செவ்வாய், 19 அக்டோபர், 2010

“மனித குண்டாக வருவேன்” போத்தீஸ் ஜவுளிக்கடைக்கு வெடிகுண்டு மிரட்டல்!


சென்னை, தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி புத்தாடைகள் வாங்குவதற் காக தியாகராய நகருக்கு பொதுமக்கள் படையெடுத்த வண்ணமாக உள்ளனர். இந்த பரபரப்பான சூழலில் நேற்று மாலை பிரபல ஜவுளிக்கடையான போத்தீசுக்கு வெடி குண்டு மிரட்டல் வந்தது.


போனில் பேசிய அந்த மர்ம ஆசாமி “நான் மனித வெடிகுண்டாக” கடைக்குள் வரப்போகிறேன் என்று கூறி விட்டு வைத்து விட்டான். இதனை கேட்டு பயந்து போன கடையின் மேனேஜர் மைக்கேல் மாம்பலம் போலீசில் புகார் செய்தார். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு மோப்ப நாயுடன் விரைந்து வந்தனர். வெடி குண்டு நிபுணர்கள் கருவிகளுடன் வந்து சோதனையில் ஈடுபட்டனர்.


தீபாவளிக்கு புத்தாடைகள் வாங்க வந்தவர்கள் அனைவரையும் வெளியேற்றி னர். கடை ஊழியர்களையும் வெளியே போகச்சொல்லி கடையின் அனைத்து மாடிகளிலும் சோதனை போட்டனர். ஆனால் எதுவும் சிக்க வில்லை. அதன் பிறகே அதுவதந்தி என்பது தெரிய வந்தது. இந்த சோதனையை கண்டு பொதுமக்களிடம் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பிறகே இயல்பு நிலை திரும்பியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக