திங்கள், 10 ஜனவரி, 2011

நகராட்சி கமிஷனர் உள்பட 3000 அரசுப் பதவிகளுக்கு தேர்வுகள் அறிவிப்பு!


வணிக வரித்துறை உதவி அலுவலர், சார் பதிவாளர், நகராட்சி கமிஷனர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட 3000க்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்களுக்கான தேர்வுகளை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.

இதுகுறித்த டிஎன்பிஎஸ்ஸி அறிவிக்கை இங்கே இணைக்கப்பட்டுள்ளது. பணியிடங்களின் எண்ணிக்கை, கல்வித் தகுதி, தேர்வு முறை, தேர்வுத் தேதி என அநைத்து விவரங்களும் இந்த அறிவிக்கையில் உள்ளன.

TNPSC-CSSE-I -Notification

கிளிக் செய்து படிக்கவும்.

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி வரும் பிப்ரவரி 11, 2011.

இந்த தேர்வுக்கான பாடத் திட்டத்தை அறிய இந்த இணைப்பை க்ளிக் செய்யவும். http://www.tnpsc.gov.in/syllabus.htm

அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தபால் நிலையங்கள் மற்றும் சென்னை டிஎன்பிஎஸ்ஸி தலைமை அலுவலகத்தில் விண்ணப்பங்கள் கிடைக்கின்றன.

மொத்தம் 3000-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் என்பதால் இந்த முறை பல லட்சம் விண்ணப்பங்கள் குவியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக