வியாழன், 30 செப்டம்பர், 2010

அயோத்தி வழக்கு: நீதிபதி அகர்வால் வழங்கிய தீர்ப்பின் சில முக்கிய அம்சங்கள்!


அயோத்தி வழக்கில் இன்று மதியம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் சர்ச்சைக்குரிய பாபர் மசூதி பகுதி 3 பாகங்களாகப் பிரிக்கப்பட்டு இஸ்லாமியர்கள், இந்துக்கள், மற்றும் அறக்கட்டளையான நிர்மோஹி அகாரா ஆகியவற்றுக்குச் சொந்தமானது என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தத்த் தீர்ப்பை வழங்கிய 3 நீதிபதிகளில் ஒருவரான சுதிர் அகர்வால் அவர்களின் தீர்ப்பின் முக்கிய அம்சங்களில் சில வருமாறு:

1. சர்ச்சைக்குரிய இடத்தில் மையக் கூரையின் கீழ் உள்ள பகுதி இந்துக்களின் மதநம்பிக்கைகளின் படி ராமர் பிறந்த இடமே.

2. சர்ச்சைக்குரிய பகுதி எப்போதும் மசூதி என்பதாகவே எடுத்துக் கொள்ளப்பட்டு நம்பப்பட்டு வருகிறது. இதனால் மொகமதியர்கள் இங்கு வழிபாடு செய்துவந்தனர். இருப்பினும் அது பாபரால் 1528ஆம் ஆண்டுதான் கட்டப்பட்டது என்பது நிரூபிக்கப்படவில்லை.

3. இது குறித்த மாற்று கோரிக்கைகளோ, வேறு தடயங்களோஇல்லாத பட்சத்தில் சர்ச்சைக்குரிய அமைப்பு எப்போது யாரால் கட்டப்பட்டது என்பதை உறுதி செய்ய முடியாது. ஆனால் ஜோசப் டைஃபென்தாலர் என்பவர் வருவதற்கு முன் 1766 - 1771 ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்டது என்பது வரை தெளிவாக உள்ளது.


4. சர்ச்சையில் உள்ள இந்த கட்டிடம், அதற்கு முன்பு அங்கிருந்த இஸ்லாம் அல்லாத சமயக் கட்டிட அமைப்பைத் தகர்த்துக் கட்டப்பட்டுள்ளது. அதாவது இந்துக் கோயில்.

5. சர்ச்சையில் உள்ள கட்டிடந்த்தின் மையக்கூரையின் கீழ்ப்பகுதியில் விக்ரகங்கள் டிசம்பர் 1949ஆம் ஆண்டு 22 மற்றும் 23ஆம் தேதி இரவில் வைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக