வியாழன், 8 ஜூலை, 2010

கர்நாடக உயர்நீதி்மன்றத்தில் பெண் வக்கீல் படுகொலை!


பெங்களூர்: கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இன்று பெண் வக்கீலை பழைய குற்றவாளி ஒருவர் கத்தியால் குத்திப் படுகொலை செய்தார். இந்தசம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூர் விதான சவுதா எதிரே கர்நாடக உயர்நீதிமன்றம் உள்ளது. அங்கு இன்று காலை பெண் வக்கீல் ஒருவரை ஒரு நபர் கத்தியால் குத்திக்கொலை செய்தார்.
பின்னர் தனது தொண்டையைக் கிழித்து தற்கொலை செய்து கொள்ளவும் அவர் முயன்றார். அவரை போலீஸார் மடக்கிப் பிடித்துக் கைது செய்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அந்த நபர் பழைய குற்றவாளி என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக