ஞாயிறு, 5 டிசம்பர், 2010

ஐடிபிஐ வங்கியில் 700 பணியிடங்கள்!


சென்னை: முதல்நிலை வங்கிகளுள் ஒன்றான ஐடிபிஐ வங்கியில் அலுவலர் (எக்ஸிக்யூடிவ்) நிலைப் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேர்வு செய்யப்படுவோர் முதலில் 3 ஆண்டு ஒப்பந்தத்தில் பணியில் அமர்த்தப்படுவார்கள். ஒவ்வொரு ஆண்டும் அவருக்கு செயல்பாடு மதிப்பிடப்பட்டு பணி நீட்டிப்பு வழங்கப்படும். மூன்றாம் ஆண்டு முடிவில் தேர்வு மூலமாக அவர் பணி நிரந்தரம் செய்யப்படுவார்.

மொத்த பணியிடங்கள்: 700 (பொது: 332, எஸ்சி: 105, எஸ்டி: 53, ஓபிசி:189)

கல்வித் தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி (எஸ்சி, எஸ்டிகளுக்கு 50%)

வயது: 25-க்குள். எஸ்சிஎஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசியினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை உண்டு.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.400. எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.75. கட்டணத்தை ஐடிபிஐ, எஸ்பிஐ வங்கிக் கிளைகளில் அதற்கான சலானில் 15.12.2010-க்குள் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.idbi.com அல்லது www.idbibank.com ஆகிய இணையதளங்கள் மூலம் 15.12.2010 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விவரங்களுக்கு: www.idbi.com அல்லது www.idbibank.com

விரிவான விளம்பரம் காண

குறிப்பு: ஆன்லைனில் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை உரிய இடத்தில் புகைப்படத்தை ஒட்டி எழுத்துத் தேர்வுக்கு எடுத்து வர வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக