேரிடும் - பணத்தோடு, ஆண் குணத்தையும்.