செவ்வாய், 25 ஜனவரி, 2011

12 சதவிகித இந்தியப் பெண்கள் மட்டுமே நாப்கின் பயன்படுத்துகிறார்கள்-ஏ.சி. நீல்சன் ஆய்வு


டெல்லி: இந்தியாவில் 12 சதவிகிதம் பெண்கள் தான் மாதவிடாய் (பீரியட்ஸ்) நேரத்தில் நாப்கின் பயன்படுத்துகிறார்கள். மீதமுள்ள 88 சதவிகிதம் பெண்கள் துணி, சாம்பல், உமி போன்றவற்றைப் பயன்படுத்தும் நிலையில் உள்ளனர். இதன் காரணமாக அவர்களுக்கு இனப்பெருக்க பாதையில் நோய் தொற்றும் அபாயம் 70 சதவிகிதம் உள்ளது.

சுகாதாரமற்ற முறைகளை பின்பற்றுவதால் 12 முதல் 18 வயதுள்ள பெண்கள் ஒவ்வொரு மாதமும், மாதவிடாய் காலத்தில் 5 நாட்கள் பள்ளிக்குச் செல்வதில்லை. ஒரு வருடத்தில் 50 நாட்கள் பள்ளிக்கு செல்வதில்லை. இதனாலேயே 23 சதவிகித பெண் பிள்ளைகள் பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடுகிறார்கள்.

பண வசதியில்லாததால் தான் அவர்களால் சானிடரி நாப்கின் வாங்க முடியவில்லை. இந்தியாவில் உள்ள 70 சதவிகிதப் பெண்கள் தங்கள் குடும்பத்திற்கு நாப்கின் வாங்கித் தரும் அளவுக்கு வசதி இல்லை என்கிறார்கள்.

ஏ.சி. நீல்சன் மேற்கொண்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. இந்த கணக்கெடுப்பை பிளான் இந்தியா ஆதரித்துள்ளது.

இந்த கணக்கெடுப்பு கடந்த அக்டோபர் மாதம் நடந்தது. இதில் நாடு முழுவதிலும் இருந்து வயதுக்கு வந்த 1,033 பெண்களும், 151 பெண் மருத்துவர் [^] களும் பங்கேற்றனர்.

இது குறித்து பிளான் இந்தியாவின் எக்ஸிகியூடிவ் டைரக்டர் பாக்யஸ்ரீ டெங்க்ளே கூறியதாவது,

இந்த ஆய்வின் மூலம் இந்தியப் பெண்களின் சுகாதாரக் கேடு பற்றி தெரிய வந்துள்ளது. சிங்கப்பூர் மற்றும் ஜப்பானில் 100 சதவிகிதப் பெண்களும், இந்தோனேசியாவில் 88 சதவிகிதப் பெண்களும், சீனாவில் 64 சதவிகிதப் பெண்களும் சானிடரி நாப்கின் பயன்படுத்துகின்றனர் என்றார்.

இது குறித்து ஜீவன் மாலா மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் மால்விகா சபர்வால் கூறியதாவது,

மாதவிடாய் கால சுகாதாரம் குறித்துப் பேசுவது இன்னும் சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப்படாத ஒன்றாக இருக்கிறது. அந்த நேரங்களில் பெண்கள் சமையல் அறைக்குளளும், கோயில்களுக்குள்ளும் அனுமதிக்கப்படுவதில்லை. சிலர் அந்த சமயத்தில் குளிப்பது கூட இல்லை. அந்த வழக்கமெல்லாம் மாற வேண்டும்.

பீரியட்ஸ் நேரத்தில் பெண்கள் 2 தடவைக்கு மேல் குளிக்க வேண்டும். ஒரு நாளைக்கு 3 முறை நாப்கின் மாற்ற வேண்டும். அவ்வாறு செய்யாவிடில் அவர்களுக்கு சிறுநீர் பாதைக்குள் பாக்டீரியா நுழைவதும், கருப்பை பாதிப்பும் ஏற்படக்கூடும் என்றார்.

சுமார் 97 சதவிகித கைனகாலஜிஸ்ட்கள் நாப்கின் பயன்படுத்துவதால் இனப்பெருக்க பாதை பாதிப்பு குறையும் என்று நம்புகின்றனர்.

டெல்லி, சென்னை, கொல்கத்தா, பெங்களூர் [^] , லக்னோ, ஹைதராபாத், கோரக்பூர், ஔரங்காபாத் மற்றும் விஜயவாடாவில் எடுத்த கணக்கெடுப்பில் பெண்கள் பீரியட்ஸ் நேரத்தில் 2.2 நாட்களுக்கு சற்று மந்தமாகவே உள்ளனர். கிழக்கு இந்தியாவில் உள்ள 83 சதவிகித பெண்கள் தங்கள் குடும்பத்திற்கு சானிடரி நாப்கின் வாங்கும் அளவுக்கு வசதி இல்லை என்றனர்.

30 சதவிகித வட இந்திய பெண்கள் தாங்கள் பருவம் அடைந்ததும் பள்ளியில் இருந்து விலகிவிட்டதாகத் தெரிவித்தனர்.

மென்சுரல் சுகாதாரம் குறி்தது மத்திய சுகாதார அமைச்சகம் தற்போது கவனம் செலுத்த துவங்கியுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் கிராமப்புற பெண்களும் சானிடரி நாப்கின் பயன்படுத்தும் வகையில் ரூ. 150 கோடி செலவில் ஒரு திட்டம் கொண்டு வரவுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள பெண்களுக்கு 6 நாப்கின் உள்ள பாக்கெட் 1 ரூபாயக்கு வழங்கப்படும். வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ள பெண்களுக்கு அதே பாக்கெட் 5 ரூபாய்க்கு வழங்கப்படும். இந்த திட்டம் இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை.

இந்த திட்டம் குறித்து அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது,

இத்திட்டம் முதல் கட்டமாக நாட்டில் உள்ள 600 மாவட்டங்களில் 25 சதவிகிதம் அதாவது 150 மாவட்டங்களில் அமல்படுத்தப்படும். முதல் வருடத்தில் 150 மாவட்டங்களில் கொண்டுவரப்படும் இத்திட்டத்தில் தென் இந்தியாவில் இருந்து 4 மாநிலங்கள், மஹாராஸ்டிரா, குஜராத்தில் இருந்து 30 மாவட்டங்களும், வடக்கு, மத்திய மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் இருந்து 120 மாவட்டங்களும் சேர்க்கப்படும்.

முதல் கட்டத்தில் 10 முதல் 19 வயதுள்ள சுமார் 1. 5 கோடி பெண் பிள்ளைகள் பயனாளிகளாக இருப்பார்கள். இதில் 70 சதவிகிதம் அதாவது 105 லட்சம் பேர் வறுமைக் கோட்டுக்கு மேலும், 30 சதவிகதம் அதாவது 45 லட்சம் பேர் வறுமைக் கோட்டுக்கு கீழும் உள்ள பெண்கள் ஆகும் என்று அவர் கூறினார்.

இனி பிடிக்காத நிறுவன செல்போன் சேவைக்கு குட்பை சொல்லலாம்!!


டெல்லி: செல்போன் எண்ணை மாற்றாமல், சர்வீஸை மட்டும் மாற்றிக் கொள்ளும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த திட்டத்தை இன்று நாடு தழுவிய அளவில் தொடங்கி வைத்தார் பிரதமர் மன்மோகன் சிங்.

இந்தியாவில் கிட்டத்தட்ட 70 கோடி பேர் மொபைல் போன்களைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் ஒரு சர்வீஸைத் தேர்ந்தெடுத்து விட்டால் அதிலேயேதான் தொடர வேண்டியுள்ளது-அது பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும். சேவை எந்த லட்சணத்திலிருந்தாலும் வாடிக்கையாளர் அதை தாங்கிக் கொண்டே தீர வேண்டும் என்ற மிதப்பில் இஷ்டத்துக்கும் விளையாடி வந்தன செல்போன் நிறுவனங்கள்.

இப்போது இதற்கு ஒரு முடிவு கட்டியுள்ளது இந்திய தொலைத் தொடர்புத்துறை. எந்த மொபைல் போன் சர்வீஸ் பிடிக்காவிட்டாலும், நமது எண்ணை அப்படியே வைத்துக் கொண்டு சர்வீஸை மட்டும் மாற்றிக் கொள்ளும் ‘மொபைல் போர்ட்டபிலிட்டி’ வசதி இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துவிட்டது.

பிரதமர் மன்மோகன் சிங் இன்று இந்த வசதியை நாடு தழுவிய அளவில் தொடங்கி வைத்தார். இதன் மூலம் லட்சக்கணக்கான ப்ரீபெய்ட் சந்தாதாரர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஏற்கெனவே சேவை பெறும் நிறுவனத்தில் நிலுவை ஏதும் இல்லாத வாடிக்கையாளர் தனது ப்ரீ-பெய்டு அல்லது போஸ்ட்-பெய்டு இணைப்பை வேறு நிறுவனத்துக்கு இதன் மூலம் மாற்றிக் கொள்ள முடியும். ஆனால் எண் வாங்கி 90 நாள்கள் ஆகியிருந்தால் மட்டுமே இந்த வசதியைப் பெற முடியும்.

கடந்த ஆண்டே தொடங்கப்பட இருந்த இந்தத் திட்டம், நான்கு முறை தள்ளி வைக்கப்பட்டது. இதற்கு சில தனியார் நிறுவனங்கள்தான் காரணம் என்று கூறப்பட்டது. ஒருவழியாக இந்தத் திட்டம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஹரியானாவில் தொடங்கப்பட்டது. தற்போது நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை ஏர்டெல், வோடோபோன், ஐடியா, ஏர்செல், எம்டிஎஸ், வீடியோகான், யூனினார் ஆகிய செல்போன் சேவை நிறுவனங்கள் இந்த வசதியை அளிக்கவுள்ளன.

அதேபோல சென்னை (பெருநகரம்) மாநகரில் எம்டிஎஸ் தவிர மேற்கண்ட மற்ற நிறுவனங்கள் இந்த சேவையில் இணைந்துள்ளன. எனவே இவற்றில் எந்த நிறுவனத்தின் சேவை பிடிக்காவிட்டாலும் மற்றவற்றின் சேவைக்கு எண்ணை மாற்றாமலேயே மாறிக் கொள்ளலாம்.

கர்நாடகத்தில் மேற்கண்ட நிறுவனங்களுடன் ஸ்பைஸ் நிறுவனத்தின் சேவையும் இடம் பெறும்.

இவ்வாறு நிறுவனத்தை மாற்றிக் கொள்வதற்குக் கட்டணம் உண்டு. ஆனால் பி.எஸ்.என்.எல். சேவைக்கு மாறிட விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இந்தக் கட்டணத்தை வசூலிப்பதில்லை என்று பி.எஸ்.என்.எல். தெரிவித்துள்ளது. இதுதவிர புதிய சிம் கார்டுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பித்த 7 நாள்களில் புதிய நிறுவனத்தின் சேவை கிடைக்கும். அப்போது புதிய சிம் கார்டைப் பயன்படுத்த வேண்டும்.

புதிய சேவைக்கு மாறுவது எப்படி?

* செல்போன் எண்ணை வேறு நிறுவனத்துக்கு மாற்றுவதற்கு முதலில் UPC (Unique Porting Code) என்கிற எண்ணைப் பெறவேண்டும்.

* அதைப் பெறுவதற்கு செல்போனில் இருந்து PORT செல்போன் எண் என டைப் செய்து 1900 எனும் எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். உதாரணம்: PORT 9876543210.

* சில நொடிகளில் எட்டு இலக்க யுபிசி எண் கிடைக்கும். அந்த எண் எந்தத் தேதி வரை செல்லும் எனும் தகவலும் அனுப்பப்படும்.

* இந்த எண்ணை எடுத்துக் கொண்டு தாங்கள் விரும்பும் புதிய சேவை நிறுவன மையத்துக்குச் சென்று அங்கு தரப்படும் விண்ணப்பப் படிவத்தில் தேவையான விவரங்களை நிரப்பித் தர வேண்டும்.

* இதன் பிறகு புதிய சேவை நிறுவனம் புதிய சிம் கார்டு வழங்கும். இதற்காக தனியாக கட்டணம் வசூலிக்கப்படலாம். இந்தக் கட்டணம் அதிகபட்சமாக ரூ 19 வரை இருக்கலாம். ஆனால் வாடிக்கையாளர்களை இழுப்பதில் நிலவும் போட்டி காரணமாக இந்தக் கட்டணம் நீக்கப்படவும் வாய்ப்புள்ளது.

* அந்த சிம்கார்டு செயல்படத் துவங்கும் நேரத்தில் இருந்து புதிய நிறுவனத்தின் சேவை உங்கள் பழைய எண்ணிலேயே கிடைக்கும்.

சில முக்கிய குறிப்புகள்

சிடிஎம்ஏ, ஜிஎஸ்எம் ஆகிய இரு தொழில்நுட்பங்களில் எந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வந்தாலும் மற்ற தொழில்நுட்பத்துக்கு மாறிக் கொள்ள முடியும்

அதேபோல் ப்ரீபெய்ட், போஸ்ட் பெய்ட் திட்டங்களுக்கு இடையேயும் மாறிக்கொள்ளும் வசதி உண்டுஞ

ஒரே தொலைத் தொடர்பு வட்டத்துக்குள் மட்டுமே செல்போன் எண்ணை வேறு நிறுவனத்துக்கு மாற்ற முடியும். அதாவது சென்னையில் உள்ள எண்ணை டெல்லியில் உள்ள நிறுவனத்துக்கு மாற்ற முடியாது.

குழந்தைகளுக்கு உணவு - மருந்து அபின்தான்! - அதிர வைக்கும் ஆப்கன் தாய்மார்கள்!


வாஷிங்டன்: வடக்கு ஆப்கானிஸ்தானில் தாய்மார்களே தங்கள் குழந்தைகளுக்கு அபினை (ஓபியம்) ஊட்டி வளர்க்கிறார்கள்.

அஜீசா தனது 4 வயது மகன் உமைதுல்லாவிற்கு தினமும் காலை உணவாக கைநிறைய சுத்த அபின் தருகிறார். இதுதான் அவனுக்கு மருந்தும் கூட என்கிறார் அஜீசா.

அஜீசா பால்க் மாகாணத்தில் கம்பளம் நெசவு செய்யும் ஏழைக் குடும்பத்தில் வந்தவர். அவர் படிக்காதவர். உடல் நலக் கேடுகள் பற்றியோ அல்லது அபின் அடிமையாக்கிவிடும் என்பதோ அவருக்கு தெரியவில்லை.

இது குறித்து அவர் கூறுகையில், "நான் அவனுக்கு அபின் கொடுக்கவில்லை என்றால் அவன் தூங்கமாட்டான். என்னையும் எந்த வேலையும் செய்யவிட மாட்டான்" என்றார்.

குழந்தைகளுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டாலும் நாங்கள் அபின் தான் கொடுப்போம் என்கிறார் அந்தத் தாய்.

முறையான மருத்துவ வசதி இல்லாததாலும், மருந்துகளின் விலை அதிகமாக இருப்பதாலும் அப்பகுதி மக்கள் அபினைத் தான் மருந்தாகப் பயன்படுத்துகின்றனர்.

அஜீசாவின் மாமியார் ராசிகுல் கையில் சிறிது அபினை எடுத்து உருண்டையாக்கி சிரித்தவாறே தன் வாயில் போட்டுக் கொண்டார். பிறகு தனது சகோதரிக்கும் ஒரு அபின் உருண்டையைக் கொடுத்தார்.

'நான் உழைத்துதான் என் குழந்தைகளை வளர்க்க வேண்டும். அதனால் நான் போதைப் பொருள் பயன்படுத்தத் தொடங்கினேன். நாங்கள் ஏழைகள், அதனால்தான் அபின். எங்களுக்கு உண்ணுவதற்கு வேறொன்றும் இல்லை. எனவே நாங்கள் எங்கள் குழந்தைகளுக்கு போதைப் பொருள் கொடுத்து தூங்க வைத்துவிட்டு வேலை பார்க்கிறோம்,' என்றார் அந்த ஏழைத் தாய்.

அவர்கள் தங்கியிருக்கும் இடத்தில் இருந்து 4 மணி நேரம் பயணம் செய்தால் அரசு போதை மறுவாழ்வு மையம் உள்ளது. அங்கு 20 படுக்கைகள் உள்ளன. ஆனால் குறைந்த அளவே பணியாட்கள் இருக்கிறார்கள்.

'அபின் பயன்படுத்துவது என்பது எங்கள் கிராமத்தினருக்கோ, மாவட்டத்தினருக்கோ புதிததன்று. இது காலம் காலமாக உள்ள பழக்கம்,' என்று அந்த மையத்தின் ஒருங்கிணைப்பாளர் முஹமது தாவூத் தெரிவித்தார்.

'மக்கள் அபினை மருந்தாகவும், போதைப் பொருளாகவும் பயன்படுத்துகின்றனர். ஒரு குழந்தை அழுதாலும் அபின் கொடுப்பார்கள், தூங்கவில்லை என்றாலும் அபின் தான், இருமினாலும் அபின் தான் கொடுப்பார்கள்', என்கிறார் முஹமது.

உலகின் தலைசிறந்த பண்பாடு, சுற்றுலா பட்டியலில் முதலிடத்தில் ஆக்ரா !


உலகின் முதன்மையான 50 பண்பாடு, சுற்றுலாத் தலங்கள் பட்டியலில், பேரரசர் ஷாஜஹான் கட்டிய தாஜ் மஹால் உள்ள ஆக்ரா நகரமே முதலிடத்தில் உள்ளது.

லண்டனில் இருந்து வெளிவரும் தி சண்டே டெலகிராஃப், பேஜ் அண்ட் மே எனும் சுற்றுலா தேர்வு நிறுவனமும் உலகின் முதன்மையான 50 பண்பாடு, சுற்றுலா நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன. அதில் இந்தியாவில் இருந்து 3 இடங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய சுற்றுலா நகரங்களாக இடம்பெற்றுள்ளன.

அதில் தாஜ் மஹால் கட்டப்பட்டுள்ள ஆக்ரா நகரம் உலகின் முதலிடத்தில் உள்ளது. ஜெய்ப்பூர் நகரமும், உத்தரபிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவும் மற்ற இரண்டு இடங்களாகும். ஆக்ராவில் தாஜ் மஹால் மட்டுமின்றி, அங்குள்ள செங்கோட்டையும், ஃபேதப்பூர் சிக்ரியும் முக்கிய இடங்களாக கூறப்பட்டுள்ளது.

இதிமத் உத் தவ்லா, பிருந்தாவனம், பரத்பூர் பறவைகள் சரணாலயம் ஆகியனவும் முக்கிய இடங்களாக அப்பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

ஆக்ரா முதலிடத்திலும், ஜெய்பூர் 27வது இடத்திலும், லக்னோ 32வது இடத்திலும் உள்ளன.

உலகின் மற்ற முக்கிய பண்பாட்டு. சுற்றுலாத் தலங்களாக இடம் பெற்றுள்ளவை: ஆம்ஸ்டர்டாம், அங்கூர், வாட், ஏதன்ஸ், பாங்காக், பார்சிலோனா, பீஜிங், புகாரா, கைரோ, இஸ்தான்புல், ஜெரூசலம், கியோட்டோ, சிட்னி, டெஹ்ரான், வியன்னா, வார்ஷா ஆகியன.

விண்வெளியில் தூசியின் அளவு இரட்டிப்பு!

பூமண்டலத்தின் விண்வெளியில் தூசின் அளவு 20ஆம் நூற்றாண்டு துவக்கம் முதல் இரட்டிப்பாகி உள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

இதன் தாக்கம் பூவுலகின் சுற்றுச்சூழல், பல்லுயிர்ப் பரவல் ஆகியவற்றில் பெரிய அளவில் ஏற்பட்டுள்ளதாக கார்னெல் பல்கலை பேராசிரியர் நதாலி மஹோவால்ட் என்பவர் தெரிவித்துள்ளார்.

மனித உற்பத்தி நடவரிக்கைக் காரணங்கலல்லாது இயற்கையில் நிக்ழும் இந்த தூசு மண்டலம் பற்றிய ஆய்வு இந்த நூற்றாண்டிலேயே நடைபெறுவதாக அவர் தெரிவித்தார்.

பாலைவன தூசுகள், மண்ணின் நுண்துகள்கள், ஆகியவற்றின் அளவு விண்வெளியில் அதிகரித்துள்ளது என்பதை இவர் ஏற்கனவே உள்ள தரவுகளின் அடிப்படையிலும் கணினி மாதிரிகளிலும் சோதனை செய்து கூறியுள்ளார்.

பாலைவன தூசு மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவை ஒன்றையொன்று பல்வேறு இடைப்பட்ட அமைப்புகள் மூலம் பாதித்துக் கொள்பவை. பொதுவாக தூசுமண்டலம் சூரிய வெப்பக் கதிர்வீச்சிலிருந்து காக்கிறது. இதனால் மனிதனால் விண்வெளிக்கு அனுப்பப்படும் கரியமில வாயுவினால் ஏற்படும் புவிவெப்பமடைதல் நடவடிக்கை சற்றே குறைகிறது.

ஆனால் இதே தூசு மண்டலம்தான் மேகத்தின் செயல்பாட்டிலும் குறுக்கிட்டு மழையை தடுத்து இதன் மூலம் கடும் வறட்சி ஏற்பட்டு இதனால் இந்த புதிய வறட்சியால் மேலும் தூசிகள் விண்வெளிக்குச் செல்லும் ஆபத்தும் உள்ளது.

பூமண்டலத்தின் விண்வெளியில் தூசின் அளவு 20ஆம் நூற்றாண்டு துவக்கம் முதல் இரட்டிப்பாகி உள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

இதன் தாக்கம் பூவுலகின் சுற்றுச்சூழல், பல்லுயிர்ப் பரவல் ஆகியவற்றில் பெரிய அளவில் ஏற்பட்டுள்ளதாக கார்னெல் பல்கலை பேராசிரியர் நதாலி மஹோவால்ட் என்பவர் தெரிவித்துள்ளார்.

மனித உற்பத்தி நடவரிக்கைக் காரணங்கலல்லாது இயற்கையில் நிக்ழும் இந்த தூசு மண்டலம் பற்றிய ஆய்வு இந்த நூற்றாண்டிலேயே நடைபெறுவதாக அவர் தெரிவித்தார்.

பாலைவன தூசுகள், மண்ணின் நுண்துகள்கள், ஆகியவற்றின் அளவு விண்வெளியில் அதிகரித்துள்ளது என்பதை இவர் ஏற்கனவே உள்ள தரவுகளின் அடிப்படையிலும் கணினி மாதிரிகளிலும் சோதனை செய்து கூறியுள்ளார்.

பாலைவன தூசு மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவை ஒன்றையொன்று பல்வேறு இடைப்பட்ட அமைப்புகள் மூலம் பாதித்துக் கொள்பவை. பொதுவாக தூசுமண்டலம் சூரிய வெப்பக் கதிர்வீச்சிலிருந்து காக்கிறது. இதனால் மனிதனால் விண்வெளிக்கு அனுப்பப்படும் கரியமில வாயுவினால் ஏற்படும் புவிவெப்பமடைதல் நடவடிக்கை சற்றே குறைகிறது.

ஆனால் இதே தூசு மண்டலம்தான் மேகத்தின் செயல்பாட்டிலும் குறுக்கிட்டு மழையை தடுத்து இதன் மூலம் கடும் வறட்சி ஏற்பட்டு இதனால் இந்த புதிய வறட்சியால் மேலும் தூசிகள் விண்வெளிக்குச் செல்லும் ஆபத்தும் உள்ளது.

சனி, 22 ஜனவரி, 2011

மங்காத்தாவில் பாரதியின் பேரன் பாட்டு!!


வெங்கட் பிரபு இயக்கும் அஜீத்தின் பொன் விழாப் படமான மங்காத்தாவில் மகாகவி சுப்ரமணிய பாரதியின் பேரன் நிரஞ்சன் பாரதி பாடல் ஆசிரியராக அறிமுகமாகிறார்.

க்ளவுட் நைன் மூவீஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு [^] சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது. மே 1-ம் தேதி படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

பொதுவாக வெங்கட் பிரபு படங்களில் வாலியும் கங்கை அமரனும்தான் பாடல்கள் எழுதுவார்கள். இந்த முறை புதிதாக நிரஞ்சன் பாரதியை அறிமுகப்படுத்துகிறார் வெங்கட் பிரபு.

இவர் மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. யுவன் சங்கர் ராஜா [^] இசையில் படத்தில் இடம்பெறும் ஆறு பாடல்களில் ஒன்றை இவர் எழுதுகிறார். மற்றவற்றை வாலியும் கங்கை அமரனும் எழுதுகிறார்கள்.

திங்கள், 10 ஜனவரி, 2011

11000 ஹெச் -1 பி விசா… வாங்க ஆளில்லை!!


உயர்நடுத்தர வர்க்கத்து இந்தியர்களைப் பொறுத்தவரை சொர்க்கத்துக்கான டிக்கெட் எதுவென்று கேட்டால், ‘H 1 B விசா’ என்பார்கள் தயங்காமல்.

இந்திய எல்லைக்குள் அத்தனை கட்டுப்பெட்டித்தனங்களையும் பத்திரமாகக் காப்பாற்றி, அதை கீழிருப்பவன் தலையில் சுமத்திவிட்டு, அமெரிக்க முதலாளியிடம் சாசனத்தில் கையெழுத்திட்டு, மெக்டொனால்ட், கெண்டுகி, கோக், டின் பீர், வார இறுதிகளில் குஜால் என ‘சுதந்திர’ லைப்ஸ்டைலுக்குத் தாவ (இவையெல்லாம் இந்தியாவி்லேயே கிடைப்பது வேறு விஷயம்… ஆனால் இங்கே ‘பார்த்துவிடுவார்களே’!), கட்டாயத் தேவை இந்த H1B.

பல இந்தியர்களின் கனவான இந்த H1B-ஐ இன்று வாங்க ஆளில்லாத நிலை! கிட்டத்தட்ட 11000 H1B விசாக்கள், வருடம் முடியும் இந்தத் தருவாயிலும் வாங்க ஆளில்லாமல் தேங்கி நிற்பது, அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு பெரும் வியப்பைத் தந்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்கத் தூதரகம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், “இந்த ஆண்டுக்கான H1B கோட்டா 65000. கடந்த 2008-ம் ஆண்டு ஏப்ரல் மாதமே இந்த இலக்கு எட்டப்பட்டுவிட்டது. 2009-ல் டிசம்பர் 21-ம் தேதி இந்த அளவை எட்டிவிட்டோம். ஆனால் இந்த ஆண்டு இன்னும் 11000 விசாக்கள் வாங்கப்படாமலேயே உள்ளது”, எனத் தெரிவித்துள்ளது.

உடனே, இந்தியா மீது அத்தனைப் பாசமா நம்மவர்களுக்கு என யாரும் சிலாகிக்க வேண்டாம்.

இந்த விசாக்கள் தேங்கிக் கிடக்கக் காரணம், அமெரிக்கப் பொருளாதாரத்தின் பரிதாப நி்லைதான்.

இன்னும் அங்கே வேலை இழப்புகள் நின்றபாடில்லை. பொருளாதார வளர்ச்சி இப்போதும் 3 சதவீதத்தைத் தாண்டவில்லை. இதுவரை உலக போலீஸ்காரனாகத் திகழ்ந்த அமெரிக்கா, விக்கிலீக்ஸ் விவகாரத்தில் உலகின் வில்லனாகப் பார்க்கப்படுகிறது. வெளியில் சொல்லாவிட்டாலும், பல நாடுகள் அமெரிக்க உறவை அளவோடு பேண முயலும் நிலை… முக்கியமாக சம்பளம் மிகவும் குறைந்துவிட்டதாம்.

இத்தனையும் சேர்த்து, H1B விசாக்களைத் தேங்க வைத்திருக்கிறது. இன்றைய தேதிக்கு, அமெரிக்காவுக்கு ஒரு ‘ஆல்டர்நேட்’ இருக்குமா என தீவிரமாகத் தேடுகிறார்கள் இந்தியாவின் ‘ஹைடெக் அப்பர் மிடில்கிளாஸ் ஆசாமிகள்’!!

அரசு – தொழிலதிபர்களுக்காக மக்கள் உழைக்கும் ‘மார்க்கெட் பொருளாதாரம்!’



அரசு – தொழிலதிபர்களுக்காக மக்கள் உழைக்கும் மார்க்கெட் பொருளாதாரம்!

ஒரு காலத்தில் சமத்துவ நாடுகளாக அல்லது முதலாளித்துவமும் பொதுவுடைமையும் கலந்த இரண்டும்கெட்டான் பொருளாதாரமாக இயங்கி வந்த நாடுகள் இன்று மார்க்கெட் எகானமி எனப்படும் சந்தைப் பொருளாதாரத்துக்கு மாறிவிட்டன.

அப்படி மாறிய நாடுகளின் இன்றைய நிலைக்கு நல்ல உதாரணம் இந்தியாதான்.

இங்கே எதுவுமே மக்களுக்காக இல்லை. அரசும் ஆளுவோரும் தங்களுக்காக மட்டுமே பாடுபடுகிறார்கள். பெருந்தொழில் நிறுவனங்கள் தத்தமது வளர்ச்சியை மட்டுமே கவனத்தில் கொண்டு இயங்குகின்றன. தங்கள் பொருள்களுக்கு இவ்வளவு விலை வைக்கிறோமே… மக்களால் அவற்றை வாங்க முடியுமா என்ற யோசனையை அவர்கள் இந்திராவின் காலத்துக்குப் பிறகு அறவே துடைத்தெறிந்துவிட்டனர். வாங்க முடிந்தவர்களுக்காக மட்டுமே மார்க்கெட். வாங்க இயலாதோரின் வாங்கும் சக்தியை அதிகரிக்கும் வழிகள் எதையும் காணோம்.

மக்கள் முடிந்த வரை உழைத்து அதை மொத்தமாக இந்த மார்க்கெட்டில் கொட்டுகின்றனர்.

இந்த சுழல்தான் இன்றைய மார்க்கெட் பொருளாதாரமாகிவிட்டது.

முன்பெல்லாம் விலை உயர்வு என்பது அரசின் கட்டுப்பாட்டில் ஓரளவுக்காவது இருந்தது. பெருந்தொழில் நிறுவனங்கள் இஷ்டத்துக்கு விலைகளை உயர்த்த முடியாத நிலை இருந்தது.

ஆனால் அது ஒரு காலம். இப்போது எப்போது பொருள்களின் விலைகள் உயர்கின்றன என்பதே தெரியவில்லை. விலை உயர்வு என்பது முற்றாக ஒருவழிப்பாதையாகவும் மாறிவிட்டது.

சமீபத்திய உதாரணம் பாருங்கள்… மக்களின் அத்யாவசியத் தேவைகளான வாஷிங் மெஷின், பிரிட்ஜ், மிக்சி, கிரைண்டர் போன்ற நுகர்வோர் பொருள்களின் விலைகள் 10 சதவீதம் வரை உயர்ந்துள்ளன. ஆனால் இதுபற்றி எந்த முன்னறிவிப்பும் இல்லை!

இன்றைய வாழ்க்கை முறையில் ப்ரிட்ஜ், வாஷிஹ் மிஷின், டிவிடி – மியூசிக் சிஸ்டம், ஓவன், மிகசர் கிரைண்டர் போன்றவை அடித்தட்டு மக்கள் வீட்டிலும் தவறாமல் புழங்கப்படும் சாதனங்களாகிவிட்டன.

குடிசை வீடுகளிலும் கூட வாஷிங் மிஷின், ஓவன் தவிர்த்து பிற சாதனங்களைக் காண முடியும்.

அந்த அளவு அத்யாவசியமாகிவிட்ட பொருள்களின் விலைகளும் ஒரேயடியாக 10 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

நுகர்வோர் சாதன தயாரிப்பில் முன்னணியில் உள்ள கோத்ரெஜ் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் ஒரு மாதத்துக்கு முன்பே 10 சதவீத விலையை உயர்த்திவிட்டன. இப்போது இரண்டாவது ரவுண்ட் விலை உயர்வுக்கு அடிபோடுகின்றன. பொங்கலுக்குள் மீண்டும் இவை 5 முதல் 10 சதவீதம் வரை விலைகளை உயர்த்தக் கூடும். மார்ச்சில் பட்ஜெட் என்பதால் அதற்கு முன் மீண்டும் ஒரு விலை உயர்வும் சாத்தியமே என்று இந்த நிறுவனங்களின் அதிகாரிகள் கூறுகின்றனர்.

“எங்களைக் குறை சொல்லி பயன் ஒன்றுமில்லை. ஒரே நேரத்தில் 30 சதவீத விலை உயர்வை மக்கள் தாங்க மாட்டார்கள் என்பதால் இரண்டு மூன்று தவணைகளாக உயர்த்துகிறோம். காரணம் உலோகங்களின் அசாதரண விலை உயர்வு. குறிப்பாக ஸ்டீல் விலை கிட்டத்தட்ட ஒன்றரை மடங்கு உயர்ந்துவிட்டது..” என்கிறார் கோத்ரெஜ் அப்ளையன்ஸஸ் சிஇஓ ஜார்ஜ் மெனெஸஸ்.

காப்பர், பாலிமர் விலைகளும் 5 சதவீதம் வரை உயர்ந்துள்ளனவாம்.

கோத்ரெஜ் ப்ரிஜ் விலை ரூ 14610லிருந்து ரூ 16200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது (230 லிட் ஃப்ராஸ்ட் ஃப்ரீ மாடல் – சென்னையில்). இதன் 300 லிட் மாடல் விலை ரூ 24500 லிருந்து 26000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மாதம் மீண்டும் உயரக் கூடும் அதற்குள் வாங்கிவிடுங்கள் என்றுதான் கடைகாரர்கள் விற்று வருகிறார்கள்.

ஏஸி விலையை இந்த குளிர்காலத்தில் 10 சதவீதம் கூட்டியுள்ளது சாம்சங். மற்ற பொருள்களின் விலையையும் ஏற்கெனவே உயர்த்திவிட்ட இந்த நிறுவனம், மீண்டும் சத்தமில்லாமல் ஒரு விலை உயர்வை செய்யத் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் நுகர்பொருள் சந்தையின் மதிப்பு ரூ 35000 கோடி. ஆனால் இந்த பெரிய மார்க்கெட் குறிப்பிட்ட சில நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் சில்லோர் போட்டிச் சந்தையாக (Oligopoly structure) உள்ளது. எனவே எந்த நிறுவனமும் தன்னிச்சையாக விலையை உயர்த்துவதில்லை. இருக்கும் பிராண்டுகளின் தயாரிப்பாளர்கள் அனைவரும் மறைமுகமாக பேசி வைத்துக் கொண்டே விலைகளை உயர்த்துகிறார்கள்.

இப்போது கோத்ரெஜ்-சாம்சங் விலைகள் உயர்ந்துள்ளன என்றால், மற்ற முக்கிய பிராண்டுகளான வேர்ல்பூல், பானாசோனிக், ஐபிஎம், சோனி, ஓனிடா, வீடியோகான் போன்றவற்றின் விலைகளும் கணிசமாக உயர்ந்துள்ளன என்பதை நினைவில் கொள்ளவும். இந்த விலை உயர்வுகளை அரசும் இதுவரை கண்டுகொள்ளவில்லை.

பட்ஜெட்டுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் இப்போது நுகர்பொருள் விலைகள் பறக்க ஆரம்பித்துள்ளன. ஒரு வேளை பட்ஜெட்டில் சலுகைகள், மூலப் பொருள்களின் விலைக் குறைப்புகள் அறிவிக்கப்பட்டால், அப்போது பெயருக்கு சற்றே விலைக் குறைப்பு செய்யும் இந்த நிறுவனங்கள். ஆனால் அவர்களின் நிகர லாபம் எந்த வகையிலும் பாதிக்கப்படாது. இதற்காகவே இப்போது ஜரூராக விலை உயர்வை செய்து வருகின்றனர்.

மொத்தத்தில், அரசு, மார்க்கெட் சக்திகள், பேரளவு நிறுவனங்கள் எல்லாரும் தங்கள் தங்கள் நலனில் குறியாக இருக்கிறார்கள். மக்கள் இவர்களுக்காக உழைக்கிறார்கள் என்பதே இன்றைய இந்திய மார்க்கெட் பொருளாதாரத்தின் நிதர்சனம்!!

நகராட்சி கமிஷனர் உள்பட 3000 அரசுப் பதவிகளுக்கு தேர்வுகள் அறிவிப்பு!


வணிக வரித்துறை உதவி அலுவலர், சார் பதிவாளர், நகராட்சி கமிஷனர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட 3000க்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்களுக்கான தேர்வுகளை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.

இதுகுறித்த டிஎன்பிஎஸ்ஸி அறிவிக்கை இங்கே இணைக்கப்பட்டுள்ளது. பணியிடங்களின் எண்ணிக்கை, கல்வித் தகுதி, தேர்வு முறை, தேர்வுத் தேதி என அநைத்து விவரங்களும் இந்த அறிவிக்கையில் உள்ளன.

TNPSC-CSSE-I -Notification

கிளிக் செய்து படிக்கவும்.

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி வரும் பிப்ரவரி 11, 2011.

இந்த தேர்வுக்கான பாடத் திட்டத்தை அறிய இந்த இணைப்பை க்ளிக் செய்யவும். http://www.tnpsc.gov.in/syllabus.htm

அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தபால் நிலையங்கள் மற்றும் சென்னை டிஎன்பிஎஸ்ஸி தலைமை அலுவலகத்தில் விண்ணப்பங்கள் கிடைக்கின்றன.

மொத்தம் 3000-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் என்பதால் இந்த முறை பல லட்சம் விண்ணப்பங்கள் குவியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இளைஞர்கள் செக்கு மாடுகளாக இருக்கக் கூடாது - த‌ந்தை பெ‌ரியா‌ர்!


"புத்துலுக தொலை நோக்காளர், தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ், சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை, அறியாமை, மூட நம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயங்கள், மட்டமான பழக்க வழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி" இது பகுத்தறிவுப் பகலவன் தந்தைப் பெரியாரைப் பற்றி யுனெஸ்கோ குறிப்பிட்ட வார்த்தைகள்.

1973 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் நாள் தனது 94வது வயதில் மறைந்த தந்தைப் பெரியாரை, 1.4.1959 ‌அ‌ன்று 'குடி அரசு' இதழில், இளைஞர்கள் செக்கு மாடுகளாக இருக்கக் கூடாது என்று எழுதிய தலையங்கம் மூலம் நினைவு கூர்வோம்.

பார்ப்பனரிடமிருந்து தமிழர்களைப் பற்றிக் கொண்டுள்ள நோய்கள் பல. கேழ்வரகு, சோளம், கம்பு முதலிய உணவுத் தானியங்களைவிட அரிசியை உணவாக்கி உண்பது, அதுவும் தவிடு போக்கிய வெண்மையான அரிசிச் சோற்றைக் கஞ்சி வடித்து உண்பதுதான் கீழ்ச்சாதியிலிருந்து உயர்ந்து செல்வதற்குரிய முறை என்று கருதிச் சத்தான உணவு வகைகளைக் கைவிட்டனர், தமிழர்கள்.

ஆனால், பார்ப்பனரிடமுள்ள இரண்டொரு நற்பண்புகளை மட்டும் தமிழர்கள் அறிந்து நடக்கத் தவறிவிட்டனர். அதிகாலையில் எழுதல், இனப்பற்றுக்காக எதையும் தியாகம் செய்தல், எல்லாவற்றையும் விட கல்வியைப் பெருஞ்செல்வமாகக் கருதுதல் ஆகிய சில பண்புகளை ஆரியர்களிடமிருந்து கற்றுணர்ந்து நடக்க வேண்டும். தமிழர்களிடம் இன்று அதிவேகமாகப் பரவிக் கொண்டிருக்கின்ற பெரு நோய் ஒன்றைப் பற்றி இன்று எழுதுகிறோம்.

நாமக்கல் வட்டம் கடகப்பாடி என்ற சிற்றூரைச் சேர்ந்த ஒரு தமிழ் மாணவன் வயது 16தான். கோவைக்குச் சென்று கல்வி பயில்வதற்காகத் தன் மாமனாரிடம் 150ரூபாய் கேட்டதாகவும், அவர் தர மறுத்ததாகவும், இந்த ஆத்திரத்தினால் தன் மனைவியின் தந்தையை நள்ளிரவில் பேனாக்கத்தியினால் கொலை செய்துவிட்டதாகவும், குற்றம்சாட்டப்பட்ட ஒரு வழக்கில் இந்தக் குற்றவாளிக்கு அய்ந்தாண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

பெற்றோர்கள்தான் இதில் முன்னணிக் குற்றவாளிகளாயிருக்கின்றனர். தாங்கள் தம்மகனின் கல்விக்காகச் செலவழித்த பணம், தம் கடமையைச் சேர்ந்தது என்று கருதாதபடி, ஏதோ ஒரு வியாபாரத்தில் போட்ட முதலீடாகக் கருதிக் கொண்டு அந்த முதலீட்டையும், வட்டியையும் சேர்த்து, அவனுக்கு வரப்போகின்ற மனைவி மூலமாக வசூல் செய்துவிட வேண்டுமென்றே கருதுகின்றனர்.

இந்த நோய் ஆந்திரர்களிடையிலும், தமிழ் நாட்டுப் பார்ப்பனர்களிடையிலும் முற்றியிருக்கிறது. ஒரு லட்ச ரூபாய் சொத்துடைய ஒருவருக்கு மூன்று பெண்களிருந்தால் போதும், அவர்களின் திருமணம் முடிந்தவுடன், அவர் ஓட்டாண்டியாக வேண்டியதுதான். வரதட்சணை மூலம் அவர் சொத்தைக் கசக்கிப் பிழிந்து குடித்து விடுகிறார்கள் மாப்பிள்ளை வீட்டார்.

இந்த வரதட்சணை நோயைச் சட்டத்தின் மூலம் தடுத்து விடலாமென்று ஆட்சியாளர் முயன்று கொண்டிருக்கின்றனர். பொய்யையும் விபச்சாரத்தையும் சட்ட மூலமாக ஒழிப்பது எப்படியோ, அதுபோலத்தான் இம்முயற்சியும்.

சமுதாயத்தில் நல்ல முறையான ஒழுக்கமும், அன்பும், தியாக உணர்ச்சியும் ஏற்பட்டால்தான் இம்மாதிரித் தீமைகளை ஒழிக்க முடியும். தானே பாடுபட்டு உழைத்துச் சம்பாதிக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம், தமிழ் நாட்டு இளைஞர்களிடையே வளர வேண்டும். பிறர் சொத்துக்கோ சூது மூலம் கிடைக்கும் திடீர் வருமானத்துக்கோ, யாரும் ஆசைப்படக்கூடாது. பெற்றோரின் சொத்தைக்கூட அவர்களுக்குப் பிறகுதான் அடைய வேண்டுமே தவிர, சம்பாதிக்கக்கூடிய வயதிலும்கூட பெற்றோர் சொத்தை அனுபவித்துக் கொண்டிருக்கக் கூடாது. பெற்றோர் சொத்தையே இப்படிக் கருத வேண்டுமென்றால், மாமனார் வீட்டுச் சொத்தைப் பற்றிக் கனவிலும் ஆசைப்படக்கூடாது.

பொருள் வசதியுள்ள மாமனார் எவரும் எத்தகைய கருமியும், தன் மகள் வறுமையினால் தொல்லைப்படுவதைக் கண்டு சகித்துக் கொண்டிருக்க மாட்டார். ஆதலால், திருமணத்தின்போது இத்தனை ஆயிரம் ரூபாய்க்கு நகையோடு இத்தனை ஆயிரம் ரூபாய் வரதட்சணை கொடு; மாப்பிள்ளைக்குக் கார் வாங்கித்தா! வீடு வாங்கித்தா! என்றெல்லாம் பையனின் பெற்றோர் கேட்பது, மகா மானக்கேடான செய்கையாகும். தன் மகளுக்கு மற்றவன் கேட்கிறானே என்று சமாதானம் கூறக்கூடாது. இரண்டும் தவறு என்பதைத் துணிந்து கூற வேண்டும்.

இந்தத் தீய சுரண்டல் முறையினாலேயே திறமையும், அழகும், ஒழுக்கமும் நிறைந்த பதினாயிரக்கணக்கான பெண்கள் திருமணம் ஆக முடியாமலேயே இருக்கின்றனர். இளைஞர்கள் மதவெறியையும், சாதி உணர்ச்சியையும் மறந்து கலப்புத் திருமணம் செய்ய முன்வராவிட்டாலும், அவரவர் சாதிக்குள்ளும் மதப் பிரிவுக்குள்ளுமாவது வரதட்சணை கேட்காதபடி மணம் புரிந்து கொள்ள முன்வரக்கூடாதா? நல்ல காரியம் செய்யத்தான் இளைஞர்களுக்குத் துணிவு வேண்டும். வழக்கம் என்ற செக்கைச் சுற்றிச் சுற்றி வருவதற்குச் செக்கு மாடுகளே போதும். தமிழ் நாட்டு மாணவர்கள், பட்டதாரிகள் ஆகியோர் செக்கு மாடுகளாக இருத்தல் வேண்டாம். பந்தயக் குதிரைகளாக இருக்க வேண்டும்.

ந‌‌ன்‌றி : ‘குடி அரசு' 1.4.1959

2010 – விக்கிலீக்ஸ்-ன் தகவல் புரட்சி!


2007ஆம் ஆண்டில் கருக்கொண்டு, 2008ஆம் ஆண்டில் புயலாக வெளிப்பட்ட வீட்டுக் கடன் சிக்கல் (Sub Prime Crisis) தங்கள் நாட்டின் வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள் முதல் பங்குச் சந்தை வரை மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியபோது கூட, அதனை தாங்கள் கடைபிடித்துவரும் சந்தை பொருளாதாரத்தில் ஏற்பட்ட ஒரு எதிர்பாராத அதிர்ச்சியாக எடுத்துக் கொண்ட அமெரிக்க அரசுக்கு, விக்கிலீக்ஸ் வெளியிட்டுவரும் உண்மைகள் அடி வயிற்றில் புளியைக் கரைத்துக்கொண்டிருக்கிறது என்றால், அதற்குக் காரணம், உலகத்திற்கு அது காட்டிக்கொண்டிருக்கும் தூய்மை முகம், எந்தனை கொடூரமானது என்பதை விக்கிலீக்ஸ் வெளியிட்டுவரும் ஆவணங்கள் வெட்ட வெளிச்சமாக்குவதேயாகும்.

உலகின் மாபெரும் ஆட்சி பீடத்தின் மையமாகக் கருதப்படும் வெள்ளை மாளிகைக்கு அமெரிக்காவின் பல்வேறு நாடுகளின் தூதர்கள், அந்தந்த நாடுகளில் இருந்து ‘திரட்டி’ அனுப்பிய இரகசிய அறிக்கைகளை விக்கிலீக்ஸ் இணையத் தளம் வெளியிட்டதன் விளைவாக அந்நாட்டின் உண்மையான நட்பு முகத்தின் யோக்கிதை மட்டுமின்றி, தான் பெற்ற இரகசிய விவரங்களின் மீது நேரிடையாக வினையாற்றாமல், அதனை மறைத்து, அந்தந்த நாடுகளின் அரசுகளை மிரட்ட அந்தத் தகவல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை விக்கிலீக்ஸ் வெளியீடுகள் மூலம் அரசியல் உலகம் புரிந்துகொள்ள வைத்துவிட்டது. அதுதான் அமெரிக்காவிற்கு சங்கடம்.

அமெரிக்காவிற்கு எதிரான இரகசிய பரிமாற்ற அறிக்கைகளை மட்டுமே விக்கிலீக்ஸ் வெளியிட்டவில்லை. மாறாக, அது பல நாடுகள் தொடர்புடைய ஆவணங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. ஆயினும் அது பெரும் அளவில் பாதித்தது அமெரிக்காவையே.

இப்போது கூட, உலகமே நாளை பிறக்கப்போகும் 2011 புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்க முற்பட்டுள்ள நிலையில், அமெரிக்க அரசும், பேங்க் ஆஃப் அமெரிக்காவும் விக்கிலீக்ஸ் புத்தாண்டில் வெளியிடப்போகும் ஆவணம் என்னவென்பதை நினைத்து அச்சத்தில் உழன்றுக்கொண்டிருக்கின்றன.

இதற்குக் காரணம், கடந்த திங்கட்கிழமை, லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் பிணைய விடுதலையளித்த பிறகு, டைம்ஸ் ஆஃப் லண்டன் நாளிதழிற்கு பேட்டியளித்த விக்கிலீக்ஸ் இணையத் தளத்தின் நிறுவனர் ஜூலியன் அசான்ஞ், ஒரு மிகப் பெரிய வங்கியின் நிர்வாகிகள் அனைவரும் விலக வேண்டிய அளவிற்கு முக்கிய தகவல்கள் அடங்கிய ஒரு ஆவணத்தை தான வெளியிடப்போவதாக கூறியதுதான்.

பேங்க் ஆஃப் அமெரிக்கா என்று பெயரை ஜூலியன் அசான்ஞ் கூறவில்லை. ஆனால், அந்த வங்கியின் நிர்வாகிகள் ஜூரத்தில் உறைந்துள்ளார்கள். எது தொடர்பான ஆவணம் அது? என்கிற யோசனையில் வாஷிங்டனில் ஆளுக்கு ஆள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும் நிலை. அவர்கள் இந்த அளவிற்கு அச்சமுற மற்றொரு காரணமும் உள்ளது. அது, 2009ஆம் ஆண்டில் எழுதிய கட்டுரை ஒன்றில், பேங்க் ஆஃப் அமெரிக்காவின் தலைமை நிர்வாகி ஒருவரின் கணினி அமைப்பின் ஹார்ட் டிரைவ் தங்களுக்கு கிடைத்துள்ளதாக அசான்ஞ் கூறியிருந்ததுதான்.

மெர்ரி லின்ஞ் நிதி நிறுவனத்தை கையகப்படுத்தியதில் உள்ள வில்லங்கத்தை விக்கிலீக்ஸ் வெளியிடுமோ என்று மற்றொரு கவலை. இது எல்லாவற்றி்ற்கும் மேலாக அப்படி ஏதேனும் வெளியிடப்பட்டால் அதனால் அமெரிக்காவின் பொருளாதார நிலை என்ன ஆகும் என்ற கவலையும் அமெரிக்க அரசிற்கு ஏற்பட்டுள்ளது.

இப்படி அமெரிக்காவும், அதன் நிறுவனங்களும் திரை மறைவில் நிகழ்த்திய திருவிளையாடல்களின் ஆதாரங்களை வெளியிட்டு, அந்நாட்டு அரசியலில் ஒரு குழப்பமான நிலையை ஏற்படுத்துவதற்கு என்ன அவசியம் உள்ளது? விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசான்ஞ்-ன் நோக்கமென்ன? என்கிற வினாக்களும் எழுகிறதல்லவா?

அமெரிக்காவின் அழுத்தத்தால் சர்வதேச காவல் துறை தனக்கு எதிராக சிகப்பு அறிக்கை வெளியிட்ட நிலையில் மறைந்து வாழ்ந்துவந்த ஜூலியன் அசான்ஞ்ஞை, நியூ யார்க்கர் எனும் இதழின் செய்தியாளர் ராஃப்பி காட்சாடெளரியன் என்பவர் சந்தித்துப் பேசியுள்ளார். ஜூலியன் அசான்ஞ் உடன், அவர் பதுங்கியிருந்த சிறு அறையில் (பங்கர்) ராஃப்பியுன் இருந்துள்ளார். அப்போது அசான்ஞ் நோக்கம் குறித்து வினா எழுப்பியுள்ளார்.

அநீதிகளை வெளிப்படுத்தவதே தனது இணையத் தளத்தின் நோக்கம் என்று அசான்ஞ் அழுத்தமாக கூறியதாக தெரிவிக்கும் ராஃப்பி, “இன்றுள்ள நிலையில் மனிதனின் போராட்டங்கள் அனைத்தும் வலதுக்கு எதிரான இடது போராட்டமோ அல்லது நம்பிக்கைக்கு எதிரான பகுத்தறிவின் போராட்டோ அன்று, அது தனி மனிதனுக்கும் அவன் வாழ்வைப் பாதிக்கம் (அரசு) அமைப்புகளுக்கும் எதிரானதே” என்று அசான்ஞ் கூறியதாக தெரிவிக்கிறார்.

“ஆட்சியமைப்புகளின் போக்கை தற்போதுள்ள போக்கிற்கு மாறாக மாற்றியமைக்க வேண்டுமென்று நாம் நினைப்போமானால், அவைகள் மாற்றத்திற்கு தங்களை சற்றும் உட்படுத்திக்கொள்ள தாயாரக இல்லை என்பதை தெளிவாக புரிந்துகொண்டு, அதற்கேற்ற வகையில் துணிவாக செயலாற்ற வேண்டும்” என்றும் அசான்ஞ் கூறியதாக ராஃப்பி தெரிவிக்கிறார்.


இப்போது புரிகிறதா, விக்கிலீக்ஸ் வெளியீடுகளின் நோக்கம் என்னவென்பதை? அமெரிக்காவின் செனட்டரும், அவரை வழிமொழிந்த அமெரிக்காவின் துணைக் குடியரசுத் தலைவரும், ஜூலியன் அசான்ஞ் ஒரு உயர்தொழில்நுட்ப பயங்கரவாதி என்று கூறியது சற்றும் பொருந்தாக விமரிசனம் என்பது?

அசான்ஞ் மொழியில் தெளிவாக கூறுதெனின், அமெரிக்காவோ அல்லது இன்றைய உலக நாடுகளின் அரசுகளோ இப்போது எவ்வாறு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனவோ அந்த போக்கில் இருந்து சற்றும் மாறப்போவதில்லை. இவைகளின் செயல்பாட்டை தலைகீழாக மாற்ற வேண்டுமெனில், அவைகளின் தன்மையைப் புரிந்துகொண்டு துணிச்சலுடன் போராட வேண்டும் என்கிறார். அதற்கு தற்போதுள்ள அதன் அடித்தளத்தை ஆட்டம் காணச் செய்ய வேண்டும். அதற்குத்தான் இப்படிப்பட்ட வெளியீடுகள். அவைகள் அதன் பிடிமானத்தை பலமிழக்கச் செய்கின்றன.

இந்த முடிவிற்கு ஜூலியன் அசான்ஞ் வரக் காரணமேதுமுண்டோ? தான் மாற்ற நினைக்கும் இன்றுள்ள அரசியலை ஆங்கல மொழிக் கவிஞர் ஜார்ஜ் ஆர்வெல்லின் பாடலை மேற்கோள் காட்டி புரிய வைக்கிறார் அசான்ஞ்.
“பொய்யை உண்மையைப் போல் ஒலிக்கவும், கொலையை மரியாதைக்குரியதாகக் காட்டவும், தூய காற்றிற்குக் கூட நிலைத்தன்மை உண்டு என்று நிரூபிக்கவுமே அரசியல் மொழி வடிவமைக்கப்பட்டுள்ளது” என்கிற ஜார்ஜ் ஆர்வெல்லின் மொழியை இன்றைய அரசியலின் போக்கை சித்தரிப்பதாக அப்பாச்சி வீடியோவிற்கு அளித்த பேட்டியில் அசான்ஞ் கூறியுள்ளார்.

எவ்வளவு ஆழமான உண்மை! விடுதலைப் போராளிகை ‘பயங்கரவாதிகள்’ என்பது, பழங்குடிகளுக்காக போராடுவோரை, அந்த மக்களின் போராட்டங்களை ஆதரிப்போரை, அவர்களின் நியாயத்திற்காக குரல் கொடுப்போரை ‘உள்நாட்டு அச்சுறுத்தல்’ என்பது, தங்களின் அன்றாட வாழ்விற்காக கடலுக்குச் சென்று மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் அண்டை நாட்டு கடற்படையினரால் அத்துமீறி வந்து தாக்கப்படும் போது, அவர்கள் ‘சில பேராசை பிடித்த மீனவர்களால் பிரச்சனை ஏற்படுகிறது’ என்று பேசுவது என்று இவை யாவும் ஜார்ஜ் ஆர்வெல் சொல்லும் அந்த அரசியல் மொழிகள்தானே?

இதனை புரிந்துகொண்ட காரணத்தினால்தான் விக்கிலீக்ஸ் வெளியிடும் ஆவணங்களை உலகின் தலைசிறந்த நாளிதழ்களான தி கார்டியன், நியூ யார்க் டைம்ஸ், லீ மாண்ட், எல் பாரிஸ், டெர் ஸ்பீகல் ஆகியன முன்னுரிமை கொடுத்து வெளியிடுகின்றன! இந்த ஏடுகளின் வரிசையில் ஒரு இந்திய நாளிதழ் கூட இடம்பெறவில்லையே என்பது வருத்தம்தான். ஆனால் இங்குதான், அரசின் குரல்களாக இருந்து பத்ம ஸ்ரீ முதல் சிறிலங்க ரத்னா வரை பட்டங்கள் பெற்ற முதன்மை இதழாளர்களை ஆசிரியர்களாக கொண்ட ஊடகங்களும் நாளிதழ்களும் அல்லவா கோலேச்சுகின்றன? அதனால் அந்தப் பட்டியலில் இந்தியா நாளிதழ் ஒன்று இடம்பெறாததில் ஆச்சரியமேது்மில்லை.

ஒரு தனி மனிதராய், உறுதியுடன் நிற்கும் சில தொழில் திறமை கொண்ட இளைஞர்களுடன் இணைந்து இன்றுள்ள அரசுகளுக்கு பாடம் கற்பிக்க புறப்பட்ட ஜூலியன் அசான்ஞ், உண்மையான ஜனநாயகத்திற்கு வழிகோலுகிறார். எனவே, எவ்வித ஐயமுமின்றி, அவரே இந்த ஆண்டின் மிகச் சிறந்த மனிதரே.

விக்கிலீக்ஸ் இணையத் தளம் செய்துவரும் தகவல் புரட்சி தொடரட்டும்... 2011இலும்.

புதன், 5 ஜனவரி, 2011

காவலன்!


விஜய்யின் 51வது படம் காவலன். வீரா கி‌ரியேஷன்ஸ் இந்தப் படத்தை தயா‌ரித்துள்ளது. மலையாளத்தில் இயக்குனர் சித்திக் ஏழு வருடங்களுக்குப் மு‌ன்பு இயக்கிய படம் பாடிகாட். திலீப், நயன்தாரா நடித்த இந்தப் படத்தின் தமிழ் ‌ரீமேக்கே காவலன். சித்திக்கே காவலனையும் இயக்கியுள்ளார்.

தாதா ரா‌ஜ்கிரணிடம் வந்து சேரும் விஜய் அவரது மகள் அசினுக்கு பாடிகாடாக செல்வதும், இது காதலில் முடிவதும், காதல் என்னானது என்பதுமே கதை. ரா‌ஜ்கிரணுடன் ரோஜாவும் நடித்துள்ளார். வித்யாசாகர் படத்துக்கு இசையமைத்துள்ளார். படத்தின் சில காட்சிகளை பாங்கா‌க், ஐரோப்பாவில் எடுத்துள்ளனர். காரைக்குடியிலும் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

படத்தில் விஜய்க்கு இணையாக வடிவேலுவும் வருகிறார். இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி ஆகியோரும் நடித்துள்ளனர்.

பாசிஸ ராஜபக்சேயின் பிரச்சார ஊதுகுழல் அசின் நடித்திருப்பதால் காவலனை புறக்கணிக்கும்படி ஈழத்தமிழர்கள் கோ‌ரிக்கை விடுத்துள்ளனர். அவர்களின் கோ‌ரிக்கைக்கு செவிசாய்க்க வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும்.

சச்சின் ஏன் வித்தியாசமான பேட்ஸ்மேன்?



கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் மிக முக்கியமான சதம் எடுத்து இந்திய அணிக்கு பலம் சேர்த்துள்ள சச்சின் டெண்டுல்கர் இப்போது உள்ள அல்லது முந்தைய நட்சத்திர வீரர்களைக் காட்டிலும் ஏன் வித்தியாசமானவர் என்பது இப்போது அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

பொதுவாக ஒரு பேட்ஸ்மென் 20 அல்லது 22 வயதில் தனது சர்வதேச கிரிக்கெட்டை துவக்குகிறார் என்றால் 8 அல்லது 10 ஆண்டுகள்தான் அவரது உச்சக்கட்ட காலமாக இருக்கும் அதன் பிறகு வீழ்ச்சி தொடங்கி விடும். ஆனால் சச்சினைப் பொறுத்தவரை வீழ்ச்சி என்பது 20 ஆண்டுகள் ஆகியும் இல்லாமல் இருக்கக் காரணம் அவர் சிந்தனாபூர்வமான கிரிக்கெட் வீரர் என்பதே.

நேற்று டேல் ஸ்டெய்ன், மோர்னி மோர்கெல் ஆகியோரின் ஆக்ரோஷமான பந்து வீச்சையும் அவர் எந்த வித அழுத்தமும் இல்லாமல் எதிர்கொண்ட விதம் ஆச்சரியப்படத்தக்க வகையில் இருந்தது.

ஒவ்வொரு முறை அவர் சரியாக ரன் எடுக்காத போதும் அவர் மீது எழுந்த விமர்சனங்களுக்கு அவர் தன் மட்டையின் மூலமே பதிலளித்து வந்துள்ளார்.

சச்சினின் பழைய அதிரடி போய்விட்டது என்று வருத்தப்பட்ட அவரது முந்தைய ரசிகர்களுக்கு பதில் கொடுத்த ஒரு நாள் போட்டி இரட்டை சதம் சச்சினின் இந்த பிந்தைய காலக்கட்டத்தில்தான் நடந்தேறியது என்பதும் அவர் இன்னமும் தனது ஆதிக்கவாத கிரிக்கெட் ஆட்டத்த்தை முற்றிலும் விட்டுவிடவில்லை என்பதற்கும் அத்தாட்சியாக விளங்கியுள்ளது.

துவக்கத்தில் சச்சின், டேல் ஸ்ட்யென் வீசிய 5 ஓவர்களையும் தானே எதிர்கொள்ள நேரிட்டது. மற்ற நாட்களை விட நேற்று அதிகம் பந்துகள் அவரது மட்டையைக் கடந்து சென்றன என்பதில் ஐயமில்லை. ஆனால் அவரது பொறுமை, பந்துக்கு பந்து மாறும் பேட்டிங் உத்தி அவர் விக்கெட்டை வீழ்த்துவது எளிதானதல்ல என்பதை நிரூபித்தது.

டெண்டுல்கரை ஒரு 20 பந்துகளாவது பீட்டன் செய்த ஸ்டெய்ன் கடைசியில் "சச்சின் விக்கெட்டை வீழ்த்துவதில் ஆற்றலைச் செலவழிப்பதில் பயனில்லை. ஏனெனில் அது அவருடைய தினமாக இருந்தால் அது அவருடைய தினம் மட்டுமே." என்று கூறியிருப்பதும் டெண்டுல்கரின் கிரிக்கெட் ஆட்டத்தின் மீதான சிந்தனாபூர்வமான அபிமானத்தை அறிவுறுத்துகிறது.

ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக ஆஸ்ட்ரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் அவர் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்தை விரட்டி ஆட முயன்று ஆட்டமிழந்து வந்தார். இந்த நிலையில் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றபோது ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே செல்லும் பந்துகளை தொடுவதில்லை என்று சபதம் எடுத்து இரட்டைச் சதம் அடித்தார் சச்சின். இது அவருடைய மனோபலத்தைக் காண்பித்த பல தருணங்களில் ஒரு தருணம்.

சச்சினின் ஆரம்பக் காலங்களில் விளையாடிய புல், ஹுக் ஆகிய ஷாட்களை அவர் டென்னிஸ் எல்போ என்ற முழங்கை அறுவை சிகிச்சைக்குப் பிறகு விட்டு விட்டார். அதற்குப் பதிலாக அவர் பவுன்சரை பாயிண்ட், தேர்ட்மேன் திசையில் தூக்கி அடிக்கும் முறையில் வெற்றி கண்டார்.

நேற்று படு பயங்கரமான ஸ்விங் பந்து வீச்சு, ரன் எடுக்க வேண்டிய இடங்களிலெல்லாம் ஃபீல்டர்கள். மோர்னி மோர்கெல்லின் தென்னை மர உயரப் பந்து வீச்சு. ரன்களே எடுக்க முடியாத ஒரு சூழல்தான்.

ஆனாலும் பவுன்சர்களை விட்டு விட்டு, அவர்கள் பந்தை சற்றே ஓவர் பிட்ச் போன்று வீசும் போது அதுவரை பின்னங்காலில் சென்று ஆடிய சச்சின் சட்டென ஓவர் பிட்ச் பந்துகளுக்கு முன்னால் வந்து கவர் டிரைவ், ஸ்ட்ரெய்ட் டிரைவ் ஆடியது இன்னமும் அவரிடம் பொக்கிஷமாக இருப்பது 'ஃபுட் வொர்க்' என்பது வெளிப்படையாகத் தெரிந்தது.

சுழற்பந்து வீச்சாளர்களை சச்சின் டெண்டுல்கருக்கு எதிராக பயன்படுத்துவது இப்போதெல்லாம் ஏறக்குறைய விரயம் என்பது சமீப காலங்களில் தெரிய வந்துள்ள உண்மை. ஆனால் எதிரணியினர் என்ன செய்ய முடியும், ஏதாவது கவனப்பிசகு ஏற்பட்டு டெண்டுல்கர் ஸ்பின்னர்களிடம் ஆட்டமிழந்து விட மாட்டாரா என்ற ஆதங்கம் இருப்பது நியாயமானதுதான். ஆனால் சுழற்பந்தில் அவரே ஆட்டமிழந்தால்தான் உண்டு.

முன்பெல்லாம் கூட அணியின் மீதான நெருக்கடி இவரது பேட்டிங்கிலும் ஓரளவுக்கு பிரதிபலித்து அழுத்தம் காரணமாக தடுமாறியதுண்டு. ஆனால் சமீப காலங்களில் குறிப்பாக நேற்று அணியின் நெருக்கடி என்பது உள்ளார்ந்து இருந்தாலும் அது தன் பேட்டிங்கை கட்டுப்படுத்தக் கூடாது என்பதில் தெளிவாக இருந்ததை எடுத்துக் காட்டியது.

ஏற்கனவே லஷ்மண் ரன் அவுட் ஆனது இவர் மனதை பாதித்திருக்கலாம். அதனால் அவர் நேற்று கடைசி வரை நின்று லஷ்மண் ரன்களையும் சேர்த்து எடுக்க வேண்டிய கடமையைச் செய்தார்.

இரண்டாவது புதிய பந்து எடுத்தால் இந்தியாவை அவர்கள் சுருட்டி விடுவார்கள் என்று டெண்டுல்கர் கணித்து அதற்கு முன்பே ரன்களைக் குவிப்பதில் வேகம் காட்டினார்.

அப்படிப்பட்ட தருணத்தில்தான் பால் ஹேரிஸ் பந்தை அவர் மேலேறி வந்து அடித்தபோது அது அவர் கையில் பட்டு ரன்னர் முனையில் உள்ள ஸ்டம்பைத் தாக்க லஷ்மண் ஆட்டமிழந்தார்.

ஆனால் புதிய பந்து எடுத்த பிறகு மோர்கெலின் இரண்டு பந்துகள் பெரிய அளவில் ஆஃப் கட்டர் ஆகி டெண்டுல்கரின் தொங்கும் மட்டைக்கும் உடம்புக்கும் இடையில் புகுந்து சென்றது.

இனிமேல் தடுத்தாட முயன்றால் அது அவுட்டில்தான் போய் முடியும் என்று புரிந்து கொண்ட சச்சின் மோர்கெலின் அடுத்த ஷாட் பிட்ச் பந்தை ஆக்ரோஷமாக ஹுக் செய்து சிக்சர் அடித்து சதத்தை நிறைவு செய்தார்.

இந்த திடீர் தாக்குதல் மோர்கெலை சற்றே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதன் பிறகு அடுத்த பந்தே தேர்ட் மேன் திசையில் திருப்பி விட்டதும் டெண்டுல்கரின் ஆதிக்கத்திற்கு உதாரணங்கள். சதத்திற்குப் பிறகு சச்சின் ஏறக்குறைய ஆட்டமிழக்கச் செய்ய முடியாத வீரர் என்ற அளவுக்கு விளையாடத் துவங்கி விட்டார்.

ஹர்பஜன் சிங் துவக்கத்தில் இருபது ஓவர் கிரிக்கெட் போன்று சுழற்றினார். ஏனெனில் பொதுவாக பந்து வீச்சாளர்கள் களமிறங்கும் போது இதுபோன்ற ஆக்ரோஷமான வேகப்பந்து வீச்சிற்கு முன் தாங்கள் காயம் அடைந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பர். ஆனால் டெண்டுல்கர் ஹர்பஜனிடம் பேசி அவரை சகஜமான கிரிக்கெட் ஆட்டத்தை விளையாட வலியுறுத்தினார். அதில் வெற்றியும் கண்டார்.

இவ்வாறு தான் விளையாடும்போது எவ்வளவு ரன்களை எடுக்க முடியுமோ அது வரை போராட்ட குணத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதை எதிர்முனை வீரர்களுக்கும் அவர் அறிவுறுத்துவதில் தயங்கியதில்லை. அதில் பலமுறை வெற்றியும் கண்டுள்ளார். ஒரு முறை ஜாகீர் கான் 75 ரன்கள் எடுக்கக் காரணமாயிருந்ததும் சச்சின் டெண்டுல்கர்தான்.

ஸ்டீவ் வாஹும் ஏறத்தாழ 18 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தார். ஆனால் அவர் 1997க்குப் பிறகுதான் பெரிய பேட்ஸ்மென் ஆனார். ரிக்கி பாண்டிங்கும் தற்போது கிரிக்கெட் உலகிற்கு வந்து 14, 15 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் அவரது வீழ்ச்சியின் அறிகுறிகள் தெரியத் துவங்கிவிட்டது.

பிரையன் லாரா தென் ஆப்பிரிக்காவில் ஒரு தொடரில் தொடர்ந்து ஆலன் டொனால்டிடம் விக்கெட்டைப் பறிகொடுத்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 78 ரன்கள்தான் அவரது அதிகபட்ச ரன் எண்ணிக்கையாக அமைந்தது.

கேரி சோபர்ஸ் ஆலன் போர்டர், சுனில் கவாஸ்கர், விவியன் ரிச்சர்ட்ஸ், ஆல்வின் காளிச்சரண் என்று நமக்கு நினைவு தெரிந்த பேட்டிங் மேதைகள் இருந்தும் அவர்கள் விளையாடிய காலக்கட்டம், ஆட்டக்களம், பவுன்சர் விதிகள் என்ற வேறுபாடுகள் இருந்தாலும் சச்சின் அவர்களிலிருந்து வேறுபட்ட ஒரு மேதை என்பது நேற்றைய இன்னிங்ஸ் மூலம் தெரிந்தது.

இந்த மேதைமை இல்லாமல் 51 டெஸ்ட் சதங்கள் 46 ஒரு நாள் சதங்கள் ஒரு போதும் சாத்தியமாகாது. இனிமேலும் ஒருவர் இந்த கிரிக்கெட் சிந்தனையுடனும் உத்தியுடனும், இவ்வளவு நீண்ட காலம் கிரிக்கெட் ஆடும் திறமையுடன் வருவதும் கடினமே.

சச்சினின் இந்த இன்னிங்ஸ் இந்திய அணிக்கு வெற்றி தேடித் தந்தால் அவர் நிச்சயம் தனது சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ் இதுதான் என்று இதனை அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

கடைசியாக தனது 2010ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் அணியில் சச்சினுக்கு சிறப்பான இடம் வழங்கிய இயன் சாப்பல் "சச்சின் தனது பழைய ஆதிக்கத்தை தற்போது மீண்டும் ஒரு கலையாகக் கண்டு பிடித்துக் கொண்டுள்ளார்." என்று கூறியுள்ளது சச்சினின் பெருமைக்குச் சான்று. ஏனெனில் இதே இயன் சாப்பல்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு சச்சின் டெண்டுல்கர் தன்னைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டு கண்ணாடியிடம் தான் தொடர்ந்து விளையாட வேண்டுமா அல்லது வேண்டாமா என்று கேட்கவேண்டும் என்று கடுமையாகக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ருத்ராட்சத்தை யார் யாரெல்லாம் அணியலாம்?


புதனுடைய அம்சமாக, அதாவது சிவனுடைய அம்சமாக கருதப்படுவது ருத்ராட்சம். சிவனின் அங்கத்திலிருந்து விழக்கூடிய வேர்வை என்றெல்லாம் சில புராணங்கள் சொல்கின்றன.

ருத்ராட்சத்திற்கு இயல்பாகவே மருத்துவ குணங்கள் நிறைய உண்டு. ருத்ராட்சத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். சிலரெல்லாம் போகம் செய்யும் போது இருக்கக்கூடாது என்றெல்லாம் சொல்வார்கள். அப்படியெல்லாம் ஒன்றும் கியைடயாது, போகிக்கும் போது கூட இருக்கலாம். தீட்டு என்பது கிடையாது.

ஆனால், ருத்ராட்சத்தை தங்கம் அல்லது வெள்ளியில் கட்டி அணியும் போது, மந்த்ரா உபதேசம் பெற்று, குருநாதர் கையில் இருந்து வாங்கி அணியும் போதெல்லாம் மிகவும் நேமமிஷ்டையுடன் இருக்க வேண்டும். அதாவது தீட்சையாக தரும் ருத்ராட்சத்தை பெற்றுக்கொண்டு தவறான செயல்கள், பேச்சுவார்த்தைகளில் ஈடுபடக் கூடாது.

ஆண், பெண் என இருபாலருமே ருத்ராட்சத்தை அணியலாம். பெண்களுக்கு இருக்கக்கூடிய இயல்பான இடர்பாடான நாட்களில் கூட அணிந்திருக்கலாம். அது ஒன்றும் குரோதம் கிடையாது. வட இந்தியப் பெண்கள் சிலர் தலையில் போடும் கிளிப்புகளில் கூட ருத்ராட்சத்தை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தக்கூடிய சக்தியும், மன அழுத்தத்தை குறைக்கும் சக்தியும் ருத்ராட்சத்திற்கு உண்டு. பக்கவாதத்திற்கு முந்தைய காலகட்டத்தில் ருத்ராட்ச மாலையை உடம்பு முழுவதும் தேய்த்துவிடும் போது அது சரியாகிறது.

இன்றைக்கும் தரமான, பழமைவாய்ந்த சித்த வைத்தியர்கள் கால் முடக்கம், கை முடக்கம் இதற்கெல்லாம் மருந்தும் கொடுத்து, ருத்ராட்ச மாலையால் கை, கால்களை உருவி மருத்துவம் அளிக்கும் வழக்கமெல்லாம் இன்றைக்கும் இருக்கிறது.

சீரான இரத்த ஓட்டங்கள், கால் மறத்துப் போகாமல் இருப்பதற்கு போன்றவற்றிற்கும் ருத்ராட்சம் பயன்படும். ருத்ராட்சத்தின் சிறு துளியை இழைத்து உள்ளுக்கு சாப்பிடும் போது நோய் எதிர்ப்புச் சக்தியெல்லாம் அதிகரிக்கிறது. உடலிற்கு ஒரு மினுமினுப்பைக் கொடுக்கும். இதுபோன்ற மருத்துவக் குணங்கள் ருத்ராட்சத்திற்கு உண்டு. அதனால் யார் வேண்டுமானாலும் அணியலாம்.

திங்கள், 3 ஜனவரி, 2011

மன்மதன் அம்பு… சர்ச்சைக்குரிய பாடலுக்கு வெட்டு! – கமல்



சென்னை: மன்மதன் அம்பு படத்தில் கமல்ஹாசன் எழுதி சர்ச்சைக்குள்ளான ‘கண்ணோடு கண் கலாந்தாளென்றால்…’ எனும் பாடலை தாமாக முன்வந்து நீக்குவதாக கமல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

“மன்மதன் அம்பு சினிமா படத்தில் நான் எழுதிப் பாடிய பாடல் ஒன்று இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக வந்த சேதி பரவலாகக் கிளம்பியதை நான் அறிவேன். இதை தணிக்கை செய்த குழு, இப்பாடலில் புண்படுத்தக் கூடிய வரிகள் ஏதுமில்லாததால் அதை அனுமதித்தனர்.

இதுவே எனது நிறுவனத்தின் படமாக இருந்தால் கண்டிப்பாய் அந்த வரிகளை நிஜ ஆன்மிகவாதிகளைப் புண்படுத்தாது என்ற முழு நம்பிக்கையுடன் சென்ஸார் சான்றிதழ் சகிதம் வெளியிட்டிருப்பேன். இது ரெட் ஜெயண்ட் மூவிஸ் படம். உதயநிதி ஸ்டாலின் படம் என்பதாலும் எல்லோரும் எம் மதத்தவரும் படம் காண வரவேண்டும் என்ற எண்ணத்தில் பல கோடி பேர் ஏற்கெனவே பார்த்து ரசித்த பாடலாக இருந்த போதிலும் இப்பாடல் காட்சியை நாங்களே முன்வந்து நீக்குகிறோம்.

என் குடும்பத்தில் வைணவரும், சைவரும், இஸ்லாமியரும், கிறிஸ்துவரும் இருக்கின்றனர். அவர்களில் பலரும் என்னைப்போல் அல்ல. அவர்கள் தெய்வ விஸ்வாசிகள். நான் பகுத்தறிவுவாதி. அது அவ்வாறாகவே இருந்து வருகிறது. அதுவாகவே திகழும்.

மன்மதன் அம்பு வியாபாரம்.அதுவும் மற்றவர் செய்யும் வியாபாரம். இதில் நான் கலை ஊழியன் மட்டுமே. அரசியல்வாதிகளின் இடையூறுகள் எனக்குப் புதிதல்ல. மதமும் அரசியலும் கலந்த இந்தச் சிக்கலில் நல் ரசனை பலியாகாதிருக்கவும் அனைவரும் கண்டு ரசிக்கவும் இந்த முடிவு எடுக்கப்படுகிறது. மற்றபடி பகுத்தறியும் பாதையில் என் தேடல் தொடரும். அதில் மக்கள் அன்பிற்கு நிறைய இடமுண்டு…”

- இவ்வாறு கமல்ஹாசன் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஏன் இந்த அறிக்கை?

முன்னதாக, இந்து முன்னணியின் சென்னை மாநகர பொதுச் செயலாளர் தி.இளங்கோ நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதில், “மன்மதன் அம்பு” படத்தில் இந்து கடவுள்களை இழிவுபடுத்தும் வகையில் பாடல்களை எழுதியிருக்கும் கமலஹாசனை கண்டித்து அவர் வீட்டின் முன் மாநில கலை இலக்கிய அணி பொறுப்பாளர் நடிகர் கனல் கண்ணன் தலைமையில் திங்கள்கிழமை மாலை முற்றுகை போராட்டம் நடைபெறும். பாடலை நீக்க முடியாது என்று கமலஹாசன் கூறியுள்ளார். பாடல் நீக்கப்படாவிட்டால் மன்மதன் அம்பு படம் திரையிடப்படும் தியேட்டர்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவோம்…, என்று கூறியிருந்தார்.

ஞாயிற்றுக்கிழமை கொச்சியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போதுகூட, இந்தப் பாடலை நீக்க மாட்டேன் என்று கூறிய கமல், இந்து முன்னணியின் போராட்ட அறிவிப்புக்குப் பின்னர், வீ்ண் பிரச்சினைகளைத் தவிர்க்கும் பொருட்டு பாடலை நீக்கச் சம்மதித்ததாகக் கூறப்படுகிறது.

மன்மதன் அம்பு படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது.

கமல் அறிக்கை: