புதன், 16 ஜூன், 2010

மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயர் சூட்ட வலியுறுத்தி ஜூலை 14-ல் பந்த்!


மதுரை, ஜூன் 15: மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை வைக்கக் கோரி அனைத்துக் கட்சிகள், அமைப்புகள் ஆதரவுடன் ஜூலை 14-ம் தேதி தென்மாவட்டத்தில் தேவர் பந்த் நடத்தப்படும் என்று பாரதீய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் கே.ஏ.முருகன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:

மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரைச் சூட்ட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துவது தொடர்பாக அனைத்து தேவர் அமைப்பு சார்பில் மதுரையில் ஆலோசனைக் கூட்டம் எனது தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், தேவர் தேசிய பேரவைத் தலைவர் கே.சி.திருமாறன் உள்பட பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை மதுரை விமான நிலையத்துக்கு வைக்க வேண்டும் என்ற எங்களின் கோரிக்கையை கடந்த 2008-ல் மதுரையில் மாமன்னர் மருதுபாண்டியர் விழாவில் தமிழக முதல்வரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்டப்படும் என அறிவித்தார்.

ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. விமான நிலையத்துக்கு பசும்பொன் தேவர் பெயரைச் சூட்ட வேண்டும் என்று வலியுறுத்தி நாங்கள் இதுவரை பல போராட்டங்களை நடத்தி அரசின் கவனத்தை ஈர்த்துள்ளோம்.

எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், இந்து அமைப்புகளுக்கும் கடிதம் எழுதியுள்ளோம். எங்களுக்கு பெரும்பாலான அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி அனைத்துக் கட்சிகள் ஆதரவுடன் ஜூலை மாதம்14-ம் தேதி தென்மாவட்டத்தில் தேவர் பந்த் நடத்தவும் முடிவு செய்துள்ளோம் என்றார் அவர்.

பேட்டியின்போது இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

3 கருத்துகள்:

  1. i like this very much----
    valka thavar pukal- valarka thavar enanm
    jai hindh- by.jeyakodi son karthick.usilampatti

    பதிலளிநீக்கு
  2. முக்குலமே ஒன்றுபடு!!!!!!!!!!!
    முக்குலமே ஒன்றுபடு!!!!!!!!!!!
    முக்குலமே ஒன்றுபடு!!!!!!!!!!!

    JAI HINDH
    REGARDS,
    தேவர் தேசிய பேரவை,
    MUMBAI

    பதிலளிநீக்கு
  3. முக்குலமே ஒன்றுபடு!!!!!!!!!!!
    முக்குலமே ஒன்றுபடு!!!!!!!!!!!
    முக்குலமே ஒன்றுபடு!!!!!!!!!!!

    பதிலளிநீக்கு