வெள்ளி, 30 ஏப்ரல், 2010

தமிழகம்: வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போர் 62 லட்சம் பேர்!


சென்னை: தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டு வேலைக்காக 62 லட்சம் பேர் காத்திருக்கின்றனர்.

சட்டசபையில் இன்று தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை மானியக் கோரிக்கைகள் தொடர்பான கொள்கை விளக்க குறிப்புகளை அந்தத் துறைகளின் அமைச்சர் தா.மோ. அன்பரசன் தாக்கல் செய்தார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் 2004-ம் ஆண்டு வரை பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை 5,67,619 மட்டுமே ஆகும்.

அதில் 31.3.2010ம் தேதி வரை 23,243 பேர் அரசு வேலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

31.3.2010ம் தேதி நிலவரப்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வேலை வாய்ப்பு அலுவலகங்களிலும் பதிவு செய்து வேலைக்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கை 61,98,028 பேர். இதில் 29,16,920 பேர் பெண்கள் .

குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்ற திடீர் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை197 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு அதில் 81 பேர் சிறப்பு பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிப் படிப்பை முடிக்கும் பாதிக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்வதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களையும் சேர்த்தால் வேலை தேடி காத்திருப்போர் எண்ணிக்கை மிக மிக அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.10 கோடி செலவில் டெல்லியில் பெரியார் மையம்!


சென்னை: டெல்லியில் ரூ.10 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பெரியார் மையத்தை நாளை மறுதினம் முதல்வர் கருணாநிதி திறந்து வைக்கவுள்ளார்.

இது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறுகையில்,

டெல்லி ஜசோலா பகுதியில் ரூ.10 கோடி செலவில் 5 மாடிகளைக் கொண்ட பெரியார் மையம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா வரும் 2ம் தேதி மாலை நடக்கிறது. இதை முதல்வர் கருணாநிதி திறந்து வைக்கிறார்.

அங்கு நிறுவப்பட்டுள்ள பெரியார் சிலையை மத்திய அமைச்சர் ஜி.கே. வாசனும், கலைஞர் கணினி மையத்தை மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லாவும், ஐ.ஏ.எஸ்-ஐ.பி.எஸ். பயிற்சி மையத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் திறந்து வைக்கிறார்கள்.

அங்கு அமைக்கப்பட்டுள்ள சுந்தரஜித் நூலகத்தை முன்னாள் மத்திய அமைச்சர் டி.பி. யாதவ் திறந்து வைக்கிறார் என்றார்.

இந்த மையம் அமைய மறைந்த முன்னாள் பிரதமர் வி.சி.சி்ங் உறுதுணையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

திட்டக் கமிஷனின் கூட்டத்தில் கலந்து கொள்ளவும், கோவை செம்மொழித் தமிழ் மாநாட்டில் பங்கேற்குமாறு ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை நேரில் அழைக்கவும் முதல்வர் கருணாநிதி டெல்லி செல்வது குறிப்பிடத்தக்கது.

சாதனைகளை‌ப் படை‌ப்பத‌ற்கான வ‌ழி!


குழ‌ந்தைகளா ஒ‌வ்வொருவரு‌ம் வா‌ழ்‌க்கை‌யி‌ல் ஏதாவது ஒரு ல‌ட்‌சிய‌த்தை‌க் கொ‌ண்டிரு‌க்க வே‌ண்டு‌ம். தா‌ம் கொ‌ண்ட ல‌ட்‌சிய‌த்தை அடைய அனை‌த்து வ‌ழிக‌ளிலு‌ம் முய‌ற்‌சி செ‌ய்து, அ‌தி‌ல் தோ‌ல்‌வி க‌ண்டாலு‌ம் துவ‌ண்டு‌‌விட‌க் கூடாது. முய‌ற்‌சியே‌ச் செ‌ய்யாம‌ல் இரு‌ப்பதை ‌விட, முய‌ற்‌சி செ‌ய்து தோ‌ல்‌வி அடைவது எ‌வ்வளவோ மே‌ல் எ‌ன்பதை உணரு‌ங்க‌ள்.

வா‌ழ்‌க்கை‌யி‌ல் அதுபோ‌ன்று ஒரு ல‌ட்‌சிய‌த்தை‌க் கொ‌ண்டு வாழ வே‌ண்டு‌ம் என ‌சுவா‌மி ‌விவேகான‌ந்த‌ர் நம‌க்கு அ‌றிவுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

அதாவது, வா‌ழ்‌க்கை‌யி‌ல் உ‌ய‌ரிய ல‌ட்‌சிய‌ங்கைள‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம். அதை அடைவத‌ற்கு எ‌ப்போது‌ம் ‌சி‌ந்தனை செ‌ய்ய வே‌ண்டு‌ம். கன‌விலு‌ம், செய‌லிலு‌ம், அதுவே உ‌யி‌ர்‌ப்புட‌ன் இரு‌க்க வே‌ண்டு‌ம். உனது மூளை, தசை, நர‌ம்பு, ஒ‌வ்வொ‌ன்று‌ம், அதை ‌நிறைவே‌ற்று‌ம் வேக‌த்துட‌ன் செய‌ல்பட வே‌ண்டு‌ம்.

உ‌ன்னுடைய நோ‌க்க‌ம் அது ம‌ட்டுமே ம‌ற்ற எ‌ல்லாவ‌ற்றையு‌ம் மற‌ந்து‌விடு.

ஒரு முகமாக கு‌வி‌ந்த செய‌ல் முனை‌ப்பு, ச‌க்‌தியையெ‌ல்லா‌ம் ஒடு‌க்‌கி ஒரு சேர சே‌ர்‌க்கு‌ம். ஆ‌ற்ற‌ல் ஆ‌கியவைதா‌ன் ல‌ட்‌சிய‌ங்களை அடைவத‌ற்கு அடி‌ப்படையாகு‌ம். கடவு‌ள்,‌ ‌மிருக‌ங்களை‌க் கூட ம‌னிதனை போலவே படை‌த்‌திரு‌க்‌கிறா‌ர். ஆனா‌ல் ‌மிருக‌ங்களு‌க்கு இ‌ந்த ‌சி‌ந்தனை த‌ன்மையு‌ம், செய‌ல் வேகமு‌ம் ‌கிடையாது.

வெறு‌ம் வ‌லிமை ம‌ட்டுமே பெ‌ற்று‌ள்ளதுதா‌ன் ‌வில‌ங்‌கின‌ம்.

அதனா‌ல்தா‌ன் ‌மிகவு‌ம் வ‌லிமை வா‌ய்‌ந்த ‌மிருக‌த்தையு‌ம் கூட ம‌னித‌ன் அட‌க்‌கியாள முடி‌கிறது. ஒரு ‌சிற‌ந்த ம‌னிதனையு‌ம், சாதாரண ம‌னித‌னையு‌ம் ‌பி‌ரி‌ப்பது கூட ‌சி‌ந்தனை ஆ‌ற்ற‌ல்தா‌ன். மேலு‌ம் அவ‌ர்களுடைய ‌சி‌ந்தனை‌யி‌ல் இரு‌ந்த கரு‌த்தூ‌ன்று‌ம் ச‌க்‌திதா‌ன். இ‌ந்த ச‌க்‌தியை ‌வீணா‌க்க‌க் கூடாது. இ‌ந்த ச‌க்‌தியை வ‌லு‌ப்படு‌த்‌தி‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள். அத‌ற்கு ‌தியான‌த்‌தி‌ல் ஈடுபடு‌ங்க‌ள்.

‌தியான‌ம் செ‌ய்வத‌ன் மூல‌ம் ‌நீ‌ங்க‌ள் ‌சி‌ந்‌தி‌ப்பதை செய‌ல்படு‌த்து‌ம் துணிவு‌ம் மனவ‌லிமையு‌ம் உ‌ங்களு‌க்கு ‌கிடை‌க்கு‌ம். இது உ‌ங்க‌ள் ல‌ட்‌சிய‌ங்க‌ளி‌ல் வெ‌ற்‌றி பெற உதவு‌ம் எ‌ன்று இளைஞ‌ர்களு‌க்கு‌ சுவா‌மி ‌விவேகான‌ந்த‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

வியாழன், 29 ஏப்ரல், 2010

சுறா - மு‌ன்னோ‌ட்ட‌ம்!

நடிகர் விஜய்யின் 50வது படம் சுறா. விஜய்க்கு திருப்புமுனையாக அமைந்த காதலுக்கு ம‌ரியாதை படத்தை தயா‌ரித்த சங்கிலி முருகன் 11 வருட இடைவெளிக்குப் பிறகு - அதாவது காதலுக்கு ம‌ரியாதைக்குப் பிறகு தயா‌ரித்திருக்கும் படம் இது.



WDஅழகர்மலை படத்தை இயக்கிய எஸ்.பி.ராஜகுமார் சுறாவை இயக்கியிருக்கிறார். 2007ல் மலையாளத்தில் வெளியான அன்வர் ரஷீதின் சோட்டா மும்பை படத்தின் கதையை மேலோட்டமாக தழுவி சுறாவை எடுத்துள்ளனர். இதில் ஹீரோவாக நடித்தவர் மோகன்லால்.

காதலிக்காகவும், தங்கைக்காகவும் சண்டை போட்ட நான் இதில் ஊர் மக்களுக்காக சண்டை போட்டிருக்கிறேன் என்று சுறா பற்றி கூறுகிறார் விஜய். இவருக்கு ஜோடியாக நடித்திருப்பவர் தமன்னா. மீனவ இளைஞனாக வரும் விஜய்யின் நண்பன் அம்ப்ரல்லாவாக வடிவேலு நடித்துள்ளார். இவர்கள் இருவரும் வரும் காட்சிகள் திரையரங்கை கலகலப்பாக்கும் என்றார் இயக்குனர். இவர்களுடன் ஸ்ரீமன், ‌ரியாஸ்கான, தேவ் கில் ஆகியோரும் நடித்துள்ளனர்.

சமாதானமாகப் போக நான் புறா இல்லடா... சுறா. விஜய் பேசும் பன்ச் வசனங்களில் இதுவும் ஒன்று. கொச்சி, தூத்துக்குடி, கடலூர் போன்ற கடலோரப் பகுதிகளில் படத்தை எடுத்துள்ளனர். மணிசர்மா இசையமைத்துள்ளார். அனைத்துப் பாடல்களும் ஏற்கனவே ஹிட்டாகியுள்ளன.

எம்.எஸ்.பிரபு, ஏகாம்பரம் இருவரும் ஒளிப்பதிவு செய்துள்ளனர். கனல் கண்ணன் சண்டைப் பயிற்சி அளித்துள்ளார்.

சங்கிலி முருகனின் முருகன் சினி ஆர்ட்ஸ் தயா‌ரித்திருக்கும் சுறாவின் ஒட்டுமொத்த விநியோக உ‌ரிமையை சன் பிக்சர்ஸ் வாங்கியுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை வெளியாகவிருக்கும் இப்படத்துக்கு சென்சார் யு சான்றிதழ் வழங்கியுள்ளது.

புதன், 28 ஏப்ரல், 2010

முன்கூட்டியே ‘வெளியாகாமல்’ தடுக்க மாத்திரை!


உடலுறவின்போது கட்டுப்பாட்டை மீறி முன்கூட்டியே விந்தனுக்கள் வெளியாவைத் தடுக்க புதிய மாத்திரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இங்கிலாந்தில். விரைவில் இது சந்தைக்கு வரவுள்ளதாம்.

செக்ஸ் உறவின்போது நமது மூளையில் சுரக்கும் செரட்டோனின் என்ற சீரம்தான் உணர்வுகளை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது. இந்த சீரத்திற்கு இதுமட்டுமல்லாமல் வேறு பல வேலைகளும் உள்ளன. இருப்பினும் உறவின்போது ஏற்படும் உச்சநிலையை கட்டுப்படுத்துவது இந்த சீரத்தின் முக்கிய வேலைகளில் ஒன்றாகும்.

சிலருக்கு இந்தக் கட்டுப்பாடு சரிவர கை கூடாமல் முன்கூட்டியே விந்து வெளியாகி உறவு கசக்கும் நிலை ஏற்பட்டுவிடும். இந்த நிலை ஏற்பட செரட்டோனின்தான் முக்கியக் காரணம். இப்படிப்பட்டவர்கள் இனி கவலைப்படத் தேவையில்லை. காரணம், இதை சரி செய்ய மாத்திரை கண்டுபிடித்து விட்டனர்.

இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த மாத்திரைக்கு பிரிலிஜி என்று பெயரிட்டுள்ளனர். 30 மில்லிகிராம் அளவிலான மாத்திரை இது. இதை உறவு கொள்வதற்கு 1 அல்லது மூன்று மணி நேரத்திற்கு முன்பு போட்டுக் கொள்ள வேண்டும். இந்த மாத்திரை செரட்டோனின் சுரப்பைக் கட்டுப்படுத்தி, உறவை இனிக்க வைக்க உதவுமாம்.

இந்த மாத்திரையின் மூலம் வழக்கமான நேரத்தை விட மூன்று மடங்கு கூடுதல் நேரத்திற்கு உறவை நீட்டிக்க முடியுமாம்.

இது தற்போது விலையில் காஸ்ட்லியாக உள்ளது. அதாவது 3 மாத்திரை கொண்ட ஒரு பேக் 76 பவுண்டுகளாகும்.

18 முதல் 64 வயது வரை உள்ளவர்கள் இதைப் பயன்படுத்த முடியும். சில ஐரோப்பிய நாடுகளில் இது ஏற்கனவே சந்தைக்கு வந்துவிட்டதாம். டாக்டர்களின் பரிந்துரையின் கீழ் மட்டுமே இந்த மாத்திரையை வாங்க முடியும். அதுவும் இப்போதைக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விற்க முடிவு செய்துள்ளனர்.

இந்த மருந்தை குடிபோதையில் இருப்போர் பயன்படுத்தக் கூடாதாம். அப்படிச் செய்தால், கடுமையான பக்க விளைவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளதாம்.

இந்த மருந்தினை இங்கிலாந்தில் விற்பனை செய்யும் உரிமையைப் பெற்றுள்ள லாயிட்ஸ் பார்மசி நிறுவனத்தின் ஆண்கள் செக்ஸ் சுகாதாரப் பிரிவின் தலைவர் நிதின் மகாடியா கூறுகையில், இது வயகாராவைப் போன்ற ஆடவருக்கான செக்ஸ் சுகாதார மருந்தாகும்.

இதன் மூலம் உறவுகளை மேம்படுத்த முடியும். இனிமையைக் கூட்ட முடியும். உறவின் நீளத்தை நீட்டிக்க முடியும் என்றார்.

செவ்வாய், 27 ஏப்ரல், 2010

ஆகஸ்ட் முதல் தேசிய மக்களுக்கு அடையாள அட்டை வினியோகம்


டெல்லி: நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் மத்திய அரசு வழங்கவுள்ள தேசிய அடையாள அட்டை 'ஆதார்' என்ற பெயரில் வழங்கப்படவுள்ளது.

இந்த அடையாள அட்டைக்கான புதிய சின்னமும் வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக தேசிய அளவில் போட்டி நடத்தப்பட்டு இந்த சின்னம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த சின்னத்தில் சூரியனும், விரல் ரேகையும் இடம் பெற்றுள்ளது.

திட்டக் கமிஷனின் கீழ் இயங்கும் தேசிய அடையாள அட்டை ஆணையகத்தின் தலைவர் நந்தன் நிலேகனி இதனை வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் அவர் கூறுகையில், இந்த அடையாள அட்டை 16 இலக்க அடையாள எண் கொண்டதாக இருக்கும்.

இந்த அடையாள அட்டை வினியோகம் வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கும். 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் இவை நாடு முழுவதும் அனைத்து மக்களுக்கும் வினியோகிக்கப்பட்டுவிடும் என்றார்.

உலக வங்கியில் இந்தியாவுக்கு அதிக வாக்குரிமை!


உலக வங்கியில் அதிக எழுச்சியுடன் பொருளாதார வளர்ச்சி அடைந்து வரும் சீனா, இந்தியா உட்பட வளரும் நாடுகளுக்கு அதிக வாக்குரிமை அளிப்பது என்று உலக வங்கி முடிவு செய்துள்ளது.

உலக வங்கி, சர்வதேச நிதியம் (ஐ.எம்.எப்) ஆகிய சர்வதேச நிதி அமைப்புகளில் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு அதிக வாக்குரிமை உள்ளன. இந்த நாடுகள் உலக வங்கி, சர்வதேச நிதியத்தின் எந்த திட்டத்தையும் நிறுத்திவைக்கும் அளவுக்கு செல்வாக்கு பெற்றுள்ளன.

இவற்றின் செயல்பாடுகளை விரிவாக்க வேண்டும். தற்போது எழுந்துள்ள சூழ்நிலைக்கு ஏற்ப உலக் வங்கி, சர்வதேச நிதியத்தின் செயல்பாடுகளை மாற்றி அமைக்க வேண்டும். சிர்திருத்தம் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக வளரும் நாடுகளுக்கு அதிக வாக்குரிமை வழங்கப்படவேண்டும் என்று நீண்ட நாட்களாக கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வாஷுங்டனில் நேற்று முடிவடைந்த உலக வங்கி, சர்வதேச நிதியத்தின் வருடாந்திர கூட்டத்தில், இந்தியா, சீனா, பிரேசில் உட்பட வளரும் நாடுகளுக்கு அதிக வாக்குரிமை அளிப்பது என முடிவு செய்யப்பட்டது. இதன்படி வளரும் நாடுகளுக்கு 4.59 விழுக்காடு வாக்குரிமை அதிகமாக கிடைக்கும்.

இந்தியாவுக்கு வாக்குரிமை 2.77 விழுக்காட்டில் இருந்து 2.91 விழுக்காடு கிடைக்கும்.

இதே போல் சீனாவின் வாக்குரிமை 2.77 விழுக்காட்டில் இருந்து 4.42 விழுக்காடாக அதிகரிக்கும் என்று உலக வங்கி, சர்வதேச நிதியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையதள மோசடி: சென்னை வா‌லிபருக்கு அமெரிக்காவில் 81 மாதம் ‌சிறை!


இணையதளம் மூலம் பங்கு மார்க்கெட்டில் மோசடி செய்து பலகோடி சுருட்டியதாக குற்ற‌ம்சா‌ற்றப்பட்ட சென்னை இளைஞர் ஒருவருக்கு அமெரிக்க ‌நீ‌திம‌ன்ற‌ம் 81 மாதம் ‌சிறை தண்டனையு‌ம் ம‌ற்றொரு சென்னை இளைஞருக்கு 2 ஆண்டு ‌சிறை தண்டனை விதி‌த்து‌ள்ளது.

சென்னையை சேர்ந்த ஜெய்சங்கர் மாரிமுத்து (36), இவரது நண்பர் திருஞானம் ராமநாதன் (36) இருவரும் சேர்ந்து கடந்த 2006ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் டிசம்பர் வரை இணையதளம் மூலம் மோசடியில் ஈடுபட்டனர். பங்கு மார்க்கெட்டிலும் மோசடி செய்தனர்.

அதிக அளவில் பரிவர்த்தனையாகாத பங்குகளை மோசடியாக விலை உயர்த்தி தரகர்கள் கணக்கில் வரவு வைத்தனர். பிறகு அந்த கணக்கை பயன்படுத்தி பெரிய அளவில் பங்குகளை வாங்கி குவித்து பணம் சம்பாதித்தனர்.

இதுபோன்ற மோசடிகளை அவர்கள் இந்தியாவிலும் தாய்லாந்திலும் செய்தனர். இது கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டனர். பிறகு அங்கு இருந்து அவர்கள் அமெரிக்காவின் கோரிக்கையின் பேரில் நாடு கடத்தப்பட்டனர்.

அவர்கள் மீது நெப்ராஸ்கா ‌நீ‌திம‌ன்ற‌‌த்‌தி‌ல் வழக்கு தொடரப்பட்டது. போலியாக வர்த்தகம் நடந்தது போல காட்டி, செயற்கையாக விலையை ஏற்றி, தாங்கள் வாங்கி வைத்து இருந்த பங்குகளை அதிக விலைக்கு விற்று லாபம் அடைந்ததாக அவர்கள் கு‌ற்ற‌த்தை ஒப்புக்கொண்டனர்.

இதுபோன்ற மோசடியில் 90 வாடிக்கையாளர்களும், 7 பங்கு மார்க்கெட் தரகு நிறுவனங்களும் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டன. இந்த மோசடி மூலம் அமெரிக்க பங்கு முதலீட்டாளர்களுக்கு ரூ.12 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது என்று குற்ற‌ம்சா‌ற்ற‌ப்ப‌ட்டது.

இந்த வழக்கை விசாரித்த அமெரிக்க ‌நீ‌திம‌ன்ற‌ம், மாரிமுத்துக்கு 81 மாத‌ம் ‌சிறை தண்டனை விதித்தது. மோசடியில் ஏமாந்தவர்களுக்கு ரூ.12 கோடி நஷ்டஈடு கொடுக்கவும் உத்தரவிட்டது.

அவரது கூட்டாளி ராமநாதனுக்கு 2 ஆண்டு ‌சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இன்னொரு கூட்டாளியான சொக்கலிங்கம் ராமநாதன் தலைமறைவாக இருக்கிறார்.

மே 9இ‌ல் ‌வி‌ண்‌ணி‌ல் செலு‌த்த‌ப்படு‌கிறது கார்டோசாட் 2பி செயற்கைக்கோள்!


அடிப்படை கட்டமைப்பு, நகரத் திட்டப் பணிகளுக்கு உதவும் கார்டோசாட் 2பி செயற்கைக்கோளை மே 9ஆம் தேதி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் விண்ணில் செலு‌த்து‌கிறது.

பெ‌ங்களூரு‌வி‌ல் செ‌ய்‌தியாள‌ர்‌க‌ளிட‌ம் பே‌சிய இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலைய செய்தித் தொடர்பாளர் எஸ்.சதீஷ், 700 கிலோ எடை கொண்ட கார்டோசாட் 2பி செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி-சி15 ராக்கெட் மூலம் மே 9ஆம் தேதி காலை 9.23 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்திலிருந்து விண்ணில் ஏவப்படுகிறது. இந்த செயற்கைக்கோளின் ஆயுள் 5 ஆண்டுகள் எ‌ன்றா‌ர்.

கார்டோசாட் 2பி செயற்கைக்கோளுடன் 117 கிலோ எடைகொண்ட மேலும் 4 சிறிய செயற்கைக்கோளும் விண்ணில் செலுத்தப்படுகிறது எ‌ன்றும் இதில் ஒன்று பெங்களூரு - ஹைதராபாத்தைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய மிகச் சிறிய செயற்கைக்கோளாகும் எ‌ன்று‌ம் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

மற்ற 3 செயற்கைக்கோள்கள் கனடா, ஸ்விட்சர்லாந்து நாடுகளை சேர்ந்தவை எ‌ன்று ச‌தீ‌ஷ் கூ‌றினா‌ர்.

திங்கள், 26 ஏப்ரல், 2010

ஜிஎம்ஆர் இன்டஸ்ட்ரீஸை வாங்குகிறது ஈஐடி பாரி!


சென்னை: ஜிஎம்ஆர் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை வாங்குகிறது சென்னை யைச் சேர்ந்த முருகப்பா குழுமத்தின் இஐடி பாரி இந்தியா நிறுவனம்.

இதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளதாக பாரி நி்றுவனம் அறிவித்துள்ளது.

இந்த ஒப்பந்த இரு பகுதிகளாக நிறைவேற்றப்பட உள்ளது. ஜிஎம்ஆர் குழுமத்தின் 51 சதவீத பங்குகளுக்காக ரூ.110 கோடி செலுத்தப்படும். இந் நிறுவனத்தின் கடன்கள் ரூ.450 கோடியை பாரி நிறுவனம் ஏற்கும். இந்த வகையில் ரூ.560 கோடிக்கு ஜிஎம்ஆர் நிறுவனத்தை வாங்குகிறது ஈஐடி பாரி நிறுவனம்.

ஜிஎம்ஆரை வாங்குவதன் மூலம் பாரி நிறுவனம் 60 முதல் 65 சதவீதம் வரை விரிவாக்கம் பெறும் என்று முருகப்பா குழும தலைவர் வெள்ளையன் தெரிவித்தார்.

தற்போதைய நிலவரப்படி ஜிஎம்ஆர் இன்டஸ்ட்ரீஸ் புரமோட்டர்கள் 74.85 சதவீத பங்குகளை வைத்துள்ளனர். இதில் 51 சதவீத பங்குகள் ரூ.57 வீதம் ஈஐடி பாரிக்கு விற்கப்படுகின்றன.

மீதி 23.85 சதவீத பங்குகளில் 20 சதவீதத்தை வெளிச் சந்தை விலையான ரூ.110.69 வீதம் பாரி நிறுவனம் வாங்கிக் கொள்ளும்.

ஜிஎம்ஆர் நிறுவனத்தை மீண்டும் லாபத்துக்கு திருப்பவே இந்த நடவடிக்கை என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்ற நிதியாண்டில் இந்நிறுவனம் ரூ. 58.43 கோடி நஷ்டத்தைச் சந்தித்தது.

ஜிஎம்ஆர் நிறுவனத்துக்கு ஆந்திரா , கர்நாடகாவில் மட்டும் மூன்று சர்க்கரை ஆலைகள் உள்ளன. இவற்றின் மொத்த பிழிதிறன் நாளொன்றுக்கு 11,000 டன். பாரி நிறுவனத்துக்கு 5 பெரும் ஆலைகள் உள்ளன. இவற்றின் மொத்த திறன் நாளொன்றுக்கு 19,000 டன் ஆகும்.

யாரும் எளிதில் புரிந்து கொள்ளும் பாடல் திருவள்ளுவர்! - இளையராஜா


சென்னை: படிக்கும்போதே புரிந்து கொள்ளும் அளவு எளிய செய்யுள் அமைப்பு திருக்குறள். அதற்கு தனியான விளக்கமெல்லாம் தேவையில்லை என்று கூறியுள்ளார் இசைஞானி இளையராஜா.

கவிஞர், திரைப்படாலாசிரியர் பூவை செங்குட்டுவன் எழுதி இசை அமைத்துள்ள 'குறள் தரும் பொருள்' ஆடியோ சிடியை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார் இளையராஜா. சென்னை ஆழ்வார்ப்பேட்டை நாரத கான சபாவில் இந்த விழா நடந்தது.

இளையராஜா பேசுகையில், "இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய திருக்குறளை, அனைத்து மக்களும் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் இசை வடிவில் கொண்டு வத்தமைக்காக கவிஞர் பூவை செங்குட்டுவனுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவிக்கிறேன்.

1969-ம் ஆண்டு சென்னைக்கு வந்தேன். சங்கிலி முருகன் நாடகத்துக்கு இசையமைப்பாளராக இருந்தபோது 'நான் உங்கள் வீட்டு பிள்ளை...' என்ற பாடல் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அந்த பாடலை எழுதிய கவிஞர் செங்குட்டுவனை காண வேண்டும் என்ற ஆவல் எழுந்தது.

நான் முதன் முதலில் சினிமாவில் கவிஞர் செங்குட்டுவனின், 'ஊரும் பழனியப்பா, பெயரும் பழனியப்பா, ஆறுதலை வேண்டுகிறேன் ஆறுமுக சாமியப்பா' என்ற பாடலுக்கு தான் இசையமைத்தேன். அவர் எனது மூத்த சகோதரர் போன்றவர்.

திருக்குறள் உண்மையிலேயே மிக எளிய கட்டமைப்பு கொண்டது. படித்ததும் புரிந்து கொள்ளும் செய்யுள் வடிவம் அது" என்றார்.

கவிஞர் பூவை செங்குட்டுவன் பேசுகையில், "திருக்குறளுக்கு 400-க்கும் மேற்பட்டவர்கள் உரை எழுதியிருக்கிறார்கள். பெரும்பாலான உரைகளைப் படித்து, ஆனால் மு.வ. வின் விளக்கத்தை அடிப்படையாக வைத்து 8 மாதம் பாடல்களை எழுதினேன். இரண்டரை ஆண்டுகளாக முயன்று இசை வடிவாக மாற்றியுள்ளேன். சினிமாவில் குறைவான பாடல்களாக இருந்தாலும் நிறைவான பாடல்களை வழங்கிய மனநிறைவு உள்ளது.." என்றார்.

நடிகர் விவேக் பேசுகையில், "திருவாசகத்துக்கு உருகார், ஒரு வாசகத்தும் உருகார்' என்பர். அந்தத் திருவாசகத்தை இசை வடிவில் மக்களிடம் சேர்த்தவர் இளையராஜா அந்த வகையில் குறள் தரும் பொருளும் வெற்றி பெறும். 133 அதிகாரத்தில் உலகை அடக்கியவர் திருவள்ளுவர் ஆகையால் தான் சமயம், இனம், மொழி அனைத்தையும் கடந்து உலகப் பொதுமறையாக உள்ளது. இன்றைய இளைய தலைமுறையினர் பல மணி நேரம் வீடியோ கேம், கம்ப்யூட்டர், லேப்டாப் என்று மாறிவிட்டதால், ஒரு குறளையாவது டைப் செய்தால் தான் அவை இயங்கும் என்ற நிலை வந்தால் எளிதில் திருக்குறள் அவர்களை சென்றடையும்' என்றார்.

இவ்விழாவில் திரைப்பட தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன், எஸ் வி சேகர், நடிகர் உதயா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வி.ஜி.பி.யில் அமெரிக்க வீரர்களின் சாகச காட்சிகள்!


சு‌ற்றுலா‌ப் பய‌ணிகளை கவரு‌ம் ‌வித‌த்‌திலு‌ம், ‌விடுமுறை‌யி‌ல் உ‌ள்ள ‌சிறா‌ர்க‌ளி‌ன் கொ‌ண்டா‌ட்ட‌த்தை அ‌திக‌ரி‌க்கு‌ம் வகை‌யிலு‌ம் ‌மகாப‌லிபுர‌ம் சாலை‌யி‌ல் உ‌ள்ள பொழுதுபோ‌க்கு பூ‌ங்காவான வி‌ஜி‌பி‌யி‌ல் அமெ‌ரி‌க்க ‌வீர‌ர்க‌ளி‌ன் சாகச ‌‌நிக‌ழ்‌ச்‌சி நடைபெறு‌கிறது.

வி.ஜி.பி. தங்க கடற்கரையில் உள்ள யூனிவர்சல் கிங்டம் பொழுதுபோக்கு பூங்காவில், கோடை விடுமுறையை முன்னிட்டு அமெரிக்க வீரர்களின் சாகச நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

கடந்த 23-ந் தேதி தொடங்கிய இந்த சாகச நிகழ்ச்சி ஜுன் மாதம் 6-ந் தேதி வரை 45 நாட்கள் நடைபெறுகிறது. வார நாட்களில் 4 காட்சிகளும், வார இறுதி நாட்களில் 5 காட்சிகளும் நடைபெறும். இதற்காக ஒரே நேரத்தில் 1000 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய கலை அரங்கம், குளு குளு வசதியுடன் நிர்மாணிக்கப்பட்டு உள்ளது.

இதன் தொடக்க விழா அமெரிக்க தூதரக அதிகாரி ஆன்ட்ரு சிம்கின் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு தலைமையில் நடந்தது.

ஞாயிறு, 25 ஏப்ரல், 2010

கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஐபிஎல் வீரர் சச்சின்!


பெங்களூர்: 3வது ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள வீரர்களிலேயே அதிகம் தேடப்பட்ட வீரராக சச்சின் டெண்டுல்கர் உருவெடுத்துள்ளார்.

இதுகுறித்த பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், ஐபிஎல் வீரர்களிலேயே அதிகம் தேடப்பட்ட வீரர் டெண்டுல்கர்தான்.

2வது இடம் கங்குலிக்குக் கிடைத்துள்ளது. தொடர்ந்து 2வது வருடமாக அதிகம் தேடப்பட்ட வெளிநாட்டு வீரர் என்ற பெருமை ஷான் வார்னுக்குக் கிடைத்துள்ளது.

இந்த பட்டியலில் புதிதாக இந்த ஆண்டு கில்கிளைஸ்ட், ரியான் ஹாரிஸ், பிரவீன் குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு முறையா 7,8, 9வது இடம் கிடைத்துள்ளது.

இந்தப் பட்டியலிலிருந்து டோணி, ஷேவாக் மற்றும் கடந்த இரு ஐபிஎல் தொடர்களிலும் பரபரப்பை ஏற்படுத்திய போலி ஐபிஎல் வீரர் ஆகியோர் வெளியேறியுள்ளனர்.

கடந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி அதிகம் தேடப்பட்ட அணியாக இருந்தது. இந்த ஆண்டு அந்த இடத்தை டெக்கான் சார்ஜர்ஸ் பிடித்துள்ளது. 2வது இடம் மும்பைக்கும், 3வது இடம் சென்னை சூப்பர் கிங்ஸுக்கும் கிடைத்துள்ளது.

ஒரு துளி எலுமிச்சைக்கு இத்தனை சக்தியா!

ஒரு துளி எலுமிச்சைக்கு இத்தனை சக்தியா!


இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல்.

இருபது வயது இளைஞர்கள் கூட இந்த பிரச்சினையில் சிக்கி அவதிப்படுகின்றனர்.

இதற்கு, கத்தியின்றி ரத்தமின்றி ஒரு சிகிச்சை இருக்கிறது. அது எலுமிச்சை!

ஆம்… எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது. இது ஏதோ குருட்டுத்தனமான வாதமல்ல. 100 சதவிகிதம் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ள உண்மை!

அமெரிக்காவின் சான் டியாகோ கிட்னி ஸ்டோன் சென்டரின் இயக்குநர் ரோஜர் எல் சர் என்பவர் இதனை நிரூபித்துள்ளார்.

சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தடுக்க மொத்தம் ஐந்து வழிகள் உள்ளனவாம். அதில் முக்கியமானது எலுமிச்சைச் சாறு அதிகமாகப் பருகுவது.

பொதுவாகவே பழச்சாறுகளை அதிகமாகப் பருகுவதன் மூலம் உடலில் உப்பு சேர்வதை தவிர்க்க முடியும். அதிலும் சிட்ரிக் அமிலத் தன்மை கொண்ட பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். எலுமிச்சையில்தான் அதிகளவு சிட்ரைட் உள்ளது.

எனவே எலுமிச்சைச் சாறு மூலம் சிகிச்சை தருகிறார்கள். இதற்கு லெமனேட் தெரபி என்று பெயர்.

தேவையான அளவு எலுமிச்சையை சாறு பிழிந்து இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து, வேளைக்கு நான்கு அவுன்ஸ் வீதம் திமும் பருகுவதுதான் இந்த லெமனேட் தெரபி. செலவு அதிகம் பிடிக்காத, தொந்தரவில்லாத, சுவையான சிகிச்சை.

இந்த லெமனேட் தெரபியால் சிறுநீரகத்தில் கல் உருவாவதை 1.00 லிருந்து 0.13 விகிதமாகக் குறைவது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

சிட்ரைட் இல்லாத பழங்களை அதிகம் சாப்பிடுவதையும் தவிர்க்கச் சொல்கிறார் ரோஜர் சர். காரணம் இந்தப் பழங்களில் கால்ஷியம் சத்து அதிகம் இருக்கும். சிறுநீரகக் கல் உருவாகக் காரணமே, கால்ஷியம் ஆக்ஸலேட்தான்.

பெரும்பாலானோருக்கு சிறுநீரகத்தில் சிறு சிறு கற்கள் இருந்து கொண்டுதான் உள்ளனவாம். இது அவர்களுக்கே தெரிவதில்லையாம்.

சிறுநீரகக் கல் பிரச்சினை எப்போது தெரியும்?

சிறுநீரகக் கல் பிரச்சினை இருப்பது மூன்று அறிகுறிகள் மூலம் உணரலாம்.

இதுபற்றி ரோஜர் சர் கூறுகையில், “கால்சியம் வகைக் கற்கள் சிறுநீரகத்திலிருந்து, வெளியேறும் இடத்துக்கு நகரும் போதுதான் முதுகு வலி, சிறுநீரில் ரத்தம், காய்ச்சல் போன்ற அறிகுறிகளை உணர முடியும். அப்போது உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

யூரிக் ஆசிட் வகைக் கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன. சிறுநீரில் வெளியேறும் கழிவுப் பொருள்தான் இதுவும். ஆனால் இந்த கழிவு அதிகமாக உடலில் சேரும்போது இது சிறுநீரகத்தில் தங்கி கற்களாக உருவாகிவிடும். அதிக புரோட்டீன் உணவுகளை உண்பவர்களுக்கு இந்த மாதிரி கற்கள் உருவாகுமாம்.

இன்னொரு வகை சிறுநீரகக் கற்களுக்கு மான்கொம்பு கற்கள் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். மானின் கொம்பு போன்ற தோற்றத்தில் இந்தக் கற்கள் இருக்குமாம். கிறிஸ்டைன் என்ற வகை அரிய கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன.

ஏற்கெனவே சிறுநீரகத்தில் கற்கள் – ஆனால் தொந்தரவில்லாமல்- இருந்தால், அவர்கள் உடனடியாக முன்தடுப்பு சிகிச்சைகளில் தீவிரமாக இறங்க வேண்டும். காரணம், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இன்னும் ஒரு கல் உருவாகிவிடும் வாய்ப்பு உள்ளது.

கற்கள் பெரிதாகி, வேறு வழியில்லாத நிலை தோன்றும்போது, அறுவைச் சிகிச்சைதான் வழி. லித்தோட்ரிஸ்பி (lithotripsy), பெர்குடானியஸ் நெப்ரோலிதோடமி (percutaneous nephrolithotomy) மற்றும் லேசர் லித்தோட்ரிஸ்பியுடன் கூடிய யூரேடெரோஸ்கோபி (ureteroscopy with laser lithotripsy) என மூன்று சிகிச்சைகள் உள்ளன.

இந்த சிக்கல்களுக்குள் போகாமல் தவிர்த்துக் கொள்ள ஆரம்பத்திலிருந்தே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிட்ரஸ் அடங்கிய பழங்கள், பழச்சாறுகள் பருக வேண்டும்.

“திரும்பத் திரும்ப இதுபோன்ற அறுவைச் சிகிச்சைகளில் மாட்டிக் கொள்ளாமல் நோயாளிகளைத் தடுப்பதே நமது நோக்கம். ஒரு முறை அறுவை செய்து அகற்றப்பட்ட கற்கள், மீண்டும் சிறுநீரகத்தில் உருவாகாமல் தடுப்பது மிக முக்கியம். இப்போது இதற்கான சாத்தியம் 50 சதவிகிதமாக உள்ளது. விரைவில் அது பூஜ்யமாக மாறும்” என்கிறார் ரோஜர் சர்.

அதற்காகத்தான் இதுபோன்ற இயற்கை சிகிச்சை முறைகளை ஆராய்ந்து, மக்களுக்கு சிபாரிசு செய்து வருகிறாராம் அவர்!

வெள்ளி, 23 ஏப்ரல், 2010

ஆ‌ண்மை ச‌க்‌‌தியை அ‌திக‌ரி‌க்கு‌ம் மாதுள‌ம்!


மாதுள‌ம் பழ‌ம் அ‌திக ச‌த்து‌க்க‌ள் ‌நிறை‌ந்தது எ‌ன்பது பலரு‌க்கு‌ம் தெ‌ரியு‌ம். ஆனா‌ல் அது எ‌ந்த வகை‌யி‌ல் உடலு‌க்கு ஆரோ‌க்‌கிய‌த்தை அ‌ளி‌க்‌கிறது எ‌ன்பதை பா‌ர்‌க்கலா‌ம்.

ஏதேனு‌ம் நோ‌யினா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு அ‌திக நா‌ள் ‌சி‌கி‌ச்சை எடு‌த்து‌க் கொ‌‌ண்டவ‌ர்களு‌க்கு நோயின் பாதிப்பால் பலகீனம் ஏ‌ற்ப‌ட்டிரு‌க்கு‌ம். அதுபோ‌ன்றவ‌ர்க‌ள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடையு‌ம் கூடும்.

மு‌க்‌கியமாக மாது‌ள‌ம் பழ‌ம் உட‌லி‌ல் தொண்டை, மார்பு, நுரையீரல், குட‌ல் பகு‌திகளு‌க்கு அதிக வலிமையை உண்டாக்குகிறது.

ஆண்மை குறைவு உ‌ள்ளவ‌ர்க‌ள் மாதுளம்பழம் சாப்பிடுவதால், ச‌க்‌தி கூடு‌ம். குழ‌ந்தை‌ப் பேறு‌ம் ஏ‌ற்படு‌ம்.
க‌ர்‌ப்‌பி‌ணிகளு‌க்கு ஏ‌ற்படு‌ம் ர‌த்த சோகையை‌த் த‌வி‌ர்‌க்க, கெலா‌க்‌ஸ் போ‌ன்றவ‌ற்றுட‌ன் மாதுள‌ம் பழ‌த்தை‌ச் சே‌ர்‌த்து பா‌ல் ஊ‌ற்‌றி சா‌ப்‌பி‌ட்டா‌ல் ர‌த்த ‌விரு‌த்‌தி ஏ‌ற்படு‌ம்.

ஜெனரல் மோட்டார் மின்சார காரை அறிமுகப்படுத்த உள்ளது!


ஜெனரல் மோட்டார் நிறுவனம் இந்த வருட இறுதியில் மின்சாரத்தில் இயங்கும் காரை அறிமுகப்படுத்த உள்ளது.

இந்தியாவில் எலக்ரிக் காரை தயாரித்து விற்பனை செய்யும் ரிவா எலக்ரிக் கார் கம்பெனியுடன், மின்சாரத்தால் இயங்கும் காரை தயாரிக்க சென்ற வருடம் செப்டம்பரில் ஜெனரல் மோட்டார் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

ஏற்கனவே ரிவா சிறிய எலக்ட்ரிக் காரை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

இந்த வருட இறுதியில், ஜெனரல் மோட்டார் நிறுவனம் பெரிய அளவிலான நான்கு கதவுகளை கொண்ட எலக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகப்படுத்த உள்ளது.

இது குறித்து ஜெனரல் மோட்டார் நிறுவனத்தின் துணை தலைவரும், இயக்குநருமான பி.பாலேந்திரன் கூறுகையில், ஜெனரல் மோட்டார் இ-ஸ்பார்க் என்ற எலக்ட்ரிக் காரை தயாரிக்க ரிவாவுடன் கூட்டு சேர்ந்துள்ளது. இது ஜெனரல் மோட்டாரின் சிறிய ரக காரை போன்று இருக்கும். இதற்கு தேவையான பேட்டரி தொழில் நுட்பத்தை ரிவா நிறுவனம் வழங்கும் என்று தெரிவித்தார்.

விப்ரோ லாபம் ரூ.1,209 கோடி!


மும்பை: முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோவின் லாபம் 21 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

மார்ச்சுடன் முடிவடைந்த நான்காவது காலாண்டு லாபம் ரூ.1.209 கோடி என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த காலகட்டத்தில் நிகர வருமானம் ரூ.6,982 கோடியாக உயர்ந்துள்ளது. இதற்கு முந்தை ஆண்டு இதே காலாண்டில் ரூ. 6.451.4 கோடியாக இருந்தது நிகர வருவாய்.

இதைத் தொடர்ந்து தனது பங்குதாரர்களுக்கு 2:3 என்ற விகிதத்தில் போனஸ் அறிவித்துள்ளது விப்ரோ.

இது தவிர பங்கொன்றுக்கு ரூ.6 வீதம் டிவிடெண்ட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நான்காம் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட பிறகு விப்ரோ தலைவர் அஜீம் பிரேம்ஜி கூறுகையில், "இந்த காலாண்டும் நிறுவனம் உறுதியான வளர்ச்சிப் பாதையில் பயணித்துள்ளது. இந்த காலகட்டத்தில் சர்வதேச அளவில் ஐடி, டெலிகாம் துறைக்கு ஏற்பட்ட சரிவின் பாதிப்பிலிருந்து முழுமையாக மீண்டுள்ளோம். வர்த்தகச் சூழல் நன்றாக அமைந்துள்ளது" என்றார்.

கடந்த நிதியாண்டின் ஒட்டுமொத்த லாபமும் 18.49 சதவீதம் அதிகரித்து ரூ.4.593 கோடியாகியுள்ளது. நிறுவனத்தின் நிகர லாபம் (Standalone basis) 46.85 சதவீதம் உயர்ந்து ரூ.1,236 கோடியாக அதிகரித்துள்ளது. 27 புதிய வாடிக்கையாளர்களையும் பெற்றுள்ளது.

5,325 புதிய பணியாளர்கள் இந்தக் காலாண்டில் புதிதாக நியமிக்கப்பட்டனர். இவர்களுடன் சேர்த்து விப்ரோவின் மொத்த பணியாளர் எண்ணிக்கை 1,08,071 ஆனது.
Read: In English
வரும் ஜூன் மாத்துடன் முடிவடையும் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மட்டும் விப்ரோ வருவாய் 1,215 மில்லியன் டாலர்களாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார் ஆசிம் பிரேம்ஜி.

புதன், 21 ஏப்ரல், 2010

முதலிரவுக்கு சில முக்கிய ஆலோசனைகள் . . . !


ஆயிரம் இரவுகள் வரலாம். ஆனால் முதலிரவு என்பது எல்லாப் பெண்களின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒரு நாள். அந்த நாளைப் படபடப்பும், டென்ஷனும் இல்லாமல் சந்திக்க சில ஆலோசனைகள்…..

*முதலிரவு நடக்கப் போகிற இடத்தைப் பற்றி உங்கள் வீட்டாருடன் பேசுங்கள். கல்யாணச் சத்திரத்திலா, ஹோட்டலிலா, வீட்டிலா என்று கேளுங்கள். புதிய இடம் உங்களுக்குப் படபடப்பை ஏற்படுத்தும் என்று நீங்கள் உணர்ந்தால், நீங்கள் விரும்புகிற இடத்தை அவர் களிடம் தெரிவியுங்கள்.

* மனித உடலைப் பற்றிய, செக்ஸ் பற்றிய, உடலுறவு பற்றிய புத்தகங்களைப் படியுங்கள். தேவைப்பட்டால் பெண் மருத்துவரிடம் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்கலாம்.

*முதலிரவு தினத்தன்று மாதவிடாய் வராமலிருக்க மருத்துவரைக் கலந்தா லோசியுங்கள். நீங்களாக மருத்துவம் செய்து கொள்ள வேண்டாம்.

*அன்றைய தினம் அதிகம் சாப்பிட வேண்டாம். அதிக மணமும், மசாலாவும் சேர்க் கப்பட்ட உணவுகளையும் தவிர்த்து விடவும்.

*முடிந்தால் இன்னொரு முறை குளியுங்கள். குளிக்க நேரமில்லா விட்டாலும், பழைய மேக்கப்பை அகற்றி விட்டு, புதிதாக அதே சமயம் ரொம்பவும் மிதமாக மேக்கப் போட்டுக் கொள்ளுங்கள்.

* உடலை உறுத்தாத உடையை அணிந்து கொள்ளுங்கள்.

* நகைகள் குறைவாகவே இருக் கட்டும். கூரிய முனைகளைக் கொண்டதும், கனமானதுமான நகைகள் வேண்டாம்.

* காதுகளுக்குப் பின்புறம், மணிக்கட்டு போன்ற இடங்களில் மிதமான சென்ட்
தடவிக் கொள்ளுங்கள்.

* உடல் முழுவதும் மாயிச்சரைசிங் லோஷன் தடவிக் கொள்ளுங்கள்.

* கனமான, ஆடம்பரமான கூந்தல் அலங்காரத்தைத் தவிர்க்கவும்.

* படுக்கை விரிப்பை இரு முறை சரி பார்க்கவும். அலங்காரம் செய்யப்பட்ட பூக்களிலிருந்து முட்களோ, பூச்சிகளோ உதிர்ந்திருக்க வாய்ப்புண்டு.

* முதல் ஸ்பரிசம் என்பது படபடப்பாகத்தான் இருக்கும். உங்கள் கணவரது செய்கைகள் உங்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தினால் அதை அவரிடம் தெரிவியுங்கள்.

* முதலிரவன்றே உறவில் ஈடுபட்டுத் தானாக வேண்டும் என்று அவசியமில்லை. நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாதவர்கள் எனில், முதலில் உங்கள் விருப்பு, வெறுப்புகளைப் பற்றிப் பேச அந்த இரவை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

* அடுத்தவர்களது அனாவசிய அனுபவங்களையும், அறிவுரைகளையும் கேட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள். ஒவ்வொருவரது அனுபவம் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும்.

* உணர்ச்சி வேகத்தில் உடனடியாக உறவில் ஈடுபடாமல் சிறிது நேரத்தை முன் விளையாட்டுகளில் செலவழியுங்கள்.

* முதல் முறை உறவில் ஈடுபடும் பெண்களுக்கு வலி இருக்க லாம். அதைப் பற்றியே நினைப்பது வலியை இன்னும் அதிக மாக்கத்தான் செய்யும்.

* வலியையும், வறட்சியையும் குறைக்க பெட்ரோலியம் ஜெல்லி அல்லது தேங்காய் எண்ணெய் உபயோகிக்கலாம்.

* உங்களுக்குள் உங்கள் முதலிரவு பற்றி ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். உங்களது அனுபவம் அதை மிஞ்சவும் செய்யலாம். ஏமாற்றமாகவும் அமையலாம். போகப் போக அது சரியாகி விடும்.

நானோவுக்கு போட்டியாக நிஸ்ஸானின் குறைந்த விலை கார்!


மும்பை: உலகின் மிகக் குறைந்த விலை கார் என்று வலம் வரும் டாடா நானோவுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தும் விதத்தில் ரூ 1.34 மதிப்புள்ள நவீன சிறிய ரகக் காரை தயாரிக்கிறது ஜப்பானிய நிறுவனம் நிஸ்ஸான்.

இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தியாளர் பஜாஜ் நிறுவனத்துடன் இணைந்து இந்த தொழிற்சாலையை நிறுவுகிறது நிஸ்ஸான்.

2012-ம் ஆண்டு இந்தக் கார் விற்பனைக்கு வரும் என்கிறார் நிஸ்ஸான் நிறுவன ஆப்ரிக்கா மற்றும் இந்தியாவுக்கான தலைவர் ஜில்லிஸ் நார்மண்ட்.

பஜாஜ் நிறுவனம் மிகக் குறைந்த விலையில், அதிக லாபத்துடன் வாகனங்கள் தயாரிக்கும் கலையில் தேர்ச்சி பெற்றவர்கள் என்றும் அந்த நிபுணத்துவத்தை நிஸ்ஸான் பயன்படுத்திக் கொள்ளும் என்றும் நார்மண்ட் கூறினார்.

உலகில் சிறிய ரக மற்றும் மலிவு விலை கார்கள் (70 சதவிகிதம்) அதிகம் விற்பனையாவது இந்தியாவில்தான் என்றும், இந்த சந்தையை நிஸ்ஸான் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் என்றும் அவர் கூறினார்.

ஏற்கெனவே ரெனால்ட் நிறுவனத்துடன் இணைந்து சென்னை ஒரகடத்தில் சிறிய மற்றும் நடுத்தர ரகக் கார்கள் உற்பத்தி தொழிற்சாலையை நிறுவியுள்ளது நிஸ்ஸான்.

கோடை விடுமுறை தொடங்கியாச்சு! சுற்றுலா பிளான்!



கோடை விடுமுறை தொடங்கியாச்சு! கிட்டத்தட்ட அனைவருமே எங்கேயாவது சுற்றுலா அல்லது சொந்த ஊர் என்று வெளியூர் செல்ல திட்டமிடுவார்கள். விடுமுறை கொண்டாட்டம் என்பதில் பயணம் தான் பிரதானம். அப்படி பயணம் செய்யும் போது கவனமாக இருந்தால்… பயணம் கலக்கமின்றி கலகலப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை! அதற்காக ரொம்பவும் மெனக்கெட வேண்டிய அவசியமில்லை. முன்னெச்சரிக்கையாக திட்டமிட்டால் போதும். எத்தனை பேர், எங்கெங்கு போகி றீர்கள்? என்பதை எல்லோரும் சேர்ந்து முடிவெடுங்கள். அந்த இடங்களுக்கு போய், வரும் செலவு பட்ஜெட்டுக்குள் வருகிறதா? என்பது மிக முக்கியம். பயணம் செய்யும் நாட்களில் வீட்டு பெண்களுக்கு `பர்சனல்’ பிரச்சினைகள் உள்ளதா? என்பதை தெரிந்து அதற்கேற்ப சுற்றுலாவை திட்டமிடுவது நல்லது. பஸ், ரெயில், விமானம் எதில் பயணம் என்று முடிவெடுத்த பின்னர், உடனடியாக பயண ஏற்பாடுகளை தொடங்கி விடவும்.

வாகனத்தில் ஏறும்போதும், இறங்கும்போதும் உங்களோடு கொண்டு வந்த பொருட்கள் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்பதை ஒருவர் பொறுப்பாக கவனித்து வந்தால் பதட்டம் இருக்காது. இதனால் எந்த பொருளும் `மிஸ்’ ஆகாது. பயணத்தில் நேரம் தவறாமை மிகவும் முக்கியம். குடும்பத்துடன் செல்லும்போது உங்களுக்காக… மற்ற அனைவருமே காத்திருக்கும் சூழல் கசப்பை ஏற்படுத்தும். நெருங்கிய உறவுகளுடன் செல்லும்போது செலவுகளை பகிர்ந்து கொள்வது நல்லது.

சுற்றுலாத் தலங்களில் கூடுமான வரைக்கும் பணத்தை அதிகமாகக் கையில் வைத்திருக்காமல், டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டில் தேவையானதை எடுத்துக் கொள்ளலாம். திருட்டு மற்றும் தொலைந்து போவதால் ஏற்படும் சிரமத்தை தவிர்க்கலாம். பணம் தொலைந்தால், தேவையில்லாத அலைச்சலையும் பிரச்சினையைம் எதிர் கொள்ள வேண்டியிருக்கும். உடைமைகள், குழந்தைகள் மீது எப்போதும் கவனம் தேவை. பஸ், ரெயில் நிறுத்தங்களில் கிடைக் கும் பொருட்கள் பெரும்பாலும் மிகச் சிறந்த உணவாக இருக்கும் என்று சொல்ல முடியாது. இதனால் வயிற்றுக் கோளாறு போன்ற சிக்கல் ஏற்படலாம். இதனால் சளி, காய்ச்சல் போன்ற பிரச்சினைகளும் வரலாம். அப்படி உடல் நலக் குறைவால் சுற்றுலா சந்தோஷமும் குறையக்கூடும். குழந்தை முதல் வயதானவர் வரை அனைவரும் எண்ணை பதார்த்தங்களை தவிர்த்தால் பயணம் ஜாலியாக இருக்கும். வீடு கட்ட, கல்யாணம் நடத்த… கல்விக்கு என வங்கிக் கடன் தருவதை அறிவீர்கள்.

அதேபோல் சுற்றுலாவுக்கு லோன் தருகிறார்கள் தெரிமா? இது `டிராவல் லோன்’ என்ற பெயரில் வழங்கபடுகிறது. கூடுமானவரையில் லோன்களை தவிர்க்கலாம். பணம் அவசியம் என்ற பட்சத்தில் கிரெடிட் கார்டில் லோன் எடுப்பதை விட, பர்சனல் லோன் எடுப்பது நல்லது. ஏனென்றால், பர்சனல் லோனுக்கு வட்டி குறைவு. அதேபோல் டிராவல் இன்சூரன்ஸ் எடுப்பதும் நல்லது. சுற்றுலா மற்றும் வெளியூர் செல்லும்போது நகைகள், விலை உயர்ந்த பொருட்கள், பத்திரங்கள் போன்றவற்றை வங்கி லாக்கரில் வைத்து விட்டுச் செல்லுங்கள். பட்டுபுடவை, வெள்ளி பாத்திரங்களை நெருங்கிய உறவினர் வீட்டில் கொடுத்து விட்டு செல்லலாம். அதேபோல் நீங்கள் வெளியூர் செல்லும்போது உங்கள் ஏரியா கூர்க்காவிடம் வீட்டை அடிக்கடி நோட்டம் பார்க்கச் சொல்லுங்கள். மேலும் காவல் நிலையத்திலும் பெட்டிஷனாக எழுதிக் கொடுப்பது நல்லது.

சுற்றுலாவில் முக்கியமாக கவனிக்க வேண்டியது குடிநீர். தண்ணீர் முலம் நிறைய வியாதிகள் பரவ வாய்ப்புள்ளதால், கொதிக்க வைத்த நீரை எடுத்துச் செல்வது நல்லது. இல்லாவிட்டால் `வாட்டர் கேன்களில்’ தண்ணீரை கொண்டு செல்லலாம். பயணத்தில் வயிறு சரியில்லை என்றால் சோடா குடிக்காமல், இளம்சூட்டில் நீர் அல்லது பால் குடிப்பது நல்லது. முடிந்தவரை அசைவ உணவை தவிர்த்து சைவ உணவை அளவோடு சாபிட்டால் பயணத்தில் பிரச்சினை தலை காட்டாது. சுற்றுலா தலங்களில் `இது சூப்பர்… அது அப்படி..’ என்று சொல்வதை நம்ப வேண்டாம். எந்த ஊருக்கு சென்றாலும் அங்கே என்ன ஸ்பெஷல்? என்பதை முன்பே அறிந்து கொள்ளவும். ஊட்டி சாக்லேட், ஏற்காடு அன்னாசி என ஒவ்வொரு ஊரிலும் கிடைக்கும் உணவு பொருட்களை அங்கேயே சாப்பிட்டால்தான் நல்ல ருசியோடு இருக்கும். நம்ம ஊரில் மலிவாக கிடைக்கும் பொருளை, பெருமைக்காக சுற்றுலா தலத்தில் அதிக விலைக்கு வாங்க வேண்டாம்.

செக்ஸ் உறவை தவிர்க்க வேண்டிய தருணங்கள்!


கர்ப்பமாக இருக்கும் போதும் முதல் மூன்று மற்றும் கடைசி மூன்று மாதங்களைத் தவிர்த்து இடைப்பட்ட மாதங்களில் மிதமான செக்ஸ் வைத்துக் கொள்ளலாம். கர்ப்பிணி மனைவியைக் கட்டாயப்படுத்தி உறவு வைத்துக் கொண்டால், அவளது உடல் மற்றும் மனம் பாதிக்கப்படுவது மட்டுமின்றி பிறக்கும் குழந்தையின் மனநிலையும் பாதிக்கப் படக்கூடும்.

* பிரசவத்திற்குப் பிறகு சில தகவல்களைக் கருத்தில் கொண்டே தம்பதியர் உறவில் ஈடுபட வேண்டும். அதாவது பிரசவம் சிக்கலின்றி அமைந்ததா, சுகப் பிரசவமா அல்லது சிசேரியனா என்று பார்க்க வேண்டும்.

* சாதாரணமாக குழந்தைப் பேற்றுக்குப் பிறகு ஒரு பெண்ணின் கருப்பை சுருங்கி இயல்பு நிலையை அடைய ஆறு வாரங்களாகும். இது தோராயக் கணக்குதான். சில பெண்களுக்கு அவரவர் உடல்நிலையைப் பொறுத்து இந்தக் கணக்குக் கூடலாம். எனவே அப்பெண்ணின் உடல்நலம் சீராக இருப்பதாக மருத்துவர் உத்தரவாதம் கொடுத்த பிறகே உறவு கொள்ள வேண்டும்.

* குழந்தை பிறக்கும் போது பெண்ணின் உடலுறவுப் பாதையில் காயங்கள் ஏற்பட்டிருந்தால் அவை ஆறுகிற வரை உறவைத் தவிர்க்க வேண்டும்.

* கணவனுக்குத் தொற்றும் வகையில் ஏதேனும் நோய் இருந்தால், அது முற்றிலும் குணமாகிற வரை மனைவி அவனுடன் உறவைத் தவிர்க்க வேண்டும்.

* பிரசவத்திற்குப் பிறகு பெண்ணின் உடல்நலம் முற்றிலும் சரியாகி விட்ட போதிலும், அவளுக்கு உறவில் விருப்ப மில்லை என்று தெரிந்தால், அதற்குக் கட்டாயப் படுத்துவது கூடாது.

* உறவில் ஈடுபடும் போது உடலுறவுப் பாதையில் கடுமையான எரிச்சலோ, வலியோ இருந்தால், அதை உடனடியாகத் தவிர்ப்பது நல்லது.

* கருச் சிதைவுக்குள்ளானவர்களும், குறை மாதப் பிரசவத்துக்கு ஆளானவர்களும் மருத்துவரின் ஆலோசனையின் பேரிலேயே உறவைத் தொடங்க வேண்டும்.

* மாதவிலக்கு நாட்களில் உறவு கொண்டால், கருத்தரிக்காது என்று பலரும் அந்நாளில் உறவு கொள்ள நினைப்பதுண்டு. ஆனால் அதை முழுமையாக நம்புவதற்கில்லை. அந்நாட்களில் உறவு கொள்வதன் மூலம் கணவன்-மனைவி இருவருக்குமே தொற்று நோய்கள் பரவ வாய்ப்புகள் அதிகம்.

* பெண் நோய் வாய்ப்பட்டிருந்தால் அந்நாட்களில் உறவைத் தவிர்ப்பதே நல்லது.

* கைக் குழந்தையிருக்கும் போது உறவில் ஈடுபட்டால் தாய்ப்பால் இல்லாமல் போய் விடும் என்று பல பெண்கள் அதைத் தவிர்ப்பதுண்டு. ஆனால் இது வெறும் மூட நம்பிக்கையே. குழந்தை பிறந்து, குறுகிய காலத்திலேயே உறவு கொண்டால் கடுமையான வலி இருக்கும் என்ற பயத்திலேயே அதைத் தவிர்க்கச் சொல்கிறார்கள்.

* பிரசவித்த பெண்கள் தாய்ப்பால் கொடுப்பதே கருத்தடை முறை என்று நினைத்துக் கொண்டு, தைரியமாக உறவு கொள்வதுண்டு. ஆனால் அதை நூறு சதவிகிதம் நம்ப வேண்டாம். ஏதாவதொரு காரணத்தால் பால் வற்றி விட்டால், அந்தப் பெண் கருத்தரிக்க வாய்ப்புகள் உண்டு.

திங்கள், 19 ஏப்ரல், 2010

செல்போன் வைப்ரேஷனால் செக்ஸ் உணர்வு தூண்டப்பட்டு அவதிப்படும் பெண்!


செல்போன்களிலிருந்து வரும் வைப்ரேஷன் மூலம் தனக்கு செக்ஸ் உணர்வு தூண்டப்படுவதாக இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு பெண் கூறியுள்ளார்.

செல்போன் என்றில்லாமல் எதில் எல்லாம் வைப்ரேஷன் வருமோ, அதன் மூலமாகவெல்லாம் தனக்கு செக்ஸ் உணர்வு தூண்டப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அவரது பெயர் அமன்டா பிளவர்ஸ். உடற்பயிற்சி செய்யும் சாதனத்தை பயன்படுத்தும்போது அதிலிருந்து ஏற்படும் வைப்ரேஷன் தனக்கு செக்ஸ் உணர்வைத் தூண்டி விடுவதாக கூறுகிறார் அமன்டா. அதுவும் எப்படி என்றால் ஒரு நாளைக்கு பத்த முறையாவது செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அளவுக்கு.

உடற்பயிற்சி சாதனம் என்றில்லாமல், செல்போன்கள் உள்ளிட்டவற்றிலிருந்து வரும் வைப்ரேஷன்களும் கூட தனக்கு செக்ஸ் உணர்வைத் தூண்டுவதாக கூறுகிறார் அமன்டா.

அமன்டாவுக்கு இயல்பாகவே செக்ஸ் உணர்வு அதிகமாம். அதற்கு காரணம், அவரது நரம்பு மண்டலத்தில் ஏற்பட்டுள்ள ஒரு கோளாறே காரணம் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

24 வயதாகும் அமன்டா இதுகுறித்துக் கூறுகையில், ஏதாவது வைப்ரேஷனை எனது உடல் சந்தித்து விட்டால் உடனே செக்ஸ் உணர்வு தூண்டப்பட்டு விடுகிறது. உடனடியாக செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அளவுக்கு அது வேகமாக இருக்கிறது.

செல்போனிலிருந்து வரும் வைப்ரேஷன் கூட என்னை விட்டு வைப்பதில்லை. இதனால் மிகவும் அவதிப்படுகிறேன். இதைக் கட்டுப்படுத்த என்னால் முடியவில்லை. ஆனாலும் மூச்சுப் பயிற்சி உள்ளிட்டவற்றை கடைப்பிடித்து என்னை நானே கட்டுப்படுத்திக் கொள்ள முயலுகிறேன் என்றார்.

தனது பிரச்சினையை சரி செய்ய தொடர் சிகிச்சைக்கும் உட்பட்டுள்ளாராம் அமன்டா.

அமெரிக்காவுக்கு மாற்றுப் பாதையில் இந்திய விமானங்கள் இயக்கம்!


டெல்லி: ஐஸ்லாந்து எரிமலை வெடிப்பால் சூழ்ந்துள்ள சாம்பல் மண்டலத்தால் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்கா வுக்கான இந்திய விமான சேவை மாற்றுப் பாதையில் மீண்டும் துவங்கியது.

ஐஸ்லாந்து எரிமலையின் சாம்பல் 30க்கும் மேற்பட்ட ஐரோப்பிய நாடுகளின் மீது மிதக்கின்றன. இதன் அடர்த்தி அதிகமாக உள்ளதால் விமானங்களை இயக்க முடியாமல் கடந்த 5 நாட்களாக விமான நிறுவனங்கள் தவிக்கின்றன. பயணிகள் ஆங்காங்கே விமான நிலையங்களில் சிக்கிக் கொண்டுள்ளனர்.

ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்தாகியுள்ளன. பல லட்சம் பயணிகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். பல கோடி நஷ்டத்தை விமான நிறுவனங்கள் சந்தித்து வருகின்றன.

இந்தியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகள் வழியாக அமெரிக்காவுக்கு செல்லும் விமான போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விமான பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு அமெரிக்காவுக்கு மீண்டும் விமானங்களை இயக்க ஏர் இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அதன்படி இடையில் நிற்காமல் மும்பை-நியூயார்க்-மும்பை செல்லும் விமானமும், டெல்லி-நியூயார்க் -மும்பை விமானமும் இன்று முதல் இயக்கப்பட உள்ளன. இரண்டும் போயிங் 777 ரக விமானங்கள் ஆகும். வழக்கமான பாதையில் செல்லாமல் மாற்றுப் பாதை வழியாக இந்த விமானங்கள் அமெரிக்கா செல்லும். அதே நேரத்தில், அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் நகருக்கு செல்லும் விமானங்கள் இன்னமும் இயக்கப்படவில்லை.

விமானப் போக்குவரத்தை தொடங்கி இருப்பதால் மறுபடியும் டிக்கெட் பதிவு செய்தல், விமான டிக்கெட்டை மாற்றுதல், ரத்து செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்வதற்காக மும்பை மற்றும் டெல்லி விமான நிலையங்களில் சிறப்பு அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

வெப்துனியாவில் வேலை வாய்ப்பு!


வெப்துனியா.காம் இந்தியா நிறுவனத்தில் கீழ்கண்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது:

1) தமிழ்.வெப்துனியா.காம் இணைய தளத்தில் பணியாற்ற ஆர்வமும், அனுபவமும் கொண்ட பத்திரிக்கையாளர்கள்

2) தகவல் தொழில்நுட்ப மொழி ஆக்கப் பணிகளுக்கு மொழித் திறன் கொண்ட பணியாளர்கள்.

முதல் பணிக்கு:

கல்வித் தகுதி / அனுபவம்: ஊடகப் பட்டம் + ஒரிரு ஆண்டுகள் செய்தியாளராக பணயாற்றிய அனுபவம்

2வது பணிக்கு:

கல்வித் தகுதி / அனுபவம்: இளநிலை பட்டப்படிப்பு + மொழிபெயர்ப்பில் அனுபவம் (கட்டாயமல்ல)

வயது: மேற்கண்ட இரு பணிகளுக்கும் 35 வயது‌க்கு‌ள்.

விண்ணப்பங்களை தமிழில் / ஆங்கிலத்தில் கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்:

hrsouth@webdunia.net

வெள்ளி, 16 ஏப்ரல், 2010

முதலிரவில் நடந்ததை ஆண் நண்பரிடம் விளக்கும் பெண்- ஆடியோ கசிவால் பரபரப்பு!


நாகர்கோவில்: முதலிரவின்போது தனது கணவர் தன்னிடம் நடந்து கொண்டதை ஒரு பெண் தனது ஆண் நண்பரிடம் விளக்கும் ஆடியோ ஒலிப்பதிவு வெளியாகி தமிழகத்தை பரபரப்புக்குள்ளாக்கியுள்ளது.

சைபர் கிரைம் சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன. ஹோட்டல்களில் பெண்கள் குளிப்பதை ரகசியமாக வீடியோவில் பதிவு செய்து வெளியிடும் சம்பவங்களை முன்பு கண்டது தமிழகம். குறிப்பாக நடிகை திரிஷாவின் குளியலறைக் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

சமீபத்தில், காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோவில் பூசாரி தேவநாதன், பல்வேறு பெண்களுடன் கோவில் கருவறையில் அசிங்கமாக நடந்து கொண்டது செல்போன் கேமராவில் படம் பிடிக்கப்பட்டு வெளியாகி தமிழகத்தை உலுக்கியது.

இதேபோல தங்களது காதலிகளுடன் அந்தரங்கமாக இருந்த்தை செல்போன் கேமராவில் பதிவு செய்து வெளியிட்ட காதலர்களின் செயல்களையும் தமிழகம் முன்பு கண்டிருந்த்து.

இந்த நிலையில் தனது தோழியின் முதலிரவுக் காட்சிகளை அவர் வாயாலேயே சொல்ல வைத்து அதை டேப் செய்து வெளியிட்டுள்ளார் ஒரு நபர். குமரி மாவட்டத்தில் இந்த ஆடியோ ஒலிப்பதிவு வெளியாகி வலம் வந்து கொண்டுள்ளது.

அந்த இருவருக்கும் இடையே நீண்ட காலமாக காதல் இருப்பது போல தெரிகிறது. கல்யாணத்திற்குப் பின்னர் தனது முதலிரவு அனுபவத்தை அந்த ஆண் நண்பரிடம் படு இயல்பாக விவரித்துள்ளார் அந்தப் பெண்.

கணவர் தன்னிடம் எப்படி நடந்து கொண்டார், எங்கெல்லாம் தொட்டார் என்பதையெல்லாம் அந்தப் பெண் கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் விவரித்துள்ளார்.

அந்தப் பெண்ணுக்குத் தெரியாமலேயே அவரது பேச்சை டேப் செய்துள்ளார் அந்த நண்பர் என்று தெரிகிறது.

முதலிரவுக் காட்சிகள் குறித்து அந்த ஆண் நண்பர் பெண்ணிடம் கேட்கிறார். முதலில் மறுக்கும் அவர், பின்னர் படு சகஜமாக அதை விவரிக்கத் தொடங்குகிறார்.

கொஞ்சமும் தயக்கம் இல்லாமல், கூச்சம் இல்லாமல் அந்தப் பெண் அந்தரங்க காட்சிகளை விவரித்துப் பேசியுள்ளார். மேலும் தனது நண்பர் கேட்ட சந்தேகங்களையும் தீர்த்து வைத்தும் பேசியுள்ளார் அப்பெண்.

கிட்டத்தட்ட 25 நிமிடங்கள் இந்த ஆபாச டேப் ஓடுகிறது. இதுகுறித்து போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

லண்டனில் திப்பு சுல்தான் வாள் ஏல‌ம் ‌விட‌ப்ப‌ட்டது!


இ‌ந்‌தியா‌வி‌ல் ஆ‌‌ங்‌கிலேய‌ர்க‌‌ளி‌ன் ஆ‌தி‌க்க‌த்தை எ‌தி‌ர்‌த்து போ‌ரி‌ட்ட ம‌ன்ன‌ர் திப்பு சுல்தான் பயன்படுத்திய வாள் இங்கிலாந்தில் மூ‌ன்றரை கோடி ரூபா‌ய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டது.

இந்தியாவை ஆங்கிலேயர் ஆட்சி செய்த காலத்தில் மைசூ‌‌ர் ம‌ன்னராக இரு‌ந்த ‌திப்பு சுல்தான், ஆ‌ங்‌கிலேயரு‌க்கு அடிப‌ணிய மறு‌த்தா‌ர். ஆ‌ங்‌கிலேயரு‌க்கு எ‌திராக போ‌ரி‌ட்டா‌ர் ‌தி‌ப்பு சு‌ல்தா‌ன். போரில் ‌தி‌ப்பு சு‌ல்தா‌ன் தோல்வி அடைந்ததும் 1799-ம் ஆண்டு மே மாதம் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள அவரது அரண்மனைக்குள் நுழைந்த ஆங்கிலேய படையினர் அங்கு இருந்த அவரது வாள் உள்பட எல்லா உடைமைகளையும் அள்ளிச்சென்றனர். அப்படி அள்ளிச்செல்லப்பட்ட பொருட்கள் எல்லாம் இங்கிலாந்து நாட்டுக்கு அனுப்பப்பட்டன.

200 ஆண்டு கால பழமையான இந்த வாள் 2003-ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் ஏலத்தில் விடப்பட்டது. அப்போது இந்த வாளை தொழில் அதிபர் விஜய் மல்லையா ஏலத்தில் எடுத்தார். 7 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது அது மீண்டும் ஏலத்துக்கு வந்தது.

இந்த வாளை லண்டனில் உள்ள சோத்பீ என்ற ஏல கம்பெனி ஏலம் விட்டது. இது ரூ.35 லட்சத்துக்கு ஏல‌ம் போகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அ‌ந்த வா‌ள் மூ‌ன்றரை கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது. எதிர்பார்க்கப்பட்டதை விட 10 மடங்கு அதிகமாக அ‌ந்த வா‌ள் ஏல‌ம் போயு‌ள்ளது. வெள்ளியாலான இந்த வாளை வாங்கியவர் யார் என்பது தெரியவில்லை.

திப்பு சுல்தானின் ராணுவத்தில் பயன்படுத்தப்பட்ட பீரங்கியும் கடந்த புதன்கிழமை ஏலம் விடப்பட்டது. வெண்கலத்தாலான அரிய வகை பீரங்கியான இது 1790-ம் ஆண்டு காலத்தில் திப்பு சுல்தானின் ராணுவ தளவாடங்களில் ஒன்றாக இருந்தது. இதை ஒருவர் ரூ.2 கோடிக்கு வாங்கினார். அவரை‌ப் ப‌ற்‌றிய ‌விவர‌மு‌ம் வெ‌ளியாக‌வி‌ல்லை.

வியாழன், 15 ஏப்ரல், 2010

பாங்க் ஆப் இந்தியா வைப்பு நிதிக்கு வட்டி குறைப்பு!


வட்டி விகிதங்கள் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவும் வேளையில், பொதுத்துறை வங்கியான பாங்க் ஆப் இந்தியா, வைப்பு நிதிக்கான வட்டியை முக்கால் விழுக்காடு வரை குறைத்துள்ளது.

ரிசர்வ் வங்கி வரும் 20 ஆம் தேதி காலாண்டு கொள்கை அறிக்கையை வெளியிட உள்ளது. இதில் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக வட்டி விகிதங்களை உயர்த்தும் என்று தெரிகிறது.

இந்நிலையில் பாங்க் ஆப் இந்தியா ரூ.1 கோடிக்கும் அதிகமான வைப்பு நிதிக்கு வழங்கப்படும் வட்டியை முக்கால் விழுக்காடு குறைத்துள்ளது. இது புதிய வைப்பு நிதிக்கும், 15 ஆம் தேதியில் இருந்து புதுப்பிக்கப்படும் பழைய வைப்பு நிதிக்கும் பொருந்தும்.

தற்போது பாங்க் ஆப் இந்தியா ரூ.1 கோடி, அதற்கும் மேலான வைப்பு நிதி 1 வருடம் அல்லது இரண்டு வருடங்களில் முதிர்ச்சி அடைந்தால் 6.75 விழுக்காடு வட்டி வழங்குகிறது. இனி வட்டி 6 விழுக்காடு வழங்கப்படும்.

இரண்டு வருடங்களுக்கு அதிகமாகவும், 3 வருடங்களுக்குமான வைப்பு நிதிக்கு வழங்கப்படும் வட்டி 6.75 விழுக்காட்டில் இருந்து 6.25 விழுக்காடாக குறைக்கப்படும் என்று வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன், 14 ஏப்ரல், 2010

சிண்டிகேட் வங்கியில் 426 ஸ்பெஷலிஸ்ட் அதிகாரிகள் தேவை


பொதுத் துறை வங்கியான சிண்டிகேட் வங்கியில் 17 பிரிவுகளில் மொத்தம் 426 ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி பணி இடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., உடல்ஊனமுற்றோர் ஆகியோருக்கான இட ஒதுக்கீடும் உள்ளது.

என்னென்ன பதவிகள் – ஒதுக்கீடுகள்?

Post

Code No.
Post Scale

No. of Vacancies Out of which
TOTAL SC ST OBC GEN OH VH HI
01 Asst. Manager (RD) * I 125 44 22 79 150 – – –
02 Asst. Manager (Marketing) I 150 02 02 02
03 OL Officer I 10
04 Technical Officers # I 10
05 Manager (IT) II 14 05 09


36


39 01 01 01
06 Manager (Law) II 08
07 Manager (Credit) II 50
08 Manager (Security) II 07
09 Manager (FX) II 05
10 Managers (Risk Mgt) II 05
11 Senior Manager (IT) III 05 05 02 09 19 01 – –
12 Senior Manager (Credit) III 20
13 Senior Manager (FX) III 05
14 Senior Manager(Risk Mgt) III 05
15 Chief Manager (IT) IV 05 – – 01 05 – – –
16 Chief Manager (Risk Mgt) IV 01
17 Asst. General Manager (Risk Mgt.) V 01 – – – 01 – – -
Total 426 54 33 125 214 04 03 03



மாநிலவாரியாக காலியிடங்கள் (புரபேஷனரி ஆபீஸர் பதவிக்கு மட்டும்):

Sl.

No.
State
Vacancy


1. Karnataka 56
2. Andhra Pradesh 30
3. Tamil Nadu 07
4. Kerala 08
5. Uttar Pradesh 17
6. Haryana 05
7. Maharashtra 01
8. Gujarat 01
Total 125


சம்பள விவரம்:

Pay Scale, Allowances and Perquisites as applicable @
Scale Pay Scale (Rs.) Approx. total emoluments at the start of the scale inclusive of DA, CCA & HRA at Metropolitan Centres
JMGS – I 10000 -18240 Rs.17550.00
MMGS – II 13820 – 19920 Rs..24240.00
MMGS – III 18240 – 22280 Rs.31820.00
SMGS – IV 20480 – 24140 Rs.35660.00
SMGS – V 24140 – 26620 Rs.41950.00

தகுதிகள்:

உதவி மேலாளர், ஓ.எல்., அதிகாரி, டெக்னிகல் அதிகாரி ஆகிய பதவிகளுக்கு வயது 21 முதல் 30 க்குள் இருக்க வேண்டும். மேலாளர் பதவி இடங்களுக்கு வயது 25 முதல் 32 க்குள் இருக்க வேண்டும். மேலாளர் – செக்யூரிட்டி பணிக்கு வயது 25 முதல் 40 வரை இருக்கலாம்.

முதுநிலை மேலாளர் பணிக்கு வயது 25 முதல் 35 வரை இருக்கலாம். தலைமை மேலாளர் பணிக்கு வயது 25 முதல் 40 வரை இருக்கலாம். உதவிப் பொது மேலாளர் பதவிக்கு வயது 25 முதல் 45 க்குள் இருக்க வேண்டும். சார்ந்திருக்கும் பிரிவின் தன்மைக்கேற்ப உச்ச பட்ச வயதில் வயதுச் சலுகை உள்ளது. முன்னாள் ராணுவத்தினருக்கு இப்பணிகளில் எவ்வித சலுகையும் கிடையாது.

இப்பணிகள் அனைத்திற்கும் சேரும் துறைக்கேற்ப கல்வித் தகுதிகளும், பணி அனுபவமும் தேவைப்படும். இது குறித்த முழு விபரங்கள் அறிய இவ்வங்கியின் இணைய தளத்தைப் பார்க்கவும்.

விண்ணப்பக் கட்டணம்:

புரபேஷனரி ஆபீஸர் இடங்களுக்கு ரூ.300/-ம், சிறப்பு அதிகாரி பதவிக்கு ரூ.250/-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்படுள்ளது. இக்கட்டணத்தை வங்கியின் இணைய தளத்தில் கொடுக்கப் பட்டுள்ள மாதிரி சலானின் மூலம் ஏதாவது ஒரு சிண்டிகேட் வங்கி கிளையில் மட்டுமே செலுத்த வேண்டும், வேறு எந்த முறையிலும் கட்டணம் செலுத்தக் கூடாது.

எஸ்.சி., எஸ்.டி., ஊனமுற்றோருக்கு கட்டணம் ரூ.50/- மட்டுமே. கட்டணத்தை 10.04.2010 க்குள் செலுத்தி விட வேண்டும்.

விண்ணப்பங்கள்:

சிண்டிகேட் வங்கியில் கட்டணம் செலுத்திய பின் வங்கியின் இணைய தளத்தில் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் தனித்தனியாக கட்டணமும், ஆன்லைன் விண்ணப்பமும் செய்ய வேண்டும்.

முதலில் கட்டணத்தை ஏதாவது ஒரு சிண்டிகேட் வங்கி கிளையில் செலுத்த வேண்டும்.இதன் பின் வங்கியின் இணைய தள முகவரியில் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். அப்போது கேட்கப்படும் அனைத்து விபரங்களையும் தவறாமல் முழுமையாக குறிப்பிட வேண்டும். தேர்வுக் கட்டணம் செலுத்திய சலானின் ஒரிஜினலை எழுத்துத் தேர்வு நடைபெறும் பொது எடுத்துச் செல்ல வேண்டும். ஆன்லைனில் பதிவு செய்த பின் எந்த படிவத்தையும் அனுப்ப வேண்டியது இல்லை. அனைத்து சான்றுகளும் எழுத்துத் தேர்வு அல்லது நேர்காணலின் போது மட்டுமே தேவை.

தேர்வு விவரம்:

சிண்டிகேட் வங்கிக்கான அதிகாரி பதவியின் சிறப்பு அதிகாரி பிரிவுக்கு கல்வித் தகுதி, பணி அனுபவம் மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும் புரோபேஷனரி அதிகாரி பிரிவுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். 135 நிமிட நேரத்தில் எழுதும் எழுத்துத் தேர்வு அப்ஜக்டிவ் வகையைச் சேர்ந்தது.
இத்தேர்வில் ரீசனிங், குவாண்டி டேடிவ் ஆப்டிடியூட், பொது அறிவு மற்றும் ஆங்கில அறிவு ஆகிய பிரிவுகளில் கேள்விகள் இருக்கும். எழுத்துத் தேர்வின் இரண்டாம் பகுதியாக டெஸ்கிரிப்டிவ் தேர்வை 60 நிமிட கால அவகாசத்தில் எழுத வேண்டும். இத் தேர்வை இந்தி மொழி வாயிலாகவும் எழுதலாம்.

இந்தத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வை தமிழகத்தில் சென்னையிலும், நமது அருகிலுள்ள மாநிலங்களின் மையங்களான பெங்களூரு, எர்ணாகுளம் ஆகிய இடங்களில் எழுதலாம்.

சில முக்கிய தேதிகள்:

ஆன்லைனில் பதிவு செய்ய இறுதி நாள் : 10.04.2010
எழுத்துத் தேர்வு நடை பெறும் நாள் : 23.05.2010
பணிப் பிரிவு 4 முதல் 17 வரையிலான பதவிகளுக்கு
விண்ணப்பம் அனுப்ப இறுதி நாள் : 19.04.2010
இணைய தள முகவரி: www.syndicatebank.in

தமிழ்நாடு போலீஸில் சேரணுமா… இன்று முதல் விண்ணப்பங்கள்!


சென்னை: தமிழக காவல் துறையில் 328 பெண் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 1,095 சப்-இன்ஸ்பெக்டர் பணி இடங்களுக்கு ஆள் எடுக்கிறார்கள். இதற்கான விண்ணப்பங்கள் இன்று (வியாழக்கிழமை) முதல் தபால் அலுவலகங்களில் வழங்கப்படுகின்றன.

தமிழக போலீஸ் துறையில் காவலர் முதல் சப்-இன்ஸ்பெக்டர் வரையிலான பணி இடங்கள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக நிரப்பப்படுகின்றன. தற்போது 328 பெண் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 1,095 சப்-இன்ஸ்பெக்டர் பணி இடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் பணிபுரிய 88 ஆண் சப்-இன்ஸ்பெக்டர்களும், 36 பெண் சப்-இன்ஸ்பெக்டர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர். சேம நலப்படையில் (ஆயுத போலீஸ் படை) 113 ஆண் சப்-இன்ஸ்பெக்டர் பணி இடங்களும், 48 பெண் சப்-இன்ஸ்பெக்டர் பணி இடங்களும், சட்டம் ஒழுங்கு போலீஸ் பிரிவில் பணியாற்ற 566 ஆண் சப்-இன்ஸ்பெக்டர் பணி இடங்களும், 244 பெண் சப்-இன்ஸ்பெக்டர் பணி இடங்களும் நிரப்பப்பட உள்ளன.

சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு எல்லா பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம். வயது 20 முதல் 28-க்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., வகுப்பினருக்கு 5 ஆண்டு வயது வரம்பு சலுகை உண்டு. முன்னாள் ராணுவத்தினர் 45 வயது வரை விண்ணப்பிக்கலாம். உயரம் குறைந்தபட்சம் 170 செ.மீட்டர் இருக்க வேண்டும்.

எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 167 செ.மீட்டர் உயரம் போதும். மார்பளவு சாதாரண நிலையில் 81 செ.மீட்டரும், விரிவடையும் நிலையில் 86 செ.மீட்டரும் இருக்க வேண்டும். பெண்களின் உயரம் குறைநëத அளவு 159 செ.மீட்டர் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 157 செ.மீட்டர் போதுமானது. தகுதியுடையோர் எழுத்து தேர்வு, உடற் தகுதி தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்து தேர்வுக்கு மொத்த மதிப்பெண் 70 ஆகும்.

இன்று முதல் விண்ணப்பம்

சப்-இன்ஸ்பெக்டருக்கான விண்ணப்ப படிவங்கள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தலைமை தபால் அலுவலகங்களிலும், குறிப்பிட்ட உதவி தபால் அலுவலகங்களிலும் இன்று (வியாழக்கிழமை) முதல் விநியோகிக்கப்படும். விண்ணப்பத்தின் விலை ரூ.30. விண்ணப்ப கட்டணம் ரூ.230 ஆகும். இதை தபால் நிலையத்தில் செலுத்த வேண்டும்.

பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை `தலைவர், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம், 807, 2-வது தளம், பீ.டி.லீ.செங்கல்வராய நாயக்கர் மாளிகை, அண்ணா சாலை, சென்னை-2′ என்ற முகவரிக்கு நேரிலோ, அல்லது தபால் மூலமாகவோ வருகிற மே மாதம் 3-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எங்கு கிடைக்கும்?

சென்னையில் அம்பத்தூர், அண்ணாசாலை, ஆவடி கேம்ப், மைலாப்பூர், பூங்காநகர், பரங்கிமலை, தியாகராயநகர், தாம்பரம் ஆகிய தலைமை தபால் அலுவலகங்களிலும், எழும்பூர், கோட்டை, பெரம்பூர், பூந்தமல்லி, தியாகராயநகர் வடக்கு, திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, அண்ணாநகர் கிழக்கு ஆகிய தபால் அலுவலகங்களிலும் விண்ணப்பங்கள் வழங்கப்படும். மேலும், பாரிமுனையில் உள்ள ஜெனரல் போஸ்ட் ஆபீசிலும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வாங்கலாம் என்று சென்னை நகர மத்திய அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் ஆர்.வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.

விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 3.05.2010

முழுமையான விவரங்களுக்கு…. கீழே உள்ள விளம்பரத்தை கிளிக்கிப் பெரிதாக்கிப் பார்க்கவும்.


2011ல் 30,000 பேரை பணியமர்த்தும் இன்போசிஸ்!


பெங்களூர்: கடந்த நிதியாண்டில் சம்பளத் தொகைக்காக மட்டும் ரூ.600 கோடி செலவிட்டுள்ளது இன்போசிஸ்.

இந்திய ஐடி துறையில் இதுவரை எந்த நிறுவனமும், ஒராண்டுக்கு இவ்வளவு சம்பளத்தொகை ஒதுக்கியதில்லை என கூறப்படுகிறது.

அதோடு, வரும் 2011ம் ஆண்டில் மேலும் 30 ஆயிரம் பணியாளர்களை பணியமர்த்தவும் இன்போசிஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அடுத்தாண்டு (2011) பணியாளர் தேர்வுக்கான 'கேம்பஸ் இன்டர்வியூ'க்களையும் முன்னதாகவே செய்து முடித்துவிட்டது இன்போசிஸ்.

2011ம் ஆண்டில் பணியில் அமர்த்துவதற்காக ஏற்கனவே 19 ஆயிரம் பேருக்கு 'ஆஃபர்' வழங்கப்பட்டுள்ளது என்று இன்போசிஸ் தலைவர் டிவி மோகன்தாஸ் பாய் தெரிவித்தார்.

இதுபற்றி பெங்களூரில் நிருபர்களிடம் பேசிய மோகன்தாஸ்,
'இன்போசிஸ் நிறுவனத்தின் அமெரிக்கா மற்றும் சீன அலுவலகங்களுக்காக ஆயிரம் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். மணிலாவில் 400 பேர் தேவை.

இதுதவிர நேரடி தேர்வு மூலமாகவும் 6,500 வரையிலான பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

நிறுவனத்தின் நடுத்தர மற்றும் ஜூனியர் நிலை பணியாளர்களுக்கு பெரியளவிலான சம்பள உயர்வு தரப்பட்டுள்ளது. சீனியர் நிலையில் இருப்பவர்களுக்கு 10 சதவீத உயர்வு வழங்கப்படுகிறது.

சராசரியாக ஊதிய உயர்வு 14 முதல் 17 சதவீதம் வரை தரப்பட்டுள்ளது.

கடந்தாண்டில் சுமார் 7 ஆயிரத்து 500 பேர் இன்போசிஸ் மூலமாக தகுதி உயர்வு பெற்றிருக்கிறார்கள்' என்றார்.

சு‌ற்றுலா‌ப் பய‌ணிக‌ளி‌ன் வருகை‌யி‌ல் த‌மிழக‌ம் 3வது இட‌ம்!


இந்தியாவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவருவதில் தமிழ்நாடு 3-வது இடத்தை பிடித்‌திரு‌ப்பதாக த‌மிழக அரசு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாட்டின் வருமானத்தில் சுற்றுலாவும் முக்கிய இடம் வகிக்கிறது. இந்தியாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் மாநிலங்கள் பற்றி இந்திய வர்த்தக மையம் ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டு உள்ளது.

அதில் வரலாற்று சின்னங்கள், அருங்காட்சியகங்கள், கோட்டைகள், நாடாளுமன்றம், பூங்காக்கள், வர்த்தக வளாகங்கள் என நாட்டிலேயே அதிகளவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் மாநிலம் என்ற பெருமையை டெல்லி பிடித்துள்ளது. இங்கு ஆ‌ண்டு‌க்கு 23,40,000 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

அதேபோல் பாரம்பரிய சுற்றுலா தலங்கள், பிரபல மருத்துவமனைகள், வர்த்தக மையங்கள், அழகிய கடற்கரை, இந்தியாவின் வர்த்தக நகரம் என்ற பெருமை கொண்ட மும்பை, பாலிவுட் போன்றவற்றால் மகாராஷ்டிரா 2-வது இடத்தை பிடித்துள்ளது. இந்த மாநிலத்துக்கு ஆண்டுக்கு 20,60,000 பேர் வந்து சு‌ற்றுலா‌த் தல‌ங்களை பா‌ர்‌த்து செ‌ல்‌கி‌ன்றன‌ர்.

மூன்றாவது இடம் தமிழகத்துக்கு கிடைத்துள்ளது. சென்னையில் சிறப்பாக உலக தரம்வாய்ந்த மருத்துவமனைகளால் அளிக்கப்படும் சிகிச்சையினால் ஈர்க்கப்பட்டு இங்கு வரும் மருத்துவ சுற்றுலா பயணிகள் மற்றும் அழகிய மலைப்பிரதேசங்கள், கடற்கரைகள், கோவில்கள், சரணாலயங்கள், அழகிய கிராமப்புறங்கள், சென்னை, கோவை, கன்னியாகுமரி, மதுரை, திருச்சி மற்றும் சேலம் போன்ற சிறப்புமிக்க நகரங்கள் போன்றவற்றால் ஈர்க்கப்பட்டு ஆண்டுக்கு 20,30,000 வெளிநாட்டினர் இங்கு வந்து செல்கின்றனர் எ‌ன்று அ‌றி‌க்கை‌யி‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

திங்கள், 12 ஏப்ரல், 2010

78 வயதில் 9 வது திருமணம் செய்யும் எலிடபெத் டெய்லர்!!


லாஸ் ஏஞ்சல்ஸ்: நடிப்புக்காக ஆஸ்கர் விருது பெற்ற, உலகின் மிக அழகான பெண்மணி எனப் புகழப்பட்ட எலிசபெத் டெய்லருக்கும் அவரைவிட 30 வயது இளையவரான ஜாஸன் வின்டர்ஸுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

78 வயதாகும் பிரபல ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் 9 வது முறையாக திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார்.

சினிமாவில் நடித்ததை விட, திருமணம் செய்வதிலும் விவாகரத்து செய்வதிலும் அதிக புகழ் பெற்றவர் எலிசபெத் டெய்லர்.

இதுவரை 8 தடவை அவர் திருமணம் செய்து, விவாகரத்து பெற்றுள்ளார்.

லேரி என்பவரை கடைசியாக திருமணம் செய்தார். 1996-ம் ஆண்டு அவரையும் விவாகரத்து செய்துவிட்டார்.

கடந்த 15 ஆண்டுகளாக அவர் தனிமையில் வாழ்ந்து வந்தார். உடல்நலக் குறைபாடுகளில் அவதிப்பட்டு வந்த அவர் இப்போதுதான் குணமாகி வீடு திரும்பினார்.

2007 ல் அவருக்கும் எழுத்தாளர் சுமித் என்பவருக்கும் ரகசிய தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது. அதை எலிசபெத் டெய்லர் மறுத்தார்.

இந்த நிலையில் தற்போது ஜசன் வின்டர்ஸ் என்ற 49 வயது நபரை திருமணம் செய்யப் போவதாக எலிசபெத் டெய்லர் அறிவித்துள்ளார்.

எலிசபெத்தும் வின்டர்ஸும் நீண்ட நாள் நண்பர்களாம்.

சுகமான தூ‌‌க்க‌த்‌தி‌ற்கு ‌சில முய‌ற்‌சிக‌ள்!


பலரு‌ம் ‌நி‌ம்ம‌தியான தூ‌‌க்க‌ம் இ‌ன்‌றி அவ‌தி‌ப்படு‌கிறா‌ர்க‌ள். அத‌ற்கு அவ‌ர்களது நடைமுறை பழ‌க்க வழ‌க்க‌ங்க‌ள்தா‌ன் காரண‌ம் எ‌ன்பதை முத‌லி‌ல் உணர வே‌ண்டு‌ம்.

எந்தக் காரணம் கொண்டும் இரவு 8 அ‌ல்லது 9 மணிக்கு மேல் கம்ப்யூட்டரின் முன் உட்காராதீர்கள். 8 மணிக்கு கம்ப்யூட்டர் முன்பிருந்து எழுந்தால் தான் 10.30 மணிக்கு ஆழ்ந்து தூங்கமுடியும். 9 ம‌ணி‌க்கு‌ள் தொலை‌க்கா‌ட்‌சியை அணை‌த்து ‌வி‌ட்டா‌ல்தா‌ன் 1 ம‌ணி நேர‌த்‌தி‌ல் தூ‌க்க‌ம் உ‌ங்களை‌த் தழுவு‌ம்.

குறைந்த வெளிச்சத்தில் தூங்குவது ந‌ல்லது. வெ‌ளி‌ச்சமே இ‌ல்லாம‌ல் இருளாக இரு‌ப்பது‌ம் ச‌ரிய‌ல்‌ல. படு‌க்கை அறை கா‌ற்றோ‌ட்டமான, சு‌த்தமான அறையாக இரு‌க்க வே‌ண்டு‌ம்.

தூ‌ங்குவத‌ற்காக தூக்க மாத்திரைகளை பயன்படுத்துவதை முழுவதுமாகத் தவிர்த்து விடுங்கள்.

படுப்பதற்கு இரண்டரை மணிநேர‌த்‌தி‌ற்கு முன்பு இரவு உணவை முடித்துவிடுங்கள். தூ‌ங்குவத‌ற்கு மு‌ன்பு எ‌ளிய நடை‌ப்ப‌யி‌ற்‌சி அ‌ல்லது உட‌ற்ப‌யி‌ற்‌சி செ‌ய்வது ‌மிகவு‌ம் ந‌ல்லது.

ஹூன்டாய் புதிய ஐ20 ரக கார் அறிமுகம்.


இந்தியாவின் கார் உற்பத்தியில் இரண்டாவது இடத்தை வகிக்கும் ஹூன்டாய் மோட்டார் நிறுவனம் ஐ20 ரக காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

இத்துடன் எர்ரா, ஸ்போர்ட்ஜ் என்ற இரண்டு புதிய ரக கார்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் எர்ரா ரக காரின் விலை டெல்லியில் ரூ.4,51,816.

ஸ்போர்ட்ஜ் ரக காரின் விலை ரூ.5,31,817.

இதில் எர்ரா ரக கார் பெட்ரோல், டீசலில் இயங்கும் இரண்டு ரகங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய கார்கள், சமீபத்தில் நடைமுறைக்கு வந்துள்ள பாரத் 4 மாசு கட்டுப்பாடு விதிகளின் படி தயாரிக்கப்பட்டுள்ளது என்று ஹூன்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐ20 ரக டீசல் காரில், இது வரை எந்த காரிலும் இல்லாத ஆறு கியர் அமைப்பு உள்ளதாக ஹூன்டாய் தெரிவித்துள்ளது.