வெள்ளி, 10 செப்டம்பர், 2010

கட்டாயப்படுத்தி செக்ஸ் உறவு-பிரிட்னி மீது பாடிகார்ட் வழக்கு!


பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ், தன்னைக் கட்டாயப்படுத்தி செக்ஸ் உறவு வைத்துக் கொண்டார். தொடர்ந்து இவ்வாறு கட்டாயப்படுத்தி உறவு கொண்டார் என்று கூறி வழக்கு தொடர்ந்துள்ளார் ஸ்பியர்ஸின் முன்னாள் பாதுகாவலர் பெர்னாண்டோ ப்ளோர்ஸ்.

ஸ்பியர்ஸிடம் பாடிகார்ட் ஆக இருந்தவர் ப்ளோர்ஸ். இப்போது விலகி விட்டார். இந்த நிலையில், லாஸ் ஏஞ்சலெஸ் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார் ப்ளோர்ஸ்.

அதில், நான் பிரிட்னி ஸ்பியர்ஸிடம் பணியாற்றியபோது என்னைக் கட்டாயப்படுத்தி பலமுறை செக்ஸ் உறவு வைத்துக் கொண்டார். அடிக்கடி இவ்வாறு நடந்து கொணாடார்.

நான் மறுக்கும்போதெல்லாம் தனது அறைக்கு என்னை அழைத்து, முழு உடைகளையும் களைந்து விட்டு நிர்வாணமாக போஸ் கொடுத்து என்னிடம் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வார்.

நான் உடன்பட மறுத்தால், எனக்கு முன்னாலேயே தனது குழந்தைகளை அடிப்பார் பிரிட்னி. அவரால் எனக்கு பெரும் மன உளைச்சல் ஏற்பட்டது. இதையடுத்தே அவரிடமிருந்து விலகினேன் என்று கூறியுள்ளார் ப்ளோர்ஸ்.

இந்த வழக்கு அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தனது வழக்கு சரியானதுதான் என்று நியாயப்படுத்தியுள்ளார் ப்ளோர்ஸ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக