புதன், 13 ஜனவரி, 2010

தைத் திருநாள் வாழ்த்துகள்!


பண்டையத் தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு, காலத்தைப் பகுத்தனர்.
‘வைகறை, காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம்’ என்று ஒரு நாளை ஆறு சிறு பொழுதுகளாக பிரித்தனர். அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பை அறுபது நாழிகைகள் எனவும் பகுத்துக் கணக்கிட்டார்கள்.

அதாவது ஒரு நாளில் ஆறு சிறு பொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைள் எடுக்கின்றன.

1 நாழிகை 24 நிமிடங்கள்
60 நாழிகை 1440 நிமிடங்கள்
இதனை இன்றைய கணக்கீட்டின் படி பார்த்தால்
1440 நிமிடங்கள் 24 மணிகள்
24 மணிகள் 1 நாள்

இவ்வாறு இன்றைய நவீன காலக் கணிப்பீட்டு முறையுடன் பொருந்தும் வகையில், பண்டையத் தமிழரின் காலக் கணிப்பீட்டு முறை மிகவும் நுட்பமாகக் கணிக்கப்பட்டுள்ளது.
பண்டையத் தமிழர் தம் தாய் மொழியாக தமிழையும் தமது நாகரீகத்தையும் தம் இன அடையாளங்களையும் பேணி வந்த அதேவேளை, தமது நாகரீகத்தின் அடையாளமாக காலக்கணிப்பீடுகளையும் சரியாக மதிப்பீடு செய்து தமது வாழ்வியல் கூறுகளையும் நிர்ணயம் செய்து கொண்டனர் என அலெக்ஸாண்டர் கோண்டிரடோஸ், எஸ்.ஜி.வெல்ஸ் போன்ற மெய்யியலாளர்கள் தமிழர்களின் பூர்வீகத்தை உறுதி செய்துள்ளனர்.

காலத்தை, அறுபது நாழிகைகளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் பகுத்த பண்டையத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு தொடக்கத்தை இளவேனிற் காலத்தின் ஆரம்ப நாளாகக் கொண்டு தை மாதத்தினை தனது இனத்துக்கான புத்தாண்டாகப் பிரகடனப் படுத்திக்கொண்டான்.

அனைவருக்கும் கண்ணாடி புத்தகத்தின் தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் தின வாழ்த்துகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக