சனி, 9 அக்டோபர், 2010

வாக்களிப்பதன் அவசியம் குறித்து ரஹ்மான் இசையில் பாட்டு-தெர்தலனையம் திட்டம்!


வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வுப் பாடலை உருவாக்குவதற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை அனுகவுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.எல்.குரேஷி கூறியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நாட்டு மக்களிடையே வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வுப் பாடலை உருவாக்க தீர்மானித்துள்ளோம்.

இதற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை அணுக திட்டமிட்டுள்ளோம். அவரை அணுகி அவரிடமிருந்து விழிப்புணர்வு பாடலைப் பெற்று, காட்சிப்படுத்தி, அதை நாடு முழுவதும் ஒளிபரப்பி வாக்களிப்பதன் அவசியத்தை மக்களிடையே பரப்பத் திட்டமிட்டுள்ளோம்.

விரைவில் இதுதொடர்பாக ரஹ்மானை தேர்தல் ஆணையம் அணுகும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக