வியாழன், 8 ஜூலை, 2010

குளுகுளுவென மாறியது சென்னை-காலை முதல் விட்டு விட்டு மழை!


சென்னை: வெப்பச் சலனம் காரணமாக சென்னை நகரிலும் கடலோரப் பகுதிகளிலும் இன்று காலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் நகரே குளுமையாக மாறிப் போயுள்ளது.

சென்னையில் இன்று காலையில் லேசான மழை பெய்ய ஆரம்பித்தது. சில இடங்களில் இது வலுத்தும், சில பகுதிகளில் லேசான தூறலாகவும் இருந்தது. காலை பெய்யத் தொடங்கிய இந்த மழை விட்டு விட்டுபெய்து கொண்டிருக்கிறது.

வெப்பச் சலனம் காரணமாக இந்த மழை பெய்வதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இந்த மழை மேலும் 24 மணிநேரத்துக்கு நீடிக்கும் எனவும், மாலையில் இடியுடன்கூடிய மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

காலையிலேயே மழை பெய்ய ஆரம்பித்ததால் பள்ளிகள், அலுவலகங்களுக்கு செல்வோர் சிரமத்திற்குள்ளாகினர். இருப்பினும் மழையால் வெப்பம் குறைந்து குளுகுளுவென மாறியுள்ளதால் சென்னை மக்கள் குஷியாகியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக