செவ்வாய், 12 அக்டோபர், 2010

இப்படியும் கணவர்கள்!


சி.சி.டி.வி. எனும் ரகசிய கண்காணிப்பு கேமரா இன்றைக்கு இல்லாத வர்த்தக நிறுவனங்களே கிடையாது. சமீபத்தில் சென்னையில் ஆட்டோ டிரைவர் ஒருத்தரை கொலை செய்த கொலையாளியை சாலை ஓரங்களில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராதான் அடையாளம் காட்டியது.

வர்த்தக நிறுவனங்களில் கொள்ளை மற்றும் சிறு திருட்டுகளில் ஈடுபடுபவர்களை அடையாளம் காட்டுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் இந்த கேமராவை தற்போது மனைவிகளை வேவுபார்க்க வீடுகளில் சில கணவர்கள் வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் ஒரு குடும்பத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்தான் இதோ...

நக்கீரனுக்கு நெருக்கமான அந்த வழக்கறிஞர் மூலம் சம்பந்தப்பட்ட தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தைச் சேர்ந்த அந்த கணவன்-மனைவியை தனித்தனியாக சந்தித்தோம்.

முதலில் மனைவியை சந்தித்த போது, ""நாங்க ரொம்ப வசதியானவங்க. அவர் ஷிப் மூலம் எக்ஸ்போர்ட் மற்றும் கமிஷன் கான்ட் ராக்ட் பிசினஸ் செய்து வருகிறார். மாசத்துக்கு குறைந்தது 2 முறையாவது பிசினஸ் சம் பந்தமாக வெளிநாடு போவார். எனக்கும் அவருக்கும் 15 வயசு வித்தியாசம். தற்போது எனக்கு 45 வயசாகுது. எங்களுக்கு இதுநாள் வரையிலும் அந்த விஷயத்தில் குறைவே யில்லை. அவர் சந்தேக பேர்வழி என்றாலும் பிறருக்கு உதவும் குணமுடைய ஒரு நல்ல மனிதர்தான்.

பின்னால் எந்த பிரச்சினையும் வந்து விடக்கூடாது என்பதற்காக வீட்டுக்குள் வெளி ஆட்கள் வருவதையே தவிர்ப்பார். அவர் வீட்டில் இல்லாதபோது சொந்தக்காரர்கள் முதல் எந்த ஆட்கள் வந்தாலும் -அவர் வெளிநாட்டில் இருந்தாலும் வந்தவர்கள் பற்றி உடனே போன் மூலம் சொல்லி விட வேண்டும். இது அவர் போட்டிருக்கும் கண்டிஷன். காரில் போனா கூட காரின் கண்ணாடியை திறக் காமல்தான் போகணும். அந்தளவு...

அவருடைய எண்ணங்கள் அறிந்து நானும் இன்ஜினியரிங் படிக்கும் எங்களின் ஒரே மகளும் அப்படியே நடந்து கொண்டோம். அவர் வெளிநாடு போயிட்டு வரும்போதெல் லாம் விதவிதமான எலக்ட்ரானிக்ஸ் பொருட் கள் வாங்கி வருவார். அது என்னவென்று கூட மாஸ்டர் டிகிரி படித்த நான் பார்க்க மாட்டேன்.

இந்த நிலையில், அவர் கடந்த மாதம் வெளிநாடு போயிட்டு வந்த மறுதினம் அவருடைய லேப்டாப்பை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அதை திடீ ரென்று எதிர்பாராத விதமாக பார்த்த நான் அதிர்ந்து போனேன். ஏனென்றால் லேப்டாப்பில் நானும், மகளும் படுத்து உறங்குவது, குளித்துவிட்டு வந்து ஆடைகள் மாற்றுவது, சாப்பிடுவது, டி.வி. பார்ப்பது, வீட்டில் வேலை செய்வது என எல்லாமே படமாக ஓடிக் கொண்டிருந்தது.

இதில் மகளும், நானும் தனித்தனி அறையில் நிர்வாணமாக ஆடை மாற்றும் படத்தைப் பார்த்து அதிர்ச்சியான நான் ஆவேசத்துடன் அடிக்காத குறையாக அவரின் சட்டையை பிடித்து இழுத்து தகராறு செய்து, லேப்டாப்பை உடைத்து பத்ரகாளியாட்டம் ஆடினேன். இதைப் பார்த்து வேர்க்க, விறுவிறுக்க எதுவும் பேச முடியாமல் தடுமாறிய அவர் மயக்கம் போட்டு விழுந்தார்.

அதன்பிறகு சகஜ நிலைக்கு திரும்பிய அவர் எதற்காக இப்படி நடந்து கொண்டேன் என விளக்கமாகக் கூறி எனது காலை பிடித்து மன்னிப்பு கேட்டு, "இனிமேல் இப்படி நடந்து கொள்ள மாட்டேன்' என கெஞ்சியதால் இந்த விஷயத்தை வெளியே சொன்னால் அசிங்கம் என கருதி "கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்' என்ற முறையில் நடந்தவைகள் நடந்ததாக இருக்கட்டும் என எல்லாத்தையும் மறந்து விட்டேன்'' என்றார் கண்ணில் நீர் வழிய.

""பெத்த மகளையும் தொட்டு தாலி கட்டின மனைவியையும் எதற்காக இப்படி படம் புடிச்சீங்க? அதுவும் எப்படி'' என அவரிடம் பேசினோம்.

""திருமணத்திற்கு பிறகு என்னவோ நடந்தது போல மனைவி மீது எப்போதும் சந்தேகம் இருந்து வந்தது. அந்த சந்தேகம் தொடர்ந்து வயசுக்கு வந்த பிள்ளைங்க மீதும் நீடித்தது. சந்தேகம் என்னை தினம் தினம் பேயாக மாற்றியது.

இந்தக் காலத்தில் சந்தேகம் என்பது எனக்கு மட்டுமல்ல, எல்லா கணவனுக்கும் அப்பனுக்கும் இருக்கத்தான் செய்கிறது. அதில் எனக்கு கொஞ்சம் அதிகமாயிடிச்சி.

நான் அடிக்கடி வெளிநாடு, வெளியூர் என போயிட்டு இருப்பேன். மனைவி தனியாக இருக்கும்போது என்ன செய்து கொண்டு இருக்கிறாள், யாரெல்லாம் வீட்டிற்குள் வருகிறார்கள். அதை மறைத்து என்னிடம் பொய் சொல்லுகிறாளா என கண்டுபிடிக்க எங்களது பெட்ரூமிலும், மகளின் பெட்ரூமிலும் மற்றும் ஹாலிலும் சிறிய சைஸில் யாரும் கண்டுகொள்ளாதபடி சி.சி.டி.வி. கேமராவை மறைத்து வைத்து இருந்தேன்.

நான் வெளிநாடு போயிட்டு வந்ததும் அந்த கேமராவில் உள்ள மெமரி கார்டை எனது லேப்டாப்பில் போட்டுப் பார்ப்பேன். இதுவரை 3 முறைதான் பார்த்திருக்கிறேன். அப்போது மனைவி, மகளின் அந்தரங்க விஷயங்கள் தெரிந்தாலும் அது எனக்கு ஆபாசமாக தோன்றவில்லை. அது என்னுடைய சந்தேகத்தை பூர்த்தி செய்யக்கூடியதாக இருந்தது.

கடைசியாக பார்க்கும்போது எனது மனைவி பார்த்துவிட்டாள். அதன்பிறகுதான் நடக்கக் கூடாதது எல்லாம் நடந்துவிட்டது. பின்னர்தான் உணர்ந்தேன், எந்த களங்கமும் இல்லாத என் மனைவியை சந்தேகப்பட்டு விட்டேன் என்று. இந்த சம்பவம் என் மனசுக்குள் இருந்து என்னை தினம், தினம் கொன்னுட்டு இருக்கு.

நான் செய்த தப்பால் எதுவும் தெரியாத என் பிஞ்சு மகள் பட்ட வேதனை... எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் அந்த பாவம் என்னை விட்டு நீங்காது. இதனால் நிம்மதியே போச்சு. இதுபோன்ற தவறை இனி எவரும் செய்யக்கூடாது என்பதற்காகத்தான் உங்களிடம் சொல்லுறேன். தயவு செய்து பெயரை போட்டுவிடா தீர்கள்'' என கேட்டுக் கொண்டார் அந்த மனிதர்.

சில மருத்துவமனைகளில் பெண்களை டாக்டர்கள் பரிசோதிப்பது, பெண்களுக்கு ஊசி போடுவது, மருத்துவமனைக்கு வந்த பெண்கள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பது போன்றவை எல்லாம் அந்த கேமராவில் பதிவு ஆகிறது. அதுபோல் ஹாஸ்டலில் பெண்களுக்கு தெரியாமலே வைக்கப்பட்டு அவர்களின் அந்தரங்க விஷயங்களை பல கல்லூரி முதலாளிகள் பார்த்து ரசித்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் அதிகமிருப்பதால் அங்கிருந்து இந்த கேமராவை வாங்கி வந்து யாருக்கும் தெரியாமல் வீடுகளில் பொருத்தியுள்ளனர்.

தன் மனைவியின் நடத்தையை கண்டுபிடிக்க கேமரா பொருத்திய சிலர், தன் உடன்பிறந்த அக்கா, தங்கைகளின் கள்ளத்தொடர்பு பதிவானதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சம்பவங்களும் உண்டு.

""ஜவுளிக்கடை மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளில் வேலை செய்யும் பெண்கள் சீருடை மாற்றும் அறை, பாத்ரூம்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தி அதை தனி அறையில் அமர்ந்து ரசிக்கும் முதலாளிகளும், அவர்களின் வாரிசுகளும் ஈடுபடுகிறார்கள். இனிமேல் சி.சி.டி.வி. பொருத்துகிறவர்கள் அதை காவல்துறையிடம் தெரிவித்து அனுமதி வாங்கி, எந்தெந்த இடங்களில் கேமரா பொருத்தியுள்ளார்கள் என்பதை தெரிவிக்க ஏற்பாடு செய்வது மட்டுமில்லாமல் மாதம் ஒரு தடவை சோதனையும் செய்ய வேண்டும்'' என்கின்றனர் தொழிலாளர்கள்.

இதுபற்றி வழக்கறிஞர் ஹரினிவாசபிரசாத்திடம் கேட்டபோது...

""எந்த விஷயத்திற்காக இருந்தாலும் ஒருத்தருக்கு விருப்பம் இல்லாமல் படம் பிடிப்பது சட்டப்படி குற்றமாகும். அது கணவனாக இருந்தாலும் குற்றம்தான். பொதுவாக இந்த மாதிரி கேமரா எங்கெல் லாம் பயன்படுத்த வேண்டுமென்று ஒரு வரைமுறையை அரசாங்கம் கொண்டு வர வேண்டும்'' என்றார்.

இது சம்பந்தமாக ராமநாதபுரத்தில் பிரபல மனோ தத்துவ மருத்துவர் பெரியார்லெனினிடம் கேட்டோம்...

""மனிதர்களின் அந்தரங்கத்தில நுழைவதுபோல் செயல்படும் சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்துவதை தடை செய்யவேண்டும். ஒவ்வொரு மனிதனும் தான் ஒழுக்கமாக இருந்தாலே இதுபோன்ற அத்துமீறும் சம்பவங்கள், வக்ர நிகழ்வுகள் நடக்காது'' என்றார் பெரியார்லெனின்.

இந்த ரகசிய கேமராக்கள் மூலம் பெரிய குடும்பத்து ஆட்களை ப்ளாக்மெயில் செய்யும் கொடூரமும் அதிகரித்து வருகிறது. சேலத்தில் அழகு நிலையம் என்ற பெயரில் பலான தொழில் நடத்தும் 32 வயது சுதாவும், பிரபல அசைவ ஹோட்டலான செல்வி மெஸ் உரிமை யாளரின் ஒரே மகன் 28 வயது தமிழரசனும் ஒன்றாக மெய்மறந்து இருந்தபோது, ஒரு குரூப் திடுதிப்பென்று உள்ளே புகுந்து செல்போனில் படமெடுத்து, இப்போது மிரட்டிக்கொண்டிருக்கிறது. தமிழரசனின் மோதிரம், செயின், 2 மொபைல், 15 ஆயிரம் பணம் ஆகியவற்றைப் பறித்துள்ள யுவராஜ், தீபக், கார்த்தி உள்ளிட்ட டீமை தேடி வருகிறது காவல்துறை.

படம் பிடித்த கும்பலிடமிருந்து அந்த செல்போனை மீட்டுத் தருவதாகச் சொல்லி அரசியல் செல்வாக்குள்ள லோக்கல் ரவுடி ஒருவர் 20 ஆயிரம் ரூபாய் பறித்திருக்கிறார். இதுபோல ஏரியாவுக்கு ஒரு குரூப் கிளம்பி யுள்ளது. கணவன்-மனைவி சந்தோஷமாக இருக்கும்போது ரகசியமாக படம் எடுத்து விட்டு, இண்டர்நெட்டில் போட்டுவிடுவோம் என மிரட்டி பணம் பறிக்கும் கும்பல்கள் தமிழகத்தின் பல பகுதிகளிலும் அதிகரித்து வருகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக